புதிய பதிவுகள்
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குருப்பெயர்ச்சி பலன்கள் 2014 - 2015 - ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன் Poll_c10குருப்பெயர்ச்சி பலன்கள் 2014 - 2015 - ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன் Poll_m10குருப்பெயர்ச்சி பலன்கள் 2014 - 2015 - ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன் Poll_c10 
62 Posts - 57%
heezulia
குருப்பெயர்ச்சி பலன்கள் 2014 - 2015 - ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன் Poll_c10குருப்பெயர்ச்சி பலன்கள் 2014 - 2015 - ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன் Poll_m10குருப்பெயர்ச்சி பலன்கள் 2014 - 2015 - ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன் Poll_c10 
41 Posts - 38%
mohamed nizamudeen
குருப்பெயர்ச்சி பலன்கள் 2014 - 2015 - ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன் Poll_c10குருப்பெயர்ச்சி பலன்கள் 2014 - 2015 - ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன் Poll_m10குருப்பெயர்ச்சி பலன்கள் 2014 - 2015 - ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன் Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
குருப்பெயர்ச்சி பலன்கள் 2014 - 2015 - ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன் Poll_c10குருப்பெயர்ச்சி பலன்கள் 2014 - 2015 - ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன் Poll_m10குருப்பெயர்ச்சி பலன்கள் 2014 - 2015 - ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன் Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குருப்பெயர்ச்சி பலன்கள் 2014 - 2015 - ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன் Poll_c10குருப்பெயர்ச்சி பலன்கள் 2014 - 2015 - ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன் Poll_m10குருப்பெயர்ச்சி பலன்கள் 2014 - 2015 - ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன் Poll_c10 
104 Posts - 59%
heezulia
குருப்பெயர்ச்சி பலன்கள் 2014 - 2015 - ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன் Poll_c10குருப்பெயர்ச்சி பலன்கள் 2014 - 2015 - ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன் Poll_m10குருப்பெயர்ச்சி பலன்கள் 2014 - 2015 - ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன் Poll_c10 
62 Posts - 35%
mohamed nizamudeen
குருப்பெயர்ச்சி பலன்கள் 2014 - 2015 - ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன் Poll_c10குருப்பெயர்ச்சி பலன்கள் 2014 - 2015 - ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன் Poll_m10குருப்பெயர்ச்சி பலன்கள் 2014 - 2015 - ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன் Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
குருப்பெயர்ச்சி பலன்கள் 2014 - 2015 - ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன் Poll_c10குருப்பெயர்ச்சி பலன்கள் 2014 - 2015 - ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன் Poll_m10குருப்பெயர்ச்சி பலன்கள் 2014 - 2015 - ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன் Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குருப்பெயர்ச்சி பலன்கள் 2014 - 2015 - ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன்


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu May 15, 2014 4:32 am





சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu May 15, 2014 4:34 am

உச்சத்தில் குரு... உயர்வைத் தருவாரா?


நிகழும் ஜய வருடம் வைகாசி மாதம் 30-ம் தேதி- வெள்ளிக்கிழமை (13.6.14) கிருஷ்ணபட்சத்து பிரதமை திதி, கீழ்நோக்குள்ள மூல நட்சத்திரம், சுபம் நாமயோகம், கௌலவம் நாமகரணம், நேத்திரம், ஜீவனம் நிறைந்த அமிர்தயோகத்தில், பஞ்ச பட்சியில் கோழி பலவீனமாக உள்ள நேரத்தில், உத்தராயன புண்ணிய காலம் வசந்த ருதுவில், வியாழன் எனும் குரு பகவான் மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்கு மாலை 6:04 மணிக்குப் பெயர்ச்சியாகிறார்.

13.6.14 முதல் 4.7.15 வரை இங்கு அமர்ந்து தனது அதிகாரத்தை செலுத்துவார். 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை குறிஞ்சி மலர்வது போன்று, 12 ஆண்டுகளுக்குப் பிறகு தனது உச்சவீட்டில் குரு அமர்கிறார். தன காரகனான குரு உச்சம் அடைவதால் உலகெங்கும் பணத்தட்டுப்பாடு நீங்கும். ஆனால், குரு தன்னுடைய பகைக் கோளான புதனின் நட்சத்திரமான ஆயில்யத்திலேயே ஏறக்குறைய பத்து மாதங்கள் பயணிக்க இருப்பதால், நாடாளுவோர் பணத் தட்டுப்பாடு மற்றும் வேலையில்லா திண்டாட்டங்கள் குறித்து தொலைநோக்கு சிந்தனையுடன் தீர்வு காண முடியாமல் திணறுவர். பெரும்பாலும் துண்டுபட்ஜெட்டே தாக்கல் ஆகும்.
குருப்பெயர்ச்சி பலன்கள் 2014 - 2015 - ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன் P117a
மக்களிடையே ஆண் குழந்தை மோகம் மீண்டும் அதிகரிக்கும். வாராக் கடன்கள், கடந்த வருடத்தைவிட இந்த வருடம் வங்கிகளுக்கு அதிகம் வசூலாகும். கலப்புத் திருமணம் அதிகரிக்கும். கடந்த மூன்றாண்டுகளாக பல மாவட்டங்களில் நிலவிய வறட்சி நீங்கும். மழையளவு உயரும். உணவுப் பொருள் உற்பத்தி அதிகரிக்கும். இயற்கை வளம் செழிக்கும்.

பாரம்பரிய கல்வி முறைகள் மீண்டும் உயிர் பெறும். செல்வம், நிதி, தனம், தங்கம், ராஜூ ஆகியவற்றில் ஒன்றை தங்கள் பெயர்களில் உடையவர்கள், பணம் மற்றும் குடும்ப விஷயத்தில் பிரச்னைகள் வராமல் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.

இந்த ஓராண்டு காலத்துக்கு 3-ம் எண் அனைத்து வகையிலும் ஆதிக்கம் செலுத்தும். சந்திரனின் பெயர் உடையவர்கள் புகழ் அடைவர். 2-ம் எண்ணின் ஆதிக்கமும் அதிகரிக்கும். கோயில் சொத்துக்களைப் பராமரிக்க புது சட்டம் வரும். தமிழ் மொழிக்கு கூடுதல் அந்தஸ்து கிடைக்கும். 

குருப்பெயர்ச்சி பலன்கள் 2014 - 2015 - ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன் P117bவிருச்சிக ராசியை குரு பார்ப்பதால் பூமி விலை உயரும். ரியல் எஸ்டேட் சூடுபிடிக்கும். மருந்துப் பொருள்கள் விலை குறையும். உளவாளிகள் பிடிபடுவர். ராணுவத்துக்கு இதுவரை இல்லாத அளவுக்கு அதிக அளவு நிதி ஒதுக்கப்படும். ராணுவ ஊழல்கள் பெரிய அளவில் பிடிபடும். தரம் வாய்ந்த தளவாடங்கள் வாங்கப்படும். அதிநவீன ஏவுகணைகள் ராணுவத்தில் சேர்க்கப்படும். செவ்வாய் கிரகம் பற்றிய பல திடுக்கிடும் உண்மைகள் இந்திய விஞ்ஞானிகளால் கண்டறியப்படும். அதிவேகமாகப் பரவி வரும் புற்றுநோய்க்கு புதிய மருந்துகள் உருவாக்கப்படும்.

பிரிந்த கூட்டுக் குடும்பங்கள் ஒன்று சேரும். கோதாவரி, காவேரி படுகைகள் மற்றும் மகாராஷ்டிரா மாநிலத்தின் வடகிழக்குப் பகுதியில் கனிம, கரிம வளங்கள் கண்டறியப்படும். நாடெங்கும் நிலவும் மின் பற்றாக்குறையைப் 
போக்க மத்திய அரசு புதுத் திட்டம் கொண்டு வரும். காவல் துறையினருக்கு சலுகைகள் கூடும்.
குரு மகர ராசியைப் பார்ப்பதால், தங்கம், வெள்ளி விலை கட்டுப்பாட்டுக்குள் வரும். தண்ணீர் பற்றாக்குறை நீங்கும். சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை வழங்க அரசு முயற்சிக்கும். நதிகள் இணைப்புக்கான முதல் கட்ட முயற்சி வெற்றிபெறும். தொழிலதிபர்கள் செழிப்பார்கள். அந்நிய முதலீடுகள் அதிகரிக்கும். சட்டத்துக்குப் புறம்பான வகையில் நிகழும் பணப் பரிமாற்றம், பட்டுவாடா தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு தடுக்கப்படும். சிறு தொழில்கள் நவீனமாகும். ஏற்றுமதி-இறக்குமதி அதிகரிக்கும்.

இந்திய ரூபாயின் மதிப்பு உயரும். சிறுபான்மை மக்களை திருப்திப்படுத்த புதுத் திட்டங்கள் அமலாகும். கணினித் துறை மீண்டும் எழுச்சி பெறும். புதுத் தொழில் தொடங்குவோர் எண்ணிக்கை அதிகரிக்கும். நகரங்களைவிட புறநகர் பகுதிகள் அசுர வளர்ச்சியடையும். புதிய மாதிரி நகரங்கள் உருவாகும். புதிய தொலைக்காட்சி மற்றும் வானொலி சேவைகள் அதிகரிக்கும். எலெக்ட்ரானிக்ஸ் சாதனங்களின் விலை உயரும்.

குரு மீன ராசியைப் பார்ப்பதால், கல்வித் துறை நவீனமாகும். தேர்வு முறை மாற்றப்படும். ஆசிரியர்கள், அரசு ஊழியர்களை கட்டுப்படுத்த புதிய சட்டங்கள் வரும். ஆன்மிகம் தழைக்கும். சித்தா, ஆயுர்வேதம், ஜோதிடம், தியானம், வர்மம் உள்ளிட்ட புராதன கலைகளும் வளரும். நீர்வழி மின் உற்பத்தி அதிகரிக்கும். கிராமங்கள் வளர்ச்சியடையும். பதிப்பகத் துறை, கேட்டரிங், சட்டம், சி.ஏ., சிவில், ஆர்க்கிடெக்ட் துறைகள் வளர்ச்சியடையும். வழக்கறிஞர்களின் நடவடிக்கைகள் வரையறுக்கப்படும்.



குருப்பெயர்ச்சி பலன்கள் 2014 - 2015 - ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu May 15, 2014 4:34 am

பரிகாரம்:


பக்தி, பணம், பதவி, குழந்தை பாக்கியம், கௌரவம், பட்டறிவுடன் படிப்பறிவு, வேத- இதிகாச ஞானம், நேர்மை மற்றும் தூய்மை ஆகியவற்றுக்கெல்லாம் ஆதாரமாக விளங்கும் பிரகஸ்பதி எனும் குரு பகவான் நீர் நிலை, மனம், தாய் மற்றும் தாய்மொழிக்கு உரிய கிரகமான சந்திரனின் வீட்டில் அமர்வதால், சொல்லாலும் செயலாலும் பிறர் மனம் புண்படாதபடி நடந்துகொள்ளுங்கள். தாயில்லா பிள்ளைகளுக்கு உதவுங்கள். குருபகவானின் அருள் பரிபூரணமாகக் கிட்டும்.

குருப்பெயர்ச்சி பலன்கள் 2014 - 2015 - ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன் P117c




குருப்பெயர்ச்சி பலன்கள் 2014 - 2015 - ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu May 15, 2014 4:35 am

குருப்பெயர்ச்சி பலன்கள் 2014 - 2015 - ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன் Mesha

பெரிய குறிக்கோள்களுடன் வாழ்பவர் நீங்கள். குரு பகவான் 13.6.14 முதல் 4.7.15 வரை உங்கள் ராசிக்கு 4-ம் வீட்டில் அமர்வதால், சூழலுக்கு ஏற்ப செயல்படும் சாமர்த்தியத்தைக் கற்றுக்கொள்வீர்கள். உங்களின் பலம்-பலவீனத்தைத் தெரிந்துகொள்வது நல்லது.

கணவன்-மனைவிக்குள் சிலர் குழப்பத்தை ஏற்படுத்தலாம்; பரஸ்பரம் விட்டுக்கொடுத்துப் போகவும். உணர்ச்சிவசப்படாமல் அறிவுபூர்வமாக முடிவெடுங்கள். வீடு கட்ட அரசு அனுமதி தாமதமாகக் கிடைக்கும். வீடு- வாகனப் பராமரிப்புச் செலவுகளும் உண்டு. வீடு, மனை வாங்கும்போது தாய் பத்திரத்தைச் சரிபார்த்து வாங்கவும். சொத்து விற்கும்போது ஒரே தவணையில் பணத்தை வாங்கப் பாருங்கள். தாயாருக்கு சின்னச் சின்ன அறுவை சிகிச்சை, மூட்டு வலி, முதுகுத்தண்டு வலி வந்து போகும். பண வரவு இருந்தாலும் செலவுகளும் துரத்தும். மனஇறுக்கம் அதிகமாகும். அரசு வரிகளை உடனுக்குடன் செலுத்தவும். நல்லவர்களின் நட்பை வளர்த்துக்கொள்ளுங்கள். தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். பூர்வீகச் சொத்துப் பிரச்னையில் நேரத்தை வீணடிக்காதீர்கள். 

குரு உங்கள் ராசிக்கு 8-ம் வீட்டைப் பார்ப்பதால், அயல் நாடு செல்ல விசா கிடைக்கும். திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புகள் வரும். குரு உங்கள் உத்தியோக ஸ்தானத்தைப் பார்ப்பதால், சிலருக்கு புது வேலை கிடைக்கும். குரு 12-ம் வீட்டைப் பார்ப்பதால் புகழ்பெற்ற புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள்.

குரு பகவானின் சஞ்சாரம்...


13.6.14 முதல் 28.6.14 வரை உங்களின் பாக்ய- விரயாதிபதியான குரு, தனது சாரமான புனர்பூசத்தில் செல்வதால், சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். வி.ஐ.பி-களின் நட்பு கிடைக்கும். தந்தையும், அவர் வழி உறவினர்களும் உதவிகரமாக இருப்பர். பிதுர்வழிச் சொத்து கைக்கு வரும். வழக்கு சாதகமாகும். புது வேலை கிடைக்கும். 29.6.14 முதல் 27.8.14 வரை உங்களின் ஜீவனாதிபதி யும் லாபாதிபதியுமான சனி பகவானின் பூச நட்சத்திரத்தில் குரு செல்வதால் வேலைச்சுமை, பணப்பற்றாக் குறை, இனந் தெரியாத கவலைகள் வந்து செல்லும். மூத்த சகோதரர்கள் உதவுவார்கள்.
28.8.14 முதல் 2.12.14 வரை மற்றும் 22.12.14 முதல் 4.7.15 வரை சேவகாதிபதியும்-சஷ்டமாதிபதியுமான புதனின் ஆயில்ய நட்சத்திரத்தில் செல்வதால், வீண் செலவுகள், சிறுசிறு விபத்துகள், உங்களைப் பற்றிய வதந்திகள், பழைய கடனை நினைத்து அச்சம், இளைய சகோதர வகையில் மனத்தாங்கல் வந்து செல்லும். வங்கிக் காசோலையில் முன்னரே கையொப்பமிட்டு வைக்காதீர்கள்.

3.12.14 முதல் 21.12.14 வரை குருபகவான் அதிசாரத்தில் ராசிக்கு 5-ம் வீட்டில் கேதுவின் நட்சத்திரமான மகம் நட்சத்திரத்தில் செல்வதால், பணவரவு உண்டு. செல்வாக்கு அதிகரிக்கும். மகளுக்குத் திருமணம் கூடி வரும். 

குரு பகவானின் வக்ர சஞ்சாரம்...


22.12.14 முதல் 17.4.15 வரை குரு ஆயில்ய நட்சத்திரத் திலும், 17.12.14 முதல் 21.12.14 வரை மகம் நட்சத்திரத்திலும் வக்ர கதியில் செல்வதால் அரைகுறையாக நின்ற வேலைகள் முடிவடையும். குடும்பத்தில் நிம்மதி உண்டு. கடனில் ஒரு பகுதியை பைசல் செய்ய உதவிகள் கிடைக்கும். குழந்தை பாக்கியம் உண்டு. மனைவிவழியில் மோதல்கள் விலகும்.

வியாபாரத்தில் ஏற்ற இறக்கங்கள் உண்டு. சந்தை நிலவரத்துக்கு ஏற்ப முதலீடு செய்து லாபம் பெற பாருங்கள்.தொழில் ரகசியங்கள் கசியாமல் பார்த்துக்கொள்ளுங்கள். விளம்பர யுக்திகளைக் கையாளுங்கள். கடையை வேறிடத்துக்கு மாற்றவேண்டிய நிர்பந்தம் ஏற்படும். ரியல் எஸ்டேட், புரோக்கரேஜ், உணவு, துணி வகைகளால் லாபம் அடைவீர்கள். பங்குதாரர்களுடன் மோதல்கள் வெடிக்கும்.

உத்தியோகத்தில் வேலைச்சுமை இருக்கும். உயரதிகாரிகள் பாரபட்சமாக நடந்துகொள்வார்கள். எனினும், சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். அடிக்கடி இடமாற்றம் வரும். எதிர்பார்த்த சலுகைகளும், சம்பள உயர்வும் தாமதமாகக் கிடைக்கும்.      
கன்னிப்பெண்களுக்குக் கல்யாணம் கூடி வரும். எதிலும் பெற்றோரின் முடிவுகளை ஏற்பது நல்லது. சிலருக்கு வெளி மாநிலத்தில் வேலை கிடைக்கும். புதிய நண்பர்களிடம் கவனமாகப் பழகுங்கள். மாணவ-மாணவியருக்கு, விரும்பிய கல்விப் பிரிவில் சேர்வதற்கு அதிகம் செலவாகும். கலைத் துறையினரின் படைப்புகளுக்கு வேறு சிலர் உரிமை கொண்டாடலாம். மூத்த கலைஞர்களின் ஆதரவால் முன்னேறுவீர்கள். அரசியல்வாதிகளே! கோஷ்டிப்பூசல், வீண் வதந்தியால் உங்கள் செல்வாக்கு குறையலாம். சகாக்கள் மத்தியில் மேலிடத்தை விமர்சிக்கவேண்டாம்.

மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி சிறு சிறு ஏமாற்றங் களைத் தந்தாலும் கடின உழைப்பால் உங்களை முன்னேற வைக்கும்.
பரிகாரம்: வியாழக்கிழமைகளில் ஆலங்குடி ஈஸ்வரனையும் ஸ்ரீதட்சிணாமூர்த்தியையும் நெய் தீபமேற்றி வணங்கி வாருங்கள். ஆதவரற்ற மாணவனின் உயர்கல்விக்கு உதவுங்கள். வாழ்க்கை உயரும்.





குருப்பெயர்ச்சி பலன்கள் 2014 - 2015 - ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu May 15, 2014 4:37 am

குருப்பெயர்ச்சி பலன்கள் 2014 - 2015 - ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன் Rishapa

னைத்தையும் அறிந்தவர் நீங்கள். குரு 13.6.14 முதல் 4.7.15 வரை உங்கள் ராசிக்கு 3-ல் அமர்வதால், எதையும் திட்டமிட்டு செய்யப்பாருங்கள். இளைய சகோதரர் வகையில் பிணக்குகள் வரும். சேமிப்பை கரைக்காதீர்கள். எவருக்காகவும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். மற்றவர்களை நம்பி குறுக்கு வழியில் செல்லாதீர்கள். தம்பதிக்குள் சச்சரவுகள் வந்தாலும் அன்பும், அந்நியோன்யமும் குறையாது.

முக்கிய விஷயங்களை நீங்களே முன்னின்று முடிக்கப் பாருங்கள். தங்க நகைகளை கவனமாகக் கையாளுங்கள். எவரையும் விமர்சிக்க வேண்டாம். வழக்கில் வழக்கறிஞரை மாற்றவேண்டிய நிர்பந்தம் உண்டாகும். வீடு கட்டுவது, வாங்குவது போன்ற முயற்சிகள் தாமதமாகி முடியும்.

குரு உங்கள் ராசிக்கு 7-ம் வீட்டை பார்ப்பதால், மனைவி வழியில் உதவிகள் உண்டு. கூடாப்பழக்கம் விலகும். குரு 9-ம் வீட்டை பார்ப்பதால் பண வரவு உண்டு. தந்தைவழி சொத்துக்கள் கைக்கு வரும். சிலருக்கு வேலை கிடைக்கும். குரு லாப வீட்டை பார்ப்பதால், மூத்த சகோதரர் ஆதரவாக இருப்பார். வெளிநாட்டில் இருப்பவர்களால் ஆதாயம் அடைவீர்கள். புது வாகனம் வாங்குவீர்கள்.   

குரு பகவானின் சஞ்சாரம்...


13.6.14 முதல் 28.6.14 வரை உங்களின் அஷ்டம- லாபாதிபதியான குரு புனர்பூசத்தில் செல்வதால் வேலைச் சுமை, திடீர் பயணங்கள் உண்டு. எதிர்மறை எண்ணங்கள் தலைதூக்கும். மூத்த சகோதர வகையில் சச்சரவு வரும். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். புது பதவிகளை யோசித்து ஏற்கவும்.

29.6.14 முதல் 27.8.14 வரை உங்களின் பாக்யாதிபதியும்- ஜீவனாதிபதியுமான சனியின் பூச நட்சத்திரத்தில் குரு செல்வதால், எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். ஆரோக்கியம் சீராகும். வீடு கட்டுவீர்கள். வேலை கிடைக்கும். வழக்கு சாதகமாகும். ஷேர் மூலம் பணம் வரும். கல்யாணம் கூடி வரும். புதுத் தொழில் தொடங்குவீர்கள்.

28.8.14 முதல் 2.12.14 வரை மற்றும் 22.12.14 முதல் 4.7.15 வரை உங்களின் தன - பூர்வ புண்ணியாதிபதியான புதனின் ஆயில்ய நட்சத்திரத்தில் செல்வதால், தடைப்பட்ட வேலைகள் முடியும். குடும்பத்தில் கலகலப்பு கூடும். வி.ஐ.பி-கள் அறிமுகம் ஆவர். குழந்தை பாக்கியம் உண்டாகும். பூர்வீகச் சொத்து கைக்கு வரும்.  3.12.14 முதல் 21.12.14 வரை குரு கேதுவின் மக நட்சத்திரத்தில் செல்வதால், அவ்வப்போது ஒரு வெறுமையை உணருவீர்கள். தம்பதிக்குள் சச்சரவு வந்து நீங்கும். பணப்பற்றாக்குறை ஏற்படும்.

குரு பகவானின் வக்ர சஞ்சாரம்...


22.12.14 முதல் 17.4.15 வரை குரு ஆயில்ய நட்சத்திரத் திலும் 17.12.14 முதல் 21.12.14 வரை மகம் நட்சத்திரத்திலும் வக்ர கதியில் செல்வதால், குழப்பம், பூர்வீகச் சொத்துப் பிரச்னை வந்து செல்லும். கர்ப்பிணிகள் மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்தையும் உட்கொள்ள வேண்டாம். கோயில் விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள்.

வியாபாரத்தில் சில சூட்சுமங்களை அறிந்து, அதற்கேற்ப லாபம் ஈட்டுவீர்கள். புதிய நண்பர்களால் வியாபாரத்தை விரிவுபடுத்தும் வாய்ப்புகள் வரும். தரமான பொருட்களை விற்பனை செய்வதன் மூலம் புதிய வாடிக்கையாளர்கள் வருவார்கள். கட்டட உதிரி பாகங்கள், ஸ்டேஷனரி, பெட்ரோ- கெமிக்கல், டிராவல்ஸ் வகைகளால் ஆதாயம் அடைவீர்கள். அயல்நாடு தொடர்புடைய நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். பங்குதாரர்களில் ஒருவர் உங்களை ஆதரித்தாலும் மற்றொருவர் மூலம் குடைச்சல்கள் இருக்கும்.   

உத்தியோகத்தில் அதிக அலைக்கழிப்புகள் இருக்கும். மேலதிகாரிகளை விமர்சிக்காதீர்கள். பணிகளை கொஞ்சம் போராடி முடிக்க வேண்டி வரும். சில தேர்வுகளில் வெற்றி பெற்று, அதன் மூலம் பதவி உயர்வு கிடைக்கும். என்றாலும் உங்களின் நிலையை தக்கவைக்க போராட வேண்டியது இருக்கும். உயரதிகாரிகளின் பார்வை உங்கள் மீது திரும்பும். இடமாற்றம் சாதகமாகும்.
  
கன்னிப்பெண்களுக்கு தடைப்பட்ட உயர்கல்வியை தொடரும் வாய்ப்பு கிட்டும். நல்ல வரன் அமையும். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்று வேலையில் அமருவார்கள். மாணவ- மாணவியர் விரும்பிய கல்விப்பிரிவில் சேருவார்கள்.

கலைத் துறையினரின் யதார்த்தப் படைப்புகளுக்கு பாராட்டுகள் குவியும். அரசியல்வாதிகளுக்கு செல்வாக்கு கூடும். கௌரவ பதவி உண்டு. சிலர் வழக்குகளைச் சந்திக்க நேரிடும். சகாக்களை அடக்கி வாசிக்கச் சொல்லுங்கள்.

மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி சிறு சிறு தடைகளையும் தடுமாற்றங்களையும் தந்தாலும் இடையிடையே வெற்றியையும் மகிழ்ச்சியையும் தருவதாக அமையும்.

பரிகாரம்: பிரதோஷ திருநாளில் தென்குடித்திட்டை ஸ்ரீதட்சிணாமூர்த்திக்கு கொண்டைக்கடலை மாலை அணிவித்து வணங்கி வாருங்கள். ஏழை இதய நோயாளிகளுக்கு உதவுங்கள். முன்னேற்றம் உண்டு.



குருப்பெயர்ச்சி பலன்கள் 2014 - 2015 - ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu May 15, 2014 4:38 am

குருப்பெயர்ச்சி பலன்கள் 2014 - 2015 - ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன் Mithuna

ன்னிக்கும் குணம் கொண்ட பண்பாளர் நீங்கள். குருபகவான் 13.6.14 முதல் 4.7.15 வரை உங்கள் ராசியை விட்டு விலகி தன வீடான 2-ம் வீட்டில் அமர்வதால், எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்கு வரும். குடும்ப ஸ்தானத்தில் குரு அமர்வதால், மகிழ்ச்சி கூடும். சந்தேகத்தால் பிரிந்திருந்த கணவன்-மனைவி ஒன்றுசேருவீர்கள். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும்.

மனக்கசப்பால் ஒதுங்கியிருந்த உறவினர்கள் வலிய வந்து உறவாடுவர். நோய்கள் குணமாகும். உற்சாகம், தோற்றப் பொலிவு கூடும். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார், கெட்டவர்கள் யார் என்பதைப் புரிந்துகொள்வீர்கள்.

விலையுயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள்.  வேலைக்காகக் காத்திருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும். தந்தையுடனான மோதல்கள் விலகும். அவரின் ஆரோக்கியமும் சீராகும். மகளுக்கு நல்ல வரனும், மகனுக்கு எதிர்பார்த்த நிறுவனத்தில் வேலையும் கிடைக்கும். 

குரு உங்கள் ராசிக்கு 6-ம் வீட்டைப் பார்ப்பதால் கடன் பிரச்னை கட்டுப்படும். குரு 8-ம் வீட்டைப் பார்ப்பதால் வெளிநாடு செல்வீர்கள். ஷேர் மூலம் பணம் வரும். குரு 10-ம் வீட்டைப் பார்ப்பதால் பெரிய பதவிகள் வாய்க்கும். நல்ல வேலை கிடைக்கும். அரசு காரியங்கள் விரைந்து முடியும்.     

குரு பகவானின் சஞ்சாரம்...


13.6.14 முதல் 28.6.14 வரை உங்களின் சப்தம- ஜீவனாதிபதியான குரு புனர்பூசத்தில் செல்வதால், வேலைச் சுமை, வீண் அலைச்சல், கணவன்-மனைவிக்குள் மனஸ்தாபம், எதிலும் பற்றற்ற போக்கு, மனைவிக்கு மருத்துவச் செலவுகள், உத்தியோகத்தில் மறைமுக தொந்தர வுகள் வந்து போகும். வருமான வரி, சொத்து வரிகளை தாமதமின்றி செலுத்தப் பாருங்கள். 29.6.14 முதல் 27.8.14 வரை உங்களின் அஷ்டம- பாக்கியாதிபதியான சனியின் பூச நட்சத்திரத்தில் குரு செல்வதால், பணவரவு உண்டு. பிதுர்வழிச் சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும். அண்டை மாநிலத்தில் இருப்பவர்களால் ஆதாயம் உண்டு. புது பதவி, பொறுப்புகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள்.

28.8.14 முதல் 2.12.14 மற்றும் 22.12.14 முதல் 4.7.15 வரை உங்கள் ராசிநாதனும் - சுகாதிபதியுமான புதனின் ஆயில்ய நட்சத்திரத்தில் குரு செல்வதால், திடீர் பணவரவு உண்டு. கல்வியாளர்களின் நட்பு கிடைக்கும். அறிவுப் பூர்வமாகப் பேசி எல்லோரையும் கவருவீர்கள். பழைய பிரச்னைகள் தீரும். தாயாரின் உடல் நிலை சீராகும். பழைய கடனில் ஒருபகுதியை பைசல் செய்ய உதவிகள் கிடைக்கும்.

3.12.14 முதல் 21.12.14 வரை கேதுவின் நட்சத்திரமான மகம் நட்சத்திரத்தில் குரு செல்வதால், தலைச்சுற்றல், அடிவயிற்றில் வலி, வீண் பழி வந்துசெல்லும். எவருக்கும் சட்டத்துக்குப் புறம்பாக உதவ வேண்டாம்.

குரு பகவானின் வக்ர சஞ்சாரம்...


22.12.14 முதல் 17.4.15 வரை குரு பகவான் ஆயில்ய நட்சத்திரத்திலும் 17.12.14 முதல் 21.12.14 வரை மகம் நட்சத்திரத்திலும் வக்ர கதியில் செல்வதால், உறவினர், நண்பர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். பூர்வீகச் சொத்தில் ரசனைக்கேற்ப சில மாற்றங்கள் செய்வீர்கள். இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். எனினும் முன்கோபம், திடீர் பயணங்கள், கடன் பிரச்னைகள் வந்துசெல்லும். ஷேர் மூலம் பணம் வரும்.   

வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் உண்டு. வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். புது வாடிக்கையாளர்களால் உற்சாகம் அடைவீர்கள். சிலர், சொந்த இடத்துக்கு கடையை மாற்றி அழகுபடுத்துவார்கள். சிலர், மொத்த வியாபாரத்துக்கு மாறுவீர்கள். கௌரவ பதவிகள் தேடி வரும். ஹார்டுவேர், இரும்பு, வாகனம், மூலிகை வகைகளால் லாபம் அடைவீர்கள். அரசாங்கத்தால் இருந்த நெருக்கடிகள் நீங்கும். விலகிச் சென்ற பங்குதாரர் மீண்டும் இணைவார்.

உத்தியோகத்தில், உழைப்புக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும். உயரதிகாரிகளின் மனநிலைக்கு ஏற்ப செயல் படுவீர்கள். உங்களின் முக்கியத்துவம் கூடும். அவதூறு வழக்கில் வெற்றி பெறுவீர்கள். பதவி உயர்வு கிடைக்கும். 

கன்னிப் பெண்களுக்கு கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாகும். நேர்முகத் தேர்வில் வெற்றி பெற்று, புது வேலையில் அமருவீர்கள். மாணவ- மாணவியரின் அலட்சியப் போக்கு மாறும். அரசியல்வாதிகளின் களப்பணி சிறப்பு சேர்க்கும். பொதுமக்களின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். கலைத்துறையினருக்கு, படைப்புகள் தடைகள் நீங்கி வெளியாகி வெற்றிபெறும். வருமானம் உயரும்.
மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி, தொட்டதையெல்லாம் துலங்க வைத்து உங்களை உயர்த்துவதாக அமையும்.

பரிகாரம்: பூரம், உத்திரட்டாதி நாள்களில் விழுப்புரம் அருகிலுள்ள பனையபுரம் ஸ்ரீபனங்காட்டீஸ்வரர், ஸ்ரீதட்சிணாமூர்த்தியை வணங்குங்கள். மனநலம் குன்றியவர்களுக்கு உதவுங்கள். துயரங்கள் நீங்கும்.



குருப்பெயர்ச்சி பலன்கள் 2014 - 2015 - ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu May 15, 2014 4:39 am

குருப்பெயர்ச்சி பலன்கள் 2014 - 2015 - ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன் Kadaka

சிறந்த பரோபகாரி நீங்கள். குரு 13.6.14 முதல் 4.7.15 வரை ஜென்ம குருவாக அமர்வதால், பொறுப்புகளும், நிம்மதியற்ற போக்கும் அதிகரிக்கும். வாக்கைக் காப்பாற்ற முடியாமல் திணறுவீர்கள். கோபம், விரோத மனப்பான்மை அதிகரிக்கும். உணவில் கவனம் தேவை. பெரிய நோய் இருப்பதாக நினைத்து வீண் பயம் வரும். உங்கள் குடும்ப விஷயத்தில் மற்றவர்கள் தலையிடுவதை அனுமதிக்காதீர்கள். வீண் சந்தேகம், ஈகோ பிரச்னையால் தம்பதிக்குள் பிரிவு ஏற்படலாம். ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துப் போகவும்.

எவருக்கும் பணம், நகை வாங்கித் தருவதில் குறுக்கே நிற்கவேண்டாம். தங்க ஆபரணங்களை இரவல் வாங்கவோ, தரவோ வேண்டாம். வங்கியில் உங்கள் கணக்கில் போதிய பணம் இருக்கிறதா என்று பார்த்துவிட்டு காசோலை தருவது நல்லது. புதியவரை நம்பி முடிவுகள் எடுக்க வேண்டாம். 

குரு உங்கள் ராசிக்கு 5-ம் வீட்டைப் பார்ப்பதால் குழந்தை பாக்கியம் உண்டு. பூர்வீகச் சொத்துப் பிரச்னைகள் கொஞ்சம் கொஞ்சமாக தீரும். சிலர், தங்களது பங்கு நிலத்தை விற்று நகரத்தை ஒட்டி இடம் வாங்குவார்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். குரு 7-ம் வீட்டை பார்ப்பதால், தள்ளிப் போன திருமணம் கூடி வரும். கணவன்-மனைவிக்குள் சச்சரவு இருந்தாலும் பாசம் குறையாது.

குரு பகவானின் சஞ்சாரம்...


13.6.14 முதல் 28.6.14 வரை உங்களின் சஷ்டம- பாக்கி யாதிபதியான குரு, சுய நட்சத்திரமான புனர்பூசத்தில் செல்வதால், பணப்புழக்கம் உயரும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். கல்யாணம் கூடி வரும். வழக்கு சாதகமாகும். பிதுர்வழிச் சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும். 29.6.14 முதல் 27.8.14 வரை உங்களின் சப்த-அஷ்டமாதிபதியான சனியின் பூசம் நட்சத்திரத்தில் குரு செல்வதால், வேலைச்சுமையால் பதற்றம் அதிகரிக்கும். நல்லவர்களின் நட்பை இழக்க நேரிடும். உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்துவர். கடன் பிரச்னையை நினைத்து பயம் எழும். மனைவிக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படும். வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை.

28.8.14 முதல் 2.12.14 மற்றும் 22.12.14 முதல் 4.7.15 வரை சேவகாதிபதியும்-விரயஸ்தானாதிபதியுமான புதனின் ஆயில்யம் நட்சத்திரத்தில் குரு செல்வதால், திடீர் பயணங்கள், வீண் செலவுகள் வந்து நீங்கும். இளைய சகோதரர்களால் சங்கடங்கள் வரும். தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் குழம்புவீர்கள். தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம். பூர்வீக சொத்துப் பிரச்னைக்கு சுமுக தீர்வு காண்பது நல்லது. 

3.12.14 முதல் 21.12.14 வரை கேதுவின் நட்சத்திரமான மகத்தில் குரு செல்வதால், திடீர் பணவரவு உண்டு. அரசால் ஆதாயம் அடைவீர்கள். சிலருக்கு வீடு, மனை அமையும். திருமண முயற்சிகள் பலிதமாகும். உங்களைவிட வயதில் குறைந்தவர்கள் மூலம் ஆதாயம் உண்டு. வீட்டு ப்ளான் அப்ரூவலாகும்.

22.12.14 முதல் 17.4.15 வரை குரு பகவான் ஆயில்யத்திலும் 17.12.14 முதல் 21.12.14 வரை மகத்திலும் வக்ர கதியில் செல்வதால், பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். வீண் செலவுகள் வேண்டாம். மகளுக்கு நல்ல வரன் அமையும். சாணக்கியத்தனமாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். சிலர் வீடு மாறுவீர்கள். ஒரு சொத்தை விற்று மறு சொத்து வாங்குவீர்கள்.

வியாபாரத்தில் போட்டிகளும், சிறு சிறு நஷ்டங்களும், ஏமாற்றங்களும் இருக்கவே செய்யும். புது முதலீடுகளோ, எவருக்கும் முன்பணம் தருவதோ, கடையை வேறு இடத்துக்கு மாற்றுவதோ வேண்டாம். கூட்டுத் தொழிலைத் தவிர்க்கவும். கூட்டுத்தொழில் செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டாலும், முறைப்படி ஒப்பந்தங்களை பதிவு செய்வது நல்லது.

உத்தியோகத்தில் வேலை கூடும். அலுவலக ரகசியங்களை வெளியே சொல்ல வேண்டாம். சின்னச் சின்ன குறைகளை நேரடி அதிகாரி சுட்டிக் காட்டிக்கொண்டே இருப்பார். பதவி உயர்வு, சம்பள உயர்வை பெற போராட வேண்டி இருக்கும். 

கன்னிப் பெண்களுக்கு பேச்சிலும் செயலிலும் கவனம் தேவை. பெற்றோரின் ஆலோசனையை ஏற்பது நல்லது. மாணவ-மாணவிகளுக்கு மறதியால் மதிப்பெண் குறைய வாய்ப்பு உண்டு. படிப்பில் முழுக்கவனம் செலுத்தவும்.

அரசியல்வாதிகள் சபை நாகரிகம் அறிந்து பேசவும். குடும்ப பிரச்னைகளை வெளியில் தெரியாதபடி பேசித் தீர்க்கவும். கட்சியில் மறைமுக எதிர்ப்புகள் அதிகரிக்கும். கலைத் துறையினரே! விமர்சனங்கள், கிசுகிசுக்கள் வந்தாலும் விரக்தி அடையவேண்டாம். உங்களின் படைப்புகளை போராடி வெளியிட வேண்டி வரும். 

மொத்தத்தில் இந்த குரு மாற்றம் வேலைச் சுமையையும், எதிர்மறை எண்ணங்களையும் தந்தாலும் அனுபவ அறிவையும், தன்னை உணரும் சக்தியையும் தருவதாக அமையும்.

 பரிகாரம்: சஷ்டி திதி நாள்களில் பழநி முருகனையும் போகரையும் வணங்கி வழிபட்டு வாருங்கள். தாயில்லாப் பிள்ளைக்கு இயன்றவரையில் உதவுங்கள். தடைகள் நீங்கும்.



குருப்பெயர்ச்சி பலன்கள் 2014 - 2015 - ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu May 15, 2014 4:39 am

குருப்பெயர்ச்சி பலன்கள் 2014 - 2015 - ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன் Simma

கொடுப்பதில் மகிழ்பவர் நீங்கள். குரு பகவான் 13.6.14 முதல் 4.7.15 வரை உங்கள் ராசிக்கு 12-ம் வீடான விரய ஸ்தானத்தில் மறைவதால், வேலைச் சுமையும், அலைச்சலும், செலவுகளும் இருக்கும். சிலர் வீட்டைப் புதுப்பிப்பீர்கள். வங்கி லோன் கிடைக்கும்.
உறவினர், நண்பர்கள் வீட்டு சுப நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள். கணவன்-மனைவிக்குள் எழும் சிறு பிரச்னைகளைப் பெரிதுபடுத்த வேண்டாம். கர்ப்பிணிகள் நீண்ட தூரப் பயணங்களைத் தவிர்க்கவும். மகளுக்கு வரன் தேடும்போது விசாரித்து திருமணம் முடிப்பது நல்லது.

வெளிப்படையான பேச்சைத் தவிர்க்கவும். பழைய கடனை சமாளிக்க முடியாமல் திணறுவீர்கள். வாகனத்துக்கான லைசன்ஸ், காப்பீட்டை குறிப்பிட்ட காலத்துக்குள் புதுப்பிக்க தவறாதீர்கள். சொத்து ஆவணங்கள், பத்திரங்களைத் தொலைந்துவிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். எவருக்காகவும் வாக்குறுதி தர வேண்டாம்.

குரு உங்கள் சுகஸ்தானத்தை பார்ப்பதால் தாயாரின் உடல் நிலை சீராகும். வசதியான வீட்டுக்கு மாறுவீர்கள். சிலர், வேறு ஊருக்கு குடிபெயரலாம். குரு 6-ம் வீட்டைப் பார்ப்பதால், பழைய கடனில் ஒருபகுதியை பைசல் செய்ய வழி கிடைக்கும். பெரிய நோய் இருப்பது போன்ற பிரமை நீங்கும். குரு 8-ம் வீட்டைப் பார்ப்பதால் ஆரோக்கியம் கூடும். வழக்குகள் சாதகமாகும். ஷேர் மூலம் பணம் வரும்.

குரு பகவானின் சஞ்சாரம்...


13.6.14 முதல் 28.6.14 வரை உங்களின் பூர்வ புண்யாதிபதியும்-அஷ்டமாதிபதியுமான குரு, தன் சாரமான புனர்பூசத்தில் செல்வதால், குலதெய்வக் கோயிலைப் புதுப்பிக்க உதவுவீர்கள். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். மகளின் திருமணத்தை சிறப்பாக நடத்துவீர்கள். மகனுக்கு அயல்நாடு சென்று படிக்கும் வாய்ப்பு வரும். பூர்வீகச் சொத்து சேரும்.

29.6.14 முதல் 27.8.14 வரை உங்களின் சஷ்டம- சப்தமாதிபதியான சனியின் பூச நட்சத்திரத்தில் குரு செல்வதால், பிறர் மீது நம்பிக்கையின்மை, சோர்வு, சுபச் செலவுகள் வந்துபோகும். புதியவரை வீட்டுக்கு அழைத்து வர வேண்டாம். மறதியால் விலை உயர்ந்த பொருட்களை இழக்க நேரிடும். மனைவியின் நலனில் கவனம் தேவை.

28.8.14 முதல் 2.12.14 மற்றும் 22.12.14 முதல் 4.7.15 வரை தனாதிபதியும்-லாபாதிபதியுமான புதனின் ஆயில்ய நட்சத்திரத்தில் குரு செல்வதால் டென்ஷன் அதிகரிக்கும். கடன் வாங்கும் சூழ்நிலை உருவாகும். சொத்து வழக்கில் வழக்கறிஞரை மாற்ற வேண்டிய சூழ்நிலை உருவாகும். 3.12.2014 முதல் 21.12.2014 வரை குருபகவான் அதிசாரத்தில் ராசிக்குள்ளேயே கேதுவின் நட்சத்திரமான மகம் நட்சத்திரத்தில் செல்வதால், வீண் விரயம், ஏமாற்றம், அல்சர், கை, கால், மூட்டு வலி, யாரை நம்புவது என்கிற குழப்பம் வந்து நீங்கும்.

குருபகவானின் வக்ர சஞ்சாரம்:


22.12.14 முதல் 17.4.15 வரை குரு ஆயில்யத்திலும் 17.12.14 முதல் 21.12.14 வரை மகத்திலும் வக்ர கதியில் செல்வதால், திடீர் திருப்பம் உண்டாகும். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்தியோகம், திருமண முயற்சிகள் பலிதமாகும். சுற்றியிருப்பவர்களின் சுயரூபம் தெரிய வரும். புது பதவி, பொறுப்புகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள்.

வியாபாரத்தில் புது அனுபவங்கள் கிடைக்கும். புதிய நண்பர்களால் ஆதாயம் அடைவீர்கள். புகழ்பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். சங்கத்தில் மறைமுக எதிர்ப்புகள் இருந்தாலும் உங்களுக்கென்று தனி இடம் உண்டு. இரும்பு, உணவு, ரியல் எஸ்டேட், பதிப்பகம், சிமென்ட் வகைகளால் லாபம் கிடைக்கும்.

உத்தியோகத்தில், திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்பு கிடைக்கும். அதிகாரிகளுடன் சின்னச் சின்ன முரண்பாடுகள் வந்து போகும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் நினைத் ததை முடிப்பீர்கள். வேற்று நாட்டு நிறுவனங்கள் மூலம் ஆதாயம் அடைவீர்கள். அரசுப் பணியாளர்கள் அலுவலக ரகசியங்களை வெளியிடாமல் இருப்பது நல்லது.

கன்னிப்பெண்களுக்கு நல்ல வரன் அமையும். உயர் கல்வியில் விடுபட்ட பாடத்தை எழுதி வெற்றி பெறுவீர்கள். பெற்றோரின் நீண்ட நாள் கனவுகளை நனவாக்குவீர்கள். மாணவ-மாணவியருக்கு, படிப்பில் கூடுதல் கவனம் தேவை. ஆசிரியர்கள் பக்கபலமாக இருப்பார்கள்.   

கலைத் துறையினர், விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவார்கள். வேற்று மொழி பேசுபவர்களால் புது வாய்ப்புகள் வரும். அரசியல்வாதிகளின் செயல்பாடுகளை மேலிடம் உற்றுநோக்கும். புது பதவியில் அமருவீர்கள். கட்சியில் உங்களைப் பற்றிய சலசலப்புகள் நீங்கும்.

மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி சுபச் செலவுகளை தருவதாகவும், நட்பு வட்டத்தை விரிவடையச் செய்வதாகவும் அமையும்.

பரிகாரம்: உத்திராட நட்சத்திரத் திருநாளில் திருச்செந்தூர் முருகப்பெருமானை வணங்கி வழிபட்டு வாருங்கள். பார்வையற்றவர்களுக்கு உதவி செய்யுங்கள். வீட்டில் சுபிட்சம் பெருகும்.



குருப்பெயர்ச்சி பலன்கள் 2014 - 2015 - ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu May 15, 2014 4:40 am

குருப்பெயர்ச்சி பலன்கள் 2014 - 2015 - ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன் Kanni

னவை நனவாக்கும் உழைப்பாளி நீங்கள்.  குரு பகவான் 13.6.14 முதல் 4.7.15 வரை ராசிக்கு 11-ல் அமர்வதால், வெளிச்சத்துக்கு வருவீர்கள். எடுத்த வேலைகளில் வெற்றியையும், குடும்பப் பிரச்னைகளுக்கான நல்ல தீர்வுகளையும் லாப ஸ்தான குரு தந்தருள்வார்.பணப் புழக்கம் அதிகரிக்கும். கடனை அடைப்பீர்கள். வீடு கட்டும் பணி தடைகள் நீங்கி மீண்டும் துவங்கும். புது வேலைக்கான முயற்சிக்கு நல்ல பலன் கிடைக்கும். திருமணம் கூடி வரும். புது பதவி, பொறுப்புகள் தேடி வரும்.

அரசு விஷயங்கள் நல்லவிதத்தில் முடிவடையும். தாயாரின் ஆரோக்கியம் சீராகும். ஷேர் மூலமாக பணம் வரும். செலவுகளைக் கட்டுப்படுத்துவீர்கள். தாய்மாமன், அத்தை வழியில் மனஸ்தாபங்கள் விலகும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வெளிவட்டாரத்தில் புகழ் கூடும். உங்கள் ராசிக்கு 3-ம் வீட்டை குரு பார்ப்பதால் மனோபலம் கூடும். தைரியமாக முடிவுகள் எடுக்கத் தொடங்குவீர்கள். வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக முடியும்.

குரு 5-ம் வீட்டைப் பார்ப்பதால், மனத்தில் தெளிவு பிறக்கும். மழலை பாக்கியம் உண்டு. மகளுக்கு நல்ல வரன் அமையும். பூர்வீகச் சொத்துப் பங்கை கேட்டு வாங்குவீர்கள். குரு, ராசிக்கு 7-ம் வீட்டைப் பார்ப்பதால் உற்சாகம் அடைவீர்கள். பணவரவு உண்டு. புதிய திட்டங்கள் நிறைவேறும். வி.ஐ.பி-களின் வீட்டு விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள்.

குரு பகவானின் சஞ்சாரம்:


13.6.14 முதல் 28.6.14 வரை, உங்களின் சுக- சப்தமாதிபதியான குரு பகவான் தனது சாரமான புனர்பூசம் நட்சத்திரத்தில் செல்வதால், தாயாருக்கு நெஞ்சு எரிச்சல், முதுகுத் தண்டில் வலி வந்து போகும். வாகனத்தை எடுக்குமுன் எரிபொருள், பிரேக் எல்லாவற்றையும் சரிபார்ப்பது நல்லது. கணவன்-மனைவிக்குள் ஆரோக்கியமான விவாதங்கள், மனைவிக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படக்கூடும். 

29.6.14 முதல் 27.8.14 வரை உங்களின் பூர்வ புண்யாதி பதியும்-சஷ்டமாதிபதியுமான சனியின் பூசம் நட்சத்திரத்தில் குரு செல்வதால், புதிய சிந்தனைகள் தோன்றும். பிள்ளைகளின் விருப்பு வெறுப்பை அறிந்து அதற்கேற்ப அவர்களை நெறிப் படுத்துவீர்கள். பூர்வீகச் சொத்தை சீர் செய்வீர்கள்.

28.8.14 முதல் 2.12.14 மற்றும் 22.12.14 முதல் 4.7.15 வரை உங்களின் ராசியாதிபதியும்-ஜீவனாதிபதியுமான புதனின் ஆயில்யத்தில் செல்வதால், கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும்.  புதிதாக சொத்து வாங்குவீர்கள். 3.12.14 முதல் 21.12.14 வரை குரு அதிசாரத்தில் ராசிக்கு 12-ம் வீட்டில் கேதுவின் நட்சத்திரமான மகம் நட்சத்திரத்தில் செல்வதால், அலைச்சல், செலவுகள் இருக்கும். சிக்கனம் தேவை.

குரு பகவானின் வக்ர சஞ்சாரம்:


22.12.14 முதல் 17.4.15 வரை குருபகவான் ஆயில்ய நட்சத்திரத்திலும், 17.12.14 முதல் 21.12.14 வரை மகம் நட்சத்திரத்திலும் வக்ர கதியில் செல்வதால், எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வேற்று மாநிலம் அல்லது வெளிநாட்டில் வேலை அமையும். நகரின் எல்லைப் பகுதியில் வீடு வாங்குவீர்கள்.

வியாபாரத்தில், பற்று- வரவு உயரும். சந்தை நிலவரத்தை  அறிந்து, அதற்கேற்ப குறைந்த முதலீடு செய்து லாபம் ஈட்டுவீர்கள். புது கிளைகள் தொடங்குவீர்கள். முக்கிய பிரமுகர் களின் அறிமுகத்தால் வெளிநாட்டு நிறுவனத்தின் ஒப்பந்தம் கிடைக்கும். ஷேர், ஸ்பெகுலேஷன், இரும்பு, கட்டட உதிரி பாகங்களால் லாபம் உண்டு. நல்லவர்கள் பங்குதாரராக வர வாய்ப்பு இருக்கிறது. சங்கம் நடத்தும் விழாக்கள், போராட்டங் களுக்கு முன்னிலை வகிப்பீர்கள்.

உத்தியோகத்தில் வேலைச்சுமை, மறைமுக அவமானம் ஆகியவை விலகும். அலுவலக சூட்சுமங்களை கற்றுக் கொள்வீர்கள். உங்களை உருக்குலைய வைத்த மேலதிகாரி வேறிடத்துக்கு மாற்றப்படுவார். பதவி- சம்பள உயர்வு தடையில்லாமல் கிடைக்கும். தலைமைப் பொறுப்பு தேடி வரும். வெளிநாட்டு நிறுவனங்களிலிருந்தும் அழைப்பு வரும். உத்தியோகம் சம்பந்தப்பட்ட வழக்கு தள்ளுபடியாகும்.

கன்னிப்பெண்களுக்கு, புதிய நட்பால் உற்சாகம் உண்டு. கல்யாணம் கூடி வரும். புது உத்தியோகம் அமையும். மாணவ-மாணவிகள், ஆர்வத்துடன் படிப்பார்கள். நினைவாற்றல் கூடும். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவார்கள். மதிப்பெண் உயரும்.

அரசியல்வாதிகளின் கோரிக்கையை மேலிடம் பரிசீலிக்கும். சில வி.ஐ.பி-களும் உங்களுக்கு ஆதரவாக குரல் எழுப்புவர்.  கலைத்துறையினருக்கு, பெரிய நிறுவனங்களின் அழைப்பு தேடி வரும். பட்டிதொட்டியெங்கும் பாராட்டு கிடைக்கும்.
மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி, உங்களை பிரபலமாக்கு வதுடன், பண வரவையும் சொத்துச்சேர்க்கையையும் தருவதாக அமையும்.

பரிகாரம்: பிரதோஷ திருநாளில் காஞ்சிபுரத்தில் அருளும் ஸ்ரீஏகாம்பரேஸ்வரரையும், ஸ்ரீதட்சிணா மூர்த்தியையும் வணங்கி வாருங்கள். விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவுங்கள். வினைகள் தீரும்.





குருப்பெயர்ச்சி பலன்கள் 2014 - 2015 - ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu May 15, 2014 4:41 am

குருப்பெயர்ச்சி பலன்கள் 2014 - 2015 - ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன் Thulam

ழைமையில் புதுமையை திணிப்பவர் நீங்கள். குரு பகவான் 13.6.14 முதல் 4.7.15 வரை உங்கள் ராசிக்கு 10-ம் வீட்டில் நுழைந்து பலன் தரப்போகிறார். பத்தாம் இடமென்றால் பதவியைப் பறித்துவிடுவாரே, கையில் காசு பணம் தங்காதே... என்றெல்லாம் பதற்றப்படாதீர்கள். ஒரளவு நன்மையே உண்டாகும். சிலருக்கு வெளிநாட்டில், அண்டை மாநிலத்தில் வேலை அமையும். வேலைப்பளுவால் டென்ஷன் கூடும். உங்கள் திறமையையும், உழைப்பையும் வேறு சிலர் பயன்படுத்தி முன்னேறுவர்.
எந்த விஷயத்தையும் நீங்களே முன்னின்று முடிக்கவும். எவருக்கும் வாக்குறுதி தரவேண்டாம். முக்கிய கோப்புகளைக் கையாளும்போது அலட்சியம் வேண்டாம். வீண் பழி வந்து சேரும். நகை, பணத்தை இழக்க நேரிடும்.

வங்கிக் காசோலையில் முன்னரே கையொப்பமிட்டு வைக்காதீர்கள். குரு உங்கள் ராசிக்கு 2-ம் வீட்டைப் பார்ப்பதால் எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். குடும்பத்தில் நல்லது நடக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். சொத்து சேரும். குரு ஏழாம் பார்வையால் 4-ம் வீட்டைப் பார்ப்பதால், தாயாருடன் இருந்த மனவருத்தம் நீங்கும். வீடு கட்ட வங்கிக் கடன் கிடைக்கும். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். மனைவிவழியில் செல்வாக்கு உயரும். குரு 9-ம் பார்வையால் 6-ம் வீட்டைப் பார்ப்பதால், தடைப்பட்டிருந்த காரியங்கள் இனி கைகூடும்.

குரு பகவானின் சஞ்சாரம்...


13.6.14 முதல் 28.6.14 வரை உங்களின் சேவகாதிபதியும் - சஷ்டமாதிபதியுமான குருபகவான் புனர்பூசத்தில் செல்வதால், உங்களைப் பற்றிய வதந்திகளை சிலர் பரப்புவார்கள். நல்ல வாய்ப்புகளைத் தவறவிட்டதை எண்ணி வருந்துவீர்கள். உங்களின் தனித்தன்மையை இழந்துவிடாதீர்கள்.

29.6.14 முதல் 27.8.14 வரை உங்களின் சுக-பூர்வ புண்ணியாதிபதியான சனி பகவானின் பூச நட்சத்திரத்தில் குரு செல்வதால் புதிய யோசனைகள் பிறக்கும். பிள்ளைகளால் சொந்த-பந்தங்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். புது வேலை கிடைக்கும். தாயார் மற்றும் தாய்வழி உறவினர்களின் ஆதரவு கிட்டும். பூர்வீகச் சொத்தால் வருமானம் வரும். 28.8.14 முதல் 2.12.14 வரை மற்றும் 22.12.14 முதல் 4.7.15 வரையிலும் உங்களின் பாக்யாதிபதியும்-விரயாதிபதியுமான புதனின் ஆயில்யம் நட்சத்திரத்தில் குரு செல்வதால், பண வரவு உண்டு. புது வீடு கட்டத் தொடங்குவீர்கள். தந்தை மற்றும் அவர் வழி உறவுக ளால் ஆதாயமடைவீர்கள். பிதுர்வழி சொத்து கைக்கு வரும்.

3.12.14 முதல் 21.12.14 வரை குரு அதிசாரத்தில் ராசிக்கு 11-ம் வீட்டில் கேதுவின் நட்சத்திரமான மகம் நட்சத்திரத்தில் செல்வதால் செல்வம், செல்வாக்கு கூடும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். புது பதவி, பொறுப்புகள் தேடி வரும்.    
 
குரு பகவானின் வக்ர சஞ்சாரம்:


22.12.14 முதல் 17.4.15 வரை குரு ஆயில்யத்திலும் 17.12.14 முதல் 21.12.14 வரை மகத்திலும் வக்ர கதியில் செல்வதால், சிக்கனம் தேவை. குடும்ப விஷயங்களை மற்றவர்களிடம் விவாதிக்கவேண்டாம். நண்பர்களுடன் மோதல்கள் வரும். யூரினரி இன்ஃபெக்ஷன், தோலில் நமைச் சல், மறதியும், பித்தத்தால் தலைச்சுற்றலும் வந்து நீங்கும்.

வியாபாரத்தில் அகலக்கால் வைக்க வேண்டாம். வாடிக்கை யாளர்களை தக்கவைத்துக் கொள்ளுங்கள். கடன் தருவதைத் தவிருங்கள். பங்குதாரர்களிடம் முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடும் முன்பு சட்ட ஆலோசகரை ஆலோசிக்கவும். கமிஷன், ரியல் எஸ்டேட், பெட்ரோ-கெமிக்கல், மூலிகை வகைகளால் லாபம் அடைவீர்கள்.

உத்தியோக ஸ்தானமான 10-ல் குரு அமர்வதால் வேலைச்சுமை இருக்கும். விரும்பத்தகாத இடமாற்றங்கள் வரும். வேலையை விட்டுவிடலாமா என்றும் எண்ணம் எழும். அதிகாரிகள் ஒருதலைப்பட்சமாகச் செயல்பட வாய்ப்பிருக்கிறது. புது அதிகாரியால் சில நெருக்கடிகளைச் சந்திக்க நேரிடும். சக ஊழியர்களிடம் அதிக உரிமை எடுத்துக்கொள்ள வேண்டாம். உங்களைவிட தகுதியில் குறைந்தவர்களுக்கெல்லாம் பதவி, சம்பள உயர்வு கிடைக்கிறதே என்று வருந்துவீர்கள்.

கன்னிப்பெண்கள், எந்த ஒரு முடிவையும் பெற்றோரை கலந்தாலோசிக்காமல் எடுக்காதீர்கள். தடைப்பட்ட கல்யாணம் கூடி வரும். மாணவ - மாணவியருக்கு, விருப்பப்பட்ட கல்விப் பிரிவில் சேர்வதற்கு சிலரது சிபாரிசை நாடவேண்டியது இருக்கும்.

அரசியல்வாதிகளுக்கு, தலைமையுடன் பனிப்போர் உண்டாகும். விமர்சனத்தைத் தவிர்க்கவும். கலைத் துறையினர், சிறு வாய்ப்புகளையும் அலட்சியப்படுத்தாமல் பயன்படுத்துவது சிறப்பு. புதிய நிறுவனங்களை நம்பவேண்டாம்.

மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி, வாழ்வின் நெளிவு- சுளிவுகளை, சமூகத்தில் வளைந்து கொடுத்துப் போகும் கலையை உங்களுக்குக் கற்றுத் தருவதாக அமையும்.

பரிகாரம்: ரேவதி நட்சத்திர நாளில் திருவானைக்கா ஸ்ரீஜம்புகேஸ்வரரையும், ஸ்ரீதட்சிணாமூர்த்தியையும் நெய் தீபமேற்றி வணங்குங்கள். ஏழை கட்டடத் தொழிலாளிக்கு உதவுங்கள். சுபிட்சம் வந்து சேரும்.



குருப்பெயர்ச்சி பலன்கள் 2014 - 2015 - ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக