புதிய பதிவுகள்
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Yesterday at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர் - Page 3 Poll_c10சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர் - Page 3 Poll_m10சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர் - Page 3 Poll_c10 
70 Posts - 48%
ayyasamy ram
சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர் - Page 3 Poll_c10சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர் - Page 3 Poll_m10சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர் - Page 3 Poll_c10 
62 Posts - 42%
mohamed nizamudeen
சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர் - Page 3 Poll_c10சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர் - Page 3 Poll_m10சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர் - Page 3 Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர் - Page 3 Poll_c10சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர் - Page 3 Poll_m10சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர் - Page 3 Poll_c10 
4 Posts - 3%
rajuselvam
சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர் - Page 3 Poll_c10சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர் - Page 3 Poll_m10சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர் - Page 3 Poll_c10 
1 Post - 1%
Kavithas
சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர் - Page 3 Poll_c10சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர் - Page 3 Poll_m10சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர் - Page 3 Poll_c10 
1 Post - 1%
bala_t
சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர் - Page 3 Poll_c10சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர் - Page 3 Poll_m10சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர் - Page 3 Poll_c10 
1 Post - 1%
prajai
சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர் - Page 3 Poll_c10சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர் - Page 3 Poll_m10சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர் - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர் - Page 3 Poll_c10சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர் - Page 3 Poll_m10சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர் - Page 3 Poll_c10 
293 Posts - 42%
heezulia
சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர் - Page 3 Poll_c10சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர் - Page 3 Poll_m10சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர் - Page 3 Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர் - Page 3 Poll_c10சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர் - Page 3 Poll_m10சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர் - Page 3 Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர் - Page 3 Poll_c10சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர் - Page 3 Poll_m10சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர் - Page 3 Poll_c10 
26 Posts - 4%
sugumaran
சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர் - Page 3 Poll_c10சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர் - Page 3 Poll_m10சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர் - Page 3 Poll_c10 
16 Posts - 2%
ஜாஹீதாபானு
சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர் - Page 3 Poll_c10சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர் - Page 3 Poll_m10சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர் - Page 3 Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர் - Page 3 Poll_c10சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர் - Page 3 Poll_m10சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர் - Page 3 Poll_c10 
6 Posts - 1%
prajai
சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர் - Page 3 Poll_c10சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர் - Page 3 Poll_m10சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர் - Page 3 Poll_c10 
5 Posts - 1%
Kavithas
சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர் - Page 3 Poll_c10சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர் - Page 3 Poll_m10சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர் - Page 3 Poll_c10 
4 Posts - 1%
manikavi
சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர் - Page 3 Poll_c10சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர் - Page 3 Poll_m10சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர் - Page 3 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர்


   
   

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Wed Sep 03, 2014 2:00 pm

First topic message reminder :

சேதி சொல்லும் சிற்பங்கள்!
முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன்
சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர் - Page 3 P40b


சைவர்களுக்குக் கோயில் என்றால் சிதம்பரத்தையும் (தில்லை), வைணவர்களுக்கான கோயில் என்றால் ஸ்ரீரங்கம் ஸ்ரீஅரங்கநாதர் ஆலயத்தையும் சொல்வார்கள். ஆனால், தமிழகத்தில் பெரியகோயில் என்றால் தஞ்சைப் பெருவுடையார் கோயில் என்று சொல்லப்படும் ஸ்ரீபிரகதீஸ்வரர் ஆலயம்தான்!

சுமார் ஆயிரம் வருடங்களைக் கடந்து நிற்கிற பிரமாண்டமான ஆலயம். சோழப் பேரரசன் முதலாம் ராஜராஜசோழன், தன்னை சிவபாதசேகரன் என அழைத்துக் கொள்வதில் மகிழ்ச்சி கொண்டான். இவனின் மகன் ராஜேந்திர சோழன், தன் சிறப்புப் பெயர்களுள் ஒன்றாக 'சிவசரணசேகரன்’ எனும் பெயரைப் பெருமையுடன் ஏற்றுக்கொண்டான். சைவத்தின் மீதும் சிவபெருமானின் மீதும் மாறாப் பற்றுக் கொண்ட தந்தையும் மகனும் கட்டிய ஆலயங்கள் ஏராளம்.

தாங்கள் அடைந்த பெருவெற்றியின் அடையாளமாகவோ அல்லது தங்கள் பெருமித வெற்றி தந்த ஆணவத்தின் வெளிப்பாடாகவோ அவர்கள் கோயில்களைக் கட்டவில்லை. கடவுளின் முன்னே அனைவரும் சமம் எனும் உயர்ந்த நெறியை உலகுக்கு உணர்த்தும் விதமாகவே ஆலயங்களை அமைத்தார்கள்.

சில வருடங்களுக்கு முன்பு பெரியகோயிலில், திருமாளிகைப் பத்தி எனும் திருவூற்று மண்டபத் தின் ஒரு பகுதியைக் கடைக்கால் வரை தோண்டி, அடித்தளமாக விளங்கும் முண்டுக் கற்களை வெளியே எடுத்துவிட்டு, மீண்டும் அந்தப் பகுதியை முழுவதுமாகச் சீரமைத்தனர். அப்போது உள்ளிருந்து எடுக்கப்பட்ட முண்டுக் கற்களில் மாமன்னன் ராஜராஜசோழனின் படைவீரர்களின் பெயர்கள் மற்றும் தனி நபர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டிருந்தன. எதற்காக அங்கே பெயர் பொறித்தான் மன்னன்? கற்களை எவர் வழங்கினாரோ, அவர்களின் பெயரைக் கல்வெட்டுகளாகப் பொறித்து, அவர்களுக்குப் பெருமைச் சேர்த்த உயர்ந்த குணம் கொண்ட மன்னன் அவன்.

இதையெல்லாம் கொஞ்சம் கூர்ந்து கவனித்தால், ஓர் உண்மை புலப்படும் நமக்கு. இந்த அழகிய, பிரமாண்டமான பெரியகோயிலின் அடித்தளக் கற்களில் ஓர் இடத்தில்கூட மன்னனின் பெயர் பொறிக்கப்படவில்லை. சாதாரணக் குடிமக்களின் பெயர்களும் படைவீரர்களின் பெயர்களும் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளன. அதாவது, இந்தக் கோயிலை நிலையாகத் தாங்கி ஆராதிப்பவர்கள் எளிய அடியார்களும் தொழிலாளர் களும்தான் என்பதை நமக்கு உணர்த்த, ராஜராஜசோழன் செய்திருக்கிற விஷயமாகத்தான் இது எனக்குத் தோன்றுகிறது.

அதேபோல், கோயிலின் திருச் சுற்று மாளிகையைப் பார்த்திருக் கிறீர்கள்தானே! அதன் அழகில் அசந்து போய்விடுவோம். அத்தனை அழகு; அத்தனை பிரமாண்டம்! அவன் நினைத்திருந்தால், அக்கா குந்தவை நாச்சியார் பெயரில், தன் மனைவியர் பெயரில், மகன் பெயரில், ஏன்... தன் பெயரில்கூட இந்தத் திருச்சுற்று மாளிகையைச் சொல்லியிருக்கலாம். ஆனால், தன் சேனாதிபதி கிருஷ்ணன் ராமன் என்பவர் பெயரில் திருச்சுற்று மாளிகையை அமைக்கச் செய்தான். இந்தத் தகவலை கோயிலில் உள்ள தூண் ஒன்றில் கல்வெட்டாகவும் பொறித்துள்ளான். அதாவது, சோழ தேசத்தின் மிக முக்கியமான கோயிலாக மட்டுமின்றி, உலகமே வியந்து பார்க்கும் ஆலயத்தின் கட்டுமானத்தில், அதன் பெருமை யில் அனைவரின் பங்களிப்பும் பெயர்களும் இருக்கவேண்டும் என்று பரந்த மனத்துடன் யோசித்துச் செயல்பட்டிருக்கிறான், மன்னன்.
சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர் - Page 3 P40
அதேபோல், இன்னொரு சிலிர்ப்பான விஷயம்... கோயிலில் உள்ள எல்லாத் தெய்வங்களுக்குமான பூஜைகளுக்கு நிவந்தம் அளித்துள்ளார்கள், பலரும். தனிநபர்கள், வணிகர்கள், ஊர்ச்சபையினர் என நிவந்தம் அளித்தவர்களின் பெயர்களை யெல்லாம் கல்வெட்டுக்களில் பொறித்து, அவர்களுக்குப் பெருமை சேர்த்திருக்கிறான் ராஜராஜசோழன்.

கோயில் விமானத்தின் வடக்குப் புறத்தில், சண்டீசர் சந்நிதிக்கு எதிரில், வாய்மொழி ஆணையாகச் சொன்னதை அப்படியே பதித்திருக்கிறான் மன்னன். 'தஞ்சாவூரில் தான் எடுப்பித்த கற்கோயிலான ராஜராஜச்சரத்தில் எழுந்தருளியிருக்கும் பரசாமிக்கு, தான் கொடுத்தது, தன் அக்கன் (சகோதரி) குந்தவைதேவியார் கொடுத்தது, தன் தேவிமார்கள் கொடுத்தது ஆகியோருடன் சிவனார்க்கு யார் யாரெல்லாம் எது எதெல்லாம் கொடுத்தார்களோ அந்தக் கொடை விவரங்களை தன் கொடை விவரத்துடன் சேர்த்துப் பொறிக்கவேண்டும் என்று உத்தரவு பிறப் பித்துள்ளான். அத்துடன், அருகிலேயே மிகப் பெரிய பட்டியலையும் குறித்துள்ளான். அந்தக் கல்வெட்டை இன்றைக்கும் பார்க்கலாம்.

அதுமட்டுமா? தஞ்சைப் பெரிய கோயிலுக்கென 400 ஆடல்மகளிரை நியமித்துள்ளான் மன்னன். இசைக்கவும் பக்கவாத்தியம் முழங்கவும் 220 பேரையும், தேவாரம் பாடுவதற்கு 50 ஓதுவாரையும், நூற்றுக்கும் மேற்பட்ட மெய்க்காவலர்களையும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிரந்தரப் பணியாளர்களையும் நியமித்திருக்கிறான் ராஜராஜசோழன். அவர்களின் பெயர், ஊர், ஊதியம், வேலை எனப் பலவற்றையும் கல்லில் பதித்திருக்கிறான்.
சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர் - Page 3 P40c
கோயிலின் தலைமைச் சிற்பி குஞ்சரமல்லன். அவனைக் கௌரவிக்கும் பொருட்டு, அவன் பெயருடன் தன் பெயரையும் இணைத்து ராஜராஜப் பெருந்தச்சன் எனப் பட்டம் அளித்துச் சந்தோஷப்படுத்தியிருக்கிறான். அதுமட்டுமா? ஆயிரத்துக்கும் மேலான கோயில் பணியாளர்களின் வசதிக்காக ஈரங்கொல்லிகள் (துணி வெளுப்பாளர் கள்), சிகை அலங்காரம் செய்யும் நாவிதர் கள் எனப் பலரையும் நியமித்து, சிகை அலங்காரக் கலைஞன் ஒருவனுக்கு, ராஜராஜ நாவிதன் எனப் பட்டமளித்தான் மன்னன். இறைப் பணியில் எல்லா வேலையும் போற்றத்தக்கதே என்பதை வலியுறுத்திய பெரிய மனம் கொண்ட மன்னன், ராஜராஜ சோழன். இன்னொரு முக்கியமான விஷயம்... கலைகள் அனைத்தும் வளர்ந்த இடம் ஆலயம். கலைஞர்களுக்கு எஜமானன், பெருங்கோயில் ஈசனே! இதை உலகத்தார் உணரும் வகையில், ஈசனின் பண்டாரத்தில் இருந்து கலைஞர்களுக்கு ஊதியமும், கோயில் நிர்வாகிகளுக்கு அரசு பண்டாரத்தில் இருந்து ஊதியமும் அளித்து, கலைஞர்கள் இறைவனின் அடிமை என்பதையும், அரசனுக்கு ஒருபோதும் அவர்கள் அடிமை இல்லை என்பதையும் நிலைநாட்டி, அதனைக் கல்வெட்டுகளிலும் பொறித்து வைத்துள்ளான் மன்னன்.

பஞ்சபூதங்களால் இயங்குகிற உலகம் இது. தஞ்சைப் பெரியகோயிலின் கட்டுமான அமைப்புகளும் பஞ்சபூதங்களின் வடிவமாகக் கட்டப்பட்டுள்ளன. இயற்கையையும் இறைவனையும், குறிப்பாக மக்களையும் ஒரு வரிசையில் கோத்து, சமமாகப் பாவித்து, பொற்கால ஆட்சியையே நடத்திச் சென்றான், ராஜராஜசோழன் என்பதை இன்னமும் உணர்த்திக்கொண்டிருக்கின்றன, கோயிலில் உள்ள கல்வெட்டுகள்.

- புரட்டுவோம்


avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Wed Sep 03, 2014 9:20 pm


சேதி சொல்லும் சிற்பங்கள் - 19
முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன்


புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி வட்டம், மஞ்சக்குடி எனும் சிறிய கிராமத்தில் திகழும் சிவாலயமும் விஷ்ணு ஆலயமும் சமீபகாலம் வரை புதர் மண்டிய நிலையில் இடிபாடுகளுடன் திகழ்ந்தன. அந்த ஊர் இளைஞர்களின் பெருமுயற்சியால், புதர்களும் இடிபாடுகளும் அகற்றப்பட்டன. பூமியில் இருந்து கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுகளை ஆராய்ந்து பார்த்தபோது, இந்த ஆலயங்கள் அறந்தாங்கி தொண்டைமான் மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டவை என்பது தெரியவந்தது.

புதுக்கோட்டைப் பகுதியை மதுரை பாண்டிய மன்னர்களின் பிரதிநிதிகளாக இருந்து ஆட்சி செய்தவர்கள் தொண்டைமான் வேந்தர்கள். கி.பி.14-ஆம் நூற்றாண்டில், இரண்டாம் மாறவர்மன் குலசேகர பாண்டிய மன்னனின் பிரதிநிதியாக இருந்து, புதுக்கோட்டைக்கு உட்பட்ட பகுதியை ஆட்சி செய்து வந்தார். அந்த மன்னர், மஞ்சக்குடி எனும் ஊரில் இருந்தபடி ஆட்சி செய்ததால், அவர் மஞ்சக்குடியுடையார், திருநோக்கு அழகியார் தொண்டைமான் என்றெல்லாம் அழைக்கப்பட்டார்.

இவரின் மரபு வழியே வந்தவர்கள், அறந்தாங்கியில் கோட்டைக் கொத்தளங்கள் அமைத்து, அந்த ஊரையே தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி செய்து வந்தார்கள். ஆவுடையார்கோவில் கலைச்செல்வங்கள் முதலானவை இவர்களின் பெருங்கொடையே!

மஞ்சக்குடியுடையார் தான் பிறந்த ஊரில், அதாவது மஞ்சக்குடியில் இரண்டு ஆலயங்களைக் கட்டினார். அந்த சைவ- வைணவ ஆலயங்களில் குடிகொண்டிருக்கும் இறைத் திருமேனிகளை தான் எப்போதும் வணங்கும் கோலத்தில், சுமார் ஐந்தரை அடி உயரம் உள்ள தனது உருவச்சிலைகளை நிறுவியுள்ளார்.

மஞ்சக்குடி சிவாலயத்தின் மூலவர் லிங்கத்தின் பாணம், கல்லாக மாறிய மரப்படிவப் பாறையாகும். பழங்காலத்தில் நடுதறி என்று சொல்லி நடப்பட்டு வணங்கப்படும் மரத்தாலான லிங்க பாணம் இங்கு கல்லாகக் காட்சி அளிக்கிறது. இந்தக் கோயிலின் அம்பாள் திருமேனி, பாண்டிய நாட்டுக்கே உரிய வகையில் இரண்டு திருக்கரங்களுடன், ஒரு கரத்தில் மலர் ஏந்தியும், மற்றொரு கரத்தைத் தொடை மேல் வைத்தும் அருமையாகக் காட்சி தருகிறது.
சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர் - Page 3 P40
இங்கே உள்ள மரத்தடியில் காட்சி தரும் ஸ்ரீபைரவர், கலைமகள், அமர்ந்த கோலத்திலான தேவி ஆகியோரின் திருவடிவங்கள் நேர்த்தியாக வடிக்கப்பட்டுள்ளன. சூரியனின் ஒரு கரம் உடைந்து பின்னப்பட்டுக் காணப்பட்டாலும், திருமுகம் பேரெழிலுடன் திகழ்கிறது. கருவறையின் பின்பக்க தேவ கோஷ்டத்தில் காணப்படும் லிங்கோத்பவர் வடிவமும் சிறப்பு கொண்டதாக அமைந்துள்ளது.
சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர் - Page 3 P40a(1)
சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர் - Page 3 P40b
சோதி வடிவாகிய பெருந்தூணின் மேற்புறம் மாலை சுற்றப்பட்டுள்ளது. அருகே, அண்ணலின் முடி காணப் பறந்து செல்லும் அன்னமும் (பிரமனும்), அடி காண பூமியை அகழ்ந்து செல்லும் ஏனமும் (விஷ்ணு) காணப்பெறுகின்றன. அடிமுடி காட்டாவண்ணம் அண்ணாமலையார் மான் மழு ஏந்தியவாறு அருட்காட்சி தருகின்றார்.

இந்த ஆலயத்தில் காணப்பெறும் ஸ்ரீதுர்கையின் திருவடிவமும், கணபதியாரின் திருவுருவமும் கல்லா அல்லது உலோகமா என நம்மை மயங்க வைக்கின்றன.

மஞ்சக்குடி ஆலயத்துச் சிற்பங்கள் வரிசையில் மகுடமெனத் திகழ்வது, லிங்கத்துக்குப் பால் சொரிந்தவாறு நிற்கும் காராம்பசுவின் சிற்பமே! ஒரு கல்லாலான பலகை மீது நான்கு கால்களுடன் நிற்கும் இந்தப் பசு தன் மடியை லிங்கத்தின் மீது வைத்தவாறு பால் சொரிகின்றது. அவ்வண்ணமே நின்றவாறு, அது தன் தலையைத் திருப்பி, நாக்கால் அந்த லிங்கத்தை வருடும் நிலையில் காணப்பெறுகின்றது. இக்காட்சிகள் அனைத்தும் ஒரே கல்லில் வடிக்கப் பெற்றவையாகும்.

பொதுவாக, தமிழகத்திலுள்ள திருக்கோயில் களில் இக்காட்சிக்குரிய பசு சிற்பங்களை தூண்களிலும், சுவர்களிலும் புடைப்புச் சிற்பங்களாகப் பாதி உடல் மட்டுமே வெளியில் தெரியுமாறு அமைத்திருப்பர். இங்கு மட்டுமே முழுத் தனிச்சிற்பமாகப் பசுவும் லிங்கமும் இணைந்த நிலையில் காணப்பெறுகின்றன.

மறைஞானசம்பந்தர் அருளிய 'சிவதரு மோத்திரம்’ என்னும் நூலில் நத்தை, பத்திரை, சுரபி, சுசீலை, சுனை என்ற சிவலோகத்து ஐவகைப் பசுக்கள் பற்றிக் குறிக்கப்பெற்றுள்ளன. உமாதேவியே பசு வடிவம் எடுத்து, திருவாவடுதுறை லிங்கப் பெருமான் மீது பால் பொழிந்ததாக அவ்வூர் தல புராணம் குறிக்கின்றது. மஞ்சக்குடியில் காணப்பெறும் பசுவின் திருவடிவை உமாதேவியாகவே கொண்டு நாம் வணங்கிப் போற்றுவோம்!

- புரட்டுவோம்

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Wed Sep 03, 2014 9:22 pm


சேதி சொல்லும் சிற்பங்கள்! 20
முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன்


திருப்பைஞ்ஞீலி

'ஞீலி’ என்ற தமிழ்ச் சொல், வாழையின் ஒரு குறிப்பிட்ட இனத்தைக் குறிப்பதாகும். ஞீலி வாழை உண்பதற்கு ஏற்றதன்று. இவ்வகை வாழை இனத்தையே தல விருட்சமாகக் கொண்டதால், திருச்சி மாவட்டத்தில் உள்ள ஒரு கோயிலும், ஊரும்

திருப்பைஞ்ஞீலி என்றே அழைக்கப்பெறுகின்றன. திருவரங்கத்துக்கு வடக்காக மண்ணச்சநல்லூர், திருவெள்ளறை என்ற ஊர்களுக்கு அருகில் இவ்வூர் விளங்குகின்றது.

திருப்பைஞ்ஞீலியில் கோயில்கொண்டுள்ள ஈசனை நீலகண் டேஸ்வரர், ஞீலிவன நாதர், கதலிவசந்தர், ஆரண்யவிடங்கர் ஆகிய பெயர்களில் குறிப்பர். கல்ஹாரத்துடன் அழகிய துவாரபாலகர் சிற்பங்கள் திருவாயிலை அலங்கரிக்க, இவ்வாலயத்து மொட்டைக் கோபுரம் திகழ்கிறது. 2-ம் கோபுரமும் கலை நயம் வாய்ந்ததாகும். மூலவர் சிவலிங்கம், சிறிய பாணத்துடன் காணப்பெறுகிறது. உமாதேவியோ திருக்கரத்தில் சுவடி ஏந்திய நிலையில், ஞான முத்திரை காட்டியவாறு அருள்பாலிக்கின்றார்.

திருச்சுற்றில் காணப்பெறும் பைரவர் சிற்பமும், சூரியனின் திருவுருவமும் சோழர் கால கலைநயத்தோடு விளங்குகின்றன. பின்புறத்தில் நாய் நிற்க, நின்ற கோலத்தில் சூலம், கபாலம், டமருகம், பாசம் ஆகியவற்றைத் திருக்கரங்களில் கொண்டவராக, எரிதழல் நிரம்பிய மகுடத்துடன் பைரவரின் திருமேனி காட்சி தருகின்றது. சூரியனோ தன் இரு கரங்களிலும் கமலங்களை ஏந்தியவாறு காணப்பெறுகின்றார்.

நடராஜரின் திருவுருவம் உமையம்மையுடன் சுவரில் வண்ண ஓவியமாகத் திகழ, அவர் முன்பு ஸ்ரீபாதபீடம் உள்ளது. இங்கு காணப்பெறும் கல்லாலான பலகணி (ஜன்னல்) சிறந்த வேலைப் பாடுடையதாகும்.

திருவாரூரில் எவ்வாறு தியாகராஜப் பெருமான் (சோமாஸ்கந்தர்) வீதிவிடங்கர் என அழைக்கப் பெறுகின்றாரோ, அதுபோல இந்த ஆலயத்தில் குடபோக மாகக் (குடைவறை) காணப்பெறும் கருவறையின் சுவரில் சிவபெருமான், உமாதேவி, குழந்தை முருகன் (ஸ்கந்தன்) ஆகியோரின் புடைப்புச் சிற்பங்கள் காணப் பெறுகின்றன. சுந்தரமூர்த்தி சுவாமிகள் இவ்வாலயத்து தேவாரப் பதிகத்தில் 'ஆரணீய விடங்கரே’ என்று குறிப்பிட்டுப் பாடியுள்ளது, இச்சிற்பத் திருவடிவத்தையே!
சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர் - Page 3 P36a
சுகாசன கோலத்தில் ஈசனார் மான், மழு ஆகியவற்றை ஏந்தியவாறு நான்கு திருக்கரங்களுடன் அமர்ந் திருக்க, அம்மையோ பக்கவாட்டில் திரும்பியவாறு, ஒருகாலைத் தொங்கவிட்டவாறும் மறுகாலைக் குத்திட்டவாறும் ஒய்யாரமாக அமர்ந்துள்ளார். இருவர் இடையே உள்ள முருகப்பெருமானைத் திருக்கரங்களால் பற்றியவாறு உமாதேவி காணப் பெறுகின்றார்.

தமிழகத்தில் உள்ள சோமாஸ்கந்தர் புடைப்புச் சிற்பங்கள் வரிசையில் இது தனித்தன்மையுடையது ஆகும். கலையமைதியை ஆராயும்போது, இந்தப் படைப்பு கிபி 8-ம் நூற்றாண்டைச் சார்ந்த முத்தரையர்களின் கலைவண்ணமே என்பதை உணரலாம். ஈசனின் காலடி யில் கிடக்கும் முயலகனை யமன் என இத்தலத்தார் தவறாகக் குறிப்பிட்டு வருகின்றனர்.
சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர் - Page 3 P36b
இத்தலத்தின் மிகுசிறப்பினை, கோயிலுக்கு அருகேயுள்ள சிறிய நீர்நிலையன்றும் அதன் கரையில் காணப்பெறும் சுதைச் சிற்பக் காட்சியும் நமக்கு எடுத்துரைக்கின்றன. இச்சிற்பக் காட்சியில் அந்தணர் வடிவில் சிவபெருமான் சோற்று மூட்டை (பொதிச்சோறு) ஒன்றினை ஏந்தி நிற்க, எதிரே உழவாரம் ஏந்திய திருநாவுக்கரசர் நின்றுகொண்டிருக்கிறார். இது, ஈசனார் அப்பரடிகளுக்கு பொதிச்சோறு அளித்த நிகழ்வைக் குறிப்பதாகும்.
சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர் - Page 3 P36d
காவிரிக்கரைத் திருத்தலங்களை வழிபாடு செய்து திருப் பதிகங்கள் பாடிச் சென்ற திருநாவுக்கரசர், பழையாறையி லிருந்து பல தலங்களைக் கண்டு, திருப்பராய்த்துறை சென்றடைந்தார். பராய்த்துறை ஈசனைப் பாடிப் பரவிய பிறகு, திருபைஞ்ஞீலிக்குச் சென்று வழிபட வேண்டும் எனும் பெருவிருப்பால், கடுங் கோடையையும் பொருட்படுத்தாது வடதிசை நோக்கி தொடர்ந்து நடந்தார்.

பசி மிகுதியால் வாட்டமுற்ற அடியாரின் துயர் நீக்க விரும்பிய பைஞ்ஞீலி ஈசன், முதிய அந்தணர் வடிவில் வந்தார். அப்பரின் எதிரில் தோன்றி, கையில் எடுத்து வந்த சோற்றுப் பொதியை அவரிடம் தந்து, அங்கு அவரே தோற்றுவித்த குளத்தில் நீர் பருகவும் வேண்டினார்.
சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர் - Page 3 P36c
சோறு உண்டு நீர் பருகிய அப்பரடிகள், முதியவரோடு பைஞ்ஞீலியை அடைந்தார். கோயில் நெருங்கியதும் முதியவர் மறைந்தருள, ஈசனாரின் கருணைத்திறம் உணர்ந்த நாவுக்கரசர் அப்பதியில் தேவாரம் பாடித் திளைத்தார். இந்நிகழ்வைக் காட்டுபவையே அங்கு காணப்பெறும் சுதைச் சிற்பங்களும், நீர் நிலையும் ஆவன.

- புரட்டுவோம்

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Wed Sep 03, 2014 9:26 pm


சேதி சொல்லும் சிற்பங்கள்! 21
முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன்


காஞ்சி வைகுந்த பெருமாள்

நகரங்களில் சிறந்தது காஞ்சி (நகரேஷு காஞ்சி) என்ற சிறப்புக்கு உரிய காஞ்சிபுரத்தில் உள்ள மங்களாசாசனம் பெற்ற 14 திருக்கோயில்களில் ஒன்று ஸ்ரீவைகுந்தநாத பெருமாள் ஆலயம்! இந்தக் கோயிலைப் பற்றிக் குறிப்பிடும் பல்லவர் காலக் கல்வெட்டுச் சாசனங்கள், 'பரமேஸ்வர விண்ணகரம்’ என்றும், 'பரமேஸ்வர விஷ்ணுகிரஹம்’ என்றும் தெரிவிக்கின்றன. வைணவக் கோயில் ஒன்றுக்கு 'பரமேஸ்வரன்’ என சிவநாமம் அமைந்திருப்பது வியப்பைத் தருகிறது, பாருங்கள்!

எழிலார்ந்த இந்தக் கோயிலை எடுப்பித்தது, பல்லவமல்லன் எனும் இரண்டாம் நந்திவர்ம பல்லவனாவான். இவனைப் பற்றி வைகுந்தநாதர் ஆலயத்தில் உள்ள கல்வெட்டு, 'பல்லவ மல்லனான பரமேஸ்வரன்’ என்று குறிப்பிட்டு, அவனுடைய இயற்பெயர் பரமேஸ்வரன் என்பதைச் சுட்டுகிறது. இந்த மன்னன் கி.பி. 730-ல் துவங்கி 795 வரை சுமார் 65 வருட காலம் நீண்ட நெடிய ஆட்சி புரிந்திருக்கிறான்.

இவனுடைய சமகாலத்தில் வாழ்ந்த திருமங்கை ஆழ்வார், இந்தக் கோயிலைப் பற்றிப் பத்துப் பாடல்கள் (பாசுரம்) பாடியுள்ளார். அதில், 'பல்லவன் மல்லையர் கோன் பணிந்த பரமேச்சுர விண்ண கரம் அதுவே’ என்று நந்திவர்மனின் புகழையும் குறிப்பிட்டுச் சொல்கிறார்.

அழகிய திருச்சுற்று; அதன் உட்புறம் சுவருடன் இணைந்த திருச்சுற்று மாளிகை எனும் மண்டபம்; இந்த மண்டபத்தின் நான்கு பத்திகளையும் சிம்மங்களுடன் உள்ள தூண்கள் தாங்கி நிற்கின்றன. ஒவ்வொரு சிம்மமும் உயிர்ப்புடன் நிற்பதான பிரமிப்பைத் தருகிறது!

மண்டப உட்புறச் சுவரில், இரண்டு அடுக்குகளாகத் தொடர் சிற்பக் காட்சிகள் உள்ளன. ஒவ்வொரு காட்சிக்குக் கீழேயும் பல்லவ கிரந்த எழுத்தில், அந்தக் காட்சிக்கு உரிய விவரங்கள் குறிப்புகளாக, கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்டுள்ளன.

திருச்சுற்றுக்கு நடுவே பிரதான ஆலயமான பரமேஸ்வர விண்ணகரம் கம்பீரமாகக் காட்சி தருகிறது. கருவறைக்கு மேலே ஒன்றன் மேல் ஒன்றாக, மூன்று தளங்களில் மூன்று மூலஸ்தானங்கள் அமைந்துள்ளன. கீழ்த்தளத்தில், ஸ்ரீவைகுந்தநாதர் மேற்கு நோக்கிய படி காட்சி தருகிறார். அதையடுத்து, மேலே அமர்ந்த கோலத்திலும் கிடந்த கோலத்திலும் காட்சி தருகிறார்.

கருவறையின் புறச்சுவர் முழுவதும் திருமாலின் பல்வேறு திருக்கோலக் காட்சிகள் புடைப்புச் சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளன. பல்லவர் அல்லது சோழர், பாண்டியர் படைத்த எந்த வைணவ ஆலயத்திலும் இந்த அளவுக்குப் பேரழகு கொண்ட, பிரமிக்கத்தக்க சிற்பக் காட்சிகளைத் தரிசிப்பது அரிது!

ஸ்ரீவிமானத்து மூன்று திசைகளிலும் புறத்தில் சிறிய வாயில்கள் உள்ளன. இவை, கருவறையைச் சுற்றியுள்ள சாந்தாரம் எனும் சுற்று அறைக்குக் காற்றும் வெளிச்சமும் கிடைக்க அமைக்கப்பட்டுள்ளன. அத்தகைய வாயில்களின் இரண்டு புறமும் தாமரை மலரை ஏந்தியபடி துவார பாலகர்கள் நிற்பதைக் காணலாம். இவற்றுக்கு நடுவே திருமாலின் திவ்வியக் காட்சிகளைத் தரிசிக்கலாம்.
சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர் - Page 3 P150a
கருடாழ்வார் தோளில் திருமால் அமர்ந்திருக்க, அருகே ஸ்ரீதேவி நிற்பது; சங்கு- சக்கரம் ஏந்திய திருமால் அமர்ந்திருக்க, அடியார் களும் தெய்வங்களும் தொழுது நிற்பது; ஐந்து தலை அரவின் கீழ் பரமபத நாதன் (வைகுந்தநாதர்) அமர்ந்திருக்க, திருமகள் வணங்கிப் போற்றுவது; தாமரை மலர் மீது மாலவன் நிற்க, இருபுறமும் சூரிய- சந்திரர் கையுயர்த்தி போற்றவும், கீழே முனிவர்கள் நால்வர் அமர்ந்திருப்பது; விஷ்வக் சேனனுக்கு திருமால், தலையில் மாலை சூட்டுவது ( சண்டீசருக்கு சிவன் மாலை சூட்டுவது போன்றே); இரணியனை மடியில் கிடத்தி, உடல் பிளக்கும் நரசிங்கத் திருவடிவம் என, கருவறையின் புறச்சுவர் முழுவதும் பேரழகு வாய்ந்த சிற்பக் காட்சிகளை நாம் கண்டுகளிக்கலாம்.

மூலவரான வைகுந்தநாத பெருமாளையும், மேல் நிலைகளில் உள்ள அமர்ந்த, கிடந்த கோலக் காட்சிகளையும், புறச் சுவரில் காணப்படும் திருமாலின் திரு அவதாரக் காட்சிகளையும் கண்டுகளித்தவாறு திருச்சுற்று மாளிகைப் பத்தியில் நுழைந்து, இரு அடுக்குகளாகக் கல்வெட்டுக் குறிப்புகளுடன் உள்ள சிற்பத் தொடரை அதன் வரலாற்றுப் பின்புலத்துடன் அறிந்துகொண்டு வியப்புடன் வெளிவர ஒருநாள் போதாது நமக்கு!
சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர் - Page 3 P150b
அந்தத் திருமாளிகையில் பல்லவ குல வரலாறு புடைப்புச் சிற்பங்களாகச் செதுக்கப்பட்டுள் ளது. பல்லவ அரசர்களின் முடிசூட்டு விழாக்கள், அவர்கள் சாளுக்கியர்களோடும் பிறபுலத்து அரசர்களோடும் நிகழ்த்திய போர்க் காட்சிகள், வெற்றி விழாக்கள், பல்லவர் எடுத்த கோயில்கள், நாட்டியக் காட்சிகள், இறைத் திரு மேனிகள் என வரிசை வரிசையாகக் கல்வெட்டுக் குறிப்புகளுடன் இருப்பதைப் பார்த்து பிரமித்துப் போவோம்!
சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர் - Page 3 P150d
சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர் - Page 3 P150e
குறிப்பாக, 2-ம் நந்திவர்மனாகிய பரமேஸ்வரன் எடுத்த இந்த ஆலயமான பரமேசுவர விண்ணகரத் தின் சிற்பக் காட்சியையும் இங்கு நாம் காண முடிகிறது. பல்லவ மல்லனின் வரலாற்று நிகழ்வுகள் உயிரோட்டமான சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளன. முக்கியமாக, காஞ்சி ஸ்ரீகயிலாய நாதர் ஆலயத்தை எடுப்பித்தவனும், பல்லவ மன்ன னின் முன்னோருமான ராஜசிம்ம பல்லவனும், அவன் தேவி ரங்கபதாகையும் நிற்கும் காட்சி அரிதானதொன்று!

காஞ்சிபுரம் செல்வோர், அந்த ஊரில் ஆழ்வார்களால் துதித்துப் போற்றி, மங்களாசாசனம் செய்யப்பட்ட 14 திவ்விய தேசங்களையும் கண்டு சேவித்த பின்பு, சிற்பசாகரமாகத் திகழும் ஸ்ரீவைகுந்த நாதர் ஆலயத்துக்கு மீண்டும் ஒருமுறை சென்று, அந்த அற்புதக் காட்சிகளை அணு அணுவாக ரசித்துப் பாருங்கள். திருமங்கை ஆழ்வாரின் கூற்று மெய்ப்படும்.

- புரட்டுவோம்

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Wed Sep 03, 2014 9:35 pm


சேதி சொல்லும் சிற்பங்கள் - 22
காஞ்சி ஏகாம்பரநாதர் ஆலயம்
முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன்


'கச்சித் திருவேகம்பன் செம்பொற் கோயில்’ என்று மணிவாசகப் பெருமான் போற்றும் சிறப்புடையது காஞ்சிபுரத்து பெரிய கோயில் என்று அழைக்கப்படும் ஸ்ரீஏகாம்பரநாதர் திருக்கோயில்.

தேவாரப் பாடல் பெற்ற கோயில்களாக ஸ்ரீஏகம்பம், திருமேற்றளி, ஓணகாந்தன் தளி, கச்சிநெறிக் காரைக்காடு, அநேகதங்காவதம் என்னும் ஐந்து திருக்கோயில்களும் காஞ்சி மாநகருக்கு அணியாகத் திகழ்கின்றன. ஏகம்பத்துத் திருக்கோயில் வளாகத்தினுள் 'கச்சி மயானம்’ என்ற சிறப்புடைய பழம்பதியன்றும் உள்ளது. ஏகாம்பரேஸ்வரர் மூலவர் மணல் (பிருத்வி) லிங்கமாகும். பஞ்சபூத தலங்களுள் இது 'நிலம்’ எனும் பூத தத்துவம் காட்டும் ஆலயம்.

உமாதேவியார் கம்பை நதிக்கரையில் மாமரத்தின் கீழ், மணலால் லிங்கம் அமைத்து, தவத்தில் ஈடுபட்டார். அப்போது ஆற்றில் வெள்ளம் பெருகி வர, உமையம்மை லிங்கத்தைத் தழுவிக் காத்தாள் என்கிறது ஸ்தல புராணம். அம்பிகை தழுவக் குழைந்தானாம் ஈசன். அதனால் 'தழுவக்குழைந்த பிரான்’ எனும் திருநாமம் பெற்றார் சிவனார்.இது நிகழ்ந்த தலமே, தற்போதைய திருவேகம்பம் கோயிலாகும். தல விருட்சம் மாமரம். இங்கே, மாமரத்துக்கு அருகில் புராணத்தைச் சுட்டிக்காட்டும் எழிலார்ந்த சிற்பங்கள் மூன்று உள்ளன.

முதற்காட்சியில், உமாதேவி (காமாக்ஷி) தீச்சுடரின் நுனியில் தன் ஒற்றைக்காலால் நின்ற வண்ணம், மறு காலைத் தூக்கி மடித்தவாறு, ஒரு கையைத் தலைக்கு மேல் உயர்த்தி, மறு கரத்தால் ஈசனைப் போற்றித் தவமிருக்கும் திருக்கோலம் இடம்பெற்றுள்ளது.
சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர் - Page 3 P40
அதையடுத்து, ஸ்ரீலிங்கோத்பவர் திருவுருவம். அடிமுடி காணும் போட்டியில், அன்ன வடிவெடுத்த ஸ்ரீபிரம்மனின் திருவுருவம் அந்த லிங்க பாணத்தின் மேற் பகுதியிலும், பன்றி உருவெடுத்த திருமாலின் திருவுருவம் கீழ்ப் பகுதியிலும் உள்ளன. இடையே உள்ள வெட்டுப் பகுதிக்குள் ஈசனார் அடிமுடி காட்டாதபடி, தன் உருவைக் காட்டி ஸ்ரீஅண்ணா மலையாராகக் காட்சி தருகிறார்.

அடுத்து, மாமரத்தின் கீழ் தேவி ஸ்தாபித்த லிங்கத் திருமேனியை, கம்பா நதியின் வெள்ளப்பெருக்குக்குப் பயந்து கட்டித் தழுவுகிறார். தழுவக் குழைந்தானான கச்சி ஏகம்பனின் இந்தத் திருக்கோலக் காட்சி, அழகிய சிற்பமாகத் திகழ்கிறது!
சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர் - Page 3 P40b
சுற்றுப் பிராகாரத்தில் உள்ள மன்னவன் ஒருவனின் திருவுருவம் குறிப்பிடத்தக்க ஒன்று. தாடி மீசையுடன் நின்ற கோலத்தில் வணங்குகிறவராகக் காணப் படும் சிற்பம், கரிகால் சோழ மன்னன் என்கின்றனர். இது பல்லவ அல்லது சோழ மன்னனின் உருவச் சிலை என்பது மட்டும் உறுதி!

அதேபோல், பிராகாரத்தில் தூண் ஒன்றில் காணப்பெறும் ஸ்ரீநரசிம்மர் உருவம் வெகு அற்புதம்! இரணியனை மடியில் கிடத்தி, அவன் மார்பைப் பிளக்கும் இந்த ரௌத்திரமூர்த்தியின் கோலம் மெய்சிலிர்க்கச் செய்யும். முதல் திருச்சுற்றிலேயே, திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பெற்ற நிலாத்துண்டப் பெருமாளின் திருக்கோயிலில் விஷ்ணு மூர்த்தியின் அழகுமிகு சிற்பமும் இடம்பெற்றுள்ளது.

இந்தக் கோயிலின் ராஜகோபுரம், ஒன்பது நிலைகளுடன் கம்பீரமாகக் காட்சி தருகிறது. கி.பி. 1509-ம் வருடம், விஜயநகரப் பேரரசர் கிருஷ்ண தேவராயர் இந்தக் கோபுரத்தை எடுப்பித்தார். கோபுரத்தின் திருவாயிலில் நுழையும்போது, மேலே உள்ள நிலைக்காலின் அடிப் பகுதியைப் பார்த்தால், அங்கு 'ஸ்வஸ்தி ஸ்ரீகிருஷ்ணதேவராயர் பண்ணுவித்த திருக்கோபுரம்’ என்று தமிழிலும் தெலுங்கிலும் எழுதப்பட்ட கல்வெட்டைக் காணலாம்.

இந்தக் கோபுர வாயிலின் இருமருங்கும் காணப்படும் மூன்று சிற்பக் காட்சிகள் தனிச்சிறப்பு கொண்டவை! முதல் இரண்டு சிற்பக் காட்சிகள் ஒன்றன்கீழ் ஒன்றாக உள்ளன. மேலே காணப்படும் பகுதியில், சிவபெருமான் ஸ்ரீதட்சிணாமூர்த்தியாக அமர்ந்துகொண்டு, சனகாதி முனிவர்களுக்கு ஞானத்தை உரைக்கிறார். பெருமானாரின் இடப்புறம் மழு ஒன்றினைத் தன் தோளில் அணைத்தவண்ணம் சண்டீச பெருமான் நின்று வணங்குகிறார்.

கீழே காணப்படும் காட்சியில், தல வரலாறு சித்திரிக்கப்பட்டுள்ளது. அழகான ஸ்ரீவிமானமாகத் திகழும் கோயில் ஒன்று சிற்பமாகவே காட்சி தரும் அழகே அழகு! உள்ளே மூலவராகத் திகழும் லிங்க உருவமும் உள்ளது. இந்தக் கோயில் சிற்பம், திருவோத்தூர் என அழைக்கப்படும் தொண்டை நாட்டுத் திருத்தலமான செய்யார் சிவாலயத்தைக் குறிக்கிறது. அந்த ஆலயத்துக்கு முன்னர், குலைகள் தள்ளிய பனைமரமொன்று காணப்பெறுகின்றது. அதன்கீழ் ஒருபுறம் திருஞானசம்பந்தர் நின்றவாறு 'பூத் தேர்ந்து ஆயன கொண்டு...’ எனத் தொடங்கும் தேவாரப் பதிகத்தைப் பாடியபடி நிற்கிறார். அவருக்கு எதிர்ப்புறம் திகம்பரராக சமணர் ஒருவர் நிற்கிறார். அருகே, அவரே தன் சூளுரைக்காகத் தாமே கழுவேறி நிற்கும் காட்சியும் உள்ளது.
சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர் - Page 3 P40c

திருவோத்தூர் திருத்தலத்தில் அனைத்தும் ஆண் பனைகளாகவே இருப்பது கண்டு சமணர்கள், 'சம்பந்தரால் இவற்றைக் குலைகாய்த்திடச் செய்தல் இயலுமோ?’ என வாது செய்து அழைக்கவே, திருஞானசம்பந்தர் 'குரும்பை ஆண்பனை ஈன் குலை ஓத்தூர்’ எனும் சொற்றொடர் கொண்ட பதிகத்தின் கடைப் பாடலைப் பாட... அங்கு திகழ்ந்த ஆண் பனைகள் குலை தள்ளியதாகச் சேக்கிழார் பெருமான் பெரிய புராணத்தில் குறிப்பிடுகிறார். இந்தச் சரிதம் முழுவதையும் சிற்ப நுட்பமாக இங்கே தரிசித்து மகிழலாம்.

மூன்றாவதாகத் திகழும் சிற்பப் படைப்பில், கச்சி ஏகம்பத்து மாமரம் காணப்படுகிறது. அதன் முன், சிவபெருமானின் ஊர்தியான ரிஷபம் நிற்கிறது.

காஞ்சியம்பதியில், திருக்கச்சி ஏகம்பத்துச் சிற்பக் காட்சியில் காஞ்சி மற்றும் திருவோத்தூர் தல புராணங்களின் சிறப்பைக் கண்ணார ரசித்து, வியக்கலாம்.

- புரட்டுவோம்

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Wed Sep 03, 2014 9:38 pm


சேதி சொல்லும் சிற்பங்கள் - 23
முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன்
சிதம்பரம் நடராஜர் ஆலயம்


நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் எனும் பஞ்ச பூத தத்துவத்தை எடுத்துரைக்கும் ஆலயங்களான கச்சி (அல்லது) ஆரூர், ஆனைக்கா, திருவண்ணாமலை, திருக்காளத்தி, தில்லை என்ற திருக்கோயில்கள் வரிசையில் திகழும் தில்லையம்பதியை- தில்லையம்பலத்தை சிதம்பரம் எனத் தொன்மையான நூல்கள் தெரிவிக்கின்றன.

சிதம்பரம் என்பது பிரபஞ்சப் பெருவெளியையும், சிதாகாசம் எனும் ஞானவெளியையும் குறிக்கிறது. அம்பலத்தில் ஆடுகிற வனாகக் காட்சியளிக்கும் நடேச மூர்த்தியின் திருவடிவத்தில் காணப்படும் கமல பீடமும் மகர வாயும், நிலம் எனும் பூதத்தையும்; பரமனின் சடையில் ஒடுங்கிக் கிடக்கும் கங்காதேவி, நீரையும்; பெருமானின் இட மேற்கரத்தில் திகழும் எரியகல் (தீச்சுடர்), நெருப்பையும்; கூத்தனின் விரிசடை, பறக்கும் காற்றின் வேகத்தையும்; தீச்சுடர்களோடு திகழும் பிரபை ஆகாசத்தையும் நம் முன் நிறுத்தும் குறியீடுகள்! இவை அனைத்தையும் நாம் ஒருங்கே தரிசிக்கக்கூடிய திருத்தலமான தில்லையம்பதியின் நான்கு திருக்கோபுரங்களையும் சிற்பசாகரம் என்றே சொல்லலாம்.

சோழப் பேரரசன் முதலாம் ராஜராஜன் காலத்தில் தில்லைப் பெருங்கோயில் எவ்வாறு திகழ்ந்தது என்பதை, தஞ்சாவூர் பெரிய கோயிலில் ஓவியக் காட்சியாகக் காட்டியுள்ளான். பொன்னம்பலமும் பிற கோயில்களும், திருச்சுற்றுமாளிகையும், திருக்கோபுரங்களும் அந்தக் காலகட்டத்தில் எவ்வாறு திகழ்ந்ததோ, அவ்வாறே அவ்வோவியப் படைப்பில் திகழ்வதை இன்றைக்கும் பார்க்கலாம்.

சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்பு, தில்லையில் இன்றைக்கு நாம் காணும் ஏழு நிலைக் கோபுரங்கள் இடம்பெறவில்லை. மாறாக திருச்சூர், இருஞ்சாலக்குடா போன்ற கேரளத்துக் கோயில்களில் இடம்பெறும் மரவேலைப்பாடுகளுடன் ஓடுகள் வேயப்பட்ட சேரர் காலப் பாணியில் அமைந்த கோபுரங்களே இடம் பெற்றிருந்தன.

தில்லையில் முதன்முதலாக ஏழு நிலைக் கோபுரமாக மேற்குக் கோபுரத்தை இரண்டாம் குலோத்துங்கச் சோழன் எடுப்பித்தான். பின்னர் கோப்பெருஞ்சிங்கன், கிழக்கு மற்றும் தெற்குக் கோபுரங்களைக் கட்டினான். ஜடாவர்மன் சுந்தர பாண்டியன் தெற்குக் கோபுரத்தைப் புதுப்பித்தான். விஜயநகர அரசர் கிருஷ்ணதேவராயர் வடக்குக் கோபுரத்தை எடுத்தார்.

பல்வேறு காலகட்டங்களில், ஏழு நிலைகளைக் கொண்ட தில்லைக் கோபுரங்கள் கட்டப்பட்டிருந்தாலும், அந்தக் கோபுரங்களில் காலத்தால் முதற்படைப்பாக விளங்கும் மேற்குக் கோபுரத்தில் எவ்வாறு சிற்பங்களை இடம் பெறச் செய்தார்களோ, அதேமுறையை பிறகு அங்கு எடுக்கப்பட்ட மூன்று கோபுரங்களிலும் பின்பற்றினார்கள். ஆகவே, திட்டமிட்ட செயல்பாட்டுடன் கோயிலின் எல்லாக் கோபுரங்களும் ஒருசேர அழகு காட்டி நிற்பது இன்னும் பிரமிப்பைக் கூட்டுகிறது!
சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர் - Page 3 P36c
கோபுரங்களில் இடம்பெற்றுள்ள சிற்பங்களின் அமைப்பு முறையை, நான்கு பகுப்புகளில் அடக்கலாம். நுழைவாயிலின் இருமருங்கும் காணப்பெறும் மாடங்களில் உள்ள சிற்பங்கள், நுழைவாயிலின் இருமருங்கும் சுவரில் இடம் பெற்றுள்ள சிற்பங்கள், கோபுரங் களின் வெளிப்புறத்தில் அடித்தள மாக விளங்கும் உபபீடத்தில் உள்ள மாடங்களில் இடம்பெற்றுள்ள சிற்பங்கள், கோபுரத்தின் புறச் சுவரான பித்தியில் மேல்நிலை மாடங்களில் இடம்பெற்றுள்ள சிற்பங்கள் என நான்கு வகைகளாகப் பிரித்துப் பார்க்கலாம். வெளிப்புறம் காணப்படும் சிற்பங்கள், நான்கு திக்குகளிலும் தொடர்ச்சியாக அமைந்திருப்பதால், அவற்றை ஆவர்ண கோஷ்ட சிற்பங்கள் என கட்டடக் கலை நூல்கள் குறிப்பிடுகின்றன.
சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர் - Page 3 P36b
தில்லைக் கோபுரங்களைப் பொறுத்தவரை, நுழைவாயிலின் மாடங்களில் ஸ்ரீபைரவர், ஸ்ரீதுர்கை, அதிகார நந்தி, கோபுரங்களை எடுத்த கர்த்தா ஆகியோருக்கு மாடங்கள் அமைத்து, சிற்பங்களை இடம்பெறச் செய்துள்ளனர். மேற்குக் கோபுரத்தில் இரண்டாம் குலோத்துங்கனின் உருவச் சிலையும், கிழக்கில் கோப்பெருஞ்சிங்கனின் உருவச் சிலையும், வடக்கில் கிருஷ்ணதேவராயரின் உருவச் சிலையும் இருப்பதை இன்றைக்கும் காணலாம்.
சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர் - Page 3 P36a
இவற்றில், தெற்கில் இருந்த மன்னவனின் சிலையும், கிழக்குக் கோபுரத்தில் இருந்த பைரவர் சிலையும் பின்னாளில் காணாது போய்விட்டன. மாறாக, பிற சிற்பங்களை அங்கு இடம்பெறச் செய்துள்ளனர். மேற்குக் கோபுரத் தில் குலோத்துங்கன் அருகில் சேக்கிழார் பெருமானின் திருவுருவச் சிற்பம் இடம் பெற்றுள்ளது. கோபுரத்தை எடுத்த கர்த்தாவுக்கு எதிர்ப்புறம் அந்தக் கோபுரத்தை உருவாக்கிய சிற்பிகளின் உருவங்கள் சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளன.

கிழக்குக் கோபுரத்தை எடுத்த சிற்பிகளுக்கு அருகே, அவர்கள் கட்டுமானத்துக்காகப் பயன்படுத்திய அளவுகோலின் சிற்பமும் அதில் அளவுக்குறியீடுகளும்கூட சிற்பங் களாக வடிக்கப் பட்டு, பிரமிக்க வைக்கின்றன. வடக்குக் கோபுரத்தில் இடம்பெற்றுள்ள சிற்பிகளின் உருவச் சிற்பங்களுக்கு மேலாக விருத்தகிரி (விருத்தாசலம்) சேவகப்பெருமாள், சேவகப்பெருமாளின் மகன் விசுவமுத்து, அவன் தம்பி காரணாகாரி, திருப்பிறைக்கொடை ஆசாரி திருமருங்கன் என்ற அவர் களின் பெயர்கள் கல்வெட்டு வாசகங் களாகப் பொறிக்கப்பட்டுள்ளன.

தில்லைக் கோபுர நுழைவாயில்களில், இரண்டு பக்கச் சுவர்களிலும் நாட்டிய சாஸ்திரத்தை எடுத்துரைக் கும் புடைப்புச் சிற்பங்கள் காணப்பெறுகின்றன. மேற்குக் கோபுரத்தில், பரத சாஸ்திர ஸ்லோக கல்வெட்டுக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. கூடவே, ஒவ்வொரு ஸ்லோகத்துக்கும் கீழாக அதற்குரிய நாட்டிய கரணத்தை ஓர் ஆடற்பெண் ஆடிக்காட்டும் சிற்பமும் வடிக்கப்பட்டுள்ளது.

இவற்றுக்கு அருகில், குடமுழா போன்ற தாள இசைக் கருவிகளை இசைக்கும் கலைஞர்களின் சிற்பங்களும் வடிக்கப்பட்டுள்ளன. மேற்குக் கோபுரத்தில் 108 நாட்டியக் காட்சிகளும், கிழக்குக் கோபுரத்தில் 96 காட்சிகளும், தெற்குக் கோபுரத்தில் 104 காட்சிகளும், வடக்குக் கோபுரத்தில் 108 காட்சிகளும் இடம் பெற்றுள்ளன.

பரத முனி இயற்றிய நாட்டிய சாஸ்திரம் காலங்காலமாக இந்தக் கோபுரங்கள் வழியே கட்டிக் காக்கப் பட்டு வருகிறது. அத்துடன் அந்த நாட்டிய சாஸ்திரக் கலையைப் பயில்வோருக்கு இந்தக் கோபுரங்களே போதிக்கும் கல்விச் சாலையாகவும் திகழ்கின்றன என்பது வியப்பூட்டுகிற உண்மை!

- புரட்டுவோம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81961
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Sep 03, 2014 9:39 pm

சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர் - Page 3 103459460

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Wed Sep 03, 2014 9:44 pm

சேதி சொல்லும் சிற்பங்கள்-24
ஆலயம் ஆயிரம்!
முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன்

சிதம்பரம் நடராஜர் ஆலயம்

சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர் - Page 3 P114a
ஆகாயப் பெருவெளியாகத் திகழும் தில்லைப் பொன்னம்பலத்தை நடுநாயகமாகக்கொண்டு திகழும் சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில், மேற்குக் கோபுரத்தின் அடித்தளமாக விளங்கும் உபபீட வர்க்கத்தில் உள்ள மாடங்களிலும், மேல்நிலையில் உள்ள மாடங்களிலும் எழிலான சிற்பங்கள் காட்சி தருகின்றன. அந்தச் சிற்பங்களில் பெரும்பாலானவற்றின் பெயர்களை அந்தந்த மாடங்களுக்கு மேலாக, அந்தக் கோபுரத்தை எடுப்பித்த இரண்டாம் குலோத்துங்க சோழன், கல்வெட்டாகப் பொறித்துள்ளான். இதனால், அந்தத் தெய்வங்களின் பெயர்களை நாம் எளிதில் புரிந்துகொள்ள முடியும்.

உபபீடத்தில் உள்ள 46 கோஷ்ட மாடங்களில், சிவ பெருமானின் எந்த வடிவமும் இடம்பெறவில்லை. மாறாக, பிற தெய்வ உருவங்கள், வாயிற்காவலர்கள், மருத்துவத் தெய்வங்கள், எண்திசைக் காவலர்கள், ஒன்பது கோள்தெய்வங்கள், நதி தெய்வங்கள், மகரிஷிகள் என ஏழு வகைப் பகுப்பில் மொத்தம் 46 சிற்பங்களைக் காணலாம்.

தெய்வத் திருமேனிகளாக க்ஷேத்திரபாலர், ஸ்ரீசண்டீசர், ஸ்ரீதிரிபுரசுந்தரி, ஸ்ரீகணபதி, ஸ்ரீபத்ரகாளி, ஞானசக்தி, ஸ்ரீவிஷ்ணு, ஸ்ரீசுப்ரமணியர், ஸ்ரீசரஸ்வதி, ஸ்ரீபிரம்மன், ஸ்ரீதுர்கை, கிரியாசக்தி, ஸ்ரீநாகராஜன் ஆகிய தெய்வங்களின் திருவுருவங்கள் இடம்பெற்றுள்ளன. துவாரபாலகர் எனும் வாயிற்காவலர் சிற்பங்கள் உள்வாயிலில் இரண்டும், வெளிவாயிலில் இரண்டும் காணப் படுகின்றன. அவற்றுக்கு மேலாக 'வைஜயன்’ என்றும், 'ஞானேஸ்வரர்’ என்றும் கல்வெட்டுக் குறிப்புகள் உள்ளன.

பொதுவாக, நான்கு வாயில்கள் இருக்கும் சிவாலய கர்ப்பக்கிரகத்தில் காணப்படும் நான்கு ஜோடி வாயிற்காவலர்களை முறையே, நந்தி- மகாகாளன், ஹேரம்பன்- பிருங்கி, துர்முகன்- பாண்டூரன், சீதன்- அசிதன் என்று ஆகம, சிற்ப நூல்கள் குறிக்கின்றன. ஆனால், தில்லைக்கோயில் ஆகமப்படி, அங்கு காவலர்களாக வைஜயனும் ஞானேஸ்வரரும் திகழ்கின்றனர். மருத்துவ தெய்வங்களாக ஸ்ரீதன்வந்திரியும், ஸ்ரீஅஸ்வினிதேவர் இருவரும் இடம்பெற்றுள்ளனர்.

இங்கு உள்ள தன்வந்திரி, தாடி மீசையுடன் மருந்துக்குடுவை ஏந்திய முனிபுங்கவராகவே காணப்படுகிறார். அஷ்டதிக் பாலர்களாக கிழக்கில் இந்திரனும், தென்கிழக்கில் அக்னியும், தெற்கில் யமனும், தென்மேற்கில் நிருதியும், மேற்கில் வருணனும், வடமேற்கில் வாயுவும், வடக்கில் குபேரனும், வடகிழக்கில் ஈசானனும் அமைந்துள்ளனர். அளகேஸ்வரன், வாயுபகவான், நிருதி, அக்னிதேவர், ருத்ரதேவர் என்ற ஐந்து எழுத்துப் பொறிப்புகள் மட்டுமே அவர்கள் இடம் பெற்றுள்ள கோஷ்டங்களுக்கு மேலாகக் காணப்படுகின்றன.

நவகோள் தெய்வங்களாக கீழ்நிலை மாடங்களில் சூரியன், ராகு, கேது, சந்திரன், சனி, சுக்கிரன், புதன், செவ்வாய், வியாழன் ஆகிய ஒன்பது பேரும் உள்ளனர். சூரியனின் திருவடிவம் நான்கு முகங்கள், எட்டுக் கரங்களுடனும், தேவியர் இருவருடனும் காணப்படுகிறது. இது சிவசூரியனின் வடிவம்.

சந்திரன் இங்கு மட்டுமே சிம்மவாகனத்துடன் காணப்படுகிறார். ராகு- கேது இருவரும் மனிதத் தலையும், இடுப்பு வரை உள்ள உருவமும், தலைக்கு மேல் பாம்புப் படமுமாக இணைந்து ஒரே சிற்பமாகவே இருப்பது குறிப்பிடத்தக்கது. நவக் கிரகங்கள் வரிசையில் ராகு- கேது, சந்திரன், சனிபகவான், சுக்கிரன், புதன் என்ற ஆறு பேர் மட்டுமே ஐந்து கோஷ்டங்களுக்கு மேலாகக் காணப்படுகின்றனர்.
சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர் - Page 3 P114b

நதி தெய்வங்களாக கங்காதேவி என்றும், யமுனை என்றும் கல்வெட்டுக்கள் உள்ள கோஷ்டங்களில் முறையே மகரத்தின்மீது நின்றவாறு கங்காதேவியும், ஆமைமீது நின்றவாறு யமுனையின் திருவுருவமும் உள்ளன. மகரிஷிகளாக நாரதர், வியாக்ரபாதர், தும்புரு, அகஸ்தியர், பதஞ்சலி, திருமூலர் ஆகியோரின் திருவுருவங்கள் அற்புதச் சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளன.

மேல்நிலை ஆவர்ணத்தில் துவாரபாலகர் உருவங்கள் நீங்கலாக 22 மாடங்களில் சிவ மூர்த்தங்களைச் சிற்பங்களாகத் தரிசிக்கலாம். கஜசம்ஹார மூர்த்தி, லிங்கோத்பவர், சோமாஸ்கந்தர், பிக்ஷ£டனர், ஹரிஹரர், திரிபுராந்தகர், நிருத்தமூர்த்தி, வீணாதரர், தட்சிணாமூர்த்தி, பாசுபத மூர்த்தி, கிராதார்ஜுன மூர்த்தி, அர்த்தநாரீஸ்வரர், கங்காதரர், சந்திரசேகரர், கல்யாணசுந்தரர், கங்காளர், விருஷபாந்திகர், ஆலிங்கன சந்திரசேகரர், ஊர்த்துவதாண்டவர், கௌரிபிரஸாத மூர்த்தி, காலாந்தகர், சண்டேசனுக்கிரகர் என்னும் 22 சிவனார் கோலங்களையும் மேற்குக் கோபுரத்தில் கண்டு மகிழலாம்.

இதே அமைப்பு முறையில், மற்ற மூன்று கோபுரங்களிலும் கீழ் நிலை ஆவர்ண தெய்வங்களும், மேல்நிலை சிவனார் வடிவங்களும் காணப்படுகின்றன. ஆனால், அந்தக் கோபுரங்களில் அஷ்டதிக் பாலகர் உருவங்களும், நவகோள் தெய்வ உருவங்களும் அந்தந்த கோபுரங்கள் இருக்கும் திசைக்கு ஏற்ப, அவரவருக்கு உரிய திசையிலேயே இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்க அம்சம். தில்லைக் கோபுரங்கள், நுழைவாயிலில் அமைந்துள்ள கட்டடங்கள் என்பதாக மட்டுமே அல்லாமல், சிற்பக் களஞ்சியங்களாகவே விளங்குகின்றன.

- புரட்டுவோம்

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Wed Sep 03, 2014 9:47 pm

சேதி சொல்லும் சிற்பங்கள்-25
குடவாயில் பாலசுப்ரமணியன்


திருச்சி- நாமக்கல் நெடுஞ்சாலையில், திருச்சியை அடுத்து முசிறிக்கு மேற்கே உள்ளது ஸ்ரீநிவாசநல்லூர் கிராமம். இந்த ஊருடன் இணைந்து, பல்லவ மன்னன் மகேந்திரவர்மன் பெயரால் அமைக்கப்பெற்ற பழம்பெருமை வாய்ந்த மகேந்திரமங்கலம் எனும் ஊர் திகழ்கிறது. ஸ்ரீநிவாசநல்லூரில் பண்டைய சோழர் காலத்தவையாக, ஐந்து திருக்கோயில்கள் உள்ளன. அவை குரங்கநாதர் கோயில், பட்டாபிராமன் கோயிலைத் தன்னகத்தே கொண்ட விஸ்வநாதர் கோயில், ஸ்ரீலட்சுமி நாராயணப் பெருமாள் கோயில், ஸ்ரீராமநாத ஸ்வாமி கோயில் மற்றும் தனித்த அம்மன் திருக்கோயில் ஆகியவை.

ஸ்ரீநிவாசநல்லூரின் பழம்பெயர் திருக்குரக்குத்துறை என்பதாகும். சோழநாட்டில் மயிலாடுதுறை, குரங்காடுதுறை என்ற ஊர்கள் காவிரிக்கரையில் அமைந்துள்ளது போன்று இந்த ஊரும் காவிரிக் கரையிலேயே அமைந்துள்ளது.
சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர் - Page 3 P36d
சிறந்த சிவபக்தனாக விளங்கிய வாலி எனும் குரங்கினத் தலைவன் பூசித்த திருத்தலமாக இந்த ஊர் திகழ்ந்திருக்க வேண்டும். இதுபோன்றே திருவையாறு - கும்பகோணம் சாலையில் காவிரிக் கரையில் திருஞானசம்பந்தரால் பாடப்பெற்ற, ஆடுதுறை பெருமாள் கோயில் என்று தற்காலத்தில் அழைக்கப்படும் திருவூர் ஒன்று உள்ளது. அந்த ஊரின் பழம்பெயர் குரங்காடுதுறை என்பதாகும். தேவாரப் பதிகத்தில் 'நீலமாமணி நிறத்து அரக்கனை இருபது கரத்தோடு ஒல்க வாலினால் கட்டிய வாலியார் வழிபட மன்னு கோயில் வடகரை அடை குரங்காடுதுறையே’ என்பார் காழிப்பிள்ளையார். இத்தலம் போன்றே காவிரியின் தென்கரையில் பாடல்பெற்ற தென் குரங்காடுதுறை (கும்பகோணம் - மயிலாடுதுறை சாலையில்) உள்ளது.

தொண்டைநாட்டுக் குரங்கணில்முட்டம், சோழநாட்டு குரக்குக்கா, நடுநாட்டு வாலிகண்டபுரம் ஆகிய திருத்தலங்கள் போலவே திருகுரக்குத்துறை எனப்படும் ஸ்ரீநிவாசநல்லூர் குரங்கநாதர் கோயிலும் முக்கியத்துவம் பெற்ற ஒரு வழிபாட்டுத்தலமாகப் போற்றப்படுகிறது.

குரங்கநாதர் கோயிலில் உள்ள பழைமையான கல்வெட்டு ஒன்று, 'பிரம்மதேயமான மகேந்திரமங்கலத்து திருக்குரக்குத்துறை பெருமானடிகள்’ என்று அந்தக் கோயில் ஈசனாரைக் குறிப்பிடுகிறது. தற்போது காணப்படும் இந்தச் சிவாலயத்தை 9-ம் நூற்றாண்டில் முதல் ஆதித்த சோழன் கற்றளியாக எடுப்பித்திருக் கிறான். சதுரமான கருவறை அமைப்புடன் இரு தளக் கற்றளியாக இந்தக் கோயில் காணப்படுகிறது. இடைநாழி, முகமண்டபம் ஆகியவை இந்த விமானத்துக்கு மேலும் பொலிவூட்டுகின்றன.

கருவறையின் புறச்சுவரில் பிதுக்கம் பெற்ற கட்டுமான அமைப்புடன் மூன்று தேவ கோஷ்டங்கள் அழகிய மகர தோரண வேலைப்பாடுகளுடன் காணப்படுகின்றன. தென்புறம் ஆலமர்ச் செல்வராகிய ஸ்ரீதட்சிணாமூர்த்தியும், வடபுறம் வேள்வியின் நாயகராகிய ஸ்ரீநான் முகனின் (பிரம்மன்) திருவுருவச் சிற்பங்களும் உள்ளன. மேற்குத் திசையில் திகழ்ந்திருந்த உமையொருபாகனின் திருமேனியைப் பின்னாளில் அகற்றியுள்ளனர்.

கருவறையின் புறத்தே ஆறு சிறிய கோஷ்டங்களும், முகமண்டபத்தின் பக்கச் சுவர்களில் இரண்டு கோஷ்டங்களும் உள்ளன. இவற்றில் சாமரம் வீசுவோர், அப்சரஸ் எனப்படும் தேவ மாதர் சிற்பங்கள் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

மகாமண்டபத்தின் தென்புறமும் வடபுறமும் கைகட்டிய நிலையில் துவாரபாலகர் சிற்பங்கள் இடம் பெற்றிருந்து, பின்னாளில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. தென்புற கோஷ்டத்தின் மகர தோரணம் மிகுந்த வேலைப்பாட்டுடன் திகழ்கின்றது. நடுவே இரண்டு அரக்கர்களை வேல்கொண்டு தாக்கும் தேவியின் திருவுருவம் உள்ளது. அதனைச் சுற்றி எட்டு சிம்மங் களின்மீது அமர்ந்த வீரர் உருவங்களும், நான்கு பூத கணங்களின் உருவங்களும் உள்ளன.
சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர் - Page 3 P36c
மாடத்தின் நடுவே எட்டு கிளைகளுடன் கல்லால மரம் திகழ, அதன் கீழ், ஞானம் உரைக்கும் ஸ்ரீதட்சிணாமூர்த்தி அமர்ந்துள்ளார். ஆலங்கிளைகளில் அணில், பொக்கணம் என்னும் விபூதிப் பை, பொந்தில் ஆந்தை ஆகியவை காணப்படுகின்றன. ஜடாபாரத் துடன் திகழும் அண்ணலின் தலையில் கபாலமும் மலர்களும் உள்ளன. ஒரு காதில் பத்ர குண்டலமும், ஒரு காதில் குழையும் திகழ்கின்றன. அனலும், அக்கமாலையும் தரித்த பெருமானார், சனகாதி முனிவர் இருவருக்கு அறம் உரைக்கிறார்.

பக்கவாட்டில் மேலே ஒருபுறம் காதுபொத்தி கள் (கர்ணப்ராவிருத்தன்) இருவரும், மறுபுறம் கின்னரர் இருவரும் உள்ளனர். அவர்களுக்குக் கீழாக ஒருபுறம் வாய் பிளந்து உறுமும் சிங்கங்கள் இரண்டும், எதிர்ப்புறம் உறங்கும் சிங்கங்கள் இரண்டும் காட்சியளிக்கின்றன. காலடியில் முயலகன் கிடக்க, ஒருபுறம் மானும், ஒருபுறம் உடம்பை மூன்று சுற்றுகளாக்கிப் படமெடுத்தாடும் நாகமும் உள்ளன.
சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர் - Page 3 P36
பித்தி எனப்படும் சுவரில் உள்ள தூண்க ளின் கால்களில் நடனமாடும் பெண்கள், இசைவாணர்கள், குதூகலித்து ஆடும் கணங்களின் உருவங்கள் உள்ளன. ஒரு தூணில் ஈசன் கால் உயர்த்தி நடனமாட, அதிகார நந்தி குடமுழா இசைக்க, அனுமன் தாளமிடுகிறார். இது அபூர்வக் காட்சியாகும். திருக்குரக்குத் துறை பெருமானடிகள் திருநடனமாட, குரங்கு தாளமிடுவது பொருத்தமான ஒன்றே!

ஒரு மகர தோரணத்தில் திருமால், பூவராகராகக் காட்சி தருகிறார். அழகுடைய ஜகதி, குமுதம், வேலைப்பாடுகள் மிகுந்த யாழவரிமாணம் ஆகியவை கொண்ட அதிஷ்டானத்தின் மேல் கம்பீரமாக எழுந்து நிற்கும் இந்தத் திருக்கோயில், சோழர் சிற்பக் கலையின் உச்ச நிலைப் படைப்புகளைத் தன்னகத்தே கொண்டு காட்சி தருகிறது. மொத்தத்தில், ஸ்ரீநிவாசநல்லூர் திருத்தலம், கலைப் பெட்டகத்தின் சாட்சியகம் என்றால், அது மிகையல்ல!

- புரட்டுவோம்

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Wed Sep 03, 2014 9:51 pm

சேதி சொல்லும் சிற்பங்கள் - 26
முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன்


திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயில்

கோடு என்ற சொல்லுக்கு மலை என்றும், மலையுச்சி என்றும் அர்த்தம் சொல்வார்கள். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள திருச்செங்கோடு திருத்தலம், அழகிய மலையின்மீது அமைந்துள்ளது. தேவாரப் பாடல் பெற்ற தலம் இது.

நாமக்கல்லில் இருந்து சுமார் 32 கி.மீ. தொலைவிலும் ஈரோட்டில் இருந்து சுமார் 18 கி.மீ. தொலைவிலும் உள்ளது திருச்செங்கோடு.

செங்கோடு அதாவது செங்குன்றமாக, செம்மலையாகத் திகழ்கிறது திருச்செங்கோடு. செவ்வண்ணக் கல்லால் அமைந்த இந்தச் செங்கோட்டு மலையை, புலரும் காலைப் பொழுதிலும், அந்திச் செவ்வான வேளையான பிரதோஷ காலத்திலும் தரிசித்தால், செங்கோடு என்பதன் பொருளை அறியலாம்.

செங்கோட்டின் பெரிய மலைமுகட்டுக்கு நாகமலை என்றும், சிறிய முகட்டுக்கு நந்திமலை என்றும் பெயர். இந்த மலையை நாகாசலம், நாகமலை, நாககிரி, உரககிரி என்றெல்லாம் அழைக்கிறார்கள்.

மலையின்மீது ஸ்ரீஅர்த்தநாரீஸ்வரர் கோயில் ஒருபுறமும், ஸ்ரீபாண்டீஸ்வரர் கோயில் இன்னொரு புறமும் உள்ளது. அடிவாரத்தில் செங்குன்றூரின் நடுவே ஸ்ரீகயிலாசநாதர் கோயில் உள்ளது. ஆக, இங்கே வந்தால் மூன்று சிவாலயங்களை ஒரு சேர தரிசிக்கலாம்.

திருப்பைஞ்ஞீலி, திருஈங்கோய்மலை முதலான தலங்களுக்குச் சென்று பதிகங்கள் பாடி வழிபட்ட ஞானசம்பந்தர், வழியெங்கும் பல தலங்களை தரிசித்து வழிபட்டபடியே, திருச்செங்குன்றூர் எனும் திருச்செங்கோட்டுக்கு வருகிறார். இறைவனைக் கண்ணாரத் தரிசித்து பதிகம் பாடியவர், அடுத்து திருநணா என்கிற பவானிக்குச் சென்றுவிட்டு, மலையின் மீதும் இறைவனின் மீதும் கொண்ட ஈர்ப்பால், மீண்டும் திருச்செங்கோடு வந்து தங்கினாராம். அத்தனை அழகும் கம்பீரமும் வாய்ந்தது இந்த மலை.

மலையடிவாரத்தில் இருந்து செல்ல, அதாவது நகரின் நடுப்பகுதியில் இருந்து படிக்கட்டுகள் உள்ளன. அதேபோல், ஊருக்குக் கிழக்கே உள்ள சாலையில் இருந்து மலையுச்சிக்கு வாகனங்களில் செல்வதற்குச் சாலை வசதியும் உள்ளது. படிகளின் வழியே செல்லும்போது பெரிய மலை(நாகமலை)க்கும் சிறிய மலைக்கும் (நந்திமலை) இடையே அமைந்துள்ள நாகர்பள்ளம் எனும் இடத்தைக் காணலாம். இங்கே, ஆதிசேஷன் ஐந்து தலைகளையும் விரித்துப் படமெடுத்த நிலையில் லிங்கத் திருமேனியைச் சுமந்துகொண்டிருக்கும் சுமார் 60 அடி நீளச் சிற்பக் காட்சியைக் கண்டு பிரமித்துப் போவீர்கள். இந்த நாகத்தின்மீது குங்குமம் தூவி வழிபடு கின்றனர். நாக தோஷம் உள்ளவர்கள், சிறப்பு வழிபாடு செய்கின்றனர்.
சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர் - Page 3 P36c

அடுத்துத் திகழும் அறுபதாம் படியில் பிணக்குகள், வழக்குகள் உள்ளோர் சத்தியம் செய்து, தங்கள் பகையை முடிப்பதும் இங்கே வழக்கம்!

வடக்கு வாயிலில் அமைந்துள்ளது, ஸ்ரீஅர்த்தநாரீஸ்வரரின் பிரதான கோபுரம். கோயிலின் உள்ளே திகழும் சுற்று மண்டபங்கள் அனைத்தும் கலைநயம் மிகுந்த அற்புதப் படைப்பு களாகக் காட்சி தருகின்றன. குதிரை மீது அமர்ந்திருக்கிற போர் வீரர்களின் சிற்பங்கள் மண்டபத் தூண்களில் கம்பீரத்துடன் நிற்கின்றன. குதிரைகளின் உடலழகும், வாளேந்திய வீரர்களின் ஆவேசம் கூடிய மிடுக்கும், இடையிடையே அமைந்த தெய்வத் திருவுருவங்களும், விலங்குகளும் பறவைகளும் என சிற்பங்கள் பிரமிக்க வைக்கின்றன.
சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர் - Page 3 P36a
முருகக் கடவுள் வலது கையில் வேலாயுதத் தின் தண்டத்தையும், இடது கரத்தில் சேவலையும் தாங்கியபடி செங்கோட்டு வேலவனாகக் காட்சி தரும் அழகனைக் காண்பது அரிது! இந்தச் சிற்ப அமைப்பும், ஸ்ரீஅர்த்தநாரீஸ்வரரின் திருவடிவமும் சிற்பக் கலைஞர்களின் திறனுக்குச் சான்றாகும்.

அதையடுத்து பின்புறம் நுழைவாயில் ஒன்று உள்ளது. இங்கே, மேற்கு நோக்கிய நிலையில் சந்நிதி கொண்டிருக்கிற ஸ்ரீஅர்த்தநாரீஸ்வரரை தரிசிக்கலாம். நின்ற திருக்கோலத்தில், மேலே உயர்த்திய வலது கரத்தில் தண்டாயுதத்தை ஏந்தியபடி, இடது கையை இடுப்பில் வைத்துக்கொண்டு, உமையொருபாகனாக, சிவனார் காட்சி தரும் அழகே அழகு!
சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர் - Page 3 P36
மகர குண்டலம் வலது செவியில் திகழ, பத்ர குண்டலமான ரத்தின தோடு, இடது செவியை அலங்கரிக்கிறது. உடலின் ஒரு பாகம் ஆணுக்கு உரிய ஆடை அலங்காரத்தோடும், இன்னொரு பாகம் பெண்ணுக்கு உரிய நளினத்தோடும் அமைந்துள்ளது. முருகக் கடவுளின் திருவுருவமும் ஸ்ரீஅர்த்தநாரீஸ்வரரின் திருவுருவமும் வெள்ளைப் பாஷாணத்தால் செய்யப்பட்ட சிற்ப வடிவங்கள் என்பார்கள்.

வெளித் திருச்சுற்றில் ஆதிகேசவப் பெருமாள் கோயில், கலை நயம் மிகுந்த சிற்பங்களுடன் காணப்படுகிறது. ஸ்ரீதேவி- பூதேவியுடன் ஆழியும் சங்கும் தரித்தவராக ஸ்ரீஆதிகேசவனின் திருமேனி நின்ற திருக்கோலம், கொள்ளை அழகு! வெளிப்பிராகாரத்தில், ஸ்ரீநாகேஸ்வரர் எனும் லிங்க மூர்த்தி தனிக்கோயிலில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலின் புறச் சுவர்கள் முழுவதும் கலை நயம் மிகுந்த சிற்பங்களால் அழகுபடுத்தப்பட்டுள்ளன.

மலைமீது அமைந்துள்ள ஸ்ரீஅர்த்தநாரீஸ்வரர் ஆலயம், கலைப் பெட்டகமாகவே திகழ்கிறது.

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Wed Sep 03, 2014 9:53 pm

சேதி சொல்லும் சிற்பங்கள்-27
முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன்


திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயில்

நாற்புறமும் மலைகள் சூழ்ந்த கொங்குநாடு பழங்காலத்தில் வட கொங்கு, தென்கொங்கு, மீ கொங்கு, மழ கொங்கு என நான்கு பெரும் பிரிவுகளாகவும், 24 உட்பிரிவுகளாகவும் கொண்டு திகழ்ந்தது.

கொங்கு நாட்டில், காவிரி வடக்கு தெற்காகப் பாய்வதால், காவிரியின் மேல்கரைப் பகுதி மேல்கரைப் பூந்துறை நாடு என்றும், கிழக்கில் உள்ள பகுதி கீழ்க்கரைப் பூந்துறை நாடு என்றும் அழைக்கப்பட்டது.

கீழ்க்கரைப் பூந்துறை நாட்டின் நடுநாயகமாக திருச்செங் குன்றூர் எனப்படும் திருச்செங்கோடு விளங்குகிறது. செங்கோட்டு மலையின் உச்சியில் திகழும் ஸ்ரீஅர்த்தநாரீஸ்வரர் கோயிலின் தற்போதைய கட்டுமான அமைப்புகளில் பெரும் பகுதி, விஜய நகரப் பேரரசர்களின் ஆட்சிக் காலத்தில், கொங்கு தேசத்தை ஆட்சி செய்த கட்டிமுதலிகள் செய்த திருப்பணிகளாகும்!

'திருச்செங்கோட்டு திருப்பணி மாலை’ எனும் நூல், சதாசிவ பண்டிதர் என்பவரால் இயற்றப்பட்டது. இந்த நூலில், மோரூர் காங்கேயர்கள் பலரால் இந்தக் கோயிற் பணிகள் நிகழ்ந்த விவரங்கள் தெரிவிக்கப்பட்டு உள்ளன.

செங்கோட்டு வேலவன் சந்நிதிக்கு முன் உள்ள பெருநிலை மண்டபம், கொங்கு நாட்டுச் சிற்பக் கலையின் உன்னதத்தை வெளிப்படுத்துகிறது. இதன் விதானத்தின் நடுவில், அலர்ந்த தாமரை மலர் விரிந்திருக்க, அதைச் சுற்றி வட்டமாக இரண்டு வரிசைகளில் கிளிகள் அமர்ந்தபடி தாமரை மொட்டைக் கொத்துகிற காட்சி, தத்ரூபத்தின் உச்சமாகத் திகழ்கிறது.

அருகில், அச்சு அசல் மரச் சட்ட வேலைப்பாடுகள்போல் கல்லில் வடிக்கப்பட்டு, அவற்றுக்கு இடையே தெய்வத் திருவுருவச் சிற்பங்கள், புராணக் காட்சிகள், கிரக தெய்வங்கள், கல்லால் ஆன தொங்கும் சங்கிலி என நம் கண்ணையும் கருத்தையும் கவரும் சிற்ப நுட்பங்களை ரசிப்பதற்கு ஒருநாள் போதாது. விதானம்தான் இத்தனை அழகு என்று பார்த்தால், அதைத் தாங்கி நிற்கும் தூண்களில் திகழும் சிற்பங்கள் நம் கண்ணையும் கருத்தையும் கவருவதாகத் திகழ்கின்றன.
சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர் - Page 3 P154b
அந்தத் தூண்களில் திகழும் அந்த மண்டபத்தை எடுத்த கொடை யாளர்களின் உருவங்கள், ஊர்த்துவதாண்டவராக ஆடும் சிவபெருமான், அவருடன் ஆட முடியாமல் சோர்ந்து நிற்கும் ஸ்ரீகாளிதேவியின் திருவடிவம், ரதி மன்மதன் மற்றும் குதிரை வீரர்களின் சிற்பங்கள் நம் உள்ளத்தை நிச்சயம் கொள்ளை கொள்ளும்!

தென்புறமும், மேற்புறமும், வடக்குப் புறமும் இருக்கிற மண்டபங்களும் சிற்பக் களஞ்சியங்களாகவே அமைக்கப்பட்டு உள்ளன. இந்த மண்டபங் களுடன் இணைந்து தனித்தனி ஆலயங்களின் புறச்சுவர்கள் முழுவதும் சிற்பக் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. ஆலயத்தின் அதிஷ்டானம், பித்தி எனும் வகையில் செய்யப்பட்ட சுவர் ஆகியவற்றில் வேலைப்பாடுகளுடன் கொண்ட சிற்பங்கள், கலையின் பிரமாண்டத்தை எடுத்துக்காட்டுகின்றன.
சேதி சொல்லும் சிற்பங்கள்-தொடர் - Page 3 P154
இன்னொரு விஷயம்... இங்கே இசைக் கலைஞர்களின் சிற்பங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வடிக்கப்பட்டுள்ள விதம் மிகச் சிறப்பு! பறை எனப்படும் தோல் கருவியை இயக்கும் கலைஞனின் உருவமும், நின்றபடியே வீணை வாசிக்கும் வல்லான் ஒருவனின் உருவமும் கவனிக்கத்தக்கவை! அதிஷ்டானத்தின் அடித்தளத்தில் உள்ள கண்டம் எனப்படும் பகுதியில் பூ வேலைப்பாடுகளும், கொடிகளும் அமைந்துள்ளன. அவற்றுக்கு ஊடே அன்னப்பறவைகள், கிளிகள், ஆங்காங்கே கோபுரக் கட்டுமானம் எனப் பலவகையான அழகுப்படைப்புகளை சிற்பங்களாக வடித்த சிற்பிகளுக்கு, மன்னர்கள் நிச்சயம் வெகுமதி தந்து கௌரவித்திருப்பார்கள்.

பத்மம் எனும் அதிஷ்டான கட்டுமானப் பகுதியின் மேல் பலவகையான தெய்வ உருவங்களும், சிறு கோயில் அமைப்புகளும், குரங்கு முதலான விலங்கினங்களும் சிற்பங்களாகக் காணப்படுவது புதுமையாக உள்ளது. அமர்ந்த கோலத்தில் திகழும் முனிவர்கள், தலைக்கு மேல் கையை உயர்த்தியபடி நின்ற கோலத்தில் தவம் மேற்கொள்ளும் ரிஷிகள், நடனமாடும் கலைஞர்கள், குள்ள பூதங்கள் என எழிலார்ந்த சிற்பங்களை கலையழகுமிக்க கோஷ்டமாடங்களுக்கும் கும்ப பஞ்சரங்களுக்கும் இடையிடையே காண முடிகிறது.

ஓரிடத்தில்... மகர தோரண வாயிலின் கீழ் வில், அம்புடன் ஸ்ரீராமன் நிற்க, வெளியே ஒருபுறம் மண்டியிட்டு அமர்ந்து வணங்கும் ஸ்ரீஅனுமனையும், எதிர் திசையில் ஸ்ரீகருடனையும் அழகிய சிற்பங்களாகக் கண்டு ரசிக்கலாம். அரசன் ஒருவன் தன் ஆசனத்தில் அமர்ந்திருக்க, அவனுக்கு முன்னே நிற்கிற தொப்பி அணிந்த மேலை நாட்டவர் ஒருவர் அரசனுக்கு மாலை அணிவிக்க முயலும் வரலாற்றுச் சிற்பக் காட்சியும் இடம்பெற்றுள்ளது. அதேபோல், கோயில் ஒன்றில் ஸ்ரீவராஹி தேவி அமர்ந்திருக்க, ஒரு பூதம் சங்கு ஊத, இன்னொரு பூதம் தாளம் தட்ட... அந்த லயமும் முகத்தில் உள்ள பாவனைகளும் வெகு அற்புதமான சிற்ப நுட்பத்துக்குச் சான்றாக உள்ளன.

திருவாசி நடுவே, மாலை அணிவிக்கப்பட்ட சிவலிங்கம் திகழ, அருகில் பாம்பாட்டி ஒருவன் முன்னே படமெடுத்தாடும் நாகத்தின் சிற்பமும் இங்கு உள்ளது. இறைத் தன்மையால் செங்கோடு எவ்வளவு உயர்ந்து செம்மாந்து நிற்கின்றதோ, அதே அளவு கொங்கு நாட்டுச் சிற்பக்கலையும் உயர்ந்து நிற்கிறது என்பது உண்மை.

கொங்கு தேசம் என்றில்லாமல், தமிழ் கூறும் நல்லுலகில் உள்ள ஆயிர மாயிரம் ஆலயங்களில் லட்சக்கணக்கான சிற்பங்களையும், அவற்றின் நுட்பங்களையும் கண்டு ரசிக்க, இந்த ஒரு ஜென்மம் நிச்சயம் போதாது!

(நிறைவுற்றது)

Sponsored content

PostSponsored content



Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக