புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அமைச்சர் செந்தில் பாலாஜி கைது  Poll_c10அமைச்சர் செந்தில் பாலாஜி கைது  Poll_m10அமைச்சர் செந்தில் பாலாஜி கைது  Poll_c10 
5 Posts - 71%
ஜாஹீதாபானு
அமைச்சர் செந்தில் பாலாஜி கைது  Poll_c10அமைச்சர் செந்தில் பாலாஜி கைது  Poll_m10அமைச்சர் செந்தில் பாலாஜி கைது  Poll_c10 
1 Post - 14%
Manimegala
அமைச்சர் செந்தில் பாலாஜி கைது  Poll_c10அமைச்சர் செந்தில் பாலாஜி கைது  Poll_m10அமைச்சர் செந்தில் பாலாஜி கைது  Poll_c10 
1 Post - 14%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அமைச்சர் செந்தில் பாலாஜி கைது  Poll_c10அமைச்சர் செந்தில் பாலாஜி கைது  Poll_m10அமைச்சர் செந்தில் பாலாஜி கைது  Poll_c10 
130 Posts - 51%
ayyasamy ram
அமைச்சர் செந்தில் பாலாஜி கைது  Poll_c10அமைச்சர் செந்தில் பாலாஜி கைது  Poll_m10அமைச்சர் செந்தில் பாலாஜி கைது  Poll_c10 
88 Posts - 35%
mohamed nizamudeen
அமைச்சர் செந்தில் பாலாஜி கைது  Poll_c10அமைச்சர் செந்தில் பாலாஜி கைது  Poll_m10அமைச்சர் செந்தில் பாலாஜி கைது  Poll_c10 
11 Posts - 4%
prajai
அமைச்சர் செந்தில் பாலாஜி கைது  Poll_c10அமைச்சர் செந்தில் பாலாஜி கைது  Poll_m10அமைச்சர் செந்தில் பாலாஜி கைது  Poll_c10 
9 Posts - 4%
Jenila
அமைச்சர் செந்தில் பாலாஜி கைது  Poll_c10அமைச்சர் செந்தில் பாலாஜி கைது  Poll_m10அமைச்சர் செந்தில் பாலாஜி கைது  Poll_c10 
4 Posts - 2%
Rutu
அமைச்சர் செந்தில் பாலாஜி கைது  Poll_c10அமைச்சர் செந்தில் பாலாஜி கைது  Poll_m10அமைச்சர் செந்தில் பாலாஜி கைது  Poll_c10 
3 Posts - 1%
Baarushree
அமைச்சர் செந்தில் பாலாஜி கைது  Poll_c10அமைச்சர் செந்தில் பாலாஜி கைது  Poll_m10அமைச்சர் செந்தில் பாலாஜி கைது  Poll_c10 
2 Posts - 1%
Barushree
அமைச்சர் செந்தில் பாலாஜி கைது  Poll_c10அமைச்சர் செந்தில் பாலாஜி கைது  Poll_m10அமைச்சர் செந்தில் பாலாஜி கைது  Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
அமைச்சர் செந்தில் பாலாஜி கைது  Poll_c10அமைச்சர் செந்தில் பாலாஜி கைது  Poll_m10அமைச்சர் செந்தில் பாலாஜி கைது  Poll_c10 
2 Posts - 1%
jairam
அமைச்சர் செந்தில் பாலாஜி கைது  Poll_c10அமைச்சர் செந்தில் பாலாஜி கைது  Poll_m10அமைச்சர் செந்தில் பாலாஜி கைது  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அமைச்சர் செந்தில் பாலாஜி கைது


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jun 14, 2023 9:27 pm

அமைச்சர் செந்தில் பாலாஜி கைது  F3iz7Nh


அமைச்சர் செந்தில் பாலாஜி கைது – நேற்று இரவு முதல் இப்போதுவரை நடந்தது என்ன?

தமிழ்நாடு மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான ஊழல் வழக்குகளை விசாரித்துவந்த அமலாக்கத்துறை இப்போது அவரைக் கைது செய்திருக்கிறது. இவ்விஷயத்தில் நேற்று இரவிலிருந்து பரபரப்பான பல காட்சிகள் அரங்கேறின. அவை இங்கே தொகுத்தளிக்கப்படுகின்றன.

ஜூன் 13, செவ்வாய்க்கிழமை காலை: சென்னை மற்றும் கரூரில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடுகளில் காலை முதலே அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். தலைமைச் செயலகத்தில் உள்ள அவரது அலுவலகத்திலும் சோதனை நடத்தப்பட்டது.

ஜூன் 14, புதன்கிழமை அதிகாலை: விசாரணைக்காக நுங்கம்பாக்கத்தில் உள்ள அலுவலகத்துக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் செந்தில் பாலாஜியை அழைத்து செல்ல இருந்த நிலையில் காரில் இருந்த செந்தில் பாலாஜி நெஞ்சு வலிப்பதாகக் கூறி, கதறி அழுது துடித்ததால், ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

ஜூன் 14, புதன்கிழமை அதிகாலை: காரின் இருக்கையில் படுத்தபடி செந்தில் பாலாஜி துடிக்கும் காட்சிகளை ஏஎன்ஐ செய்தி நிறுவனம் வெளியிட்டது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஜூன் 14, புதன்கிழமை அதிகாலை: திமுக நிர்வாகிகள், அமைச்சர்கள் ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்குச் சென்றனர்.
இதைத்தொடர்ந்து, ஏஎன்ஐ செய்தி முகமையிடம் பேசிய சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, செந்தில் பாலாஜியிடம் தொடர்ந்து 24 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டதாகவும் இது மனித உரிமைகளுக்கு எதிரானது என்றும் தெரிவித்தார்.

ஜூன் 14, புதன்கிழமை காலை: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் சென்று பார்த்தார். இதன்பிறகு, ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் இவ்வாறு பதிவிட்டார்: “விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தருகிறேன் என்று சொன்ன பிறகும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெஞ்சு வலி ஏற்படும் வகையில் சித்ரவதை கொடுத்த அமலாக்கத்துறையின் நோக்கம் என்ன? … சட்ட நடைமுறைகளை மீறி மனிதநேயமற்ற முறையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நடந்து கொண்டிருப்பது தேவையா? பா.ஜ.க.வின் இந்த மிரட்டல்களுக்கு எல்லாம் தி.மு.க. அஞ்சாது. 2024 தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.”

ஜூன் 14, புதன்கிழமை காலை: சிகிச்சை பெற்றுவரும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இதய ரத்தநாளப் பரிசோதனை செய்யப்பட்டதாகவும், அவருக்கு மூன்று ரத்தக்குழாய்களில் அடைப்பு உள்ளதாகவும் ஒரு அறிக்கையை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை வெளியிட்டது. மேலும் அவருக்கு இதய பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப் பரிந்துரைத்தது.

ஜூன் 14, புதன்கிழமை மதியம்: மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அளித்த அறிக்கையில் “இது விசாரணை அல்ல; பழிவாங்கும் நடவடிக்கை,” என்று கூறினர்.

ஜூன் 14, புதன்கிழமை மதியம்: செந்தில் பாலாஜி சிகிச்சை பெற்றுவரும் ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிபதி அல்லி வந்து விசாரணை நடத்தினார்.

ஜூன் 14, புதன்கிழமை மாலை: அமலாகத்துறை விசாரணையில் இருந்த அமைச்சர் செந்தில் பாலாஜி, கைது செய்யப்பட்டிருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஜூன் 28ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியானது.

ஜூன் 14, புதன்கிழமை மாலை: ஜாமீன் கேட்டு செந்தில் பாலாஜி தாக்கல் செய்திருந்த மனு, காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரிய அமலாக்கத்துறையின் மனு, காவேரி மருத்துவமனையில் சிகிச்சையளிக்க அனுமதிக்க கோரிய செந்தில் பாலாஜி தரப்பிலான மனு உட்பட, மூன்று மனுக்களின் மீதான விசாரணை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முடிவுக்கு வந்தது. இவற்றின்மீதான தீர்ப்பை நீதிமன்றம் நாளைக்கு (ஜூன் 15, வியாழக்கிழமை) ஒத்திவைத்தது.

குறிச்சொற்கள் #செந்தில்_பாலாஜி #திமுக. #ஸ்டாலின் #பாஜக


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jun 14, 2023 9:29 pm

யார் இந்த செந்தில் பாலாஜி?


ஒன்றிய கவுன்சிலராக தி.மு.கவில் தன் அரசியல் பயணத்தைத் துவங்கிய மீண்டும் திமுகவிலேயே இணைந்து ஒரு முழுச் சுற்றை முடித்தவர் #செந்தில்_பாலாஜி.

ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டபோது, அவரது அமைச்சரவையில் இருந்த ஒவ்வொரு அமைச்சரும் ஒவ்வொருவிதமாக தன் விசுவாசத்தை நிரூபிக்க முயன்றுகொண்டிருக்க, போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜியோ பல கோவில்களில் அங்கப்பிரதட்சணம், அம்மன் கோவில் ஒன்றில் காவடி என பலரையும் பிரமிக்கவைத்தார்.

ஓ. பன்னீர்செல்வத்திற்கு அடுத்து இவர்தான் என்றெல்லாம் மற்ற அமைச்சர்களே மிரண்டுபோய் பார்த்துக்கொண்டிருந்தபோது, 2015 மே மாதம் மீண்டும் முதல்வரான ஜெயலலிதா ஜூலை மாதம் செந்தில் பாலாஜியின் பதவியைப் பறித்தார். அவரிடமிருந்த கரூர் மாவட்டச் செயலாளர் பதவியும் பறிக்கப்பட்டது.

ஆனால், அசராமல் அமைதியாக இருந்தார் செந்தில் பாலாஜி. 2016ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அவருக்கு மீண்டும் வாய்ப்பளித்தார் ஜெயலலிதா.

கரூரில் உள்ள ராமேஸ்வரப் பட்டியைச் சேர்ந்த வி.செந்தில் குமார் கரூர் அரசு கலைக் கல்லூரியில் இளநிலை வணிகவியல் படிக்கும்போது, படிப்பை பாதியில் விட்டுவிட்டு அரசியலில் குதித்தவர். 1996ல் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர், 2000வது ஆண்டில் அ.தி.மு.கவில் சேர்ந்தார். பிறகு நியூமராலஜிப்படி தனது பெயரை செந்தில் பாலாஜி என மாற்றிக்கொண்டார்.

அதற்குப் பிறகு அமைச்சராகும்வரை அ.தி.மு.கவில் அவரது பயணம் தொடர்ந்து மேல் நோக்கியதாகவே இருந்தது. கட்சியில் சேர்ந்த ஆறு மாதங்களிலேயே மாவட்ட மாணவர் அணி இணைச் செயலாளரானார். 2004ல் மாவட்ட மாணவரணி செயலாளரானவர் 2006ல் அ.தி.மு.க சார்பில் போட்டியிட்டு, சட்டமன்றத்திற்குள்ளும் நுழைந்தார். 2007ல் கரூர் மாவட்டச் செயலாளராகவும் ஆனார்.

இதற்குப் பிறகு, ஜெயலலிதா மட்டுமல்ல, சசிகலா குடும்பத்தினருடனும் மிகவும் செல்வாக்கான நபராக உருவெடுத்தார் செந்தில் பாலாஜி. இதையடுத்து 2011லும் கரூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றவருக்கு போக்குவரத்து துறை அமைச்சர் பதவியை வழங்கினார் ஜெயலலிதா.

2015ஆம் ஆண்டுவரை பல முறை அமைச்சரவையை ஜெயலலிதா மாற்றியபோதும், செந்தில் பாலாஜி அமைச்சரவையிலிருந்து நீக்கப்படவில்லை.

கரூர் மாவட்டத்தில் தொடர்ச்சியாக தனது செல்வாக்கை வளர்த்துவந்ததோடு, அதைத் தக்கவைக்க மாவட்டத்தில் இருந்த தனது அரசியல் எதிரிகளையும் மெல்லமெல்ல ஓரம்கட்ட ஆரம்பித்தார் செந்தில் பாலாஜி.

அ.தி.மு.கவில் இருந்த முன்னாள் அமைச்சர் சின்னச்சாமி தி.மு.கவுக்குச் சென்றார். நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின்போது தம்பிதுரைக்கு பல இடங்களில் தெரிவிக்கப்பட்ட எதிர்ப்புக்குப் பின்னால், செந்தில் பாலாஜியின் கரம் இருந்ததாகவும் சொல்லப்பட்டது.

கட்சி சசிகலா - ஓ.பி.எஸ் என இரு தரப்பாகப் பிளவுபட்டபோது, சசிகலா பிரிவுக்கு ஆதரவாக இருந்தார். ஆனால் அந்த நேரத்திலும்கூட, போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை ஆகியோரை எதிர்த்து போராட்டம் நடத்தப்போவதாக ஒரு அதிரடியைக் கிளப்பினார் செந்தில் பாலாஜி.

அந்த நேரத்திலேயே, அதாவது 2017 ஏப்ரலிலேயே, அவர் தி.மு.க.வுக்கு வரப்போவதாக செய்திகள் அடிபட்டன. அவர் மேலும் ஐந்து சட்டமன்ற உறுப்பினர்களையும் தி.மு.க.வுக்கு அழைத்துவருவார் என்றும் பேசப்பட்டது. ஆனால், எடப்பாடி தரப்பிலிருந்து டிடிவி தினகரன் ஒதுக்கிவைக்கப்பட்டபோது அவர் பக்கம் சென்றார் செந்தில் பாலாஜி.

ஆனால், டிடிவி தரப்பிலிருந்து அவருக்கு பல்வேறு விதங்களில் தொடர்ச்சியாக அழுத்தங்கள் இருந்த நிலையிலேயே அவர் தி.மு.க பக்கம் சென்றார் என்று சொல்லப்பட்டது. அதன் பிறகு முக்கியத் தேர்தல்களில் தனது பலத்தை அவர் நிரூபித்திருக்கிறார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jun 14, 2023 9:32 pm

செந்தில் பாலாஜி: எதிரிகளை நண்பர்களாக்கி அசுர வளர்ச்சி கண்ட அரசியல்வாதி


செந்தில் பாலாஜி... இன்று மாநில எல்லை தாண்டி தேசிய அளவில் அரசியல் தலைவர்கள் உச்சரிக்கும் பெயராக மாறி நிற்கிறது.

கல்லூரிப் படிப்பை பாதியில் கைவிட்டு, அரசியலில் குதித்த அவர், திமுகவில் பயணத்தை தொடங்கி அதிமுகவில் அசுர வேக வளர்ச்சி கண்டு, பின்னர் தொடங்கிய இடத்திற்கே வந்தவர். கட்சி மாறி வந்திருந்தாலும் கூட, திமுகவில் சீனியர்களை எல்லாம் தாண்டி திமுகவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் நம்பிக்கைக்குரிய தளபதியாக கட்சிக்குள் முக்கியத்துவம் தேடிக் கொண்டவர்.

கள அரசியலில் சுறுசுறுப்பாக இயங்கக் கூடியவர், தமிழ்நாடு அமைச்சரவையில் மிக முக்கிய துறைகளை தன் வசம் வைத்திருப்பவர் என்பதாலேயே, எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு மத்தியில் ஆளும் பா.ஜ.க.வால் குறி வைக்கப்பட்டிருக்கிறார் என்ற குற்றச்சாட்டும் உண்டு.

ஆனால், இதில் வேடிக்கை என்னவென்றால், அதிமுக ஆட்சியில் செந்தில் பாலாஜி அமைச்சராக இருந்த போது எந்த வழக்கில் சிக்கி இன்றைய முதலமைச்சரும் அன்றைய எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலினால் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டாரோ அதே வழக்கு தான் இப்போதும் கழுத்தை சுற்றிய பாம்பாக அவரை மீண்டும் நெருக்கடியில் தள்ளியுள்ளது.

2011 முதல் 2015 வரை அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக செந்தில் பாலாஜி பதவி வகித்த போது, ஓட்டுநர், நடத்துநர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்பட்ட போது முறைகேட்டில் ஈடுபட்டார் என்பதே அந்த வழக்காகும்.

கரூரில் பிறந்த செந்தில் பாலாஜி மிகக் குறுகிய கால கட்டத்தில் அரசியலில் படுவேகமாக முன்னுக்கு வந்து, இன்று அவருக்காக தேசியத் தலைவர்கள் குரல் கொடுக்கும் அளவுக்கு உயர்ந்திருக்கிறார். அவரது இந்த அசுர வளர்ச்சியை எப்படி எட்டினார்?

அதற்காக எத்தகைய உத்தியை பயன்படுத்தினார்? வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டதோடு, எதிர்கொண்ட சிக்கல்களை எப்படி சமாளித்தார்?

திமுக to அதிமுக - அசுர வளர்ச்சி


கரூரில் உள்ள ராமேஸ்வரப் பட்டியைச் சேர்ந்த வி.செந்தில் குமார் கரூர் அரசு கலைக் கல்லூரியில் இளநிலை வணிகவியல் படிக்கும்போது, படிப்பை பாதியில் விட்டுவிட்டு அரசியலில் குதித்தவர்.

1996ல் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் திமுக சார்பில் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றிபெற்றவர்.

2000வது ஆண்டில் அ.தி.மு.கவில் சேர்ந்தார். அதன் பிறகுதான் அவரது அசுர வளர்ச்சி தொடங்கியது. இந்த கால கட்டத்தில் நியூமராலஜிப்படி, செந்தில் குமார் என்ற தனது பெயரை செந்தில் பாலாஜி என மாற்றிக்கொண்டார்.

கட்சியில் சேர்ந்த ஆறு மாதங்களிலேயே மாவட்ட மாணவர் அணி இணைச் செயலாளரானார். 2004ல் மாவட்ட மாணவரணி செயலாளரான அவர், 2006ல் அ.தி.மு.க சார்பில் போட்டியிட்டு, சட்டமன்றத்திற்குள்ளும் நுழைந்தார்.

2007ம் ஆண்டில் கரூர் மாவட்டச் செயலாளராக, அதிமுகவில் அடுத்தக் கட்டத்திற்குச் சென்றார். இதற்குப் பிறகு, ஜெயலலிதா மட்டுமல்ல, சசிகலா குடும்பத்தினருடனும் மிகவும் செல்வாக்கான நபராக உருவெடுத்தார் செந்தில் பாலாஜி.

இதையடுத்து 2011லும் கரூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றவருக்கு போக்குவரத்து அமைச்சர் பதவியை வழங்கினார் ஜெயலலிதா.

2015-ம் ஆண்டு வரை பல முறை அமைச்சரவையை ஜெயலலிதா மாற்றியமைத்த போதும், செந்தில் பாலாஜியை மட்டும் நீக்கவே இல்லை. சீனியர் தலைகள் எல்லாம் உருண்ட போதும் செந்தில் பாலாஜி மட்டும் தன்னுடைய இடத்தை தக்க வைத்துக் கொண்டார்.

2014-ம் ஆண்டு சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா சிறைக்குச் சென்ற போது. செந்தில் பாலாஜி முதலமைச்சராக்கப்படலாம் என்று கூட பேச்சுகள் அடிபட்டன. அந்த அளவுக்கு அதிமுகவில் ஜெயலலிதாவுக்கும், சசிகலா குடும்பத்திற்கும் நெருக்கமானவராக, விசுவாசம் மிக்க நம்பிக்கையானராக வலம் வந்தார் செந்தில் பாலாஜி.

அரசியலில் திடீர் இறங்கு முகம்


ஓ.பன்னீர்செல்வத்திற்கு அடுத்து இவர்தான் என்றெல்லாம் மற்ற அமைச்சர்களே மிரண்டுபோய் பார்த்துக்கொண்டிருந்தபோது, 2015 மே மாதம் மீண்டும் முதல்வரான ஜெயலலிதா ஜூலை மாதம் செந்தில் பாலாஜியின் பதவியைப் பறித்தார். அவரிடமிருந்த கரூர் மாவட்டச் செயலாளர் பதவியும் பறிக்கப்பட்டது.

அடுத்தடுத்து பதவிகள் பறிக்கப்பட்ட போதிலும் அசராமல் அமைதி காத்தார் செந்தில் பாலாஜி. 2016ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அவருக்கு மீண்டும் வாய்ப்பளித்தார் ஜெயலலிதா.

2016-ம் ஆண்டு ஜெயலலிதா உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது, பல கோவில்களில் அங்கப்பிரதட்சணம், காவடி எடுப்பது, மண் சோறு சாப்பிடுவது, பால் குடம் எடுப்பது என்று கவனம் ஈர்த்தார் செந்தில் பாலாஜி.

கரூர் மாவட்டத்தில் செல்வாக்கை வளர்த்ததுடன் நில்லாமல், மாவட்டத்திற்குள் தனது அரசியல் எதிரிகளையும் மெல்லமெல்ல ஓரம்கட்ட ஆரம்பித்தார் #செந்தில்_பாலாஜி.

செந்தில் பாலாஜியின் அரசியலுக்கு முன் தாக்குப்பிடிக்க முடியாமல், அ.தி.மு.கவில் இருந்த முன்னாள் அமைச்சர் சின்னச்சாமி தி.மு.கவுக்குச் சென்றார்.

நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின்போது தம்பிதுரைக்கு பல இடங்களில் தெரிவிக்கப்பட்ட எதிர்ப்புக்குப் பின்னால், செந்தில் பாலாஜியின் கரம் இருந்ததாகவும் சொல்லப்பட்டது.

அதிமுக சசிகலா - ஓ.பி.எஸ் என இரு தரப்பாக இரண்டாகப் பிளவுபட்டபோது, சசிகலா பிரிவுக்கு ஆதரவாக இருந்தார். அந்த நேரத்திலும்கூட, போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை ஆகியோரை எதிர்த்து போராட்டம் நடத்தப்போவதாக ஒரு அதிரடியைக் கிளப்பினார் செந்தில் பாலாஜி.

அதிமுக பிளவுபட்டிருந்த போது, 2017 ஏப்ரலிலேயே செந்தில் பாலாஜி தி.மு.கவில் சேரப் போவதாக செய்திகள் அடிபட்டன. தன்னுடன் 5 எம்.எல்.ஏ.க்களையும் அவர் தி.மு.கவுக்கு அழைத்துவருவார் என்றும் பேசப்பட்டது. ஆனால், அதிமுகவில் இருந்து டிடிவி தினகரன் ஒதுக்கிவைக்கப்பட்டபோது அவருககு உறுதுணையாக நின்றார் செந்தில் பாலாஜி.

ஆர்.கே.நகரில் பெற்ற வெற்றியால் திரும்பிப் பார்க்க வைத்த டி.டி.வி. தினகரன், அதன் பிறகு அரசியலில் தேங்கிப் போக, அவருடன் ஏற்பட்ட அதிருப்தி மற்றும் தனது அடுத்தகட்ட அரசியல் வாழ்க்கையை கருத்தில் கொண்டு 2018-ம் ஆண்டு செந்தில் பாலாஜி திமுகவில் இணைந்தார்.

திமுகவில் சேர்ந்ததும் மீண்டும் ஏறுமுகம்


2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுடன் 23 சட்டமன்ற தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் அரவக்குறிச்சியில் இருந்து திமுக சார்பில் போட்டியிட்டு செந்தில் பாலாஜி வெற்றி பெற்றார்.

2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் திமுக பலவீனமாக இருப்பதாக கருதப்படும் கொங்கு மண்டலத்தில் 100 சதவீத வெற்றியைப் பெற்றதில் முக்கிய பங்காற்றியதன் மூலம் கட்சித் தலைமையின் நம்பிக்கையை பெற்றதாக கூறப்படுவது உண்டு.

2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலிலும் திமுக சார்பில் வாய்ப்பு பெற்று, சட்டமன்றத்திற்குள் நுழைந்த செந்தில் பாலாஜிக்கு தனது அமைச்சரவையிலும் இடம் கொடுத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

செந்தில் பாலாஜிக்கு முக்கியத்துவம் வாய்ந்த மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆகிய துறைகள் ஒதுக்கப்பட்டதால் மூத்த அமைச்சர்கள் பலருக்கும் அதிருப்தி அடைந்ததாக செய்திகள் கசிந்தன.

அரசியலில் மீண்டும் நெருக்கடி


ரூ.1 லட்சம் கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பதாக திமுக ஃபைல்ஸ் என்ற பெயரில் பா.ஜ.க. வெளியிட்ட பட்டியலில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் பெயரும் இடம் பெற்றிருந்தது.

கடந்த மாதம் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் மற்றும் அமைச்சருக்கு நெருக்கமான பலரின் வீடுகள், அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது வருமான வரி அதிகாரிகளை உள்ளே அனுமதிக்காமல் திமுக பெண் நிர்வாகி ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சலசலப்பை ஏற்படுத்தியது.

தமிழ்நாடு காவல்துறையிடம் தெரிவிக்காமல் வருமானவரித்துறையினர் வந்ததே பாதுகாப்பு குறைபாட்டிற்கு காரணம் என்று திருப்பூர் எஸ்பியும் விளக்கம் கொடுத்திருந்தார்.

மீண்டும் சோதனை - கைது


அதுபோன்ற நிலை இம்முறை வந்துவிடக் கூடாது என்றே, முன்கூட்டியே திட்டமிட்டு மத்திய ரிசர்வ் படை பாதுகாப்புடன் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

ஒருபுறம் சோதனை நடக்க, மறுபுறம் அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணையைம் தொடர்ந்தனர்.

முடிவில், இன்று அதிகாலையில் விசாரணைக்காக அலுவலகத்திற்கு அழைத்துச் செல்ல அமலாக்கத்துறை அதிகாரிகள் எத்தனித்த போதுதான், அமைச்சர் செந்தில் பாலாஜி திடீரென நெஞ்சு வலிப்பதாகக் கூறி காரிலேயே அலறித் துடித்தார்.

ஓமந்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் பலரும் நேரில் சென்று பார்த்த வண்ணம் உள்ளனர்.

காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்பட தேசிய அளவில் பா.ஜ.க.வுக்கு எதிரணியில் உள்ள கட்சிகள் பலவும், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான அமலாக்கத்துறை நடவடிக்கையை கண்டித்துள்ளன.

கள அரசியலில் சுறுசுறுப்பானவர் என்று பெயரெடுத்த அமைச்சர் செந்தில் பாலாஜியின் அரசியல் வாழ்க்கையில் கட்சித் தாவல், அசுர வேக வளர்ச்சி, இறங்கு முகம், வழக்குகளால் சிக்கல் என்பன மாறிமாறி வந்துள்ளன. கட்சி மாறிய போதும் சரி, சிக்கல்களை எதிர்கொண்ட போதும் சரி, தனது தனித்துவமான உத்திகளால் அவற்றில் இருந்து மீண்டு வந்திருக்கிறார். இம்முறையும் அதுபோல் மீண்டு வருவாரா? அல்லது அவரது உத்திகள் கைகொடுக்குமா?

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jun 14, 2023 9:34 pm

அமைச்சரை சிக்க வைத்த ஊழல் வழக்கு


அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்தபோது ஓட்டுநர் உள்ளிட்ட பதவிகளுக்கு பணம் வாங்கியதாக எழுந்த குற்றச்சாட்டுகளை திமுக ஆட்சியில் அமைச்சராக உள்ளபோது #செந்தில்_பாலாஜி எதிர்கொண்டு வருகிறார்.

தமிழ்நாடு மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான ஊழல் வழக்குகளை மீண்டும் விசாரிக்க உச்சநீதிமன்றம் கடந்த மாதம் உத்தரவிட்டது. இந்த வழக்கின் பின்னணியை இங்கே பார்க்கலாம்.

தமிழ்நாட்டில் ஆளும் திமுக அரசில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சராக இருக்கும் செந்தில் பாலாஜி கடந்த 2011ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார்.

2014ஆம் ஆண்டில் போக்குவரத்து துறையில் ஓட்டுநர், நடத்துநர், இளநிலை உதவியாளர், இளநிலை பொறியாளர் மற்றும் உதவி பொறியாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு ஆள் சேர்க்கை நடப்பதற்கான அறிவிப்பு வெளியானது. அதன் அடிப்படையில் ஆள்சேர்ப்பு நடைபெற்றது.

இந்தப் பணி நியமனங்களில் அமைச்சர் செந்தில் பாலாஜி உட்பட துறை அதிகாரிகள் பலர் முறைகேடுகளில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பலர் புகார் அளித்திருந்தனர்.

காவல்துறை உரிய விசாரணை நடத்தவில்லை எனக்கூறி சிலர் உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்திருந்தனர்.

2018ஆம் ஆண்டு மெட்ரோ போக்குவரத்து கழக தொழில்நுட்ப ஊழியரான அருள்மணி என்பவர் போக்குவரத்து கழகத்தில் வேலைகளைப் பெற்றுத்தர பலரிடம் லஞ்சம் பெற்றப்பட்டதாக அமைச்சர் செந்தில் பாலாஜி உட்பட பலர் மீது புகார் அளித்திருந்தார்.

வேலைக்காக பணம் கொடுத்தவர்கள் ஆட்சேர்ப்பு பட்டியல் வந்தபோது தங்களின் பெயர் வராததால் அதிருப்தியடைந்து புகார் அளித்துள்ளனர்.

முதல் கட்ட புகார்களில் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது குற்றம்சுமத்தப்படவில்லை. இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியையும் சேர்த்து லஞ்ச ஒழிப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட வேண்டும் என வழக்கு தொடரப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக 2018 ஆம் ஆண்டு இந்த புகாரில் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்ட குற்றம் சுமத்தப்பட்டவர்கள் மீது முதல் தகவல அறிக்கை பதிவு செய்யப்பட்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இதன் விசாரணை சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

அமலாக்கத் துறை நோட்டீஸ்



இந்த நிலையில் 2021ஆம் ஆண்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், திமுகவில் இணைந்திருந்த செந்தில் பாலாஜிக்கு மின்சாரத் துறை அமைச்சர் பதவி தரப்பட்டது.

இந்நிலையில், தன் மீது தொடரப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி சார்பில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், 2021ஆம் ஆண்டு ஜூலை 30ஆம் தேதி, செந்தில் பாலாஜி மீதான குற்றவியல் வழக்குகளை நிறுத்திவைத்து உத்தரவிட்டது.

மனுவில் குற்றம்சாட்டப்பட்டவர் மற்றும் சாட்சியங்கள் 13 பேரும் சமரசத்தை எட்டியதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டதால் இந்த வழக்கின் விசாரணை நிறுத்திவைக்கப்படுவதாக கூறப்பட்டது.

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கட்டுப்பாடுகள் விதித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து அமலாக்கத் துறை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

இதற்கிடையே, இந்த வழக்கில் பணமோசடி நடைபெற்றதாக வழக்குப் பதிவு செய்த அமலாக்கத் துறை, அமைச்சர் செந்தில் பாலாஜியை விசாரணைக்கு வரும்படி அழைப்பாணை அனுப்பியிருந்தது.

அதை எதிர்த்து செந்தில் பாலாஜி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், அமலாக்கத்துறை அழைப்பாணையை தற்காலிகமாக நிறுத்தி வைத்து உத்தரவிட்டது.

அதேசமயம், செந்தில் பாலாஜி மீதான முந்தைய வழக்குகளில் புதிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு



இந்நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கட்டுப்பாடுகள் விதித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து அமலாக்கத் துறை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

அதே சமயம் பழைய வழக்குகளை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்கிற உத்தரவை எதிர்த்து அமைச்சர் செந்தில் பாலாஜியும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.

இந்த விவகாரத்தில் காவல்துறை விசாரணையில் நம்பிக்கை இல்லை என்பதால், சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் மேல்முறையிடு செய்யப்பட்டது.

உச்சநீதிமன்ற தீர்ப்பு



இவற்றை விசாரித்த உச்சநீதிமன்றம், அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்குகளை ரத்து செய்ய மறுத்ததுடன் தமிழ்நாடு காவல்துறை முறையாக விசாரணை நடத்தி இரண்டு மாதங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

மேலும் வழக்கு விசாரணையின் போக்கை பொறுத்து சிறப்பு புலனாய்வு குழு அமைப்பது தொடர்பான கோரிக்கை எதிர்காலத்தில் பரிசீலிக்கப்படும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

அமலாக்கத் துறைக்கு கட்டுப்பாடுகள் விதித்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்த மேல்முறையீட்டு மனுக்களையும் உச்சநீதிமன்றம் விசாரணைக்கு அனுமதித்தது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jun 14, 2023 9:36 pm


செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் அளிக்கக் கோரிய மனு மீதான விசாரணை நாளை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மேலும் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரிய அமலாக்கத்துறையின் மனு, காவேரி மருத்துவமனையில் சிகிச்சையளிக்க அனுமதிக்க கோரிய செந்தில் பாலாஜி தரப்பிலான மனு ஆகிய மனுக்களின் மீதான விசாரணையும் நாளை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

ஜாமீன் மீதான விசாரணை



அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை வரும் 28-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க சென்னை முதன்மை நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில் ஜாமின் கேட்டு செந்தில் பாலாஜி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

ஜாமின் மனு மீதான விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது.

"செந்தில் பாலாஜி கைதில் மனித உரிமை மீறல் நடைபெற்றுள்ளது. நள்ளிரவில் கைது செய்தது சட்டவிரோதமானது . மனைவியிடம் உறவினர்களிடம் சட்டப்படி கைது குறித்து தெரியப்படுத்த வேண்டும் அதை செய்யவில்லை" என என். ஆர். இளங்கோ தனது வாதங்களை முன் வைத்தார்.

அமலாக்கதுறை சார்பில் ஏ.ஆர்.எஸ் சுந்தரேசன் தனது வாதத்தை முன் வைத்து வருகிறார்.

“விசாரணைக்கு செந்தில் பாலாஜி எந்த ஒத்துழைப்பும் வழங்கவில்லை. நேற்று வரை ஆரோக்கியமாக இருந்தவர் தற்போது உடல் நலக்குறைவு என கூறுகிறார். உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தால் நாங்களே உரிய சிகிச்சை அளிக்க தயாராக உள்ளோம்.” என அமலாக்கத்துறை சார்பில் ஏ.ஆர்.எஸ் சுந்தரேசன் தனது வாதத்தை முன் வைத்தார்.

மேலும் செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்க அமலாக்கப்பிரிவு சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.

அதிகாலையில் நடந்தது என்ன?



மதுவிலக்கு, மின்சாரம், ஆயத்தீர்வை ஆகிய துறைகளுக்கான அமைச்சராக #செந்தில்_பாலாஜி பதவி வகித்து வருகிறார்.

நேற்று (13.6.2023) தலைமைச் செயலக அலுவலகத்தில் நடத்தப்பட்ட நீண்ட சோதனைகளுக்குப் பிறகு அமைச்சர் செந்தில் பாலாஜி விசாரணைக்காக அமலாக்கத்துறை அதிகாரிகளால் இன்று அதிகாலை அழைத்துச் செல்லப்பட்டார்.

அப்போது நெஞ்சு வலிப்பதாக கதறி அழுத அமைச்சர் சிகிச்சைக்காக சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

காரின் இருக்கையில் படுத்தபடி செந்தில் பாலாஜி துடிக்கும் காட்சிகளை ஏஎன்ஐ செய்தி நிறுவனம் வெளியிட்டது.

இந்த நிலையில், செந்தில் பாலாஜி சிகிச்சை பெற்றுவரும் ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிபதி அல்லி வந்து விசாரணை நடத்தினார்.

பின்பு செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை குறித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jun 14, 2023 9:37 pm

நெஞ்சுவலி ஏற்படும் அளவுக்கு நெருக்கடி - மு.க.ஸ்டாலின்


விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பேன் என்று கூறியபிறகும், நெஞ்சுவலி ஏற்படும் அளவுக்கு நெருக்கடி கொடுத்து – மனிதநேயமற்ற முறையில் பா.ஜ.க.வின் அமலாக்கத்துறை நடந்து கொண்டது கண்டனத்திற்குரியது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

"அமைச்சர் செந்தில் பாலாஜி இல்லத்தில் நேற்றைய தினம் காலை முதல் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தந்து வந்தார். இந்த நிலையில் தேவையில்லாத வகையில் அத்துமீறி- அனுமதியின்றி பலவந்தமாக, தமிழ்நாட்டின் பாதுகாப்பு தொடர்பான இரகசிய கோப்பு ஆவணங்கள்நிறைந்த தலைமைச் செயலகத்தில் அமைந்துள்ள அமைச்சரின் அறைக்குள் நுழைந்து, விசாரணை என்றபெயரால் நாடகம் நடத்தி நேரத்தை கடத்தி இருக்கிறார்கள்." என்று அந்த அறிக்கையில் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jun 14, 2023 9:38 pm

நாங்கள் மிசாவையே பார்த்தவர்கள்: உதயநிதி


“பாஜக அரசின் மிரட்டலுக்கு திமுக அஞ்சாது” என உதயநிதி கூறினார். செந்தில் பாலாஜி நலமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

செந்தில் பாலாஜிக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

"நாங்கள் மிசாவையே பார்த்தவர்கள்; சட்டப்படி சந்திப்போம்" என்று உதயநிதி ஸ்டாலின் மேலும் தெரிவித்தார்.

செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் பரவியிருக்கும் நிலையில், அது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு ஏதும் இதுவரை வெளியாகவில்லை.

சென்னை மற்றும் கரூரில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடுகளில் நேற்று காலை முதலே அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். தலைமைச் செயலகத்தில் உள்ள அவரது அலுவலகத்திலும் சோதனை நடத்தப்பட்டது.

இரவில் விசாரணைக்காக நுங்கம்பாக்கத்தில் உள்ள அலுவலகத்துக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் அழைத்துச் சென்றனர். அப்போது செந்தில் பாலாஜி கதறி அழுது துடித்ததால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

செந்தில் பாலாஜி அனுமதிக்கப்பட்ட ஓமந்தூரார் மருத்துவமனைக்கு திமுக நிர்வாகிகள், அமைச்சர்கள் வந்தவண்ணம் உள்ளனர்.

தற்போது மருத்துவமனையைச் சுற்றியுள்ள இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jun 14, 2023 9:39 pm

செந்தில் பாலாஜி மீது நடவடிக்கை கோரியவர் ஸ்டாலின்தான் - அண்ணாமலை


செந்தில் பாலாஜி மீது நடவடிக்கை எடுக்கக் கோரியவர் மு.க.ஸ்டாலின்தான் என்று பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

"உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலை தொடர்ந்துதான் அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. போக்குவரத்து துறையில் வேலைவாய்ப்பு வாங்கிதருவதாக சொல்லி செந்தில் பாலாஜி பணம் பெற்றுள்ளார் என்ற புகாரை வைத்துதான் அமலாக்கத்துறை செந்தில் பாலாஜியை விசாரிக்கிறது. எதிர்க்கட்சித் தலைவராக ஸ்டாலின் இருந்தபோது செந்தில் பாலாஜி மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஏற்கனவே சொல்லியிருந்தார். தற்போது இதை எப்படி அரசியல் காழ்ப்புணர்வு என்று சொல்கிறார்கள்? இதை ஸ்டாலின்தான் விளக்கவேண்டும்..இதில் கடுகுஅளவு கூட அரசியல் காழ்ப்புணர்வு இல்லை. பாஜக நேர்மையாக செயல்படுகிறது" என்று அவர் செய்தியாளர்களிடம் குறிப்பிட்டார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jun 14, 2023 9:40 pm

மனித உரிமை மீறல் - அமைச்சர் ரகுபதி


தமிழ்நாடு மதுவிலக்கு மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் நடத்திய விதம் அப்பட்டமான மனித உரிமை மீறல் என்று மாநில சட்ட அமைச்சர் ரகுபதி குற்றம்சாட்டியுள்ளர்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "செந்தில் பாலாஜியை குறிவைத்து சித்ரவதை செய்துள்ளனர். அவரிடம் சுமார் 24 மணி நேரம் தொடர்ச்சியாக அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர். இது மனித உரிமைகளை மீறிய செயல். இதற்காக மக்களுக்கும், நீதிமன்றத்திற்கும் அமலாக்கத்துறை அதிகாரிகள் பதில் சொல்லியாக வேண்டும்." என்று கூறியுள்ளார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jun 14, 2023 9:41 pm

பா.ஜ.க. அலுவலகத்தில் போலீசார் குவிப்பு


அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டதன் எதிரொலியாக அவரது சொந்த ஊரான கரூரில் பல்வேறு இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்தந்த காவல் நிலையங்களில் போலீசார் தயார் நிலையில் இருக்க மாவட்ட எஸ்.பி சுந்தரவதனம் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், கரூர் - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள மாவட்ட பாஜக அலுவலகம், கரூர் பேருந்து நிலைய ரவுண்டானா உள்ளிட்ட முக்கிய இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருவது குறித்து டிஐஜி சரவண சுந்தர் ரோந்து பணி மூலம் கண்காணித்து வருகிறார்.

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக