புதிய பதிவுகள்
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Today at 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Today at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:59 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:29 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 5:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:02 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:25 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:17 pm

» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Today at 12:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 11:42 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! - Page 5 Poll_c10மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! - Page 5 Poll_m10மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! - Page 5 Poll_c10 
43 Posts - 52%
ayyasamy ram
மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! - Page 5 Poll_c10மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! - Page 5 Poll_m10மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! - Page 5 Poll_c10 
29 Posts - 35%
prajai
மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! - Page 5 Poll_c10மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! - Page 5 Poll_m10மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! - Page 5 Poll_c10 
3 Posts - 4%
mohamed nizamudeen
மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! - Page 5 Poll_c10மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! - Page 5 Poll_m10மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! - Page 5 Poll_c10 
3 Posts - 4%
Jenila
மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! - Page 5 Poll_c10மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! - Page 5 Poll_m10மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! - Page 5 Poll_c10 
2 Posts - 2%
Ammu Swarnalatha
மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! - Page 5 Poll_c10மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! - Page 5 Poll_m10மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! - Page 5 Poll_c10 
1 Post - 1%
M. Priya
மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! - Page 5 Poll_c10மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! - Page 5 Poll_m10மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! - Page 5 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! - Page 5 Poll_c10மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! - Page 5 Poll_m10மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! - Page 5 Poll_c10 
86 Posts - 61%
ayyasamy ram
மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! - Page 5 Poll_c10மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! - Page 5 Poll_m10மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! - Page 5 Poll_c10 
29 Posts - 21%
mohamed nizamudeen
மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! - Page 5 Poll_c10மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! - Page 5 Poll_m10மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! - Page 5 Poll_c10 
7 Posts - 5%
prajai
மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! - Page 5 Poll_c10மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! - Page 5 Poll_m10மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! - Page 5 Poll_c10 
5 Posts - 4%
Jenila
மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! - Page 5 Poll_c10மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! - Page 5 Poll_m10மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! - Page 5 Poll_c10 
4 Posts - 3%
Rutu
மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! - Page 5 Poll_c10மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! - Page 5 Poll_m10மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! - Page 5 Poll_c10 
3 Posts - 2%
Baarushree
மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! - Page 5 Poll_c10மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! - Page 5 Poll_m10மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! - Page 5 Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! - Page 5 Poll_c10மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! - Page 5 Poll_m10மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! - Page 5 Poll_c10 
2 Posts - 1%
manikavi
மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! - Page 5 Poll_c10மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! - Page 5 Poll_m10மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! - Page 5 Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! - Page 5 Poll_c10மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! - Page 5 Poll_m10மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! - Page 5 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்!


   
   

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Aug 04, 2015 12:48 am

First topic message reminder :

மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! - Page 5 Tasmac%20protest%201
கடந்த ஒருவாரமாக தமிழகத்தின் மூலைமுடுக்கெல்லாம் மதுவிலக்கு கோரி பொதுமக்கள் நடத்தும் போராட்டங்கள் ஆளும் அரசுக்கு நெருக்கடியை உண்டாக்கியிருக்கிறது.அதனால்தான் தலைமைச் செயலகம் வந்த முதல்வர் காவல்துறை அதிகாரிகளோடு மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு குறித்து அவசர அவசரமாகக் கேட்டு அறிந்து இருக்கிறார்.

கோட்டையில் அவசர ஆலோசனை நடந்து கொண்டிருக்கும்போதே சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் அந்தக் கல்லூரி அமைந்துள்ள பகுதியில் இருக்கும் டாஸ்மாக் கடைமுன்பு திரண்டனர்.புத்தகத்தைப் படிக்கவா சாராயத்தைக் குடிக்கவா என்று முழக்கங்கள் எழுப்பியவாறு டாஸ்மாக் கடையை மூடச் சொல்லி போராட்டம் நடத்தினர்.காவல்துறை அனுமதி மறுத்து அவர்கள் மீது தாக்குதல் நடத்த மாணவர்களும் விடாமல் போராடினர்.ஒரு கட்டத்தில் டாஸ்மாக் கடைமீது கல்லெறிந்து அடித்து நொறுக்கினர்.அப்போது நிகழ்ந்த தள்ளுமுள்ளுவில் காவல்துறையினரால் கடுமையாகத் தாக்கப்பட்ட மாணவர்கள் சிலர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து அங்கு பதற்றம் நிலவுகிறது.

விருத்தாசலம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு முன்பாகத் திரண்ட இளைஞர்கள் நெடுநாட்களாக பல்வேறு பிரச்சனைகள் எழ காரணமாக இருந்த,தமிழக அரசு நடத்திவரும் டாஸ்மாக் கடையை அடித்து நொறுக்கியுள்ளனர்.இன்னும் பல இடங்களில் பொதுமக்கள்,வயது வித்தியாசம் இன்றி தாமாகவே முன்வந்து டாஸ்மாக் கடைகளை முற்றுகையிட்டு மூடவலியுறுத்தி `மதுவிலக்கு` என்ற சமுதாய ஆரோக்கிய தீபத்தை ஏற்ற கோரிக்கை விடுத்த வண்ணம் இருக்கின்றனர்.

தமிழகத்தில் மதுவிலக்கு கொண்டுவர வலியுறுத்தி போராட்டங்கள் நடப்பது ஐம்பது ஆண்டுகளுக்கு மேலான வரலாற்றைக் கொண்டது.மதுவிலக்கை வலியுறுத்தி பெரியார் தனது தோட்டத்தில் இருந்த நூற்றுக் கணக்கான தென்னை மரங்களை வெட்டி வீழ்த்தினார். அவர் காலம் தொடங்கி காங்கிரஸ்,திமுக,அதிமுக என்று கட்சிகள் மாறிமாறி தமிழகத்தில் ஆட்சி செலுத்திய போதும் மதுவிலக்குக் கொள்கை மட்டும் ஆளும் ஆண்ட கட்சிகளுக்கு வேப்பங்காயாக கசக்கவே செய்தது;கசந்தும் வருகிறது. இதில் ஆட்சி அதிகாரம் வகிப்போரே மதுபானம் தயாரிக்கும் ஆலைகளை நடத்தி வருவதும் மதுபான விடுதிகள் பார்கள் நடத்திவருவதும் யதார்த்தம்.

கடந்த 31ஆம் தேதி மதுவிலக்கு கொண்டுவர வலியுறுத்தி மார்த்தாண்டத்தில் செல்போன் கோபுரத்தில் ஏறி போராட்டம் நடத்திய காந்தியவாதி சசிபெருமாள் பரிதாபமாக இறந்தார். 5 மணி நேரத்திற்கும் மேலாக பல நூறு அடிக்கும் அதிகமான உயரம் கொண்ட செல்போன் டவரில் நின்றபடி போராடிய அவர்,போலீசாரின் தவறான அணுகுமுறையால்,அரசின் மெத்தனத்தால் உடல் நலம் பாதிக்கப்பட்டு ரத்த வாந்தி எடுத்த நிலையில் பிணமானார். ஒட்டுமொத்த தமிழகமும் காட்டுத் தீயென பரவிய காந்தியவாதி சசிபெருமாள் மரணச் செய்தி அரசியல் இயக்கங்களை ஒன்று படுத்தி,கடந்த 4 நாட்களாக போராட்டங்களைத் தீவிரப்படுத்தி இருக்கிறது.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவரின் தாயாரோடும் மதுவிலக்கு போராட்டத்தை சொந்த ஊரான கலிங்கப்பட்டியிலிருந்து முன்னெடுத்து இருக்கிறார்.நேற்று(ஞாயிறு)அங்கு நடந்த போரட்டத்தில் போலீசார் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசி போராட்டக்காரர்களைக் கலைத்துள்ளனர்.இது மேலும் எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றியது போல மாறி இருப்பதை இன்று(திங்கள்) நடந்து வரும் போராட்ட சம்பவங்கள் காட்டுகின்றன.

காந்தியவாதி சசிபெருமாளின் சொந்த ஊரில் அவரின் வாரிசுகளும்,அரசியல் இயக்கங்களும் அவர் வலியுறுத்திய மதுவிலக்கு போராட்ட தீபத்தை கையிலெடுத்துள்ளனர்.போலீசாரின் மிரட்டல்களுக்கும் கைது கொடுமைகளுக்கும் அஞ்சாமல் தியாகி சசிபெருமாளின் மகள் கவியரசி பள்ளிச் செல்லும் சிறுமியும் சிறைக்குள் தள்ளப்பட்டு இருக்கிறார். வேலூர்,சேலம்,காஞ்சிபுரம் என்று பல்வேறு பகுதிகளில் இருக்கும் செல்போன் கோபுரங்களில் ஏறி இளைஞர்கள் போராடி வருகிறார்கள்.அவர்களிடம் மிரட்டல் விடுக்கும் காவல்துறை சமாதானம் பேசுவது போல பேசி கீழிறங்க வைத்து கைது செய்து வருகிறார்கள் தமிழகம் முழுவதும் உள்ள பல ஆயிரம் செல்போன் டவர்கள் தற்போது போலீசாரின் காவலில் இருக்கின்றன.

தற்போது மதுவிலக்கு போராட்டம் கல்லூரி மாணவர்கள் மத்தியிலும் பரவியுள்ளது.சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் அதனைத் தொடங்கி வைத்துள்ளனர்.மதுரையில் மதிமுக பொதுச் செயலாளர் தமிழக கல்லூரி மாணவர்கள் கையில்தான் மதுவிலக்கு உள்ளது.அதனால் 1965 ஆம் ஆண்டு மொழிப் போராட்டங்களில் மாணவர்கள் பங்காற்றியது போல இப்போது மதுவிலக்கிலும் பங்கெடுக்கவேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார். நாளை(செவ்வாய்) தமிழகம் முழுவதும் மதிமுக,கம்யூனிஸ்ட் கட்சிகள், விசிக,தேமுதிக, காங்கிரஸ், வணிகர் சங்கங்கள் மற்றும் பால் நுகர்வோர் சங்கம் ஆகியவை இணைந்து மதுவிலக்கு கோரும் பந்த் நடத்த உள்ளனர். இதற்கு,பாஜகவும் திமுகவும் ஆதரவை வழங்கியுள்ளன.

35 ஆண்டுகளாக மது ஒழிப்புக்காகப் போராடி வரும் டாக்டர் ராமதாஸ்,பாமக இதில் பங்கேற்காது என்று கூறிவிட்டார். தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியும் இதில் பங்கேற்காது என்றும் ஆனால் மதுவிலக்குக் கொள்கையை மதிக்கிறோம் என்றும் அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். பந்த் மூலம் பெருமளவில் மதுவிலக்கு ஆதரவை திரட்ட இந்தக் கட்சிகள் முடிவு செய்து பெருமளவில் திட்டமிட்டுள்ளன.

வரும் 6 ஆம் தேதி தேமுதிக சார்பில் சென்னை உள்ளிட்ட அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் மனிதச் சங்கிலி போராட்டம் நடைபெறவுள்ளது.அடுத்து வரும் 10 ஆம் தேதி மதுவிலக்கை நடைமுறைப்படுத்த கோரி திமுக சார்பில் அறவழியில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளது.தமிழகம் முழுக்க மதுவிலக்கு கோரிக்கை வலிமையடைந்துள்ளது.ஆனால் ஆளும் அரசுத் தரப்பில் கோரிக்கை நிறைவேற்றப்படுவது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் போராட்டத்தை எப்படி நீர்த்துப் போகச் செய்யலாம் என்ற கோணத்தில் ஆலோசிக்கப்படுவதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.



மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Aug 08, 2015 1:25 pm

மதுவுக்கு 4,011 டாஸ்மாக் ஊழியர்கள் பலி: கடைகளை மூட பணியாளர்களே வலியுறுத்தல்

தமிழகத்தில் மதுவுக்கு அடிமையாகி கடந்த 13 ஆண்டுகளில் 4,011 டாஸ்மாக் ஊழியர்கள் இறந்துள்ளனர். அதனால், மதுக்கடை களை மூடிவிட்டு, மாற்றுப்பணி வழங்க வேண்டும் என அரசுக்கு டாஸ்மாக் பணியாளர் சங்கங்களே வலியுறுத்தியுள்ளன.

தமிழகத்தில் 2003-ம் ஆண்டு நவம்பர் 29-ம் தேதி அரசு டாஸ் மாக் சில்லறை விற்பனை தொடங் கப்பட்டது. ஆரம்பத்தில், டாஸ்மாக் கடைகளில் பணிபுரிய மேற்பார்வை யாளர்களுக்கு ரூ.2 ஆயிரம், விற்பனையாளர்களுக்கு ரூ.1,500 என ஊதியம் நிர்ணயிக்கப்பட்டது. இப்பணிக்கு மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

குடும்பத்தில் விருப்பமோ, சமுதாயத்தில் மரியாதையோ இல்லாத இந்த வேலையில் சேர இளைஞர்கள் ஆர்வம் செலுத்தாத தால் மேற்பார்வையாளருக்கு ரூ.3,000, விற்பனையாளருக்கு ரூ.2,000, உதவி விற்பனையாள ருக்கு ரூ.1,500 ஊதியம் வழங்கப் படும் என மீண்டும் அறிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து இந்த வேலைக்கு எஸ்.எஸ்.எல்.சி. முதல் பட்டதாரிகள் வரை விண் ணப்பித்தனர். இவர்களில், 36,000 பேரை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் தேர்வு செய்து, 6,286 கடைகளில் பணி நியமனம் செய்தனர். தற்போது டாஸ்மாக் கடைகள் எண்ணிக்கை 6,856 ஆக அதிகரித்துள்ளன.

இதுபோன்ற சூழ்நிலையில், தமிழகத்தில் கடந்த 13 ஆண்டுகளில் மதுவுக்கு அடிமையாகி டாஸ்மாக் கடைகளில் பணிபுரிந்த 4,011 ஊழி யர்கள் மரணமடைந்துள்ளனர். அதனால், டாஸ்மாக் கடை களை மூடிவிட்டு மாற்றுப் பணி வழங்க வேண்டும் என டாஸ்மாக் பணியாளர்கள் சங்கங்களே தற்போது அரசை வலியுறுத்தி வருகின்றன.

இதுகுறித்து தமிழ்நாடு டாஸ்மாக் ஏ.ஐ.டியூ.சி. சங்க மாநில பொதுச்செயலர் தனசேகரன் ‘தி இந்து’விடம் கூறியதாவது:

டாஸ்மாக் நிறுவனத்தில் வரு வாய் 2004-ம் ஆண்டு ரூ.4,867 கோடியாக இருந்தது. இது தற் போது ரூ.26,852 கோடியாக அதிகரித்துள்ளது. குடிப்பவர் கள் எண்ணிக்கையும், கடைகள் எண்ணிக்கையும் அதிகரித்துவிட் டன. ஆனால், டாஸ்மாக் ஊழி யர்கள் எண்ணிக்கை மட்டும் நாளுக்குநாள் சுருங்கி வருகிறது. 36 ஆயிரமாக இருந்த ஊழியர்கள் எண்ணிக்கை, 26,865 பேராக குறைந்துவிட்டனர்.

டாஸ்மாக் கடைகள் தொடங் கியபோது நான்கு ஆண்டு வேலை நியமன தடை சட்டம் நடைமுறையில் இருந்தது. இதனால், படித்த இளைஞர்களுக்கு வேறு வாழ்வாதாரம் இல்லாததால் இந்த வேலையில் சேர்ந்தோம். அதன்பின் போதுமான ஊதி யம் இல்லை. சலுகைகள் இல்லாததால் பெரும்பாலான ஊழியர்கள் குடிப்பழக்கத்துக்கு அடிமையாகிவிட்டனர்.

அதனால் சமுதாயத்திலும், குடும்பத்திலும் மதிப்பில்லாத இந்த வேலையில் தொடர விருப்பம் இல்லாத டாஸ்மாக் ஊழியர்கள் பலர் சுயதொழில், குரூப்-2, குரூப்-4 தேர்வு எழுதி அரசுப் பணிக்கு சென்றுவிட்டனர்.

1,500 பேர் முதல் 2,000 பேர் வரை தற்போது ‘சஸ்பெண்ட்’, ‘டிஸ்மிஸ்’ நடவடிக்கையில் உள் ளனர். மீதியுள்ளவர்களில் 4,011 பேர் மரணமடைந்துள்ளனர். குறிப்பாக கடந்த 2012, 2013, 2014 ஆகிய மூன்று ஆண்டுகளில் 600-க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். இதற்கு காரணம் அவர்கள் மதுவுக்கு அடிமையானதே.

பலர் குடித்துவிட்டுதான் கடையை திறக்கின்றனர். இவர் கள் குடித்துவிட்டு வாக னத்தை ஓட்டுவதால் விபத்தில் மரணமடைகின்றனர். பலர் உடல் நலத்தை பராமரிக்காமல் மது குடித்தே மாரடைப்பு, கல்லீரல், மஞ்சள் காமாலை நோயால் இறக்கின்றனர்.

வெளியூர்களில் தங்கி பணி புரியும் ஊழியர்கள், வாரம் ஒருமுறை அல்லது இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை வீட்டுக் குச் செல்கின்றனர். அதனால், இயற்கையாகவே குடும்பங்களில் பிரச்சினை ஏற்பட்டு புரிதல் இல்லாமல் பலர் தற்கொலை செய்துள்ளனர்.

சனி, ஞாயிறு விடுப்பு வேண்டும்

இவ்வாறு டாஸ்மாக் ஊழியர்கள் 4,011 பேரின் மரணத்துக்கு அடிப்படை காரணமாக மது இருந் துள்ளது. கடந்த 13 ஆண்டு களில் மது வாங்க வரும் வாடிக்கையாளர்களின் கண்ணீர் அஞ்சலி போஸ்டரை பார்க்கிறோம். அதற்கு நாங்களும் ஒரு வகையில் காரணம் என்கிறபோது வேதனையாக உள்ளது.

அதனால், டாஸ்மாக் கடை களை மூட வேண்டும் என்பதில் எங்களுக்கு மாற்றுக் கருத்து இல்லை. முதற்கட்டமாக மாதத்தின் முதல் சனி, ஞாயிறு விடுமுறை அளிக்க வேண்டும். விற்பனை நேரத்தை குறைக்க வேண்டும். மதுக்கடைகளின் எண்ணிக்கையை குறைத்து படிப்படியாக மூடலாம் என்றார்.

டாஸ்மாக் நிறுவனத்தில் வருவாய் 2004-ம் ஆண்டு ரூ.4,867 கோடியாக இருந்தது. இது தற்போது ரூ.26,852 கோடியாக அதிகரித்துள்ளது. குடிப்பவர்கள் எண்ணிக்கையும், கடைகள் எண்ணிக்கையும் அதிகரித்துவிட்டன.



மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Aug 09, 2015 10:00 pm

மதுவிலக்கு: தமிழகம் முழுவதும் நாளை திமுக ஆர்ப்பாட்டம்

மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் திங்கள்கிழமை திமுக ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளது.

மதுவிலக்குக் கோரி எதிர்க்கட்சிகள் பல்வேறு வகையில் போராட்டம் நடத்தி வருகின்றன.

திமுக சார்பில் மாவட்டத் தலைநகரங்களில் இந்த ஆர்ப்பாட்டம் திங்கள்கிழமை காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது.




மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Aug 09, 2015 10:04 pm

மதுவிலக்குக்கு வாய்ப்பு இல்லையென்றால், படிப்படியாக குறையுங்கள்

பூரண மதுவிலக்குக்கு வாய்ப்பு இல்லையென்றால், படிப்படியாக மதுக்கடைகளின் எண்ணிக்கையையும், விற்பனை நேரத்தையும் குறைக்க வேண்டும் என்று தேமுதிகவின் செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சுதந்திரத் தினத்தன்று அதற்கான அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

பூரண மதுவிலக்கை அமல்படுத்த வாய்ப்பில்லை என்றாலும், பிற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக, படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்தும் வேண்டும்.

ஆகஸ்டு 15 சுதந்திரத் தினத்தன்று மதுக்கடைகளின் எண்ணிக்கையையும், விற்பனை நேரத்தையும் குறைத்து, 21 வயது பூர்த்தியானவர்களுக்கு மட்டுமே மதுவிற்பனை செய்யப்படும் எனும் அறிவிப்பை முதல்வர் ஜெயலலிதா வெளியிடவேண்டும்.

அக்டோபர் 2-ஆம் காந்தி ஜெயந்தி அன்று அந்த அறிவிப்பை அமல்படுத்த வேண்டும்.




மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Aug 09, 2015 11:31 pm

சிவா wrote:மதுவிலக்குக்கு வாய்ப்பு இல்லையென்றால், படிப்படியாக குறையுங்கள்

பூரண மதுவிலக்குக்கு வாய்ப்பு இல்லையென்றால், படிப்படியாக மதுக்கடைகளின் எண்ணிக்கையையும், விற்பனை நேரத்தையும் குறைக்க வேண்டும் என்று தேமுதிகவின் செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சுதந்திரத் தினத்தன்று அதற்கான அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

பூரண மதுவிலக்கை அமல்படுத்த வாய்ப்பில்லை என்றாலும், பிற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக, படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்தும் வேண்டும்.

ஆகஸ்டு 15 சுதந்திரத் தினத்தன்று மதுக்கடைகளின் எண்ணிக்கையையும், விற்பனை நேரத்தையும் குறைத்து, 21 வயது பூர்த்தியானவர்களுக்கு மட்டுமே மதுவிற்பனை செய்யப்படும் எனும் அறிவிப்பை முதல்வர் ஜெயலலிதா வெளியிடவேண்டும்.

அக்டோபர் 2-ஆம் காந்தி ஜெயந்தி அன்று அந்த அறிவிப்பை அமல்படுத்த வேண்டும்.
மேற்கோள் செய்த பதிவு: 1156770

ம்...செய்தால் நல்லது புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக