புதிய பதிவுகள்
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Today at 9:29 pm
» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 7:51 pm
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Today at 7:49 pm
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Today at 7:48 pm
» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Today at 7:46 pm
» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Today at 7:44 pm
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 7:42 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Today at 7:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:38 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Today at 4:58 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 4:56 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:40 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:16 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:17 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:55 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:19 pm
» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Today at 1:12 pm
» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Today at 9:53 am
» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Today at 9:46 am
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 9:26 am
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 9:23 am
» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Today at 9:22 am
» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Today at 8:33 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 8:45 pm
» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:18 am
» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 7:14 am
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
by ayyasamy ram Today at 9:29 pm
» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 7:51 pm
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Today at 7:49 pm
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Today at 7:48 pm
» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Today at 7:46 pm
» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Today at 7:44 pm
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 7:42 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Today at 7:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:38 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Today at 4:58 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 4:56 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:40 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:16 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:17 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:55 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:19 pm
» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Today at 1:12 pm
» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Today at 9:53 am
» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Today at 9:46 am
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 9:26 am
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 9:23 am
» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Today at 9:22 am
» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Today at 8:33 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 8:45 pm
» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:18 am
» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 7:14 am
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குருப்பெயர்ச்சி ராசிபலன்கள் 2018 - 2019 - ஜோதிடரத்னா கே.பி.வித்யாதரன்
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
First topic message reminder :
மேஷம்
https://eegarai.darkbb.com/t148203-2018-2019#1278971
ரிஷபம்
https://eegarai.darkbb.com/t148203-2018-2019#1278972
மிதுனம்
https://eegarai.darkbb.com/t148203-2018-2019#1278973
கடகம்
https://eegarai.darkbb.com/t148203-2018-2019#1278974
சிம்மம்
https://eegarai.darkbb.com/t148203-2018-2019#1278976
கன்னி
https://eegarai.darkbb.com/t148203-2018-2019#1278977
துலாம்
https://eegarai.darkbb.com/t148203-2018-2019#1278978
விருச்சிகம்
https://eegarai.darkbb.com/t148203-2018-2019#1278980
தனுசு
https://eegarai.darkbb.com/t148203-2018-2019#1278981
மகரம்
https://eegarai.darkbb.com/t148203-2018-2019#1278982
கும்பம்
https://eegarai.darkbb.com/t148203-2018-2019#1278983
மீனம்
https://eegarai.darkbb.com/t148203-2018-2019#1278984
நிகழும் விளம்பி வருடம், புரட்டாசி மாதம் 18-ம் தேதி வியாழக்கிழமை (4.10.18), கிருஷ்ணபட்ச ஏகாதசி திதி, கீழ்நோக்குள்ள ஆயில்யம் நட்சத்திரம், சித்தி நாமயோகம் - பவம் நாமகரணம், நேத்திரம் ஜுவனம் நிறைந்த சித்தயோகத்தில், சுக்கிர ஓரையில், ஏழாம் சாமத்தில்... பஞ்ச பட்சிகளில் ஆந்தை நடை பயிலும் நேரத்தில், தட்சிணாயனப் புண்ய கால வர்ஷ ருதுவில், இரவு 10 மணிக்கு, (சூரிய உதயம் 39.55 நாழிகைக்கு), ரிஷப லக்னத் திலும், நவாம்சத்தில் சிம்ம லக்னத்திலும், சர வீடான துலாம் ராசியிலிருந்து ஸ்திர வீடான விருச்சிக ராசிக்குள் சென்று அமர்கிறார் குருபகவான்.
அவர், 13.3.19 முதல் 9.4.19 வரை அதிசாரமாகவும், 10.4.19 முதல் 18.5.19 வரை வக்ரகதியிலும் தன் சொந்த வீடான தனுசு ராசியில் சஞ்சரிக்கிறார்.
செவ்வாயின் வீடான விருச்சிக ராசியில் வந்து அமர்கிறார் குரு. ஆகவே, ரசாயனப் பொருட்கள், உணவுப் பொருட்கள் பாதிப்படையும். எனினும், ரசாயனத் தொழிற்சாலைகள் சீரமைக்கப்படும். உலகெங்கும் சுற்றுச்சூழல் மேம்பாட்டுக்கும் மாசுக்கட்டுப் பாட்டுக்கும் அதிக முக்கியத்துவம் தரப்படும். மருத்துவத்துறையில் அறுவை சிகிச்சை சாதனங்கள் அதிகரிக்கும். ரத்தம் சம்பந்தப்பட்ட நோய்களால் எண்ணற்றோர் பாதிக்கப்படுவார்கள்.
3.10.18 முதல் 16.12.18 வரை சூறாவளிக் காற்றுடன் கனமழை பொழியும். புதிய புயல் சின்னங்கள் உருவாகும். காலப்புருஷ ராசிக்கு 8-ம் ராசியில் குரு அமர்வதால், ரியல் எஸ்டேட் துறை சுமாராக இருக்கும். மழை, வெள்ளத்தால் விளைநிலங்கள், பயிர்கள் பாதிப்படையும். நாட்டின் கடன் அதிகரிக்கும். புதிய ஏவுகணைகள் விண்ணில் செலுத்தப்படும். தகவல் தொழில்நுட்பத் துறை நவீனமாகும்.
செல்போன் போன்ற சாதனங்களின் விலை குறையும். வெளிநாட்டு முதலீடுகள் அதிகரிக்கும். புதிய தொழிற்சாலைகள் உருவாகும். காப்பீட்டுத் துறை அதிக லாபம் ஈட்டும். பங்குச்சந்தை மற்றும் தேர்தல் தொடர்பான கணிப்புகள் பொய்யாகும். அணு ஆராய்ச்சிகள் நம் நாட்டில் அதிகரிக்கும். ஆசிரியர்கள் பாதிக்கப்படுவார்கள். ஞானிகள், மகான்கள் பாதிப்படைவார்கள். ரயில் விபத்துகளும், ரயிலில் கொள்ளைச் சம்பவங்களும் அதிகரிக்கும்.
அரிய மூலிகைகள், விதைகள் ஆகியன வெளி நாட்டுக்குக் கடத்தப்படும். காடுகளில் தீ விபத்து நிகழும். சிறுநீரகத் தொற்றால் புகழ்பெற்றவர்களின் உடல்நிலை பாதிப்படையும். செவ்வாயின் வீட்டில் குரு அமர்வதால் பெண்கள் மாதவிடாய்க் கோளாறு மற்றும் சிறுநீர்த் தொற்றால் பாதிக்கப்படுவார்கள்.
கச்சா எண்ணெயின் விலை அதிகமாகும். பெட்ரோல் விலை உயரும். 21.12.18 முதல் 14.1.19 மற்றும் 15.3.19 முதல் 13.4.19 வரையிலான கால கட்டத்தில், விமான விபத்துகள் நிகழலாம். உலகெங்கும் நிலநடுக்கங்கள் அதிகரிக்கும்.
உலக அரங்கில் ரஷ்யாவின் கை மீண்டும் ஓங்கும். அமெரிக்காவின் வல்லரசு அந்தஸ்து கொஞ்சம் கொஞ்சமாக குறையும். அந்நாட்டு அதிபருக்கான எதிர்ப்புகள் மேலும் வலுவடையும். இந்தியாவில் மத்திய அரசின் நலத்திட்டங்கள் மக்களைச் சென்றடைவதில் தாமதம் ஏற்படும். பெரும்பாலும் ஆளுங்கட்சிகளுக்குச் சாதகமான நிலை ஏற்படும். தேசத் தலைவர்களின் பாதுகாப்பில் அதீத கவனம் செலுத்தவேண்டியது வரும்.
23.12.18 முதல் அரசியல் களம் சூடு பிடிக்கும். தென்னிந்தியாவில் அரசியல் கூட்டணிகள் மாறும். தமிழ்நாடு, கர்நாடகம், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களின் எல்லைப் பகுதிகள், இயற்கைச் சீற்றங்களால் பாதிப்படையும்.
குருவின் பார்வை படுவதால் ரிஷபம், கடகம், மீனம் ஆகிய ராசிகளில் பிறந்தவர்களுக்கு யோக பலன்கள் கூடுதலாகக் கிடைக்கும்.
இந்த பெயர்ச்சியின்போது பெரும்பான்மையான காலம் - ஏறக்குறைய 243 நாட்களுக்கு, கேட்டை நட்சத்திரத்திலேயே குருபகவான் பயணம் செய்ய இருக்கிறார். ஆகவே ஆயில்யம், கேட்டை, ரேவதி நட்சத்திரங்களில் பிறந்தவர்களின் ஆரோக்கியம் பாதிப்படையும். பணப்பற்றாக்குறை உண்டாகும். பயணங்களில் கவனமாக இருக்க வேண்டும்.
4.10.18 முதல் 20.10.18 வரை விசாகம்; 21.10.18 முதல் 19.12.18 வரை அனுஷம்; 20.12.18 முதல் 12.3.19 வரை மற்றும் 9.8.19 முதல் 27.10.19 வரை கேட்டை நட்சத்திரம்; 13.3.19 முதல் 18.5.19 வரை மூலம் நட்சத்திரக்காரர்கள் தேக ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்தவேண்டும்.
அதேநேரம், இந்தக் குருப்பெயர்ச்சி காலத்தில் மக்களிடையே தன்னம்பிக்கையும், தளராத உழைப்பும் அதிகரிக்கும். அமைதியும் ஆனந்தமும் நிறைந்து திகழ, தெய்வம் துணை நிற்கும்.
மேஷம்
https://eegarai.darkbb.com/t148203-2018-2019#1278971
ரிஷபம்
https://eegarai.darkbb.com/t148203-2018-2019#1278972
மிதுனம்
https://eegarai.darkbb.com/t148203-2018-2019#1278973
கடகம்
https://eegarai.darkbb.com/t148203-2018-2019#1278974
சிம்மம்
https://eegarai.darkbb.com/t148203-2018-2019#1278976
கன்னி
https://eegarai.darkbb.com/t148203-2018-2019#1278977
துலாம்
https://eegarai.darkbb.com/t148203-2018-2019#1278978
விருச்சிகம்
https://eegarai.darkbb.com/t148203-2018-2019#1278980
தனுசு
https://eegarai.darkbb.com/t148203-2018-2019#1278981
மகரம்
https://eegarai.darkbb.com/t148203-2018-2019#1278982
கும்பம்
https://eegarai.darkbb.com/t148203-2018-2019#1278983
மீனம்
https://eegarai.darkbb.com/t148203-2018-2019#1278984
குருப்பெயர்ச்சி ராசிபலன்கள் 2018 - 2019
யோக பலன்கள் யாருக்கு?
நிகழும் விளம்பி வருடம், புரட்டாசி மாதம் 18-ம் தேதி வியாழக்கிழமை (4.10.18), கிருஷ்ணபட்ச ஏகாதசி திதி, கீழ்நோக்குள்ள ஆயில்யம் நட்சத்திரம், சித்தி நாமயோகம் - பவம் நாமகரணம், நேத்திரம் ஜுவனம் நிறைந்த சித்தயோகத்தில், சுக்கிர ஓரையில், ஏழாம் சாமத்தில்... பஞ்ச பட்சிகளில் ஆந்தை நடை பயிலும் நேரத்தில், தட்சிணாயனப் புண்ய கால வர்ஷ ருதுவில், இரவு 10 மணிக்கு, (சூரிய உதயம் 39.55 நாழிகைக்கு), ரிஷப லக்னத் திலும், நவாம்சத்தில் சிம்ம லக்னத்திலும், சர வீடான துலாம் ராசியிலிருந்து ஸ்திர வீடான விருச்சிக ராசிக்குள் சென்று அமர்கிறார் குருபகவான்.
அவர், 13.3.19 முதல் 9.4.19 வரை அதிசாரமாகவும், 10.4.19 முதல் 18.5.19 வரை வக்ரகதியிலும் தன் சொந்த வீடான தனுசு ராசியில் சஞ்சரிக்கிறார்.
செவ்வாயின் வீடான விருச்சிக ராசியில் வந்து அமர்கிறார் குரு. ஆகவே, ரசாயனப் பொருட்கள், உணவுப் பொருட்கள் பாதிப்படையும். எனினும், ரசாயனத் தொழிற்சாலைகள் சீரமைக்கப்படும். உலகெங்கும் சுற்றுச்சூழல் மேம்பாட்டுக்கும் மாசுக்கட்டுப் பாட்டுக்கும் அதிக முக்கியத்துவம் தரப்படும். மருத்துவத்துறையில் அறுவை சிகிச்சை சாதனங்கள் அதிகரிக்கும். ரத்தம் சம்பந்தப்பட்ட நோய்களால் எண்ணற்றோர் பாதிக்கப்படுவார்கள்.
3.10.18 முதல் 16.12.18 வரை சூறாவளிக் காற்றுடன் கனமழை பொழியும். புதிய புயல் சின்னங்கள் உருவாகும். காலப்புருஷ ராசிக்கு 8-ம் ராசியில் குரு அமர்வதால், ரியல் எஸ்டேட் துறை சுமாராக இருக்கும். மழை, வெள்ளத்தால் விளைநிலங்கள், பயிர்கள் பாதிப்படையும். நாட்டின் கடன் அதிகரிக்கும். புதிய ஏவுகணைகள் விண்ணில் செலுத்தப்படும். தகவல் தொழில்நுட்பத் துறை நவீனமாகும்.
செல்போன் போன்ற சாதனங்களின் விலை குறையும். வெளிநாட்டு முதலீடுகள் அதிகரிக்கும். புதிய தொழிற்சாலைகள் உருவாகும். காப்பீட்டுத் துறை அதிக லாபம் ஈட்டும். பங்குச்சந்தை மற்றும் தேர்தல் தொடர்பான கணிப்புகள் பொய்யாகும். அணு ஆராய்ச்சிகள் நம் நாட்டில் அதிகரிக்கும். ஆசிரியர்கள் பாதிக்கப்படுவார்கள். ஞானிகள், மகான்கள் பாதிப்படைவார்கள். ரயில் விபத்துகளும், ரயிலில் கொள்ளைச் சம்பவங்களும் அதிகரிக்கும்.
அரிய மூலிகைகள், விதைகள் ஆகியன வெளி நாட்டுக்குக் கடத்தப்படும். காடுகளில் தீ விபத்து நிகழும். சிறுநீரகத் தொற்றால் புகழ்பெற்றவர்களின் உடல்நிலை பாதிப்படையும். செவ்வாயின் வீட்டில் குரு அமர்வதால் பெண்கள் மாதவிடாய்க் கோளாறு மற்றும் சிறுநீர்த் தொற்றால் பாதிக்கப்படுவார்கள்.
கச்சா எண்ணெயின் விலை அதிகமாகும். பெட்ரோல் விலை உயரும். 21.12.18 முதல் 14.1.19 மற்றும் 15.3.19 முதல் 13.4.19 வரையிலான கால கட்டத்தில், விமான விபத்துகள் நிகழலாம். உலகெங்கும் நிலநடுக்கங்கள் அதிகரிக்கும்.
உலக அரங்கில் ரஷ்யாவின் கை மீண்டும் ஓங்கும். அமெரிக்காவின் வல்லரசு அந்தஸ்து கொஞ்சம் கொஞ்சமாக குறையும். அந்நாட்டு அதிபருக்கான எதிர்ப்புகள் மேலும் வலுவடையும். இந்தியாவில் மத்திய அரசின் நலத்திட்டங்கள் மக்களைச் சென்றடைவதில் தாமதம் ஏற்படும். பெரும்பாலும் ஆளுங்கட்சிகளுக்குச் சாதகமான நிலை ஏற்படும். தேசத் தலைவர்களின் பாதுகாப்பில் அதீத கவனம் செலுத்தவேண்டியது வரும்.
23.12.18 முதல் அரசியல் களம் சூடு பிடிக்கும். தென்னிந்தியாவில் அரசியல் கூட்டணிகள் மாறும். தமிழ்நாடு, கர்நாடகம், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களின் எல்லைப் பகுதிகள், இயற்கைச் சீற்றங்களால் பாதிப்படையும்.
குருவின் பார்வை படுவதால் ரிஷபம், கடகம், மீனம் ஆகிய ராசிகளில் பிறந்தவர்களுக்கு யோக பலன்கள் கூடுதலாகக் கிடைக்கும்.
இந்த பெயர்ச்சியின்போது பெரும்பான்மையான காலம் - ஏறக்குறைய 243 நாட்களுக்கு, கேட்டை நட்சத்திரத்திலேயே குருபகவான் பயணம் செய்ய இருக்கிறார். ஆகவே ஆயில்யம், கேட்டை, ரேவதி நட்சத்திரங்களில் பிறந்தவர்களின் ஆரோக்கியம் பாதிப்படையும். பணப்பற்றாக்குறை உண்டாகும். பயணங்களில் கவனமாக இருக்க வேண்டும்.
4.10.18 முதல் 20.10.18 வரை விசாகம்; 21.10.18 முதல் 19.12.18 வரை அனுஷம்; 20.12.18 முதல் 12.3.19 வரை மற்றும் 9.8.19 முதல் 27.10.19 வரை கேட்டை நட்சத்திரம்; 13.3.19 முதல் 18.5.19 வரை மூலம் நட்சத்திரக்காரர்கள் தேக ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்தவேண்டும்.
அதேநேரம், இந்தக் குருப்பெயர்ச்சி காலத்தில் மக்களிடையே தன்னம்பிக்கையும், தளராத உழைப்பும் அதிகரிக்கும். அமைதியும் ஆனந்தமும் நிறைந்து திகழ, தெய்வம் துணை நிற்கும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மகரம்
குருபகவான், 4.10.18 முதல் 28.10.19 வரை ராசிக்கு லாபவீட்டில் அமர்ந்து பலன் தரவுள்ளார். கடினமான காரியங்களையும் எளிதாக முடித்து வெற்றி பெறுவீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். கைமாற்றாகவும், கடனாகவும் வாங்கியிருந்த பணத்தைத் தந்து முடிப்பீர்கள். பிரபலங்கள், அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். தடைப்பட்டிருந்த வீடு கட்டும் பணியை மறுபடியும் தொடங்குவீர்கள். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும்.
கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். மூத்த சகோதர வகையில் இருந்த மனக்கசப்பு நீங்கும். நல்ல வேலை கிடைக்கும். தடைப்பட்ட திருமணம் கூடி வரும். சேமிக்கத் தொடங்குவீர்கள். வழக்குகள் சாதகமாக முடியும். வெளிவட்டாரத்தில் மதிப்பு மரியாதை அதிகரிக்கும்.
குரு பார்வை பலன்கள்: உங்கள் ராசிக்கு 3-ம் வீட்டைப் பார்ப்பதால் மனோபலம் கூடும். தைரியமாக முடிவுகள் எடுக்கத் தொடங்குவீர்கள். வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக முடியும். இளைய சகோதர வகையில் அனுகூலம் உண்டு. குரு 5-ம் வீட்டைப் பார்ப்பதால் குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும்.
மகன் உங்கள் அருமையைப் புரிந்துகொள்வார். குடும்பத்தினருடன் குலதெய்வக் கோயிலுக்குச் சென்று நேர்த்திக்கடனை செலுத்துவீர்கள். குரு ராசிக்கு 7-ம் வீட்டைப் பார்ப்பதால் சோர்வு நீங்கி உற்சாகமடைவீர்கள். பணவரவு உண்டு. புதிய திட்டங்கள் நிறைவேறும். விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள்.
நட்சத்திர சஞ்சாரம்: 4.10.18 முதல் 20.10.18 வரை குருபகவான், தன் சாரமான விசாகம் நட்சத்திரத்தில் செல்வதால், அவ்வப்போது பலவீனமாக இருப்பதாக நினைப்பீர்கள். சிலரை நம்பி பணம் கொடுத்து ஏமாறுவீர்கள். முன்கோபத்தைத் தவிர்ப்பது நல்லது. அவசர முடிவுகள் வேண்டாம்.
21.10.18 முதல் 19.12.18 வரை குருபகவான் சனிபகவானின் அனுஷம் நட்சத்திர சாரத்தில் செல்வதால், குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தைத் தந்து முடிப்பீர்கள். பேச்சில் முதிர்ச்சி தெரியும். புது வேலை கிடைக்கும். போட்டிகளில் வெற்றி உண்டு.
20.12.18 முதல் 12.3.19 வரை மற்றும் 9.8.19 முதல் 27.10.19 வரை குருபகவான் புதனின் நட்சத்திரமான கேட்டை நட்சத்திரத்தில் செல்வதால், ஷேர் மூலம் பணம் வரும். பழைய நண்பர்கள், உறவினர்கள் தேடி வருவர். பூர்வீகச் சொத்தில் பராமரிப்புப் பணிகள் செய்வீர்கள்.
அதிசார சஞ்சாரம்: 13.3.19 முதல் 18.5.19 வரை அதிசாரத்தில் உங்கள் ராசிக்கு 12-ல் கேதுவின் நட்சத்திரமான மூலம் நட்சத்திரத்தில் செல்வதால், திடீர்ப் பயணங்களால் அலைச்சல், சுபச் செலவுகள் இருக்கும். கனவுத் தொல்லையால் தூக்கம் குறையும்.
வக்ர சஞ்சாரம்:10.4.19 முதல் 18.5.19 வரை மூலம் நட்சத்திரத்திலும் மற்றும் 19.5.19 முதல் 8.8.19 வரை கேட்டை நட்சத்திரத்திலும் வக்ரகதியில் குரு செல்வதால், அத்தியாவசியச் செலவுகள் அதிகமாகும். பண வரவு உண்டு. வீடு கட்ட, வாங்க வங்கிக் கடன் கிடைக்கும். மகளுக்குத் திருமணம் கூடி வரும். யாரையும் விமர்சிக்க வேண்டாம்.
வியாபாரிகளுக்கு: வியாபாரத்தில் பற்று வரவு உயரும். குறைந்த முதலீடு செய்து லாபம் ஈட்டுவீர்கள். புதிய கிளைகள் தொடங்குவீர்கள். முக்கிய பிரமுகர்களின் அறிமுகத்தால் வெளிநாட்டு நிறுவனத்தின் ஒப்பந்தம் கிடைக்கும். ஷேர், ஸ்பெகுலேஷன், இரும்பு, கட்டட உதிரி பாகங்களால் லாபமடைவீர்கள்.
உத்தியோகஸ்தர்களுக்கு: அலுவலக சூட்சுமங்களைக் கற்றுக்கொள்வீர்கள். மூத்த அதிகாரிகள் உங்கள் ஆலோசனையைக் கேட்டு முக்கிய முடிவு எடுப்பார்கள். தலைமைப் பொறுப்பு தேடி வரும். வெளிநாட்டு நிறுவனங்களிலிருந்தும் வாய்ப்பு வரும்.
மாணவர்களுக்கு, படிப்பில் இதுவரை இருந்து வந்த மந்த நிலை மாறும். போட்டித் தேர்வுகளில் அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெறுவார்கள். கலைத்துறையினருக்கு, வீண் வதந்திகள் மறையும். துடிப்புடன் செயல்படுவார்கள். பெரிய நிறுவனங்களிலிருந்து அழைப்பு வரும். உங்கள் திறமைக்கு உரிய பாராட்டும் பரிசும் கிடைக்கும்.
மொத்தத்தில் இந்தக் குருப்பெயர்ச்சி, உங்களைப் பிரபலமாக்குவதுடன், பணவசதி, சொத்துச் சேர்க்கை ஆகியவற்றைத் தருவதாகவும் அமையும்.
பரிகாரம்: திருவண்ணாமலை மாவட்டம், களம்பூர் எனும் ஊரில் அருள்பாலிக்கும் ஸ்ரீவீர ஆஞ்சநேயரை சனிக்கிழமைகளில் சென்று வழிபட்டு வாருங்கள்; நன்மைகள் அதிகரிக்கும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கும்பம்
குருபகவான், 4.10.18 முதல் 28.10.19 வரை 10-ல் அமர்ந்து பலன் தரவுள்ளார். ஓரளவு நன்மையே உண்டா கும். சிலருக்கு வெளிநாட்டில், வெளி மாநிலத்தில் வேலை அமையும்.
எவருக்கும் அநாவசிய வாக்குறுதி தரவேண்டாம். ஒரே நேரத்தில் பல வேலைகளைப் பார்க்க நேரிடுவதால், எதை முதலில் முடிப்பது என்ற குழப்பம் ஏற்படும். தோல்வி மனப்பான்மையால் மன இறுக்கம் ஏற்படும்.
வீண் பழி, விமர்சனங்கள் வரும் என்றாலும் தன்னம்பிக்கையைக் கைவிடமாட்டீர்கள். விலையுயர்ந்த பொருள்களை கவனமாகப் பார்த்துக்கொள்ளவும். முக்கிய விஷயங் களில் சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து முடிவு எடுப்பது நல்லது.
குரு பார்வை பலன்கள்: குரு உங்கள் ராசிக்கு 2-ம் வீட்டைப் பார்ப்பதால் எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடக்கும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். சொத்து சேரும். குரு ஏழாம் பார்வையால் 4-ம் வீட்டைப் பார்ப்பதால் தாயாருடன் இருந்த மனவருத்தம் நீங்கும். வீடு கட்ட வங்கிக் கடன் கிடைக்கும். நவீன ரக வாகனம், செல்போன் வாங்குவீர்கள். கல்யாண முயற்சிகள் சாதகமாக முடியும். குரு 6-ம் வீட்டைப் பார்ப்பதால், தடைப்பட்ட காரியங்கள் முடிவடையும். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும்.
நட்சத்திர சஞ்சாரம்: 4.10.18 முதல் 20.10.18 வரை குருபகவான், தன் சாரமான விசாகம் நட்சத்திரத்தில் செல்வதால், கடனாகக் கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். வீட்டை விரிவு படுத்துவது, அழகுபடுத்துவது போன்ற முயற்சிகள் நல்லபடி முடியும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடக்கும். புதுப் பொறுப்புகள், பதவிகள் தேடி வரும்.
செலவுகளும், வேலைச்சுமையும் இருந்தபடி இருக்கும். மூத்த சகோதர வகையில் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டாகும்.
21.10.18 முதல் 19.12.18 வரை, சனிபகவானின் அனுஷம் நட்சத்திர சாரத்தில் குருபகவான் செல்வ தால், திடீர் செல்வாக்கு, யோகம், பணவரவு உண்டா கும். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். வேற்று மொழியினர், மாநிலத்தவர்களால் ஆதாயம் அடைவீர்கள். பயணங்களால் புது அனுபவம் உண்டாகும். செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். 20.12.18 முதல் 12.3.19 வரை மற்றும் 9.8.19 முதல் 27.10.19 வரை குரு பகவான் புதனின் நட்சத்திரமான கேட்டை நட்சத்திரத்தில் செல்வதால், பழைய கடனைத் தீர்க்க புது வழி பிறக்கும். பிள்ளைகளால் சொந்தங்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். பூர்வீகச் சொத்தை சீர்செய்வீர்கள். மகனின் உயர்கல்வி, உத்தியோகம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் சாதகமாகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும்.
அதிசார சஞ்சாரம்: 13.3.19 முதல் 18.5.19 வரை அதிசாரத்தில் உங்கள் ராசிக்கு 11-ல்கேதுவின் நட்சத்திரமான மூலம் நட்சத்திரத்தில் செல்வதால், செல்வம், செல்வாக்கு கூடும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். புதுப் பதவி, பொறுப்புகள் தேடி வரும்.
வக்ர சஞ்சாரம்: 10.4.19 முதல் 18.5.19 வரை மூலம் நட்சத்திரத்திலும் மற்றும் 19.5.19 முதல் 8.8.19 வரை கேட்டை நட்சத்திரத்திலும் வக்ரகதியில் குரு செல்வதால், திடீர்ப் பயணங்களும், செலவுகளும் துரத்தும். கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்தையும் உட்கொள்ள வேண்டாம். இடையிடையே பணவரவு உண்டு. வீடு, மனை வாங்குவது, விற்பது நல்ல விதத்தில் முடியும்.
வியாபாரிகளுக்கு: வியாபாரத்தில் அதிரடி மாற்றங்கள் செய்து லாபம் ஈட்டுவீர்கள். பழைய நிறுவனங்களைக் காட்டிலும் புதிய நிறுவனங்களின் பொருள்களை விற்பதன் மூலமாக அதிக ஆதாயம் உண்டு. கடையை விரிவுபடுத்த லோன் கிடைக்கும். சிமெண்ட், கணிணி உதிரி பாகங்கள், ரியல் எஸ்டேட், எண்டர்பிரைசஸ் வகைகளால் லாபமடைவீர்கள்.
உத்தியோகஸ்தர்களுக்கு: வேலைச்சுமை அதிகமாகும். `மற்றவர்கள் செய்த தவறுகளுக்காக நாம் பலிகடா ஆகிவிட்டோமே’ என்று வருத்தப் படுவீர்கள். புது உத்தியோக வாய்ப்புகள் வந்தாலும் பொறுத்திருந்து செயல்படுவது நல்லது.
மாணவர்களுக்குப் படிப்பில் கூடுதல் கவனம் தேவை. நினைவாற்றலை அதிகப்படுத்திக்கொள்ள முயற்சி செய்யுங்கள். கலைத்துறையினருக்கு: மறைமுகப் போட்டிகளும் விமர்சனங்களும் அதிகரிக்கும். வரவேண்டிய சம்பளப் பாக்கியைப் பெறுவதில் சிரமங்கள் ஏற்படும்.
மொத்தத்தில் இந்தக் குருப்பெயர்ச்சி, செலவுக ளையும் அலைச்சல்களையும் தந்தாலும், நிறைவில் வெற்றிப்பாதையைப் புலப்படுத்துவதாக அமையும்.
பரிகாரம்: திருப்போரூர் முருகன் கோயிலில் சந்நிதி கொண்டிருக்கும் ஸ்ரீசிதம்பரம் சுவாமிகளை, வியாழக்கிழமையில் தரிசித்து வழிபட்டு வாருங்கள்; சிரமங்கள் குறையும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மீனம்
குருபகவான், 4.10.18 முதல் 28.10.19 வரை 9-ல் அமர்ந்து பலன் தரவிருக்கிறார். புது வியூகங்களால் வாழ்வில் முன்னேறுவீர்கள். தொட்ட காரியங்கள் துலங்கும். வெளிவட்டாரத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். தினமும் எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்குக் கிடைக்கும். தந்தையுடன் இருந்து வந்த மோதல் போக்கு மாறும். தந்தைவழி சொத்துகள் சேரும்.
தடைப்பட்ட திருமணம் கூடிவரும். சுபநிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். பேச்சில் அனுபவ அறிவு பளிச்சிடும். கல்வியாளர்களின் நட்பு கிடைக்கும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வாழ்க்கைத்துணை உங்கள் முயற்சி வெற்றி பெற உதவி செய்வார். மகளின் திருமணத்தை சிறப்பாக நடத்தி முடிப்பீர்கள். மகனுக்கு வெளிநாடு தொடர்புடைய நிறுவனத்தில் வேலை அமையும். பூர்வீகச் சொத்து சம்பந்தப்பட்ட வழக்கு சாதகமாகும்.வீடு வாங்கும் விருப்பம் இப்போது நிறைவேறும்.
குரு பார்வை பலன்கள்: குருபகவான் உங்கள் ராசியை பார்ப்பதால், சோகமும் சோர்வும் நீங்கி, உற்சாகமும் மகிழ்ச்சியுமாக காணப்படுவீர்கள். புது வாகனம் வாங்குவீர்கள். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். குரு 3-ம் வீட்டைப் பார்ப்பதால், தன்னம்பிக்கை அதிகரிக்கும். விலையுயர்ந்த ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். குரு 5-ம் வீட்டைப் பார்ப்பதால், குழப்பம், தடுமாற்றம் நீங்கி தெளிவு பெறுவீர்கள். பிள்ளைகளின் கல்வி, திருமண முயற்சிகள் சாதகமாகும். பாகப்பிரிவினை சுமுகமாக முடியும்.
நட்சத்திர சஞ்சாரம்: 4.10.18 முதல் 20.10.18 வரை குருபகவான், தன் சாரமான விசாகம் நட்சத்திரத்தில் செல்வதால், கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். பழைய பிரச்னைகள் தீரும். புது வேலை கிடைக்கும். அலுவலகத்தில் மரியாதை கூடும்.
21.10.18 முதல் 19.12.18 வரை குருபகவான் சனிபகவானின் அனுஷம் நட்சத்திர சாரத்தில் செல்வதால், ஷேர் மூலம் பணம் வரும். அலைச்சலுடன் ஆதாயம் உண்டாகும். வீடு- வாகன வசதி பெருகும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு.
20.12.18 முதல் 12.3.19 வரை மற்றும் 9.8.19 முதல் 27.10.19 வரை குருபகவான் புதனின் நட்சத்திரமான கேட்டை நட்சத்திரத்தில் செல்வதால், கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். தாய்வழி சொத்து கைக்கு வரும்.
அதிசார சஞ்சாரம்: 13.3.19 முதல் 18.5.19 வரை அதிசாரத்தில் உங்கள் ராசிக்கு 10-ல் கேதுவின் நட்சத்திரமான மூலம் நட்சத்திரத்தில் செல்வதால், ஒரே நாளில் முக்கியமான இரண்டு, மூன்று வேலைகளை இழுத்துப்போட்டு பார்க்க வேண்டி வரும். வீண் பழிச்சொல் வரும்.
வக்ர சஞ்சாரம்: 10.4.19 முதல் 18.5.19 வரை மூலம் நட்சத்திரத்திலும் மற்றும் 19.5.19 முதல் 8.8.19 வரை கேட்டை நட்சத்திரத்திலும் வக்ரகதியில் குரு செல்வதால், நீங்கள் திட்டமிட்ட காரியங்கள் கைகூடும். தாயாரின் உடல் நிலை சீராகும். சொத்து வாங்க முன் பணம் தருவீர்கள்.
வியாபாரிகளுக்கு: வியாபாரத்தில் சந்தை நிலவரம் அறிந்து முதலீடு செய்வீர்கள். தேங்கிக் கிடந்த சரக்குகள் விற்றுத் தீரும். கடையை விரிவுபடுத்துவீர்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். ஷேர், ஸ்பெகுலேஷன், உணவு, எண்டர் பிரைசஸ், ஜுவல்லரி, மர வகைகளால் ஆதாயமடைவீர்கள். விலகிச் சென்ற பங்குதாரர் மீண்டும் வந்து சேர்வார். மூத்த வியாபாரிகளின் ஆதரவால் புதிய பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள்.
உத்தியோகஸ்தர்களுக்கு: உத்தியோகத்தில் உங்களைப் பற்றி குறை கூறியவர்களுக்கு, இனி தகுந்த பதிலடி கொடுப்பீர்கள். தேங்கிக் கிடந்த பணிகளை விரைந்து முடிப்பீர்கள். உங்களின் திறமையை மேலதிகாரி பாராட்டுவார். பதவி உயர்வு, சம்பள உயர்வு உண்டு. சிலருக்கு, அயல்நாடு தொடர்புடைய நிறுவனத்தில் வேலை அமையும்.
மாணவர்களுக்கு, நல்ல கல்வி நிறுவனத்தில் மேல்படிப்பைத் தொடர வாய்ப்பு கிடைக்கும். தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெறுவார்கள். இலக்கியம், ஓவியம் சார்ந்த போட்டிகளில் பரிசும் பாராட்டும் பெறுவார்கள்.
கலைத்துறையினருக்கு, திறமைக்கு ஏற்ற நல்ல வாய்ப்புகள் அமையும். உங்களுடைய படைப்புகளுக்கு அரசாங்க விருதும் பாராட்டும் கிடைக்க வாய்ப்பு உண்டு. மூத்த கலைஞர்களால் ஆதாயம் ஏற்படும்.
மொத்தத்தில் இந்தக் குருப்பெயர்ச்சி, உங்களை வெற்றிபெற வைப்பதுடன், உங்களின் வசதி வாய்ப்புகளை அதிகப்படுத்துவதாகவும் அமையும்.
பரிகாரம்: தேனி மாவட்டம் வேதபுரி என்னும் ஊரில் அருள்பாலிக்கும் அருள்மிகு தட்சிணாமூர்த்தியை வியாழக்கிழமைகளில் சென்று வழிபடுவது நன்மைகளை அதிகரிக்கச் செய்யும்.
ஜோதிட ரத்னா முனைவர் கே.பி.வித்யாதரன் @ விகடன்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நன்றி சிவா
மகரம்: மகளுக்கு நல்ல வரன் அமையும்.
இரண்டு மகள்களில் எந்த மகளுக்கு என்று தெளிவாகக் குறிப்பிட்டிருந்தால் வரன் பார்க்க எளிதாக இருந்திருக்கும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஹா..ஹா..ஹா... ஏற்கனவே பெரிய பெண்ணுக்கு மாப்பிள்ளை (மலேசியாவிலேயே ) பார்த்துவிட்டீர்கள் தானே சிவா.....அதனால் இது இளைய மகளுக்காக இருக்கும்சிவா wrote:மகரம்: மகளுக்கு நல்ல வரன் அமையும்.
இரண்டு மகள்களில் எந்த மகளுக்கு என்று தெளிவாகக் குறிப்பிட்டிருந்தால் வரன் பார்க்க எளிதாக இருந்திருக்கும்.
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
மாமா அங்கள் இப்போ சோதிடம் எல்லாம் பாக்க ஆரம்பிச்சுட்டாரு, மிக்க நன்றி மாமா அங்கள்.
மேற்கோள் செய்த பதிவு: 1279353மாணிக்கம் நடேசன் wrote:மாமா அங்கள் இப்போ சோதிடம் எல்லாம் பாக்க ஆரம்பிச்சுட்டாரு, மிக்க நன்றி மாமா அங்கள்.
ஜோதிடம் பார்க்கத் தெரிந்தால் மலேசியாவில் பெரிய அளவில் சம்பாதிக்கலாம். லெபோ அம்பாங்கில் தமிழகத்திலிருந்து வந்து கிளி சோசியம் பார்த்து பெரிய அளவில் சம்பாதிக்கிறார்கள்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1279353மாணிக்கம் நடேசன் wrote:மாமா அங்கள் இப்போ சோதிடம் எல்லாம் பாக்க ஆரம்பிச்சுட்டாரு, மிக்க நன்றி மாமா அங்கள்.
பெண்களுக்கு மாப்பிளை தேட ஆரம்பித்துள்ளாரே , அது தெரியுமா மாமா உங்களுக்கு?
மேற்கோள் செய்த பதிவு: 1279366krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1279353மாணிக்கம் நடேசன் wrote:மாமா அங்கள் இப்போ சோதிடம் எல்லாம் பாக்க ஆரம்பிச்சுட்டாரு, மிக்க நன்றி மாமா அங்கள்.
பெண்களுக்கு மாப்பிளை தேட ஆரம்பித்துள்ளாரே , அது தெரியுமா மாமா உங்களுக்கு?
மூத்த மாப்பிள்ளையே அவர்தானே...
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3
|
|