புதிய பதிவுகள்
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Today at 22:01

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 21:17

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Today at 19:40

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 15:37

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 15:36

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 15:21

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 15:18

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 14:00

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 13:40

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 13:27

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 13:20

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 13:13

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 13:11

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:01

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 12:51

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:47

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:38

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 12:30

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 8:48

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 8:43

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 7:14

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 20:34

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 18:09

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 12:01

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 10:18

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:48

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:41

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:38

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:36

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:34

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed 24 Apr 2024 - 15:04

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed 24 Apr 2024 - 15:02

» கடந்து செல்!
by ayyasamy ram Wed 24 Apr 2024 - 9:43

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed 24 Apr 2024 - 9:37

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed 24 Apr 2024 - 9:35

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 20:41

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 20:40

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 19:56

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 19:43

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 19:28

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 14:03

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:57

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:56

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:54

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:53

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:51

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue 23 Apr 2024 - 10:13

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue 23 Apr 2024 - 0:51

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 22:01

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 2 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 2 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 2 Poll_c10 
70 Posts - 48%
ayyasamy ram
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 2 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 2 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 2 Poll_c10 
61 Posts - 42%
mohamed nizamudeen
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 2 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 2 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 2 Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 2 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 2 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 2 Poll_c10 
4 Posts - 3%
rajuselvam
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 2 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 2 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 2 Poll_c10 
1 Post - 1%
Kavithas
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 2 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 2 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 2 Poll_c10 
1 Post - 1%
bala_t
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 2 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 2 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 2 Poll_c10 
1 Post - 1%
prajai
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 2 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 2 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 2 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 2 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 2 Poll_c10 
292 Posts - 42%
heezulia
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 2 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 2 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 2 Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 2 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 2 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 2 Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 2 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 2 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 2 Poll_c10 
26 Posts - 4%
sugumaran
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 2 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 2 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 2 Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 2 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 2 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 2 Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 2 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 2 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 2 Poll_c10 
6 Posts - 1%
prajai
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 2 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 2 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 2 Poll_c10 
5 Posts - 1%
Kavithas
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 2 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 2 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 2 Poll_c10 
4 Posts - 1%
manikavi
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 2 Poll_c10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 2 Poll_m10வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 2 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்


   
   

Page 2 of 19 Previous  1, 2, 3 ... 10 ... 19  Next

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4624
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Tue 1 May 2018 - 23:36

First topic message reminder :

"வீரயுக நாயகன் வேள் பாரி"

ஈகரை வாசர்களுக்கு இனிய வணக்கங்கள்..!
சாகித்திய அகாதெமி விருது பெற்ற "காவல் கோட்டம்" (அரவான் படத்தின் மூலகதை)  ஆசிரியர் சு.வெங்கடேசன் அவர்கள் விகடனில் எழுதி வரும் புதிய வரலாற்று தொடரை உங்களுடன் பகிர இந்த திரியை தொடங்குகிறேன்...

வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 2 P100bnew

"வீரயுக நாயகன் வேள் பாரி" என்ற இந்த வரலாற்று தொடரை எழுதி வரும் சு.வெங்கடேசன், ஓவியர் மணியம் செல்வன் மற்றும் விகடன் பிரசுரத்தார்கள் அனைவருக்கும் ஈகரை நண்பர்கள் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்.. அன்பு மலர்  அன்பு மலர்  அன்பு மலர்



நன்றிஆசிரியர் : சு.வெங்கடேசன், ஓவியங்கள்: ம.செ., , விகடன்  நன்றி


முன்னுரை

இளைப்பாற நிழலின்றித் தவிக்கும் வழிப்போக்கனின் கண்ணில் படும் பெரும் ஆலமரம்போல, மூவேந்தர்களும் மன்னர்கள் பலரும் ஆண்ட தமிழகத்தில், தவித்தலைந்த உயிர்களுக்காகத் தன்னையே தந்தவன் வேள்பாரி.

வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 2 P100a

தன்னலமற்ற கொடை உள்ளத்தாலும், அன்புவழிப்பட்ட வாழ்வியல் மரபாலும் பாரியின் புகழ் தமிழ் நிலம் எங்கும் பரவியது. மூவேந்தர்களான சேர, சோழ, பாண்டியர்கள் அவன் புகழ் கண்டு வெதும்பினர். பறம்பு நாட்டின் நிலவளம் அவர்களின் கண்களை உறுத்தியது. பாரிக்கு எதிராகத் தனித்தனியே அவர்கள் மேற்கொண்ட போர் முயற்சிகள் கைகூடவில்லை. இறுதியில் மூவேந்தர்களும் ஒன்றிணைந்தனர். அவர்களின் கூட்டுப்படை பாரியின் பறம்புநாட்டை அனைத்துத் திசைகளில் இருந்தும் ஒருசேரத் தாக்கியது. சின்னஞ்சிறு `டிராய்’ நகரின் மீது மொத்த கிரேக்கப் படையும் போர் தொடுத்ததைப் போலத்தான் இதுவும் நிகழ்ந்தது.

தலையானங்கானத்துப் போர், வெண்ணிலைப் போர், வாகைப் பறந்தலைப் போர், கழுமலப் போர் என சங்ககாலத் தமிழகம், குருதி பெருக்கெடுத்து ஓடிய எண்ணற்ற போர்க்களங்களைக் கண்டது. அங்கெல்லாம் நடைபெற்ற போரில் மூவேந்தர்களில் யாரேனும் ஒருவர் வெற்றிபெற்றார்.

மற்றவர்கள் தோற்றோடினர். ஆனால், `பறம்புமலைப் போரில்’ மட்டுமே மூவேந்தர்களும் ஒருசேர தோல்வியைத் தழுவினர். தமிழக வரலாற்றில் அதற்கு முன்பும் அதற்குப் பின்பும் நிகழாத வீரச்சரித்திரம் இது.

பெரும் நிலப்பரப்பை ஆண்ட மூவேந்தர்களின் கூட்டுப்படை, ஒரு குறுநில மன்னனால் சிதறடிக்கப்பட்டது. அதன் பின் மூவேந்தர்களும் ஒன்றாய் சதிசெய்து, வஞ்சினம் நிகழ்த்தி, பாரியின் உயிர் பறித்தனர். வீரத்தால் சாதிக்க முடியாததை துரோகம் செய்து முடித்தது.

வென்றவர்களின் பெயர்கள் இன்று வரை துலங்கவில்லை. ஆனால் வீழ்த்தப்பட்ட பாரி, வரலாற்றில் ஒளிரும் நட்சத்திரமானான்; வள்ளல் என்ற சொல்லின் வடிவமானான். முல்லைக்கொடிக்குத் தேரைத் தந்தவன் மட்டும் அல்ல... தனது வீரத்தால் என்றும் ஒளிவீசும் வெற்றிக்கொடியை நாட்டிச்சென்றவன் வேள்பாரி.

இயற்கைக்கும் மனிதனின் பேராசைக்கும் இடையில் இன்று நடக்கும் போராட்டத்தின் ஆதிவடிவம்தான் வேள்பாரியின் கதை. திரும்பும் திசையெல்லாம் அருவி கொட்டும் குறிஞ்சி நிலத்தில், அந்த அருவி நீரினும் குழுமையுடை பாரியின் கரம்பற்றி நடக்க வாருங்கள்...

Readre இந்த பதிவை விரும்பியுள்ளார்


ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4624
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Fri 4 May 2018 - 19:09

சு.வெங்கடேசன், ஓவியங்கள்: ம.செ.,


பிலர் எவ்வியூர் வருவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்னர் நடந்த நிகழ்வு இது...

 சித்தாற்றின் வடபுலத்தைச் சேர்ந்த பாணர் கூட்டம் ஒன்று, எவ்வியூருக்கு வந்திருந்தது. அவர்கள், வேட்டைச் சமூகப் பின்புலத்தில் இருந்து பாணர்களாக மாறியவர்கள்; யாழ் தெய்வமான மதங்கனையும் மதங்கியையும் வணங்குபவர்கள். இந்தக் குழுத் தலைவன் `மதங்கன்' என்றும், தலைவி `மதங்கி' என்றும் அழைக்கப்படுவர். தாங்களே வேட்டையாடி, அந்த விலங்கில் இருந்து யாழுக்கு நரம்பு எடுத்துக் கட்டுவர்; அந்த விலங்கின் தோல்கொண்டு பறை செய்வர்.

இவர்களின் கூத்து, நள்ளிரவுக்குப் பிறகுதான் தொடங்கும். அரிசியின் அளவு பருமன்கொண்ட யாழ் நரம்புகள் மீட்டப்பட்டு பறை ஒலிக்கத் தொடங்கும்போது, வேட்டை விலங்கின் சீற்றம் ஆரம்பம் ஆகும். சிறுபறையின் ஒலியில் தொடங்கும் கூத்து, நேரம் ஆக ஆக உக்கிரம்கொண்டு காட்டை மிரட்டும். குகை விலங்கு வெளியில் வந்து எட்டிப்பார்க்கும். அதன் கண்களுக்குள் இருக்கும் நீல ஒளி, இருளுக்குள் ஊர்ந்து இறங்கும். இந்தக் குழுவினரின் அடையாளமே தோல் கருவியான தடாரிதான். தடாரிகளைத் துணியால் கட்டி, கூடையில் வைத்து, காவடியைப்போல இருபுறமும் தூக்கி வருவார்கள். பயணத்தின்போது அவற்றைக் கீழ் இறக்கி மண்ணில் வைக்க மாட்டார்கள். தடாரி மண்ணைத் தொட்டால், அங்கு கூத்து நிகழ்த்தப்பட்டுத்தான் அவற்றைத் தூக்கவேண்டும். எனவே, கூத்து நடக்கும் இடத்தில் மட்டுமே அதைக் கீழே இறக்குவார்கள். மற்ற நேரங்களில் எல்லாம் காவடியைப்போல தோளிலும் கைக்குழந்தையைப்போல இடுப்பிலும் சுமந்தபடியே இருப்பர். தங்களின் முன்னோர்கள் வேட்டையாடிய யானையின் காலடியின் அளவுகொண்டே தடாரியை வடிவமைப்பர்.

கூத்து நிகழ்ந்துகொண்டிருக்கும் எந்தக் கணத்தில் தடாரிகளை எடுத்து, பெரும் மதங்கன் களம் இறங்குவான் எனத் தெரியாது. யாழ்தேவதை உருகி அழைக்க, ஏதோ ஒரு கணத்தில் சினம்கொண்டு இறங்குவான். தடாரிகள் எழுப்பும் ஒலி கேட்டு மலைதெய்வம் உள்ளொடுங்கும். மதங்கன், மலை நடுங்க ஆடுவான். தடாரிகளின் பேரொலி, காட்டைக் கிட்டித்து இடிக்கும். காட்டின் ஆதி மைந்தர்கள் ஆடிய ஆட்டம் அது. மதங்கனின் ஆட்டத்தைக் கதையாகக் கேட்கும்போதே பலரும் நடுங்குவர்.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 2 P83
மதங்கன் கூட்டம் வந்திருக்கிறது என்பதைக் கேள்விப்பட்ட பாரி அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. பாரி, இதுவரை மதங்கனின் கூத்தைப் பார்த்தது இல்லை. பாரியின் மனைவி ஆதினி. அவள் பொதினிமலையின் (பழநி) குலமகள். அவள் சிறுவயதில் பொதினிமலையில் தந்தையோடு சேர்ந்து மதங்கனின் நிகழ்வைப் பார்த்து, பயந்து அழுததைப் பற்றி பாரியிடம் பல நாள் சொல்லியிருக்கிறாள். ஏனோ பறம்பு நாட்டுக்கு மதங்கனின் கூட்டம் எதுவும் வந்தது இல்லை. நீண்ட காலத்துக்குப் பிறகுதான் பாரி கேள்விப்பட்டான், `சித்தாற்றங் கரையில் இருந்த நெட்டூர் மலையை சோழன் கைப்பற்றிவிட்டான்' என்று. அந்த மண்ணின் மகா கலைஞர்களான மதங்கர்கள், இப்போது அவனது கடல் பணிகளுக்கு ஏவல் வேலை செய்துகொண்டிருக்கின்றனர். யாழிசையின் பெருந்தேவிகளான அந்தக் குலப்பெண்கள், சோழ அரண்மனையில் விறலிகளாக மாறிக்கிடக்கின்றனர். பேரரசை உருவாக்கும் கனவுக்கு எண்ணற்ற இனக் குழுக்கள் இரையாக்கப்பட்டுவிட்டன. `மதங்கர் இனமே முற்றிலும் அழிந்துபோய்விட்டது!' என நினைத்துக்கொண்டிருந்த பாரிக்கு, தப்பிப் பிழைத்த அந்தப் பாணர் குழுவைப் பார்த்ததில் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

பாரிக்கு இரு மகள்கள். மூத்தவள் அங்கவை; இளையவள் சங்கவை. சிறுமியின் விளையாட்டை இன்னும் தொலைக்காமல் இருக்கும் சங்கவையைவிட ஆறு ஆண்டுகள் மூத்தவள் அங்கவை. பாரியின் குலக்கொடி. தந்தையின் எண்ணத்தை அவரது கண்களில் இருந்தே கண்டறிந்துவிடுவாள். தாய் ஆதினிக்கு அங்கவையின் மீதான ஆச்சர்யம் எப்போதும் நீங்கியது இல்லை. தான் அறியாத பாரியை இவள் எப்படிக் கண்டறிகிறாள் என எத்தனையோ முறை நினைத்திருக்கிறாள்.
`உனது சொல்லைத்தான் தந்தை கேட்பார்' என, ஒருமுறைகூட சொல்லியது இல்லை. ஆனால், `தந்தையைப்போலவே நீயும் சொல்கிறாயே!' எனச் சொல்லாத நாள் இல்லை. எது ஒன்றையும் அவளின் கண்கொண்டு பாரி பார்ப்பதும், பாரியின் எண்ணம்கொண்டு அங்கவை யோசிப்பதும் எப்போதும் நடக்கும் நிகழ்வுகள் ஆகிவிட்டன.

வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 2 P83dஒருநாள் நண்பகலில் அருவிக் குளியல் முடித்து, உணவுக்குக் காத்திருந்தனர். சமையல் தயாராகிக்கொண்டிருந்தது. அருகில் இருந்த பாறையின் மீது ஏறி முடிகள் காய, சுடுவெயில் தாங்கி நின்றான் பாரி. சிறு துணியால் தலை துவட்டியபடியே ஆதினியும் அங்கவையும் பாறை ஏறி வந்தனர்.

“என்ன பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள் தந்தையே?” எனக் கேட்டாள் அங்கவை.

குரல் கேட்டுத் திரும்பாமல், “கண்டுபிடி!” என்றான் பாரி.

எதிரில் விரிந்து பறந்த காடு. பின்புறம் கேட்கும் அருவியின் ஓசை, எங்கும் சிறகடித்துத் திரியும் பறவைகள், அவ்வப்போது வீசிச் செல்லும் காற்றின் சலசலப்பு என, அனைத்தையும் பார்த்தனர் ஆதினியும் அங்கவையும்.

பதிலுக்காகக் காத்திருந்தான் பாரி. ஆதினி சொன்னாள்... “எங்கும் பறவைகளின் குரல் கேட்கிறது. ஏதாவது ஒரு பறவையின் குரலில் துயரத்தின் சாயல் வெளிப்பட்டிருக்கும், அதைத்தான் நீங்கள் கவனித்துக்கொண்டிருக்கிறீர்கள்” என்றாள்.

அங்கவையோ, “இல்லை... தந்தை வேறு ஒன்றைப் பார்த்துக்கொண்டிருந்தார். அதை நான் கண்டுபிடித்துவிட்டேன்” என்றாள்.

சொல்லும்போதே அவளது முகத்தில் வெட்கம் பூத்து நின்றது. பாரி அவளை உச்சி முகர்ந்தான். ஆதினிக்குக் கோபம் வந்தது.

“அவள் எதைச் சொல்கிறாள். நீங்கள் எதைப் பார்த்தீர்கள்... சொல்லுங்கள்?” என்றாள் சற்றே பொறாமையுடன்.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 2 P83b
அங்கவை சொன்னாள்... “அம்மா, அதோ அந்த மூலையில் சந்தனவேங்கை மரம் நிற்கிறது பாருங்கள். தந்தை அதைத்தான் பார்த்துக்கொண்டி ருந்தார்” என்றாள்.

இப்போது ஆதினி முகத்தில் வெட்கம் ஓடியது.

“இவ்வளவு நேரம் அந்தத் திசையைப் பார்த்துக்கொண்டு நின்றது அதனால்தானா?” என்றாள் ஆதினி.

“ஆம்... நம் மகளையும் காதல் அழைத்துச் செல்லும். அதற்குள் நாம் அவளுக்குச் செய்ய வேண்டியவற்றைச் சிந்தித்துக்கொண்டிருக்கிறேன்” என்றான் பாரி.

“என்ன அது?” என ஆர்வத்தோடு கேட்டாள் ஆதினி.

“நிலம் எங்கும் அறியப்பட்ட பெரும் புலவர்கள் பரணரும் கபிலரும். அவர்களில் ஒருவரேனும் பறம்பு நாட்டுக்கு வர மாட்டார்களா என, பல நாட்கள் விரும்பியிருக்கிறேன். அந்த விருப்பம் இன்று வரை நிறைவேறவில்லை. என் மகள் மணமுடித்துச் செல்வதற்குள், அவர்கள் வர வேண்டும் என்று மனம் ஏங்குகிறது. அவர்கள் எழுத்து கற்றவர்கள். அவர்களிடம் இருந்து என் மகளும் என் மக்கள் சிலரேனும் எழுத்து கற்றால், எவ்வளவு நன்றாக இருக்கும்” என்றான் பாரி.
“அது எனக்கான உங்களின் விருப்பம் தந்தையே! அதைவிட ஆழமான ஆசைகள் உங்களிடம் உண்டு. அவை நிறைவேற வேண்டும் என்றுதான் நான் விரும்புவேன்” என அங்கவை சொன்னாள்.

பாரியே சற்று வியந்து, “எதைச் சொல்கிறாய்?” எனக் கேட்டான்.

அங்கவை சொன்னாள், ``பறம்பு நாட்டில் முழங்காத பறை இல்லை; ஆடாத கூத்து இல்லை; மீட்டாத யாழ் இல்லை. ஆனால், மதங்கர் கூட்டம் இந்த மண்ணை மிதிக்கவில்லை என்ற ஏக்கம் நீண்ட நாள் உங்களின் ஆழ்மனதில் உண்டு.
உங்களோடு அமர்ந்து அந்த விசையையும் கூத்தையும் நான் காண வேண்டும். அதுதான் எனது ஆசை” என்றாள்.

சமையல் தயாராகிவிட்டதால், கீழ் இருந்து அழைக்கும் குரல் கேட்டது.

“நீ போய் முதலில் சாப்பிடு. நாங்கள் வருகிறோம்” என்று மகளை அனுப்பிவைத்தான் பாரி. அவனது கண்கள் கலங்கியிருந்தன. கவனித்த ஆதினி என்ன என்று கேட்டாள்.

“மதங்கர் நாட்டை, சோழன் அடிமையாக்கிக்கொண்டான். அந்த மகத்தான இசைவாணர்கள் வர இனி வாய்ப்பே இல்லை” எனச் சொல்லும்போது பாரியின் குரல் உடைந்தது.

செய்வது அறியாது நின்ற ஆதினி, அவன் தோளைத் தொட்டாள். சற்றே ஆசுவாசம் அடைந்து நிதானித்தான் பாரி.

“சரி, வாருங்கள். அந்தச் சந்தனவேங்கை மரம் வரை போய் வருவோம்” என்றாள்.

சிறிய நகைப்போடு பாரி சொன்னான், “மகள் இருக்கும்போதே நீ அழைத்திருக்க வேண்டும். அந்தத் துணிவை ஏன் இழந்தாய்?”

ஆதினி சொன்னாள்... “எனது கண்களை நீங்கள் பார்த்திருந்தால் உங்களுக்குத் தெரிந்திருக்கும். நீங்கள்தான் அவற்றை நேர்கொண்டு பார்ப்பதே இல்லையே.”

இந்தத் தாக்குதலை பாரி எதிர்பார்க்கவில்லை. ஆதினியின் கண்கொண்டு பார்க்கத் தவறிய நாட்கள் எத்தனையோ! `காலம் எவ்வளவு வேகமாக அழைத்துக்கொண்டு போகிறது. கணவனின் இடத்தை தந்தை எந்தக் கணம் விழுங்குகிறான் என்பதை நிதானிக்கவே முடியவில்லையே!' என யோசித்துக் கொண்டிருக்கும்போது பாரி சொன்னான்...

“நீதான் எனது கண்கொண்டு பார்த்தவள்.”

வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 2 P83fபுரியாமல் விழித்தாள் ஆதினி.

“உண்மையில், நான் அந்தப் பச்சைப்புறாவின் சற்றே மாறுபட்ட குரல் ஒலியைத்தான் கேட்டுக்கொண்டிருந்தேன். அங்கவை, காதல் பருவத்தில் நிற்கிறாள். அவளின் கண்களின் வழியே அவள் பார்க்கத் தொடங்கிவிட்டாள். அவளின் கண்களுக்கு சந்தனவேங்கைதானே முதலில் படும். அதைத்தான் தந்தை பார்த்திருப்பார் என நம்பிச் சொன்னாள்” என்றான்.

“நீங்கள் ஏன் அதை ஒப்புக்கொண்டீர்கள்?” எனக் கேட்டாள்.

மெல்லியச் சிரிப்போடு பாரி சொன்னான்...  “குழந்தைகளிடம் விட்டுக்கொடுக்கும்போதும் தோற்கும்போதும்தான் ஓர் ஆண், தாய்மையை அனுபவிக்கிறான்.”

இதை ஆதினி எதிர்பார்க்கவில்லை. சற்றே கலங்கிய அவள், பாரியின் நெஞ்சில் சாய்ந்து சுடுவெயில் மறைய இதழ் பதித்தாள்.
ள்ளிரவு சிறுநிலவு, காடு எங்கும் சாம்பல் தூவிக்கொண்டிருந்தது. ஊர்மன்றலில் பந்தங்கள் ஏற்றப்பட்டு, எவ்வியூர் முழுக்கத் திரண்டிருந்தது. செய்தி கேள்விப்பட்டு, பலரும் இரவோடு இரவாக வந்துகொண்டிருந்தனர். மதங்கி, யாழ் மீட்டத் தொடங்கியதில் இருந்து, பார்வையாளர்கள் இமை சிமிட்டுவது கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து கொண்டிருந்தது. இசைக்கருவிகள் ஒவ்வொன்றாக இணைந்தன. சிறுபறையும் அரிப்பறையும் முழங்கும் போது இருள், நடுக்கம்கொள்ளத் தொடங்கியது. சலங்கை அணிந்த பெண்கள் இருவர், நெடுநிழல் நகர ஆவேசம்கொண்டு ஆடினர். பாரியின் இடதுபக்கம் அங்கவை அமர்ந்திருந்தாள். வலதுபக்கம் அமர்ந்திருந்த ஆதினியின் அருகில் சங்கவை இருந்தாள். வழக்கம்போல் பாரியின் பின்புறமாக நின்றிருந்தான் முடியன்.

`பாட்டாப் பிறை’ எனச் சொல்லப்படும் பாட்டன்மார்களுக்கான மேடையில் அமர்ந்து பார்த்துக்கொண்டிருந்தான் தேக்கன். அவர்களோடு தேக்கனின் வயதுடைய பெருசுகளும் உட்கார்ந்திருந்தனர்.

கூத்தின் பாங்கில் துயரத்தின் நெடுங்குரல் மேலே எழும்பியது. அழிந்த இனத்தின் கடைசிப் பாடகன், தனது குரல்நாளங்கள் வெடிப்பதைப்போல் பாடத் தொடங்கினான். இன்றோடு குரல் வெடித்துச் சாக வேண்டும் என்பதே அவன் விழைவாக இருந்தது. ஆறாத் துயரைக் கலையாக்கும்போது கலைஞன் படும் வேதனைக்கு இணைகூற சொல் இல்லை.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 2 P83c
குரலும் சலங்கையும் யாழும் பறையும் ஒன்றை ஒன்று விலகியும் விழுங்கியும் நகர்ந்தன. போர்க் குதிரைகளின் விரட்டுதலில் இருந்து தப்பியோடும் ஓர் இசைக்கலைஞனின் காலடி ஓசை, தனித்து கேட்டுக்கொண்டிருப்பதைப்போல பாரி உணர்ந்தான். `அந்த ஓசை எந்தக் கருவியில் இருந்து வருகிறது?' என்பதை அவனது கண்கள் தேடிக்கொண்டிருந்தன. எல்லோரும் மெய்ச்சிலிர்த்துப் பார்த்துக் கொண்டிருந்த கணத்தில், இரு தடாரிகளோடு குதித்து உள்ளே இறங்கினான் மதங்கன். அதுவரை முழங்காமல் இருந்த அனைத்துத் தடாரிகளும் ஏக காலத்தில் ஒலி எழுப்பின. சற்றும் எதிர்பாராத பேரிசை. பாரியே குலுங்கி உட்கார்ந்தான். பயந்த சங்கவை, “அம்மா...” எனக் கத்திய ஓசை பக்கத்தில் இருப்பவருக்கு மட்டுமே கேட்டது. ஆதினி அவளை அணைத்து மடியில் இறுக்கிக்கொண்டாள். அதைக் கவனித்த பாரியின் கண்களுக்கு, சிறுவயதில் பயந்து கத்திய ஆதினியும் சேர்ந்து தெரிந்தாள்.

மதங்கன், தாவி உள்ளிறங்கிய இடத்தில் மண் பெயர்ந்து மேலே எழுந்தது. வேட்டையாடிய யானையின் காலடி நிலத்தை அதிரச் செய்வதைப்போல அது இருந்தது. ஓர் ஆட்டம் தொடங்கும் கணத்தில் இவ்வளவு ஆவேசம்கொண்டு நிகழுமா என்ற வியப்பு எல்லோருக்கும் இருந்தது. இருமுகப் பறையான தடாரியைக் கையால் அடித்து முழங்க வேண்டும். அவன் இரண்டு நடை முன்னும் பின்னுமாகத் தவ்வித் தவ்வி தடாரிகளில் ஒலி எழுப்பிக்கொண்டிருந்தான். மதங்கனின் குடுமி கழன்று, சிகை சுழன்று எழும்பியது. ஆவேசம்கொண்ட மதங்கன், கால்களை முன்னும் பின்னுமாக மாற்றி, குதிக்காலால் குத்திக் குத்தி ஆடினான். மதயானை தனது நிழலைக் கொல்ல, மீண்டும் மீண்டும் தந்தத்தால் மண்ணைக் குத்துவதுபோல அது இருந்தது. எல்லா கருவிகளும் முழங்கிக்கொண்டிருந்தன. பாரி உறைந்த நிலையில் மதங்கனைப் பார்த்துக்கொண்டிருந்தான். மூதாதையர்களின் ஆதிக்கூத்து, மதங்கன் மயங்கிச் சரிந்ததோடு முடிந்தது.

பின்னிரவில் கூத்து முடிந்ததும் எல்லோரும் கலைந்தனர். கலைஞர்கள், இசைக்கருவிகளை துணிகளில் எடுத்துக் கட்டினர். மதங்கனை அருகில் அழைத்து அமரச்செய்த பாரி, அவன் உள்ளங்கையைத் தொட்டும் தடவியும் பார்த்தபடி நீண்ட நேரம் எதுவும் பேசாமல் இருந்தான். உள்ளங்கை சிவந்து இறுகிப்போய் இருந்தது.

“நீங்கள் இங்கேயே தங்கிவிடுங்களேன்” என்றாள் ஆதினி.

“இல்லை... நிலைகொள்ளக் கூடாது என்பது தெய்வவாக்கு” என்றான் மதங்கன்.

நிமிர்ந்து அவன் கண்களைப் பார்த்தான் பாரி.

“நாங்கள் தப்பி ஓடுகிறோம். மீளாத் துயர் எங்களை விரட்டுகிறது. ஓர் இடத்தில் நின்றுவிட்டால் துயர் முழுமையும் கவிந்துவிடும். அதனால்தான் மறுபகல் காணாமல் இரவோடு இரவாக ஆடிய நிலம்விட்டு அகல்கிறோம். விளக்கிச் சொல்ல மனதில் துணிவு இல்லை. எனவேதான் தெய்வவாக்கு என்கிறோம்” என்றான் மதங்கன்.

பாரிக்குச் சொல்ல எதுவும் இல்லை.

“உனக்கு என்ன வேண்டும்? எது வேண்டுமானாலும் எடுத்துக்கொள்” என்றான்.

மதங்கன் கேட்க, சற்றே தயங்கினான்.

“தயங்காமல் கேளுங்கள்” என்றார் பெரியவர் தேக்கன்.

மதங்கன், மெல்லியக் குரலில் கேட்டான்...

“வேறு எதுவும் வேண்டாம். கொல்லிக்காட்டு விதை கொடுங்கள்.”

பாரி அதிர்ந்து பார்த்தான். யாரும் எதிர்பாராத ஒன்று. என்ன பதில் சொல்வது எனத் தெரியவில்லை. `இப்படி ஒரு பொருள் இருப்பதே வெளியில் உள்ளவர்களுக்குத் தெரியாது. இதை எப்படிக் கேட்டான் மதங்கன்?' - நீடித்த மெளனம் கலைத்து தேக்கன் சொன்னான்...

“பறம்பின் ஆதிப்பொருட்கள், குலம் தாண்டக் கூடாது என்பது குலநாகினி வாக்கு. வேறு எது வேண்டுமானாலும் கேளுங்கள்.”

“குலநாகினியின் வாக்கு, காப்பாற்றப்படட்டும். நாங்கள் புறப்படுகிறோம்” எனச் சொல்லி, வேறு எதுவும் கேட்காமல் மதங்கன் எழுந்தான்.

அவன் உள்ளங்கை பாரியிடம் இருந்தது. தடாரியை அடித்து அடித்து வடுவேறிய கை. அதைத் தொட்டு அழுத்தியபடியே தலை நிமிராமல் பாரி சொன்னான்...

“எடுத்து வாருங்கள்.”

அரண்மனையை நோக்கி வீரர்கள் ஓடினர்.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 2 P83e
மூன்று நாட்களுக்கு முன்னர்...

மதங்கன் கூட்டம், மேற்கு எல்லையின் வழியே பறம்பு நாட்டுக்குள் நுழைந்தனர். பன்றிக் காட்டின் அடிவாரம் இருக்கும் காட்டாலம்தான் முதல் கிராமம். அந்தத் திசை வழியே நுழையும் எந்தப் பாணர் கூட்டமும், அந்தக் கிராமத்தை வந்து அடையும். அதன் பிறகு வீரன் ஒருவன் அந்தக் கூட்டத்தை அழைத்துக்கொண்டு மூன்று நாட்கள் பயணித்து, எவ்வியூர் கொண்டுவந்து சேர்ப்பான். அப்படித்தான் இவர்களும் வந்தார்கள். வரும் வழியில் கூட்டத்தில் இருந்த பெண் ஒருத்தி மயங்கிச் சரிந்தாள். `என்ன?' என, அழைத்துவந்த வீரன் விசாரித்தபோதுதான் தெரிந்தது, ஆகாரம் இன்றி தொடரும் நான்காம் நாள் பயணம் இது என்பது. குடுவையில் இருந்த நீரைத் தெளித்து அவளை எழுப்பினர். `பக்கத்தில் கிராமம் எதுவும் இல்லை. உணவுக்கு என்ன செய்யலாம்?' என யோசித்த வீரன், சிறிது தொலைவில் இருந்த குளத்துக்கு அழைத்துச் சென்றான். மதங்கன் கூட்டமும் ஆவலோடு போனது.

குளக்கரையை அடைந்ததும், “நீங்கள் உட்காருங்கள், நான் மீன்பிடித்து வருகிறேன்” என்றான்.

“கையில் வலை இல்லை, குத்தீட்டி இல்லை. எதைவைத்து மீன் பிடிப்பாய்?” என மதங்கன் கேட்டான்.

இடுப்புத் துணியில் முடிந்துவைத்திருந்த சிறிய காய் ஒன்றை எடுத்துக்காட்டினான் வீரன்.

“இதைவைத்து எப்படி மீன் பிடிப்பாய்?” எனக் கேட்டான் மதங்கன்.

“பாருங்கள்” என்று சொன்ன வீரன். அந்தக் காயை அருகில் உள்ள கல்மீது வைத்துத் தட்டினான். அது இரண்டாக உடைந்தது. ஒரு துண்டை எடுத்து இடிப்புத் துணியில் முடிந்துகொண்டான். மறுதுண்டை கல்லால் தட்டி பொடிப்பொடியாக ஆக்கினான். அதைத் துளியும் மிஞ்சாமல் எடுத்து குளத்தில் தூவிவிட்டான்.

அவன் தூவிய இடத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான் மதங்கன். நீர் சிறிது கலங்க ஆரம்பித்தது. சிற்றலைகள் தோன்றின. வீரன் சொன்னான்... “இது கொல்லிக்காட்டு விதை. காக்காய்க் கொல்லி விதை என்றும் சொல்வோம். அதை மீன்களும் பறவைகளும் விரும்பித் தின்னும். பிறகு சிறிது நேரத்திலேயே மயக்கம் அடைந்துவிடும்” என்றான்.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 2 P83g
மதங்கன் ஆச்சர்யத்தோடு கேட்டான்...

 “மீன் எப்படி மயக்கம் அடையும்?”
“அதோ பாருங்கள்” என்றான் வீரன்.

மதங்கன் அந்த இடத்தைப் பார்க்க, மீன்கள் மேலும் கீழுமாகச் சுழன்றும் பிறண்டும் நீந்திக்கொண்டிருந்தன. பெருமீன் ஒன்று வாலை மட்டும் மெள்ள அசைத்தபடி மிதக்க ஆரம்பித்தது. வீரன் உள்ளே இறங்கி ஒவ்வொன்றாக எடுத்துக் கொடுக்க ஆரம்பித்தான். வாய் பிளந்து நின்ற மதங்கன் அதை வாங்கினான். எட்டு பேருக்குத் தேவையான மீன்களை எடுத்த பிறகு, வீரன் கரை ஏறினான். இன்னும் சில மீன்கள் மிதந்து கொண்டிருந்தன.

“நமக்கு இவை போதும்; அவை சிறிது நேரத்தில் மயக்கம் தெளிந்து நீருக்குள் சென்றுவிடும். அது வரை பறவைகள் எதுவும் கொத்தாமல் பார்த்துக்கொள்ளுங்கள்” என்று சொல்லிவிட்டு, நெருப்புமூட்ட தீக்கல் எடுக்கச் சென்றான் வீரன்.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 2 P83h
தங்கன் பார்த்துக்கொண்டே இருந்தான். அரண்மனைக்குச் சென்ற வீரர்கள், பெரும் தாழிப்பானையைத் தூக்கிவந்து பாரியின் முன்னால் வைத்தனர். மதங்கனின் கண்கள் ஆச்சர்யம் நீங்காமல் பானைக்குள் பார்த்தன. அதே காய்கள். பாரி சொன்னான்... “எவ்வளவு வேண்டுமோ எடுத்துக்கொள்ளுங்கள்.”

தேக்கனின் மனம் பதறியது. ஆதினிக்கு என்ன சொல்வது எனப் புரியவில்லை. குல வழக்கங்களை மீறும் இடங்களுக்குச் சாட்சியாக நிற்பவர் யாராக இருந்தாலும் உள்நடுக்கம்கொள்வர். எல்லோருக்குள்ளும் ஒருவித அச்சம் உண்டானது. இறுக்கமான அந்தச் சூழலில் மதங்கனின் இரு கைகளும் தாழிக்குள் இருந்து கொல்லிக்காட்டு விதையை கைநிறைய அள்ளின. தடாரி பேரொலி எழுப்பியபோது உணர்ந்ததைப்போல, பல மடங்கு நடுக்கத்தை இப்போது உணர்ந்தனர்.

- பறம்பின் குரல் ஒலிக்கும்...

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4624
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Fri 4 May 2018 - 19:22

வனர்களின் `சொலாண்டியா' கப்பல், வழக்கம்போல் அரபுத் துறைமுகங்களில் தங்காமல், ஓசிலிஸ் வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 2 P83aவழியாக சிந்துநதியின் முகத்துவாரத்தில் இருக்கும் பாப்பரிக்கோன் துறைமுகத்துக்கு வந்து சேர்ந்தது. கப்பலின் மாலுமி எபிரஸ், நீண்டகால கடல் அனுபவம் பெற்றவன். கடற்காற்றின் குறிப்பு அறிந்து கப்பலைச் செலுத்துவதில் கைதேர்ந்தவன். அதனால்தான் மிகப்பெரிய கப்பலான `சொலாண்டியா’வின் பயணம் இவன் வசமே பல ஆண்டுகளாக ஒப்படைக்கப்பட்டுள்ளது. கப்பலின் பாதுகாப்புத் தளபதி திரேஷியன். தனி ஒருவனே கப்பலை நகர்த்திவிடுவது போன்ற உடல் அமைப்பு கொண்டவன். கடற்கொள்ளையர்களிடம் இருந்து தற்காத்து, `சொலாண்டியா’வின் பயணம் தொடர்ந்து வெற்றிகரமாக அமைய, இவனே முதற்காரணம். இவனது படைவீரர்களும் அபாரத் திறமைகொண்டவர்கள்.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 2 P83b
பாப்பரிக்கோன் துறைமுகம், சரக்கு வர்த்தகத்தில் முக்கியமானது எனச் சொல்ல முடியாது. ஆனாலும் கப்பல்கள் பல நாட்கள் இங்கு தங்கிச் செல்வது வழக்கம். காரணம், இந்த நிலப்பரப்பின் தனித்த அடையாளமாக விளங்கும் யவன - இந்திய வம்சக் கலப்பால் உருவான அழகிகள். ஒரு சாயலில் யவனத் தேவதைகளாகவும் மறு சாயலில் இந்தியப் பதுமைகளாகவும் காட்சிதருபவர்கள். அவர்களின் படுக்கையைவிட்டு, கப்பல் மாலுமிகள் அவ்வளவு எளிதில் விலகுவது இல்லை.
நீலம் பூத்த கண்களையும் செழித்த கொங்கைகளையும் ஒருசேரப் பார்க்கும் எந்த ஆணும் அணைத்த கையைப் பிரித்து எடுக்க மாட்டான்.  வேறு வழியே இல்லாமல்தான் எபிரஸ் வெளியேறி கப்பலுக்கு வந்துசேர்வான். ஆனால், திரேஷியன் வந்துசேர அதன்பின் ஒரு வாரம்கூட ஆகலாம். 

`உடலே ஒரு மர்மக்குகைபோல் இருக்கிறது எபிரஸ். வெளிர்மஞ்சள் நிறங்கொண்ட யவன அழகிக்குள் நுழைந்து, கருமஞ்சள் நிறங்கொண்ட இந்தியப் பதுமையின் வழியே கரை சேர்ந்தேன்’ எனச் சொல்லியபடி கப்பலுக்கு வருவான்.  அவனைக் கோபம்கொள்ள முடியாது. ஏனென்றால், இந்தப் பயணத்தின் மிக ஆபத்தான பகுதி இனிமேல்தான் இருக்கிறது.

கச் வளைகுடா, ஆழமற்றது மட்டும் அல்ல... கூர்மையான பாறைகள் நிரம்பியதும்கூட. எந்த நேரத்திலும் கப்பலின் அடிப்பாகம் நொறுங்கும் ஆபத்து உண்டு. மிகக் கவனமாக அதைக் கடந்து சுபாகரா வந்து சேர வேண்டும்.  கரையை ஒட்டிப் பயணிக்கும் இந்தப் போக்குவரத்துதான், துருவங்களைக் கடந்த வணிகத்துக்கு அச்சாணியாக இருக்கிறது. ஆனால், அவற்றின் மிக ஆபத்தான பகுதிகளான மேலிமேடுவும் மங்களகிரியும் அடுத்தடுத்து உள்ளன. இதைக் கடற் கொள்ளையர்களின் நாடாக யவனர்கள் குறித்துவைத்துள்ளனர். இதைக் கடப்பதுதான் மொத்தப் பயணத்திலும் மிகச் சவாலான காரியம். இதை வெற்றிகரமாகக் கடந்துவிட்டால், அதன் பிறகு தீண்டிஸுக்கு வந்துவிடலாம். யவனர்கள் தொண்டியைத்தான், `தீண்டிஸ்’ என அழைத்தார்கள். அவர்கள் இந்த நிலப்பரப்புக்கு, சம்புத்தீவு அதாவது `நாவலந்தீவு' எனப் பெயர் இட்டிருந்தார்கள். நாவல் மரங்கள் அதிகம் இருக்கும் காரணத்தால் இந்தப் பெயர். இந்த நிலப்பரப்பு நாற்சதுர வடிவில் உள்ளது என்றும், இதில் அறுபத்தைந்து நதிகளும் நூற்றிப்பதினெட்டு நாடுகளும் உள்ளன எனவும் அவர்கள் குறிப்பு எடுத்துவைத்திருந்தனர். இந்த நாற்சதுரத்தின் ஒருமுனை திரும்பும் இடமே தொண்டி. 

இங்கு வந்துவிட்டால் அதன் பிறகு மிகப் பாதுகாப்பான பயணம் ஆரம்பம் ஆகும். அதுமட்டும் அல்ல, இந்த நெடும் பயணத்தின் முக்கிய வணிகமே இனிமேல்தான் உள்ளது. நாற்சதுரத்தின் முதல்முனையான தொண்டியை விட்டுத் திரும்பும் கப்பல்கள், அடுத்து முசிறியை அடையும். அதன் பிறகு சற்றுப் பயணித்து மறு திருப்பத்தில் குமரியை அடையும். அங்கு இருந்து கொற்கைக்குச் செல்லும். பின்னர் புகார் வந்துசேரும். கப்பலின் பெரும்பாலான பொருட்கள் இறக்கி - ஏற்றப்பட்டு, கப்பல்கள் மீண்டும் யவனத்தை நோக்கிப் பயணத்தைத் தொடங்கும்.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 2 P83c
`சொலாண்டியா’ கப்பல், நற்பகலில் தொண்டி துறைமுகத்துக்குள் நுழைந்தது. பிரமாண்டமான கப்பலின் வருகை மிகத் தொலைவிலேயே கண்டறியப்பட்டுவிடும். பாய்மரத்தின் உப்பிய வயிற்றில் விலைமதிப்பற்ற வணிகத்தைச் சூல்கொண்டுவரும் யவனத் தேவதையைப்போல, `சொலாண்டியா’ வந்து நிற்கும். கடற் காகங்களின் கரைச்சல் அலையின் சத்தத்தையும் மிஞ்சிக்கொண்டிருக்க, எபிரஸ் நங்கூரத்தை இறக்க உத்தர விட்டான்.

சேரர் குலம், இரு வம்சாவழியாகப் பிரிந்து நாளாகிவிட்டது. முன்னவன் உதியன் பரம்பரை என அழைக்கப்பட்டான். வஞ்சியைத் தலைநகராகக்கொண்டு, முசிறியைத் துறைமுகப்பட்டணமாக அமைத்து அவன் ஆட்சி நடத்தினான். அவனது நாடு `குட்ட நாடு’ என அழைக்கப் பட்டது. பின்னவன் அந்துவன் பரம்பரை என அழைக்கப்பட்டான். மாந்தையைத் தலைநகராகக்கொண்டு, தொண்டியைத் துறைமுகப்பட்டணமாக அமைத்து அவன் ஆட்சி நடத்தினான். அவனது நாடு `குடநாடு' என அழைக்கப்பட்டது. இருவரும் சேரனின் வம்சக்கொடி தாங்களே என்று உரிமைகொள்வர்.  ஆனாலும் முன்தலைமுடி வைத்துக்கொள்ளும் உரிமை முன்னவனான உதியன் பரம்பரைக்கே இருந்தது.  

கடற்கரை மாளிகையில் ஓய்வு எடுத்துக்கொண்டிருந்தான் எபிரஸ். வழக்கம்போல் பவளக்கற்களும் ரசக்கண்ணாடிகளும் மதுப்புட்டிகளும் இறங்கிக்கொண்டிருந்தன. பதிலுக்கு அந்தத் துறைமுகத்தில் இருந்து ஏற்றப்படவேண்டிய பொருட்கள்... மிளகும் உதிரவேங்கை மரத்தின் பட்டைகளும்தான். குடநாட்டில் மிளகு விளையும் பகுதி அளவில் சிறியதே. அதனால், அந்தக் கடற்கரையில் சில திறளிமரப் படகுகளே நின்றன. உதிரவேங்கைப்பட்டை மிகுந்த மருத்துவக் குணம்கொண்டது. அதை யவனர்கள் முக்கியமாக வாங்குவர். இரு பொருட்களைச் சேர்த்தாலும் இங்கு நடக்கும் வர்த்தக மதிப்பு மிகக் குறைவுதான். எனவே, வேகமாக சரக்கை இறக்கிவிட்டுச் செல்வதிலேயே மாலுமிகளும் உடன் வந்துள்ள வியாபாரிகளும் தீவிரமாக இருப்பர். ஏற்றவேண்டிய பொருட்களை, திரும்பி வரும்போதுதான் ஏற்றுவர்.

பொருட்கள் எல்லாம் இறக்கப்பட்டுவிட்ட தகவல் கிடைத்ததும் எபிரஸ், மாளிகையில் இருந்து புறப்படத் தயார் ஆனான். அப்போது மாளிகைக்கு வந்தான் குடநாட்டு அமைச்சன் கோளூர்சாத்தன். தளபதிக்குரிய உடலமைப்பும், அமைச்சனுக்குரிய அறிவுக்கூர்மையும் ஒருங்கே அமையப்பெற்றவன். யவனத்துடனான குடநாட்டு வர்த்தகத்தை முதல்நிலைக்குக் கொண்டுவர வேண்டும் எனத் தீவிரமாக முயல்பவன். அவனுடன் இரு வணிகர்களும் வந்திருந்தனர்.

திரேஷியன், தனது கப்பலை நோக்கி வந்தான். அவன் வீரர்கள், தளபதிக்கு உரிய ஆயுத மரியாதையைச் செய்து அவனை கப்பலுக்குள் வரவேற்றார்கள். உள்ளே வந்த பிறகுதான் அவனுக்குத் தெரிந்தது எபிரஸ் இன்னும் வரவில்லை என்பது.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 2 P83d
“எப்போதும் எனக்கு முன்னமே வந்துவிடுவானே, ஏன் தாமதம்?” எனக் கேட்டான். யாருக்கும் தெரியவில்லை. குடநாட்டு அழகிகளால் காலதாமதம் ஏற்பட வாய்ப்பு இல்லையே என யோசித்தபடி, அவனது மாளிகையை நோக்கி திரேஷியன் நடந்து போனான். வீரர்கள் அணிவகுத்துச் சென்றனர்.

காவலாளி கதவைத் திறக்க, மாளிகையின் உள்ளே நுழைந்தான் திரேஷியன். ஆச்சர்யம் நீங்காத நிலையில் எபிரஸ் உட்கார்ந்து இருந்ததைக் கண்டான். அவனது எதிர் இருக்கையில் கோளூர்சாத்தனும் வணிகர்கள் இருவரும் உட்கார்ந்து இருந்தனர். நடுவில் இருந்த பலகையின் மேல் தங்கத்தாலான வட்டத்தட்டில் `கொல்லிக்காட்டு விதைகள்’ வைக்கப்பட்டிருந்தன.

“புகார் சென்று திரும்புவதற்குள் நீங்கள் சேகரித்துவையுங்கள். இதற்கு என்ன விலை கொடுக்கவும் நான் தயார்!” என்று அவர்களிடம் சொல்லிவிட்டு எழுந்தான் எபிரஸ். கப்பல் நோக்கி அவனும் திரேஷியனும் பேசிக்கொண்டே வந்தனர்.
எபிரஸ் சொன்னான்... “ஒருவேளை இந்த வியாபாரம் கைகூடினால் தொண்டி துறைமுகம் பிற மூன்று துறைமுகங் களையும் வணிகத்தில் விஞ்சிவிடும். அதுமட்டும் அல்ல, நாம்தான் யவனத்தின் அதிசக்தியுள்ள மந்திர மனிதர்களாக மாறுவோம்.”

டம்ப மரத்தில் இருக்கும் முருகனை வழிபட்டுத் திரும்பும் பாரியிடம், “குடநாட்டு அமைச்சன் வந்திருக்கும் செய்தி சொல்லப்பட்டது. அவன் காத்திருந்த மாளிகையை நோக்கிச் சென்றான் பாரி. உடன் முடியனும் பெரியவர் தேக்கனும் வந்தனர். சேரகுலத்தின் அந்துவன் பரம்பரையின் மீது மட்டும் சிறுமதிப்பு, பறம்பு நாட்டுக்கு உண்டு. அதனால்தான் அவர்கள் அழைத்துவர அனுமதிக்கப்பட்டனர். கபிலர் வந்ததால் எவ்வியூரே கொண்டாட்டத்தில் திளைத்துக் கொண்டிருந்த நேரம் இது. பாரியின் மனம் பூத்துக் கனிந்திருந்தது. அறுபதாங்கோழி இன்னும் கிடைக்கவில்லை என்ற கவலை மட்டுமே மனதின் ஓரத்தில் இருந்தது. அதுவும் எந்த நேரத்திலும் சரியாகிவிடக்கூடியதுதான்.
மாளிகைக்குள் நுழையும் பாரியின் முகமலர்ச்சியைப் பார்த்த அமைச்சன், கோளூர்சாத்தன் அகமகிழ்வுகொண்டான். தான் வந்த காரியம் நல்லபடியாக முடியும் என்ற நம்பிக்கை அவனுக்கு ஆழமானது. அவன் கொண்டுவந்த பரிசுப்பொருட்களை பாரி அமரும் இருக்கைக்கு முன்பாகப் பரப்பி வைத்திருந்தனர். யவனத்தில் இருந்து வாங்கப்பட்ட ரசக்கண்ணாடி, நடுவில் வைக்கப்பட்டிருந்தது. கண்ணாடியின் மேல் இரண்டு யவன அழகிகளின் உருவங்களைக் கொண்ட மரவேலைப்பாடுகள் இருந்தன. இருக்கையில் அமரும் பாரியின் முகத்தைப் பிரதிபலிப்பதைப்போல அந்தக் கண்ணாடி வைக்கப்பட்டிருந்தது.

அமைச்சன் ஆரம்பித்தான்...

“பறம்பின் மாமன்னரை வணங்குகிறோம். குடநாட்டு வேந்தன், `குடவர்கோ’வின் அன்புப் பரிசை நீங்கள் ஏற்க வேண்டும்” என்று முன்னால் பரப்பி வைக்கப்பட்டிருந்தவற்றைப் பார்த்துச் சொன்னான்.
பாரியின் உதட்டோரம் தொடங்கிய மெல்லிய சிரிப்பு, முழுமைகொள்ளாமல் வேகமாக முடிந்தது.

“வந்ததன் நோக்கம்?”

காணிக்கையை ஏற்பதைப் பற்றி எந்தவித பதிலும் சொல்லாமல், பாரி கேள்விக்குள் போனது சற்றே ஆச்சர்யத்தைக் கொடுத்தது. அமைச்சன் சொன்னான், “குடநாட்டு வேந்தர், வணிகப்பேச்சு ஒன்றுக்காக என்னை அனுப்பிவைத்தார்.”

“வணிகம், இயற்கைக்கு விரோதமானதே! அதை ஏன் என்னிடம் பேசவந்தீர்கள்?”

அமைச்சன் எச்சில் விழுங்கினான்.

``வணிகம்தானே ஓர் அரசின் அச்சாணி. வணிகம் செழித்தால்தானே அரசு செழிக்கும். அரசு செழித்தால்தானே மக்கள் செழிப்பர்.”

“வணிகமே இல்லாததால்தான் நாங்கள் செழித்திருக்கிறோம்” என்று சொன்ன பாரி, சற்று இடைவெளிவிட்டுச் சொன்னான், “எந்த மன்னனின் காலடியிலும் பறம்பின் தட்டுக்கள் பணிந்துவைக்கப்பட்டது இல்லை என்பதை அறிவீரா?”
அமைச்சன், அதிர்ச்சி அடைந்தான். பாரி தொடர்ந்தான்...

“இயற்கை வழங்குகிறது; நாம் வாழ்கிறோம். இடையில் விற்கவும் வாங்கவும் நாம் யார்?’’

“கொள்ளாமலும் கொடுக்காமலும் எப்படி வாழ முடியும் மன்னா? பறம்பு நாட்டுக்குத் தேவையான உப்பை உமணர்களிடம் இருந்து நீங்கள் வாங்கத்தானே செய்கிறீர்கள்?”
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 2 P83f
“எங்களுக்குத் தேவையானதையும் அவர் களுக்குத் தேவையானதையும் பரிமாறிக்கொள்கிறோம். பகிர்ந்து உண்பதும் பரிமாறி வாழ்வதும், இயற்கை நமக்குக் கற்றுக்கொடுத்தவை.”

“அதுதானே வணிகமும்.”

“இல்லை... பரிமாற்றம் என்பது தேவை சார்ந்தது. வணிகம் என்பது ஆதாயம் சார்ந்தது.  ஆதாயம் மனிதத்தன்மையற்றது; மாண்புகளைச் சிதைப்பது. யவன அழகிகளை எனது காலடியில் வந்து பரப்ப உங்களைத் தயார்செய்வது. இதனினும் கீழ்மை அடையத் தூண்டுவது” எனச் சொன்ன பாரி, சற்றே குரல் உயர்த்திச் சொன்னான்... “நான் சொல்வது விளங்கவில்லையா? எனது காலடியில் யவன அழகிகளின் சிற்பத்தைப் பரப்புகிற உன் மன்னன், இதைவிட பெரிய ஆதாயத்துக்காக வேறு யாருடைய காலடியில் எவற்றை எல்லாம் பரப்புவான்?”

அமைச்சனின் நாடி நரம்புகள் ஒடுங்கின.

“நாட்டை ஆள்பவர்கள் நீங்கள். அமைச்சர் களாகிய நாங்கள் உங்களின் சொற்கேட்டுப் பணியாற்றுபவர்கள்” - தற்காத்துப் பதில் சொன்னான் அமைச்சன்.

“நாங்கள் ஆள்பவர்கள் அல்லர்; ஆளப்படு கிறவர்கள். இயற்கைதான் எங்களை ஆள்கிறது.”

சற்று மெளனத்துக்குப் பிறகு அமைச்சன் சொன்னான், “உங்களையும் பறம்பு நாட்டையும் எந்தக் கணமும் அழிக்கத் துடித்துக்கொண்டிருக்கிறான் குட்டநாட்டு அரசன் உதியஞ்சேரல். அவனே இப்போது யவன வணிகத்தில் உச்சத்தில் இருக்கிறான். அவனிடம் சேரும் ஒவ்வொரு செல்வமும் பறம்பு நாட்டுக்கு எதிரான போர் ஆயுதமே. வணிகத்தில் அவனை விஞ்ச குடநாட்டுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. நீங்கள் எங்களுக்கு உதவினால், எங்களால் அதைச் சாதிக்க முடியும். உதியஞ்சேரலைப் பின்னுக்குத் தள்ள முடியும். நாங்கள் பறம்பின் நண்பர்கள். என்றும் உங்களுக்குத் துணை நிற்போம்.”

“எங்களை நீங்கள் எதிர்க்க முடியாததனால், நண்பர்கள் எனச் சொல்லிக்கொள்வதை ஏற்க மாட்டோம். நட்பின் பொருள் மிக ஆழமானது. உதியஞ்சேரலைப்போல வணிகத்தில் நீங்களும் பெரும்செல்வம் ஈட்டுவீர்களானால், இவ்வளவு பணிவுடன் பேசுமாறு உங்கள் மன்னன் சொல்லி அனுப்ப மாட்டான்.”

“அப்படி என்றால் எங்களுக்கும் குட்டநாட்டு அரசுக்கும் வேறுபாடு இல்லை என்று கருதுகிறீர்களா?”

“உண்டு... உதியஞ்சேரலின் தந்தை, என்னால் கொல்லப்பட்டவன்; உங்கள் மன்னனின் தந்தை என்னால் வாழ அனுமதிக்கப்பட்டவன். அதுமட்டுமே உங்கள் இருவரின் அணுகுமுறை வேறுபாட்டுக்குக் காரணம். வேறு அடிப்படைக் காரணங்கள் இல்லை.”

புறப்படவேண்டிய நேரம் வந்துவிட்டதை அமைச்சன் உணர்ந்தான்.

“ஒன்று மட்டும் சொல்ல வேண்டும் எனத் தோன்றுகிறது. சொல்ல அனுமதிப்பீர்களா?”

“என்ன?”

“உட்கார்ந்த கணத்தில் மூன்று முறை இந்த ரசக்கண்ணாடியை நீங்கள் பார்த்தீர்கள். உங்களை அறியாமலேயே உங்களின் கை, மீசையைச் சரிபடுத்திக்கொண்டது.  இந்த வேளையில் நீங்கள் தனித்து இருந்தால் அது உங்களை முன்னூறு முறை பார்க்கவைத்திருக்கும். உங்களின் தேவையாக அது மாறும். எது ஒன்றையும் தேவையானதாக மாற்றுவதுதான் வணிகம். வணிகத்திடம்தான் ஆசையின் திறவுகோல் உள்ளது. அதை வெல்லும் ஆற்றல் யாருக்கும் இல்லை.”

“இதுவரை நீ எங்களைப் பார்த்தது இல்லை. இப்போது பார்த்துவிட்டாய் அல்லவா? இதை வெல்லும் ஆற்றல்கொண்டவர்கள் இருக்கிறார்கள் என உலகுக்குச் சொல்.  நீ போகலாம்” - சொல்லிவிட்டு எழுந்தான் பாரி.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 2 P83e
பாரியின் வருகையை, அவன் குடும்பமே எதிர்பார்த்துக் காத்திருந்தது. மாளிகையின் மூன்றாம் கதவு திறக்க, அவன் உள்நுழைந்தான். ஆவலோடு எதிர் நின்ற அங்கவை கேட்டாள், “என்ன தந்தையே இவ்வளவு நேரம்?”

“வணிகம் பேச குடநாட்டு மன்னன் ஆள் அனுப்பியிருந்தான்”.

அருகில் இருந்த ஆதினி சற்றே பதற்றமாகி பாரியின் முகத்தைப் பார்த்தாள். அங்கவை அம்மாவின் கரம் பற்றி சொன்னாள், “கபிலர் வந்திருப்பதால் தந்தை கோபம்கொண்டிருக்க மாட்டார். இல்லையா தந்தையே!”

“ஆம் மகளே... வணிகம் பேசித் திரும்பும் ஒருவனுக்கு, கை கால்கள் இருப்பதைப் பார்க்க எனக்கும் ஆச்சர்யமாகத்தான் இருந்தது.”

“என்ன வணிகம் பேச வந்தான்?”

“அதை நான் கேட்கவில்லையே மகளே.”

“அதனால்தான் அவன் தப்பிப் போயிருக்கிறான்.”  

பாரி, மாளிகையின் மையத்தில் இருந்த இருக்கையில் அமர்ந்தான். அவன் அருகில் வந்து அமர்ந்த இளையவள் சங்கவை, தந்தையின் கையை தனது மடியின் மேல் வைத்து சேவல் இறகால் மெள்ள வருடினாள். பாரி கேட்டான், “ஆவலோடு எதிர்பார்த்ததாகச் சொன்னீர்களே எதற்காக?”

மூவருக்குமே பாரியின் கேள்வி ஆச்சர்யத்தை உண்டுபண்ணியது.

“என்ன தந்தையே... வந்தவன் உங்களின் மனநிலையைத் தொந்தரவு செய்வதைப்போல் எதையும் கேட்டானா?”

“அப்படி எதுவும் இல்லை மகளே.”

“எங்களின் தந்தையை நாங்கள் அறிவோம். மறைக்க முயலாதீர்கள்?”

“இவ்வளவு தொலைவு மேல் ஏறிவந்து வணிகம் பேசுகிறான் என்றால், அவனது துணிவுக்குக் காரணம் அவனுடைய வலிமையாக இருக்காது.  அவன் பெற விளையும் ஆதாயமாக இருக்கும் எனத் தோன்றுகிறது. என்ன பொருளுக்காக வந்தான் என்பதைக் கேட்டிருக்க வேண்டும்.”

“அதற்காகக் கவலைகொள்ளாதீர்கள். வந்தவர்களைத் திருப்பி அனுப்ப, எல்லை வரை முடியனும் போயிருக்கிறான் அல்லவா... நிச்சயமாக அறிந்துவருவான்” என்றாள் ஆதினி.
சங்கவை, பாரியின் கைகளை இறகால் வருடியபடியே இருந்தாள்.

“என்ன மகளே, தந்தைக்கு வருடிக்கொடுக்கிறாய்?”

“ஆம் தந்தையே... சேவல் இறகால் வருடினால் சுகமாக இருக்கும் அல்லவா! அதனால்தான்...” 

“மயில் இறகுதான் வருடுவதற்கு ஏற்றது.”

“ஆனால் இந்த இறகுதானே உங்களுக்குப் பிடிக்கும்” எனச் சொன்னவள் தந்தையின் முகம் பார்த்துச் சொன்னாள், “இது சேவலின் இறகு. ஆனால், கோழியினுடையது.”
அப்போதுதான் பாரிக்குப் புரிந்தது.

“அறுபதாங்கோழி கிடைத்துவிட்டதா?” எனக் கத்தியபடி மகள்களை வாரி அணைத்தான் பாரி.

ல்லையைக் கடக்க, சிறிது தொலைவே இருந்தது. கோளூர்சாத்தன் குழுவினருடன் முடியனும் பறம்பின் வீரர்கள் சிலரும் வந்துகொண்டிருந்தனர். முன்னால் செல்லும் முடியனின் இடுப்பின் ஒருபக்கம் வாளும் மறுபக்கம் கொம்பும் தொங்கிக்கொண்டிருந்தன. அதைப் பார்த்தபடி வந்துகொண்டிருந்தான் கோளூர்சாத்தன்.வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 2 P83g1

`விரி ஈட்டி, கேடயம், சூரிவாள் என எவ்வளவோ ஆயுதங்களை உருவாக்கி பிற நாடுகள் முன்னேறி விட்டன. இன்னும் இடுப்பில் கொம்பைக் கட்டிக்கொண்டு அலைகிற இந்த மலைவாசிக் கூட்டத்துக்கு வணிகத்தின் பயனை எப்படிப் புரியவைப்பது?’ என்ற எண்ணமே கோளூர் சாத்தனின் மனதில் ஓடிக்கொண்டிருந்தது.

முன்னால் போய்க்கொண்டிருந்த முடியன் கேட்டான், “எந்தப் பொருளுக்காக வணிகம் பேச வந்தீர்கள்?”

கோளூர்சாத்தனின் முகம்  மலரத் தொடங்கியது. தனக்குள் ஓடியதுபோலவே வணிகம் சார்ந்த எண்ணமே இவனுக்குள்ளும் ஓடியிருக்கிறது. அந்த ஆர்வத்தில்தான் கேட்கிறான். அதை ஊதிப் பெரிதாக்கிவிடலாம். இன்று இல்லாவிட்டாலும் நாளை உதவும் என எண்ணினான். உடன்வந்த வணிகனைப் பார்த்துக் கை அசைத்தான். அதில் ஒருவன் தனது இடுப்பில் முடிச்சிட்டிருந்த கொல்லிக்காட்டு விதையை எடுத்துக் கொடுத்தான்.

அதை வாங்கிய முடியனின் கை நடுங்கியது. கண்கள் நம்ப மறுத்து அந்த விதையைக் கூர்ந்து பார்த்துக்கொண்டே இருந்தன. உயிரற்ற குரலில் கேட்டான், “என்ன விலை கொடுத்திருந்தாலும் மதங்கன் இதை விற்றிருக்க மாட்டான். அவனை என்ன செய்தீர்கள்?”

கோளூர்சாத்தன் அசட்டுச் சிரிப்போடு கேட்டான், “உனக்கு என்ன வேண்டும் கேள்?”

த்திமதுவும் அறுபதாம்கோழியின் கறியும்  கபிலருக்கு விருந்தாக்கப்பட்டன. அவருக்கு அரண்மனையில் நடக்கும் முதல் விருந்து. பாரி மனைவி ஆதினியும் மகள்கள் அங்கவையும் சங்கவையும் கபிலரை இன்றுதான் சந்திக்கின்றனர். இந்த நாளுக்காகத்தான் அவர்கள் தவியாய்த் தவித்திருந்தனர்.

அரண்மனையின் மேல்வட்ட அறையில் இரவு எல்லாம் ஆட்டமும் கூத்துமாக இருந்தது. வேட்டூர் பழையனுக்கும் நீலனுக்கும் அறுபதாங்கோழியின் கறித்துண்டு ஆளுக்கு ஒன்று கிடைத்தது. பாரிக்குத்தான் அதுவும் இல்லை. கபிலர் சொன்னார், “உன்னோடு சேர்ந்து கள் அருந்தும் நாள்தான் வாழ்வின் திருநாள் என்று நீலன் சொன்னான்” என்றார். பெருங்குவளை நிறையக் கள்ளினை ஊற்றி, அதை நீலனுக்குக் கொடுத்தபடி பாரி சொன்னான், “உனக்கு கள் ஊற்றிக் கொடுக்கும் இந்த நாள்தான் என் வாழ்வின் திருநாள்.”

நீலன் மெய்சிலிர்த்து நின்றான். பெரியவர் தேக்கன் சொன்னார், “கபிலருக்குத் தோள்கொடுத்த பாரி உனக்குத்தானடா கள் கொடுத்தான்.”

எல்லோரும் சிரித்து மகிழ்ந்தனர்.

“முடியன் ஏன் இன்னும் வரவில்லை?’’ எனக் கேட்டான் பாரி.

றம்பு நாட்டின் வட எல்லையில், குடநாட்டுக்கு உள்நுழையும் இடத்தில் தோளில் இருந்து பொங்கும் குருதியை மறுகையால் பொத்தியவாறு கதறிக்கொண்டே ஓடினர் கோளூர்சாத்தனும் இரு வணிகர்களும். அங்கு இருந்த பனைமரத்தில் வெட்டப்பட்ட மூவரின் கைகளையும் தொங்கவிட்டுக்கொண்டிருந்தான் முடியன்!

- பறம்பின் குரல் ஒலிக்கும்...

aeroboy2000
aeroboy2000
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 263
இணைந்தது : 29/08/2012

Postaeroboy2000 Fri 4 May 2018 - 21:00

அருமை அன்பரே அற்புதம்

உள்ளே நுழைந்தால் வெளியே வர இயலாத அளவுக்கு அற்புத நடை .....


தாங்கள் இங்கு பதியும் போது
ஒரு மைக்ரோஸாப்ட் வேர்ட் டாகுமெண்டில்
ஏ 6  அளவில் (10.5 செ மீ - 14.8 செ மீ )
நெரோ (குறுகிய) மார்ஜின் அமைப்பில்
படங்களுடன் பதிந்து சேமித்து வந்தால்


முடியும் பாகங்களை பி டி எஃப் கோப்பாக
சேமித்து பகிர்ந்தால்
அந்த புத்தகங்களை கைக்கு அடக்கமான
செல் பேசிகளிலும் படிக்கலாம் ...


என்றும் நன்றிகளுடன்

கே எல் என்

வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 2 3838410834  வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 2 3838410834  வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 2 3838410834

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4624
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Mon 7 May 2018 - 15:02

நிச்சயமாக நண்பரே ...  தங்களின் கருத்திற்கு மிக்க நன்றி ... நன்றி



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4624
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Mon 7 May 2018 - 17:13

ருள் விலகாத இரவின் கடைசி நாழிகையில், கபிலரை எழுப்ப அவரது அறை நோக்கி வந்துகொண்டிருந்தான் வீரன் ஒருவன். அவனது காலடி ஓசை மிகத் தொலைவில் இருந்தே கேட்கத் தொடங்கியது. படுக்கையில் இருந்து மெள்ள  அசைந்தார். ஓசை, அறைக்குள் நுழைவதற்குள் எங்கு இருந்தோ வந்த மலரின் மணம் அவரது மூக்குக்குள் ஏறியது. சற்றே மூச்சை இழுத்து முகர்ந்தார். காலடி ஓசை அருகில் வந்து நின்றது.

வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 2 P135aநள்ளிரவில் மலரும் மயிலை மலரின் மணம். நள்ளிரவு மலருக்கு எனத் தனிக் குணங்கள் உண்டு அது வண்ணங்களை எல்லாம் வாசனையாக்கி ஒளி வீசக்கூடியது. ஆம்பலும் முசுண்டையும் நள்ளிரவிலே பூப்பவை. ஆனாலும், மயிலையின் தனித்துவ மிக்க வாசத்துக்கு அவற்றை இணைசொல்ல முடியாது. மயிலையின் மணம் அறை எங்கும் பரவியது. காட்சிக்கு முன்பே நறுமணத்தால் இதயம் நிரம்பியது. அகமகிழ்வோடு கண் விழித்தார் கபிலர்.

மலர்க் கூடையை அறையில் வைத்துவிட்டு ஒரு பெண் வெளியேறினாள். அருகே வந்த வீரன் சொன்னான், “பறம்பின் தலைவர் உங்களை அழைத்துவரச் சொன்னார்”. மலர் மணத்தோடு இணைந்தது இனியவனின் அழைப்பு. சிறிது நேரத்தில் வருவதாகக் கூறினார்.

மாளிகையின் முகப்பில் தயாராக நின்றுகொண்டிருந்தான் பாரி. கபிலர் வெளியேறி வந்ததும், ``வாருங்கள் போகலாம்” என உற்சாகமாக அழைத்துச் சென்றான். இரவின் கடைசி இதழ் இப்போதுதான் உதிரத் தொடங்கியிருந்தது. தீப்பந்தங்களை அணைக்க வீரர்கள் மூடுகுவளைகளோடு போய்க்கொண்டிருந்தனர். பறவைகளின் சத்தம் இன்னும் வெளியேற வில்லை. எவ்வியூரின் நடுவீதியின் வழியே கபிலரை அழைத்துக்கொண்டு மேலே ஏறினான்.

பாரி அணிந்திருந்த உடையில் இருந்து நறுமணம் பரவியது. அறைக்குள் நிரம்பியிருந்த மயிலையின் மணத்தை அது விஞ்சியது. வீதியில் நடக்கும்போதுகூட வாசனை கரையாமல் ஆடையோடு வந்துகொண்டிருக் கிறது. கபிலரை எவ்வியூரின் மேலே இருக்கும் உச்சிப்பாறைக்கு அழைத்துச் சென்றுகொண்டி ருந்தான் பாரி. நாய்களின் குரைப்பொலி அங்கும் இங்குமாகக் கேட்டுக்கொண்டிருந்தது. அவர்கள் மேல்நோக்கி நடந்துகொண்டிருந்தனர்.

புலர்காலையில் வீதிகளின் உள்ளழகை ரசித்தபடி நடந்துகொண்டிருந்த கபிலர், பாரியிடம் கேட்டார், “யவனத்தில் இருந்து நறுமண எண்ணெய்களை வாங்கி, பூசிக் கொள்ளும் வேந்தர்களையும் பெரு வணிகர்களையும் அறிவேன். ஆனால், அந்த வாசனைகூட இவ்வளவு மணமூட்டுவதாக நான் உணர்ந்தது இல்லை. உனது ஆடையின் வாசனை அளவற்ற நறுமணத்தைப் பரப்புகிறதே...”

“அதிகாலைக் காற்று மணம்கொண்டுதானே மிதந்துவரும். அதனால் இருக்கலாம்.”

“இல்லை. காலடியோசை என்னை எழுப்பியபோது காற்றில் கலந்திருந்த மெல்லிய மணத்தை நான் உணர்ந்தேன். பின்னர் மயிலையின் மணத்தால் அறையே நிறைந்தது. அதை நுகர்ந்த எனது மூக்கு அதைவிடச் சிறப்பான ஒரு மணத்தைக் கண்டறியாதா என்ன?”
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 2 P135
இருவரும் உச்சிப்பாறையின் அருகே வந்தனர். வெளிச்சம் மெள்ளப் பரவிக்கொண்டிருந்தது. பறவைகளின் குரல் கேட்கத் தொடங்கியது. பாரி சொன்னான், ``தாழை மலரில் பெண் பூ, ஆண் பூ இருக்கின்றன அல்லவா? அவற்றுள் ஆண் பூவின் அரும்பு மிகவும் மணமூட்டக்கூடியது. காய்ந்த ஆண் பூவின் இதழ்களை ஆடைகளுக்குள் போட்டுவைத்தால், சிறுபூச்சிகள் ஆடைக்குள் நுழையாது. அதுமட்டும் அல்ல; நல்ல மணமூட்டி யாகவும் அவை இருக்கும். இவை எல்லாம் சொல்லத்தான் கேள்வி. இப்போது நீங்கள் சொல்வ தால்தான் இவ்வளவு மணம் வீசுவது தெரிகிறது. எங்களுக்கு இது பழகிவிட்டதால் தெரியவில்லை” எனச் சொல்லியபடி, பாறையின் மேலே கபிலரைக் கைதூக்கி ஏற்றினான் பாரி.

கைபிடித்து மேலேறியபடி கபிலர் கேட்டார் ``பெண் பூவைவிட அதிக மணம் வீசும் ஆண் பூ ஆடையின் மீது இருக்கிறதா... ஆடையை அணிந்திருக்கிறதா?”

பாரி சற்றே வெட்கப்பட்டு அந்தக் கேள்வியைக் கடந்தான். இருள் அகன்று எவ்வியூரின் மீது வெளிச்சம் பரவிக்கொண்டிருந்தது. கபிலர் உச்சிப்பாறையில் இருந்து நாற்புறமும் பார்த்தார். எவ்வியூரின் பேரழகு அவரது கண்களைச் சுழற்றிக்கொண்டிருந்தது. முழுவட்டமும் சுற்றியபோது நகரின் அழகில் தன்னை மறந்தார். இயற்கையான பாறை அமைப்புகளுக்கு ஏற்ப, மடித்து மடித்துக் கட்டப்பட்ட வீடுகள். இங்கொன்றும் அங்கொன்றுமாகக் கிளைபரப்பி நிற்கும் பெரும் மரங்கள். கரும்பாறைகளை அரணாகக்கொண்டு கட்டி எழுப்பப்பட்டுள்ள அரண்மனை.

அரண்மனை இருக்கும் தென்திசையில் மிகத் தொலைவில், மலை நோக்கிச் செல்லும் சாலையில் தேர் ஒன்று விரைந்துபோவது தெரிந்தது. அதைக் கவனித்த கபிலர் கைநீட்டியபடி பாரியைப் பார்த்தார். பாரி சொன்னான், ``அந்தப் பக்கம் இரு குன்றுகளுக்குப் பின்னால்தான் பாழி நகர் இருக்கிறது. அங்குதான் ஆயுதசாலைகள், பயிற்சிக்கூடங்கள், தொழிலகங்கள் எல்லாம் இருக்கின்றன. எவ்வியூரைவிட அதிகமான மக்கள் அங்கு வாழ்கின்றனர். விருந்தினர்கள் தங்கும் இல்லங்கள் அங்குதான் இருக்கின்றன. பாணர் கூட்டம் வந்து தங்கிச் செல்வது எல்லாம் அந்த இடத்தில்தான்.”

``பாழி நகரில்தான் வேளீர்கள் செல்வங்களை எல்லாம் பாதுகாத்து வைத்துள்ளனர் என்று கேள்விப் பட்டுள்ளேன். அங்குதான் இருக்கிறதா பாழி நகர்?”

கபிலரின் கேள்விகண்டு புன்னகைத்தான் பாரி. எங்கும் பறவைகளின் ஓசை கேட்டுக்கொண்டிருந்தது. கிழக்கு திசையைப் பார்த்தபடி நின்றிருந்த பாரி, மறுபக்கம் திரும்பாமல் கபிலரின் கேள்விகளுக்குப் பதில் சொல்லிக் கொண்டிருந்தான். கபிலரின் கண்கள் சுற்றிச்சுற்றிச் சுழன்றுகொண்டிருந்தன. வெளிச்சம் கொஞ்சம் கொஞ்சமாகக் கூடும்போது, கரும்பாறையின் மீதுள்ள நகரம் தனது மேனியின் எழிலைக் கூட்டிக் கொண்டிருந்தது. மக்கள், வீடுகளில் இருந்து வெளியில் வரத் தொடங்கினர். பறவைகளின் கீச்சுக்குரல்கள் காட்டையே எழுப்பிக் கொண்டிருந்தன. தீபத்தின் உச்சியில் இருந்து அடிபெருத்த அகல்விளக்கைப் பார்ப்பதைப் போன்று இருந்தது அந்த நகரம். இளங்காற்று உச்சிப்பாறையைத் தழுவி மேலே ஏறியபடி இருந்தது.

கபிலர், “காணக் கிடைக்காத காட்சி” என்றார்.

கிழக்கு திசையைப் பார்த்து நின்று கொண்டிருந்த பாரி, அவரின் தோள் தொட்டுத் திருப்பினான். கபிலர் கிழக்குப் பக்கமாகத் திரும்பும்போது பாரி சொன்னான், “இப்போது நீங்கள் காணப்போவதுதான் காணக் கிடைக்காத காட்சி.”
கபிலர் இன்முகத்தோடு கிழக்கு திசை பார்த்தார். எல்லா திசைகளிலும் இருக்கும் அதே அழகோடுதான் எவ்வியூரின் கிழக்கு திசையும் இருந்தது. ‘இதில் கூடுதல் சிறப்பு என்று பாரி சொல்வது எதை?’ என்று கபிலரின் கண்கள் தேடிக்கொண்டிருந்தன.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 2 P135b
கிழக்கு திசையில் ஆதிமலைக்கு நடுவே இருந்த மெல்லியப் பிளவின் வழியே சூரியனின் செந்நிறக் கதிர் மெள்ளக் கசிந்துகொண்டிருந்தது. பார்க்கும் கணத்தில் ஒளிபெருகிக் கூரிய வாள்போல் பாய்ந்து வந்தது. கபிலர் இமைகொட்டாமல் பார்த்தார். எவ்வியூரின் கிழக்குப் பகுதி இருளை இரண்டு துண்டாக்கியது. `காணக் கிடைக்காத காட்சி’ என்று கபிலரின் வாய் முணுமுணுத்துக்கொண்டிருக்கும்போது அந்தக் கூரிய ஒளி வாள் கபிலரின் மார்பில் இறங்கியது. கபிலரின் நாடிநரம்புகள் எல்லாம் சிலிர்த்தன. மெய்மறந்து இரு கைகளையும் மேலே உயர்த்தினார். எவ்வியூரின் அடிவாரம் வரை இரு திசைகளும் அவரது கரங்களின் நிழல் படர்ந்து அசைந்தது. கதிரவனைப் பார்த்து அவர் கைகளை உயர்த்தி வணங்கினார்.

பெருங்குலவை ஒலி எவ்வியூர் முழுக்க மேலெழுந்தது. நான்கு திசை வாயில்களில் இருந்தும் பறைகள் முழங்கின. முழவின் ஓசையில் காடு நடுங்கியது. மக்கள் எல்லோரும் தங்களின் வீடுகளின் மேலேறி குலவையிட்டு அந்த அருங்காட்சியைக் கண்டு மகிழ்ந்தனர். துல்லியமான இடத்தில் கபிலரை நிறுத்திய பாரி, ஈரடி கீழிறங்கி நின்று அண்ணாந்து பார்த்தான். `பேரறிவின் தீச்சுடர் இதுதானா?’ நினைக்கும்போதே மெய்சிலிர்த்தது பாரிக்கு.
கணநேரத்துக்குள் பிளவின் மேல்விளிம்பை சூரியன் தொட்டவுடன் அந்த ஒளி வாள் மறைந்தது. எங்கும் புலர்மஞ்சள் நிரம்பியது. கபிலர் உறைந்துபோய் நின்றார். மக்கள் கூட்டம் கூட்டமாகப் பாறையை நோக்கி வரத் தொடங்கினர். குலவைச்சத்தம் எங்கும் எதிரொலித்தது. பாரி, உச்சிப்பாறையின் மீதேறி கபிலரின் அருகில் வந்தான். 

“நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை, தெற்கு ஓட்டக்காலத்தின் ஆறாம் நாளில் ஆதிமலையில் உள்ள பெருங்கடவின் நடுவில் இருந்து கதிரவன் வேலெழும்பி வருவான். நெருப்பை உருக்கி ஊற்றியதைப்போல கண்ணிமைக்கும் நேரத்தில் நீளும் ஒளி வாள். அரை நாழிகை நேரம் மட்டுமே  நீண்டிருக்கும். கதிரவன் ஒளி வாளை எவ்வியூரின் மேல் இறக்கிய மூன்றாம் நாள் கொற்றவைக் கூத்து தொடங்கும்”  என்று கூறிவிட்டு இறங்கி நடந்தான் பாரி.

திரண்ட மக்கள் கூட்டம் உணர்ச்சிப் பெருக்கோடு குலவையிட்டபடி அவன் பின்னே சென்றுகொண்டிருந்தது. அவர்கள் அரண்மனைக்குள் நுழையும் வரை பார்த்துக்கொண்டிருந்தார் கபிலர்.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 2 P135d
இயற்கையைப் பற்றிய வியப்பு, பாரியின் சொல்கேட்ட கணத்தில் இயற்கை அறிவைப் பற்றிய வியப்பாக மாறியது. வானியல் வசப்படுவதுதான் கணிதத்தின் உச்சம். கணிதம் வசப்படுதல் அறிவின் உச்சம். நோக்கறிவு கொண்டு விண்மீன்களைக் கணித்தலும்,  கதிரவனின் நகர்வை அளத்தலும் மனிதனின் அபாரச் சாதனை. இந்தச் சாதனைகளைச் சொந்தமாக்கிவைத்துள்ளவர்கள் மூவேந்தர்கள். வானியலையும் கணிதத்தையும் தலைமுறை, தலைமுறையாகக் கற்று ஆளும் ‘கணியர்கள்’ அவர்களிடமே இருக்கின்றனர். அதனால்தான் நீரும் நிலமும் வானும் வேந்தர்களுக்கு வசப்பட்டிருக்கின்றன. ஆனால், இந்தப் பேரறிவு, சின்னஞ்சிறு வேளீர் கூட்டத்துக்கு எப்படி வசப்பட்டது?

ஒரு வாரத்துக்கு முன்பே கொற்றவைக் கூத்து தொடங்கப்போவது பற்றி வேட்டூர் பழையன் சொன்னது கபிலருக்கு நினைவு வந்தது. ‘நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை அரை நாழிகை நேரம் மட்டுமே நிகழும் ஒளி  வாளின் கோலக்காட்சியை நாளும் நேரமும் தவறாமல், எப்படி இவர்கள் கணக்கிட்டனர்?’ அடுத்தடுத்து எழுந்த கேள்விகள் கபிலரைத் திக்குமுக்காடச் செய்தன.

கதிரவன் தகதகத்து மேலேறிக்கொண்டிருந்தான். திகைப்பில் இருந்து மீளா கபிலர் சிறிது நேரத்துக்குப் பின்னர் பாறையைவிட்டு கீழே இறங்கினார். அவரை அழைத்துச்செல்ல வீரர்கள் நின்றிருந்தனர். ஊரின் தென்திசைக்குப் போய்விட்டு அரண்மனைக்கு வருவதாகச் சொல்லி அவர்களை அனுப்பினார்.

அவரைச் சந்திக்கக் காத்திருந்த மக்களுடன் ஆங்காங்கே நின்று பேசியபடி கீழே இறங்கிக்கொண்டிருந்தார். ஒவ்வொருவரும் அவருடன் பெரும் மகிழ்வைப் பகிர்ந்து கொண்டனர். தென்திசையின் அடிவாரம் வந்துசேர்ந்தவர், அரண்மனையை நோக்கி நடக்கத் தொடங்கினார்.

பாண்டிய நாட்டுப் பெருங்கணியன் திசைவேழரின் நினைவு வந்தது. நீளும் நிழல்கொண்டு உலகை அளக்கும் அவரை கபிலர் தன் ஆசான்களில் ஒருவராக எண்ணுவார். கண்சிமிட்டாத விண்மீனைப்போல வானத்தைப் பார்த்துக்கொண்டே இருக்கும் வானியலாளர்; தலைமுறை தலைமுறையாகச் சேகரித்த அறிவுச்சேகரத்தின் உறைவிடம். கபிலர், அந்த வான் உழவனின் தாள்பணிந்து பாடிய கவிதைகள் ஏராளம். அவர்தம் முன்னோர்கள் கண்டறிந்து பெயர்சூட்டிய வெள்ளியைக் கண்டுதான் இன்று நாளும் நேரமும் கணிக்கப்படுகின்றன.
 
வானம், மிதந்துகொண்டிருக்கும் ஒரு மாயத்தட்டு; கற்பனைக்கு எட்டாத பேருலகு. மனிதன் தனது அறிவால் அதைக் கணிப்பது என்பது நம்ப முடியாத அதிசயம். தரத்தரவென தனது கையை இழுத்துக்கொண்டுபோய் இயற்கையின் கூர்முனையின் எதிரில் துல்லியமாக நிறுத்திவிட்டான் பாரி.

‘பெருங்கணியன் திசைவேழர் இந்த நாளில் தன்னோடு இருந்திருந்தால் எப்படி இருந்திருக்கும்? பாரியைக் கட்டி அணைத்திருப்பார். நாட்டுத் தலைவர்கள் யாருக்கும் இல்லாத நாள் அறிவும் கோள் அறிவும் பாரியிடம் இருப்பதைக் கண்டு திகைத்திருப்பார்.

திசைகள் மட்டுமே திகைப்பை ஏற்படுத்தக்கூடியவை. திக்குத்தெரியாத திகைப்பை நிலமும் கடலும் வானும் ஒவ்வொரு கணத்திலும் உருவாக்கும். அந்தத் திகைப்பை வெல்லத் தெரிந்தவர்களே திசையாளும் கணியர்கள். எனவே, அவர்கள் மனிதர்களைக் கண்டு ஒருபோதும் திகைக்க மாட்டார்கள். ஆனால், இன்று பாரியின் செய்கையை பெருங்கணியன் கண்டிருந்தால், திகைக்காமல் இருந்திருக்க மாட்டான்’ என எண்ணியபடி இடப்புற வீதியின் வழியே திரும்பி நடந்தார் கபிலர்.

எதிர் வந்த பெண் ஒருத்தி கை நீட்டி அவரின் பாதையை மறித்தாள். விலகிப்போக முயல்கிறாளோ என நினைத்த கபிலர் வலப்புறம் நகர்ந்தபோது, அவள் இன்னொரு கையையும் நீட்டி வழியை அடைத்தாள்.

பெருங்கணியன் இரு பக்கங்களும் கைகளை விரித்து நீளும் நிழலின் நகர்வுகளைத் தனக்குச் சொல்லிக்கொடுத்தது நினைவுக்கு வந்தது. உள்மனதில் கணியனின் உருவம் படிந்திருக்க, அந்தக் கையை விலக்கி நடக்க முயன்றார். ஆனால், அந்தப் பெண்ணின் கைகள் அவருக்கு இடம் தரவில்லை. மறித்த கைகள் தட்டி நின்றன. 

அப்போதுதான் கணியனின் நினைவில் இருந்து மீண்டு அந்தப் பெண்ணை உற்றுப் பார்த்தார் கபிலர். நேர்கொண்டு பார்த்த அந்த இளம்பெண்ணின் கண்கள் கோபத்தைக் கக்கின.

“ஏனம்மா வழி மறிக்கிறாய்?”

கபிலரின் கண்களையே கூர்ந்து பார்த்தாள்.

``பாரியிடம் நட்புக்கொள்ளும் தகுதியுண்டோ உம்மிடம்?”

கபிலர் அதிர்ந்துபோனார். நெஞ்சில் கூர்மைகொண்டு இறங்கியது சொல்.

``ஏனம்மா இப்படிக் கேட்கிறாய்... என்ன தவறு இழைத்தேன் நான்?”

மெளனத்தின் வழியே கபிலரின் அதிர்ச்சியை அதிகப்படுத்தினாள். எந்த வகையிலும் அவளின் கோபத்துக்கான காரணத்தை கபிலரால் தொடர்புபடுத்திக்கொள்ள முடியவில்லை.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 2 P135c
``எவ்வளவு பதற்றமான சூழ்நிலையிலும் கார்காலத்து இரவில், இங்கு இருந்து பாழி நகருக்குத் தேர் ஏறிச் செல்ல மாட்டான் பாரி. தெரியுமா உமக்கு?”

கபிலர் பதில் எதுவும் சொல்லாமல் அவளின் கண்களையே பார்த்தார். அவள் தொடர்ந்தாள்.

“கார்காலத்து இரவுகளில் மான்கள் இணை சேரும். தனது தேரின் ஒலி அவற்றின் இணக்கத்தைக் குலைத்துவிடும் என்பதால், தேரில் செல்ல மாட்டான். ஆனால், உமது செயல் அதற்கு நேர் எதிராக இருக்கிறது.”

இளம்பெண் உதிர்த்த சுடுசொல் கண்டு அஞ்சினார் கபிலர்.

“யான் செய்த பிழை என்ன மகளே?”

அவளின் கண்கள் குளமாகின.

``அழகிய பூக்காடாக இருந்த எம் காதலில் புயல்காற்று வீசச் செய்துவிட்டீர்.”

``கலங்கி நிற்கும் உனது கண்கள் என்னைப் பதறவைக்கின்றன. எனக்கு விளங்கும்படி சொல்.”

“உங்களால்தான் அவன் புகழின் உச்சியை அடைந்திருக்கிறான். எனது கைகள் தழுவிக்கிடந்த அவனது தோளின் மீது இப்போது பாரியின் கை கிடக்கிறது. புகழால் நிலை தடுமாறிக் கொண்டிருக்கிறது எனது காதல்.”

“நீ யாரைச் சொல்கிறாய்... உன் காதலன் யார்?”

“நீலன்.”

கபிலர் பெருமூச்சு விட்டார். சின்னதாக ஒரு சிரிப்பு உதட்டின் ஓரம் பரவியது. அவளோ வேகம் குறையாமல் தொடர்ந்தாள்.

வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 2 P135e“சிறு கல்லைத் தாண்டுவதைப்போல இருபெரும் குன்றுகளைத் தாண்டி, நினைத்தபோது எல்லாம் என்னைப் பார்க்க வந்தவன், அடுத்த தெருவில் நான் இருப்பது தெரிந்தும் இன்னும் என்னை வந்து பார்க்கவில்லை. எந்தப் பெண்ணைப் பார்த்தாலும் அவனைப் பற்றித்தான் பேசுகிறாள். என் நீலனின் பெயர்கொண்டே என் நெஞ்சைச் சுடுகிறார்கள்.”

“உன் காதலன் பற்றி பெருமை பேசினால் நீ மகிழத்தானே வேண்டும். ஏன் கவலைகொள்கிறாய்?”

உடைந்து அழுதாள் அவள்.

“இந்தக் கேள்வியை நானே பலமுறை கேட்டுவிட்டேன். என்னால் விடை காண முடியவில்லை. அவனது உறுதியை நன்கு அறிந்தவள் நான். ஆனாலும் கைப்பற்ற அவனது கண்பார்வை கிடைக்காமல் தவிக்கிறேன்.”

குறுக்கிட்ட கைகளை மடக்கி பக்கத்தில் இருந்த வீட்டின் திண்ணையில் உட்கார்ந்தாள். நெஞ்சொடிந்து விழுவதைப்போல்தான் அது இருந்தது.

“எங்களின் குன்று எவ்வளவு அழகானது தெரியுமா? யார் கண்பட்டதோ தெரியவில்லை, பொழுது எல்லாம் எங்கள் காதல் செழித்து வளர்ந்த அந்த நிலத்தின் அடிவாரத்தில், ஒரு தேர் வந்து நின்றது.”
கபிலர், சற்றே சுதாரித்துப் பார்த்தார்.

“எனது மடி மீது தலைசாய்த்து இருந்தான். நான்தான், `யாரோ ஒருவர் தேரில் இருந்து இறங்கி வேட்டுவன் பாறையில் கால் பதிக்கிறார்’ என்றேன். எனது காதலின் அமைதியை எனது சொல்கொண்டே கெடுத்துவிட்டேன்” சொல்லிக்கொண்டிருக்கும்போது கண்ணீர் வழிந்தோடியது.

துடைத்தபடி தொடர்ந்தாள்... ``குயில்கள் கூவும் அந்த மாமர நிழலில், இதழ்விட்டு நழுவிப்போன அவனது மறுமுத்தத்துக்காக அன்று முழுவதும் காத்திருந்தேன். வரவில்லை. மறுநாள் அவன் ஊருக்குப் போனேன். `வந்திருப்பவருக்குக் காலில் அடிபட்டுள்ளது. நீ எவ்வியூருக்குப் போ. இரண்டு நாளில் நான் அவரை அழைத்துக்கொண்டு வந்துவிடுகிறேன். கொற்றவை விழா முடியும் வரை நாம் அங்கு மகிழ்ந்திருப்போம்’ ” என்று சொல்லி அனுப்பினான்.
கபிலர், தனது கதையைத் தானே கேட்டுக்கொண்டிருந்தார். ‘எனது காலடிக்குப் பின்னால் ஒரு காதல் நடந்து வந்திருக்கிறது. இவ்வளவு அழகிய இளம்பெண்ணின் இதழ்முத்தம் விலக்கிவந்தவனா, தசை பிறண்ட பின்னும் என்னைத் தாங்கிவந்தான்?’ - நீலன் மீதான மரியாதை இன்னும் கூடியது.

அவள் தொடர்ந்தாள்... “எவ்வியூருக்கு வந்த பின்பாவது நான் வாய் பொத்தியிருக்க வேண்டாமா? உனது காதலன் வருவானா எனக் கேட்ட எனது தோழியிடம், ‘கபிலர் என்று ஒருவர் கால் ஒடிந்துகிடக்கிறார். அவரை அழைத்துக்கொண்டு வர வேண்டுமாம். இரண்டு நாட்கள் ஆகும் என்று சொல்லி அனுப்பியுள்ளான் என்றேன்.”

கபிலருக்கு அவளை, ‘மகளே...’ என அணைத்துப் பிடித்துக் கதைகேட்க வேண்டும்போல் இருந்தது.

“எல்லாம் எனது போதாத காலம். எதைச் சொன்னாலும் அது பிரச்னையாக மாறித்தான் போகும். நான் சொன்ன சொல் பாரியின் காதுக்கு எட்ட, உடனடியாக என்னை அரண்மனைக்கு அழைத்துச்சென்று விசாரித்தனர். நான் கபிலருக்கு கால் ஒடிந்ததால், எனது காதலின் நாள் ஒடிந்த கதையைச் சொன்னேன். அவ்வளவுதான் இரவோடு இரவாக பாரியே புறப்பட்டு புலிவால் குகைக்குப் போய்விட்டான்.”

கபிலருக்கு ஆச்சர்யம் தாங்கவில்லை. தன்னை ஒருகை பிடித்து நீலன் அழைத்து வந்ததைப்போலவே, மறுகை பிடித்து இவளும் அழைத்துவந்திருக்கிறாளே என மகிழ்ந்து கிறங்கினார்.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 2 P135f
“போதாத காலத்தைப் புலம்பித்தான் தீர்க்க வேண்டும் என்பார்கள். கபிலரை, பாரி தனது தோளில் ஏற்ற, என்னைத் தனது நெஞ்சில் ஏற்றிவைத்திருந்தவன் எங்கு சென்றானோ தெரியவில்லை.”

கண்ணீரைத் துடைத்தபடி சொன்னாள்... “ஊரே பேசுகிறது, நேற்று இரவு அவனுக்கு அறுபதாங்கோழிக்கறி விருந்து படைக்கப் பட்டதாம். உள்ளங்கையில் கஞ்சி காய்ச்சி அவனது உதடு விலக்கி ஊட்டிவிட்ட எனது அன்புக்கு இணையாகுமா இந்த உலகு? சொல்லுங்கள் அந்தக் கொடியவனை என்ன செய்யலாம்?”

கணநேரமும் தாமதிக்காமல் பதில் சொன்னார் கபிலர், “அது தெரியாமல்தான் நானும் விழித்துக்கொண்டிருக்கிறேன். நான் தங்கியுள்ள இடத்தில் என்னோடுதான் அவனும் தங்கியுள்ளான். நேரம் கிடைக்கும்போது எல்லாம், “மயிலா… மயிலா…” என்று எவளோ ஒருத்தியின் பெயரைச் சொல்லிப் புலம்பிக்கொண்டே இருக்கிறான். அந்தப் பெண்ணுக்கு நள்ளிரவு பூக்கும் மயிலை மலர் மிகவும் பிடிக்குமாம். முழுநிலா நாளில் மயிலம் பூச்சூடி, அவள் மீது காதல்கொண்டானாம். இன்று எப்படியாவது அவளைப் பார்க்க வேண்டும் என்பதற்காக எனக்குத் தெரியாமல், நான் கேட்டதாக அரண்மனையில் சொல்லி, மயிலை மலரைக் கொண்டுவந்து வைத்திருந்தான். இன்று காலை அவளுக்குச் சூட்டப்போயிருப்பான் என்று நினைக்கிறேன்.”

வெட்கமும் ஆசையும் பீறிட்டு மேலெழும்பியது. ஆடைகொண்டு கண்ணீர் துடைத்தாள். அதையும் மீறிச் சிந்தியது சிரிப்பு. மகிழ்வை மறைக்க மெனக்கிட்டாள். முடியவில்லை. கண்ணீர் வெடித்துக் காதலாக மலரும் அந்த அதிசயத்தை அருகே இருந்து ரசித்தபடி அவளின் கரம்பிடித்தார் கபிலர்.

“விடுமய்யா கையை, இன்னொரு நாளும் உம்மால் வீணாகிவிடக் கூடாது” எனச் சொல்லியபடி, பிடித்த கையை உதறிவிட்டு ஓடினாள் மயிலா!

- பறம்பின் குரல் ஒலிக்கும்...

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4624
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Mon 7 May 2018 - 18:56

வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 2 P99
ரு பொன்வண்டு கூட்டுக்குள் நுழைவதைப்போல் இருந்தது. விளிம்பில் கருமைகொண்டு நீண்டுகிடந்த மரக்கிளைகள், அந்தப் பொன்வண்டின் எண்ணற்ற கால்கள் எனக் காட்சியளித்தன. மாளிகையின் மேல்மாடத்தில் நின்றபடி, மேற்குத் திசையில் மலையில் மறையும் சூரியனைப் பார்த்துக்கொண்டிருந்தார் கபிலர். கண்கள், ஊர்ந்து இறங்கும் பொன்வண்டைப் பார்த்துக்கொண்டிருந்தாலும், மனம் முழுவதும் காலைச் சூரியனே நிறைந்திருந்தான்.  அருகில் யாரோ வரும் காலடி ஓசை கேட்டுத் திரும்பினார்.

``மறையும் கதிரவனிடம் ஒளி வாளை ஒப்படைத்துக்கொண்டிருக்கிறீர்களா?”- கேட்டுக்கொண்டே இன்முகத்தோடு வந்தான் பாரி. இருவரும் பேசியபடியே இருக்கையில் அமர்ந்தனர்.

பாரி கேட்டான்... “காலையில் உச்சிப்பாறை ஏறியதும் மேற்குத் திசையைப் பார்த்தபடி, ‘காணக்கிடைக்காத காட்சி’ எனச் சொன்னீர்களே... எதைச் சொன்னீர்கள்?”

சற்றே யோசித்த கபிலர், “அதுவா… மேலே ஏறியதும் முதலில் கண்ணில்பட்டது கோட்டைச்சுவரே இல்லாத இந்த நகர அமைப்புதான். இப்படி ஒரு தலைநகர் உலகில் எவ்வியூர் மட்டுமாகத்தான் இருக்கும்.”

``எதிரிகளிடம் இருந்து தற்காத்துக்கொள்ள, கோட்டைச்சுவர் எதுவும் எங்களுக்குத் தேவை இல்லை. ஏனென்றால், எங்களின் ஒத்துழைப்பும் உதவியும் இல்லாமல், யாரும் இந்தப் பெரும்காட்டையும் மலைமுகடுகளையும் கடந்து இங்கு வந்துவிட முடியாது அல்லவா?”

பாரியின் கேள்வியை ஆமோதித்தார் கபிலர்.

``அதே நேரம் காட்டு உயிரினங்களிடம் இருந்து உங்களுக்குப் பாதுகாப்பு தேவை.அதற்காகவாவது சுவர் எழுப்பியிருக்கலாமே?”

``அதன் பொருட்டுத்தான் எழுப்பியுள்ளோம்.”

``எங்கே எழுப்பியிருக்கிறீர்கள்... என் கண்களுக்குத் தெரியவில்லையே. எதுவும் மாயச்சுவர் கட்டியுள்ளீர்களா?”

பாரி சிரித்தான்.

``உங்களின் கண்களுக்குத் தெரிகிறது. ஆனால், அதுதான் சுவர் என்பதை உங்களின் எண்ணம் ஏற்க மறுக்கிறது.”

கபிலர், உட்கார்ந்த இடத்தைவிட்டு எழுந்து பார்த்தார். அவரைக் கவனித்தபடி பாரி கேட்டான்... “இந்தக் காட்டில் எத்தனை வகையான விலங்குகள் இருக்கின்றன என்று யாருக்குத் தெரியும்? காட்டுவிலங்குகளால் உடைத்து நொறுக்கவோ, தாவிக் கடக்கவோ முடியாத ஒரு கோட்டை மதிலை மனிதனால் கட்டிவிட முடியுமா? கார்காலத்தில் மூன்று `குளகு’ தின்ற ஒரு பெண் யானை, எவ்வளவு பெரிய கற்கோட்டையையும் தகர்க்கும். `அதிங்கத்தை’த் தின்ற ஆண் யானைக் கூட்டம் உள்நுழைந்தால், பெரும்மலையும் கிடுகிடுக்கும். மரமேறி உயிரினங்களால் தாவிக் கடக்க முடியாத தடுப்புச்சுவரை எழுப்ப முடியுமா? இந்த மலைத்தொடர் வடதிசையிலும் தென்திசையிலும் எவ்வளவு தொலைவு நீண்டுகிடக்கிறதோ, யார் அறிவார்? இடையில் ஒரு சிறு பகுதியில் பறம்பு நாடு இருக்கிறது. எண்ணிக்கையில் அடங்காத விலங்குக் கூட்டங்கள் நாள்தோறும் இடமும் வலமுமாக எங்களைக் கடக்கின்றன. இவற்றிடம் இருந்து பாதுகாக்க எத்தனையோ முறைகளைக் கையாண்ட எம் முன்னோர்கள், இறுதியாக இந்த நாகப்பச்சை வேலியை பெரும்கோட்டையாக எழுப்பினர்.”
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 2 P99a
கபிலர் சுற்றும் முற்றும் பார்த்தார். எவ்வியூரின் கடைசி வீடுகளும் தெருக்களும் முடிவடைந்த சிறிது தொலைவில் இருந்து காடு ஆரம்பம் ஆகிறது. இதில் வேலியோ, சுவரோ எங்கு இருக்கிறது என யோசித்தபடி நின்றார்.

பாரி சொன்னான்... “ஊரின் எல்லை முடிவடைந்ததும் காடு தொடங்குகிறது.இடையில் வேலி எங்கே இருக்கிறது என்று நினைக்கிறீர்களா? நீங்கள் பார்க்கும் அந்தக் காட்டின் தொடக்கம் இயற்கையானது அன்று. அந்தத் தாவரங்கள், தாமாக முளைத்தவை அல்ல; நாங்கள் அறிந்த இந்தப் பெரும் உலககெங்கிலும் இருந்தும் கொண்டுவந்து, இங்கு முளைக்கவைத்தவை.”

கபிலர், பாரியைக் கூர்ந்து பார்த்துக்கொண் டிருந்தார்.

“காட்டில் உள்ள ஒவ்வோர் உயிரும் தின்னக்கூடிய தாவரங்களும் உண்டு; தின்னக் கூடாத தாவரங்களும் உண்டு. நுகரக்கூடியதும் நுகரக் கூடாததுமான பச்சிலைகள் உண்டு. பற்றக்கூடியதும் பற்றக் கூடாததுமான செடி, கொடிகள் உண்டு. நாங்கள் வன உயிரினங்கள் நுகரவும் நெருங்கவும் பற்றவும் முடியாத தாவரங்களைக்கொண்டு, ஒரு பெரும் வேலி அமைத்துள்ளோம். தலைமுறைத் தலைமுறையாக எங்கள் தாவர அறிவின் சேகரம், இந்த நாகப்பச்சை வேலிதான்.”
இவ்வளவு எளிதான வார்த்தைகளால் எவ்வளவு பெரிய செய்தியைச் சொல்லிக் கொண்டிருக்கிறான் பாரி, நம்ப முடியாமல் நின்றுகொண்டிருந்தார் கபிலர்.

``இதை எப்படி மனிதனால் செய்ய முடிந்தது?”

“அதைச் செய்ய முடிந்ததால்தான், நாங்கள் இங்கு வாழ்கிறோம். காற்றுகூட உள்நுழைய முடியாத இந்தக் கானகத்தில் ஓரிரு வீரர்கள் காவல் காக்க, நாள்தோறும் தூங்கி, உயிரோடு எழுகிறோம். எங்கள் குழந்தைகள் மறுநாள் காலை சிரித்துக்கொண்டு விளையாடுகின்றனர். எங்கள் இளைஞர்களின் இதழ்களில் முத்தத்தின் ஈரம் ஊறிக்கொண்டே இருக்கிறது.”

``இது எப்படி…?”  - நா தயங்கி வெளிவந்தன கபிலரின் வார்த்தைகள்.

``வெறிமணம்கொண்ட செடி, கொடி, மரங்களால் சூழ்ந்துகிடக்கிறது இந்த வேலியின் வெளிப்புறம். நடுப்பகுதியோ, புறவைரமும் அகவைரமும் பாய்ந்தோடும் மரங்கள் ஒன்றை ஒன்று பின்னிக்கிடப்பதைப்போல நன்கு திட்டமிட்டு வளர்க்கப்பட்டுள்ளது. வெளிவிஷம், மற்றும் உள்விஷத் தாவரங்களால் தழைத்துக் கிடக்கிறது இதன் முதல் பகுதி. இந்த மூன்று பகுதிகளின் இடைவெளிகளிலும் நஞ்சு ஏறிய அலரி வேர்கொண்டு சுருக்கு வலை பின்னப்பட்டுள்ளது.

நச்சுப் பிசின் வழியும் மருவு, தொடரிப் பட்டைகள் இடைவிடாதிருக்கும். ஒன்றின் மேல் ஒன்றாக வைத்து பின்னிப்பிணைந்து உருவாக்கப்படும் பிணையல், மாலையைப்போல தாவரப்பச்சிலைகளோடு பிணைந்து கட்டிக் கிடக்கும். அதன் கணுக்கள்தோறும் வேர்களை உண்டாக்கி, அந்தப் பச்சிலைச்செடிகள் தழைத்தபடி இருக்கும்.

இந்த வேலிக்குள் உருவாக்கப்பட்டுள்ள அனைத்துத் தாவரங்களின் மீதும் குறுக்கும் நெடுக்குமாகப் படர்ந்துகிடக்கும் எண்ணிலடங்காத படர்கொடிகளும் சுற்றுக்கொடிகளும்தான், இந்த நாகப்பச்சை வேலியின் உயிர்நாடி. வலப்புறம் சுற்றும் கொடியும் இடப்புறம் சுற்றும் கொடியும் ஒன்று மாற்றி ஒன்றாகப் படர்ந்துகொண்டே இருக்கின்றன. சுருண்டு எழும் அவற்றின் ஊசிநாவுகள் எதிரெதிர் திசையில் ஒருசேரப் பின்னியபடியே மேலே எழுகின்றன. உதிர்ந்து கொண்டிருக்கும் இலையைக்கூட இந்த வேலி அந்தரத்தில் நிறுத்திவிடும்.

விலங்கின் நாசியை வெகுதொலைவிலேயே இந்த வெறிமணம் தாக்கும். அதையும் கடந்து உள்நுழையும் உயிரினம் விஷமுள்ளாலோ, நச்சுக்கணுக்களாலோ, நாவில்படும் பச்சிலையாலோ, சற்றே மயங்கி அமரும். அந்த கணத்தில் அதன் மயிர்க்கால்கள் ஒவ்வொன்றையும் பற்றி உள்ளிழுக்கின்றன சுருட்கொடிகள். அந்த உயிரினத்தின் இயக்கத்தை மிக விரைவாக தனது கட்டுக்குள் கொண்டுவந்துவிடுகிறது இந்த நாகப்பச்சை வேலி. அதன் பிறகு அந்த விலங்கு அமர்ந்த இடத்தில் உள்ள தாவரமும் கறையான்களும் எறும்புகளும் சிலந்திகளும் சற்றே கூடுதல் செழிப்புக்கொள்கின்றன.”

பாரி சொல்வதை வாய் பிளந்து கேட்டுக்கொண்டிருந்தார் கபிலர்.

“தாமரை இதழை ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி, அதன் மேல் ஊன்றப்படும் வேலம் முள், முதல் இதழுக்குள் இறங்கும் நேரம்தான் கணப்பொழுது. மூன்றாம் இதழைக் கடக்கும் நேரம்தான் இமைப்பொழுது, ஆறாம் இதழுக்குள் நுழையும் நேரம்தான் விநாடிப்பொழுது. எந்த ஒரு விலங்கின் இயக்கத்தையும் வேலம் முள் ஆறாம் இதழைக் கடக்கும் பொழுதுக்குள் நிறுத்திவிடும் ஆற்றல் இந்த நாகப்பச்சை வேலிக்கு உண்டு என்று எம் முன்னோர் கூறுவர்.”

இயற்கையைப் பற்றிய பேரறிவின் முன்னர், தூசி என நின்றுகொண்டிருப்பதாக கபிலர் உணர்ந்தார். மேற்கு மலையின் விளிம்பில் பொன்வண்டு தனது கடைசிக்கால்களை உள்ளிழுத்துக்கொண்டிருந்தது. பாரி, இறங்கும் சூரியனையே பார்த்துக்கொண்டிருந்தான்.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 2 P99b
ஆச்சர்யம் விலக்கி, சற்றே ஆர்வம் மேலிட கபிலர் கேட்டார், ``எந்த வெறிமணம் யானைகள் கூட்டத்தை விரட்டக்கூடியது?”

ஒளி உள்வாங்கும் அழகைப் பார்த்தபடி பாரி சொன்னான்.

“ஏழிலைப் பாலை.”

கபிலரின் கண்கள் பூத்தன.

“அந்த மரத்தின் வாடையை நுகரும் யானைகள் காதத் தொலைவுக்கு விலகி ஓடும்” என்றான் பாரி.

“அந்த மரங்கள் எங்கே இருக்கின்றன? நான் அருகில் சென்று பார்க்க வேண்டும்.”

பாரியின் உதட்டில் சின்னதாக ஒரு சிரிப்பு ஓடி மறைந்தது.

`சிரிக்கக்கூடிய கேள்வியையா நான் கேட்டுவிட்டேன்' என்று யோசித்தபடி பதிலுக்குக் காத்திருந்தார் கபிலர்.

வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 2 P99c``ஒவ்வொரு திசைக்கும் ஒரு மரம் நின்றுகொண்டிருக்கிறது.”

``எறும்புக் கூட்டங்கள்போல் யானைக் கூட்டங்கள் திரியும் இந்தக் காட்டில், திசைக்கு ஒரு மரம் போதுமா?”

“அதற்கும் அதிகமாக வைத்தால் எவ்வியூர் தாங்காது” என்றான் பாரி.

கபிலருக்கு, பதில் விளங்கவில்லை.

பாரி சொன்னான்... ``அந்த மரத்தால் வேறு தொல்லைகள் இருக்கின்றன. மதயானை ஏழிலைப் பாலையின் வாசனையை நுகர்ந்துவிட்டால், வெறிகொண்டு வந்து அந்த மரத்தை அடியோடு பிடுங்கி எறிந்து நாசம் செய்துவிடும்.”
``பின் எப்படிச் சமாளிப்பீர்கள்?”

“அதன் பிறகு மனித முயற்சிதான். ஆயுதங்களும் பறை ஒலிகளும் தீப்பந்தங்களும்தான் கைகொடுக்கும். திசைக்கு ஒன்று என்றால் வந்த திசையில் இருக்கும் அந்த ஒன்றோடு அதன் ஆத்திரம் தணிய வாய்ப்பு இருக்கிறது அல்லவா? இப்படி ஒரு நிகழ்வு மூன்று தலைமுறைகளுக்கு முன்னர் நடந்ததாகச் சொல்வார்கள்.”

ஆர்வத்தில் கேட்ட கேள்வி அதிர்ச்சியைப் பதிலாகக் கொடுத்தது. கணப்பொழுதுக்குள் மாறிச் செல்லும் உணர்வுகளின் வழியே பயணமாகிக்கொண்டிருந்தது கபிலரின் எண்ணம்.

“அதுமட்டும் அல்ல. இன்னொரு பிரச்னையும் உண்டு. அதுதான் மிக முக்கியமானதும்கூட.”

“என்ன அது?”

“அந்த மரத்தின் வாசனை, காமத்தைத் தூண்டும். கோல்கொண்டு நெருப்பைக் கிளறுவதைப்போல, அது வாசனையைக்கொண்டு காமத்தைக் கிளர்த்திக்கொண்டே இருக்கும்.”

சற்றே இடைவெளிவிட்டு பாரி சொன்னான், “எவ்வியூருக்குள் வேறு வேலையும் நடக்க வேண்டும் அல்லவா? அதனால்தான் திசைக்கு ஒரு மரம் மட்டும் வைத்திருக்கிறோம்” - பாரியின் சொல்லைத் தாண்டி வெளிவந்தது சிரிப்பு.
கபிலரும் சேர்ந்து சிரித்தார். நினைவு வந்ததும் சட்டென சிரிப்பை அடக்கிவிட்டுக் கேட்டார், “அதனால்தான் மரத்தின் அருகில் சென்று நான் பார்க்க வேண்டும் என்று கேட்டதற்கு  நீ சிரித்தாயா?”

அவ்வளவு நேரம் அடக்கமாக வெளிப்பட்ட சிரிப்பு இப்போது பீறிட்டது. சிரித்தபடியே ‘ஆம்’ என, தலையை மேலும் கீழுமாக ஆட்டினான் பாரி.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 2 P99e
கபிலர் சற்றே வேகமாக, “ஏழிலைப் பாலையை அடியோடு வீழ்த்தும் மதயானை மனிதரிலும் உண்டு.”

சட்டென பாரி சொன்னான்... ``காமம் கண்டு பயந்த சொல் இது.”

``பயம் இல்லை என்று சொல்ல நான் பொய்யன் அல்ல. ஆனால், பயப்பட மாட்டேன் எனச் சொல்ல பொய் தேவை இல்லை.”

``அதுதான் புலவன். சொல் சுடும்போது சொல்லைச் சுடுவான் என்று சொல்லக் கேட்டுள்ளேன். இன்றுதான் சொல்லிக் கேட்கிறேன்.”

நாழிகை மணியோசை எவ்வியூர் முழுவதும் எதிரொலித்தது. சூரியன் முழுவதும் விழுந்தவுடன் இருள், காட்டின் எல்லா திசைகளில் இருந்தும் இறங்கி வந்துகொண்டிருந்தது. பந்தங்களை ஏற்றும் வீரர்கள், கையில் நீண்ட குழல்போன்ற விளக்குகளுடன் ஓர் இடம் நோக்கிக் குவிந்துகொண்டிருக்கின்றனர்.

பேச்சு எதிர்பாராத கணத்தில் காமத்துக்குள் போனதைப் பற்றி யோசித்தபடி கபிலர் கூறினார்... “இரவு வரும்போதே ஏதாவது ஒரு வடிவில் காமத்தையும் அழைத்து வந்துவிடுகிறதே.”

பாரி அசட்டுச் சிரிப்போடு சொன்னான்... “ஏழிலைப் பாலைக்கு இரவு ஏது... பகல் ஏது?”

பறம்புமலை ஏறத் தொடங்கியதில் இருந்து தனது சொல் முறியும் ஓசையை விடாமல் கேட்டுக் கொண்டிருந்தார் கபிலர்.

பாரி சொன்னான்... “ஏழிலைப் பாலையின் அடிவாரத்துக்கு வள்ளியை அழைத்து வந்ததுதான் முருகன் செய்த மிகப்பெரிய தந்திரம். இல்லை என்றால், வள்ளியை ஒருநாளும் அவனால் இணங்க வைத்திருக்க முடியாது.”
``அவனும் குறுக்குவழியைத்தான் கையாண்டானா?”

சற்றே தயக்கத்துடன், “ஆம்” எனச் சொல்லியபடி தொடர்ந்தான் பாரி. “முருகன் வேட்டுவர் குலம்; வள்ளியோ கொடிக்குலம். செடி, கொடிகளை அறிந்தவர்கள் வேட்டையாடியவர்களைவிட மனநுட்பத்தில் முன்னேறியவர்கள் அல்லவா? வலிமையைவிட நுட்பத்துக்குத்தானே ஆற்றல் அதிகம். அதனால்தான் முருகனால் வள்ளியின் மனதில் எதைச் சொல்லியும் இடம்பிடிக்க முடியவில்லை.

காட்டை அழித்து, பயிரிடு முன் அந்த நிலத்தில் காமம் நிகழ்த்தி மனிதக் குருதி படிந்த தாய்நிலத்துக்குள் முதல் பயிரிடுதலைத் தொடங்கிய வர்கள்தான் கொடிக்குலத்துக் காரர்கள். முதலில் நட்ட வள்ளிக் கிழங்கைத் தோண்டி எடுக்கும்போது இடுப்பு வலிகண்டு, அந்த நிலத்திலே பிறந்தாள் அந்தப் பெண். விதைத்த இடத்திலே முளைத்தவள் அவள். அதனால் அந்தச் செவ்வள்ளிக் கிழங்கின் பெயரையே அந்த அழகிய பெண்ணுக்குச் சூட்டினர். வள்ளிக்கிழங்கும் வஞ்சிக்கொடியுமே பெண்ணாக மாறிய பேரெழில் கொடிக்குலத்துக்கு உரியது.

செடி, கொடிகளை அறிந்தவர்களை எளிதில் ஈர்க்க முடியாது. அவர்கள் கணம்தோறும் உயிரின் வளர்ச்சியைப் பார்த்து மகிழ்ந்தவர்கள். வண்ணங்களையும் வாசனைகளையும் அவர்கள் அளவுக்கு அறிந்தவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். அவர்களின் கவனத்தைக் கவர்வதோ, காதலைப் பெறுவதோ எளிது அல்ல. வேறு வழியே இல்லாமல்தான் ஏழிலைப் பாலையின் அடிவாரத்துக்கு வள்ளியை அழைத்துச் சென்றான் முருகன்.”

கபிலரின் கண் முன் காலமும் காதலும் கடவுளும் ஒன்றை ஒன்று பின்னி மேலே எழுந்தபடி இருந்தன. ஆண் ஆதியில் இருந்தே வெல்வதற்குத்தான் முயன்றிருக்கிறான். பெண் ஆதியில் இருந்தே நம்புவதற்குத்தான் ஆசைப்பட்டிருக்கிறாள்.
பாரி சொன்னான்... “ஏழிலைப் பாலை, பெண்மையால் பூக்கும்; அதைவிட முக்கியம் பெண்ணையும் ஆணையும் ஒருசேரப் பூக்கவைக்கும்.”

வியப்பு நீங்க சிறிது நேரமானது. உள்ளுக்குள் ஏனோ ஒரு சிரிப்பு பொங்கிவந்தது. அதை அடக்க முடியவில்லை. சற்றே திரும்பிச் சிரித்தார் கபிலர். ஏளனம்கொண்ட அந்தச் சிரிப்பின் தொனியைக் கவனித்த பாரி, ‘இதில் சிரிக்க என்ன இருக்கிறது?' என, பார்வையால் கேட்டான்.

கபிலர் சொன்னார்... ``அந்த ஏழிலைப் பாலையைத் தலைமாட்டில் நட்டுவைத்துக் குடும்பம் நடத்திக்கொண்டிருக்கும் கூட்டத்தோடு நான் வந்து சேர்ந்துவிட்டேனே என்று என்னை நினைத்துச் சிரித்தேன்.”

வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 2 P99dகபிலரோடு சேர்ந்து வெடித்துச் சிரித்தான் பாரி.

இருளை விரட்ட பந்தங்கள் தயாராகிக்கொண்டி ருந்தன. பாரி சொன்னான், “பந்த ஒளிக்குப் பூச்சிகள் வந்து விழாமல் இருக்க இலுப்பை எண்ணெய் ஊற்றப்படுவதை நீங்கள் அறிவீர்கள். ஆனால், அதற்கு எல்லாம் இந்தக் காட்டுப்பூச்சிகள் கட்டுப்படாது. நாங்கள் பயன்படுத்துவது கொம்பன் விளக்குகள். அதில் நாகக் கழிவும் நஞ்சுப் பிசினும் சேர்த்து மெழுகியிருப்போம். பந்தம் எரிவது திரியில் இருந்து மட்டும் அல்ல, திரியோடு சேர்ந்து விளக்கின் விளிம்பும் கருகியபடி தீய்ந்து எரியும். அந்த வாசனையை ஊடறுத்து பூச்சிகளால் உள்நுழைய முடியாது. ஒருவகையில் இதை `ஒளிவலை' எனச் சொல்லலாம். ஒவ்வொரு பருவகாலத்துக்கும் மாறுபடும் பூச்சியினங்களுக்கு ஏற்ப, கொம்பனில் தேய்க்கும் பசையும் மாறும். எண்ணெய்யின் சேர்மானமும் மாறும். அப்போதுதான் அவற்றைக் கட்டுப்படுத்த முடியும்.

கபிலர் பந்தம் ஏற்றப்போகும் காவலர்களைப் பார்த்துக்கொண்டிருந்தார். ஒரு பெரும் தாழ்வாரத்தின் அடியில், அவர்கள் எல்லோரும் கூடியிருந்தனர். கொம்பன் விளக்கில் எண்ணெய் ஊற்றப்பட்ட பிறகும், அவர்கள் நெருப்பைப் பற்றவைக்காமல் யாருக்கோ காத்திருந்தனர்.

தொலைவில் மாளிகையின் மேல்மாடத்தில் இருந்து அதைப் பார்த்துக்கொண்டிருந்த கபிலர் கேட்டார், ``உனது உத்தரவுக்காகத்தான் காத்திருக்கிறார்களா?”

“இல்லை. அவர்கள் குலநாகினியின் வருகைக்காகக் காத்திருக்கின்றனர்.”

பாரி சொல்லிக்கொண்டிருக்கும்போதே வயதான கிழவிகளின் கூட்டம் ஒன்று எவ்வியூரின் கீழ்த் திசையில் இருந்து நடந்து வந்துகொண்டி ருந்தது. கபிலர் எட்டிப்பார்த்தார். பாரி கையைக் காட்டிச் சொன்னான்... “அதுதான் நாகினிகளின் கூட்டம். அதற்குள்தான் குலநாகினி வந்துகொண்டிருப்பாள். அவள்தான் எங்கள் குலமூதாய். இந்த நாகப்பச்சை வேலியை ஆட்சிசெய்பவள் அவள்தான். பெண்களால்தான் இவ்வளவு நுட்பமான ஒரு வேலியைக் கட்டியமைத்துக் காப்பாற்ற முடியும். அவர்களின் சொல்கேட்டு தாவரங்கள் தழைக்கும்; தலையாட்டும். அவர்களின் உடம்பில்தான் கொடிக்குலத்தின் ரத்தம் ஓடுகிறது.

ஆதியில் நிலத்தில் சிந்திய குருதியில் இருந்து தழைத்தவர்கள்தானே அவர்களின் முன்னோர்கள். ஒரே நேரத்தில் மண்ணுக்குள் வேர்விடவும் மேல்நோக்கி முளைவிடவும் தாவரங்களால் முடிவதைப்போல இவர்களால் முடியும். கருவுக்குள் புது உயிர் சூல்கொள்ளும் கணத்தில்கூட, பிறந்த குழந்தைக்காக மார்பில் பால் சுரந்துகொண்டிருக்கும் அல்லவா? எல்லாம் தாவரப்பட்சினிகள். அபார ஆற்றல் படைத்தவர்கள். இவர்களிடம் மிகக் கவனமாக இருக்க வேண்டும்.''

பாரியின் குரலுக்குள் இதுவரை கேட்டு அறியாத அச்சம் இருந்தது. குல சமூகத்தில் பெண்ணின் தலைமை இடத்தை வேளீர் குலம் அப்படியே வைத்துள்ளது.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 2 P99f
“எங்களின் மூதாயின் குரலுக்கு குலமே அஞ்சும்” என்றான் பாரி.

இவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போது அந்தக் கூட்டம் பந்தங்கள் ஏற்றப்படும் தாழ்வாரத்துக்கு வந்துசேர்ந்தது. நகர் எங்கும் ஏற்றப்படவேண்டிய பந்த எண்ணெய்களின் வாடையையும் கொம்பன் விளக்கின் வாடையையும் நுகர்ந்து பார்த்தபடியே ஒவ்வொரு விளக்காக ஏற்றிக் கொடுத்துக்கொண்டி ருந்தார்கள் நாகினிகள். ஏற்றப்பட்ட விளக்குகளைக் கையில் ஏந்திய வீரர்கள், அவற்றை உரிய இடங்களுக்கு எடுத்துச் சென்றுகொண்டிருந்தனர்.

``நாகப்பச்சை வேலியையும் ஒளி வலையையும் நிர்வகிப்பவர்கள் குலநாகினியின் தலைமை யிலான பெண்களே. அவர்கள்தான் பருவ காலங்களின் தன்மையை அறிந்து, செய்ய வேண்டிய எல்லா முன்னெச்சரிக்கைகளையும் செய்து இந்த நகரையும் எங்களையும் காத்துவருகிறவர்கள். ஆண்கள் எல்லோரும் விலங்குகளை வேட்டையாடவும் வெளியுலக மனிதர்களிடம் இருந்து தற்காக்கவும்தான். புல் பூண்டில் இருந்து, இலையின் முனைக்கு வந்து இரு கால்கள் நீட்டி எட்டிப்பார்க்கும் எறும்புகள் வரை அறிந்தவர்கள் அவர்களே.”

பிரமிப்பு நீங்காமல் இருந்தது பாரியின் ஒவ்வொரு வார்த்தையும். வந்ததில் இருந்து இதுவரை பார்த்தறியாத பாரியை, கபிலர் இப்போது பார்த்துக்கொண்டிருந்தார்.

``நாகினிகள் பார்க்கிறார்கள். வாருங்கள் கீழிறங்கிப் போவோம்” என்றான் பாரி.

இருவரும் அந்த இடம் நோக்கி நடந்தனர். வீரர்கள் தீப்பந்தம் ஏந்தி எல்லா திசைகளிலும் சென்றுகொண்டிருந்தனர். எல்லா தீப்பந்தங்களும் அந்த இடத்தில் வைத்துதான் ஏற்றப்படுவதால், அங்கு கரும்புகை நிரம்பியிருந்தது. உள்ளே இருக்கும் யாருடைய முகமும் அருகில் வரும் வரை தெரியவில்லை. கரும்புகைக்குள் நுழைந்ததும் பாரி வணங்கினான். கபிலருக்கு புகைவாடை பெரும் உமட்டலைக் கொடுத்தது. கண்கள் வேறு எரிந்தன. உள்ளுக்குள் இருக்கும் யார் முகமும் தெரியவில்லை. உமட்டலை அடக்கியபடி கண்களைக் கசக்கிக் கசக்கிப் பார்த்தார். புகை பொங்கிப் பொங்கி வந்துகொண்டிருந்தது. மூக்கில் காரநொடி ஏறி, தும்மல் உருவானது. மூச்சிழுத்து வாய் திறந்தபடி, தும்மப்போகும் அந்த நொடியில் மூக்குக்கு மிக அருகில் தெரிந்தது பெருவிழி விரிந்திருந்த குலநாகினி முகம்.

- பறம்பின் குரல் ஒலிக்கும்...

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4624
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Mon 7 May 2018 - 23:53

வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 2 P75bவீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 2 P75a
ள்ளிரவு நெருங்கியது. எவ்வியூரை விட்டு சற்றுத்  தொலைவில் நடுக்காட்டில் பெரும் மர அடிவாரத்தைச் சுற்றி வட்ட வடிவில் ஊரே உட்கார்ந்திருந்தது. எங்கும் பந்தங்கள் எரிந்துகொண்டிருந்தன. நடுவில் ஆடுகளம் இருந்தது. உட்காருவதற்கு ஏதுவாக மண்திட்டுகளும் மர அடுக்குகளும் உருவாக்கப்பட்டிருந்தன. அந்தப் பெரும் மரப் புதர்தான் கொற்றவையின் இருப்பிடம். அந்த மர அடிவாரத்தின் முன்னர் இலைவிரித்து, பதினைந்துவிதமான பனங்கூடைகள் நிறைய பல்வேறு வகையான பழங்கள் நிரப்பி வைக்கப்பட்டிருந்தன.
சுற்றிலும் பெரும் கூட்டம். நேர் எதிரே பாரியின் இருக்கை. அதற்குப் பக்கத்தில் கபிலர் அமர்ந்திருந்தார். மரத்தின் வலதுபக்கம் எண்ணற்ற பாணர்கள் வாத்தியக் கருவிகளோடு காத்திருந்தனர். இடதுபக்கம் குலநாகினி உட்கார்ந்திருந்தாள். அவளைச் சுற்றி நாகினிகளின் கூட்டம் இருந்தது. ஊர்மன்றலில் நடக்கும் குரவைக்கூத்துக்கோ, பாணர்களின் ஆட்டம்பாட்டத்துக்கோ,  சந்தனவேங்கை முன்பு நிகழும் வள்ளிக்கூத்துக்கோ நாகினிகள் வர மாட்டார்கள். குலச்சடங்குகள் தவிர்த்து கொற்றவைக் கூத்துக்கு மட்டுமே அவர்கள் வருவார்கள்.

இருளின் மையத்தில் சிறுத்திருந்த வெளிச்சத்துக்கு நடுவில் குலநாகினியைப் பார்ப்பதே அச்சம்கொள்ளச் செய்தது. அவளின் தோளிலும் மடியிலும் கூகைக்குஞ்சுகள் தாவிச் சரிந்துகொண்டிருந்தன. அவள்  தன் மேல் போட்டிருந்த தாவர வேர்களாலான மாலைக்குள், சிறுபாம்புகள் நெளிவதுபோல் கபிலருக்குத் தெரிந்தது. அந்தச் சூழலே மிகவும் அச்சமூட்டுவதாக இருந்தது. விழா தொடங்கவில்லை. பெரும் அமைதி நிலவியது. யாருக்காகக் காத்திருக்கிறார்கள் என்பது தெரியவில்லை.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 2 P75c
கபிலருக்கு கொற்றவை விழா பற்றி எத்தனையோ கேள்விகள் இருந்தன. ஆனால், விழா நாள் நெருங்க நெருங்க, ஊரே பேச்சைக் குறைத்து மெளனமாகியது. கபிலரால் யாரிடமும் எளிதில் உரையாட முடியவில்லை. தன்னோடு எப்போதும் பேசி மகிழும் நீலன், மற்றவர்களைவிட இறுகிய மெளனம் கொண்டிருந்தான். அவனிடம் இருந்து ஒரு வார்த்தையைக்கூட கபிலரால் வாங்க முடியவில்லை; ஏன் என்றும் புரியவில்லை. கபிலர் கேட்கிறார் என்பதால், பாரி மட்டுமே அவ்வப்போது ஒரு சில கேள்விகளுக்குப் பதில் அளித்தான். 
``கொற்றவைக் கூத்து பாலை நிலத்துக்கு உரியதுதானே. அதை ஏன் குறிஞ்சி நிலத்தில் நடத்துகிறீர்கள்?” என்று கேட்டார் கபிலர்.

“மனம் கொடும்பாலையாக வெடித்துக்கிடக்கும்போது எங்கே நடத்தினால் என்ன?”

பாரியிடம் இருந்து இவ்வளவு விரக்தியான ஒரு பதிலை கபிலர் எதிர்பார்க்கவில்லை. அவர் திகைப்புற்று நின்றார்.

“இது குறிஞ்சிக்கு உரிய கூத்து அன்று. ஐந்திணைக்கும் உரிய கூத்து” என்ற பாரியின் குரல், சத்தற்று பெரும் கலக்கம் கொண்டிருந்தது. இதற்கு மேல் கேள்வி எதுவும் கேட்க வேண்டாம் என கபிலர் எண்ணிக்கொண்டிருந்தபோது, பாரி தொடர்ந்தான்.

“இந்த மண் எங்கும் மூவேந்தர்களால் எத்தனையோ குலங்கள் அழிக்கப்பட்டுவிட்டன. பலநூறு ஆண்டுகளாகக் குருதி ஆறு வற்றாமல் ஓடிக்கொண்டிருக்கிறது. அழிபடும் குலங்களின் எண்ணிக்கை இன்று வரை தொடர்கிறது.”

இந்த விழாவுக்கும் பாரி சொல்லும் பதிலுக்கும் என்ன சம்பந்தம் என்ற குழப்பத்துடன், கபிலர் கேட்டுக்கொண்டிருந்தார்.பாரி தொடர்ந்தான், “அழிக்கப்பட்ட குலங்கள் எண்ணிக்கையில் எத்தனையோ… யார் அறிவார்? ஆனால், பேரரசுகளின் கொடும் தாக்குதலில் இருந்து தப்பி உயிர்பிழைத்தவர்கள் மிகச் சிலர். அவர்கள் எங்கெங்கோ அலைந்து திரிந்து, இறுதியில் பறம்பு நாட்டுக்கு வந்து குடியேறி உள்ளனர். மூவேந்தர்களால் அழிக்கப்பட்ட பதினாறு குலங்களின் மிச்சங்கள், இப்போது பறம்பு நாட்டில் வசிக்கின்றன. அவர்கள் போர் தெய்வமான கொற்றவையிடம் முறையிட்டு, ஆராத்துயரைக் கொட்டி வஞ்சினம் உரைக்கும் விழாதான் இது.”
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 2 P75d
அழிக்கப்பட்ட பதினாறு குலங்களின் வழித்தோன்றல்கள் இன்னும் மிச்சம் இருக்கிறார்களா, அவர்கள் எல்லாம் பறம்பு நாட்டில் இருக்கிறார்களா? செய்தி கபிலரைக் கலங்கடித்தது. 

பாரி தொடர்ந்தான்... ``நாங்கள் மட்டுமே வேந்தர்களிடம் இருந்து பாதுகாத்து அடைக்கலம் தர முடியும் என்ற நம்பிக்கையில் அவர்கள் இங்கு குடிபுகுந்தனர். அந்தக் குலங்களுக்கான குடிப் பாணர்களின் வழித்தோன்றல்கள், இப்போது எங்கெங்கோ இருக்கின்றனர். அவர்கள் எல்லாம் நான்கு ஆண்டுக்கு ஒரு முறை நிகழும் இந்த விழாவுக்கு வந்துவிடுவர். அழிந்த குலத்தின் வரலாற்றை அந்தப் பாணர்கள் பாட, இறுதியில் குலத்தின்  வழித்தோன்றல்கள் கொற்றவைக்குப் பலியிட்டுச் சூளுரைப்பார்கள்” என்றான் பாரி.

அதன் பிறகு இங்கு வந்து அமரும் வரை, கபிலர் பேச்சற்றவராக ஆனார். காலம் மனித அனுமானங்களுக்கு அப்பால் இயங்கிக்கொண்டேதான் இருக்கிறது. அதை எதிர்பாராத கணத்தில் சந்திக்கும்போது மனிதன் பொறி கலங்கிப்போவதைத் தவிர வேறு வழி என்ன?

அழிந்த குலங்களின் வழித்தோன்றல்களை இன்னும் சிறிது நேரத்தில் பார்க்கப்போகிறோம் என்பதை, கபிலரால் நம்பவே முடியவில்லை. கடந்த காலத்தின் பெரும் சாட்சி ஒன்று கண்கள் முன்னால் விரியப்போகிறது. மிச்சம் இருக்கும் அந்தக் குலங்கள்  எவை... எவை? தப்பிப் பிழைத்த அந்த மனிதர்கள் யார்... யார்? வரலாற்றில் இருந்து அப்புறப்படுத்தப்பட்ட அந்த மகத்தான மனிதச் செல்வங்களை மீண்டும் காணக்கிடைப்பது எவ்வளவு பெரும் வாய்ப்பு. இப்படி ஒரு தருணம் தனது வாழ்வில் வரும் என அவர் நினைத்துக்கூட பார்த்தது இல்லை. பெரும் எதிர்பார்ப்புடன் இருந்தார். ஆனால், விழா தொடங்காமல் இருந்தது. இந்த மெளனம் யாருக்காக, ஏன் நீடிக்கிறது என்பது கபிலருக்கு விளங்கவில்லை. பொழுது நள்ளிரவைக் கடந்தது.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 2 P75f1
இந்த மரத்தில் தெய்வவாக்கு சொல்லும் விலங்குகள் உள்ளன. அவை மிகச் சிறியவை.  ஆந்தை முகமும் அணில் உடலும் குரங்குக் கால்களும்கொண்ட விலங்குகள் அவை. மிகப் பயந்த சுபாவம்கொண்டவை. அகலக் கண்களை விழித்து, குழந்தையைப் போலவே பயந்து பயந்து பார்க்கும் அவை, இன்னும் மரத்தைவிட்டு இறங்காமல் இருக்கின்றன. அவை மெள்ள இறங்கிவந்து எந்தக் கூடையில் உள்ள பழத்தை எடுத்துச் செல்கின்றவோ, அந்தக் குலப்பாடகன் தனது பாடலைப்  பாடத் தொடங்குவான். பாடல் முடிந்ததும் அந்தக் குலத்தின் வழித்தோன்றல் கொற்றவைக்குப் பலியிட்டுச் சூளுரைப்பான். அந்தத் தெய்வவாக்கு விலங்குகள் இறங்கி வருவதற்காகத்தான் எல்லோரும் அமைதிகொண்டு காத்திருந்தனர். சிறுசத்தமும் அசைவும் இருந்தால்கூட அவை வெளிவராது. எனவே, அந்த இடத்தில் இருள் மிரளும் அமைதி நிலவியது.

மரக்கிளைகளுக்கு நடுவில், அப்போதுதான் பிறந்த ஆட்டுக்குட்டியைப் போல சின்னஞ்சிறிய உடல்கொண்ட அந்த விலங்கு மெள்ள இறங்கி வந்தது. தலையைத் திருப்பித் திருப்பிப் பார்த்தபடி, பயந்த விழிகளோடு கூடை அருகில் வந்தது. எல்லோரும் அது எந்தப் பழத்தை எடுக்கப்போகிறது என்பதை உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தனர். கபிலரின் கண்கள் இமைகொட்டாமல் நிலைகுத்தி நின்றன. அசையும் மரக்கொப்பு ஒன்று சிற்றோசை எழுப்ப, பயந்து கணநேரத்துக்குள் அது உள்ளோடி ஒழிந்தது. அதன் மறுவருகைக்காக எல்லோரும் காத்திருந்தனர். அதைவிடச் சின்னதான தெய்வவாக்கு விலங்கு ஒன்று வேறுதிசையில் இருந்து இறங்கி வந்தது. தயங்கியபடி கால் எடுத்து வைத்த அது, கூடைக்கு அருகில் வந்து சேராது என்றுதான் பலரும் நினைத்தனர். ஆனால், நினைத்து முடிக்கும் கணத்தில் அதன் கையில், மூன்றாம் கூடையில் இருந்த இலந்தைப்பழம் இருந்தது.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 2 P75
அந்தக் கணத்தில் காட்டையே மிரட்டும் பேரொலியாக மேலே எழுந்தது குலவை ஒலி. மருத நிலத்துக்கு உரிய கிணைப்பறை கொட்டும் பாணர்கள் ஆடுகளத்துக்குள் நுழைந்தனர். கொற்றவையின் அருகில் வந்த மூத்த கிணையன், சிறுகோள்கொண்டு கிணைப்பறையின் தோலுக்கு மையத்தில் இருக்கும் கண்ணில் ஓங்கி அடித்தான். உடன்வந்த கலைஞர்கள் எல்லோரும் கிணை முழங்க அச்சமூட்டும் கிணைப்பறையின் பேரொலி எங்கும் பரவியது. குடிப்பாணன் பாடலைத் தொடங்கத் தயாரானான்.
 
கபிலர் நடப்பதைப் புரிந்துகொள்ள முடியாமல் பாரியைப் பார்த்தார்.

வைகைக் கரை கூடல்நகரை ஆட்சிசெய்த அகுதைக் குடிப்பாணர்கள் அவர்கள். அகுதையின் குலப்பாடலைப் பாடப்போகிறார்கள்” என்றான் பாரி.

கபிலருக்கு மயிர்க்கூச்செரிந்தது. அகுதையின்  வழித்தோன்றல்கள் இந்த உலகில் இன்னும் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்களா, அந்தக் கதையை பாணர்கள் பாடுகின்றனரா? கபிலர் உச்சந்தலையை கைகளால் அழுத்தி, மயிர்க்கற்றையின் சிலிர்ப்பைத் தளர்த்த முயன்றார். கூடல்மாநகரின் வரலாற்றையும் அகுதையின் கதையையும் அணுஅணுவாக அறிந்தவர் கபிலர். எத்தனையோ தலைமுறைக்கு முன்னால் நடந்த நிகழ்வு அது.

உரத்துச் சொல்லப்படுவதைவிட, காதோடு காதாகப் பேசும் கதைக்கு வயது அதிகம். அது காட்டுச்செடிபோல ஒருபோதும் நிலம்விட்டு அகலாது. அகுதையின் குலம் கூடலைவிட்டு அகற்றப்பட்டாலும் அவனைப் பற்றிய கதை கூடல்மாநகரில் இன்னும் சொல்லப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது. யாரும் அறியாமல், விளக்குகள் அணைக்கப்பட்ட நள்ளிரவில், ரகசிய மொழியில், அகுதையின் கதை காலங்களைக் கடந்து வந்துகொண்டே இருக்கிறது.

நாட்டில் உலவும் ரகசியக் கதை, காட்டுக்குள் பெரும் குரலெடுத்துக் கர்ஜிக்கிறது. கிணைப்பறை முழங்க, பெரும் பாணன் கதையைத்  தொடங்கினான்.

வைகைக் கரையில் செழித்து வளர்ந்த வேளாண்மை, அழகிய நாகரிகத்துக்கு அடித்தளம் அமைத்தது. நதிக்கரையின் நிலவளம் கொண்டு பயிர் வளர்க்கவும் விளையவைக்கவும் அறுவடையைக் குவிக்கவுமாக, விவசாயத்தின் ஆதிரகசியங்களைக் கண்டறிந்தவர்கள் கூடல்வாசிகளே.

குறிஞ்சி நிலம், கற்களாலான மண்ணை உடையது; முல்லை, வெண்ணிற மண்ணை உடையது; நெய்தல், உவர் மண்நிலம். பாலை, செம்மை ஏறியது; மருதம் மட்டுமே பொன்னிறமாக கரிசலும் வண்டலும் மேவிக்கிடப்பது. அதனாலேயே மண்ணையும் நீரையும் பிசைந்து உணவாக மாற்றக்கூடிய வித்தையை கூடல்வாசிகள் முந்திக் கற்றனர்.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 2 P75h
அவர்களுக்குத்தான் மண்ணின் நிறம் பிடிபட்டது. வெவ்வேறு வகையான மண்ணுக்கு இருக்கக்கூடிய குணங்கள் பிடிபட்டன. புற்றுகளும் ஊற்றுகளும் அவர்களின் கணிப்புக்குள் அடங்கின. தாவரங்களின் வேர்களை எந்த மண் தனது மார்போடு உள்வாங்கி அணைத்துக்கொள்ளும், எந்த மண் தலையில் முட்டி வெளித்தள்ளும் என அவர்கள் கண்டறிந்தனர். பறவைகளின் அலகு பறித்துத் தின்னும் காட்டுக் கதிர்களைக் கண்டறிந்தனர். பறவைகளின் கழிவில் இருந்து முளைவிடும் தானியமணிகள் எவை எவை என்பதைப் பற்றிய அறிவுச்சேகரம் அவர்களிடம் இருந்தது.

முதல் தானியம் நடும்போது அந்தப் பறவையின் சிறகை, அதன் அருகில் நட்டு தங்களுக்கு வழிகாட்டிய அந்த வானம்பாடிக்கு நன்றி சொல்லும் மரபைக்கொண்டவர்கள். விளைந்த பயிரைத் தின்னவரும் விலங்குகளை வேல்கொண்டு விரட்டுவர். ஆனால், பறவைகளை வேண்டிக்கொள்ள மட்டுமே செய்வர். ஏனென்றால் பறவையே ஆசான். பறவையின் எச்சம் கண்டே பயிர்செய்து பழகியவர்கள். பறவை உண்ட மிச்சமே நமக்கு என அறம் வகுத்துக்கொண்டனர்.

காடு எங்கும் அலைந்து சேகரித்த தானியங்களை, கால் பரப்புக்குள் விளையவைத்து அறுக்க முடியும் என்பதைச் செய்துகாட்டியவர்கள் அந்தக் குலத்தின் முன்னோர்களே. அவர்களே மனிதக் கூடலின் ஆற்றலை, மண்ணில் விளையும் பயிராக மாற்றியவர்கள். அவர்கள் வாழ்விடமே கூடல் என அழைக்கப்படலாயிற்று. அந்தக் கூடல் நகரை உருவாக்கிய குலத்தின் தலைவன் அகுதை.

குதையின் கதையைக் குலப்பாடகன் பாடத்தொடங்கிய கணமே பாரியின் கண்கள் கலங்கின.

``வேளாண் அறிவின் நுணுக்கத்தை இந்த உலகுக்குக் கண்டறிந்து சொன்னது அகுதையின் குலம் அல்லவா” - கபிலரைப் பார்த்து பாரி சொன்னபோது, அவனது கண்களில் திரண்ட நீருக்குள் பந்தத்தின் வெளிச்சம் நெளிந்தது.

உப்பு விற்கும் உமணர்களே நிலம் எங்கும் அலைந்து திரிபவர்கள். கடற்கரை தொடங்கி மலைமுகடு வரை அவர்களின் வண்டிச்சக்கரங்கள் சதா உருண்டுகொண்டே இருந்தன. எல்லோருக்கும் தேவைப்படும் பொருள்கள் அவர்களிடம் இருந்தன. எல்லோரும் தங்கள் கைவசம் இருந்த பொருளை அவர்களிடம் கொடுத்து உப்பைப் பெற்றனர்.

இந்த நிலம் எங்கும் இருக்கும் மனிதக் கூட்டங்கள், அவர்களின் வாழ்விடங்கள், அங்குள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள், செல்வச் செழிப்பு, சேமிப்பு என, எல்லாவற்றையும் அறிந்தவர்கள் அவர்களே.

கூடல்நகரில் வளமை கொடிகட்டிப் பறந்தது. விளைச்சல்கள் குவிய, தானியக் குதிர்கள் வைக்கும் ஆளுயர மொடாவை, உமணர்கள் அங்குதான் முதன்முதலில் கண்டனர். அந்தக் குலத்தின் செழிப்பு உமணர்களின் கண்களில் அதிசயம் என நிலைபெற்றது. அது சொல்லவேண்டிய எல்லா செய்திகளையும் சொன்னது.

பொருநை ஆற்றின் முகத்துவாரத்தில் இருந்த கொற்கைப்பாண்டியன் தன் வீரர்களோடு புறப்பட வேண்டிய  நாளை, உமணர்கள் சொன்ன தகவலை வைத்தே முடிவுசெய்தான்.

`வைகையில் புனலாட்டு விழா. கூடல்வாசிகள் முழுவதும் நீராடி மகிழ்ந்திருக்கும் நன்னாள். அன்று காலை நமது படை கூடல் நகருக்குள் நுழைந்தால் எளிதில் அதைக் கைப்பற்றலாம்’ என்று உமணர்கள் நாள் குறித்துச் சொன்னார்கள். முதல் நாள் நண்பகலில் கொற்கைப்பாண்டியன் படை கடற்கரையில் இருந்து புறப்பட்டது.
கிணைப்பாணன் தனது தாள லயத்தைக் கூட்டத் தொடங்கினான். செங்காலி மரத்தால் செய்யப்பட்டு, மயிர்சீவாத செவ்வித்தோலைக் கொண்டு போத்தப்பட்ட கிணைப்பறை, அதன் அகால ஓசையை எழுப்பத் தொடங்கியது. குலப்பாடகனின் குரல்நாளங்கள் வெடிப்புறத் தொடங்கின. ஒரு கொடூரம் அரங்கேறப்போகும் விடியல்பொழுதைப் பாட அவனது நா எழவில்லை.

பொழுது புலர்ந்தது. வைகையின் பெருவெள்ளம் தாவிக் குதித்தோடியது. கூடல் மாநகரே நதிக்கரையில் வந்து ஆவலோடு நின்றுகொண்டிருந்தது. குலத்தலைவன் அகுதை, யானை மீது ஏறி வைகைக் கரைக்கு வந்து சேர்ந்தான். எல்லோரும் அவனது கையசைவுக்காகக் காத்திருந்தனர்.

வைகையை வணங்கி, கூட்டத்தை நோக்கிக் கையசைத்தான் அகுதை. புனலாட்டு விழா தொடங்கியது. கரையில் இருந்த இளைஞர்களும் இளைஞிகளும் வைகையில் பாய்ந்து உள்ளே இறங்கினர். புனலாட்டு விழா என்பது காதல் திருவிழா. காதலர்கள் நீரால் ஒருவரை ஒருவர் அடித்து விளையாட ஆரம்பித்து, நேரம் செல்லச் செல்ல நீர் அடித்தாலும் விலகாத விளையாட்டாக மாறும். மணமானவர்களும் தம் இணையோடு சென்று வைகையில் நீராடி, காதல் பேசி, கனிவுகொண்டு விளையாடுவர்.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 2 P75g1
காமத்துக்கு மிக அருகில் பயணிக்கும் ஒரு திரவம் நீர். அதுவும் நதியில் ஓடும் நீர் தனது உள்ளங்கையில் இருக்கும் ஆணையும் பெண்ணையும் கணநேரத்துக்குள் கரைத்துவிடும். கரைந்தவர்கள் காதல்கொண்டவரின் உடலுக்குள் உறைந்திருப்பர். உடலின் வாசனையை மனதுக்குள் பாயவிடும் மாயசக்தி நீருக்கு மட்டுமே உண்டு. 

மண்ணில் கால்பாவாமல் மனிதன் நடப்பது தண்ணீருக்குள்ளும் காதலுக்குள்ளும்தான். இரண்டும் ஒன்றுசேரும் தருணத்தில் நிகழ்வது எல்லாம் மாயவித்தைகளே. வித்தைகளின் வாடிவாசல் வழியே பீறிட்டு ஓடிக்கொண்டிருந்தது வைகை.
அகுதை உள்ளிறங்கும் பொழுதுக்காக கரையில் நின்றிருந்தவர்கள் காத்திருந்தனர். காதல் ஏறிய கண்கொண்டு தனது மனைவியைப் பார்த்தான் அகுதை. அவளோ அவனது தோள்கவ்வி உள்ளிறங்கும் பொழுதுக்காகக் காத்திருந்தாள். அகுதை நதி நீருக்குள் கால் நுழைத்தான். இன்னும் சற்று உள்ளே போகட்டும் அவனது தோளைத் தாவிப்பிடித்தபடி நாம் இறங்குவோம் என அவள் கல்பாவியத் திட்டில் நின்றிருந்தாள். ஏன் இன்னும் வராமல் இருக்கிறாள் என யோசித்தபடி, அகுதை இரண்டாவது அடியை எடுத்து நீருக்குள் வைத்தான். அவன் தோளின்மேல் சரிந்துவிழலாம் என அவள் நினைத்தபோது, அருகில் தோழியிடம் இருந்த அவள் மகன், பெரும் குரலெடுத்து அழ ஆரம்பித்தான்.

``பெருக்கெடுத்து ஓடும் நீரும் உற்சாகப் பேரொலியும் குழந்தையைப் பயமுறுத்தியிருக்கும், அவனை அமைதிப்படுத்திவிட்டு வருகிறேன். நீங்கள் உள்ளிறங்குங்கள்’’ எனச் சொல்லிவிட்டு தோழியிடம் போனாள். தாயைப் பார்த்ததும் குழந்தையின் அழுகை மேலும் கூடியது. அவள் அவனைச் சமாதானப்படுத்த எவ்வளவோ முயன்றாள்; முடியவில்லை. நீருக்குள் இருந்து அவளையே பார்த்துக்கொண்டிருந்தான் அகுதை. அந்தப் பார்வை அவளைத் துளைத்துக் கொண்டிருந்தது. குழந்தை அழுகையை நிறுத்துவதாக இல்லை. வேறு வழியில்லாமல் குழந்தையைத் தூக்கிக்கொண்டு, நதிக்கரைவிட்டு சற்றே அகன்று உள்காட்டுக்குள் நுழைந்தாள். குழந்தையின் முதுகைத் தட்டியபடி சமாதானப்படுத்தினாள்.

குழந்தை அழுகையை நிறுத்தவே இல்லை. நீரின் சத்தமும் நீராடுவோர் சத்தமும் கேட்காத அளவுக்கு அடர்ந்த மரங்களுக்கு இடையே மிகவும் உள்ளே சென்றாள். உள்ளே செல்லச் செல்ல ஓசையின் அளவு கூடுவதுபோல் உணர்ந்தாள். மனிதக் கூக்குரல் எங்கும் எதிரொலிக்கிறதே என யோசித்தவள், அகுதையின் கண்கள் தன்னைத் தடுமாறவைக்கிறது என நினைத்தபடி காட்டை ஊடுருவி வெகுதொலைவு சென்றாள். காலைக்கதிர்களின் இளமஞ்சள் ஒளியில் உள்காடு ஒளிர்ந்துகொண்டிருந்தது. எங்கும் தும்பிகள் பறந்தன. புல்நுனிகள், பனித்துளிகளை உலர்த்தாமல் வைத்திருந்தன.

தரையில் அழகிய செம்மூதாய் ஒன்று நகர்ந்துகொண்டிருந்தது. செந்நிறப் பட்டுப்பூச்சி அது. மேனி எல்லாம் மெத்தைபோல மினுமினுத்து நகர்ந்தது. குழந்தையை அதன் அருகில் இறக்கிவிட்டாள். குழந்தை தனது பிஞ்சுவிரலால் செம்மூதாயின் மேனியை மெள்ளத் தொட்டதும் அது நகர்வதைப் பார்த்து மலர்ந்து சிரித்தது. அந்தப் செம்பட்டுப் பூச்சியிடம் சிறிதுநேரம் விளையாடவிட்டபடி அவள் நின்றுகொண்டி ருந்தாள்.

சிவப்பு, காமத்தின் அடையாளம். அவளது கண்கள் அதற்குள் போக எண்ணங்கள் எங்கெங்கோ சென்றுகொண்டிருந்தன. அகுதையின் தோள்தழுவிய அந்த முதற்கணம் நினைவுக்கு வந்தது. அகுதை, அதிகம் பேசாதவன். ஆனால், அந்த இரவில் அவன் பேசியதை இன்னோர் ஆண், இந்த உலகில் பேசியிருப்பானா என்பது சந்தேகமே. காதல் சொல்லால்தான் மலர்கிறது. காதல்கொள்கையில் சின்னஞ்சிறு சொற்கள் எவ்வளவு பெரும் கிளர்ச்சியை ஏற்படுத்தக்கூடியனவாக இருக்கின்றன.
சிறு உளியால் மலைகள் உடையும் தருணம் அது. அவன் ஒற்றைச்சொல் சொல்லும்போது, அப்படி ஒரு வெட்கம் உடல் எங்கும் பரவியது. அந்தச் சொல் ஞாபகம் வந்த கணம் மீண்டும் வெட்கம் பரவி, தன்னை அறியாமல் சிலிர்த்து மீண்டாள்.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 2 P75i1
சொற்கள் நினைவுக்கு வந்த கணத்திலேயே, செயல்களும் நினைவின் வழியே மேலே எழுந்து வந்துவிடுகின்றன. அதன்பின் என்ன செய்ய முடியும்? சற்றே பெருமூச்சுவிட்டபடி குழந்தையைப் பார்த்தாள். அவன் செம்மூதாயின் பின்னால் நகர்ந்துபோய்க்கொண்டிருந்தான்.

திருமணம் முடிந்த முதல் புனலாட்டு விழாவின்போது அவள் கருவுற்றிருந்தாள். அதனால் ஆற்றுக்குள் இறங்கவில்லை. இரண்டாம் ஆண்டான இப்போதும், அதேபோல் தன்னந்தனியாகவே அகுதை ஆற்றுக்குள் இறங்கினான். கரையில் நின்ற அவளைத் துளைத்தெடுத்தது அகுதையின் பார்வை.

ஆணின் பார்வை பெண்ணின் பார்வையைப்போல நயமிக்கது இல்லை. ஆணின் கண்கள் காதல்கொள்பவை; ஆனால், காதலைச் சொல்லக் கற்றவை அல்ல. அவன் பார்வையால் பற்றி இழுத்தாலும், அவள் கண்களால் கைம்மாறு செய்துகொண்டிருந்தாள்.

கண்கள் விழித்திருந்தாலும் ஆந்தைக்கு பகலில் பார்வை கிடையாது. அதைப்போலத்தான், மனிதன் நீருக்குள் மூழ்கிவிட்டால் பார்வையைத் தொலைத்துவிடுகிறான். ஆனால், காதலர்களுக்கு அப்படி அல்ல. அவர்கள் அந்த இடமே பார்வை பெறுகின்றனர். கண்களின் வேலையை கைகள் எடுத்துக்கொள்கின்றன. தொடுதலின் மூலம் ஆயிரம் விழிகள் உள்ளுக்குள் விழித்து அடங்குகின்றன. அதனால்தான் நீர் விளையாட்டு காதலின் களம் ஆகிறது.

அவள் கண்களைச் சிமிட்டி கனவைக் கலைத்தாள். குழந்தை நீண்ட நேரம் விளையாடி அமைதி அடைந்தது. சரி... அழைத்துச் செல்லலாம் என முடிவுசெய்து, அவள் காட்டைவிட்டு நடக்கத் தொடங்கினாள். நதியை நோக்கி வர வர அவளுக்குக் காட்டின் அமைதியே நீடித்தது. கொண்டாட்டத்தின் பேரொலி கேட்கவில்லை. இவ்வளவு அமைதியாக நீராட வாய்ப்பே இல்லையே என யோசித்தபடி, நதியின் கரையில் ஏறி நின்று பார்த்தாள். மொத்த வைகையும் நீண்டு நகரும் செம்மூதாயாகக் காட்சி அளித்தது. குருதி கரைபுரண்டோட கரை எங்கும் மீன் எலும்புகள்போல் முட்கள் கோக்கப்பட்ட ஈட்டியுடனும் உயர்த்திய வாளுடனும், எண்ணற்ற வேற்றுக்குலத்தினர் நின்றுகொண்டிருந்தனர்.

குரல்வெடித்துச் சரிந்தான் குலப்பாடகன். பெண்களின் குலவை ஒலி பீறிட்டுக்கொண்டிருந்தது. குரல் உடைந்தபடி பாரி கபிலரிடம் சொன்னான்... “அந்தப் பெண் எதிரிகளின் கண்ணிற்படாமல் தப்பித்து, கையில் குழந்தையோடு ஒரு முதுகிழவனை அழைத்துக்கொண்டு, பல மாதங்களுக்குப் பிறகு பறம்பு நாட்டுக்குள் நுழைந்திருக்கிறாள். பறம்பின் மக்கள் அவளை அள்ளி அணைத்துப் பாதுகாத்திருக்கின்றனர். அவள் வழித்தோன்றல்தான் இப்போது கொற்றவைக்குக் காளையைப் பலிகொடுத்துச் சூளுரைக்கப் போகிறான்” என்றான்.

தாங்க முடியாத துக்கத்தைக் கிழித்துக்கொண்டு கபிலருக்கு ஆர்வம் மேலே ஏறியது. அகுதையின் வழித்தோன்றல் - இயற்கையை, வேளாண்மையை,  நாகரிகத்தை நேசித்த அந்த மாமனிதனின் வம்சக்கொடி  யார் என அறிய, கபிலர் ஆடுகளத்தை இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தார். தாமரையின் மேல் இதழில் முள் இறங்கும் நேரம்கூட அவரால் தாங்க முடியவில்லை. அந்த மகத்தான குலத்தில் உதித்த திருமகனைக் கண்டு வணங்க அவரை அறியாமலே கைகள் கூப்பின.

அந்தக் கணம் இடம் இருந்து உள்ளிறங்கினான் நீலன்.

- பறம்பின் குரல் ஒலிக்கும்...

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4624
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Tue 8 May 2018 - 0:07

வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 2 P83c3வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 2 P83b1
ரவில் ஏற்பட்ட மனக்கலக்கம் பகல் முழுவதும் பரவிக்கிடந்தது. பாரி தனது அறைக்கு வரும் வரை கபிலர் செயலற்றே கிடந்தார். பாரிதான் அவரை அழைத்துச் சென்று உணவு அருந்தவைத்தான். பிறகு இருவரும் தேர் ஏறி பாழியூருக்குச் செல்லும் பாதையில் சென்றனர். கபிலர் எதுவும் கேட்காமல் வந்துகொண்டிருந்தார்.

புன்னைமர அடிவாரத்தில் தேரை நிறுத்தச் சொன்னான் பாரி. வளவன், குதிரைகளின் கடிவாளத்தை இழுத்து நிறுத்தினான். இருவரும் இறங்கி காட்டுக்குள் நடந்தனர்.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 2 P83a
“பறம்பில் காலடி எடுத்துவைத்த கணத்தில் இருந்து நீலனோடு பயணிக்கிறேன். தன்னைப் பற்றி ஒரு சொல்கூட அவன் சொல்லவில்லை” என்றார் கபிலர்.

பாரி அமைதியாகக் கேட்டுக்கொண்டு வந்தான்.

சட்டென நினைவு வந்தவுடன், “இல்லை...இல்லை...” என தான் சொன்ன சொல்லை மறுத்த கபிலர், “வேட்டுவன் பாறையில் வரும்போது அவனது குலப்பாடல் பற்றி அவன் சொல்ல வந்தான். `அது இருக்கட்டும்’ என அதைப் புறந்தள்ளிவிட்டேன். எனது அந்தக் கொடும் செயலுக்கு என்ன தண்டனை வேண்டுமானாலும் தரலாம்” என்றார்.

``பறம்பில் தண்டனை கிடையாது.”

பாரியின் சொல், குற்றவுணர்வில் இருந்து வியப்பின் பரப்புக்குத் தூக்கி வந்தது கபிலரை. வழக்கம்போல் சொல்லால் தாக்குண்ட புலவன், மறுசொல்லின்றி பாரியின் குரலுக்காகக் காத்திருந்தான்.
பாரி சொன்னான், “ஒருவகையில் அதுதான் கொடும் தண்டனை.”

கபிலர் மெள்ளத் தலையசைத்து, தனக்கு வழங்கப்பட்ட தண்டனையை ஏற்றார்.

வர்கள் பேசிக்கொண்டு நடந்த அதே பொழுதில், எவ்வியூரின் தென்புறக்காட்டில் மருதமர அடிவாரம் ஒன்றில் மயிலாவின் மடியில் தலைசாய்த்துக்கிடந்தான் நீலன். இரவில் எருமையின் தலையை வெட்டி, பொங்கும் குருதியோடு நீலன் ஆடிய ஆட்டத்தைப் பார்த்தவர்கள், இன்னும் நடுக்கம் மீளாமல்தான் இருக்கின்றனர். தான் பார்த்து அறியாத நீலனை நேற்றுதான் கண்டுணர்ந்தாள் மயிலா.

தனது மடியில் தலைசாய்த்துக்கிடக்கும் அவனை, கண் இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தாள். அவள் முதல்முறையாக கொற்றவைக்கூத்துக்கு இப்போதுதான் வந்திருக்கிறாள். நீலனோடு இருவார காலம் எவ்வியூரில் மகிழ்ந்திருக்கலாம் என்பதற்காகத்தான் வந்தாள். ஆனால், வைகையில் ஓடிய குருதி அவனது உடலில் தேங்கிக்கிடக்கிறது என்பது இங்கு வந்த பிறகுதான் அவளுக்குத் தெரியும். வாளோடும் வலியோடும் ஒட்டிப்பிறந்த ஒருவன், அவள் மடிமீது தலைவைத்துத் துயில்கிறான்.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 2 P83d
இரவில் நீலன் ஆடியது, ஆட்டம் அல்ல; ஒரு போர்க்களத்தின் இறுதிப்பாய்ச்சல். வெட்டிய காட்டு எருமையின் குருதியை உடல் முழுவதும் பூசியபடி நிலம் அதிர ஆடினான். நிலத்தில் பட்டும் வானில் சுழன்றும் திரிந்த நீலனின் கால் அசைவுகளுக்கு ஈடுகொடுக்க முயன்று, திம்... திம்...திம்... திம்... எனப் பறையைக் கொட்டிய பாணர்களின் கைகள் நொந்ததுதான் மிச்சம். அவனது காலடி அசைவுகளுக்கு, பறையொலியால் இறுதிவரை ஈடுகொடுக்க இயலவில்லை. பறை அடிக்கும் கோல்கள் நார் நாராகப் பிரிந்தன. கிணைப்பறையின் கண் கிழிந்த பிறகும் நீலனின் ஆட்டம் நிற்கவில்லை. கூட்டத்தின் குலவை ஒலி மலை எங்கும் எதிரொலித்த ஒரு கணத்தில், உடலின் ஆவேசம் உச்சம் அடைந்து மயக்கநிலை கொண்டான் நீலன். அவன் சரிந்துவிழப் போகிறான் என யூகித்த பாரி, தன் இருக்கையைவிட்டு எழுந்து அவனை நோக்கி ஓடினான். ஆவேசத்தோடு நிலத்தைச் சுற்றிய வேகத்தில், ஒடிந்த கொம்புபோல் சரிந்தான் நீலன். சரியும் அவனது உடல் மண்ணைத் தொடும் முன் தாங்கிப்பிடித்தன குலநாகினியின் கரங்கள்.

உக்கிரம் ஏறிய குலநாகினி, நீலனை இரு கைகள் ஏந்தி எதிர்க்களமாடினாள். போர்க்களத்தில் சினம்கொண்டு ஆடும் கொற்றவையின் ஆட்டம் அது. தாவர வேர்கள் உடல் எல்லாம் சரசரக்க, கூகைக்குஞ்சுகள் எங்கும் சிதறி விழ, நாகப்பச்சை நாயகி, வேளீர்குல நாகினி, நீலனை ஏந்தி களம் முழுவதும் வலம்வந்தாள். குலவை ஒலிகளும் பறையொலியும் விண்ணை முட்டின. ஆடுகளம், ஆவேசத்தால் குலுங்கியது. நாகினியின் முன் மண்டியிட்டு இரு கைகள் ஏந்தி நின்றான் பாரி. கண்களில் இருந்து நீர் சரிவதைப்போல, அவளது கரங்களில் இருந்து சரிந்த நீலனைத் தாங்கின பாரியின் கரங்கள்.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 2 P83e
அந்த உடல்தான் தளர்ந்து மயிலாவின் மடியில் சாய்ந்துகிடக்கிறது. அவளால் அவனைத் தொட முடியவில்லை. காதல்கொண்டு நெருங்க முடியாத ஒரு மானுடனை என்ன செய்வது எனத் தெரியாமல் அவள் திகைத்துக்கிடந்தாள். பெரும் வனத்தை சிறு பூ ஒன்று காதல்கொள்வதைப் போல் அவளுக்குத் தோன்றியது.

திகைப்பில் இருந்து மீள முடியாமல்தான் இருவரும் நடந்தனர். ஆனால், எந்த ஓர் உரையாடலை நடத்தினாலும், அது மேலும் திகைப்பைக் கூட்டவேசெய்யும் என்பது இருவருக்கும் தெரியும். ஏனென்றால், அகுதையின் குலக்கதை இந்த மண்ணில் எல்லோரும் அறிந்ததே. எல்லோரும் அறிந்த கதையை அறிஞர்கள் இன்னும் அடியாழத்தில் இருந்து அள்ளித்தருவர். கபிலரின் சொற்கேட்க ஆவலோடு இருந்தான் பாரி.

கபிலர் சொன்னார், ``மருத நிலத்தில் ஒரு பறவை இருந்தது. அதன் பெயர் `அசுணமா’. இசைக்கு மயங்கும் பறவை அது. கூடல்வாசிகள் வைகைக் கரையில் அமர்ந்து, மாலைப்பொழுதில் சிறு யாழ் மீட்டி மகிழ்ந்திருப்பர். அசுணமா சிற்றொலி எழுப்பியபடி நாணல்களுக்குள் இருந்து ஒவ்வொன்றாகப் பறந்து வரும். யாழ் இசைக்கப்பட்டுக்கொண்டே இருக்க, இசைப்பவனைச் சுற்றி அசுணமா வந்து இறங்கும். கொன்றை மரக் கிளையால் செய்யப்பட்ட யாழையே கூடல்வாசிகள் மீட்டுவர். அசுணமா, கொன்றை மரத்தில் மட்டுமே அடையக்கூடிய பறவை. யாழின் இசை செவியிலும் கொன்றையின் வாசனை நாசியிலும் ஏற, அசுணமா கிறங்கி, அந்த இடத்திலேயே அடையத் தவிக்கும். நேரம் ஆக ஆக அது இசைப்பவனை நெருங்கும். பின்னர் அவன் மேலே ஏறத் தொடங்கும். அவனது தோள், கால், கை என எங்கும் சிற்றீசல்போல் மொய்க்கத் தொடங்கும். மயங்கிய அசுணமா, இசைப்பவனோடு கொஞ்சும்; தனது சிறு அலகால் அவனது கூந்தலைக் கோதும்.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 2 P83f
மலரின் இதழ் விரிவதற்காக, அவற்றுக்கு எதிரே பறந்தபடியே காத்திருக்கும் தேனீக்கள் போல, இசைப்பவனின் இமைக்கு நேரே இறக்கைகளை அசைத்தபடி அது தள்ளாடித் தள்ளாடி மிதக்கும். இசைப்பவன் அதைக் கண்டு சிரித்துக்கொண்டே யாழ் மீட்டுவான். அந்தச் சிரிப்பை தனது அலகால் கொத்த அவனது இதழை முட்டும். அதன் கொஞ்சலில் இருந்து விடுபட முடியா இசைஞன், இரவு எல்லாம் யாழ் மீட்டிக்கிடப்பான்” எனச் சொல்லும்போதே கபிலரின் குரல் உடையத் தொடங்கியது.
“கூடல்வாசிகளுக்கு அசுணமாதான் குலப்பறவை. இசை கேட்டுத் தலையாட்டும் அசுணமா, இன்று இந்த நிலவுலகில் எங்கும் இல்லை. அந்தப் பறவை இனம் எங்கே போனது, எப்படி அழிந்தது என யாருக்கும் தெரியவில்லை. `குட்டூர் முடவனார்’தான் ஒரு கவிதை பாடினார், அகுதையின் குலம் அழிந்த மறுநாள், யாழ் நரம்பில் வந்து மோதி மோதி, தங்களின் கழுத்தை அறுத்துக்கொண்டு அசுணமாக்களும் அழிந்தன என்று.”

விரல்களால் அவனது தலைமுடியை மெள்ளக் கோதினாள். ஆற்றல் இன்றி அயர்ந்துகிடந்த நீலன், கண்விழிக்க முயன்றான். அவள் கன்னம் தொட்டு, தூங்குமாறு இமை மூடினாள். அவனுக்குள் இரவின் ஆவேசம் மேலே எழும்பியபடியே இருந்தது. கிணைப்பாணனின் குரல் செவிப்பறைக்குள் மீண்டும் மீண்டும் வந்து மோதியது. நினைவுகள் அவனது கழுத்தை நெரித்தன. எல்லாவற்றையும் சட்டென மறுத்து கண் விழித்தான். அவள் சற்றே அச்சம்கொண்டாள். அவளது விரல்கள் கன்னம் தொட அஞ்சின.

அவன் கழுத்தைத் தூக்கி எழ முயலும்போது, அவள் நெஞ்சில் கைவைத்து அழுத்தி, அவனைப் படுக்கச் செய்தாள். அவன் மனம் இரவில் இருந்து மீள முயன்றது. அவள் விரல்களால் அவனது உடல் முகர்ந்து, வெளிவர வழி அமைத்துக்கொண்டிருந்தாள்.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 2 P83g
பாரி கேட்டான், “கூடல்வாசிகளுக்கு மட்டும் உழவு சிறப்பாக வசப்பட்டது எப்படி?'’

“எல்லோரும் காட்டை அழித்து விளைநிலமாக்கியபோது, காட்டை அறிந்துகொண்டு நிலத்தை விளையவைத்தவர்கள் அவர்கள்.”

ஆர்வத்தோடு பாரி வினவினான், ``எப்படி?”

``பன்றி அகழ்ந்த நிலத்தில் பயிர் நட்ட மலை அனுபவம்தான், சமதளத்தில் பயிர் நடுமுன் மண்ணை ஏர்கொண்டு கிளறச் சொல்லியது. பன்றியின் முன் உதடு பூமியின் தன்மையை உணரும். அதுபோல பூமியை உணரவும், அதைக் கிழித்து இறங்கும் மரத்தை உணரவும் முயன்றனர் கூடல்வாசிகள்.

வண்டல் மண்ணுக்கு, இறுகிய மண்ணுக்கு, இளமண்ணுக்கு என உழுபடைகளை வகைப்படுத்தி உருவாக்கினர். தாளி மரமும் வேலா மரமும் வெக்காளி மரமும்கொண்டு கலப்பைகள் செய்து, மண்ணின் தன்மைக்கு ஏற்ப அவற்றைப் பயன்படுத்தினர். உழு மரங்கள் மண்ணுக்கு ஏற்ற ஆழம்கொண்டு உழுதன. எல்லோரும் நிலத்தை உழ வேண்டும் என அறிந்திருந்தனர். ஆனால், உழும் நிலத்தை உணர வேண்டும் என்று அறிந்தவர்கள் அவர்களே.”

ணர முடியா இடத்தில் கிடந்த நீலனை உணரத் தலைப்பட்டாள் மயிலா. இடதுகையால் கழுத்தோடு அணைத்து அவனைத் தூக்கினாள்.அவனது முகம் முழுவதும் அவளது கூந்தல் உழுது இறங்கியது. மேல் உதடு கிளறி உள்ளிறங்கத் துடித்தன அவளது இதழ்கள். ஆனால், அவன் சோர்வில் இருந்து விடுபடாமல் இருந்தான். மூடி வைத்திருந்த சிறு கலயத்தை எடுத்து அவனுக்குக் குடிக்கக் கொடுத்தாள். அவன் கைகள் மிகவும் துவண்டிருந்தன. அவளது வலதுகை, கலயத்தைத் தாங்கியிருக்க... அவன் குடித்தான்.

நினைவுகளை உதிர்த்துவிட்டு வெளிவரத் துடிக்கும் அவனது வேட்கை, கண்களில் தெரிந்தது. நீராகாரம் உள்ளுக்குள் இறங்கி மயக்கம் கலைக்கத் தொடங்கியது. நீலன் நினைவின் ஆழத்தில் இருந்து மேலேறி மேலேறி, அவளது மார்பின் சரிவுக்கு வந்து சேர்ந்தான்.

பிலர், தான் கேள்விப்பட்ட அந்தப் பூர்வகதையை வியப்பு குறையாமலே சொன்னார்...

``அது மட்டும் அல்ல. ஏர்க்கலப்பையை மாடு இழுக்க, அதன் கழுத்தில் போடும் குறுக்கு ஆரத்தை (நேக்கா) எல்லா மரங்களிலும் செய்து மாட்டின் கழுத்தில் மாட்டி இழுக்கவைத்தனர். அகுதையின் குலம்தான் முதலில் கண்டறிந்தது, அத்தி மரம்தான் ஆவினத்தின் சேர்மானம் என்று. குறுக்கு ஆரத்தை அத்திமரத்தில் செய்தனர். அதுதான் கனம் குறைவாக இருக்கும். எவ்வளவு இழுத்தாலும் மாட்டின் கழுத்துத் தோலில் வடு பிடிக்காது. அதன் கழுத்து நரம்புக்கு எண்ணெய் நீவியதுபோல், சிறு நெளிவுக்குக்கூட சரிந்துகொடுத்துச் செல்லும்.”

பாரி வியப்போடு கேட்டான், “கால்நடைகளை மரங்களோடு இணைத்துப் பொருத்த மதிநுட்பம் தேவை. காடும் கால்நடைகளும் அதிசய உறவுகொண்டவை.”

‘ஆம்’ என்று தலையாட்டிய கபிலர் சொன்னார், “மரத்தையும் மாட்டையும் இணைத்தது மட்டும் அல்லாமல், தாவரத்தையும் மண்ணையும் இணைத்தனர். ஆவார இலையை அடிமண்ணில் போட்டபோது அவர்கள் சொல்வதை யாரும் நம்பவில்லை. அறுவடை நாளில் அம்பாரமாகக் குவிந்த விளைச்சல் கண்டு வாய் பிளந்தவர்கள், அந்தத் தாவரத்தின் பெயர் என்ன என மீண்டும் மீண்டும் வந்து கேட்டுப் போயினர்.”

``எதற்கும் ஆகார்” எனக் கேலி பேசிச் சிரித்த அவர்களின் பெருங்கிழவன் ஒருவன்தான், அந்த இலையைக் கண்டறிந்து நிலத்தில் போட்டு அமுக்கியவன். `பயிர்களுக்கு நல்ல ஆகாரம் இந்த இலை’ என அவன் சொன்னதை இரண்டு விளைச்சலுக்குப் பிறகே உண்மை என கூடல்வாசிகள் ஏற்றனர். `ஆகார இலை' என்று அந்த இலைக்குப் பெயர் சூட்டினர். அவர்களே அறியாமல் அது ஆவார இலையாக வளைந்துகொண்டது.”

வன் நீராகாரத்தைக் குடித்து முடித்தான். அவனது முகம் சற்றே அமைதிகொண்டது. மயிலா அவனை எப்படி உள்வாங்குவது எனத் தெரியாமல் தவித்தாள். அவனது முகத்தை மார்போடு அணைத்தபோது அவளது கைகள் நடுங்கின. தன்னை எத்தனையோ முறை தழுவிக்கிடந்த நீலன்தான் இவன். ஆனால், குலநாகினி கையில் ஏந்த நின்ற அந்தக் காட்சியைப் பார்த்தப் பிறகு, அவனைத் தொடவே ஆழ்மனம் அஞ்சுகிறது.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 2 P83h
“நேற்றைய இரவில் நான் பார்த்த நீலன் நீதானா?” என்று அவனைப் பார்த்துக் கேட்கவே, அவள் தலை குனிந்தாள். அந்தச் சமயம் அவனது தலை நிமிர்ந்தது. உதடுகள் உணர நிலம் கிளறி உள்ளிறங்கினான். இதழ்கள் இணைந்தபோதும் அவள் கொண்டுவந்ததை அவன் குடித்துக்கொண்டுதான் இருந்தான்.

சிறிதுநேரம் கழித்து, இதழ்கள் விலக்கி பெருமூச்சு வாங்கியபடி தன்நிலைக்கு வந்தாள்.

``நீ ஏன் உன்னைப் பற்றி என்னிடம் இதுவரை சொல்லவில்லை?’’

மயிலாவின் கேள்விக்கு, அவன் பதில் ஏதும் சொல்லவில்லை. அவளது இமைகள் துடித்து ஆடுவதையே பார்த்துக்கொண்டிருந்தான். அடிமண்ணில் ஆகாரமாகச் சேர்ந்துகிடக்கும் குலக்கதைகள் வெளிப்பார்வைக்குச் சட்டெனத் தெரியாதே!
“உனது தோள்கள் எனது அணைப்புக்கு அப்பாற்பட்டவையாக மாறியுள்ளன என உணர்கிறேன். உனக்குள் இருக்கும் நெருப்புக்கு முன் நம் காதல் நிலைகொள்ள மறுக்கிறது” எனச் சொல்லிக்கொண்டிருக்கும்போதே அவளது கண்களில் இருந்து நீர் வழிந்தது. ஒரு கணம் கண்களை மூடி தன்னை நிதானப்படுத்தினாள்.

பறம்பின் எல்லா பெண்களையும்போல அவளுக்கும் அந்தச் சமயம் வள்ளியே நினைவுக்கு வந்தாள். வள்ளியின் உறுதிப்பாட்டுக்கு இணை சொல்ல யாரும் இல்லை. பெண்ணின் வீரிய வடிவம் அவள். மயிலாவின் மனம் வள்ளியை நினைத்துக்கொண்டிருந்தபோது தன்னைத் தூக்கிக்கொண்டு செல்வதுபோல உணர்ந்தாள். வள்ளியின் நினைவு எந்தத் துயரத்தில் இருந்தும் வெளியேற்றும். நினைவின் சுகத்தை உடல் உணர்ந்துகொண்டிருந்தது.

சட்டென கண்விழித்துப் பார்த்தாள் மயிலா. நீலன் தன் இரு கைகளால் அவளைத் தூக்கியபடி மர நிழல்விட்டு வெயில் இறங்கும் நிலம் நோக்கி வந்து நின்றான்.

சூரிய ஒளி இருவர் மீதும் பொழிந்து இறங்கியது. அவளின் கண்களைப் பார்த்து நீலன் சொன்னான், “நான் அகுதை, நீ அசுணமா. வாழ்ந்தாலும் அழிந்தாலும் பிரிவில்லை நமக்கு.”

``மலையில் இருந்தவர்கள், காட்டில் இருந்தவர்கள், கடற்கரையில் இருந்தவர்கள் எல்லோரும் வெட்டிச் சாய்க்கும் வாள்முனையின் பின்னும் பாய்ந்து இறங்கும் அம்புமுனையின் பின்புமே அலைந்துகொண்டிருந்தனர். ஆனால், கூடல்வாசிகள்தான் எந்நேரமும் ஊர்ந்து நகரும் மண்புழுவின் பின்னும், சிறு துவாரம் உருவாக்கி மறுகணம் சிறகு விரிக்கும் ஈசலின் பின்னும் அலைந்துகொண்டிருந்தனர்” என்றார் கபிலர்

“உண்மைதான். ஆனால், வாள்முனைதானே வெற்றிகொண்டது. எந்த மண்ணிலும் விளைய வைக்கத் தெரிந்தவர்களை, விதைநெல்லே அறியாதவர்கள் வீழ்த்திவிட்டனரே. காலம் வைகையின் சாட்சியாகச் சொல்லும் செய்தி ஒன்றுதான். எந்தக் கணமும் நீ தாக்கப்படலாம். ஆனால், அதற்கு முந்தைய கணம் உன்னுடையது. அதில் நீ கையறுநிலையில் நின்றால் ஆறோடு உன் குலம் போகும்” என்றான் பாரி.

கபிலர் தலையசைத்து ஆமோதித்தார். ``அகுதை மாவீரன்தான். ஆனால், திருநாளின் அதிகாலையில் கொலைவாள் கொண்டு சூழப்படுவோம் என்பதை எதிர்பார்க்கும் அளவுக்கு அவன் மனம் சீர்கெடவில்லை.”

``தீயவர்களின் வீழ்ச்சி, மகிழ்வைக் கொடுக்கும்; பாதிப்பை ஏற்படுத்தாது. நல்லவர்களின் வீழ்ச்சியோ, துயரத்தோடு நிற்காது; பெரும்பாதிப்பை உருவாக்கும். அகுதையின் தோல்விதான் இந்த மண்ணின் சமநிலை சரியக் காரணமானது. வளமான பூமி தன் கை வந்ததும் வென்றவன் பெரும் வலிமைகொண்டவன் ஆனான். அதே போன்ற ஒரு கொலைவெறித் தாக்குதலை எதிர்பாராத பொழுதில் நிகழ்த்தினால், நாமும் பெரும்வளம் பெற்றவர்களாக மாறுவோம் என்ற எண்ணம் எல்லோருக்கும் வரத் தொடங்கியது. அதைவிடப் பெரும் தாக்குதலை நிகழ்த்தி அடுத்தடுத்து மூன்று குலங்களை அழித்ததனால், சேர குலம் முதல்நிலை பெற்றது. போர் என்பது அறை கூவி நிகழ்த்துவது என்ற மரபை உடைத்தான் கொற்கைப்பாண்டியன். அகுதையின் மீது தொடுக்கப்பட்டது போர் அல்ல.”

பாரி பேசிக்கொண்டிருக்கும்போது இடதுபுறம் இருந்த புதருக்குள் இருந்து செந்நாய் ஒன்று பாய்ந்து ஓடியது. அது ஓடிய திசைநோக்கி விரைந்தான் பாரி. அது அடுத்தடுத்த புதர்களுக்குள் நுழைந்து வேகம்கொண்டது. அதன் திசையைக் கூர்ந்து கவனித்தபடி தனது கையில் இருந்த ஈட்டியை இழுத்து வீசினான். செடிகொடிகளைக் கிழித்துக்கொண்டு அதன் விலாவிலே இறங்கியது ஈட்டி.

பாரியை நோக்கி ஓடிவந்து நின்ற கபிலர், மூச்சிரைத்தபடியே கேட்டார், ``அது இறந்துவிட்டதா?”

“ஆம்” என்றான் பாரி.

தன்போக்கில் போகும் விலங்கை ஈட்டி எரிந்து கொல்லும் செயல், கபிலருக்கு நடுக்கத்தை ஏற்படுத்தியது. `பாரிதானா இது?!' எனப் பதறியபடி பார்த்தார்.

புதருக்குள் போன பாரி, தான் எறிந்த ஈட்டியை அதன் உடலில் இருந்து பிடுங்கி எடுத்து வந்தான். கபிலரின் முகத்தில் இருந்த வெறுப்பைப் பார்த்தபடி இலைகளால் ஈட்டியில் இருந்த குருதியைத் துடைத்துக்கொண்டே சொன்னான், “விலங்குகள் தமது உணவுக்காக பிற விலங்குகளை வேட்டையாடித் தின்கின்றன. ஆனால், தனது உணவுக்காகவும் தேவைக்காகவும் மட்டும் அல்லாமல், கண்ணில் படும் எல்லா விலங்குகளையும் கொன்றுபோடும் இயல்புடைய விலங்கு இது மட்டும்தான். கண்ணில் படும் நாடுகளை எல்லாம் விழுங்கப்பார்க்கும் வேந்தர்களைப்போல.”

கபிலர் அதிர்ந்து பார்த்தார்.

“காட்டு உயிர்களின் அழிவுச்சக்தி இதுவே. அழிவுச்சக்திகளை எந்த இடத்தில் கண்டாலும் பறம்பின் ஈட்டி பாயும்.”

- பறம்பின் குரல் ஒலிக்கும்...

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4624
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Tue 8 May 2018 - 18:53

வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 2 83p1
ரண்டாம் நாள் நள்ளிரவுக்கு முன்பே தெய்வவாக்கு விலங்கு, மரம் இறங்கி பழத்தை எடுத்தது. முன்புறம் நடப்பதுபோலவே பின்புறமும் நடப்பது இந்த விலங்கின் இயல்பு. பழம் எடுத்ததும், சில நேரம் திரும்பி நடந்து மரக்கிளையின் மீது ஏறும்; சில நேரம் யாரும் தன்னை நெருங்கிவிடுவார்களோ என்ற பயத்தால் முன்பக்கம் பார்த்தபடியே கால்களைப் பின்னால் நகர்த்திப் போகும். இந்த முறை அப்படித்தான் போனது. அது பின்னால் நடந்து போனால், இரட்டை விளக்கு ஏற்றப்பட வேண்டும் என்பது வழக்கம். மரத்துக்கு முன்பு வைக்கப்பட்டிருந்த தீச்சட்டியில் நெருப்பு எரிந்துகொண்டிருந்தது. எண்ணெயில் முக்கி எடுத்த சிறு மரத்துண்டுகளைக் கொண்டுவந்து அதில் பக்குவமாக வைத்தனர். குலநாகினியின் கண்கள் அதைப் பார்த்துக்கொண்டிருக்க, பிற நாகினிகள் அந்த வேலையைச் செய்தனர்.

விளக்கில் தீயின் கனஅளவு அதிகமாகி, தழல் இரு கூறுகளாகப் பிரிந்து எரிந்தது. தீயின் கனஅளவு எவ்வளவு இருக்க வேண்டும் என்பதையும், தழல் எத்தனை கூறுகளாகப் பிரிய வேண்டும் என்பதையும் அவர்கள் முடிவுசெய்தனர். நீர்பாய்ச்சுவதைப்போல, தீயையும் கட்டுப்படுத்திப் பாய்ச்ச அவர்கள் கற்றிருந்தனர். குலநாகினி பார்த்துக்கொண்டிருக்க, எழும் நெருப்பின் தழல் பல கூறுகளாகப் பிரிந்து இரு கூறுகளாக நிலைகொண்டது.
நேற்றைப்போலவே தெய்வவாக்கு விலங்கு பழம் எடுத்ததும் பாணர் கூட்டம் உள்ளிறங்கும் என எதிர்பார்த்திருந்த கபிலருக்கு, சற்றே ஏமாற்றமாக இருந்தது. வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 2 83p5

“கூத்து தொடங்க நேரமாகும். வாருங்கள் நாம் இந்த மரத்தைச் சுற்றிப்பார்த்துவிட்டு வருவோம்” எனச் சொல்லி, கபிலரை அழைத்துக்கொண்டு நடந்தான் பாரி.

கொற்றவை நிலைகொண்டிருக்கும் மரக்கூட்டம் பெரும் அடர்த்திகொண்டது. மனிதனால் உள்நுழைய முடியாத அளவுக்குப் பின்னிக்கிடப்பது. பாரியோடு கபிலர் அந்த மரத்தைச் சுற்றி நடந்துகொண்டிருந்தார். அடர்ந்த காட்டில், பந்த வெளிச்சத்தில் ஆங்காங்கே தனித்தனியான வீடுகள் இருப்பது தெரிந்தது.

“இந்த அடர்வனத்தில் தனி வீடுகள் ஏன் இருக்கின்றன?” எனக் கேட்டார் கபிலர்.

“இது ஒரு மர விலங்கு. காலகாலமாக இந்த ஒரு மரத்தில் மட்டுமே இந்த விலங்கு வாழ்கிறது. வேறு எந்த மரத்திலும் இது ஏறாது. எனவே, இந்த இடம் தவிர, வேறு எங்கேயும் இந்தப் பிராணியை நீங்கள் பார்க்க முடியாது. இந்த விலங்கு, வேட்டை விலங்குகளுக்கு மிகவும் பிடித்த உணவு. இந்த மரப் புதருக்குள் நுழைந்து இதை எப்படியாவது தின்றுவிட அவை முயல்கின்றன. அதனால்தான் இதைப் பாதுகாக்க காவற்குடிகள் இங்கு இருக்கின்றனர்.”
பேசிக்கொண்டிருக்கும்போது துடிப்பறையின் ஒலி கேட்கத் தொடங்கியது. `‘வாருங்கள்’’ எனச் சொல்லி வேகமாக முன் நடந்தான் பாரி.

செம்பாதேவியின் கதை இது. எனவே, ஆடுகளம் முழுவதையும் நிறைத்து ஓர் அழகிய கோலம் போடப்பட்டிருந்தது. பாரியும் கபிலரும் இருக்கையில் வந்து அமர்ந்தனர். அப்போதுதான் தரையை மெழுகி, கோலம் போட்டிருந்ததால் சாணத்தின் வாசனை எங்கும் வீசியது. அதன் ஈரம் காயவில்லை. கோலத்தின் நடுவில் வெண்ணெயில் தானியங்களை உருட்டிச் செய்யப்பட்ட `வெண்சாந்து உருண்டை’ வைக்கப்பட்டிருந்தது. அந்த உருண்டையின் நடுவில் மாட்டின் இரு கொம்புகளை நட்டுவைத்திருந்தனர். வெண்சாந்து உருண்டையின் வாசனை எங்கும் பரவியிருந்தது.

கோலத்தின் முன்பு பெண் ஒருத்தி அமர்ந்து உடுக்கை வகையைச் சேர்ந்த துடிப்பறையை அடிக்கத் தொடங்கினாள்.

“இவர்கள் பாணர்களா?” எனக் கேட்டார் கபிலர்.

“இல்லை... பறம்பு மக்கள்” என்றான் பாரி.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 2 83p2
துடியின் ஓசை பேராந்தையின் ஓசையைப்போல அச்சத்தை ஏற்படுத்தக்கூடியது. நீருக்குள் பொடி கரைவதைப்போல, இருளுக்குள் துடி கரையத் தொடங்கியது. தங்களுக்கு என்று பாணர்கள் அற்ற குலம் இவர்களுடையது. அந்தக் குலப்பெண் செம்பாதேவியின் கதையைத் தொடங்கினாள். கபிலர் கேள்விப்பட்டிராத கதை இது.

ஆதிகாலத்தில் மலைமக்களில் ஒரு பிரிவினர் கால்நடைகளை வளர்க்கப் பழகியபோது, மேய்ச்சல் நிலங்களை நோக்கி தந்தரைக்கு இறங்கினர். குறிஞ்சி நிலத்தைவிட்டு இறங்கிய ஐந்து குடும்பங்கள் செம்மலையின் அடிவாரத்தில் குடில் அமைத்தனர். கால்நடைகளை மேய்த்துப் பல்கிப் பெருக்கினர். ஐந்து வகைக் குடும்பத்தின் குலவழி தழைத்தது.

அந்தக் குலவழியின் வகையை அடிப்படையாகக்கொண்டு அடையாளங்களை உருவாக்கவேண்டிய தேவை வந்தது. குலத்துக்கு ஒரு வகை என ஐவகையான சூட்டுக்காயங்களை ஆண்கள் தம் வலது தோளிலே உருவாக்கிக் கொண்டனர். பெண்களுக்கு அதே போல சூட்டுக்காயத்தை உருவாக்கினால் திருமணத்துக்குப் பின்னர் அவளது குடும்ப அடையாளம் மாறும், எனவே சூட்டுக்காயம் சரிப்பட்டு வராது. வேறு வழிகளைச் சிந்தித்தனர். பெண்களே அதற்கு ஒரு முடிவும் கண்டனர். தங்களின் தலைமுடியை, குலத்துக்கு ஒரு வகை என ஐந்து வகைகளாகப் பின்னிக்கொள்வது என முடிவு எடுத்தனர்.

ஐவகைக் கொண்டைகளை உருவாக்கினர். அந்தக் காலத்தில், எல்லா நாட்டுப் பெண்களுக்கும் தலைமுடியைச் சுருட்டி கொண்டைபோடும் பழக்கம் மட்டும்தான் இருந்தது. ஆனால், உச்சந்தலையில் வகிடு எடுத்து இரு பக்கங்களும் முடி சரிய இரு கொண்டைகள்... அதேபோல மூன்று, நான்கு, ஐந்து என ஐந்து விதமான கொண்டைகளை இவர்கள் முடிந்தனர். ஐந்து விதங்களிலும் சடைகளைப் பின்னினர். அதில் மேய்ச்சலுக்குச் செல்லும் வெவ்வேறு நிலத்தின் பூக்கள் சூடப்பட, இவர்களைப் பார்க்கும் ஆணும் பெண்ணும் சொக்கிப்போனார்கள். `அழகைப் பேணும் அதிசயக் கூட்டம்' என இவர்களைப் பற்றி திசை எங்கும் பேச்சு பரவியது.

மேய்ச்சலின்போது கால்நடைகளின் கோமியம் வெவ்வேறு வகையில் வளைந்து வளைந்து வடிவம்கொள்வதை, காலம்பூராவும் பார்த்துக்கொண்டிருந்தவர்கள் இந்தப் பெண்கள். அந்த நீர்க்கோலம் மனதுக்கு எப்போதும் ஒரு காட்சி இன்பத்தை ஏற்படுத்தக்கூடியது. ஆனால், கணப்பொழுதில் அந்தக் காட்சி மறைந்துவிடும். புன்னகை, காற்றில் மறைவதைப்போல மண்ணில் மறையும் மஞ்சள் வண்ண நீர் அது.

தனது குடிலின் வாசலில் அதே போன்ற ஒரு கோலத்தை வரைந்தால் என்ன என எண்ணினர். இடித்த குருணையின் தொலியைச் சிறுகத் தூவியபடி அவர்களின் விரல்கள் வலமும் இடமுமாக வளைய ஆரம்பித்தன. ஐந்து விதமாக தலைமுடியைப் பின்னியும் கொண்டைபோட்டும் பழக்கப்பட்ட விரல்களுக்கு வளைந்து நெளியும் கோலம் எளிதில் வசப்பட்டது. மாடு பெய்த நீரின் எல்லா வளைவுகளையும் தனது ஒற்றைக் கோலத்துக்குள் கொண்டுவர அவர்களுக்கு அதிக காலம் ஆகவில்லை.

செம்மலையின் அடிவாரத்தில் உள்ள பெண்கள் விதவிதமாகக் கொண்டை போட்டு, தரை எங்கும் கோலம் போடும் அழகு அரசிகள் என எல்லோராலும் பேசப்பட்டனர். காட்டு வழியிலும் உமணர்களின் காது வழியிலும் இந்தச் செய்தி எல்லா பகுதிகளுக்கும் பரவியது. இவர்கள் இருக்கும் பகுதிக்கு `கோலநாடு' எனப் பெயர் உருவாயிற்று.

புதிய நாகரிகத்தின் அடையாளமாக செம்மலை மாறியது. இதில் வெளி உலகுக்குத் தெரியாத இன்னொன்றும் இருந்தது. ஐந்து குடும்பங்களும் தங்களின் மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துப்போய்விட்டு வந்து, ஐந்து தனித்தனிப் பட்டியில்தான் அடைக்க வேண்டும். அப்படி என்றால், அவற்றுக்கும் தனித்தனி அடையாளம் தேவை. மாடுகளுக்கு, பிற இடங்களில் சூட்டுக்குறி, காது அறுத்தக் குறிகள் எல்லாம் போட்டிருப்பதைக் கேள்விப்பட்டனர். கால்நடைகளே தங்களின் தெய்வம். எனவே, அவற்றைத் துன்புறுத்தாத வழியில் அடையாளம் இட விரும்பினர்.

மூத்த கிழவி ஒருத்தி, `இந்தச் செம்மலையில் இத்தனை வகையான வண்ணக்கற்கள் கிடக்கின்றன. அவற்றை எடுத்து, ஒரு குடும்பத்துக்கு ஒரு வண்ணம் என முடிவுசெய்யுங்கள். அந்த வண்ணக்கல்லையே அந்தக் குடும்பத்தின் மாடுகளுக்கும் நெற்றிப்பட்டமாகச் சூட்டுங்கள்’ என்றாள். அதில் இருந்து ஐந்து வகையான வண்ணக் கற்களைக்கொண்டு கொம்புகளுக்கு இடையில் கயிறு முடிந்து நெற்றிப்பட்டத்தை உருவாக்கினர்.

மாடுகள் எந்த நிலையிலும் துன்பப்படக் கூடாது என்பதே இவர்களின் எண்ணமாக இருந்தது. கிடைமாடுகளின் மேல் சிறுபூச்சிகளும் உண்ணிகளும் நிறைந்துகிடந்தன. அவற்றைக் கொத்தித் தின்ன எந்த நேரமும் பறவைகள் அவற்றின் மீதே அமர்ந்து இருந்தன.
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 2 83p3
இதைத் தடுக்க ஒரு வழியைக் கண்டறிந்தனர். திரட்டப்பட்ட வெண்ணெயில் தானியங்களைக் கலந்து, பெரிய வெண்சாந்து உருண்டைகளை உருவாக்கினர். அந்த உருண்டையை நாணல்கூடையில் வைத்து கிடையின் ஓரம் ஏதாவது ஓர் இடத்தில் வைத்துவிட்டால் போதும். பறவைகள் முழுக்க வெண்சாந்து உருண்டையைத்தான் மொய்த்துக்கிடந்து, மாடுகளின் பக்கம் போகவே போகாது.

ஒருநாள் இரவு வெண்சாந்து உருண்டை வைக்கப்பட்டிருந்த நாணல் கூடையை குடிலுக்குள் வைக்காமல், மறந்து வெளியில் வைத்துவிட்டுத் தூங்கிவிட்டனர். நாணல் கூடையின் இண்டு இடுக்குகளில் ஒட்டியிருப்பதை இரவு முழுவதும் பறவைகள் கொத்தித் தின்றுள்ளன. காலையில் எழுந்து பார்த்தபோது, நாணல் கூடை நார்நாராக உதிர்ந்துகிடந்தது. வெண்சாந்து உருண்டையின் சுவை, பறவைகளையே வெறிகொள்ளச் செய்துள்ளது.
நாடோடி நாகரிகம் எல்லா உயிர்களையும் தனதாக்கி நேசித்தது. இவர்களின் குலம் தலைமுறைத் தலைமுறையாகத் தழைத்து முன்னேறியது. மனிதர்களும் கால்நடைகளும் பல்கிப் பெருகின.

கோல நாட்டினர், பல்வேறு குழுக்களாக ஒவ்வோர் ஆண்டும் மார்கழி மாதம் பிரிந்து மேய்ச்சலுக்குப் போவார்கள்; மீண்டும் ஆவணி மாதம் செம்மலைக்குத் திரும்புவார்கள். எல்லோரும் கொண்டுவரும் மாடுகள் குடும்ப அடையாளத்தோடு பிரிக்கப்பட்டு, கணக்கு வைத்துக்கொள்ளப்படும்.

வழக்கம்போல் மார்கழி மாதம் கோல நாட்டில் இருந்து மேய்ச்சலுக்காகப் பல்வேறு திசைகளில் கிடைபோட குழுக்கள் புறப்பட்டுப் போயின. ஒரு குழு, காவிரி ஆற்றின் படுகையில் நகர்ந்தது. பதினெட்டுக் குடும்பங்களையும் இருநூறு மாடுகளையும் கொண்டிருந்தது அந்தக் கிடை. அந்தக் கிடையில் சுடர்ந்து ஒளிவீசும் தழல்போல் இருப்பவள் செம்பா. வகிடு எடுத்து இரு சடை பின்னிய குடும்பம் அவளுடையது. கோவனின் தோள்கள் மாட்டின் திமில்போல் உருத்திரண்டு இருக்கும். அவனது வலது தோளில் பொறிக்கப்பட்ட மூன்று சூட்டு அடையாளத்தின் மீது சிறுவயதில் விரல்வைத்துப் பார்த்த செம்பா, இப்போது இதழ் பதித்துப் பார்க்கவே ஆசைப்படுகிறாள்.

கிடையின் முன்னால் நடந்துபோகும் கோவனின் நடையைத் தொடர்ந்து மொத்த மாடுகளும் நகர்ந்தன. கிடையின் இடது ஓரம், நாணல் கூடை தூக்கி நடக்கும் செம்பாவைச் சுற்றி பறவைக் கூட்டம் மிதந்து வந்தது. மாட்டின் காதுகள் விடைத்து ஆட, பறவைகளின் இறக்கைகள் படபடத்து அடிக்க, பசுக்களுக்கும் பறவைகளுக்கும் நடுவில் செழித்து வளர்ந்தது அவர்களின் காதல்.

கிடைமாடு நடந்துகொண்டிருக்கும்போதே குட்டியை ஈனும். அந்தக் குட்டியால் உடனடியாக கிடையின் வேகத்துக்கு நடக்க முடியாது. பால் குடிக்கும் நேரம் தவிர, பிற நேரத்தில் அதைத் தோளிலே தூக்கித்தான் நடக்க வேண்டும். கோவன் இளங்குட்டியைத் தோளில் தூக்கி நடக்க, ஈன்ற பசு அவனை உரசியே நடந்து வந்து, குட்டியை நாவால் நக்கி இன்புற்றது. செம்பாவின் கண்கள் அவனையே பார்த்துக்கொண்டிருந்தன. தோளில் கிடக்கும் இளங்குட்டியின் மீது ஒரு கணம் பொறாமை வந்து விலகியது.

மாலையில் மாடுகளைக் கிடைபோட்டு, இரவு கஞ்சி குடித்து, தங்களின் குடிலுக்கு நடுவில் சிறு கூத்து நிகழ்த்துவர். எல்லோருக்கும் பாடத் தெரியும். ஆள் மாற்றி ஆள் பாடுவர். கிடையில் காவலுக்கு நிற்பவன்கூட எட்ட இருந்தே தனது பாடலைப் பாடுவான். எல்லோரின் பாடலுக்கும் துடிப்பறை முழங்கி இசை கொடுப்பவன் கோவன்தான். இடது கை துடியை இழுத்துப் பிடிக்க வலது கை விரல்களால் அதன் வலதுபுறத்தை அடித்து அடித்து தாளம் எழுப்பும் அழகைப் பார்த்து மகிழ்வாள் செம்பா. அன்று கோவனின் துடியிசை வழக்கத்துக்கு மாறாகத் துள்ளலோடு இருந்தது. கூத்து முடிந்ததும் எல்லோரும் தங்களின் குடிலுக்குப் போக செம்பா, கோவனின் காது அருகே போய்ச் சொன்னாள், “துடியின் இடப்பக்கம் போலவே நானும் உனது விரல்படாமல் இருக்கிறேன்.”

கோவன் கலங்கிப்போனான். அன்று இரவு முழுவதும் துடியின் இடதுபுறம் பற்றியே நினைத்திருந்தான். கிடைக் காவல்காரனின் பார்வைக்குத் தப்பி குடில் தாண்ட முடியாது. வேறு வழியின்றி கோவன் ஒடுங்கிப் படுத்தான்.வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 2 83p6
மறுநாள் பக்கத்தில் இருக்கும் ஊருக்கு வெண்ணெய் விற்கப் போனாள் செம்பா. வெண்ணெய் விற்று, தானியம் பெற்றுவருவது பெண்களின் வேலை. உழவு செழிப்பாக நடந்துகொண்டிருந்த ஊர் அது. இரு தெருக்களைத் தாண்டும் முன்பே அவள் கொண்டுவந்த வெண்ணெய் விற்றுத் தீர்ந்தது. தானியங்களைப் பெற்றுக்கொண்டு மர அடிவாரத்தில் காத்திருந்தாள். எதிர்ப்பக்கம் விற்கப்போன அவள் தோழி இன்னும் வரவில்லை. அங்கும் இங்குமாகப் பார்த்துக்கொண்டிருந்தாள். சற்றுத் தொலைவில் நின்றிருந்த இளைஞன் ஒருவன் தன்னையே பார்த்துக்கொண்டிருந்ததை அவள் கவனித்தாள். தோழியை கண்கள் தேடிக்கொண்டிருக்க, தன்னைக் கடந்துபோகும் பெரியவரிடம், ``இந்த ஊர் பெயர் என்ன?’’ எனக் கேட்டாள்.

“உறையூர்” என்றார் அவர்.

பார்த்துக்கொண்டிருந்தவனைக் கடந்து தோழி நடந்து வந்தாள். இருவரும் கிடை நோக்கி தானியங்களைத் தூக்கிக்கொண்டு நடந்தனர். தானிய முடியை மறுதோளுக்கு மாற்றியபடியே தோழி சொன்னாள். “உன்னைப் பார்த்துக்கொண்டே நின்றவன் இந்த ஊர் குலத்தலைவரின் மகனாம். ஊருக்குள் நுழைந்ததில் இருந்து உன் பின்னால்தான் வந்துகொண்டிருக்கிறானாம். கிள்ளி என அவனை அழைத்தார்கள்.”
வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர் - Page 2 83p4
``புதுவிதமான பெயராக இருக்கிறதே?”

“ `எதிரிகளின் தலையைக் கிள்ளி எடுத்ததால் இந்தப் பெயர் உருவாயிற்று’ என்று ஒரு மூதாட்டி சொன்னாள். ஆனால், உன்னைப் பார்த்துக்கொண்டிருந்த அவனது கண்களும் அதே வேலையைத்தான் செய்தன.”

அவள் சொல்வதைப் பொருட்படுத்தாத செம்பா, மகிழ்வோடு சொன்னாள், “இன்று சிறு சோளம் கிடைத்திருக்கிறது. காரமாட்டுப்பாலில் இருந்து கடையப்பட்ட இளவெண்ணெயைப் பிசைந்து சாப்பிட்டால், அப்படி ஒரு சுவை இருக்கும். நினைக்கும்போதே நாவூறுகிறது” என்றாள்.

இரவு, கஞ்சி குடித்த பிறகு கூத்து முடிந்து எல்லோரும் கலைந்தனர். அன்றைய கிடைக்காவல் முறையில் கோவனும் உண்டு. செம்பா அவனுக்காகச் சமைத்த கஞ்சியைச் சிறு கலயத்தில் ஏந்தி குடிலுக்குப் பின் காத்திருந்தாள். இருள் நன்றாக அடங்கிய பிறகு குடிலுக்குப் பின்புறமாக மறைவாக வந்து சேர்ந்தான் கோவன். அந்த இடமே சுவையால் மணத்துக்கிடக்க, பூத்து நின்றாள் செம்பா. பிசைந்த உணவை ஊட்ட அவன் வாய் அருகே கையைக்கொண்டு சென்றபோது நாவால் விரல் தொட்டு வாங்கினான்.

அந்தச் சிறு தொடுதல் மொத்த உடலையும் குலுக்கியது. காதலின் கூர்மிகு ஆயுதம் நீர்சுரக்கும் நுனி நாக்கு. சற்றும் எதிர்பாராமல் கோவன் அதைப் பயன்படுத்தியபோது செம்பா நடுங்கிப்போனாள்.

உணவு அருந்தியபடியே துடியின் இடதுபுறத்தின் மீது அவனது விரல்கள் படரத் தொடங்கின. அவள் உள்நடுங்கிக் குலுங்கினாள். அவள் கண்செருகி மீண்டபோது கடைசிக் குடிலுக்குப் பின்னால் குதிரையில் ஒருவன் போவது தெரிந்தது. கிடையில் கிடந்த நாய்கள் சுதாரித்து அந்தத் திசைநோக்கிப் பாயத் தொடங்கின. ஆனால், குதிரை படுவேகத்தில் மறைந்தது. நாயின் குரைப்பொலியில் அனைவரும் எழுந்துவிட்டனர். வேல்கம்பைத் தூக்கியபடி முன்னால் ஓடி நின்றான் கோவன். அவிழ்ந்த நூல்களைக் கட்டியபடி குடிலுக்குள் நுழைந்த செம்பாவிடம் எதிர்ப்பட்ட தோழி சொன்னாள்... “வந்தது அவன்தான்”. சொல்லியபோது செம்பாவின் கட்டு கழன்று இருந்ததை அதிர்ச்சியோடு பார்த்தாள் தோழி.

செம்பா, தலையை மறுத்தபடி ஆட்டி, சற்றே வெட்கப்பட்டுச் சொன்னாள்...

“கோவன்.”

தோழி திரும்பிப் பார்த்தாள். கோவன் வேல்கம்போடு முன்னிலையில் நின்றுகொண்டிருந்தான். காதல், கண நேரத்துக்குள் எல்லோரையும் கண்ணைக்கட்டி விளையாடிக்கொண்டிருந்தது. நாய்கள் திருடனோடு சேர்ந்து ஓடுபவனைக் குரைத்தன. தோழி கோவனின் அருகில் போய் காதோடு சொன்னாள், “இனி நீ கிடைக்காவல் நிற்கும் நாள் எல்லாம், நான் இடைக்காவலுக்கு நிற்பேன்.”

மறுநாள் மாலையில், கிடைக்கு இடப்புறம் இருந்த பெருமேட்டிலே தந்தையோடு வந்து நின்றான் கிள்ளி. சற்றுத் தொலைவில் மாட்டுக்கிடையும் குடில்களும் இருந்தன. தந்தையின் கண்கள் மாடுகளை எண்ணின.

“இருநூறுக்கும் குறைவாகத்தான் இருக்கிறது. இதைவிட பெருஞ்செல்வம் இருக்கும் இடத்தில் பெண் எடுப்போம்” என்றார்.

அவனோ அவர் சொல்வதை ஏற்கவில்லை. “அவள் பேரழகு, அதற்கு இணையான செல்வம் எதுவும் இல்லை” என்றான்.

அவரோ மறுத்துப் பேசி அவனது மனதை மாற்ற முயன்றுகொண்டிருந்தார். நடக்கவில்லை. சரி, நமது மாளிகைக்குப் போய் பேசிக்கொள்வோம் என முடிவு எடுத்து குதிரையின் மீது ஏறப்போகும்போது சொன்னான்... “இன்னும் சிறிது நேரத்தில் குடிலுக்கு நடுவில் பந்தம் ஏற்றி கூத்து நிகழ்த்துவார்கள். அப்போது அவள் குடிலுக்குள் இருந்து வெளியில் வருவாள். அவளை நீங்கள் பாருங்கள். நான் சொல்வதை ஏற்பீர்கள்” என்றான்.

இருள் கூடியது. பந்தங்கள் ஏற்றப்பட்டன. எல்லோரும் வந்து கோலத்தைச் சுற்றி அமர்ந்தனர். கோவன் வழக்கம்போல துடியோடு வந்து உட்கார்ந்தான். நேர் எதிரில் தோழி வந்து உட்கார்ந்தாள். கோவன் சற்றே தலையைத் திருப்பி தனக்குள் சொல்லிக்கொண்டான்... “துடியின் இடப்புறத்தை ஊர் திரும்பி மணம் முடிப்பது வரை நினைக்கக் கூடாது.”

அவள் இன்னும் ஏன் குடில்விட்டு வெளிவரவில்லை என ஆவலோடு பார்த்தபடி தொலைவில் நின்றுகொண்டிருந்தான் கிள்ளி. எங்கும் கும்மிருட்டுச் சூழ்ந்திருந்தது. பந்த வெளிச்சத்தில் எதிர்சுடர் வீச அவள் குடிலுக்குள் இருந்து வெளியேறி வந்து, கோவனுக்கு எதிரில் உட்கார்ந்தாள். நேற்று கலைந்த வெட்கம், இன்று கூடி நின்றது. கோவனால் அவளை நேர்கொண்டு பார்க்க முடியவில்லை. அவனது விரல்கள் துடியின் மீது படவே அஞ்சின. தாளம் கூடவில்லை. ஓசையும் அவனைப்போலவே பம்மியது. கிடையின் பெரியாம்பளைச் சொன்னார், “டேய்... நேத்து கஞ்சி குடிச்சவன் மாதிரி அடிச்சுக்கிட்டு இருக்க, சத்தமே கேட்கலை. இழுத்து அடிடா.”

தோழி சொன்னாள்...

“பெருசு, நேத்தும் அவன் கஞ்சி குடிக்கலை. அதுதான் விரல் செத்துப்போய் கிடக்கு.”

செம்பா அதிர்ச்சியோடு தோழியைப் பார்த்தபோது, அவளோ சற்றே ஆணவச் சிரிப்போடு கோவனைப் பார்த்தாள்.

தொலைவில் இருந்து பார்த்தபடி அவள் பேரழகில் மயங்கி வாய்பிளந்து நின்ற கிள்ளி, தந்தையிடம் காட்ட அவரை நோக்கித் திரும்பினான். அவரோ ஒலியற்ற இருளின் திசையை நோக்கி வாய்பிளந்து பார்த்தபடி, அதிர்ச்சியில் உறைந்து நின்றார்!

- பறம்பின் குரல் ஒலிக்கும்...


aeroboy2000
aeroboy2000
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 263
இணைந்தது : 29/08/2012

Postaeroboy2000 Wed 9 May 2018 - 16:04

அன்பர்
ரா.ரமேஷ்குமார்
அவர்களே


தங்களிடம் கோரிய வாறு
யானே ஒரு மாதிரி 6 அங்குல
புத்தகங்களை இணைத்துள்ளேன்

விருப்பம் உள்ள அன்பர்கள்
வோர்ட் ஆவணத்தில் தொடரலாம் ..........

15 அத்தியாயங்கள்  .....


நன்றி ....

Sponsored content

PostSponsored content



Page 2 of 19 Previous  1, 2, 3 ... 10 ... 19  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக