புதிய பதிவுகள்
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 7:09 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:05 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர் - Page 4 Poll_c10சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர் - Page 4 Poll_m10சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர் - Page 4 Poll_c10 
60 Posts - 48%
ayyasamy ram
சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர் - Page 4 Poll_c10சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர் - Page 4 Poll_m10சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர் - Page 4 Poll_c10 
53 Posts - 42%
mohamed nizamudeen
சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர் - Page 4 Poll_c10சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர் - Page 4 Poll_m10சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர் - Page 4 Poll_c10 
6 Posts - 5%
ஜாஹீதாபானு
சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர் - Page 4 Poll_c10சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர் - Page 4 Poll_m10சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர் - Page 4 Poll_c10 
3 Posts - 2%
rajuselvam
சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர் - Page 4 Poll_c10சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர் - Page 4 Poll_m10சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர் - Page 4 Poll_c10 
1 Post - 1%
Kavithas
சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர் - Page 4 Poll_c10சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர் - Page 4 Poll_m10சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர் - Page 4 Poll_c10 
1 Post - 1%
bala_t
சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர் - Page 4 Poll_c10சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர் - Page 4 Poll_m10சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர் - Page 4 Poll_c10 
1 Post - 1%
prajai
சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர் - Page 4 Poll_c10சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர் - Page 4 Poll_m10சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர் - Page 4 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர் - Page 4 Poll_c10சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர் - Page 4 Poll_m10சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர் - Page 4 Poll_c10 
284 Posts - 42%
heezulia
சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர் - Page 4 Poll_c10சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர் - Page 4 Poll_m10சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர் - Page 4 Poll_c10 
277 Posts - 41%
Dr.S.Soundarapandian
சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர் - Page 4 Poll_c10சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர் - Page 4 Poll_m10சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர் - Page 4 Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர் - Page 4 Poll_c10சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர் - Page 4 Poll_m10சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர் - Page 4 Poll_c10 
26 Posts - 4%
sugumaran
சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர் - Page 4 Poll_c10சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர் - Page 4 Poll_m10சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர் - Page 4 Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர் - Page 4 Poll_c10சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர் - Page 4 Poll_m10சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர் - Page 4 Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர் - Page 4 Poll_c10சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர் - Page 4 Poll_m10சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர் - Page 4 Poll_c10 
5 Posts - 1%
prajai
சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர் - Page 4 Poll_c10சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர் - Page 4 Poll_m10சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர் - Page 4 Poll_c10 
5 Posts - 1%
Kavithas
சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர் - Page 4 Poll_c10சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர் - Page 4 Poll_m10சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர் - Page 4 Poll_c10 
4 Posts - 1%
manikavi
சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர் - Page 4 Poll_c10சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர் - Page 4 Poll_m10சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர் - Page 4 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர்


   
   

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Wed Sep 03, 2014 2:00 pm

First topic message reminder :

சேதி சொல்லும் சிற்பங்கள்!
முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன்
சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர் - Page 4 P40b


சைவர்களுக்குக் கோயில் என்றால் சிதம்பரத்தையும் (தில்லை), வைணவர்களுக்கான கோயில் என்றால் ஸ்ரீரங்கம் ஸ்ரீஅரங்கநாதர் ஆலயத்தையும் சொல்வார்கள். ஆனால், தமிழகத்தில் பெரியகோயில் என்றால் தஞ்சைப் பெருவுடையார் கோயில் என்று சொல்லப்படும் ஸ்ரீபிரகதீஸ்வரர் ஆலயம்தான்!

சுமார் ஆயிரம் வருடங்களைக் கடந்து நிற்கிற பிரமாண்டமான ஆலயம். சோழப் பேரரசன் முதலாம் ராஜராஜசோழன், தன்னை சிவபாதசேகரன் என அழைத்துக் கொள்வதில் மகிழ்ச்சி கொண்டான். இவனின் மகன் ராஜேந்திர சோழன், தன் சிறப்புப் பெயர்களுள் ஒன்றாக 'சிவசரணசேகரன்’ எனும் பெயரைப் பெருமையுடன் ஏற்றுக்கொண்டான். சைவத்தின் மீதும் சிவபெருமானின் மீதும் மாறாப் பற்றுக் கொண்ட தந்தையும் மகனும் கட்டிய ஆலயங்கள் ஏராளம்.

தாங்கள் அடைந்த பெருவெற்றியின் அடையாளமாகவோ அல்லது தங்கள் பெருமித வெற்றி தந்த ஆணவத்தின் வெளிப்பாடாகவோ அவர்கள் கோயில்களைக் கட்டவில்லை. கடவுளின் முன்னே அனைவரும் சமம் எனும் உயர்ந்த நெறியை உலகுக்கு உணர்த்தும் விதமாகவே ஆலயங்களை அமைத்தார்கள்.

சில வருடங்களுக்கு முன்பு பெரியகோயிலில், திருமாளிகைப் பத்தி எனும் திருவூற்று மண்டபத் தின் ஒரு பகுதியைக் கடைக்கால் வரை தோண்டி, அடித்தளமாக விளங்கும் முண்டுக் கற்களை வெளியே எடுத்துவிட்டு, மீண்டும் அந்தப் பகுதியை முழுவதுமாகச் சீரமைத்தனர். அப்போது உள்ளிருந்து எடுக்கப்பட்ட முண்டுக் கற்களில் மாமன்னன் ராஜராஜசோழனின் படைவீரர்களின் பெயர்கள் மற்றும் தனி நபர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டிருந்தன. எதற்காக அங்கே பெயர் பொறித்தான் மன்னன்? கற்களை எவர் வழங்கினாரோ, அவர்களின் பெயரைக் கல்வெட்டுகளாகப் பொறித்து, அவர்களுக்குப் பெருமைச் சேர்த்த உயர்ந்த குணம் கொண்ட மன்னன் அவன்.

இதையெல்லாம் கொஞ்சம் கூர்ந்து கவனித்தால், ஓர் உண்மை புலப்படும் நமக்கு. இந்த அழகிய, பிரமாண்டமான பெரியகோயிலின் அடித்தளக் கற்களில் ஓர் இடத்தில்கூட மன்னனின் பெயர் பொறிக்கப்படவில்லை. சாதாரணக் குடிமக்களின் பெயர்களும் படைவீரர்களின் பெயர்களும் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளன. அதாவது, இந்தக் கோயிலை நிலையாகத் தாங்கி ஆராதிப்பவர்கள் எளிய அடியார்களும் தொழிலாளர் களும்தான் என்பதை நமக்கு உணர்த்த, ராஜராஜசோழன் செய்திருக்கிற விஷயமாகத்தான் இது எனக்குத் தோன்றுகிறது.

அதேபோல், கோயிலின் திருச் சுற்று மாளிகையைப் பார்த்திருக் கிறீர்கள்தானே! அதன் அழகில் அசந்து போய்விடுவோம். அத்தனை அழகு; அத்தனை பிரமாண்டம்! அவன் நினைத்திருந்தால், அக்கா குந்தவை நாச்சியார் பெயரில், தன் மனைவியர் பெயரில், மகன் பெயரில், ஏன்... தன் பெயரில்கூட இந்தத் திருச்சுற்று மாளிகையைச் சொல்லியிருக்கலாம். ஆனால், தன் சேனாதிபதி கிருஷ்ணன் ராமன் என்பவர் பெயரில் திருச்சுற்று மாளிகையை அமைக்கச் செய்தான். இந்தத் தகவலை கோயிலில் உள்ள தூண் ஒன்றில் கல்வெட்டாகவும் பொறித்துள்ளான். அதாவது, சோழ தேசத்தின் மிக முக்கியமான கோயிலாக மட்டுமின்றி, உலகமே வியந்து பார்க்கும் ஆலயத்தின் கட்டுமானத்தில், அதன் பெருமை யில் அனைவரின் பங்களிப்பும் பெயர்களும் இருக்கவேண்டும் என்று பரந்த மனத்துடன் யோசித்துச் செயல்பட்டிருக்கிறான், மன்னன்.
சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர் - Page 4 P40
அதேபோல், இன்னொரு சிலிர்ப்பான விஷயம்... கோயிலில் உள்ள எல்லாத் தெய்வங்களுக்குமான பூஜைகளுக்கு நிவந்தம் அளித்துள்ளார்கள், பலரும். தனிநபர்கள், வணிகர்கள், ஊர்ச்சபையினர் என நிவந்தம் அளித்தவர்களின் பெயர்களை யெல்லாம் கல்வெட்டுக்களில் பொறித்து, அவர்களுக்குப் பெருமை சேர்த்திருக்கிறான் ராஜராஜசோழன்.

கோயில் விமானத்தின் வடக்குப் புறத்தில், சண்டீசர் சந்நிதிக்கு எதிரில், வாய்மொழி ஆணையாகச் சொன்னதை அப்படியே பதித்திருக்கிறான் மன்னன். 'தஞ்சாவூரில் தான் எடுப்பித்த கற்கோயிலான ராஜராஜச்சரத்தில் எழுந்தருளியிருக்கும் பரசாமிக்கு, தான் கொடுத்தது, தன் அக்கன் (சகோதரி) குந்தவைதேவியார் கொடுத்தது, தன் தேவிமார்கள் கொடுத்தது ஆகியோருடன் சிவனார்க்கு யார் யாரெல்லாம் எது எதெல்லாம் கொடுத்தார்களோ அந்தக் கொடை விவரங்களை தன் கொடை விவரத்துடன் சேர்த்துப் பொறிக்கவேண்டும் என்று உத்தரவு பிறப் பித்துள்ளான். அத்துடன், அருகிலேயே மிகப் பெரிய பட்டியலையும் குறித்துள்ளான். அந்தக் கல்வெட்டை இன்றைக்கும் பார்க்கலாம்.

அதுமட்டுமா? தஞ்சைப் பெரிய கோயிலுக்கென 400 ஆடல்மகளிரை நியமித்துள்ளான் மன்னன். இசைக்கவும் பக்கவாத்தியம் முழங்கவும் 220 பேரையும், தேவாரம் பாடுவதற்கு 50 ஓதுவாரையும், நூற்றுக்கும் மேற்பட்ட மெய்க்காவலர்களையும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிரந்தரப் பணியாளர்களையும் நியமித்திருக்கிறான் ராஜராஜசோழன். அவர்களின் பெயர், ஊர், ஊதியம், வேலை எனப் பலவற்றையும் கல்லில் பதித்திருக்கிறான்.
சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர் - Page 4 P40c
கோயிலின் தலைமைச் சிற்பி குஞ்சரமல்லன். அவனைக் கௌரவிக்கும் பொருட்டு, அவன் பெயருடன் தன் பெயரையும் இணைத்து ராஜராஜப் பெருந்தச்சன் எனப் பட்டம் அளித்துச் சந்தோஷப்படுத்தியிருக்கிறான். அதுமட்டுமா? ஆயிரத்துக்கும் மேலான கோயில் பணியாளர்களின் வசதிக்காக ஈரங்கொல்லிகள் (துணி வெளுப்பாளர் கள்), சிகை அலங்காரம் செய்யும் நாவிதர் கள் எனப் பலரையும் நியமித்து, சிகை அலங்காரக் கலைஞன் ஒருவனுக்கு, ராஜராஜ நாவிதன் எனப் பட்டமளித்தான் மன்னன். இறைப் பணியில் எல்லா வேலையும் போற்றத்தக்கதே என்பதை வலியுறுத்திய பெரிய மனம் கொண்ட மன்னன், ராஜராஜ சோழன். இன்னொரு முக்கியமான விஷயம்... கலைகள் அனைத்தும் வளர்ந்த இடம் ஆலயம். கலைஞர்களுக்கு எஜமானன், பெருங்கோயில் ஈசனே! இதை உலகத்தார் உணரும் வகையில், ஈசனின் பண்டாரத்தில் இருந்து கலைஞர்களுக்கு ஊதியமும், கோயில் நிர்வாகிகளுக்கு அரசு பண்டாரத்தில் இருந்து ஊதியமும் அளித்து, கலைஞர்கள் இறைவனின் அடிமை என்பதையும், அரசனுக்கு ஒருபோதும் அவர்கள் அடிமை இல்லை என்பதையும் நிலைநாட்டி, அதனைக் கல்வெட்டுகளிலும் பொறித்து வைத்துள்ளான் மன்னன்.

பஞ்சபூதங்களால் இயங்குகிற உலகம் இது. தஞ்சைப் பெரியகோயிலின் கட்டுமான அமைப்புகளும் பஞ்சபூதங்களின் வடிவமாகக் கட்டப்பட்டுள்ளன. இயற்கையையும் இறைவனையும், குறிப்பாக மக்களையும் ஒரு வரிசையில் கோத்து, சமமாகப் பாவித்து, பொற்கால ஆட்சியையே நடத்திச் சென்றான், ராஜராஜசோழன் என்பதை இன்னமும் உணர்த்திக்கொண்டிருக்கின்றன, கோயிலில் உள்ள கல்வெட்டுகள்.

- புரட்டுவோம்


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81952
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Sep 03, 2014 9:39 pm

சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர் - Page 4 103459460

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Wed Sep 03, 2014 9:44 pm

சேதி சொல்லும் சிற்பங்கள்-24
ஆலயம் ஆயிரம்!
முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன்

சிதம்பரம் நடராஜர் ஆலயம்

சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர் - Page 4 P114a
ஆகாயப் பெருவெளியாகத் திகழும் தில்லைப் பொன்னம்பலத்தை நடுநாயகமாகக்கொண்டு திகழும் சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில், மேற்குக் கோபுரத்தின் அடித்தளமாக விளங்கும் உபபீட வர்க்கத்தில் உள்ள மாடங்களிலும், மேல்நிலையில் உள்ள மாடங்களிலும் எழிலான சிற்பங்கள் காட்சி தருகின்றன. அந்தச் சிற்பங்களில் பெரும்பாலானவற்றின் பெயர்களை அந்தந்த மாடங்களுக்கு மேலாக, அந்தக் கோபுரத்தை எடுப்பித்த இரண்டாம் குலோத்துங்க சோழன், கல்வெட்டாகப் பொறித்துள்ளான். இதனால், அந்தத் தெய்வங்களின் பெயர்களை நாம் எளிதில் புரிந்துகொள்ள முடியும்.

உபபீடத்தில் உள்ள 46 கோஷ்ட மாடங்களில், சிவ பெருமானின் எந்த வடிவமும் இடம்பெறவில்லை. மாறாக, பிற தெய்வ உருவங்கள், வாயிற்காவலர்கள், மருத்துவத் தெய்வங்கள், எண்திசைக் காவலர்கள், ஒன்பது கோள்தெய்வங்கள், நதி தெய்வங்கள், மகரிஷிகள் என ஏழு வகைப் பகுப்பில் மொத்தம் 46 சிற்பங்களைக் காணலாம்.

தெய்வத் திருமேனிகளாக க்ஷேத்திரபாலர், ஸ்ரீசண்டீசர், ஸ்ரீதிரிபுரசுந்தரி, ஸ்ரீகணபதி, ஸ்ரீபத்ரகாளி, ஞானசக்தி, ஸ்ரீவிஷ்ணு, ஸ்ரீசுப்ரமணியர், ஸ்ரீசரஸ்வதி, ஸ்ரீபிரம்மன், ஸ்ரீதுர்கை, கிரியாசக்தி, ஸ்ரீநாகராஜன் ஆகிய தெய்வங்களின் திருவுருவங்கள் இடம்பெற்றுள்ளன. துவாரபாலகர் எனும் வாயிற்காவலர் சிற்பங்கள் உள்வாயிலில் இரண்டும், வெளிவாயிலில் இரண்டும் காணப் படுகின்றன. அவற்றுக்கு மேலாக 'வைஜயன்’ என்றும், 'ஞானேஸ்வரர்’ என்றும் கல்வெட்டுக் குறிப்புகள் உள்ளன.

பொதுவாக, நான்கு வாயில்கள் இருக்கும் சிவாலய கர்ப்பக்கிரகத்தில் காணப்படும் நான்கு ஜோடி வாயிற்காவலர்களை முறையே, நந்தி- மகாகாளன், ஹேரம்பன்- பிருங்கி, துர்முகன்- பாண்டூரன், சீதன்- அசிதன் என்று ஆகம, சிற்ப நூல்கள் குறிக்கின்றன. ஆனால், தில்லைக்கோயில் ஆகமப்படி, அங்கு காவலர்களாக வைஜயனும் ஞானேஸ்வரரும் திகழ்கின்றனர். மருத்துவ தெய்வங்களாக ஸ்ரீதன்வந்திரியும், ஸ்ரீஅஸ்வினிதேவர் இருவரும் இடம்பெற்றுள்ளனர்.

இங்கு உள்ள தன்வந்திரி, தாடி மீசையுடன் மருந்துக்குடுவை ஏந்திய முனிபுங்கவராகவே காணப்படுகிறார். அஷ்டதிக் பாலர்களாக கிழக்கில் இந்திரனும், தென்கிழக்கில் அக்னியும், தெற்கில் யமனும், தென்மேற்கில் நிருதியும், மேற்கில் வருணனும், வடமேற்கில் வாயுவும், வடக்கில் குபேரனும், வடகிழக்கில் ஈசானனும் அமைந்துள்ளனர். அளகேஸ்வரன், வாயுபகவான், நிருதி, அக்னிதேவர், ருத்ரதேவர் என்ற ஐந்து எழுத்துப் பொறிப்புகள் மட்டுமே அவர்கள் இடம் பெற்றுள்ள கோஷ்டங்களுக்கு மேலாகக் காணப்படுகின்றன.

நவகோள் தெய்வங்களாக கீழ்நிலை மாடங்களில் சூரியன், ராகு, கேது, சந்திரன், சனி, சுக்கிரன், புதன், செவ்வாய், வியாழன் ஆகிய ஒன்பது பேரும் உள்ளனர். சூரியனின் திருவடிவம் நான்கு முகங்கள், எட்டுக் கரங்களுடனும், தேவியர் இருவருடனும் காணப்படுகிறது. இது சிவசூரியனின் வடிவம்.

சந்திரன் இங்கு மட்டுமே சிம்மவாகனத்துடன் காணப்படுகிறார். ராகு- கேது இருவரும் மனிதத் தலையும், இடுப்பு வரை உள்ள உருவமும், தலைக்கு மேல் பாம்புப் படமுமாக இணைந்து ஒரே சிற்பமாகவே இருப்பது குறிப்பிடத்தக்கது. நவக் கிரகங்கள் வரிசையில் ராகு- கேது, சந்திரன், சனிபகவான், சுக்கிரன், புதன் என்ற ஆறு பேர் மட்டுமே ஐந்து கோஷ்டங்களுக்கு மேலாகக் காணப்படுகின்றனர்.
சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர் - Page 4 P114b

நதி தெய்வங்களாக கங்காதேவி என்றும், யமுனை என்றும் கல்வெட்டுக்கள் உள்ள கோஷ்டங்களில் முறையே மகரத்தின்மீது நின்றவாறு கங்காதேவியும், ஆமைமீது நின்றவாறு யமுனையின் திருவுருவமும் உள்ளன. மகரிஷிகளாக நாரதர், வியாக்ரபாதர், தும்புரு, அகஸ்தியர், பதஞ்சலி, திருமூலர் ஆகியோரின் திருவுருவங்கள் அற்புதச் சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளன.

மேல்நிலை ஆவர்ணத்தில் துவாரபாலகர் உருவங்கள் நீங்கலாக 22 மாடங்களில் சிவ மூர்த்தங்களைச் சிற்பங்களாகத் தரிசிக்கலாம். கஜசம்ஹார மூர்த்தி, லிங்கோத்பவர், சோமாஸ்கந்தர், பிக்ஷ£டனர், ஹரிஹரர், திரிபுராந்தகர், நிருத்தமூர்த்தி, வீணாதரர், தட்சிணாமூர்த்தி, பாசுபத மூர்த்தி, கிராதார்ஜுன மூர்த்தி, அர்த்தநாரீஸ்வரர், கங்காதரர், சந்திரசேகரர், கல்யாணசுந்தரர், கங்காளர், விருஷபாந்திகர், ஆலிங்கன சந்திரசேகரர், ஊர்த்துவதாண்டவர், கௌரிபிரஸாத மூர்த்தி, காலாந்தகர், சண்டேசனுக்கிரகர் என்னும் 22 சிவனார் கோலங்களையும் மேற்குக் கோபுரத்தில் கண்டு மகிழலாம்.

இதே அமைப்பு முறையில், மற்ற மூன்று கோபுரங்களிலும் கீழ் நிலை ஆவர்ண தெய்வங்களும், மேல்நிலை சிவனார் வடிவங்களும் காணப்படுகின்றன. ஆனால், அந்தக் கோபுரங்களில் அஷ்டதிக் பாலகர் உருவங்களும், நவகோள் தெய்வ உருவங்களும் அந்தந்த கோபுரங்கள் இருக்கும் திசைக்கு ஏற்ப, அவரவருக்கு உரிய திசையிலேயே இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்க அம்சம். தில்லைக் கோபுரங்கள், நுழைவாயிலில் அமைந்துள்ள கட்டடங்கள் என்பதாக மட்டுமே அல்லாமல், சிற்பக் களஞ்சியங்களாகவே விளங்குகின்றன.

- புரட்டுவோம்

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Wed Sep 03, 2014 9:47 pm

சேதி சொல்லும் சிற்பங்கள்-25
குடவாயில் பாலசுப்ரமணியன்


திருச்சி- நாமக்கல் நெடுஞ்சாலையில், திருச்சியை அடுத்து முசிறிக்கு மேற்கே உள்ளது ஸ்ரீநிவாசநல்லூர் கிராமம். இந்த ஊருடன் இணைந்து, பல்லவ மன்னன் மகேந்திரவர்மன் பெயரால் அமைக்கப்பெற்ற பழம்பெருமை வாய்ந்த மகேந்திரமங்கலம் எனும் ஊர் திகழ்கிறது. ஸ்ரீநிவாசநல்லூரில் பண்டைய சோழர் காலத்தவையாக, ஐந்து திருக்கோயில்கள் உள்ளன. அவை குரங்கநாதர் கோயில், பட்டாபிராமன் கோயிலைத் தன்னகத்தே கொண்ட விஸ்வநாதர் கோயில், ஸ்ரீலட்சுமி நாராயணப் பெருமாள் கோயில், ஸ்ரீராமநாத ஸ்வாமி கோயில் மற்றும் தனித்த அம்மன் திருக்கோயில் ஆகியவை.

ஸ்ரீநிவாசநல்லூரின் பழம்பெயர் திருக்குரக்குத்துறை என்பதாகும். சோழநாட்டில் மயிலாடுதுறை, குரங்காடுதுறை என்ற ஊர்கள் காவிரிக்கரையில் அமைந்துள்ளது போன்று இந்த ஊரும் காவிரிக் கரையிலேயே அமைந்துள்ளது.
சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர் - Page 4 P36d
சிறந்த சிவபக்தனாக விளங்கிய வாலி எனும் குரங்கினத் தலைவன் பூசித்த திருத்தலமாக இந்த ஊர் திகழ்ந்திருக்க வேண்டும். இதுபோன்றே திருவையாறு - கும்பகோணம் சாலையில் காவிரிக் கரையில் திருஞானசம்பந்தரால் பாடப்பெற்ற, ஆடுதுறை பெருமாள் கோயில் என்று தற்காலத்தில் அழைக்கப்படும் திருவூர் ஒன்று உள்ளது. அந்த ஊரின் பழம்பெயர் குரங்காடுதுறை என்பதாகும். தேவாரப் பதிகத்தில் 'நீலமாமணி நிறத்து அரக்கனை இருபது கரத்தோடு ஒல்க வாலினால் கட்டிய வாலியார் வழிபட மன்னு கோயில் வடகரை அடை குரங்காடுதுறையே’ என்பார் காழிப்பிள்ளையார். இத்தலம் போன்றே காவிரியின் தென்கரையில் பாடல்பெற்ற தென் குரங்காடுதுறை (கும்பகோணம் - மயிலாடுதுறை சாலையில்) உள்ளது.

தொண்டைநாட்டுக் குரங்கணில்முட்டம், சோழநாட்டு குரக்குக்கா, நடுநாட்டு வாலிகண்டபுரம் ஆகிய திருத்தலங்கள் போலவே திருகுரக்குத்துறை எனப்படும் ஸ்ரீநிவாசநல்லூர் குரங்கநாதர் கோயிலும் முக்கியத்துவம் பெற்ற ஒரு வழிபாட்டுத்தலமாகப் போற்றப்படுகிறது.

குரங்கநாதர் கோயிலில் உள்ள பழைமையான கல்வெட்டு ஒன்று, 'பிரம்மதேயமான மகேந்திரமங்கலத்து திருக்குரக்குத்துறை பெருமானடிகள்’ என்று அந்தக் கோயில் ஈசனாரைக் குறிப்பிடுகிறது. தற்போது காணப்படும் இந்தச் சிவாலயத்தை 9-ம் நூற்றாண்டில் முதல் ஆதித்த சோழன் கற்றளியாக எடுப்பித்திருக் கிறான். சதுரமான கருவறை அமைப்புடன் இரு தளக் கற்றளியாக இந்தக் கோயில் காணப்படுகிறது. இடைநாழி, முகமண்டபம் ஆகியவை இந்த விமானத்துக்கு மேலும் பொலிவூட்டுகின்றன.

கருவறையின் புறச்சுவரில் பிதுக்கம் பெற்ற கட்டுமான அமைப்புடன் மூன்று தேவ கோஷ்டங்கள் அழகிய மகர தோரண வேலைப்பாடுகளுடன் காணப்படுகின்றன. தென்புறம் ஆலமர்ச் செல்வராகிய ஸ்ரீதட்சிணாமூர்த்தியும், வடபுறம் வேள்வியின் நாயகராகிய ஸ்ரீநான் முகனின் (பிரம்மன்) திருவுருவச் சிற்பங்களும் உள்ளன. மேற்குத் திசையில் திகழ்ந்திருந்த உமையொருபாகனின் திருமேனியைப் பின்னாளில் அகற்றியுள்ளனர்.

கருவறையின் புறத்தே ஆறு சிறிய கோஷ்டங்களும், முகமண்டபத்தின் பக்கச் சுவர்களில் இரண்டு கோஷ்டங்களும் உள்ளன. இவற்றில் சாமரம் வீசுவோர், அப்சரஸ் எனப்படும் தேவ மாதர் சிற்பங்கள் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

மகாமண்டபத்தின் தென்புறமும் வடபுறமும் கைகட்டிய நிலையில் துவாரபாலகர் சிற்பங்கள் இடம் பெற்றிருந்து, பின்னாளில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. தென்புற கோஷ்டத்தின் மகர தோரணம் மிகுந்த வேலைப்பாட்டுடன் திகழ்கின்றது. நடுவே இரண்டு அரக்கர்களை வேல்கொண்டு தாக்கும் தேவியின் திருவுருவம் உள்ளது. அதனைச் சுற்றி எட்டு சிம்மங் களின்மீது அமர்ந்த வீரர் உருவங்களும், நான்கு பூத கணங்களின் உருவங்களும் உள்ளன.
சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர் - Page 4 P36c
மாடத்தின் நடுவே எட்டு கிளைகளுடன் கல்லால மரம் திகழ, அதன் கீழ், ஞானம் உரைக்கும் ஸ்ரீதட்சிணாமூர்த்தி அமர்ந்துள்ளார். ஆலங்கிளைகளில் அணில், பொக்கணம் என்னும் விபூதிப் பை, பொந்தில் ஆந்தை ஆகியவை காணப்படுகின்றன. ஜடாபாரத் துடன் திகழும் அண்ணலின் தலையில் கபாலமும் மலர்களும் உள்ளன. ஒரு காதில் பத்ர குண்டலமும், ஒரு காதில் குழையும் திகழ்கின்றன. அனலும், அக்கமாலையும் தரித்த பெருமானார், சனகாதி முனிவர் இருவருக்கு அறம் உரைக்கிறார்.

பக்கவாட்டில் மேலே ஒருபுறம் காதுபொத்தி கள் (கர்ணப்ராவிருத்தன்) இருவரும், மறுபுறம் கின்னரர் இருவரும் உள்ளனர். அவர்களுக்குக் கீழாக ஒருபுறம் வாய் பிளந்து உறுமும் சிங்கங்கள் இரண்டும், எதிர்ப்புறம் உறங்கும் சிங்கங்கள் இரண்டும் காட்சியளிக்கின்றன. காலடியில் முயலகன் கிடக்க, ஒருபுறம் மானும், ஒருபுறம் உடம்பை மூன்று சுற்றுகளாக்கிப் படமெடுத்தாடும் நாகமும் உள்ளன.
சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர் - Page 4 P36
பித்தி எனப்படும் சுவரில் உள்ள தூண்க ளின் கால்களில் நடனமாடும் பெண்கள், இசைவாணர்கள், குதூகலித்து ஆடும் கணங்களின் உருவங்கள் உள்ளன. ஒரு தூணில் ஈசன் கால் உயர்த்தி நடனமாட, அதிகார நந்தி குடமுழா இசைக்க, அனுமன் தாளமிடுகிறார். இது அபூர்வக் காட்சியாகும். திருக்குரக்குத் துறை பெருமானடிகள் திருநடனமாட, குரங்கு தாளமிடுவது பொருத்தமான ஒன்றே!

ஒரு மகர தோரணத்தில் திருமால், பூவராகராகக் காட்சி தருகிறார். அழகுடைய ஜகதி, குமுதம், வேலைப்பாடுகள் மிகுந்த யாழவரிமாணம் ஆகியவை கொண்ட அதிஷ்டானத்தின் மேல் கம்பீரமாக எழுந்து நிற்கும் இந்தத் திருக்கோயில், சோழர் சிற்பக் கலையின் உச்ச நிலைப் படைப்புகளைத் தன்னகத்தே கொண்டு காட்சி தருகிறது. மொத்தத்தில், ஸ்ரீநிவாசநல்லூர் திருத்தலம், கலைப் பெட்டகத்தின் சாட்சியகம் என்றால், அது மிகையல்ல!

- புரட்டுவோம்

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Wed Sep 03, 2014 9:51 pm

சேதி சொல்லும் சிற்பங்கள் - 26
முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன்


திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயில்

கோடு என்ற சொல்லுக்கு மலை என்றும், மலையுச்சி என்றும் அர்த்தம் சொல்வார்கள். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள திருச்செங்கோடு திருத்தலம், அழகிய மலையின்மீது அமைந்துள்ளது. தேவாரப் பாடல் பெற்ற தலம் இது.

நாமக்கல்லில் இருந்து சுமார் 32 கி.மீ. தொலைவிலும் ஈரோட்டில் இருந்து சுமார் 18 கி.மீ. தொலைவிலும் உள்ளது திருச்செங்கோடு.

செங்கோடு அதாவது செங்குன்றமாக, செம்மலையாகத் திகழ்கிறது திருச்செங்கோடு. செவ்வண்ணக் கல்லால் அமைந்த இந்தச் செங்கோட்டு மலையை, புலரும் காலைப் பொழுதிலும், அந்திச் செவ்வான வேளையான பிரதோஷ காலத்திலும் தரிசித்தால், செங்கோடு என்பதன் பொருளை அறியலாம்.

செங்கோட்டின் பெரிய மலைமுகட்டுக்கு நாகமலை என்றும், சிறிய முகட்டுக்கு நந்திமலை என்றும் பெயர். இந்த மலையை நாகாசலம், நாகமலை, நாககிரி, உரககிரி என்றெல்லாம் அழைக்கிறார்கள்.

மலையின்மீது ஸ்ரீஅர்த்தநாரீஸ்வரர் கோயில் ஒருபுறமும், ஸ்ரீபாண்டீஸ்வரர் கோயில் இன்னொரு புறமும் உள்ளது. அடிவாரத்தில் செங்குன்றூரின் நடுவே ஸ்ரீகயிலாசநாதர் கோயில் உள்ளது. ஆக, இங்கே வந்தால் மூன்று சிவாலயங்களை ஒரு சேர தரிசிக்கலாம்.

திருப்பைஞ்ஞீலி, திருஈங்கோய்மலை முதலான தலங்களுக்குச் சென்று பதிகங்கள் பாடி வழிபட்ட ஞானசம்பந்தர், வழியெங்கும் பல தலங்களை தரிசித்து வழிபட்டபடியே, திருச்செங்குன்றூர் எனும் திருச்செங்கோட்டுக்கு வருகிறார். இறைவனைக் கண்ணாரத் தரிசித்து பதிகம் பாடியவர், அடுத்து திருநணா என்கிற பவானிக்குச் சென்றுவிட்டு, மலையின் மீதும் இறைவனின் மீதும் கொண்ட ஈர்ப்பால், மீண்டும் திருச்செங்கோடு வந்து தங்கினாராம். அத்தனை அழகும் கம்பீரமும் வாய்ந்தது இந்த மலை.

மலையடிவாரத்தில் இருந்து செல்ல, அதாவது நகரின் நடுப்பகுதியில் இருந்து படிக்கட்டுகள் உள்ளன. அதேபோல், ஊருக்குக் கிழக்கே உள்ள சாலையில் இருந்து மலையுச்சிக்கு வாகனங்களில் செல்வதற்குச் சாலை வசதியும் உள்ளது. படிகளின் வழியே செல்லும்போது பெரிய மலை(நாகமலை)க்கும் சிறிய மலைக்கும் (நந்திமலை) இடையே அமைந்துள்ள நாகர்பள்ளம் எனும் இடத்தைக் காணலாம். இங்கே, ஆதிசேஷன் ஐந்து தலைகளையும் விரித்துப் படமெடுத்த நிலையில் லிங்கத் திருமேனியைச் சுமந்துகொண்டிருக்கும் சுமார் 60 அடி நீளச் சிற்பக் காட்சியைக் கண்டு பிரமித்துப் போவீர்கள். இந்த நாகத்தின்மீது குங்குமம் தூவி வழிபடு கின்றனர். நாக தோஷம் உள்ளவர்கள், சிறப்பு வழிபாடு செய்கின்றனர்.
சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர் - Page 4 P36c

அடுத்துத் திகழும் அறுபதாம் படியில் பிணக்குகள், வழக்குகள் உள்ளோர் சத்தியம் செய்து, தங்கள் பகையை முடிப்பதும் இங்கே வழக்கம்!

வடக்கு வாயிலில் அமைந்துள்ளது, ஸ்ரீஅர்த்தநாரீஸ்வரரின் பிரதான கோபுரம். கோயிலின் உள்ளே திகழும் சுற்று மண்டபங்கள் அனைத்தும் கலைநயம் மிகுந்த அற்புதப் படைப்பு களாகக் காட்சி தருகின்றன. குதிரை மீது அமர்ந்திருக்கிற போர் வீரர்களின் சிற்பங்கள் மண்டபத் தூண்களில் கம்பீரத்துடன் நிற்கின்றன. குதிரைகளின் உடலழகும், வாளேந்திய வீரர்களின் ஆவேசம் கூடிய மிடுக்கும், இடையிடையே அமைந்த தெய்வத் திருவுருவங்களும், விலங்குகளும் பறவைகளும் என சிற்பங்கள் பிரமிக்க வைக்கின்றன.
சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர் - Page 4 P36a
முருகக் கடவுள் வலது கையில் வேலாயுதத் தின் தண்டத்தையும், இடது கரத்தில் சேவலையும் தாங்கியபடி செங்கோட்டு வேலவனாகக் காட்சி தரும் அழகனைக் காண்பது அரிது! இந்தச் சிற்ப அமைப்பும், ஸ்ரீஅர்த்தநாரீஸ்வரரின் திருவடிவமும் சிற்பக் கலைஞர்களின் திறனுக்குச் சான்றாகும்.

அதையடுத்து பின்புறம் நுழைவாயில் ஒன்று உள்ளது. இங்கே, மேற்கு நோக்கிய நிலையில் சந்நிதி கொண்டிருக்கிற ஸ்ரீஅர்த்தநாரீஸ்வரரை தரிசிக்கலாம். நின்ற திருக்கோலத்தில், மேலே உயர்த்திய வலது கரத்தில் தண்டாயுதத்தை ஏந்தியபடி, இடது கையை இடுப்பில் வைத்துக்கொண்டு, உமையொருபாகனாக, சிவனார் காட்சி தரும் அழகே அழகு!
சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர் - Page 4 P36
மகர குண்டலம் வலது செவியில் திகழ, பத்ர குண்டலமான ரத்தின தோடு, இடது செவியை அலங்கரிக்கிறது. உடலின் ஒரு பாகம் ஆணுக்கு உரிய ஆடை அலங்காரத்தோடும், இன்னொரு பாகம் பெண்ணுக்கு உரிய நளினத்தோடும் அமைந்துள்ளது. முருகக் கடவுளின் திருவுருவமும் ஸ்ரீஅர்த்தநாரீஸ்வரரின் திருவுருவமும் வெள்ளைப் பாஷாணத்தால் செய்யப்பட்ட சிற்ப வடிவங்கள் என்பார்கள்.

வெளித் திருச்சுற்றில் ஆதிகேசவப் பெருமாள் கோயில், கலை நயம் மிகுந்த சிற்பங்களுடன் காணப்படுகிறது. ஸ்ரீதேவி- பூதேவியுடன் ஆழியும் சங்கும் தரித்தவராக ஸ்ரீஆதிகேசவனின் திருமேனி நின்ற திருக்கோலம், கொள்ளை அழகு! வெளிப்பிராகாரத்தில், ஸ்ரீநாகேஸ்வரர் எனும் லிங்க மூர்த்தி தனிக்கோயிலில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலின் புறச் சுவர்கள் முழுவதும் கலை நயம் மிகுந்த சிற்பங்களால் அழகுபடுத்தப்பட்டுள்ளன.

மலைமீது அமைந்துள்ள ஸ்ரீஅர்த்தநாரீஸ்வரர் ஆலயம், கலைப் பெட்டகமாகவே திகழ்கிறது.

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Wed Sep 03, 2014 9:53 pm

சேதி சொல்லும் சிற்பங்கள்-27
முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன்


திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயில்

நாற்புறமும் மலைகள் சூழ்ந்த கொங்குநாடு பழங்காலத்தில் வட கொங்கு, தென்கொங்கு, மீ கொங்கு, மழ கொங்கு என நான்கு பெரும் பிரிவுகளாகவும், 24 உட்பிரிவுகளாகவும் கொண்டு திகழ்ந்தது.

கொங்கு நாட்டில், காவிரி வடக்கு தெற்காகப் பாய்வதால், காவிரியின் மேல்கரைப் பகுதி மேல்கரைப் பூந்துறை நாடு என்றும், கிழக்கில் உள்ள பகுதி கீழ்க்கரைப் பூந்துறை நாடு என்றும் அழைக்கப்பட்டது.

கீழ்க்கரைப் பூந்துறை நாட்டின் நடுநாயகமாக திருச்செங் குன்றூர் எனப்படும் திருச்செங்கோடு விளங்குகிறது. செங்கோட்டு மலையின் உச்சியில் திகழும் ஸ்ரீஅர்த்தநாரீஸ்வரர் கோயிலின் தற்போதைய கட்டுமான அமைப்புகளில் பெரும் பகுதி, விஜய நகரப் பேரரசர்களின் ஆட்சிக் காலத்தில், கொங்கு தேசத்தை ஆட்சி செய்த கட்டிமுதலிகள் செய்த திருப்பணிகளாகும்!

'திருச்செங்கோட்டு திருப்பணி மாலை’ எனும் நூல், சதாசிவ பண்டிதர் என்பவரால் இயற்றப்பட்டது. இந்த நூலில், மோரூர் காங்கேயர்கள் பலரால் இந்தக் கோயிற் பணிகள் நிகழ்ந்த விவரங்கள் தெரிவிக்கப்பட்டு உள்ளன.

செங்கோட்டு வேலவன் சந்நிதிக்கு முன் உள்ள பெருநிலை மண்டபம், கொங்கு நாட்டுச் சிற்பக் கலையின் உன்னதத்தை வெளிப்படுத்துகிறது. இதன் விதானத்தின் நடுவில், அலர்ந்த தாமரை மலர் விரிந்திருக்க, அதைச் சுற்றி வட்டமாக இரண்டு வரிசைகளில் கிளிகள் அமர்ந்தபடி தாமரை மொட்டைக் கொத்துகிற காட்சி, தத்ரூபத்தின் உச்சமாகத் திகழ்கிறது.

அருகில், அச்சு அசல் மரச் சட்ட வேலைப்பாடுகள்போல் கல்லில் வடிக்கப்பட்டு, அவற்றுக்கு இடையே தெய்வத் திருவுருவச் சிற்பங்கள், புராணக் காட்சிகள், கிரக தெய்வங்கள், கல்லால் ஆன தொங்கும் சங்கிலி என நம் கண்ணையும் கருத்தையும் கவரும் சிற்ப நுட்பங்களை ரசிப்பதற்கு ஒருநாள் போதாது. விதானம்தான் இத்தனை அழகு என்று பார்த்தால், அதைத் தாங்கி நிற்கும் தூண்களில் திகழும் சிற்பங்கள் நம் கண்ணையும் கருத்தையும் கவருவதாகத் திகழ்கின்றன.
சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர் - Page 4 P154b
அந்தத் தூண்களில் திகழும் அந்த மண்டபத்தை எடுத்த கொடை யாளர்களின் உருவங்கள், ஊர்த்துவதாண்டவராக ஆடும் சிவபெருமான், அவருடன் ஆட முடியாமல் சோர்ந்து நிற்கும் ஸ்ரீகாளிதேவியின் திருவடிவம், ரதி மன்மதன் மற்றும் குதிரை வீரர்களின் சிற்பங்கள் நம் உள்ளத்தை நிச்சயம் கொள்ளை கொள்ளும்!

தென்புறமும், மேற்புறமும், வடக்குப் புறமும் இருக்கிற மண்டபங்களும் சிற்பக் களஞ்சியங்களாகவே அமைக்கப்பட்டு உள்ளன. இந்த மண்டபங் களுடன் இணைந்து தனித்தனி ஆலயங்களின் புறச்சுவர்கள் முழுவதும் சிற்பக் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. ஆலயத்தின் அதிஷ்டானம், பித்தி எனும் வகையில் செய்யப்பட்ட சுவர் ஆகியவற்றில் வேலைப்பாடுகளுடன் கொண்ட சிற்பங்கள், கலையின் பிரமாண்டத்தை எடுத்துக்காட்டுகின்றன.
சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர் - Page 4 P154
இன்னொரு விஷயம்... இங்கே இசைக் கலைஞர்களின் சிற்பங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வடிக்கப்பட்டுள்ள விதம் மிகச் சிறப்பு! பறை எனப்படும் தோல் கருவியை இயக்கும் கலைஞனின் உருவமும், நின்றபடியே வீணை வாசிக்கும் வல்லான் ஒருவனின் உருவமும் கவனிக்கத்தக்கவை! அதிஷ்டானத்தின் அடித்தளத்தில் உள்ள கண்டம் எனப்படும் பகுதியில் பூ வேலைப்பாடுகளும், கொடிகளும் அமைந்துள்ளன. அவற்றுக்கு ஊடே அன்னப்பறவைகள், கிளிகள், ஆங்காங்கே கோபுரக் கட்டுமானம் எனப் பலவகையான அழகுப்படைப்புகளை சிற்பங்களாக வடித்த சிற்பிகளுக்கு, மன்னர்கள் நிச்சயம் வெகுமதி தந்து கௌரவித்திருப்பார்கள்.

பத்மம் எனும் அதிஷ்டான கட்டுமானப் பகுதியின் மேல் பலவகையான தெய்வ உருவங்களும், சிறு கோயில் அமைப்புகளும், குரங்கு முதலான விலங்கினங்களும் சிற்பங்களாகக் காணப்படுவது புதுமையாக உள்ளது. அமர்ந்த கோலத்தில் திகழும் முனிவர்கள், தலைக்கு மேல் கையை உயர்த்தியபடி நின்ற கோலத்தில் தவம் மேற்கொள்ளும் ரிஷிகள், நடனமாடும் கலைஞர்கள், குள்ள பூதங்கள் என எழிலார்ந்த சிற்பங்களை கலையழகுமிக்க கோஷ்டமாடங்களுக்கும் கும்ப பஞ்சரங்களுக்கும் இடையிடையே காண முடிகிறது.

ஓரிடத்தில்... மகர தோரண வாயிலின் கீழ் வில், அம்புடன் ஸ்ரீராமன் நிற்க, வெளியே ஒருபுறம் மண்டியிட்டு அமர்ந்து வணங்கும் ஸ்ரீஅனுமனையும், எதிர் திசையில் ஸ்ரீகருடனையும் அழகிய சிற்பங்களாகக் கண்டு ரசிக்கலாம். அரசன் ஒருவன் தன் ஆசனத்தில் அமர்ந்திருக்க, அவனுக்கு முன்னே நிற்கிற தொப்பி அணிந்த மேலை நாட்டவர் ஒருவர் அரசனுக்கு மாலை அணிவிக்க முயலும் வரலாற்றுச் சிற்பக் காட்சியும் இடம்பெற்றுள்ளது. அதேபோல், கோயில் ஒன்றில் ஸ்ரீவராஹி தேவி அமர்ந்திருக்க, ஒரு பூதம் சங்கு ஊத, இன்னொரு பூதம் தாளம் தட்ட... அந்த லயமும் முகத்தில் உள்ள பாவனைகளும் வெகு அற்புதமான சிற்ப நுட்பத்துக்குச் சான்றாக உள்ளன.

திருவாசி நடுவே, மாலை அணிவிக்கப்பட்ட சிவலிங்கம் திகழ, அருகில் பாம்பாட்டி ஒருவன் முன்னே படமெடுத்தாடும் நாகத்தின் சிற்பமும் இங்கு உள்ளது. இறைத் தன்மையால் செங்கோடு எவ்வளவு உயர்ந்து செம்மாந்து நிற்கின்றதோ, அதே அளவு கொங்கு நாட்டுச் சிற்பக்கலையும் உயர்ந்து நிற்கிறது என்பது உண்மை.

கொங்கு தேசம் என்றில்லாமல், தமிழ் கூறும் நல்லுலகில் உள்ள ஆயிர மாயிரம் ஆலயங்களில் லட்சக்கணக்கான சிற்பங்களையும், அவற்றின் நுட்பங்களையும் கண்டு ரசிக்க, இந்த ஒரு ஜென்மம் நிச்சயம் போதாது!

(நிறைவுற்றது)

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Thu Sep 04, 2014 7:24 am

நண்பர்களே இந்த தொடர்பதிவை மின்னூலாக மாற்றி மின்னூல் பகுதியில் கொடுத்துள்ளேன்..அதற்கான லிங்க் இதோ....

சேதி சொல்லும் சிற்பங்கள்-மின்னூல்

Sponsored content

PostSponsored content



Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக