புதிய பதிவுகள்
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Sun Jun 02, 2024 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தியாவின் சகிப்புத்தன்மைக்கு அதன் தத்துவங்களே காரணம் -டென்மார்க் மைக்கேல்! Poll_c10இந்தியாவின் சகிப்புத்தன்மைக்கு அதன் தத்துவங்களே காரணம் -டென்மார்க் மைக்கேல்! Poll_m10இந்தியாவின் சகிப்புத்தன்மைக்கு அதன் தத்துவங்களே காரணம் -டென்மார்க் மைக்கேல்! Poll_c10 
16 Posts - 59%
heezulia
இந்தியாவின் சகிப்புத்தன்மைக்கு அதன் தத்துவங்களே காரணம் -டென்மார்க் மைக்கேல்! Poll_c10இந்தியாவின் சகிப்புத்தன்மைக்கு அதன் தத்துவங்களே காரணம் -டென்மார்க் மைக்கேல்! Poll_m10இந்தியாவின் சகிப்புத்தன்மைக்கு அதன் தத்துவங்களே காரணம் -டென்மார்க் மைக்கேல்! Poll_c10 
11 Posts - 41%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தியாவின் சகிப்புத்தன்மைக்கு அதன் தத்துவங்களே காரணம் -டென்மார்க் மைக்கேல்! Poll_c10இந்தியாவின் சகிப்புத்தன்மைக்கு அதன் தத்துவங்களே காரணம் -டென்மார்க் மைக்கேல்! Poll_m10இந்தியாவின் சகிப்புத்தன்மைக்கு அதன் தத்துவங்களே காரணம் -டென்மார்க் மைக்கேல்! Poll_c10 
58 Posts - 62%
heezulia
இந்தியாவின் சகிப்புத்தன்மைக்கு அதன் தத்துவங்களே காரணம் -டென்மார்க் மைக்கேல்! Poll_c10இந்தியாவின் சகிப்புத்தன்மைக்கு அதன் தத்துவங்களே காரணம் -டென்மார்க் மைக்கேல்! Poll_m10இந்தியாவின் சகிப்புத்தன்மைக்கு அதன் தத்துவங்களே காரணம் -டென்மார்க் மைக்கேல்! Poll_c10 
32 Posts - 34%
T.N.Balasubramanian
இந்தியாவின் சகிப்புத்தன்மைக்கு அதன் தத்துவங்களே காரணம் -டென்மார்க் மைக்கேல்! Poll_c10இந்தியாவின் சகிப்புத்தன்மைக்கு அதன் தத்துவங்களே காரணம் -டென்மார்க் மைக்கேல்! Poll_m10இந்தியாவின் சகிப்புத்தன்மைக்கு அதன் தத்துவங்களே காரணம் -டென்மார்க் மைக்கேல்! Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
இந்தியாவின் சகிப்புத்தன்மைக்கு அதன் தத்துவங்களே காரணம் -டென்மார்க் மைக்கேல்! Poll_c10இந்தியாவின் சகிப்புத்தன்மைக்கு அதன் தத்துவங்களே காரணம் -டென்மார்க் மைக்கேல்! Poll_m10இந்தியாவின் சகிப்புத்தன்மைக்கு அதன் தத்துவங்களே காரணம் -டென்மார்க் மைக்கேல்! Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியாவின் சகிப்புத்தன்மைக்கு அதன் தத்துவங்களே காரணம் -டென்மார்க் மைக்கேல்!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Feb 22, 2015 9:31 am

இந்தியாவின் சகிப்புத்தன்மைக்கு அதன் தத்துவங்களே காரணம் -டென்மார்க் மைக்கேல்! Vr6fgoLVSBeeUUPvNotj+Tamil_News_large_118968620150222010523

பண்பாடு, பழக்கவழக்கம், கல்வி, வேலைவாய்ப்பு என, எல்லாவற்றிலும் நாம், மேலைநாடுகளை பின்பற்றும் சூழலில், அதே விஷயங்களுக்காக மேலைநாட்டவர், இந்தியாவை பின்பற்றும் காட்சிகளும் ஆங்காங்கே காணக் கிடைக்கின்றன.
டென்மார்க்கைச் சேர்ந்த, 59 வயதான மைக்கேல், சைவ சித்தாந்தம் பற்றி ஆய்வு செய்து வருகிறார். சென்னை பல்கலை மாணவரான அவரிடம் பேசியதில் இருந்து...

* சென்னை பல்கலையில் படிப்பதற்கான காரணம்?


இதற்கான காரணத்தை ஒரு வரியில் சொல்லிவிட முடியாது. என் வாழ்க்கைக்கும், இந்த படிப்புக்கும் தொடர்பு உள்ளது. நான் பொறியியல் படித்துவிட்டு, தகவல் தொடர்பு துறையில் வேலை பார்த்துக்கொண்டிருந்தேன். அப்போது, என் இல்லற வாழ்க்கையில் இருந்து, மனைவி பிரிந்து சென்று விட்டாள். பின், இல்லற வாழ்வில் இருந்து, என் மனமும் விலக துவங்கியது. தத்துவங்களின் மீது நாட்டம் ஏற்பட்டது. டென்மார்க்கில் உள்ள ஒரு கல்லூரியில், மேலைநாட்டு தத்துவவியல் சார்ந்த படிப்பை முடித்தேன். அதே காலகட்டத்தில் தான், இந்தியாவுக்கு அடிக்கடி வரும் வாய்ப்புகளும் கிடைத்தன. அப்போது, காசியில் நடந்த, ஒரு தத்துவ மாநாட்டிற்கு பார்வையாளனாக சென்றிருந்தேன். அங்கு, விவாதிக்கப்பட்ட இந்திய தத்துவங்கள், என் அகப்பார்வையை வேறுவிதமாக திருப்பின. அதிலும் குறிப்பாக, சைவ சித்தாந்த தத்துவங்கள் என்னை மிகவும் கவர்ந்து விட்டன. பின், சைவ சித்தாந்தத்தில் பட்டப்படிப்பு படிக்க நினைத்தேன். என் விருப்பத்தை, அந்த மாநாட்டுக்காரர்களிடம் தெரிவித்தேன். அவர்கள், சென்னை பல்கலையும், மதுரை காமராஜர் பல்கலையும் தான், இந்த பாடங்களை நடத்துவதாக தெரிவித்தனர். நான், சென்னை பல்கலைக்கு விண்ணப்பித்தேன். பெரும் போராட்டங்களுக்கு பின், வாய்ப்பு கிடைத்தது.

* சென்னை பல்கலையில் உங்களின் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாயினவா?


சென்னை பல்கலையில், சைவ சித்தாந்தம் குறித்த தத்துவத்துக்காக விண்ணப்பித்த எனக்கு, பொது தத்துவம் வழங்கப்பட்டது. ஆயினும், சைவசித்தாந்தம் படிக்க துவங்கினேன். தமிழகத்தில் உள்ள பல்வேறு மடங்களுக்கும், கோவில்களுக்கும் சென்றேன். படிப்படியாக, சென்னை பல்கலையிலேயே சைவசித்தாந்தம் படிப்பதற்கான வாய்ப்பு கிடைத்ததால், எம்.பில்., முடிக்க முடிந்தது. இப்போது, பி.எச்டி., படித்துக்கொண்டிருக்கிறேன்.

* மேலைநாட்டு தத்துவங்களுக்கும் இந்திய தத்துவங்களுக்குமான வேறுபாடுகளாக உங்கள் பார்வையில் படுவன எவை?


நல்லனவற்றை செய்பவன் சொர்க்கத்துக்கும், தீயன செய்பவன் நரகத்துக்கும் செல்வான் என்பது, மேலைநாட்டு தத்துவம். மேலைநாட்டு தத்துவங்கள், மறுபிறவியை மறுக்கின்றன. கடவுளால் முன்மொழியப்பட்டபடியே, பிறப்புகள் அமைகின்றன என, அவை கூறுகின்றன. வாழ்வியல் நெறிகள், அதில் வகுக்கப்படவில்லை என்பதே என் கருத்து. என் நாட்டில், தத்துவங்களை, பாதிரியார்கள் மட்டுமே பேசுவர். அவர்களிடம் இருந்து விருப்பப்பட்டோர் கேட்டுக்கொள்வர். மற்றவர்களை தத்துவங்கள் ஈர்ப்பதில்லை. மேலை நாடுகளில், வாழ்வியல் நெறிகளை, சட்டங்களே தீர்மானிக்கின்றன. பைபிளின் புதிய ஏற்பாட்டில், காலத்திற்கேற்ப தேவையான மாற்றங்களை, டென்மார்க் அரசு செய்திருக்கிறது. அங்கு, பாதிரியார்களும், தேவாலயங்களும், அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதால், அரசும், மதமும் வேறல்ல என்ற நிலை உள்ளது. அதனால், பைபிள், நாளுக்குநாள் மாறி வருகிறது.

இந்திய தத்துவங்களை பொறுத்தவரை, மாயை, ஆணவம் பற்றி அதிகம் பேசுகிறது. மற்ற தத்துவங்களும், வாழ்வியலோடு ஒட்டி வருகின்றன. சாங்கியம், யோகம், நியாயம், மீமாம்சை, வைசேஷிகம் ஆகிய தத்துவங்கள், வாழ்வியலை ஒட்டியே விளக்கப்படுகின்றன. சரியை, கிரியை, யோகம், ஞானத்தின் மூலம் வாழ்வியலின் உயர்ந்த நிலையை அடையும் மார்க்கங்கள், சைவசித்தாந்தத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளன. இந்திய தத்துவம், மறுபிறவியை பற்றியும், இந்த பிறவியின் வாழ்வியல் நெறிகளையும் போதிக்கிறது. மந்திரங்களும், ஆகமங்களும் வாழ்வியலோடு இணைந்தே இருக்கின்றன. நான், காஷ்மீர் முதல், தமிழகம் வரை பயணித்த போது, மக்களின் சகிப்புத்தன்மைக்கு, இந்திய தத்துவங்களே காரணம் என்பதை உணர்ந்து கொண்டேன்.

* வாழ்வியலோடு இணையாத தத்துவம் எப்படிப்பட்டதாக இருக்கிறது?


இங்குள்ள தத்துவங்கள் பக்தியோடு ஊடுருவி இருப்பதால், பழக்கவழக்கங்களோடும், சடங்குகளோடும், நீதிக்கதைகள் மூலமும், காலம்காலமாக கடத்தப்படுகின்றன. இந்தியாவில், சாதாரண மக்கள் கூட, மந்திரங்களை சொல்லி வழிபடும் வழக்கமும், மற்ற மதத்தினரின் வழிபாட்டு தலங்களுக்கு அருகிலேயே, சகிப்புத்தன்மையுடன் வழிபாடு நடத்தும் பாங்கும், வேறெங்கும் காணமுடியாது.

* சைவசித்தாந்தத்தை பற்றி தெரிந்துகொள்ள மொழி தடையாக இல்லையா?


பெரும்பாலான மந்திரங்களும், ஆகமங்களும் சமஸ்கிருதத்தில் இருந்ததால், சமஸ்கிருதத்தை கற்றுக்கொண்டேன்.

* உங்களின் எதிர்கால திட்டம்?

நான், எங்கள் வீட்டில் சிவலிங்கத்தை வைத்து, மந்திரங்கள் சொல்லி, தினமும் பூஜித்து வருகிறேன். அங்கு, நான் கற்றவற்றை யாரிடமும் பகிர்ந்துகொள்ள முடியாது. அதனால், படிப்பை முடித்தபின், அடிக்கடி இந்தியாவிற்கு வந்து, இந்திய தத்துவங்களை பற்றி எடுத்துக்கூற இருக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Feb 22, 2015 10:59 am

நான், எங்கள் வீட்டில் சிவலிங்கத்தை வைத்து, மந்திரங்கள் சொல்லி, தினமும் பூஜித்து வருகிறேன். அங்கு, நான் கற்றவற்றை யாரிடமும் பகிர்ந்துகொள்ள முடியாது. அதனால், படிப்பை முடித்தபின், அடிக்கடி இந்தியாவிற்கு வந்து, இந்திய தத்துவங்களை பற்றி எடுத்துக்கூற இருக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
இந்தியாவின் சகிப்புத்தன்மைக்கு அதன் தத்துவங்களே காரணம் -டென்மார்க் மைக்கேல்! 3838410834 நன்றி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக