புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/04/2024
by mohamed nizamudeen Yesterday at 8:17 pm

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:32 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm

» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm

» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm

» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் Poll_c10நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் Poll_m10நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் Poll_c10 
60 Posts - 50%
ayyasamy ram
நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் Poll_c10நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் Poll_m10நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் Poll_c10 
49 Posts - 40%
mohamed nizamudeen
நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் Poll_c10நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் Poll_m10நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் Poll_c10நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் Poll_m10நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் Poll_c10 
3 Posts - 2%
Kavithas
நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் Poll_c10நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் Poll_m10நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் Poll_c10 
1 Post - 1%
bala_t
நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் Poll_c10நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் Poll_m10நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் Poll_c10 
1 Post - 1%
prajai
நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் Poll_c10நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் Poll_m10நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் Poll_c10நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் Poll_m10நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் Poll_c10நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் Poll_m10நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் Poll_c10 
280 Posts - 42%
heezulia
நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் Poll_c10நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் Poll_m10நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் Poll_c10 
277 Posts - 41%
Dr.S.Soundarapandian
நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் Poll_c10நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் Poll_m10நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் Poll_c10நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் Poll_m10நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் Poll_c10 
25 Posts - 4%
sugumaran
நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் Poll_c10நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் Poll_m10நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் Poll_c10நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் Poll_m10நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் Poll_c10நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் Poll_m10நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் Poll_c10 
5 Posts - 1%
prajai
நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் Poll_c10நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் Poll_m10நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் Poll_c10 
5 Posts - 1%
Kavithas
நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் Poll_c10நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் Poll_m10நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் Poll_c10 
4 Posts - 1%
manikavi
நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் Poll_c10நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் Poll_m10நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம்


   
   

Page 1 of 9 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jul 18, 2014 12:12 am

நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் QzKZDftkRMOnYnAhqgg5+p19
நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் SdpXBTNEQ3iYZ9MZ0CzE+image001

மண்ணால் வேறுபட்டிருந்தாலும் மனத்தால் உலகெங்கும் பெண்களின் துன்பங்களும் தைரியங்களும் ஒன்றேதான் என்பதற்கு அழுத்தமான ஆதாரம் நம்பர் 1 லேடீஸ் டிடெக்டிவ் ஏஜென்சி என்ற ஆங்கில நாவல். அலெக்ஸாண்டர் மெக்கால் ஸ்மித் எழுதியிருக்கும் இந்த நாவலின் நாயகி - எம்மா ரமோட்ஸ்வே! இவள், ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் இருக்கிற சாதனைத் துடிப்பின் பிம்பம்.

எம்மா ரமோட்ஸ்வே பிறந்து, வளர்ந்து, வாழ்வதெல்லாமே ஆப்பிரிக்கக் கண்டத்தின் சின்னஞ்சிறு நாடான போட்ஸ்வானா மண்ணில்.

நிறத்தாலும் மொழியாலும் உருவ அமைப்பாலும் வேறுபட்டிருந்தாலும்கூட, போட்ஸ்வானா மக்கள் கிட்டத்தட்ட நம் கலாசாரத்தை அப்படியே நினைவுறுத்துகிறார்கள். மகளுக்கு சீதனமாகத் தர மாடுகளை வளர்க்கும் தந்தை, முழுக்க நம்பியவன் கைவிடும்போது ஏமாற்றத்தில் துடிக்கிற மகள், தொலைந்துபோன மகனை எண்ணி தவித்து நிற்கும் பெற்றோர்.. என்று ஒவ்வொரு பாத்திரத்தின் உள்ளேயும் ஊறுகிற உணர்வுகள், நம் கலாசாரத்தையும் வாழ்க்கைத் துடிப்பையும் அப்படியே நினைவூட்டுகின்றன.

துன்பங்கள் ஆயிரம் வந்தாலும், தைரியத்தோடு மட்டுமல்ல.. சின்னதொரு நகைச்சுவை உணர்வோடும் அவற்றை எதிர்கொண்டு தூளாக்க வேண்டும் என்பதில், எம்மா ரமோட்ஸ்வேக்கு நிகர் அவளேதான்!

ரமோட்ஸ்வே பயணிக்கிற பாதையில் வரும் அப்பாவிகள் நம்மை கண்கலங்க வைக்கிறார்கள். வினோத வில்லன்கள் நடுங்க வைக்கிறார்கள். கொடுமைக்காரர்கள் கொதிக்க வைக்கிறார்கள்.

தனியாக ஒரு தைரியப் பயணத்தைத் தொடங்குகிறாள் ரமோட்ஸ்வே. துணைக்கு நாமும் அவளுடன் கிளம்புவோம்..

எ ம்மா ரமோட்ஸ்வே ஆப்பிரிக்காவின் போட்ஸ்வானா நாட்டின் அழகான கலே மலை யடிவாரத்தில் சொந்தமாக ஒரு வீடு வைத்திருந்தாள். அதுவே தான் அவளது துப்பறியும் நிறுவனமும்.

நிறுவனம் என்ன பெரிய நிறுவனம், ஒரு சின்ன வெள்ளை நிற கார், இரண்டு மேஜை, நாற்காலிகள், ஒரு டெலிபோன். ஒரு பழைய மாடல் டைப் ரைட்டர்.. இதுதான் அந்த நிறுவனத்தின் மொத்த ஆஸ்தியே! போட்ஸ்வானா வின் ஒரேயரு துப்பறியும் நிபுணியும் ரமோட்ஸ்வேதான்.

இந்த மலையடிவாரத்தின் தேநீர் பார்க்க சிவப்பாகவும், நல்ல மணமாகவும் இருக்கும். இதைக் காய்ச்ச ஒரு கெட்டிலும், மூன்று கோப்பைகளும்.. ஒன்று அவளுக்கு. இன்னொன்று அவளுடைய காரியதரிசி எம்மா*மகுட்ஸிக்கு, மூன்றாவது அவளைத் தேடிவரும் வாடிக்கையாளருக்கு.

தனிப்பட்ட டிடெக்டிவ் ஏஜென்சிக்கு இதை விட, வேறு என்ன வேண்டும்? இதுபோன்ற வேலைகளுக்கு மூலதனமே புத்திக்கூர்மையும், உள்ளுணர்வும்தான். எம்மாவுக்கு இவை இரண்டும் தேவைக்கு அதிகமாகவே இருந்தது. இவைதான் அவளை இந்தத் துப்பறியும் தொழிலைத் தொடங்கச் செய்தது.

அவள், இதை விடவும் பெரிய நாட்டில்.. பெரிய நகரத்தில் போய், இதே தொழிலை ஆரம்பித்திருக்கலாம். பெரிய நகரங்களில் வாழும் மனிதர்களிடம் பணமும் அதிகம், பிரச்னைகளும் அதிகம்.. அதற்கேற்ற ஊதியமும் நிறையவே கிடைக்குமாயிருக்கும்.

ஆனால் அவளோ, நான் ஒரு ஆப்பிரிக்க பிரஜை என்பதில் வெட்கப்படவே இல்லை. சோதனைகள் நிறைந்த இந்த நாட்டையும், கடவுள் படைத்த எல்லா மக்களையும் மிகவும் நேசிக்கிறேன். முக்கியமாக இங்கு வசிப்பவர்கள் என் சகோதர, சகோதரிகள். அவர்களுக்கு உதவுவது என் கடமை. அவர்களது பிரச்னைகளை தீர்ப்பதுதான் என் வேலை என்பாள்.

ரமோட்ஸ்வே, தன் அப்பா விட்டுச் சென்ற ஆடு மாடுகளை விற்று, அதில் கிடைத்த பணத்தில்தான் இந்த நிறுவனத்தைத் தொடங்கினாள்.

ரமோட்ஸ்வேவின் தந்தை மிக மோசமான உடல் உபாதைகளுக்கு ஆட்பட்டிருந்ததால், அவரால் எந்த முடிவும் எடுக்க முடியவில்லை. உனக்கென்று ஒரு தொழிலை அமைத்துக் கொள் ரமோட்ஸ்வே. இப்பொழுது ஆடு, மாடுகளுக்கு நல்ல விலை கிடைக்கும். விற்ற பணத்தில் ஒரு கசாப்பு கடை அல்லது பாட்டில் ஸ்டோர், எது உனக்கு இஷ்டமோ அது.. அப்பா மரணப் படுக்கையில் இதைச் சொல்ல, ரமோட்ஸ்வே உருகிப் போனாள்.

உயிருக்கு உயிரான அப்பா, புழுதி நிறைந்த சுரங்கத்தில் வாழ்நாள் எல்லாம் பாடுபட்டு, தன் மகளுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைக்க உழைத்த மனிதர். அவரது கரங்களைப் பிடித்துக் கொண்டு, கண்ணீர் மல்க அவரைப் பார்த்தாள் ரமோட்ஸ்வே. துக்கத்தில் பேச்சு வரவில்லை. ஆனாலும் திக்கித் திணறி தன் எண்ணத்தை வெளிப்படுத்தினாள்..

அப்பா.. நான் ஒரு டிடெக்டிவ் ஏஜென்சி ஆரம்பிக்கப் போகிறேன். போட்ஸ்வானாவின் மிகச் சிறந்த நிறுவனமாக அது இருக்கும்.

அதைக் கேட்ட அவளின் தந்தை, மிகுந்த சிரமத்துடன் விழிகளை விரித்து அவளைப் பார்த்தார். குழறியபடி பேச முயற்சித்தார்.

ஆனால்.. ஆனால்..

ஆனால், அவர் எதையும் சொல்வதற்கு முன்பே இறந்து போய்விட்டார். எம்மா ரமோட்ஸ்வே, அவரது மார்பில் முகத்தைப் புதைத்தபடி விசும்பினாள். அவரது பாசத்தையும், கௌரவமான வாழ்க்கையையும், தனக்காக அவர் பட்ட பாடுகளையும் இப்பொழுது நினைத்தாலும் மனம் கனத்துப் போகும் ரமோட்ஸ்வேக்கு.

இந்த வாழ்க்கை அவர் கொடுத்தது. அப்பாவை நினைத்தால் மட்டுமே துயரம் பொங்குமே தவிர, தான் கடந்து வந்த கரடுமுரடான வாழ்க்கையை நினைத்து ஒருபோதும் அவள் சலித்துக் கொண்டதே இல்லை.

போராட்டமும், காதலும், கசப்பும் நிறைந்ததுதான் வாழ்க்கை.. என்றாலும் இதையே நினைத்து மூலையில் உட்கார்ந்திருப்பது ஒரு டிடெக்டிவ்வுக்கு அழகில்லை.

நம்பர் ஒன் பெண்கள் துப்பறியும் நிறுவனம்! ரகசியமான தகவல்கள், விசாரிப்புகள் எல்லோருக்கும் திருப்தி தரும் முறையில் நேரடி மேற்பார்வையில் சேகரித்துத் தரப்படும் வர்ணம் தீட்டப்பட்ட இப்படி ஒரு விளம்பரப் பலகையை தனது அலுவலகத்தின் முன்பும், தன் உதட்டில் மெல்லிய முறுவலையும் ஒரு சேர மாட்டினாள் ரமோட்ஸ்வே.

அவளது துப்பறியும் நிறுவனம், பலருக்கும் வியப்பை அளித்தது. இருக்காதா பின்னே.. ஒரு பெண் துப்பறி கிறாளாமே!

ரேடியோவில் அவளது பேட்டி வேறு வந்தது. போதாக்குறைக்கு தினசரி ஒன்றிலும், நாட்டின் ஒரேயரு பெண் டிடெக்டிவ் ஏஜென்ட் என்கிற செய்தி வெளியாகி இருந்தது.

ரமோட்ஸ்வே இந்தச் செய்தியை கத்தரித்து, நகலெடுத்து, தன் ஆபீசின் பார்வையான இடத்தில் ஒரு நோட்டீஸ் போர்டு மாட்டி, அதில் ஒட்டி வைத்தாள்.எந்தவொரு சிறு விஷயத்தையும் அலட்சியப்படுத்துவதில்லை அவள்.

ஆ ரம்ப நாளில், தனது வாடிக்கையாளராக வந்த ஹேப்பி பபெட்ஸியை அத்தனை சுலபத்தில் மறக்க முடியுமா? பாவம்.. என்றைக்கோ காணாமல் போன தகப்பன் திரும்பி வந்து, மறுபடியும் காணாமல் போய்..

எனது வாழ்க்கை மிகவும் சந்தோஷமாக இருந்தது. அப்போதுதான் இது நேர்ந்தது. அதற்கு மேல் சொல்வதற்கு ஒன்றுமில்லை. இப்படிச் சொல்லி உதட்டைப் பிதுக்கினாள் பபெட்ஸி. ரமோட்ஸ்வே, அவளைக் கூர்ந்து பார்த்தபடியே தேநீரை உறிஞ்சினாள்.

ஒருவருடைய முகத்தைப் பார்த்தாலே, அவரைப் பற்றிய சகல விஷயங்களையும் அனுமானித்துவிடுவாள் ரமோட்ஸ்வே. தலையின் வடிவம் முக்கியமான ஒன்று என்று பல புத்திசாலி துப்பறிவாளர்கள், தங்களது அனு பவத்தில் எழுதியிருந்தாலும், ரமோட்ஸ்வே, அதையெல்லாம் நம்பவில்லை.

முகத்தின் பொதுவான தோற்றமும், கண்களும், கண் களின் ஓரத்தில் நெளியும் சிறு கோடுகளும் மனிதரின் மனதைத் துல்லியமாகச் சொல்லிவிடும். அதிலும் இந்தக் கண்கள்தான் ஜன்னல். அதனால்தானோ என்னவோ, நிறைய பேர், வீட்டில் இருக்கும்போது கூட கறுப்புக் கண்ணாடி அணிவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். அவர்களை ஜாக்கிரதையாகக் கண்காணிக்க வேண்டும்.

ஹேப்பி பபெட்ஸி பெயரில் மட்டுமல்லாமல், உண்மையிலேயே சந்தோஷமான வாழ்க்கை வாழ்பவள் தான் என்பது முதல் பார்வையிலேயே தெரிந்தது. ஆனாலும் ஏதோ ஓர் ஆணால் ஏற்பட்ட பிரச்னையாகத்தான் இருக்கும் என்று ரமோட்ஸ்வே எண்ணினாள்.

எவனுடைய நடத்தையினாலோ இவள் பாதிக்கப் பட்டிருக்கிறாள் அவளது சிந்தனையை பபெட்ஸியின் குரல் கலைத்தது.

முதலில் என்னைப் பற்றிச் சொல்கிறேனே..

ம்! சொல்..

நான், ஒகாவாங்கர் அருகில் உள்ள மான் என்கிற இடத்திலிருந்து வருகிறேன். என் அம்மா ஒரு சிறிய கடை வைத்திருந்தாள். அதன் பின்புறமுள்ள வீட்டில்தான் நாங்கள் வசித்து வந்தோம். வீட்டில் நிறைய கோழிகள்.. நிறைய மகிழ்ச்சி..

.........

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jul 18, 2014 12:12 am



என்னவோ தெரியாது. நான் சிறு குழந்தையாக இருக்கும்போதே என் அப்பா எங்களை விட்டுப் பிரிந்து சென்று விட்டார். அம்மாவுக்கும் அப்பாவுக்கும் சரியான புரிதல் இல்லை என்று அம்மா சொல்லுவாள்.

ரமோட்ஸ்வே புன்னகைத்தாள்.

ஆனால், புல்லவாயோ என்ற ஊருக்கு வேலைக்கு சென்று விட்டதாக மட்டும் தகவல் வந்தது. எங்கள் ஊர்க்காரர் ஒருவர் புல்லவாயோவுக்கு குடிபெயர்ந்தார். அங்கே, அவர் தனக்கு வேண்டிய ஒருவரை ஆஸ்பத்திரியில் சந்திக்க வேண்டியிருந்தது. போனால்.. அங்கேதான் ஆஸ்பத்திரி வெராந்தாவில் ஒரு தள்ளு வண்டியில் இறந்து போன ஒருவரின் சடலத்தைத் தள்ளிக் கொண்டு போனதாகவும், அந்த சடலம் அசப்பில் என் தந்தையைப் போலிருந்ததாகவும், ஆனால் அவர்தானா என உறுதியாகச் சொல்ல முடியவில்லை என்றும் அவர் கூறினார்.

.........

அம்மா இதைப் பற்றி பெரிதாக அக்கறை எடுத்துக் கொள்ளவில்லை. காரணம், அவள், என் அப்பாவை நேசிக்கவில்லை. நான், எனக்கு நினைவு தெரிந்து அவரைப் பார்த்ததே இல்லை. அதனால் அப்பாவின் மரணம் என்னையும் பாதிக்கவே இல்லை.

தனது சிமிழ் மூக்கை, கைக்குட்டையால் அழுந்தத் துடைத்துக் கொண்டே, ரமோட்ஸ்வேவைப் பார்த்து மெலிதாக சிரித்தாள் பபெட்ஸி.

நான் ஒரு கத்தோலிக்க பள்ளியில் படித்தேன். எனக்கு கணக்கில் இருந்த திறமை, ஆசிரியர்களையே அசரச் செய்தது. இத்தனை திறமையாகக் கணக்கு போடும் ஒருத்தியை நாங்கள் பார்த்ததே இல்லை என்ற ஆசிரியர்கள், என்னை மேலே படிக்க வைக்கப் பெரிதும் உதவினார்கள். எந்தவொரு சிரமமும் இல்லாமலேயே, எத்தனை வரிசை எண்களைக் கொடுத்தாலும் பளிச்சென அடுத்த நிமிடமே சரியான விடையைச் சொல்லி விடுவேன். தேர்வுகளில் அபாரமாக வெற்றி பெற்ற எனக்கு, வங்கி ஒன்றில் வேலை கிடைத்து. பல பதவி உயர்வுகளைப் பெற்று, பல பேருடைய பொறாமையைத் தூண்டி விட்டவள்தான் இன்று உங்கள் முன் நிற்கிறேன். இதை சொல்லும்போது மட்டும் பபெட்ஸியின் குரலில் மெலிதான பதற்றம்.

நல்ல சம்பளம்.. மாலை மூன்று மணிக்குள் அலுவலக வேலை முடிந்து விடுகிறது. அப்புறம் கடைகளுக்குச் சென்று, வீட்டுக்கு வேண்டியதை வாங்கி வர முடிகிறது. நான்கு அறைகள் கொண்ட காற்றோட்டமான வீடு. அம்மா இருந்து, இந்த வசதியான வாழ்க்கையை அனுபவிக்கவில்லையே என்பதைத் தவிர, முப்பத்தியெட்டு வயசு பபெட்ஸிக்கு வேறு என்ன குறையாம்?

இந்த வயதுக்குள் இவ்வளவு கிடைப்பது என்பது எத்தனை பேருக்குக் கிடைக்கும். என்னோடு வேலை செய்பவர்களுக்கு, எங்கே நான், மேலும் பதவி உயர்வு பெற்று, அவர்களை எல்லாம் முட்டாளாக்கி விடுவேனோ என்பதுதான் பெரிய கவலை..

நீ சொல்வது ரொம்பவும் சுவாரஸ்யமாக இருக்கிறது - ரமோட்ஸ்வே சொன்னாள்.

அப்படிப்பட்ட உனக்கு என்னதான் பிரச்னை என்று அவள் கேட்கவில்லை. யாராக இருந்தாலும், அவர்களது பிரச்னையை, அவர்களே சொல்லி முடிக்கும் மட்டும் ரமோட்ஸ்வே காத்திருப்பாள். இடையே குறுக்கிட மாட்டாள். இந்தத் தொழிலுக்கு பொறுமை மிகவும் அவசியம் என நினைப்பவள் அவள்.

ஆதலால் பபெட்ஸி பேசுவதைக் கேட்கக் காத்திருந்தாள்.

நான் ரொம்பவும் கொடுத்து வைத்தவள் என்கிற மகிழ்ச்சியில், மிக சுதந்திரமாக, ஆனந்தமாக, வாழ்க்கையின் ஒவ்வொரு துளியையும் அனுபவித்துக் கொண்டிருக்கும்போதுதான் அது நடந்தது.

.......



நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jul 18, 2014 12:13 am

அதாவது, இறந்து போனதாகச் சொல்லப்பட்ட என் அப்பா திரும்பி வந்து விட்டார்!

ரமோட்ஸ்வே, நிமிர்ந்து உட்கார்ந்தாள். உண்மையிலேயே ரமோட்ஸ்வேக்கு இது வியப்புக்குரிய செய்தி.. ஹேப்பி பபெட்ஸியின் விவகாரத்தில் நிச்சயம் ஒரு காதல் வில்லங்கம்தான் இருக்கும் என அவள் நினைத்திருந்தாள்.

ஏனெனில் அவள் வயது, தோற்றம், வசதி எல்லாம் அப்படி. ஆனால், அப்பா திரும்பி வந்து விட்டதாகச் சொல்கிறாளே!

பபெட்ஸி தொடர்ந்தாள்..

அது ஒரு சனிக்கிழமை மாலை.. நான், படுத்து ஓய்வெடுத்துக் கொண்டிருந்தேன். திடீரென அவர், கதவைத் தட்டி விட்டு உரிமையுடன் உள்ளே நுழைந்தார். ஆனாலும் வாசற் கதவருகேயே நின்றார், கையில் தொப்பியுடன்! வயது அறுபது இருக்கும்.

........

அவர் பல வருடங்களாக புல்லவாயோவில் வசித்து வந்ததாகவும், இப்பொழுது போட்ஸ்வானாவுக்குத் திரும்பி விட்டதாகவும், என்னைப் பார்க்க வேண்டும் போலத் தோன்றியதால் வந்ததாகவும் சொன்னார்.

இதைச் சொல்லும்போதே ஹேப்பி பபெட்ஸியின் நாதழுதழுத்தது.

எனக்கு எவ்வளவு அதிர்ச்சியாக இருந்திருக்கும் என்று உங்களுக்குப் புரிகிறதா? நின்று கொண்டிருந்தவள், இந்த ஷாக்கில் உடனே உட்கார்ந்து விட்டேன். இல்லையென்றால்.. இல்லையென்றால்.. மூர்ச்சையாகி யிருப்பேன். .......

அவர், என் அம்மாவின் பெயரை மிகச் சரியாகச் சொன்னார். அது நாள் வரையில் தொடர்பு கொள்ளாமல் இருந்ததற்கு மன்னிப்பு கேட்டார். இப்போது போக்கிடம் இன்றி வந்திருப்பதாகச் சொல்லி, உன் வீட்டின் ஒரு மூலையிலாவது இடம் கொடுப்பாயா? என்று அவர் கேட்டபோது, நான் அழுதே விட்டேன். ........

இத்தனை வருடங்களுக்குப் பிறகு என் தந்தையை மறுபடியும் பார்த்த மகிழ்ச்சி. மேலும், அம்மா இறந்த பிறகு, எனக்கென்று வேறு யார் இருக்கிறார்கள். அதனால், அவருக்கு ஒரு அறையை ஒதுக்கி, படுக்கை போட்டுக் கொடுத்தேன். இந்த வயதிலும் அவர் நிறைய சாப்பிடுபவர் என்பதை புரிந்து கொண்டேன். நிறைய மாமிசம்.. உருளைக்கிழங்கு போட்டு சமைத்துக் கொடுத்தாலும், திருப்தியில்லாமல் இன்னும் இருக்கிறதா? என்று கேட்பார். தவிர தினமும் ஒரு பீர் பாட்டில்..

ரமோட்ஸ்வே புன்னகைத்தாள்.

அவருக்குச் செய்வதில் நான் அலுக்கவே இல்லை. ஆனால், இது போல மூன்று மாதங்களுக்கும் மேலாக, ஒரு விருந்தினர் போல, அறையிலேயே இருக்கிறார். எல்லாமே, அவரைத் தேடி வர வேண்டும் என எதிர்பார்க்கிறார். நான் அவருக்கு ஒரு குறையும் வைக்கவில்லை. துணிமணிகள் ஆசையாக வாங்கித் தந்தேன். ஷூ கூட. தினமும் காலை, மதிய உணவைச் செய்து வைத்துவிட்டு ஆபீசுக்கு ஓடுவேன். இரவு திரும்பி வந்து, டின்னருக்கு ஏற்பாடு செய்வேன்.

கண்களில் துளிர்த்த நீரை, நாசூக்காகத் துடைத்துக் கொண்டாள் பபெட்ஸி.

இத்தனைக்கும் அவர் வாசலில் உள்ள நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு, அடுத்தடுத்து ஏதாவது வேலை சொல்லிக் கொண்டே இருப்பார். அவரது துணிகளை முதற் கொண்டு நான் துவைத்து உலர்த்த வேண்டும்.

ஆண்களில் பலர் அப்படித்தான் இருக்கிறார்கள். - ரமோட்ஸ்வே கூறினாள். பபெட்ஸி, அதை ஆமோதிக்கும் வகையில் தலையாட்டினாள்.

அவர், வந்ததிலிருந்து இப்படித்தான் இருக்கிறார். இதுவரையில் அவர், சாப்பிட்ட தட்டைக் கூடக் கழுவி வைத்ததில்லை. அவர் பின்னால் ஓடி ஓடிச் செய்து, எனக்கு உடம்பு அசந்து போகிறது. அது மாத்திரம் இல்லை. என் சம்பளத்தில் பெரும் பகுதி, அவருடைய வைட்டமின் மாத்திரைகளுக்கே போகிறது.

அவள் மீண்டும் மூக்கை அழுந்த உறிஞ்சினாள்.

நான் இப்படி செய்வதை வெறுக்கவில்லை. ஆனால், எனக்கு அவர், உண்மையான அப்பாதானா, என்கிற சந்தேகம் வந்து விட்டது. இதை எப்படி தெளிவாக்கிக் கொள்வது என்றும் தெரியவில்லை. அவர் என் சொந்த அப்பாவாக இருந்தால், நான் இத்தனை கஷ்டப்படுவதைப் பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருப்பாரா? ஒருவேளை, என் தந்தை இறப்பதற்கு முன், என் குடும்பத்தைப் பற்றித் தெரிந்து கொண்டு, என் தந்தையைப் போல நடிக்கிறாரா?

எம்மா ரமோட்ஸ்வே, அவள் முகத்தைக் கூர்ந்து பார்த்தாள். என்னவோ தெரியவில்லை. அவளுக்கு, தனது பாசமிகு அப்பாவின் நினைவு வந்தது.

வயசான காலத்தில், நிம்மதியாக தங்கி ஓய்வெடுக்க என் வீட்டை அவர் தேர்ந்தெடுத்திருக்கிறாரோ என நினைக்கிறேன்.

பபெட்ஸியை வியப்புடன் பார்த்தாள் ரமோட்ஸ்வே. அவளது புத்திக்கூர்மை ரமோட்ஸ்வேக்குப் பிடித்திருந்தது. அவள் உண்மையைத்தான் சொல்கிறாள். அதில் துளியும் சந்தேகமில்லை. ஆண்களின் அராஜகம் பற்றி, ரமோட்ஸ்வே நன்றாகவே உணர்ந்திருந்தாள்.

அதை நினைக்க நினைக்க, வெறுப்பே மேலிட்டது.

எத்தனை துணிச்சல் இருந்தால், நல்ல மனம் கொண்ட, சந்தோஷத்துடன் வளைய வந்து கொண்டிருந்த பெண்ணின் முதுகில் சுமையாக ஏறி உட்காருவார் அந்தக் கிழவர். எத்தனை சூழ்ச்சியும், வஞ்சகமும் நிறைந்த ஏமாற்று வேலை இது..

உங்களால் எனக்கு உதவ முடியுமா எம்மா ரமோட்ஸ்வே? அவர், என் உண்மையான தந்தையா, இல்லையா என்று உங்களால் கண்டுபிடிக்க முடியுமா? அவர் நிஜமாகவே என் தந்தையாக இருந்தால், அவரை ஆயுள் முழுவதும் காப்பாற்ற நான் கடமைப் பட்டிருக்கிறேன். இல்லை என்றால், அவரை நான் சகித்துக் கொள்ள வேண்டிய அவசிய மில்லை.

எம்மா ரமோட்ஸ்வே துளிக் கூடத் தயங் காமல் பொறுப்பை ஏற்றுக் கொண்டாள்.

மூன்று அல்லது நான்கு நாட்கள் அவகாசம் கொடு பபெட்ஸி. நான் கண்டு பிடித்துவிடுவேன் என்று தீர்க்கமாகச் சொன்னாள் ரமோட்ஸ்வே.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jul 18, 2014 12:14 am

----------------------------------------------------------------
நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம்! - 2
----------------------------------------------------------------


' சொ ல்வது சுலபம்; ஆனால், செயலாக்குவதுதான் கடினம். ரத்தப் பரிசோதனை இருக்கிறது. ஆனால், அதற்கு அந்த மனிதர் சம்மதிப்பாரா என்பது சந்தேகம்தான். ஆகவே வேறு வழிதான். தந்திரமாகவும் சாமர்த்தியமாகவும் தீர்மானமாகவும் கண்டுபிடிக்க வேண்டும். எப்படி? எம்மா ரமோட்ஸ்வே யோசனையில் ஆழ்ந்தாள்.

இதுபோல ஒரு குழந்தைக்கு இரண்டு தாய்மார்கள் உரிமை கொண்டாடினார்களே! அதற்கு சாலமன் அரசர் என்ன தீர்ப்பளித்தார்? - அவள் மனம் எங்கெங்கோ ஓடியது.

எம்மா ரமோட்ஸ்வேக்கு நர்ஸ் சிநேகிதி ஒருத்தி உண்டு. அவளிடமிருந்து, நர்ஸ் யூனிஃபார்ம் ஒன்றை இரவலாக வாங்கிக் கொண்டாள். இவளை விடவும், அந்த நர்ஸ் கொஞ்சம் ஒல்லியானவள். ஆதலால் உடை கொஞ்சம் இறுக்கமாகத்தான் இருந்தது. சிரமப்பட்டு அந்த உடையைப் போட்டுக் கொண்டு, சேஃப்டி பின்களை போட்டு முடித்த பின் மெரினா ஹாஸ்பிடல் நர்ஸ் மாதிரி தோற்றமளித்தாள் எம்மா ரமோட்ஸ்வே.

அட! பரவாயில்லையே.. வேஷம் பொருத்தமாக இருக்கிறது. இந்த உடையைக் கூட அவசியத்துக்குப் போட்டுக் கொள்ளலாம்.

அவள், தன்னுடைய சிறிய வேனில் புறப்பட்டு விட்டாள்.

உறவினர்களைப் பாதுகாத்து, அவர்களுக்கு உதவி செய்து காப்பாற்ற வேண்டும் என்கிற எண்ணம் ஆப்பிரிக்க மக்களிடையே பரம்பரையாக வந்த பழக்கம்..

இது எத்தனை மனிதர்களைத் துன்பத்தில் ஆழ்த்தியிருக்கிறது? அவளுக்குத் தெரிந்த ஒரு போலீஸ் சார்ஜன்ட்.. ஒரு மாமா, இரண்டு அத்தைகள், ஒன்று விட்ட சகோதரன் ஒருவன் என, இத்தனை பேரையும் காப்பாற்றி வந்தார்.

உறவினர்கள் வேறு வழியில்லாமல் அடைக்கலம் தேடி வந்தால், வரவேற்பது நல்ல குணம்தான். ஆனால் இதையே ஒரு சாக்காக வைத்துக் கொண்டு எத்தனை ஒட்டுண்ணிகளும், அட்டைப் பூச்சிகளும் அடுத்தவர் வாழ்வில் புகுந்து நாசம் செய்கிறார்கள். இவர்களைப் போன்றவர்களால்தான், கூட்டுக் குடும்ப அமைப்புக்கும், பரம்பரைக்கும் கெட்டபெயர்.

பபெட்ஸியின் வீட்டை நெருங்கும்போது, எம்மா ரமோட்ஸ்வே வண்டியின் வேகத்தை அதிகரித்தாள். பபெட்ஸி சொன்னபடி, அவள் தந்தை வாசலில் ஒரு சாய்வு நாற்காலியில்தான் அமர்ந்திருந்தார். 'இந்த வேகத்தைப் பார்த்து அவர் பதற வேண்டாம்' என அவள் நினைத்தாள்.

அவளது எண்ணம் வீண் போகவில்லை. காலைப் பொழுதை சுகமாக அனுபவித்தபடி அமர்ந்திருந்தவர், வண்டியின் வேகத்தைப் பார்த்து, நிமிர்ந்து உட்கார்ந்தார். வண்டியை பெரும் குலுக்கலுடன் நிறுத்தியவள், கதவை திறந்து கொண்டு, காரிலிருந்து குதித்து ஓடினாள்.

நீங்கள்தான் பபெட்ஸியின் அப்பாவா? அவள் மூச்சிரைக்கக் கேட்டாள்.

ஆமாம். நான்தான்.. அவரது குரலில் பெருமை தொனித்தது.

எம்மா ரமோட்ஸ்வே பதட்டமாகச் சொன்னாள்.. ஒரு விபத்து நடந்து விட்டது. பபெட்ஸி இப்பொழுது மருத்துவமனையில் மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருக்கிறாள். அவளுக்குப் பெரிய அறுவை சிகிச்சை உடனடியாக நடத்த வேண்டும்.

ஐயோ! என் அருமை மகளே.. அவர் அலறினார்.

நல்ல நடிகர்தான்! எம்மா ரமோட்ஸ்வே ரகசியமாக அவரது நடிப்பை ரசித்தாள் என்றே சொல்லலாம்.

ஒருவேளை இவர்தான், அவளுடைய.. மனம் கொஞ்சம் பேதலிக்க உடனேயே தன் எண்ணத்தை மாற்றிக் கொண்டாள்.

இல்லை.. இல்லை.. பபெட்ஸியின் உள்ளுணர்வு சரியாகத்தான் இருக்கும். பார்க்காத அப்பா என்றால் கூட, பெண்ணுக்கு, இதுபோன்ற விஷயங்களில் புத்திக்கூர்மை அதிகமாகவே இருக்கும்.

இப்பொழுது எம்மா, மிகவும் கவலையுடன் கூறினாள். பபெட்ஸியை நாம் இழந்து கொண்டிருக்கிறோம். அவள் மிகவும் மோசமான நிலையில்.. நிறைய ரத்தம் சேதமாகி விட்டது. உடனடியாக அதிக ரத்தம் செலுத்தியாக வேண்டும்.

அதற்கு எவ்வளவு செலவாகும்? பெரியவர் இழுத்தார்.

பணம் ஒரு முக்கிய விஷயமில்லை. அவளுடைய பிளட் குரூப் ரொம்பவும் அபூர்வமானது. அவள் தந்தையான உங்களுக்கும் அதே குரூப்தானாமே!

யார் சொன்னது..? கிழவரின் குரல் நடுங்கியது.

பபெட்ஸியின் டைரியில் இருந்தது. நீங்களும், அவளும் ஒரே பிரிவு ரத்தம் என்று.. உங்களைத் தவிர வேறு யாரும் தற்சமயம் இந்தப் பிரிவில் இல்லை. சிரமத்துக்கு மன்னியுங்கள். உடனே புறப்படுகிறீர்களா?

எழுந்து நின்றிருந்த மனிதர் பொத்தென அமர்ந்தார்.

நான் வயதானவன்.. இந்த வயதுக்கு மேல் ரத்தம் எடுப்பது சரியில்லை.

எம்மா ரமோட்ஸ்வேயின் பார்வை, அவர் மீது மிக ஆழமாகப் பதிந்தது.

பபெட்ஸிக்கு மிக அதிக அளவில் ரத்தம் செலுத்தியாக வேண்டும். இந்தப் பிரிவு ரத்தமோ உங்கள் ஒருவரிடம் தான் இருக்கிறது. வயதானவராக இருந்தாலும் நீங்கள், அவளுடைய அப்பா இல்லையா? மகளைப் பிழைக்க வைக்க, நீங்கள் உயிரையும் கொடுக்க சித்தமாயிருக்...

ஐயோ.. நான் இறந்து விடுவேனா..?

சொல்ல முடியாது, அப்படி ஒரு நிலை ஏற்பட்டாலும், மகளைக் காப்பாற்ற, தன் உயிரையும் விட்ட தந்தை இப்படி பபெட்ஸி உங்கள் கல்லறையில் எழுதி வைக்க மாட்டாளா? சீக்கிரம் கிளம்புங்கள். டாக்டர் காத்திருக்கிறார்.



நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jul 18, 2014 12:15 am



கிழவர் வாயைத் திறந்து மூடினார்.

சீக்கிரம்.. நான் வேண்டுமானால் உதவட்டுமா?

எம்மா ரமோட்ஸ்வே, அவரது கையைப் பிடித்து இழுக்க, அவரோ அழுத்தமாக உட்கார்ந்து விட்டார்.

ஊஹூம்.. என்னால் முடியாது.

சேச்சே.. அப்படி சொல்லக் கூடாது.. நீங்கள் கண்டிப்பாக உங்கள் மகளுக்கு உதவத்தான் வேண்டும்.

அவர் மெதுவாகத் தலையை அசைத்தார். மிகவும் நைந்த குரலில், மிரட்சியுடன் கூறினார்.

நான் கொடுக்க முடியாது. நான் அவளுடைய தந்தை இல்லை. ஏதோ தவறு..

எம்மா ரமோட்ஸ்வே, தன் பிடியைத் தளர்த்தினாள். பின், இரு கைகளையும் மார்பின் குறுக்காகக் கட்டிக் கொண்டு, அவர் எதிரில் நின்றாள்.

ஓஹோ! நீ அவள் தந்தை இல்லையா? அப்படியானால் எதற்காக, இங்கே நாற்காலியில் சாய்ந்து, அவளது உணவைச் சாப்பிடுகிறாய்? உன் மாதிரி ஆள் மாறாட்ட கேஸ்களுக்கு சட்டத்தில் என்ன தண்டனை தெரியுமா?

அவர் தலை குனிந்து, தெரியும் என்கிற மாதிரி தலையை அசைத்தார்.

உனக்கு ஐந்து நிமிடங்கள் தருகிறேன். உன் உடமைகளை எடுத்து வா. நானே உன்னை பஸ் ஸ்டாண்டில் விடுகிறேன். பஸ்ஸில் ஏறி, உன் ஊருக்குப் போகிற வழியைப் பார்.

எனக்கு என் ஊர் பிடிக்கவில்லை.

சும்மா நாற்காலியில் உட்கார்ந்து இருப்பதை விட்டு, ஏதாவது வேலை செய்.. உழைத்தால் எந்த ஊரும் பிடிக்கும். அங்கே பூசணிச் செடிகள் வளர்க்கின்றனர். அங்கு போய், கூலிக்கு வேலை தேடு.. இன்னும் நாலு நிமிடங்கள்தான் இருக்கிறது.

ப பெட்ஸி வீடு திரும்பியபோது அப்பாவும் இல்லை. அவரது பொருட்களும் இல்லை. மாறாக, எம்மா ரமோட்ஸ்வே எழுதி வைத்த துண்டுச் சீட்டு, அவளது சமையலறை மேடையில். அதைப் படித்து பபெட்ஸியின் முகம் மலர்ந்தது இருக்கிறதே.. அடடா!

அவர் உன் தந்தை இல்லை. அவர் வாயிலிருந்தே அந்த உண்மையை வரவழைத்தேன். உன் உண்மையான தந்தை ஒருவேளை திரும்பி வரலாம்.. வராமலும் போகலாம். அதுவரையில் சந்தோஷமாக இரு.

த ன் அப்பா ஓபட் ரமோட்ஸ்வே பற்றி நினைக்கும்போதெல்லாம் ரமோட்ஸ்வேயின் கண்கள் கலங்கும். நான்.. பிரஷியஸ் (இதுதான் நம் நாயகி ரமோட்ஸ்வேயின் இயற்பெயர்).. போட்ஸ்வானாவின் பிரஜை. சுரங்கத்தில் வேலை செய்து, சுவாசிக்க முடியாமல் இறந்த ஓபட் ரமோட்ஸ்வேயின் ஒரே மகள்.. ஒரு சாதாரண மனிதனின் வாழ்க்கை வரலாறு எழுதப்படாத ஒன்று.. அப்பா, தன் வாழ்க்கையை, ஒரு சுயசரிதையாக எழுதியிருந்தால், இப்படித்தான் எழுதியிருப்பார் என்றும் அவள் நினைத்துப் பார்ப்பதுண்டு.

'1930ஆம் ஆண்டு மஹாலப்பேக்கு அருகில் ஒரு கிராமத்தில் பிறந்தேன். சிறு வயதிலேயே நாங்கள் மஹாலப்பேயிலிருந்து, என் தாயாரின் உறவினர்கள் வசிக்கும் மொச்சுடிக்குக் குடிபெயர்ந்தோம். எனக்கு அந்த இடம் பிடித்திருந்தது. சந்தோஷமாக அங்கேயே வாழ்ந்திருப்பேன். ஆனால், என் அப்பா என் நிலத்தில் வரும் வருமானம் எனக்கும் என் மனைவிக்கும் போதுமானதாக இல்லாததினால், நீ சுரங்க வேலைக்குப் போய்த்தான் ஆக வேண்டும்' என்று என்னிடம் கூறினார்.



நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jul 18, 2014 12:15 am



மறுநாளே, போட்ஸ்வானாவிலிருந்து தென் ஆப்பிரிக்காவின் ஜோஹனஸ்பர்க் நோக்கி என் பயணம் தொடங்கியது. இந்தியக் கடையில் வாங்கிய ஒரு டிரங்கு பெட்டிதான் என் ஆஸ்தி. என்னிடம் ஒரு ஜோடி காலணி, ஒரு சட்டை, பேன்ட் இவைதான் உபரியாக இருந்தது. சாலை மிகவும் மோசமாக இருந்ததினால், ஜோஹனஸ்பர்க் போய்ச் சேர பனிரெண்டு மணி நேரம் பிடித்தது.

நான், பல வருடங்கள் இந்த சுரங்கங்களில் உயிரைப் பணயம் வைத்து வேலை செய்து, என் சம்பாத்தியத்தை எல்லாம் சேமித்து வைத்தேன். எல்லாரும் பட்டணத்துப் பெண்களிடமும், குடியிலும், விலையுயர்ந்த துணிமணிகளை வாங்குவதிலும் காசைக் கரியாக்கினார்கள். நான் எதுவுமே வாங்குவதில்லை. எல்லாப் பணத்தையும் சேமித்துக் கொண்டு, சொந்த ஊரில் நிறைய ஆடு, மாடுகளை வாங்கினேன். ஒவ்வொரு வருடமும் சில பசுக்களை வாங்கி, என் உறவுக்காரப் பையனின் மேற்பார்வையில் விட்டேன். அவை கன்று ஈன்று, என் மந்தையை மேலும் விரிவடையச் செய்தது.

1960-ல் சுரங்கங்களை விட்டு வெளியேறி, என் சொந்த ஊருக்கு வந்து சேர்ந்தேன். ஊரிலிருந்து வந்து, பஸ்ஸை விட்டு இறங்கியவுடன் அங்குள்ள இடங்களையும் ஆடுகளையும் பார்த்தவுடன் நான் சந்தோஷத்தில் அழுதே விட்டேன். எனக்கு முன்பின் தெரியாத ஒரு மனிதன், என்னருகில் வந்தான். புன்னகையுடன் என் தோளைத் தொட்டான். 'சுரங்கத்திலிருந்து வருகிறீர்களா?' என்றான். 'ஆமாம்' என்றேன். என் அழுகை நிற்கும் வரையில், என் தோளிலேயே கையை வைத்திருந்தவன், பின்பு புன்சிரிப்பு மாறாமலேயே நகர்ந்து சென்றான்.

என் மனைவி வந்து கொண்டிருப்பதைப் பார்த்து எங்களுக்கு இடையில் தொந்தரவு தரக் கூடாது என்று விலகிச் சென்றான் போல..

நான், அவளை மணந்து மூன்று வருடங்கள் ஆகியிருந்தன. இருந்தாலும் நாங்கள் சந்தித்து, சேர்ந்து இருந்த நாட்கள் மிகவும் குறைவு. ஜோஹனஸ்பர்க்கிலிருந்து வருடத்துக்கு ஒருமுறை, ஒரு மாத விடுப்பில் வருவேன். அவ்வளவுதான். நான் கடைசி முறை வந்து, சென்ற போது அவள் கருவுற்றாள். நான் இல்லாதபோது, என் சின்னஞ்சிறு மகள் பிறந்தாள். அந்தக் குட்டி தேவதையை, நான் இப்போதுதான் முதன் முதலில் பார்த்தேன்.

பின் ஒருநாள் திடீரென என் மனைவி இறந்து விட்டாள். துக்கத்தை மறக்க, என் மந்தைகளைப் பார்க்கவும், அதை மேற்பார்வையிடும் பையன்களுக்கு சம்பளம் தரவும் சென்றேன். இப்பொழுது, என்னிடம் நிறைய ஆடு, மாடுகள் இருந்தன. ஒரு கடை திறக்கலாமா என்றுகூட யோசித்தேன். ஆனால், ரமோட்ஸ்வே பெரியவளாகும் வரையில் காத்திருந்து, என் இறப்புக்குப் பின் அவளது விருப்பப்படி செய்து கொள்ளட்டும் என நினைத்தேன்.

என்னுடைய ஒன்று விட்ட சகோதரிதான் ரமோட்ஸ்வேயைப் பார்த்துக் கொள்ள வந்தாள். சமைத்துப் போட்டு, அவளைப் பள்ளிக்கு அழைத்துச் செல்வது, துணிகளைத் தைப்பது போன்ற எல்லாக் காரியங்களையும் அவள் செய்தாள். என்னால், எதையும் கவனிக்க முடியவில்லை. என் துக்கம்தான் எனக்கும் பெரிதாகப் பட்டது.

சுரங்கங்கள் மனிதர்களை அழிக்கின்றன.. அவைகளை விட்டு, அவர்கள் நெடுந்தூரம் வந்த பின்பும், அவை அழிப்பதை விடுவதில்லை..

உண்மைதான்.. பாறைகள் இடிந்து விழுவதால் புதையுண்டு இறக்கலாம். எத்தனை வருடங்களுக்குப் பிறகும், சுரங்கத்தில் வேலை செய்ததை ஒரு கெட்ட கனவாக நினைத்துப் பார்க்கும்போது, அந்த நினைவே, நம்மை அழித்து விடலாம். அந்தச் சுரங்கங்கள் தங்கள் கடனைத் தீர்த்துக் கொள்வதென்னவோ நிச்சயம். அதுதான் இப்போது எனக்கும் நேர்ந்து கொண்டிருக்கிறது.

மரணம், என் முதுகுக்குப் பின்னால் எப்போதும் தொடர்வதாக நான் நினைப்பதுண்டு. காரணம், சுரங்கத்தில் வேலை செய்ததினால், அந்தப் புழுதி மண், என் சுவாசப் பைகளை மிகவும் பாதித்திருந்தது. என்னால் வேகமாக நடக்கவோ, கனமான பொருட்களைத் தூக்கவோ முடியவில்லை.'

ர மோட்ஸ்வேயின் அத்தை, தன் அண்ணன் மகளை மிகுந்த புத்திசாலியாக வளர்க்க விரும்பினாள். ஒருவேளை, அவளின் ஆசைதான் இன்றைக்கு ரமோட்ஸ்வேயை இந்த நிலைக்கு உயர்த்தியிருக்கிறதோ!

அத்தைக்கு, படிப்பறிவு கொஞ்சம்தான். எழுத்துக்களைப் படிப்பதற்கு சற்று தாமதமானாலும், விடாப்பிடியாக எழுத்துக் கூட்டிப் படிப்பாள். ரமோட்ஸ்வே, தன்னைப் போல இருக்கக் கூடாது என்பதில் மிகவும் உறுதியாக இருந்தாள்.

முதலில் ரமோட்ஸ்வேக்கு எண்களை எண்ணுவதற்குச் சொல்லிக் கொடுத்தாள். விளையாட்டாக, மந்தையில் உள்ள ஆடு, மாடுகளை எண்ணினார்கள். புழுதியில் விளையாடும் பையன்களையும் எண்ணினார்கள். ஒவ்வொரு மரத்தையும் ஏதோ ஒரு பெயரிட்டு, வளைந்த மரம், இலையேயில்லாத மொட்டை மரம், புழுக்கள் ஒளிந்து கொள்ளும் மரம், பறவைகள் சீந்தாத மரம்.. இப்படி எண்ணினார்கள்.

சில சமயங்களில், பக்கத்தில் உள்ள மளிகைக் கடை வாசலில் அமர்ந்து கொள்வார்கள். அந்தப் பாதையில் போகும் கார், டிரக் முதலிய வாகனங்கள், பள்ளத்தில் குதித்தெழுந்தும் போகும்போது, காரின் பின்புறம் எழுதியுள்ள எண்ணை அத்தை சொல்ல, ரமோட்ஸ்வே அதை நினைவில் வைத்துக் கொண்டு மறுநாள் அத்தை கேட்கும்போது, சொல்லிவிட வேண்டும். சிலசமயம் மறுநாள் கேட்கவே மாட்டாள். நினைத்தாற்போலிருந்து இரண்டு நாட்கள் கழித்துக் கேட்பாள்.

ரமோட்ஸ்வே, ஆறு வயதில் பள்ளிக்குச் செல்லும் முன்பே ஆங்கில எழுத்துக்களை எழுதவும், படிக்கவும், இருநூறு வரையில் எண்களை எழுதவும், பைபிளின் முதல் பகுதியை (மொழிபெயர்ப்பில்) சொல்லவும் தெரிந்து வைத்திருந்தாள். சில ஆங்கில வார்த்தைகளும், கடல், கப்பல் பற்றியும், கவிதைகளின் நான்கு பாராக்களும் மனப்பாடமாகத் தெரியும் அவளுக்கு.

ரமோட்ஸ்வே, தேவாலயத்தில் ஞாயிறுதோறும் நடக்கிற ஞாயிறு பள்ளிக்கும் சென்றாள். மக்களுக்கு தெளிவான வழிமுறைகள் தெரிய வேண்டுமானால், சுமார் பனிரெண்டு வருடங்களாக ஞாயிறு பள்ளியை நடத்தி வரும் மோத்திபியை விடச் சிறந்தவர் யாருமில்லை. அசாதாரணமான குரல்வளம். பார்க்க குள்ளமாக, பருத்திருப்பாள். குழந்தைகளுக்கு ஆங்கிலத்திலும் அவர்களுடைய தேசிய மொழியான 'ஸெட்ஸ்வானா'விலும் பல பாடல்களைக் கற்றுத் தந்திருக்கிறாள். அவள் கற்றுக் கொடுத்ததினாலோ என்னவோ.. அத்தனை குழந்தைகளும், கீழ் சுருதியில் தவளைகள் கத்துவதுபோல கத்துவார்கள்.

மோத்திபியின் உபதேசம் பெரும்பாலும் இப்படித்தான் இருக்கும்.. ஒருவன் நல்லவன் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும். விடிகாலையில் எழுந்து கடவுளை பிரார்த்திக்க வேண்டும். தனது காலணிகளைச் சுத்தம் செய்து வைத்து விட்டு, காலை உணவு செய்ய தாயாருக்கு உதவ வேண்டும். பிறகு, பள்ளிக்குச் சென்று ஆசிரியர் சொல்வதை கவனமாகக் கேட்க..''

- மோத்திபி இப்படி சொல்லிக் கொண்டிருக்கையிலேயே, இதையெல்லாம் பெண்களான நாங்கள் வேண்டுமானால் மதித்துக் கேட்போம். பையன்களுக்கு இதெல்லாம் புரியாது.. என ரமோட்ஸ்வே நினைப்பாள். அவள் அப்படி நினைப்பதற்கு மிக முக்கியமான காரணமே ஒன்பது வயதேயான ஜேஸய்யா என்கிற பொல்லாத பையன்தான்.



நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jul 18, 2014 12:15 am



ரமோட்ஸ்வே எவ்வளவுதான் அவனைத் தவிர்க்கப் பார்த்தாலும், அவன், அவளருகில் நெருக்கியடித்துத் தான் உட்காருவான். இத்தனைக்கும் ரமோட்ஸ்வே அவனை விடவும் இரண்டு வயது பெரியவள். எப்போதும், இவளைப் பார்த்து இளிப்பதுதான் அவன் வேலை. அடிக்கடி, கால்களால் இடித்துக் கொண்டே இருப்பான். ரமோட்ஸ்வே சங்கடத்துடன் நெளிந்து, நகர்ந்து கொள்வாள்.

இது மாத்திரம் இல்லை, தன்னுடைய கால் சட்டையின் பொத்தானை அவிழ்த்து விட்டு, ரமோட்ஸ்வேயைக் குனிந்து பார்க்கச் சொல்லி வற்புறுத்துவான். ரமோட்ஸ்வேக்கு இது துளிக்கூடப் பிடிக்கவில்லை. கடைசியில் தொல்லை தாங்காமல், மோத்திபியிடம் புகார் செய்தாள். ஆசிரியை கவனமாகக் கேட்டாள்.

பையன்கள் மாத்திரம் இப்படியில்லை. எல்லா ஆண்களுமே இப்படித்தான். இது ரொம்பவும் அசிங்கமான, கேலிக்குரிய விஷயம் என்று அவர்களுக்குத் தெரியவில்லை இப்படி கூறினாள் மோத்திபி.

அடுத்த தடவை அவன் அப்படிச் செய்யும்போது, ரமோட்ஸ்வே.. நீ கையைச் சற்று உயர்த்தினால் போதும். அதுதான் எச்சரிக்கை என்றும் ஆசிரியை கூறினாள்.

அடுத்த வாரம் அது நடந்தது. மோத்திபி, பின் வரிசையில் உள்ள குழந்தைகளின் புத்தகங்களைச் சரிபார்த்துக் கொண்டிருந்தாள். ஜேஸய்யா வழக்கம் போல, ரமோட்ஸ்வேயைக் குனிந்து பார்க்கச் சொல்லி ரகசியமாகச் சொன்னான். ரமோட்ஸ்வே, தனது பாடப் புத்தகத்திலிருந்து கண்களை எடுக்காமல், இடது கையை சற்று உயர்த்தினாள். அவன் இதைப் பார்க்கவில்லை. ஆனால் மோத்திபி பார்த்து விட்டாள்.

பின்புறமாக வந்து, வலது கையில் உள்ள பைபிள் புத்தகத்தினால், அவனது தலையில் பலமாக ஒரு அடி போட்டாள். குழந்தைகள் திடுக்கிட்டு, திரும்பிப் பார்த்தனர். அந்தப் பையன் அதிர்ச்சியில் நிலைகுலைந்து போனான். மோத்திபி அவனெதிரில் வந்து நின்று, அவனுடைய கால் சட்டையைச் சுட்டிக் காட்டி, முன்னை விடவும் பலமாக இன்னொரு அடி கொடுத்தாள்.

அவ்வளவுதான்! இதற்குப் பிறகு அவன், ரமோட்ஸ்வேயையோ, வேறு எந்தப் பெண்ணையுமோ தொந்தரவு செய்வதில்லை. ஆண்களை எப்படி நடத்த வேண்டும் என்பதை அந்த வயதிலேயே அறிந்து கொண்டாள் ரமோட்ஸ்வே. இந்தப் பாடம் அவளுக்கு பல வருடங்களுக்கு உதவியாக இருந்தது.



நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jul 18, 2014 12:16 am

----------------------------------------------------------------
நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம்! - 3
----------------------------------------------------------------


ஆ ப்பிரிக்காவில் உள்ள போட்ஸ் வானா நாட்டின் ஒரே துப்பறியும் பெண் எம்மா ரமோட்ஸ்வே. தன்னை உயிருக்குயிராக நேசித்த தன் தந்தை பற்றியும் தாயின் இழப்பு தெரியாமல் கண்ணுக்குள் வைத்து வளர்த்த தன் அத்தையைப் பற்றியும் தன் இளமைப் பருவம் பற்றியும் நினைத்துப் பார்க்கிறாள் ரமோட்ஸ்வே.

முதல் எட்டு ஆண்டுகள் அத்தையின் பராமரிப்பில் ரமோட்ஸ்வே வளர்ந்தாள். இப்படியே காலம் முழுக்க அவள் தொடர்ந்து இருந்திருந்தால், ரமோட்ஸ்வேயின் தந்தை ஓபட்டுக்கும் வசதியாக இருந்திருக்கும். வீட்டைப் பார்த்துக் கொண்டாள். அடிக்கடி பணம் கேட்டும் தொந்தரவு செய்வதில்லை. ஆனால், தன் சகோதரி, ஒருவனை காதலிப்பதை அறிந்த பின், அவளுக்கு நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொடுப்பதே ஓர் அண்ணனின் கடமை.. இதை தங்கையிடம் ஓபட் சொன்னதும், அவள் வெட்கத்துடன் தலைகுனிந்தாள்.

ஓபட் ரமோட்ஸ்வே திருமண ஏற்பாடுகளை தானே முன் நின்று கவனித்தார். வேறு யார் அவளுக்கு உறவு என்று சொல்லிக் கொள்ள இருக்கிறார்கள்?

ரமோட்ஸ்வேக்கு, சிறு வயதிலிருந்தே ஓவியம் வரைவதில் விருப்பம் உண்டு. அதை அவளுடைய அத்தையும் ஊக்குவித்தாள். அவளது பத்தாவது பிறந்த நாளுக்கு, அவளுக்கு படம் வரைய கலர் பென்சில்களும், நோட்டுப் புத்தகமும் பரிசாகக் கொடுத்தார் ஓபட். சீக்கிரமே அவளுடைய திறமை வெளிப்பட ஆரம்பித்தது.

ஓபட், மகள் வரையும், கிராமத்துக் காட்சிகளைக் கண்டு, பெருமை தாங்காமல் தனக்குத் தெரிந்தவர்களிடம் எல்லாம் ஓவியங்களைக் காட்டி மகிழ்ந்தார். ரமோட்ஸ் வேக்கு இது கூச்சத்தைத் தந்தாலும், அப்பாவின் பெருமை அவளுக்குப் பிடித்திருந்தது.

அவளது பள்ளி ஆசிரியர்களும், அவளது ஓவியத் திறமையை பாராட்டி, 'ரமோட்ஸ்வே, பெரிய ஓவியராக வளர்வாள். அவளது ஓவியங்கள், போட்ஸ்வானா காலண்டரின் முகப்பில் வெளியிடப்படும் காலம் விரைவில் வரும்' என்று கூறினர். இதைக் கேட்டு, ரமோட்ஸ்வே உற்சாகத்தின் உச்சிக்கே போனாள்.

அவளது பள்ளி, குழந்தைகளுக்கான ஓவியப் போட்டி ஒன்றைப் பற்றிக் கேள்விப்பட்டது. காபரோன் மியூசியம், ஒவ்வொரு பள்ளியிலிருந்தும் ஓர்

ஓவியம் அனுப்பும் படியும், அப்போட்டியில் தேர்ச்சி பெற்ற இளம் ஓவியருக்குப் பரிசுகள் வழங்கப்படும் என்றும் அறிவித்திருந்தது. படத்தின் தலைப்பு போட்ஸ்வானாவின் இன்றைய வாழ்க்கை நிலை..'

யாருடைய படம் அனுப்பப்படும் என்பதில் சந்தேகமே இல்லை. ரமோட்ஸ்வே வரையும் ஓவியம், காபரோன் மியூசியத்துக்கு அந்தப் பள்ளியின் சார்பில் அனுப்பப்படும் என்று கூறினர்.

ரமோட்ஸ்வே ஒரு சனிக்கிழமை தன்னுடைய ஸ்கெட்ச், நோட்டுடன் சென்று, வெகு நேரம் கழித்து வீடு திரும்பினாள். படத்தின் இறுதிக்கட்ட வேலைகளை வீட்டிலேயே செய்து முடித்தாள்.

இது மிகவும் நன்றாக இருக்கிறது' என அவள் நினைத்தாள். உண்மையிலேயே அந்த ஓவியம், அற்புத மாக இருந்தது. திங்கட்கிழமை அவளது ஆசிரியை, அதைப் பார்த்து விட்டு, தலைகால் புரியாத அளவுக்கு ஆனந்தமடைந்தார்.

இந்த ஓவியம் நிச்சயம் பரிசு பெறும். இந்த ஊரில் உள்ளவர்களுக்கு எல்லாம் பெருமை தேடித் தரும் என்று உறுதியாகக் கூறினார்.

அந்த ஓவியம், இரண்டு அட்டைகளுக்கு நடுவில் பத்திர மாகக் கட்டப்பட்டு, பதிவுத் தபாலில், மியூசியத்துக்கு அனுப்பப்பட்டது. ஐந்து வாரங்களுக்கு பேச்சு மூச்சில்லை. அநேகமாக எல்லோருமே, போட்டியைப் பற்றி மறந்தே போய் விட்டனர். தலைமை ஆசிரியர், தனக்கு வந்த கடிதத்தை, மலர்ச்சியுடன்.. பள்ளி ஆரம்பிக்கும் முன், இறை வணக்கத்துக்குப் பின் படித்தபோதுதான் எல்லோருக்கும் நினைவு வந்தது.

ரமோட்ஸ்வே, உனக்கு முதல் பரிசு கிடைத் திருக்கிறது. c, நான், உன் ஆசிரியை, உன் தந்தை ஆகியோருடன் காபரோன் சென்று, கல்வித் துறை அமைச்சரிடமிருந்து பரிசை வாங்க வேண்டும் - தலைமையாசிரியர் கூற, ரமோட்ஸ்வே உணர்ச்சி மிகுதியில் அழுதே விட்டாள்.



நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jul 18, 2014 12:16 am



ரமோட்ஸ்வேயின் ஓவியம் ஒரு தனியான, பிரத்யேகமான இடத்தில் மாட்டப்பட்டிருந்தது. அதனுடன் ஒரு சிறிய அட்டையும் இணைக்கப் பட்டிருந்தது. ரமோட்ஸ்வே, ஆசிரியையுடன் சென்று அருகில் பார்த்தாள். அவளுடைய பெயர் அழகாக அச்சிடப்பட்டிருந்தது. மதிப்பு வாய்ந்த 'எம்மா ரமோட்ஸ்வே - மொச்சுடி அரசாங்க நடுநிலைப் பள்ளி' என்று அதன் அடியில் குறிக்கப்பட்டு அணைக்கட்டு அருகில் மந்தை' - இப்படி, கண்காட்சி அமைப்பாளர்களாலேயே தலைப்பும் கொடுக்கப்பட்டிருந்தது.

ரமோட்ஸ்வேயின் உற்சாகமெல்லாம் அப்படியே வடிந்து விட்டது. ஆடாமல், அசையாமல் சிலை போல நின்று விட்டாள். ஆடுகளின் படத்தை அவர்கள் மந்தை என நினைத்து விட்டார்கள். பொய்யான ஒரு எண்ணத்துக்கு அவள் பரிசு வாங்கப் போகிறாள். இந்த நினைவே, அவளை குப்புறத் தள்ளியது போல உணர்ந்தாள்.

ஒரு மந்தையின் படம் என்று அந்தப் பரிசைப் பெற அவள் விரும்பவில்லை. அமைச்சர், அவள் அருகே வந்து நின்றார். பேச ஆரம்பிக்கும் முன், அவளைப் பார்த்துப் புன்னகைத்தார்.

'நீ மிகச் சிறப்பான ஓவியர். உன்னால், உங்கள் ஊர் மிகவும் பெருமை யடையும்.

அவள் தலைகுனிந்து நின்றாள். இவரிடம் சொல்லியே ஆக வேண்டும் என்று எண்ணினாள்.

அந்தப் படம் மந்தையின் படம் இல்லை. ஆடுகளின் படம். ஒரு தவறுக்கு நான், பரிசு வாங்க முடியாது.

அமைச்சர், முகத்தைச் சுளுக்கியவாறு அட்டையைப் படித்தார்.

அதை எழுதியவர்கள் தான் தவறு செய்திருக் கிறார்கள். எனக்கும் அவை, ஆடுகள் மாதிரிதான் தெரிகிறது. அது மந்தை அல்ல.

அவர் பேச ஆரம்பித்தார். மியூசியத்தின் தலைவர் அவையினரை அமைதி காக்கும்படி வேண்டினார்.

ஆடுகளின் மிகச் சிறந்த இந்த ஓவியம், நம்முடைய இளைஞர்கள் எவ்வளவு திறமை உள்ளவர்கள் என்பதை நிரூபிக்கிறது. இந்தச் சிறுமி மிகச் சிறந்த குடிமகளாகவும், சிறந்த கலைஞராகவும் ஆவாள் என்பதில் சந்தேகமில்லை. இந்தப் பரிசுக்கு இவள் மிகவும் தகுதியுடையவள். ஆகவே நான், இவளுக்கு இப்பரிசை தருகிறேன்.

அவள், அழகாகக் கட்டப்பட்டிருந்த அந்தப் பரிசுப் பெட்டியை வாங்கிக் கொண்டாள். அமைச்சர், அவளது தோளில் தன் கரத்தை வைத்து, யாருக்கும் கேட்காத அடிக்குரலில் கூறினார்.. நான் பார்த்ததிலேயே மிகவும் நேர்மையான குழந்தை நீதான். மிக நல்லது.

விழா முடிந்ததும், எல்லோரும் தலைமை ஆசிரியரின் தடபுடா வண்டியில் மொச்சுடிக்குத் திரும்பினர்.

ஆம்.. நம் கதாநாயகி தனது ஓவியத்துக் காக மட்டுமின்றி, நாணயத்துக்காகவும் பரிசை வாங்கிக் கொண்டு திரும்பினாள். எம்மா ரமோட்ஸ்வே, தனது பதினாறு வயதில் படிப்பை முடித்தாள். இந்தப் பள்ளியின் மிகச் சிறந்த மாணவி, போட்ஸ்வானாவிலேயே சிறந்த பெண் இப்படி ரமோட்ஸ்வேயின் தலைமை ஆசிரியர், அவளைப் புகழ்ந்தார். அவள் தந்தை ஓபட்டுக்கு, மகள் மேலும் படிக்க வேண்டும். அதுவும் கேம்பிரிட்ஜ் பள்ளியில் படித்து, அதற்கு மேலும் படிக்க வேண்டும் என்று ஆசை.. ஆனால், ரமோட்ஸ்வேக்கு மொச்சுடியில் இருப்பது மிகவும் சலிப்பாக இருந்தது. அவளுக்கு ஒவ்வொரு சனிக்கிழமையும் மளிகைக் கடையில் வேலை பார்ப்பதும், கணக்கு வழக்குகளைச் சரி பார்ப்பதும் மிகவும் அலுப்பாக இருந்தது. எங்கே யாவது சென்று, புதிதாக வாழ்க்கையைத் தொடங்க வேண்டும் என்று ஆசைப் பட்டாள்.



நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jul 18, 2014 12:16 am



நீ வேண்டுமானால் உன் அத்தை வீட்டுக்குச் சென்று வா. அங்கே, எல்லாமே மாறுதலாக இருக்கும். வீட்டிலும் விருந்துகள், கேளிக்கைகள் இப்படி ஏதாவது இருந்து கொண்டே இருக்கும். இதைச் சொல்லும்போது, ஓபட்டுக்கு மனசு வலிக்கத் தான் செய்தது. மகள் தன்னுடனேயே இருந்து, தன்னை கவனித்துக் கொண்டாலே போதும் என்றுதான் அவர் நினைத்தார். ஆனால், அவளை அப்படி தன்னுடன் இருக்கச் சொல்லி வற்புறுத்துவது சுயநலம் என்பதும் அவருக்குத் தெரிந்திருந்தது. ஆனால், ரமோட்ஸ்வேக்கு சுதந்திரம் தேவைப்பட்டது. வாழ்க்கையில் உருப்படியாக எதையாவது செய்ய வேண்டும் என்கிற எண்ணம் அவளுக்கு இருந்தது. மகளுக்குத் திருமணம் செய்து பார்க்க வேண்டும் என்கிற எண்ணமும், சீக்கிரமே அவளைப் பெண் கேட்டு ஆண்கள் வருவார்கள் என்கிற விஷயமும் ஓபட்டுக்கு தோன்றியது.

அதை நிச்சயம் அவர் தடுக்க மாட்டார். ஆனால், அவளை மணப்பவன் குடிகாரனாகவோ, கொடுமைப் படுத்துபவனாகவோ, பெண் பித்தனாகவோ இருந்து விட்டால்.. என்ன செய்வது?

இதெல்லாம் நடக்கக் கூடியதுதானே.. எத்தனை ஆண்பிள்ளைகள், அழகான பெண்களைக் கட்டிக் கொண்டு, அவர்கள் வாழ்க்கையை உருக்குலைக்கிறார்கள். அவர்கள், அட்டைப்பூச்சி போன்று பெண்களின் நல்ல குணங்களை எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக உறிஞ்சி, அவர்களை நடமாடும் ஜடமாகச் செய்து, நாசமாக்கி விடுகிறார்கள். இதற்கு கால அவகாசம் நிறைய ஆகும். ஏனெனில், பெண்களிடம் நிறைய நற்குணங்களும் பண்புகளும் படிந்திருக்கின்றன.

சரி, அப்படியே யாராவது ரமோட்ஸ்வேயைத் திருமணம் செய்ய விரும்பி வந்தால், என்ன செய்ய வேண்டும்?

ரமோட்ஸ்வேயை எச்சரிக்கை செய்யலாம்..

ஆனால், காதலில் விழுந்தவர்கள் யாராவது, பெற்றவர் களின் எச்சரிக்கையை இதுவரையில் லட்சியம் செய்திருக் கிறார்களா..

காதல் என்பது ஒரு வகை குருட்டுத் தன்மையானது தான். வெளிப்படையாகத் தெரியும் குறைகளைக் கூட பார்வையிலிருந்து மறைத்து விடும். ஒரு கொலை காரனையே காதலித்தாலும், தன் காதலன் ஒரு சிறு எறும்பைக் கூட நசுக்க மாட்டான் என்றுதான் காதலிப்பவள் சொல்லுவாள். யார் சொல்வதையும் நம்ப மாட்டாள். காதலிக்க ஆரம்பித்து விட்டால், அவர்களை யாராலும் தடுத்த நிறுத்த முடியாது.

ஓபட்டுக்கு, தன் சகோதரியின் வீடு ரமோட்ஸ்வேயை ஆண்களிடமிருந்து காப்பாற்றா விட்டாலும், ஓரளவுக்கு பத்திரமாகப் பாதுகாக்கும் என்கிற நம்பிக்கை இருந்தது. தன் தங்கை, இவள் மீது ஒரு கண் வைத்துக் கொள்வாள். தகுதியில்லாத ஆண்கள் வந்தால், தங்கையின் கணவன் அருகில் நெருங்க விட மாட்டார். அடித்துத் துரத்தி விடுவார். இப்பொழுது அவரிடம் ஐந்து பஸ்கள் இருந்ததால், பணக்காரர்களுக்கே உரிய ஆள், படை, அதிகாரமும் நிறையவே இருந்தது. சில இளைஞர்களை யாவது அவரால் திரும்பிப் போகச் செய்ய முடியும்.

ரமோட்ஸ்வேயின் அத்தைக்கு, அவள் வருவது அறிந்து மகிழ்ச்சி தாங்கவில்லை. அவளுக்காக ஒரு அறையைச் சுத்தம் செய்து, பெரிய கடையில் வாங்கிய தடிமனான மஞ்சள் திரைச் சீலைகளைக் கொண்டு அலங்கரித்திருந்தாள். இதற்காக அவள், ஜோஹனஸ்பர்க் போய் துணி வாங்கி வந்தாள்.

மேஜையின் இழுப்பறைகளில் அவளுக்குத் தேவை யான துணிமணிகளை நிரப்பி, அதன் மீது போப் ஆண்டவரின் படம் ஒன்றை வைத்தாள். தரை மீது எளிமையான பாய் விரிக்கப்பட்டது. அந்த அறையே வசதியாக, வெளிச்சமாக, பளிச்சென இருந்தது.

ரமோட்ஸ்வே வெகு சீக்கிரத்தில் புதிய வாழ்க்கைக்குப் பழகி விட்டாள். அத்தை கணவரின் பஸ் கம்பெனியி லேயே விலைப் பட்டியலைக் கூட்டுவது, ஓட்டுநர்களின் குறிப்புகளைப் பார்வையிடுவது போன்ற வேலைகள், அவளுக்குத் தரப்பட்டன. அத்தையின் கணவர், இரண்டு குமாஸ்தாக்கள் செய்யும் வேலையை இவள் ஒருத்தியே திறம்படச் செய்வதைக் கவனித்தார். அந்த குமாஸ்தாக்கள் நாள் முழுக்க வம்பு பேசிக் கொண்டிருப்பதும், எப்பொழு தாவது விலைப்பட்டியலைப் பார்ப்பதும், எப்பொழு தாவது தேநீருக்கு ஏற்பாடு செய்வதுமாகப் பொழுதைக் கழித்தனர்.

ரமோட்ஸ்வேக்கு, அவளுடைய ஞாபக சக்தியினாலும், புத்திசாலித்தனத்தினாலும், புதிய உத்திகளைக் கையாண்டு வேலைகளைச் செய்வது என்பது சுலபமான விளையாட் டாக இருந்தது. அதனால் தானே மனமுவந்து பல யோசனைகளைக் கூறினாள்.

நீங்கள் அதிகம் வேலை செய்கிறீர்கள். எங்களுடைய வேலைகளையும் எடுத்துக் கொள்ளப் பார்க்கிறீர்கள்.. - இப்படி அந்த குமாஸ்தாக்கள் குறை கூறினர்.

பஸ் ஆபீசில் சுமார் நான்கு ஆண்டுகள் வேலை செய்தாள் ரமோட்ஸ்வே. அத்தையும், அவள் கணவரும் ரமோட்ஸ்வேயை தங்கள் மகள் என்றே சொல்லிக் கொண்டனர். அதை ரமோட்ஸ்வேயும் மறுக்கவில்லை. அவர்கள், அவளுடைய மனிதர்கள். அவளை மிகவும் நேசிக்கிற, பாசம் மிகுந்த மனிதர்கள். அத்தை, அவளை வெளிமனிதர்கள் முன்பு உரிமையுடன் கோபித்துக் கொண்டாலும், அவள் தன் குழந்தையாக ரமோட்ஸ் வேயை எண்ணியதால், ரமோட்ஸ்வேக்கும் அவளிடம் கொள்ளை பிரியம். அவள் தன் அத்தை கணவரின் சிரிப் பில்லாத முகத்தையும், காயம் பட்ட தழும்புகளையும், உழைக்கும் கரங்களையும் கூட நேசித்தாள். மஞ்சள் திரைச்சீலையுடன் விளங்கும் அவளது அறையையும் அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது. அது அவளே அமைத்துக் கொண்ட நல்ல வாழ்க்கையாக இருந்தது.

ஒவ்வொரு வாரக் கடைசியிலும் அவள், அத்தை கணவரின் பஸ்ஸில் மொச்சுடி போய், தந்தையைப் பார்த்து வந்தாள். வீட்டுக்கு வெளியே சிறிய நாற்காலியில் உட்கார்ந்திருப்பார் ஓபட். அவள், வழக்கப்படி வணங்கி, கையைத் தட்டுவாள். (பெரியவர்களைக் கண்டால் இப்படி வணங்கி, கைதட்டுவது அவர்களது சம்பிரதாயம்).

பிறகு இருவரும் வீட்டின் ஒரு பக்கத்தில் எழுப்பி யிருந்த வெராந்தாவில் உட்கார்ந்தபடி உணவருந்துவார்கள். அந்த வாரத்தில், ஆபீசில் நடந்த சம்பவங்களை அவள் கூறுவாள். அவர், அதை உன்னிப்பாகக் கேட்பார். ஒவ்வொருவர் பெயரையும் கேட்டு, அவர்களது சுற்றி வளைத்த சொந்தங்களைப் பற்றிக் கூறுவார். அங்கு எல்லோருமே ஒருவருக்கொருவர் ஏதோ ஒரு வழியில் உறவினராகத்தான் இருக்க முடியும்.



நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 1 of 9 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக