புதிய பதிவுகள்
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Today at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் - Page 3 Poll_c10நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் - Page 3 Poll_m10நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் - Page 3 Poll_c10 
70 Posts - 49%
ayyasamy ram
நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் - Page 3 Poll_c10நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் - Page 3 Poll_m10நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் - Page 3 Poll_c10 
60 Posts - 42%
mohamed nizamudeen
நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் - Page 3 Poll_c10நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் - Page 3 Poll_m10நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் - Page 3 Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் - Page 3 Poll_c10நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் - Page 3 Poll_m10நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் - Page 3 Poll_c10 
4 Posts - 3%
rajuselvam
நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் - Page 3 Poll_c10நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் - Page 3 Poll_m10நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் - Page 3 Poll_c10 
1 Post - 1%
Kavithas
நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் - Page 3 Poll_c10நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் - Page 3 Poll_m10நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் - Page 3 Poll_c10 
1 Post - 1%
bala_t
நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் - Page 3 Poll_c10நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் - Page 3 Poll_m10நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் - Page 3 Poll_c10 
1 Post - 1%
prajai
நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் - Page 3 Poll_c10நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் - Page 3 Poll_m10நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் - Page 3 Poll_c10நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் - Page 3 Poll_m10நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் - Page 3 Poll_c10 
291 Posts - 42%
heezulia
நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் - Page 3 Poll_c10நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் - Page 3 Poll_m10நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் - Page 3 Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் - Page 3 Poll_c10நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் - Page 3 Poll_m10நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் - Page 3 Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் - Page 3 Poll_c10நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் - Page 3 Poll_m10நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் - Page 3 Poll_c10 
26 Posts - 4%
sugumaran
நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் - Page 3 Poll_c10நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் - Page 3 Poll_m10நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் - Page 3 Poll_c10 
16 Posts - 2%
ஜாஹீதாபானு
நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் - Page 3 Poll_c10நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் - Page 3 Poll_m10நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் - Page 3 Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் - Page 3 Poll_c10நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் - Page 3 Poll_m10நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் - Page 3 Poll_c10 
6 Posts - 1%
prajai
நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் - Page 3 Poll_c10நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் - Page 3 Poll_m10நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் - Page 3 Poll_c10 
5 Posts - 1%
Kavithas
நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் - Page 3 Poll_c10நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் - Page 3 Poll_m10நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் - Page 3 Poll_c10 
4 Posts - 1%
manikavi
நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் - Page 3 Poll_c10நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் - Page 3 Poll_m10நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் - Page 3 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம்


   
   

Page 3 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jul 18, 2014 12:12 am

First topic message reminder :

நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் - Page 3 QzKZDftkRMOnYnAhqgg5+p19
நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் - Page 3 SdpXBTNEQ3iYZ9MZ0CzE+image001

மண்ணால் வேறுபட்டிருந்தாலும் மனத்தால் உலகெங்கும் பெண்களின் துன்பங்களும் தைரியங்களும் ஒன்றேதான் என்பதற்கு அழுத்தமான ஆதாரம் நம்பர் 1 லேடீஸ் டிடெக்டிவ் ஏஜென்சி என்ற ஆங்கில நாவல். அலெக்ஸாண்டர் மெக்கால் ஸ்மித் எழுதியிருக்கும் இந்த நாவலின் நாயகி - எம்மா ரமோட்ஸ்வே! இவள், ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் இருக்கிற சாதனைத் துடிப்பின் பிம்பம்.

எம்மா ரமோட்ஸ்வே பிறந்து, வளர்ந்து, வாழ்வதெல்லாமே ஆப்பிரிக்கக் கண்டத்தின் சின்னஞ்சிறு நாடான போட்ஸ்வானா மண்ணில்.

நிறத்தாலும் மொழியாலும் உருவ அமைப்பாலும் வேறுபட்டிருந்தாலும்கூட, போட்ஸ்வானா மக்கள் கிட்டத்தட்ட நம் கலாசாரத்தை அப்படியே நினைவுறுத்துகிறார்கள். மகளுக்கு சீதனமாகத் தர மாடுகளை வளர்க்கும் தந்தை, முழுக்க நம்பியவன் கைவிடும்போது ஏமாற்றத்தில் துடிக்கிற மகள், தொலைந்துபோன மகனை எண்ணி தவித்து நிற்கும் பெற்றோர்.. என்று ஒவ்வொரு பாத்திரத்தின் உள்ளேயும் ஊறுகிற உணர்வுகள், நம் கலாசாரத்தையும் வாழ்க்கைத் துடிப்பையும் அப்படியே நினைவூட்டுகின்றன.

துன்பங்கள் ஆயிரம் வந்தாலும், தைரியத்தோடு மட்டுமல்ல.. சின்னதொரு நகைச்சுவை உணர்வோடும் அவற்றை எதிர்கொண்டு தூளாக்க வேண்டும் என்பதில், எம்மா ரமோட்ஸ்வேக்கு நிகர் அவளேதான்!

ரமோட்ஸ்வே பயணிக்கிற பாதையில் வரும் அப்பாவிகள் நம்மை கண்கலங்க வைக்கிறார்கள். வினோத வில்லன்கள் நடுங்க வைக்கிறார்கள். கொடுமைக்காரர்கள் கொதிக்க வைக்கிறார்கள்.

தனியாக ஒரு தைரியப் பயணத்தைத் தொடங்குகிறாள் ரமோட்ஸ்வே. துணைக்கு நாமும் அவளுடன் கிளம்புவோம்..

எ ம்மா ரமோட்ஸ்வே ஆப்பிரிக்காவின் போட்ஸ்வானா நாட்டின் அழகான கலே மலை யடிவாரத்தில் சொந்தமாக ஒரு வீடு வைத்திருந்தாள். அதுவே தான் அவளது துப்பறியும் நிறுவனமும்.

நிறுவனம் என்ன பெரிய நிறுவனம், ஒரு சின்ன வெள்ளை நிற கார், இரண்டு மேஜை, நாற்காலிகள், ஒரு டெலிபோன். ஒரு பழைய மாடல் டைப் ரைட்டர்.. இதுதான் அந்த நிறுவனத்தின் மொத்த ஆஸ்தியே! போட்ஸ்வானா வின் ஒரேயரு துப்பறியும் நிபுணியும் ரமோட்ஸ்வேதான்.

இந்த மலையடிவாரத்தின் தேநீர் பார்க்க சிவப்பாகவும், நல்ல மணமாகவும் இருக்கும். இதைக் காய்ச்ச ஒரு கெட்டிலும், மூன்று கோப்பைகளும்.. ஒன்று அவளுக்கு. இன்னொன்று அவளுடைய காரியதரிசி எம்மா*மகுட்ஸிக்கு, மூன்றாவது அவளைத் தேடிவரும் வாடிக்கையாளருக்கு.

தனிப்பட்ட டிடெக்டிவ் ஏஜென்சிக்கு இதை விட, வேறு என்ன வேண்டும்? இதுபோன்ற வேலைகளுக்கு மூலதனமே புத்திக்கூர்மையும், உள்ளுணர்வும்தான். எம்மாவுக்கு இவை இரண்டும் தேவைக்கு அதிகமாகவே இருந்தது. இவைதான் அவளை இந்தத் துப்பறியும் தொழிலைத் தொடங்கச் செய்தது.

அவள், இதை விடவும் பெரிய நாட்டில்.. பெரிய நகரத்தில் போய், இதே தொழிலை ஆரம்பித்திருக்கலாம். பெரிய நகரங்களில் வாழும் மனிதர்களிடம் பணமும் அதிகம், பிரச்னைகளும் அதிகம்.. அதற்கேற்ற ஊதியமும் நிறையவே கிடைக்குமாயிருக்கும்.

ஆனால் அவளோ, நான் ஒரு ஆப்பிரிக்க பிரஜை என்பதில் வெட்கப்படவே இல்லை. சோதனைகள் நிறைந்த இந்த நாட்டையும், கடவுள் படைத்த எல்லா மக்களையும் மிகவும் நேசிக்கிறேன். முக்கியமாக இங்கு வசிப்பவர்கள் என் சகோதர, சகோதரிகள். அவர்களுக்கு உதவுவது என் கடமை. அவர்களது பிரச்னைகளை தீர்ப்பதுதான் என் வேலை என்பாள்.

ரமோட்ஸ்வே, தன் அப்பா விட்டுச் சென்ற ஆடு மாடுகளை விற்று, அதில் கிடைத்த பணத்தில்தான் இந்த நிறுவனத்தைத் தொடங்கினாள்.

ரமோட்ஸ்வேவின் தந்தை மிக மோசமான உடல் உபாதைகளுக்கு ஆட்பட்டிருந்ததால், அவரால் எந்த முடிவும் எடுக்க முடியவில்லை. உனக்கென்று ஒரு தொழிலை அமைத்துக் கொள் ரமோட்ஸ்வே. இப்பொழுது ஆடு, மாடுகளுக்கு நல்ல விலை கிடைக்கும். விற்ற பணத்தில் ஒரு கசாப்பு கடை அல்லது பாட்டில் ஸ்டோர், எது உனக்கு இஷ்டமோ அது.. அப்பா மரணப் படுக்கையில் இதைச் சொல்ல, ரமோட்ஸ்வே உருகிப் போனாள்.

உயிருக்கு உயிரான அப்பா, புழுதி நிறைந்த சுரங்கத்தில் வாழ்நாள் எல்லாம் பாடுபட்டு, தன் மகளுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைக்க உழைத்த மனிதர். அவரது கரங்களைப் பிடித்துக் கொண்டு, கண்ணீர் மல்க அவரைப் பார்த்தாள் ரமோட்ஸ்வே. துக்கத்தில் பேச்சு வரவில்லை. ஆனாலும் திக்கித் திணறி தன் எண்ணத்தை வெளிப்படுத்தினாள்..

அப்பா.. நான் ஒரு டிடெக்டிவ் ஏஜென்சி ஆரம்பிக்கப் போகிறேன். போட்ஸ்வானாவின் மிகச் சிறந்த நிறுவனமாக அது இருக்கும்.

அதைக் கேட்ட அவளின் தந்தை, மிகுந்த சிரமத்துடன் விழிகளை விரித்து அவளைப் பார்த்தார். குழறியபடி பேச முயற்சித்தார்.

ஆனால்.. ஆனால்..

ஆனால், அவர் எதையும் சொல்வதற்கு முன்பே இறந்து போய்விட்டார். எம்மா ரமோட்ஸ்வே, அவரது மார்பில் முகத்தைப் புதைத்தபடி விசும்பினாள். அவரது பாசத்தையும், கௌரவமான வாழ்க்கையையும், தனக்காக அவர் பட்ட பாடுகளையும் இப்பொழுது நினைத்தாலும் மனம் கனத்துப் போகும் ரமோட்ஸ்வேக்கு.

இந்த வாழ்க்கை அவர் கொடுத்தது. அப்பாவை நினைத்தால் மட்டுமே துயரம் பொங்குமே தவிர, தான் கடந்து வந்த கரடுமுரடான வாழ்க்கையை நினைத்து ஒருபோதும் அவள் சலித்துக் கொண்டதே இல்லை.

போராட்டமும், காதலும், கசப்பும் நிறைந்ததுதான் வாழ்க்கை.. என்றாலும் இதையே நினைத்து மூலையில் உட்கார்ந்திருப்பது ஒரு டிடெக்டிவ்வுக்கு அழகில்லை.

நம்பர் ஒன் பெண்கள் துப்பறியும் நிறுவனம்! ரகசியமான தகவல்கள், விசாரிப்புகள் எல்லோருக்கும் திருப்தி தரும் முறையில் நேரடி மேற்பார்வையில் சேகரித்துத் தரப்படும் வர்ணம் தீட்டப்பட்ட இப்படி ஒரு விளம்பரப் பலகையை தனது அலுவலகத்தின் முன்பும், தன் உதட்டில் மெல்லிய முறுவலையும் ஒரு சேர மாட்டினாள் ரமோட்ஸ்வே.

அவளது துப்பறியும் நிறுவனம், பலருக்கும் வியப்பை அளித்தது. இருக்காதா பின்னே.. ஒரு பெண் துப்பறி கிறாளாமே!

ரேடியோவில் அவளது பேட்டி வேறு வந்தது. போதாக்குறைக்கு தினசரி ஒன்றிலும், நாட்டின் ஒரேயரு பெண் டிடெக்டிவ் ஏஜென்ட் என்கிற செய்தி வெளியாகி இருந்தது.

ரமோட்ஸ்வே இந்தச் செய்தியை கத்தரித்து, நகலெடுத்து, தன் ஆபீசின் பார்வையான இடத்தில் ஒரு நோட்டீஸ் போர்டு மாட்டி, அதில் ஒட்டி வைத்தாள்.எந்தவொரு சிறு விஷயத்தையும் அலட்சியப்படுத்துவதில்லை அவள்.

ஆ ரம்ப நாளில், தனது வாடிக்கையாளராக வந்த ஹேப்பி பபெட்ஸியை அத்தனை சுலபத்தில் மறக்க முடியுமா? பாவம்.. என்றைக்கோ காணாமல் போன தகப்பன் திரும்பி வந்து, மறுபடியும் காணாமல் போய்..

எனது வாழ்க்கை மிகவும் சந்தோஷமாக இருந்தது. அப்போதுதான் இது நேர்ந்தது. அதற்கு மேல் சொல்வதற்கு ஒன்றுமில்லை. இப்படிச் சொல்லி உதட்டைப் பிதுக்கினாள் பபெட்ஸி. ரமோட்ஸ்வே, அவளைக் கூர்ந்து பார்த்தபடியே தேநீரை உறிஞ்சினாள்.

ஒருவருடைய முகத்தைப் பார்த்தாலே, அவரைப் பற்றிய சகல விஷயங்களையும் அனுமானித்துவிடுவாள் ரமோட்ஸ்வே. தலையின் வடிவம் முக்கியமான ஒன்று என்று பல புத்திசாலி துப்பறிவாளர்கள், தங்களது அனு பவத்தில் எழுதியிருந்தாலும், ரமோட்ஸ்வே, அதையெல்லாம் நம்பவில்லை.

முகத்தின் பொதுவான தோற்றமும், கண்களும், கண் களின் ஓரத்தில் நெளியும் சிறு கோடுகளும் மனிதரின் மனதைத் துல்லியமாகச் சொல்லிவிடும். அதிலும் இந்தக் கண்கள்தான் ஜன்னல். அதனால்தானோ என்னவோ, நிறைய பேர், வீட்டில் இருக்கும்போது கூட கறுப்புக் கண்ணாடி அணிவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். அவர்களை ஜாக்கிரதையாகக் கண்காணிக்க வேண்டும்.

ஹேப்பி பபெட்ஸி பெயரில் மட்டுமல்லாமல், உண்மையிலேயே சந்தோஷமான வாழ்க்கை வாழ்பவள் தான் என்பது முதல் பார்வையிலேயே தெரிந்தது. ஆனாலும் ஏதோ ஓர் ஆணால் ஏற்பட்ட பிரச்னையாகத்தான் இருக்கும் என்று ரமோட்ஸ்வே எண்ணினாள்.

எவனுடைய நடத்தையினாலோ இவள் பாதிக்கப் பட்டிருக்கிறாள் அவளது சிந்தனையை பபெட்ஸியின் குரல் கலைத்தது.

முதலில் என்னைப் பற்றிச் சொல்கிறேனே..

ம்! சொல்..

நான், ஒகாவாங்கர் அருகில் உள்ள மான் என்கிற இடத்திலிருந்து வருகிறேன். என் அம்மா ஒரு சிறிய கடை வைத்திருந்தாள். அதன் பின்புறமுள்ள வீட்டில்தான் நாங்கள் வசித்து வந்தோம். வீட்டில் நிறைய கோழிகள்.. நிறைய மகிழ்ச்சி..

.........


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jul 18, 2014 12:20 am


----------------------------------------------------------------
ஈகரை தமிழ் களஞ்சியம் - www.eegarai.net
நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம்! - 6
----------------------------------------------------------------


அ வள் தடாலடியாக அவரைப் பார்த்துக் கேட்டாள்..

இதை ஏன் நீங்கள் போலீஸுக்குச் சொல்லவில்லை?

ஃபாதர் தலைகுனிந்து தரையைப் பார்த்தார். உண்மையிலேயே வருத்தப் படுபவர்கள்தான் தரையைப் பார்ப்பார்கள். கூசாமல் தவறு செய்பவர்கள் தலையை உயர்த்தி, ஆகாயத்தைத்தான் பார்ப்பார்கள்.

நான் கட்டாயம் சொல்லியிருக்க வேண்டும். கடவுள் அதற்காக என்னைத் தண்டிப்பார். அவன் மரணத்துக்கு நான்தான் காரணம் என்று சொல்லி விடுவார்களோ எனப் பயந்தேன். என்னை கோர்ட் வரை இழுத்து, நஷ்ட ஈடு கேட்பார்கள். அதற்கு சர்ச்சின் பணத்தைத்தான் செலவழிக்க வேண்டிவரும். இறைவனின் வேலைகள் எல்லாம் நின்று போய்விடும். இந்த சர்ச் பணம், பல அநாதைக் குழந்தை களுக்குப் பெரும் உதவியாக இருக்கிறது. நான் ஏன் பேசாமல் இருந்தேன் என்று உங்களுக்குப் புரிகிறதா? ஞானஸ்நானம் பெற வந்தவர் களிடம் சர்ச்சின் நிதி நிலைமையை யும், கோர்ட்டின் பலவந்தமான அபராதத்தையும் எடுத்துச் சொன்னதும், அவர்கள் புரிந்து கொண்டார்கள்.

ரமோட்ஸ்வேக்குப் புரிந்தது. கோர்ட்டில் போய் ஆயிரக்கணக்கில் அபராதத் தொகை கட்டுவதினால் ஆகப் போவது ஒன்றுமில்லை. இந்த சர்ச்சில் இயங்கி வரும் அநாதைக் குழந்தைகளின் வயிறுதான் காயும். எப்படியும் இறந்தவன் வரப் போவதில்லை.

அவள், ஃபாதரின் கரத்தை மிருதுவாக அழுத்தினாள்.

நீங்கள் செய்ததில் தவறு ஒன்றுமில்லை. கடவுள் நீங்கள் நற்காரியங்களைத் தொடர்ந்து செய்வதையே விரும்புகிறார். அவர் உங்களை கோபிக்க மாட்டார். பீட்டர் இறந்தது உங்களுடைய தவறு இல்லை!

ஃபாதர் கலக்கத்துடன் கண்களை உயர்த்திப் பார்த்தார். கண்ணீர் தளும்பப் புன்னகைத்தார்.

உங்களுடைய அன்பான வார்த்தைகளுக்கு நன்றி..

ரமோட்ஸ்வே அவரிடமிருந்து விடை பெற்றாலும், இன்னொரு கடமை தனக்கு இருப்பதையும் மறக்க வில்லை. அது, பீட்டரின் மனைவி மாளாட்ஸிக்கு, அவளுடைய கணவர் நீரில் மூழ்கி இறந்து விட்டார் என்பதை எப்படி நிரூபிப்பது?

அன்று மதியம் ரமோட்ஸ்வே, தனது பக்கத்து வீட்டுக்காரரிடம், அவரது நாயை சற்று நேரத்துக்கு இரவல் கொடுத்து உதவ முடியுமா என்று கேட்டாள்.

எனக்கு ஒரு வழக்கில் துப்பறிய ஒரு நாய் தேவைப் படுகிறது. நான் அதைப் பத்திரமாகத் திருப்பித் தந்து விடுகிறேன்.

- அவள் இப்படிச் சொல்ல, பக்கத்து வீட்டுக்காரருக்குப் பெருமை பிடிபடவில்லை.

இந்த நாயைக் கொண்டு போங்கள். இதற்கு மோப்ப சக்தி அபாரம். வயதிலும் மூத்தது. இது நல்ல துப்பறியும் நாயாக இருக்கும்..

- அவர் கூற, ரமோட்ஸ்வே அந்த அழுக்குப் பிடித்த, நாற்றமடிக்கும் பெரிய நாயை சற்று அருவருப்புடனேயே அழைத்துக் கொண்டாள். இருட்டத் தொடங்கியதும் தன் காரில் அதை ஏற்றிக் கொண்டு, கையில் ஒரு கயிற்றுடன் பயணமானாள். அந்த நதிக்கரையை அடைந்தாள்.

தண்ணீர் தேங்கியிருந்த குட்டையின் அருகில் தான் கொண்டு வந்திருந்த நீண்ட மரக் கட்டையை மணலில் ஆழமாக நட்டாள். நாயை, கயிற்றினால் அந்த மரக்கட்டையில் கட்டி வைத்தாள். தன் கைப்பையிலிருந்து ஒரு பெரிய எலும்புத் துண்டை எடுத்து நாயை மோப்பம் பிடிக்கச் செய்தாள். நாய், மிகுந்த உற்சாகத்துடன் அந்த எலும்புத் துண்டைக் கடிக்க ஆரம்பித்தது.

ரமோட்ஸ்வே, சற்று தொலைவில், கொசு கடிக்காமல் இருக்க ஒரு சால்வையால் காலை மூடியபடி, தன்னுடைய பெரிய துப்பாக்கியுடன் உட்கார்ந்தாள். சுமார் இரண்டு மணி நேரம் போனது. கொசுக்கடி பிடுங்கியபோதும், அவள் அதைப் பொருட்படுத்தவில்லை. வேலை என்று வந்து விட்டால் அதுதான் அவளுக்கு முக்கியம்.

திடீரென நாய் உறுமும் சத்தம் கேட்டது. அவள் கண்களைக் குவித்து இருட்டில் பார்த்தாள். நாய் நின்று கொண்டிருப்பதும், அதன் பார்வை, தண்ணீரை நோக்கி இருப்பதும் தெரிந்தது. நாய் திரும்பவும் உறுமிக் குரைத்தது.

ரமோட்ஸ்வே போர்வையை உதறி விட்டு, அருகில் உள்ள டார்ச் லைட்டை நிதானமாக எடுத்தாள். தண்ணீரில் சலசலப்பு கேட்டது. உடனே அவள் டார்ச் லைட் பட்டனை அமுக்கி, வெளிச்சத்தைப் பாய்ச்சினாள். அந்த ஒளியில், ஒரு பெரிய முதலை திரும்பிப் பார்த்தபடி இருந்தது தெரிந்தது.

நாயைக் கூர்மையாகப் பார்த்தபடியே அது மெதுவாக நகர்ந்தது. ரமோட்ஸ்வே துப்பாக்கியை எடுத்து, நன்கு தெளிவாகத் தெரிந்த அதன் தலையை நோக்கி, குறி வைத்துச் சுட்டாள்! துப்பாக்கி குண்டு பாய்ந்தவுடன் முதலை ஒரு குட்டிகரணம் அடித்து, பாதி நீரிலும் பாதி நிலத்திலுமாக விழுந்தது. இருமுறை துடித்து விட்டு அடங்கி விட்டது. ரமோட்ஸ்வே கைகள் நடுங்க துப்பாக்கியைக் கீழே வைத்தாள். ஒரு கத்தியை எடுத்து முதலையின் வயிற்றுப் பகுதியைக் கிழித்தாள். வயிற்றில் உள்ளது எல்லாம் டார்ச் லைட் ஒளியில், தெளிவாகத் தெரிந்தது. அதில் கூழாங்கற்கள் (உணவு செரிப்பதற்காக முதலை உண்ணும்), அழுகிய மீனின் பகுதிகள், ஜீரணமாகாத வளையல், மோதிரம், ஒரு கைக்கடிகாரம் எல்லாம் இருந்தன. துருப்பிடித்து, கன்னங்கரேல் என இருந்தாலும் அவை தனியே காணப்பட்டன. மிகத் தெளிவாக முதலையின் ராட்சதப் பசிக்குச் சான்றாக இருந்தன!



நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jul 18, 2014 12:21 am



இ து உன் கணவருக்குச் சொந்தமானதா? - ரமோட்ஸ்வே, முதலை யின் வயிற்றிலிருந்து மீட்ட கைக்கடிகாரத்தை மாளாட்ஸியிடம் காட்டி னாள்.

அவள், அதைக் கையிலெடுத்து உற்றுப் பார்த்தாள்.

மாளாட்ஸி நிதானம் இழக்கவில்லை.

நல்லது. இப்போது என் கணவர் இறைவனிடம் இருக்கிறார் என்பது தெரிய வந்து விட்டது. இன்னொரு பெண்ணுடன் இருக்கிறார் என்பதை விட இது எத்தனையோ மேல்.

மாளாட்ஸியின் வார்த்தைகளை ஆமோதித்தாள் ரமோட்ஸ்வே..

உண்மையான பேச்சு.

நீங்கள் மணமானவரா? கணவருடன் வாழ்வது என்பது எப்படியிருக்கும் என்று உங்களுக்குத் தெரியுமா..? - மாளாட்ஸி வினவ.. ரமோட்ஸ்வே, ஜன்னல் வழியாகத் தெரியும் முள் மரங்களையும், அதன் பின்னணியில் தெரியும் மலைகளையும் வெறித்து நோக்கினாள்.

எனக்கு ஒரு கணவன் இருந்தான். அவன் ஒரு இசைக் கலைஞன். என்னை ரொம்பவும் கஷ்டப்படுத்தினான். இப்போது நான் அவனுடன் இல்லை. ஆனால், சந்தோஷமாக இருக்கிறேன்..

சற்று இடைவெளி விட்டுச் சொன்னாள்..

மன்னியுங்கள். நீங்கள் கணவனை இழந்து நிற்கிறீர்கள்.. அதற்காக வருத்தப்படுகிறீர்கள்..

மாளாட்ஸியின் இதழ்க்கடையில் விரக்தி மிகுந்த புன்சிரிப்பு.. ஆமாம். கொஞ்சம்..

- இதைச் சொல்லி விட்டு எழுந்தவள்.. எனக்கு நிறைய வேலைகள் இருக்கின்றன.. என்றாள்.

அலட்டிக் கொள்ளாத அவளது சுபாவம், ரமோட்ஸ் வேக்கு மிகவும் பிடித்திருந்தது.

பாசாங்கு செய்யத் தெரியாத பெண்..

அ ந்தப் பையனுக்கு பதினோரு வயது ஆன போதிலும், வயதுக்கேற்ற வளர்ச்சியின்றி சிறியவனாக இருந்தான். அவனைப் பார்ப்பவர்கள் ஏழு அல்லது எட்டு வயதுதான் மதிப்பிடுவார்கள்.

அந்தச் சிறுவன், மற்ற சிறுவர்களைக் காட்டிலும் அதீத துறுதுறுப்பும் விஷயங்களை அறிவதில் வேகமும் உடையவனாக இருந்தான். புதர்களிடையே புகுந்து, மணிக்கணக்காக கண்ணில் தென்படாமல் இருப்பது அவனுடைய வழக்கமாயிற்று. திடீரென, கால்நடை பட்டிக்குப் பின்புறமாகவோ, ஆட்டு மந்தையின் பின்னாலோ அரிய பொக்கிஷம் போல கழுகின் இறகு, காய்ந்து போன மரவட்டை, அல்லது பாம்பின் வெளுத்த எலும்புக்கூடு.. இப்படி எதையாவது பிடித்துக் கொண்டு வெளியே வருவான்.

இப்போது மறுபடியும் தன் சுபாவப்படி புதர்களின் நடுவில் இருந்த புழுதிப் பாதையில் நடந்தான். அவனுடைய ஆர்வத்தைத் தூண்டும் படியாக, பாம்பின் புதிய கழிவு அவன் கண்ணில் பட, அதைப் பின்பற்றித் தொடர்ந்து சென்று அந்தப் பிராணியைக் காணலாம் என்கிற நினைப்புடன் நடந்தான். அவனுக்கு அது எந்தப் பாம்பின் மலம் என்று கூடத் தெரிந் திருந்தது. அதன் மேல், பாறையில் வாழும் முயலின் ரோமங்கள் இருந்தன. பெரிய பாம்புகளுக்கு, பாறை முயல்கள் மிகவும் பிடித்த உணவு. இதுவும் அவனுக்குத் தெரியும். பாம்பு மாத்திரம் அவன் கண்ணில் படுமானால், அதைப் பாறையில் அடித்துக் கொன்று விட்டு, பாம்புத் தோலில் தனக்கும், தன் தந்தைக்கும் பெல்ட் செய்து கொள்ளலாம் என்று நினைத்தான்.



நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jul 18, 2014 12:21 am



இருட்ட ஆரம்பித்துவிட்டது. இந்தத் தேடலை நிறுத்த வேண்டியதுதான். நிலவில்லாத அந்த இரவில் பாம்பைத் தேடிக் கண்டுபிடிப்பது என்பது சாத்திய மில்லாதது. பாதையை விட்டு விலகி, புதர் நடுவில் உள்ள ஒற்றையடிப் பாதை வழியே போய், காய்ந்து கிடந்த ஆற்றுப் படுகை வழியாக ஊர் செல்ல எண்ணி னான்.

பாதையை சீக்கிரமாகவே கண்டு பிடித்து விட்டான். கால்களை மணலில் புதைத்தபடி சிறிது நேரம் இளைப் பாறினான். அவனுக்குப் பசித்தது. வீட்டில் மாமிசமும் குழம்பும் அவனுக் காக இருக்கும் என்பது அவனுக்குத் தெரியும். அவன் எழுந்திருந்து மறுபடி யும் நடக்கத் தொடங்கினான். இப்போது நன்றாக இருட்டி விட்டது.

அப்போதுதான் கவனித்தான்.. எதிரில் இருந்த மரங்களின் பின்னணியில் இருந்து மஞ்சள் நிற வெளிச்சம் தெரிந்தது. அவன் திரும்பியபோது, பின்னால் ஒரு டிரக் வண்டி வந்து கொண்டிருந்தது. அது காராக இருக்க முடியாது. ஏனெனில், அங்கு மணல் மிக ஆழமாகவும் மிருதுவாகவும் இருந்தது. கார் இந்தப் பாதையில் போக முடியாது.

அவன் பாதையின் ஓர் ஓரத்தில் நின்று காத்திருந்தான். வண்டியின் வெளிச்சம், இப்போது நேரே அவன் மீது விழுந்தது. ஒரு சின்ன டிரக்.. தலையில் இரண்டு விளக்குகளின் வெளிச்சம் பாதையின் மேடு பள்ளங்களுக்கு ஏற்ப ஏறி ஏறி இறங்கியது. வண்டி மிக அருகில் வர, வெளிச்சம் அவன் முகத்தில் அடிக்க, சட்' என கைகளால் கண்களை மறைத்துக் கொண்டான்.

குட் ஈவ்னிங் - சம்பிரதாயமான வாழ்த்து வண்டிக்குள் இருந்து ஒலித்தது.

சிறுவன் சிரித்தபடியே பதில் வணக்கம் கூறினான். வண்டியில் இருவர் இருந்தனர். இளைஞனான ஒருவன் வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தான். அவன் அருகில் வயதானவன் ஒருவன். இருவருமே புதியவர்கள் என்பதை ஒரு பார்வையிலேயே புரிந்து கொண்டு விட்டான் சிறுவன். ஸெட்ஸ்வானா மொழியை அவர்கள் பேசிய விதம் சற்று வித்தியாசமாக இருந்தது. உள்ளூர்வாசிகள் பேசுவதுபோல் இல்லை. ஒவ்வொரு வார்த்தையின் முடிவிலும் குரல் மேல் ஸ்தாயியிக்குச் சென்றது.

காட்டு மிருகங்களை வேட்டையாடுகிறாயா.. இருட்டில் புலியைப் பிடிக்கப் போகிறாயா?

அவன், இல்லை எனத் தலையசைத்தான்.

நான் வீட்டுக்குப் போய்க் கொண்டிருக்கிறேன்..

புலியை நீ பிடிக்கும் முன்பே அது உன்னைப் பிடித்து விடும்..

சிறுவன் சிரித்தான். நீங்கள் சொல்வது சரிதான். எப்படியானாலும் நான், இன்று புலியைச் சந்திக்க விரும்பவில்லை..

சரி.. நான், உன்னை வீட்டில் கொண்டுபோய் விட்டு விடுகிறேன். ரொம்பத் தொலைவோ?

இல்லை இல்லை.. தூரமில்லை. இதோ, பக்கம் தான்.

இதற்குள் வண்டி ஓட்டி, கதவைத் திறந்து கொண்டு, கீழே இறங்கினான். இன்ஜினை அணைக்காமலேயே, சிறுவன் ஏறி பக்கவாட்டு இருக்கையில் உட்கார வசதி செய்து தந்தான். பின்னர் கதவை மூடிவிட்டு, வண்டியில் ஏறி, கியரை மாற்றினான். சிறுவன் காலைத் தூக்கி மேலே வைத்துக் கொள்ள - காலடியில் ஏதோ மிருகத்தின் மிருதுவான ஈரம் படர்ந்த மூக்கில் பாதம் பட - நாயோ இல்லை ஆடோ..

இடது பக்கம் உட்கார்ந்திருந்த வயதான மனிதனைத் திரும்பிப் பார்த்தான் சிறுவன். ஒருவரை உற்றுப் பார்ப்பது அநாகரிகம் என்று அவனுக்குத் தெரியும். அதுவும் இந்த கருங்கும்மிருட்டில்.. இருந்தாலும் அந்த மனிதனின் உதடுகளும் கண்களும் ஏதோ மாதிரி இருப்பதைக் கவனித்தான். உடனே முகத்தைத் திருப்பிக் கொண்டான்.

ஒரு பையன், வயதான ஒருவரை அப்படிப் பார்ப்பது தவறுதான். ஆனால். இந்த மனிதர்கள் ஏன் இங்கே இருக் கிறார்கள்.. என்ன செய்கிறார்கள்..?



நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jul 18, 2014 12:21 am



அதோ.. அதுதான் என் அப்பாவின் வீடு. விளக்கு வெளிச்சம் தெரிகிறது பாருங்கள்..

எங்களுக்குத் தெரிகிறது.

இங்கேயே நிறுத்துங்கள்.. நான் இந்தப் பக்கமாகப் போய்விடுவேன்..

நாங்கள் நிறுத்த மாட்டோம். உன்னால் எங்களுக்கு ஒரு காரியம் ஆக வேண்டியிருக்கிறது..

பையனுக்கு திடீரென பயம் பிடித்துக் கொண்டது. விருட்டெனத் திரும்பி டிரைவரைப் பார்த்தான். அந்த இளைஞன் சிரித்தான்.

கவலைப்படாதே. பேசாமல் உட்கார். நாம் இப்போது, வேறு ஒரு இடத்துக்குப் போகிறோம்..

என்னை எங்கே அழைத்துப் போகிறீர்கள்.. ஏன் அழைத்துப் போகிறீர்கள்..?

சிறுவன் கிட்டத்தட்ட கூச்சலிடாத குறை.. இதற்குள் வயதானவன், அவனுடைய தோளைத் தொட்டான்.

உன்னை ஒன்றும் செய்ய மாட்டோம். நீ வீட்டுக்கு அப்புறம் போகலாம். உனக்கு ஒரு கெடுதலும் நேராது. நாங்கள் மிகவும் இரக்க சுபாவமுள்ளவர்கள்.

சிறுவன் அவரையே பார்த்துக் கொண்டிருந்தான். அதுவரை என்ன நடக்கிறது என்று அவனுக்குப் புரிய வில்லை. இப்போது புரிந்து விட்டது. என்ன நடக்கும் என்பதை யூகித்து விட்டான்.

ஏய்.. பையனைப் பிடி! அவன் கைகளைக் கெட்டி யாகப் பிடித்துக் கொள். நீ பிடித்துக் கொள்ளவில்லை என்றால், வண்டி பாதையை விட்டு இறங்கி விடும்!

நான் முயற்சி செய்கிறேன். அவன் பிசாசு மாதிரி திமிறுகிறான்.

நீ பிடித்துக் கொள்.. நான் வண்டியை நிறுத்து கிறேன்.

முதல் வழக்கில் பெற்ற வெற்றி, ரமோட்ஸ்வேக்கு மிகுந்த ஊக்கத்தையும் உற்சாகத்தையும் அளித்தது. தனியார் துப்பறிவது பற்றிய புத்தகங்களை வரவழைத்து, அத்தியாயம் அத்தியாயமாகப் படித்துக் குறிப்பெடுத்தாள்.

அவளுடைய காரியதரிசி மகுட்சிக்கு கடிதங்களைப் பிரித்துப் பார்க்கும் வேலை இருந்தது. முதல் மூன்று நாட்களுக்குக் கடிதங்களே இல்லை. நான்காவது நாள் ஒரு பட்டியல் கடிதமும், சொத்து வரிக்கான தாக்கீதும் வந்தன.

இரண்டாவது வார ஆரம்பத்தில், கைபட்டு, அழுக்கடைந்த ஒரு வெள்ளை உறையிலிருந்த கடிதத்தை ரமோட்ஸ்வேக்குப் படித்துக் காண்பித்தாள்.

அன்புள்ள எம்மா ரமோட்ஸ்வே, நீங்கள் இத்தகைய பெரிய நிறுவனத்தை இங்கு ஆரம்பித்திருப்பது பற்றி, பேப்பரின் மூலம் தெரிந்துகொண்டேன்.

நான், என் பிறந்த ஊருக்கு அருகில் உள்ள காபரோனேயிலிருந்து முப்பது மைல் தொலைவிலுள்ள காட்ஸானா கிராமத்தில் ஒரு சிறிய பள்ளியில் ஆசிரியராக இருக்கி றேன். எனக்கும் என் மனைவிக்கும் இரண்டு பெண் குழந்தைகளும் பதினோரு வயதில் ஒரு பையனும் உண்டு. எங்களுடைய பையன் காணாமல் போய் இரண்டு மாதங்கள் ஆகின்றன.

நாங்கள் போலீஸிடம் சென்றோம். அவர்கள் வலை வீசித் தேடி, பல இடங்களில் விசாரித்தும் பயனில்லை. யாருக்கும் என் பையனைப் பற்றிய விவரங்கள் எதுவும் தெரியவில்லை.

நான் பள்ளியிலிருந்து விடுப்பு எடுத்துக் கொண்டு, எங்கள் ஊரைச் சுற்றியுள்ள ஒவ்வொரு குகை, ஒவ்வொரு பள்ளத்திலும் அவனைத் தேடினேன். அவனது சுவடே இல்லை.

என் பையனுக்கு இயற்கை யின் மீது மிகுந்த ஈடுபாடு இருந்ததனால் அங்குமிங்கும் அலைவான். கற்களையும் காட்டில் கிடைக்கும் பறவை சிறகுகளையும் சேமிப்பதில் ஆர்வம் கொண்டவன். அவனுக்குப் புதர்களைப் பற்றி நன்கு தெரியுமாதலால், முட்டாள்தனமாக எதையும் செய்து மாட்டிக் கொள்ள மாட்டான். இங்கு சிறுத்தைப் புலிகள் இல்லை. கலஹாரி மலையிலிருந்து வெகுதூரத்தில் நாங்கள் இருப்பதால் சிங்கங்கள் வருவதற்கும் வழியில்லை. இங்குள்ள ஒவ்வொரு கிணற்றையும் பார்த்து விட்டேன். விவசாயிகளையும் தண்ணீரில் இறங்கிப் பார்க்கச் சொன்னேன். இருந்தும் பலன் பூஜ்யம்தான்.

ஒரு பையன் திடீரென்று எப்படி மாயமாக மறைந்து போக முடியும்? நான் பெரிய பணக்காரன் இல்லை. தனியார் துப்பறியும் நிறுவனங் களுக்குப் போதுமான பணம் தரும் அளவுக்கு எனக்கு வசதியில்லை. இருந்தாலும் கடவுளின் பெயரால் உங்களிடம் கையேந்தி யாசிக்கிறேன்.

நீங்கள் மற்ற வழக்குகளை விசாரணை செய்யும்போதும், மனிதர்களை விசாரிக்கும் போதும், பதினோரு வயதான தோபிஸோ என்ற பையனைப் பற்றி ஏதாவது தெரியுமா.. காட்ஸானா கிராமத்தில் ஒரு ஆசிரியரின் பையன் அவன் என்று சொல்லி விசாரிக்க முடியுமா..? குழந்தையைத் தொலைத்து விட்டு, சாப்பிடாமல் உருக்குலைந்து கிடக்கும் என் மனைவிக்காகவாவது தயவுசெய்து இதை நினைவில் வைத்துக் கொண்டு செய்வீர்களா..? உங்களிட மிருந்து ஏதாவது நல்ல தகவல் வரும் எனக் காத்திருக்கும் ஆசிரியர்.

கடவுள் துணை.

- எர்னஸ்ட் மோலோய் பகோடாட்டி.

மகுட்சி படிப்பதை நிறுத்திவிட்டு ரமோட்ஸ்வேயைப் பார்த்தாள். சிறிது நேரம் இருவரும் பேசவில்லை.



நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jul 18, 2014 12:22 am



----------------------------------------------------------------
ஈகரை தமிழ் களஞ்சியம் - www.eegarai.net
நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம்! - 7
----------------------------------------------------------------


ர மோட்ஸ்வேதான் முதலில் மௌனத்தைக் கலைத்தாள்.

மகுட்சி.. உனக்கு ஏதாவது இது பற்றி தெரியுமா? ஏதாவது பையன் காணாமல் போனது பற்றிக் கேள்விப் பட்டாயா?

மகுட்சி சற்று யோசித்தாள்.

கேள்விப்பட்டேன் என்று நினைக்கிறேன். நியூஸ் பேப்பர்களில், காணாமல் போன சிறுவன் பற்றி வந்திருந்தது. ஆனால், எல்லோரும் அவன் வீட்டை விட்டு ஓடிப்போய் விட்டதாக நினைக்கின்றனர்.”

ரமோட்ஸ்வே எழுந்து, காரியதரிசியின் கையில் இருந்த கடிதத்தை வாங்கிப் பார்த்தாள். தடயங்கள் அழியாமல் இருக்க, கோர்ட்டில் மிக ஜாக்கிரதையாக பிடிப்பார்களே.. அதுபோல, அந்தக் காகிதத்தைக் கையிலெடுத்தாள். அந்த மெல்லிய காகிதம் - சோகமான செய்தியினால் கனமாக இருப்பதுபோல் அவளுக்குத் தோன்றியது.

என்னால் இதில் எதுவும் செய்ய முடியாது என்றே நினைக்கிறேன். இருந்தாலும், என் காதுகளைக் கூர்மையாக வைத்துக் கொள்வேன். இதை, அந்தப் பரிதாபத்துக்குரிய தந்தையிடம் கூறுவேன். வேறு என்ன செய்ய முடியும். கட்ஸானாவைச் சுற்றியுள்ள புதர்களை அவரே நன்கு அறிவார். அங்குள்ள மனிதர்களையும் அவருக்கு மிக நன்றாகத் தெரியும். இதில், நான் செய்யக்கூடியது பெரிதாக ஒன்றும் இல்லை.

மகுட்சியிடம் ஒரு பிரச்னையிலிருந்து விடுபட்ட நிம்மதி.

ஆம்.. இதில் நாம் செய்யக்கூடியது எதுவும் இல்லை..

ரமோட்ஸ்வே சொன்ன கடிதத்தை, அவள் மிக கவனத்துடன் டைப் செய்தாள். அழகாக உறையில் இட்டு, மேலே ஸ்டாம்ப்பையும் ஒட்டி, போஸ்ட் செய்வதற்கான சிவப்பு நிற ட்ரேயில் வைத்தாள்.

இதுதான் துப்பறியும் நிறுவனத்திலிருந்து அனுப்பப்பட்ட இரண்டாவது கடிதம். முதல் கடிதம் 250 புலாவுக்கான (அந்த ஊர் ரூபாய்) கட்டண ரசீது. அதன் மேல் மகுட்சி, உன் கணவர் இறந்த மர்மத்தைக் கண்டுபிடித்ததற்கான கட்டணம் என்று மாளாட்ஸிக்கு டைப் செய்திருந்தாள்.

ஜீ ப்ரா டிரைவ்விலுள்ள தன் வீட்டில் ரமோட்ஸ்வே, தனது பகல் உணவுக்காக ஸ்டூவும் (ஒருவிதமான குழம்பு) பூசணிக்காய் கறியும் சமைத்துக் கொண்டு இருந்தாள். அவளுக்கு கோப்பை நிறைய தேநீரை உறிஞ்சியபடி, குழம்பைக் கிளறியவாறு, அன்றைய சம்பவங்களை நினைக்கப் பிடிக்கும். அன்று வந்திருந்த அந்தக் கடிதத்தைத் தவிர, பல நிகழ்ச்சிகள் நடந்திருந்தன. ஏராளமாகக் கடன் கொடுத் திருந்த ஒருவனுக்கு, கடன் வாங்கியவர்களிடம் இருந்து, பணத்தைத் திரும்பப் பெற்றுத் தருவதாகக் கூறியிருந்தாள்.

இது மாதிரியான சமாசாரங்களை எல்லாம் கூட துப்பறியும் நிறுவனம் செய்யுமா? தெரியவில்லை. இதுபற்றி ஒரு குறிப்பும், எந்தப் புத்தகத்திலும் இல்லை. இருந்தாலும் அந்த மனிதன் விடாப்பிடியாக அவளை வற்புறுத்திக் கொண்டிருக்கிறான். முடியாது என மறுக்கவும் கஷ்டமாக இருந்தது. பிறகு, தன் கணவனைப் பற்றிய கவலையுடன் ஒரு பெண் அவளிடம் வந்தாள்.

அவன் வீடு திரும்பும்போது ஒரே பெர்ஃபியூம் வாசனையுடன் வருகிறான். சிரித்த முகமாக வேறு வருகிறான்.

அவன் ஏன் வாசனையுடன் சிரித்த முக மாக வீடு திரும்புகிறான் என்பதே மனைவியின் கவலை.

ஏன்?

ஏனென்றால், வேறு பெண் எவளையாவது பார்த்துவிட்டு வருகிறானோ என்னவோ! - ரமோட்ஸ்வே கூறினாள்.

என் கணவன் அப்படி செய்வான் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?

- அந்தப் பெண் அழமாட்டாத குறையாகக் கேட்டாள்.

இதுபற்றி இருவரும் பேசி, அந்தப் பெண்ணே இது விஷயமாகக் கணவனை சரி கட்ட வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.

ஆனால், இதற்கு இன்னொரு காரணம்கூட இருக்கலாம் என்று ரமோட்ஸ்வே நம்பிக்கையுடன் கூறினாள்.

அப்படியென்றால்?

அதாவது, நிறைய ஆண்கள் இந்தக் காலத்தில் வாசனை யாக இருக்க விரும்புகிறார்கள். ஆண்களின் உடல் நாற்றம் பற்றி உனக்குத் தெரியாதா? - மகுட்சி கேட்டாள்.

அந்தப் பெண், நாற்காலியிலிருந்து உடனடியாக திரும்பி, மகுட்சியை வெறித்தாள்.

என் கணவர் மிகவும் சுத்தமானவர். அதனால் நாற்றமே கிடையாது.

இப்போது ரமோட்ஸ்வே, மகுட்சியைக் கூர்மையாக, எச்சரிப்பதுபோலப் பார்த்தாள். வாடிக்கையாளர்களுடன் தான் பேசிக் கொண்டிருக்கும்போது, அவளை ஒதுங்கியிருக்கும்படிச் சொல்ல வேண்டும் என தனக்குள் நினைத்துக் கொண்டாள்.



நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jul 18, 2014 12:23 am



ஆனால், இவையெல்லாம் நடந்து கொண்டிருந்தபோதும், ரமோட்ஸ்வே யின் மனதில் அந்த ஆசிரியரின் சோகமயமான கடிதமும், காணாமல் போன சிறுவனும் திரும்பத் திரும்ப வந்துகொண்டே இருந்தார்கள். அவனு டைய அம்மாவும் அப்பாவும் எத்தனை வேதனை அடைந்திருப்பார்கள்?

மகனைக் காணாத ஒவ்வொரு மணித் துளியும், அவன் எத்தகைய ஆபத்தில் மாட்டிக் கொண்டிருக்கிறானோ.. சுரங்கத்தில் எங்கேயாவது சிக்கியிருப் பானோ.. தன்னைத் தேட வருபவர்கள் அருகிலேயே இருந்தும்கூட, கூப்பிட முடியாமல் இருக்கிறானோ! - இப்படி அவர்கள் எத்தனை துடித்திருப்பார்கள்! எத்தகைய கொடிய மனிதனாக இருந்தால், அந்த அறியா குழந்தையை அள்ளிச் சென்றிருப்பான்! இம்மாதிரி போட்ஸ்வானாவில் நடந்தது என்பதே அவளுக்கு நடுக்கத்தையும் பயத்தையும் உண்டு பண்ணியது.

தான் செய்யும் தொழில், தனக்கு ஏற்றதா என்றே அவளுக்கு சந்தேகம் கிளம்பி விட்டது. பிறரது துன்பங்களை நீக்குவது என்பது நல்ல காரியம்தான். ஆனாலும் பிறரின் துன்பங்கள் இத்தனை மன வேதனைகளை உண்டு பண்ணி விடுகிறதே!

மாளாட்ஸியின் வழக்கு விநோதமான ஒன்றுதான். அவளுடைய கணவன், முதலையினால் விழுங்கப்பட்டான் என்பதைக் கேள்விப்பட்டவுடன் அவள் மிகவும் வேதனைப்படுவாள்; துடிதுடித்துப் போவாள் என ரமோட்ஸ்வே எதிர்பார்த்ததற்கு மாறாக, அவள் கொஞ்சம்கூட அலட்டிக் கொள்ளாமல் இருந்தது அதிசயமாகத்தான் இருந்தது.

அப்போது அவள் என்ன சொன்னாள்.. எனக்கு நிறைய வேலை இருக்கிறது என்றுதானே? கணவனை இழந்தவள், அதற்காகச் சிறிதளவுகூட வருத்தப்படாமல் இப்படிக் கூறியது அசாதாரணம்தான். அவள் கணவனை, அவள் பொருட்படுத்தவே இல்லையா? ஒழிந்தான் என நினைத்தாளா..?

ரமோட்ஸ்வே, அடுப்பிலிருந்த ஸ்டூவைக் கிளறிக் கொண்டே யோசித்தாள்.

மாளாட்ஸிதான் கணவனை கொலை செய்து இருக் கிறாள். அதனால்தான் அவன் இறந்த செய்தி, அவளுக்கு அதிர்ச்சியை உண்டாக்கவில்லை. அவளுக்கு, அவன் இறந்தது ஏற்கெனவே தெரிந்திருக்க வேண்டும்.

ஆனால், முதலையின் வயிற்றில் இருந்த ஆதாரங்கள்? புனித ஸ்நானம் செய்ய வந்த மற்ற பாவம் சுமந்த வர்கள்..? இப்படி எல்லாத் தடயமும் இருக்கிறதே!

இல்லை.. அவள் குற்றமற்றவள்தான். ஒருவேளை கணவன் செத்துப்போக வேண்டும் என்பது அவளது பிரார்த்தனையாக இருக்க வேண்டும். அப்படிக் கூட ஒருத்தி நினைப்பாளா? என்ன செய்வது.. திருத்தவே முடியாத கணவர்களை வைத்துக் கொண்டு, இந்தப் பெண்கள் என்னதான் செய்வார்கள்? கடவுளே, இவன் தொலைய மாட்டானா! என்று ஏதோ ஒரு கட்டத்தில் வேண்டியிருப்பாளாயிருக்கும். அவளுடைய பிரார்த்தனை முதலை மூலமாக நிறைவேறியிருக்கலாம். அப்படி யானால், கடவுளின் பார்வையில் அவள் கொலைகாரியாக முடியுமா?

அவள் சிந்திப்பதை நிறுத்தினாள். பூசணிக்காய் வெந்துவிட்டது. கடைசியாக ஆராய்ந்து பார்த்தால், வாழ்க்கையின் சிக்கல்கள் எல்லாம் தானாகத் தீர்ந்தால் தான் உண்டு. எண்ணியெண்ணி ஒன்றும் ஆகப் போவதில்லை. அதுதான் வாழ்க்கையின் யதார்த்தம். மேலும் மேலும் மண்ணில் உயிர் வாழ்வதற்குக் காரணமே இதோ.. இந்தப் பூசணிக்காய்தான்.. அதாவது உணவுதான்!

க ணக்கு வழக்குகள் எதுவுமே உற்சாகம் அளிப்பதாக இல்லை. சாண் ஏறினால், முழம் சறுக்குகிறது. முதல் மாத முடிவில், துப்பறியும் நிறுவனம், நஷ்டத்தையே காட்டியது. பணம் கொடுக்கக் கூடிய வாடிக்கையாளர்களே மூன்று பேர்தான் வந்தார்கள். வேறு இருவர், ஆலோசனை கேட்டு விட்டு, பணம் கொடுக்காமல் சென்று விட்டார்கள். தந்தை என்று சொல்லிக்கொண்டு வந்தவனை வெளியேற்றியதற்கு, பாபட்ஸி, 200 புலா கொடுத்தாள். மாளாட்ஸி, தன் கணவன் இறந்ததை கண்டுபிடித்துச் சொன்னதற்கு 250 புலா கொடுத்தாள். உள்ளூர் வியாபாரி ஒருவர், தன்னுடைய போனிலிருந்து, யாரோ தனக்குத் தெரியாமல் தொலைதூர எண்ணுக்கு போன் செய்கிறார்கள் என்று வந்தவர்.. அதைக் கண்டு பிடித்துத் தந்ததற்காக 100 புலா கொடுத்தார். ஆக மொத்தம் அந்த மாத வருமானம் வெறும் 550 புலா மட்டுமே. ஆனால், காரியதரிசி மகுட்சியின் சம்பளமோ மாதம் 580 புலா. அந்த மாதம் காருக்கு பெட்ரோல் செலவு, ஆபீஸுக்கு மின் கட்டணம் இவற்றைச் சேர்க்காமலேயே 30 புலா நஷ்டம்.



நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jul 18, 2014 12:23 am



எந்தவொரு தொழிலும் கால் ஊன்ற சிறிது காலம் ஆகும் என்பது ரமோட்ஸ்வேக்குத் தெரிந்திருக்கிறது. ஆனால், எத்தனை நாட்கள் நஷ்டத்தில் நடத்துவது? அவளுடைய தந்தை விட்டுச் சென்ற சொத்தில் கொஞ்சம் மிச்சமிருந்தது. ஆனால், ஆயுள் முழுக்க வாழ்வதற்கு அது நிச்சயமாக போதாது. அப்பாவின் அறிவுரைப்படி ஒரு கசாப்புக் கடை திறந்திருந்தாலும் பிரச்னையின்றி இருந்திருக்கலாம். பத்திரமான முதலீடு. ஆனால், அது போன்ற தொழிலில் எந்தவித ஆர்வமூட்டும், உற்சாகமான சமாசாரமும் இல்லையே!

அவள், தோக்வெங் சாலை விரைவு வண்டிகளின் நிறுவன முதலாளியான மிஸ்டர் ஜே.எல்.பி மட்கோனி நிலையைப் பற்றி நினைத்துப் பார்த்தாள். அவருடையது நிச்சயமாக லாபம் தருகிற நிறுவனம்தான். அவருக்கு வாடிக்கையாளர்களுக்குப் பஞ்சமே கிடையாது. மட்கோனி நல்ல வியாபாரத் திறமை உள்ளவர். நல்ல மெக்கானிக்கும் கூட. அவருக்கு, தான் என்ன செய்கிறோம் என்று தெரியும். ஆனால் இவளுக்கோ தெரியவில்லை. இவர்கள் இருவரிடமும் உள்ள வித்தியாசமே இதுதான்.

ரமோட்ஸ்வேக்கு மட்கோனியைப் பல வருடங்களாகத் தெரியும். அவர் மொச்சுடியிலிருந்து வந்தவர். அவருடைய மாமா, ரமோட்ஸ்வேயின் தந்தைக்கு மிக நெருக்கமான சிநேகிதர். மட்கோனி, ரமோட்ஸ்வேயை விடவும் பத்து வருடம் மூத்தவர். அவருக்கு வயது நாற்பத்தைந்து ஆனாலும், ரமோட்ஸ்வேயின் வயதுதான் தனக்கும் என்று அவர் நினைத்தார். அடிக்கடி, நம்மைப் போன்ற வயதுள்ள வர்களுக்கு.. என்கிற வார்த்தையை உபயோகித்தார்.

அவர் பழகுவதற்கு எளிமையானவர். அவர் ஏன் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை என்று ரமோட்ஸ்வே எண்ணுவது வழக்கம். அவர் பார்க்க அழகாக இல்லா விட்டாலும் கூட, நல்ல உடலமைப்பும் நம்பிக்கையும் தைரியமும் உள்ளவராகவே காணப்பட்டார்.

பழைய விமான தளத்தின் அருகில் உள்ள ஒரு பெரிய வீட்டில் அவர் தனியாகவே வசித்து வந்தார். அந்த வழியாக காரில் செல்லும்போது, பலமுறை அவர், தன் வீட்டு வெராந்தாவில் தனியாக உட்கார்ந்து, அவருடைய பெரிய தோட்டத்தில் உள்ள மரங்களை பார்த்துக் கொண்டிருப்பார். இதை ரமோட்ஸ்வே பார்த்திருக்கிறாள்.

அவர் என்ன நினைத்துக் கொண்டிருப்பார்? தோட்டத்தில் விளையாட குழந்தைகள், மனைவி என்றிருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்றா? அல்லது அவரது கார் ஷெட்டில் பழுது பார்க்க நின்றிருக்கும் கார்களைப் பற்றியா? ஒருவராலும் அதைக் கண்டுபிடிக்க முடியாது. ஏகப்பட்ட ரசீதுகள், உதிரி பாகங்களுக்கான ஆர்டர்கள் நிறைந்த, எண்ணெய்ப் பிசுக்குப் பிடித்த அவரது ஆபீஸுக்குச் சென்று, அவரோடு பேசுவது ரமோட்ஸ்வேக்கு பிடித்திருந்தது. சுவரில் தொங்கும், சாதாரணப் படங்கள் போட்ட காலண்டர்களைப் பார்க்கப் பிடிக்கும். எண்ணெய்க் கறை படிந்த கோப்பைகளில் தேநீர் அருந்தியவாறு, அவருடைய ஆட்கள் காரை உயரத் தூக்கி நிறுத்தி, கீழே ஏக இரைச்சலுடன் வேலை பார்ப்பது பிடிக்கும்.

மட்கோனிக்கும் இவளது வரவு மிகவும் பிடித்தமாகவே இருந்தது. தன் சொந்த ஊர் பற்றி, அரசியலைப் பற்றி, அல்லது அன்று நடந்த நிகழ்ச்சிகளைப் பற்றி சுவாரஸ்யமாகப் பேசுவார்கள். யாருடைய காரில் என்ன கோளாறு, அன்றைக்கு பெட்ரோல் வாங்கியது யார் யார், அவர்கள் எங்கே போய்க் கொண்டிருக்கிறார்கள்.. இப்படி ஏதாவது அவர் பேசுவார். ஆனால், அன்றுதான் அவர்கள் பணவரவு பற்றியும், லாபகரமாகத் தொழில் நடத்துவது எப்படி என்றும் பேசினார்கள்.

வேலையாட்கள் சம்பளம்தான் மிகப் பெரிய செலவு.. இப்படி கூறிய மட்கோனி,

அதோ பார். காரின் அடியில் வேலை செய்யும் அந்தப் பையன்களால் எவ்வளவு செலவு தெரியுமா? அவர்கள் சம்பளம், அதற்கான வரி, கார் அவர்கள் தலையில் விழுந்தால் அதற்கான இன்ஷூரன்ஸ் இப்படி எல்லாவற்றையும் கூட்டிக் கழித்துப் பார்த்தால், எனக்கு ஒன்றிரண்டு புலாக்கள் மிஞ்சினால் அதிகம்.



நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jul 18, 2014 12:23 am



ஆனால், நீங்கள் நஷ்டப்படவில்லையே.. எனக்கு முதல் மாதத்திலேயே 30 புலா நஷ்டம். போகப் போக இன்னும் மோசமாகும் என்றே தோன்றுகிறது.

மிஸ்டர் ஜே.எல்.பி.மட்கோனி பெருமூச்செறிந்தார்.

பெரிய மூக்குக் கண்ணாடி அணிந்த காரியதரிசிக்குத் தான் எல்லாம் போகிறது.

ரமோட்ஸ்வே ஆமோதித்தாள்.

ஆமாம், எனக்குத் தெரிகிறது. ஆனால், ஆபீஸ் என்றால் கண்டிப்பாக ஒரு காரியதரிசி வேண்டுமல்லவா? காரியதரிசி இல்லை என்றால், நான் ஆபீஸிலேயே கிடக்க வேண்டியதுதான். கடை கண்ணிக்குப் போக முடியாது. இப்படி வந்து, உங்களுடன் பேசிக் கொண்டிருக்கவும் முடியாது.

மட்கோனி, தேநீர் கோப்பையைக் கையில் எடுத்தார்.

அதற்கு நீ நல்ல வாடிக்கையாளர்களைப் பிடிக்க வேண்டும். பெரிய விவகாரங்கள்.. நிறைய பணம் தரும் கட்சிக்காரர்கள் தேவை.

பணக்காரர்களா?

ஆமாம். உதாரணத்துக்கு பட்டேல் மாதிரி வாடிக்கை யாளர்கள். அவருக்கெல்லாம் துப்பறியும் ஆட்கள் எதற்குத் தேவைப்படுகிறார்கள்?

பணக்காரர்களானாலும் அவர்களுக்கும் எத்தனையோ பிரச்னைகள் இருக்கலாம்.. நமக்குத் தெரியாமல்.

சற்று நேரம் மௌனமாக, அந்தப் பையன்கள் கார் சக்கரத்தைக் கழற்றுவதையே பார்த்தபடி இருந்தனர்.

முட்டாள் பையன்கள். அவர்கள் இப்படி செய்ய வேண்டிய தேவைகள் இல்லை.

மட்கோனி சொல்ல, ரமோட்ஸ்வே தொடர்ந்தாள்..

எனக்கு ஒரு கடிதம் வந்தது. அதைப் படித்ததிலிருந்து எனக்கு மிகவும் வேதனையாக இருக்கிறது. துப்பறியும் நிறுவனம் நடத்தவேண்டுமா என்று கூடத் தோன்றுகிறது என காணாமல் போன சிறுவனைப் பற்றியும், தனக்கு கடிதம் எழுதிய அவன் தந்தைக்கு, தன்னால் எந்த உதவியும் செய்ய முடியாதது பற்றியும் கூறினாள்.

என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை. கண்டிப் பாக என்னால் ஒரு அற்புதமும் நிகழ்த்த முடியாது. ஆனாலும் அவனை நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது. அவனுடைய தந்தை, அவன் ஏதாவது புதரில் விழுந்து, மிருகங்களால் இழுத்துச் செல்லப் பட்டிருக்கலாம் என்று நினைக்கிறார். எந்தத் தந்தையால் இதைத் தாங்க முடியும்?

மட்கோனி தொண்டையைச் செருமிக் கொண்டார்.

அதைப் பற்றி, நான் பேப்பரில் பார்த்தேன். அவர்கள் தேடுகிற விவரத்தையும் படித்தேன். அவனைத் தேடுவது உபயோகமில்லாத ஒன்று.

ஏன் அப்படி நினைக்கிறீர்கள்?

ரமோட்ஸ்வே கேட்க, மட்கோனி ஒரு நிமிட நேரம் பேசாமல் இருந்தார்.

ஏனென்றால் அவன் இறந்து விட்டான்.




நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jul 18, 2014 12:24 am


----------------------------------------------------------------
ஈகரை தமிழ் களஞ்சியம் - www.eegarai.net
நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம்! - 8
----------------------------------------------------------------


ஒரு கணம் அதிர்ந்து விட்டாள் ரமோட்ஸ்வே.

நீங்கள் ஏன் அவன் இறந்திருப்பான் என்று நினைக்கிறீர்கள்.. அவன் காணாமல் போயிருக்கலாம் இல்லையா..?

மட்கோனி, காற்றில் விரல்களால் சைகை செய்த படி கூறினார்..

எந்த மிருகமும்.. அதாவது, எந்த சாதாரண மிருகமும் அவனை இழுத்துச் சென்றிருக்க முடியாது.. ஒரு வேளை இது ஸான்டாவான்னா அல்லது தோக் கோலோஸி (ஒரு விதமான மந்திரவாதிகள், பில்லி, சூனியக்காரர்கள்) வேலையாகவும் இருக்கலாம்..

ரமோட்ஸ்வே பேசவில்லை. அந்தச் சிறுவனுடைய தந்தையை எண்ணிப் பார்த்தாள். மொச்சுடி மருத்துவ மனையில் அவள் அனுபவித்த அந்தக் கொடுமையான பகல் அவளுக்கு ஒரு கணம் நினைவுக்கு வந்தது. அவள் அழுது கொண்டிருந்தபோது, உடையைச் சரிசெய்தபடி வந்த அந்த நர்ஸ் மனதில் வந்து நின்றாள். ஒரு குழந்தை இறப்பது என்பது உலகத்தையே இழப்பதற்குச் சமமானதுதான். பிள்ளையைப் பெற்றவள், மறுபடியும் பழைய கன்னித்தன்மைக்குப் போக முடியாது.. அவளுடைய வாழ்க்கையில் நட்சத்திரங்கள், நிலவு எல்லாம் மறைந்துவிடும். பறவைகள் ஊமைகளாகிவிடும்.

அவள், மறுபடியும் சொன்னாள்..

நீங்கள் ஏன் அவன் இறந்திருப்பான் என்று நினைக் கிறீர்கள்.. அவன் காணாமலே போயிருக்கலாம் அல்லவா..?

இல்லையில்லை.. - மட்கோனி தலையசைத்தார்.

சூனியம், மந்திர தந்திர வேலைகளுக்காகத்தான் அவனைத் தூக்கிச் சென்றிருக்க வேண்டும். அவன் இறந்துவிட்டான்..

ரமோட்ஸ்வே, காலியான கோப்பையை மேஜை மீது வைத்தாள். வெளியில் காரின் சக்கர வளையம் ஒன்று பெரும் சத்தத்துடன் கீழே விழுந்தது.

அவள், தன் நண் பரைப் பார்த்தாள். இந்த மாதிரி சமா சாரங்கள் பற்றி யாரும் விரிவாகப் பேசுவ தில்லை. எவ்வளவோ தைரியசாலிகளின் மனதிலும்கூட அச்சத்தை உண்டு பண்ணக்கூடிய விஷயம் அது.

எப்படி அத்தனை நிச்சயமாகக் கூறுகிறீர்கள்?

மட்கோனி புன்னகைத்தார்.

ரமோட்ஸ்வே.. உனக்கும் எனக்கும் நம்மைச் சுற்றி என்னென்ன நடக்கிறது என்று தெரியும். ஆனால், அதைப் பற்றிப் பேச விரும்புவதில்லை இல்லையா.. ஆப்பிரிக்க இனத்தவர் பேசவே வெட்கப்படும் விஷயம் இது. இப்படியெல்லாம் நடக்கிறது என்பது தெரிந்தும் நாம் கண்டு கொள்ளாமல் இருக்கிறோம். காணாமல் போன குழந்தைக்கு என்ன நேரிட்டிருக்கும் என்பது நமக்குத் தெரியும்.. நன்றாகவே..!

ரமோட்ஸ்வே அவரைப் பார்த்தாள். அவர் உண்மை யைத்தான் கூறுகிறார். அந்தப் பையன் காணாமல் போனதற்கு, பலரும் பலவிதமான காரணங்கள் கூறினாலும், மட்கோனி சொன்னதுதான் உண்மையான காரணமாக இருக்கக்கூடும்.. சூனியக்கார மருத்துவர், சிறுவனை தன் மருந்துக்காகக் கடத்திச் சென்று கொன்றிருக்க வேண்டும். இருபதாம் நூற்றாண்டில் பெருமைக்குரிய தேசியக் கொடி பறக்கும் நவீனமான நாட்டின் மத்தியில், இந்த இருட்டான காரியம் நடந்திருக்கிறது. யாரோ மிக வசதியுள்ள பணக்காரன் ஒருவன், இந்த மாந்திரீகத்தின் மூலம் தனக்குப் பயன் தரும் மருந்துக்காக சிறுவனைக் கொன்றிருக்கலாம். ரமோட்ஸ்வே தலைகுனிந்து கொண்டாள்.



நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jul 18, 2014 12:24 am



நீங்கள் சொன்னது உண்மையாக இருக்கலாம்.. பாவம் அந்தப் பையன்..

நிச்சயமாக! இல்லையென்றால், அவன் தந்தை உங்களுக்கு எதற்காக கடிதம் எழுத வேண்டும்? போலீஸ் இது எப்படி, எங்கே நடந்தது என்று கண்டுபிடிக்க ஒரு முயற்சியும் எடுத்துக் கொள்ள வில்லை. அவர்கள் ஒவ்வொருவரும் பயப்படுகிறார்கள். நான் பயப்படுகிற அளவுக்கு - ஏன், அந்தக் காரின் அடியில் வேலை செய்யும் பையன்கள் உள்பட அத்தனை பேரும் பயந்து சாகிறார்கள். ரமோட்ஸ்வே, நாம் ஒவ்வொருவரும், ஏன்.. நீ உட்பட - எல்லோருமே பயப்படுகிறோம்..

அ ந்த நாட்டில், மூன்று சிறந்த புகழ் பெற்ற குடும்பங்கள் இருந்தன. அவற்றில் இரண்டு வீடுகளுக்குத்தான் ரமோட்ஸ்வே ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் அழைப் பின் பேரில் போய் வந்திருக்கிறாள். இதில் ரமோட்ஸ்வேக்கு ஒரு திருப்தி இருந்தது. இதில், ரொம்பவும் பிரபலமானது மொகோலோடி. இது காபரோனுக்குப் பக்கத்தில் அரண்மனை போன்ற பெரிய வீடு. இந்த வீட்டின் வாசல் பக்கம் உள்ள இரும்புக் கதவுகளில் பறவைகளின் உருவம் செதுக்கப்பட்டு மிக உயர்வாக இருக்கும். இது, வடக்குப் பக்கம் உள்ள பக்காடி வீட்டை விடவும் சிறந்ததாக இருந்தது. பக்காடி வீடு அருகில் சாக்கடை இருந்தது. அதனால் அது ரமோட்ஸ்வேக்கு பிடிக்காது. ஆனாலும் அந்த சாக்கடையினாலும் சில லாபங்கள் இருந்தன. அந்த வீட்டின் வெராந்தாவிலிருந்துப் பார்க்கும்போது - அந்தச் சாக்கடைகள் பச்சை நிறக் குளங்கள் போலத் தோன்றும். ஏராளமான பறவைகள் வருவதும் போவதுமாக இருக்கும். ஆனால், காற்று திசை மாறும்போதுதான் இதைப் பார்க்க முடியும்...

மூன்றாவது பெரிய வீடும் பெரும் பணக்காரருடைய தாகத்தான் இருக்க வேண்டும். அங்கு யாரும் அழைக்கப் பட்டதில்லை. காபரோன் முழுவதும் வீட்டின் வெளித் தோற்றத்தை மட்டுமே பார்த்திருக்கிறார்கள். மிகப் பெரிய வெள்ளைச் சுற்றுச் சுவர்கள் சூழ்ந்திருந்ததினால், உள்ளிருப்பது எதுவும் தெரியாது. யாராவது விசேஷமாக அழைக்கப்பட்டவர்கள் மூலமாக, அந்த வீட்டைப் பற்றி தெரிந்தால்தான் உண்டு. ஆனால், எல்லோரும் அந்த வீட்டின் உள்ளே உள்ள செல்வச் செழிப்பினை ஒருமனதாகப் பாராட்டினார்கள்.

பக்கிங்ஹாம் அரண்மனையைப் போல இருக்கிறது - இப்படி, அங்கு ஒரு விசேஷத்துக்கு பூக்கள் கொண்டு சென்ற பெண் கூறினாள். மேலும், மகாராணி கூட இங்கு வசிப்பவர்களைவிட எளிமையாகத்தான் வாழ்வார்கள் என்று தோன்றுகிறது என்றும் கூறினாள்.

அந்த மாளிகையின் உரிமையாளர் பல்லிவாலா பட்டேல் 1967-ல் போட்ஸ்வானாவில் தனது இருபத்தைந் தாவது வயதில் வந்து தங்கினார். அவருக்கென்று அப்போது பெரிதாகப் பணம் எதுவும் இல்லை என்றாலும் அவர் தந்தை - ஊரை விட்டு ஒதுக்குப்புறமாக உள்ள ஜூலுலாண்டில் ஒரு ஆப்பிரிக்கன் அங்காடியில் தையல் கடை ஒன்றை வாங்கி, மகனுக்குத் தந்தார். அது தந்த மாபெரும் வெற்றியில் தான் பட்டேலுக்கு இப்போது எட்டு கடைகளும், வெவ்வேறு ஊர்களில் ஒன்பது ஹோட்டல்களும், லோபாட்ஸ்ஸே யில் பெரிய தையல் நிறுவனமும் சொந்தம்.

அந்த ஏரியாவில் அவர் ஒரு பெரிய பணக்காரர் என்பதில் சந்தேகமேயில்லை. ஆனால், போட்ஸ்வானாவில் அது பெரிதாகக் கருதப் படவில்லை.. ஏனென்றால், கால்நடைகளில் சம்பாதிக்காத பணம், அவர்களைப் பொறுத்தவரையில் வாயில் விழும் புழுதி போன்றதுதான்!

பட்டேல் ஐம்பது வயதானவுடன் தன்னுடைய வியாபாரத்தை விரிவுபடுத்துவதை நிறுத்திக் கொண்டு தன் கவனத்தை குடும்பத்தினரின் படிப்பு, ஒழுங்குமுறை ஆகியவற்றில் செலுத்த ஆரம்பித்தார்.

அவருக்கு நான்கு குழந்தைகள். ஒரு பையன் வாலஸ். இரட்டை பெண்கள் சந்திரி, பாலி. கடைக்குட்டி நந்திரா. பையனை ஜிம்பாப்வேயில் உள்ள மிக உயர்ந்த பள்ளியில் சேர்த்து, அவன் சிறந்த நாகரிகமானவனாகவும், உயர்குடி மகனாகவும் வளர வேண்டும் என ஆசைப் பட்டார். அங்கு அவன் கிரிக்கெட் விளையாடக் கற்றுக் கொண்டான். அதுமட்டுமல்ல.. மிகவும் கொடுமைக் காரனாகவும் ஆனான். பட்டேல், பல் வைத்திய கல்லூரிக்கு எக்கச்சக்கப் பணம் கொடுத்து, அவனைச் சேர்த்து, பின் டர்பனில் பல் டாக்டராகப் பணியாற்றத் தொடங்கினான். பற்களைச் சீர்படுத்தி, அழகுபடுத்தும் துறையில் இருந்தான்.




நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 3 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக