புதிய பதிவுகள்
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Today at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Today at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
by ayyasamy ram Today at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Today at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
bala_t | ||||
prajai | ||||
rajuselvam | ||||
Kavithas |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
manikavi | ||||
Kavithas |
நிகழ்நிலை நிர்வாகிகள்
40 தொகுதிகளின் நிலவரம்
Page 4 of 4 •
Page 4 of 4 • 1, 2, 3, 4
First topic message reminder :
தேர்தல் கமிஷன் லிஸ்டில், தமிழகத்தின் முதல் தொகுதி திருவள்ளூர்!
இங்கு தி.மு.க. கூட்டணி சார்பில் விடுதலைச் சிறுத்தைகளின் துரை.ரவிக்குமாரும், அ.தி.மு.க. சார்பில் வேணுகோபாலும், பி.ஜே.பி. கூட்டணியில் தே.மு.தி.க. வேட்பாளர் யுவராஜும் காங்கிரஸ் சார்பில் வேட்பாளர் விக்டரி ஜெயக்குமாரும் களமிறங்கியிருக்கிறார்கள்.
வேட்புமனு இறுதி செய்யும் சமயத்தில்தான் விடுதலைச் சிறுத்தைகள் வேட்பாளர் ரவிக்குமாருக்கு சின்னம் கிடைத்தது. அதுவரை வேட்பாளர் பெயரை மட்டுமே சொல்லி வாக்குகளைக் கேட்டது, ரவிக்குமாருக்கு மைனஸ். கூட்டணிக் கட்சிகளின் ஒத்துழைப்பு சரிவரக் கிடைக்காதது இன்னொரு மைனஸ். திருவள்ளூர் தொகுதி தி.மு.க-வுக்குக் கிடைக்காத அதிருப்தியில், இன்னும் சில நிர்வாகிகள் இருக்கத்தான் செய்கிறார்கள். பிரசாரத்துக்கு ஸ்டாலின் வந்து சென்ற பின்னரே ஒத்துழைப்பு கிடைத்தது.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு அடுத்த மைனஸ், புரட்சி பாரதம் கட்சியினர். திருவள்ளூரில் விடுதலைச் சிறுத்தைகள் வெற்றிபெறக் கூடாது என்ற முனைப்புடன் அவர்கள் அ.தி.மு.க-வுக்காக சுறுசுறுப்புடன் வேலைபார்த்து வருகிறார்கள். தொகுதியில் நிலவும் மின்வெட்டுப் பிரச்னை, வேலைவாய்ப்பின்மை ஆகியவற்றை முன்னிலைப்படுத்தி வாக்கு சேகரிக்கும் தி.மு.க. கூட்டணி, அது நிச்சயம் பலன் கொடுக்கும் என்று நம்புகின்றனர்.
சிட்டிங் எம்.பி-யான வேணுகோபால்தான் அ.தி.மு.க. வேட்பாளர். இந்தத் தொகுதியில் செய்த பணிகளை ஒவ்வொரு பிரசாரத்திலும் பட்டியலிடுகிறார். சிரித்த முகத்துடன் கட்சியில் எல்லோரையும் அனுசரித்து செல்வது வேணுகோபாலுக்கு ப்ளஸ்.
தே.மு.தி.க. வேட்பாளர் யுவராஜ் வட சென்னை மாவட்டச் செயலாளராக இருப்பதால், தே.மு.தி.க-வினர் முழுவீச்சில் இவருடைய வெற்றிக்காகப் பாடுபடுகிறார்கள். அதோடு கூட்டணிக் கட்சியினரும், மோடி அலையும் தங்களுக்கு ப்ளஸ் என்கிறார்கள். புதிய வாக்காளர்களும் இளைஞர்களும் நிச்சயம் முரசைக் கொட்டுவார்கள் என்ற நம்பிக்கை ஆணித்தரமாக யுவராஜுக்கு உள்ளது.
உள்ளூர் மைந்தன் என்ற முகவரியுடன் களமிறங்கிருக்கிறார் காங்கிரஸ் வேட்பாளர் விக்டரி ஜெயக்குமார். ஆவடியில் தனிப்பட்ட செல்வாக்கு கொண்ட இவர், தொகுதி மக்கள் மத்தியில் ஓரளவுக்குப் பிரபலமானவர். கணிசமான வாக்குகளை வாங்குவார். கூட்டிக் கழித்து கணக்குப் போட்டுப் பார்த்தால், மோதிரம் டாலடிப்பதைவிட இரட்டை இலையே துளிர்க்கும் நிலை இந்தத் தொகுதியில் தெரிகிறது.
தேர்தல் கமிஷன் லிஸ்டில், தமிழகத்தின் முதல் தொகுதி திருவள்ளூர்!
இங்கு தி.மு.க. கூட்டணி சார்பில் விடுதலைச் சிறுத்தைகளின் துரை.ரவிக்குமாரும், அ.தி.மு.க. சார்பில் வேணுகோபாலும், பி.ஜே.பி. கூட்டணியில் தே.மு.தி.க. வேட்பாளர் யுவராஜும் காங்கிரஸ் சார்பில் வேட்பாளர் விக்டரி ஜெயக்குமாரும் களமிறங்கியிருக்கிறார்கள்.
வேட்புமனு இறுதி செய்யும் சமயத்தில்தான் விடுதலைச் சிறுத்தைகள் வேட்பாளர் ரவிக்குமாருக்கு சின்னம் கிடைத்தது. அதுவரை வேட்பாளர் பெயரை மட்டுமே சொல்லி வாக்குகளைக் கேட்டது, ரவிக்குமாருக்கு மைனஸ். கூட்டணிக் கட்சிகளின் ஒத்துழைப்பு சரிவரக் கிடைக்காதது இன்னொரு மைனஸ். திருவள்ளூர் தொகுதி தி.மு.க-வுக்குக் கிடைக்காத அதிருப்தியில், இன்னும் சில நிர்வாகிகள் இருக்கத்தான் செய்கிறார்கள். பிரசாரத்துக்கு ஸ்டாலின் வந்து சென்ற பின்னரே ஒத்துழைப்பு கிடைத்தது.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு அடுத்த மைனஸ், புரட்சி பாரதம் கட்சியினர். திருவள்ளூரில் விடுதலைச் சிறுத்தைகள் வெற்றிபெறக் கூடாது என்ற முனைப்புடன் அவர்கள் அ.தி.மு.க-வுக்காக சுறுசுறுப்புடன் வேலைபார்த்து வருகிறார்கள். தொகுதியில் நிலவும் மின்வெட்டுப் பிரச்னை, வேலைவாய்ப்பின்மை ஆகியவற்றை முன்னிலைப்படுத்தி வாக்கு சேகரிக்கும் தி.மு.க. கூட்டணி, அது நிச்சயம் பலன் கொடுக்கும் என்று நம்புகின்றனர்.
சிட்டிங் எம்.பி-யான வேணுகோபால்தான் அ.தி.மு.க. வேட்பாளர். இந்தத் தொகுதியில் செய்த பணிகளை ஒவ்வொரு பிரசாரத்திலும் பட்டியலிடுகிறார். சிரித்த முகத்துடன் கட்சியில் எல்லோரையும் அனுசரித்து செல்வது வேணுகோபாலுக்கு ப்ளஸ்.
தே.மு.தி.க. வேட்பாளர் யுவராஜ் வட சென்னை மாவட்டச் செயலாளராக இருப்பதால், தே.மு.தி.க-வினர் முழுவீச்சில் இவருடைய வெற்றிக்காகப் பாடுபடுகிறார்கள். அதோடு கூட்டணிக் கட்சியினரும், மோடி அலையும் தங்களுக்கு ப்ளஸ் என்கிறார்கள். புதிய வாக்காளர்களும் இளைஞர்களும் நிச்சயம் முரசைக் கொட்டுவார்கள் என்ற நம்பிக்கை ஆணித்தரமாக யுவராஜுக்கு உள்ளது.
உள்ளூர் மைந்தன் என்ற முகவரியுடன் களமிறங்கிருக்கிறார் காங்கிரஸ் வேட்பாளர் விக்டரி ஜெயக்குமார். ஆவடியில் தனிப்பட்ட செல்வாக்கு கொண்ட இவர், தொகுதி மக்கள் மத்தியில் ஓரளவுக்குப் பிரபலமானவர். கணிசமான வாக்குகளை வாங்குவார். கூட்டிக் கழித்து கணக்குப் போட்டுப் பார்த்தால், மோதிரம் டாலடிப்பதைவிட இரட்டை இலையே துளிர்க்கும் நிலை இந்தத் தொகுதியில் தெரிகிறது.
நெற்களஞ்சியமான தஞ்சையில் இரட்டை இலை, உதயசூரியன், தாமரை, கை, அரிவாள் சுத்தியல் ஆகியவை களம் காண்கின்றன. இருந்தாலும் இலைக்கும் சூரியனுக்கும் இடையில்தான் போட்டி!
டெல்டாவில் பிரதான தொழில் விவசாயம். 'விவசாய ந¤லங்களை பாலைவனமாக்கும் மீத்தேன் வாயுத் திட்டம் வரக் காரணம் யார்?’ என்று தி.மு.க-வும் அ.தி.மு.க-வும் மாறி மாறி போஸ்டர் யுத்தம் நடத்துகின்றன. 'நம்மாழ்வார் உயிரோடு இருந்திருந்தால், தி.மு.க-வை எதிர்த்து போட்டியிட்டு இருப்பார். நாம் அதைச் செய்ய வேண்டும்’ என்ற சீமானின் பிரசாரம் டெல்டா விவசாய சங்கங்களை உசுப்பிவிட்டிருக்கிறது. பழனிமாணிக்கத்துக்கு மீண்டும் சீட் ஒதுக்காதது, தஞ்சையில் தி.மு.க. வெல்லக் கூடாது என்று மு.க.அழகிரி உறுதியாக இருப்பது ஆகியவை தி.மு.க-வுக்குப் பின்னடைவை ஏற்படுத்தி இருக்கின்றன. அ.தி.மு.க. வேட்பாளர் கு.பரசுராமன், சொந்தக் கட்சியினரிடையே அதிகம¢ அறிமுகம் இல்லாதவர். 'அபாயப் பட்டியலில் தஞ்சை இருக்கிறது’ என்று உளவுத் துறை ரிப்போர்ட் கொடுக்க, கடுமையான கோபத்தை ஏரியா அமைச்சர் வைத்திலிங்கத்திடம் தலைமை காட்டியதாம். அதனை அடுத்து வைத்திலிங்கம், 'கோஷ்டிப் பூசல்களை மறந்துவிடுங்கள்’ என¢று கட்சியினரை சமாதானப்படுத்தியதோடு, ஒவ்வொரு பஞ்சாயத்துக்கும் நேரடியாக சென்று ஓட்டுக் கேட்டுவருவது, அ.தி.மு.க-வினரை உற்சாகப்படுத்தி இருக்கிறது.
காங்கிரஸ் வேட்பாளர் கிருஷ்ணசாமி வாண்டையாரின் தந்தை துளசி அய்யா வாண்டையார் இங்கே எம்.பி-யாக இருந்திருக்கி¢றார். இவருக்கு சொந்தமான பூண்டி புஷ்பம் கல்லூரியில் மாணவர்களுக்கு டொனேஷன் இல்லாமல் சீட் தருவதால், கல்விக் காவலர் என¢ற பட்டம் உண்டு. கட்சியையும் தாண்டி தனிப்பட்ட செல்வாக்கு உண்டு. அவரது திரைமறைவு தேர்தல் வேலைகள் கை கொடுப்பதால், கணிசமான வாக்குகள் கிடைக்கும். சி.பி.எம். வேட்பாளர் தமிழ்ச்செல்விக்கு கட்சி ஓட்டுக்கள் சிந்தாமல் சிதறாமல் கிடைக்கும்.
பி.ஜே.பி. சார்பில் கருப்பு முருகானந¢தம் களத்தில் இருக்கிறார். தஞ்சையில் பா.ம.க. ஓட்டுக்கள் அதிகம் இல்லை. தே.மு.தி.க., ம.தி.மு.க. ஓட்டுக்கள் மட்டுமே சுமாராக உள்ளன. ராஜ்நாத்சிங் பிரசாரம் கொஞ்சம் கை கொடுத்துள்ளது.
இந்தா பிடி அந்தா பிடி என்று இழுபறியாக இருந்தாலும், கடைசி நேரத்தில் இலையை சூரியன் முந்தவே வாய்ப்பு அதிகம்.
முல்லை பெரியாறுக்காக உக்கிர போராட்டம் நடத்திய தொகுதி தேனி.
அ.தி.மு.க. சார்பில் பார்த்திபனும் தி.மு.க. சார்பில் பொன்.முத்துராமலிங்கமும் ம.தி.மு.க. சார்பில் அழகுசுந்தரமும் காங்கிரஸ் சார்பில் ஜே.எம்.ஆரூணும் களத்தில் நிற்கிறார்கள்.
பார்த்திபனின் பிரசாரத்தில் வேகம் இல்லை. ஓ.பன்னீர்செல்வம் தனது மகனுக்காக இந்தத் தொகுதியை எதிர்பார்த்து இருந்தார். ஆனால் கிடைக்கவில்லை. ஓ.பி.எஸ். மகன் நின்றிருந்தால் பிரசாரம் கடுமையாக இருந்திருக்கும். பார்த்திபனுக்கு ஒப்புக்காகத்தான் அனைவரும் வேலை பார்க்கிறார்கள். குடிக்க நீர் இல்லை என்பது தொகுதியில் பெரிய பிரச்னையாக இருக்கிறது. விவசாயத்துக்குத் தண்ணீர் கொண்டுவர வெட்டிய 58-ம் கால்வாய் அ.தி.மு.க-வின் வில்லனாக மாறிவிட்டது. ஆனாலும் எம்.ஜி.ஆர். காலத்து இரட்டை இலை பக்தி இன்னும் அப்படியே இருக்கும் தொகுதி என்பதால், அந்த வாக்காளர்கள் இதுபற்றி அதிகம் கவலைப்படுபவர்களாக இல்லை. அதுதான் அ.தி.மு.க-வின் பெரிய பலம்.
தி.மு.க. சார்பில் நிற்கும் பொன்.முத்துராமலிங்கம், மதுரையிலேயே அரசியல் செய்தவர். மாவட்டச் செயலாளர் மூக்கையாவும் இவரை அலட்சியமாகப் பார்க்கிறார். அழகிரியின் குடைச்சல் அதிகம். இதனால் அவருக்குப் பிரசாரம் பண்ணுவதற்குக்கூட யாரும் வருவது இல்லை. பழைய அறிமுகங்களை வைத்து பிரசாரம் செய்கிறார்.
ம.தி.மு.க-வுக்காகப் பம்பரமாய் சுழல்வது இளைஞர்கள்தான். முல்லை பெரியாறு பிரச்னைக்காக தொடர்ந்து மாநில எல்லையில் போராட்டம் நடத்தியதை ம.தி.மு.க-வினர் தெருத்தெருவாகச் சொல்கிறார்கள். 'ம.தி.மு.க-வைத் தோற்கடிக்க கேரள தொழில் அதிபர்கள் பணத்தை இறக்கி இருக்கிறார்கள்’ என்று வைகோ சொன்னதும் இந்தத் தொகுதியில் உஷ்ணத்தை ஏற்படுத்தி இருக்கிறது. போட்டியே அ.தி.மு.க-வுக்கும் ம.தி.மு.க-வுக்கும்தான்.
வாக்காளர்களுக்கு 'செக்’ வைத்து தனக்கே உரித்தான பாணியில் கவர்கிறார் காங்கிரஸ் வேட்பாளர் ஜே.எம்.ஆரூண். முஸ்லிம் வாக்குகளையும் அதற்கு அடுத்தபடியாக தேவேந்திரகுல வேளாளர்கள் சமுதாயம், குரும்ப கவுண்டர்கள் வாக்குகளைக் கவர பல வித்தைகளை காட்டுகிறார் ஆரூண்.
அ.தி.மு.க-வின் கோட்டை ஆண்டிபட்டி. இரண்டு லட்சம் ஓட்டுகள் அங்கு அ.தி.மு.க-வுக்கு நிரந்தரம். அதனால், தேனி தொகுதியில் அ.தி.மு.க-வின் வெற்றியும் நிரந்தரம்.
பட்டாசுக்கும் பரோட்டாவுக்கும் பெயர்போன தொகுதி விருதுநகர். வைகோ இங்கே போட்டியிடுவதால் ஒட்டுமொத்த இந்தியாவும் கவனிக்கும் தொகுதியாகிவிட்டது.
சிவகாசியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் அ.தி.மு.க. சார்பிலும், தி.மு.க-வில் தொழிலதிபர் ரத்தினவேலுவும் களமிறங்கியுள்ளனர். காங்கிரஸ் கட்சியில் சிட்டிங் எம்.பி. மாணிக்கம் தாகூரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் சாமுவேல்ராஜும் வேட்பாளர்கள்.
ஆரம்பத்தில் இருந்தே தேர்தல் வேலைகளில் சுறுசுறுவென களமிறங்கினார் அ.தி.மு.க. வேட்பாளர். ஆனால் தொகுதிக்குள் பிரதானமாக இருக்கும் மின்வெட்டு, குடிநீர் பிரச்னைகளால் சோர்ந்துவிட்டார். பல இடங்களில் எதிர்ப்புகள் கிளம்ப... என்ன செய்வது எனத் தெரியாமல் விழிபிதுங்கி நிற்கிறார். ஆனாலும், இலைக்காக இருக்கும் ஓட்டு தன்னைக் காப்பாற்றும் என்பது அவரது நம்பிக்கை.
ம.தி.மு.க. வேட்பாளரான வைகோ, கடந்த முறை இந்தத் தொகுதியில் தோற்கடிக்கப்பட்டார். அந்த அனுதாபம் மக்களிடம் நிறையவே இருக்கிறது. நல்ல வேட்பாளர் என்ற இமேஜும் மக்களிடம் இருப்பதைப் பார்க்க முடிகிறது. 'மோடி தலைமையிலான ஆட்சி அமையும்போது, வைகோ அதில் முக்கிய இடம் பிடிப்பார். அதனால், தொகுதிக்கு நல்லது நடக்கும்’ என்று தொகுதிக்குள் பரவலான பேச்சு இருக்கிறது. இதுதான் வைகோவின் ப்ளஸ். உள்ளூர் பட்டாசுத் தொழிலுக்கு சவாலாக சீன பட்டாசு பிரச்னை. 'வைகோ வந்தால்தான் அதனைத் தடுக்க முடியும்’ என்ற நம்பிக்கை பட்டாசு அதிபர்கள், தொழிலாளர்கள் மத்தியில் உருவாகிவிட்டது.
தி.மு.க. வேட்பாளர் ரத்தினவேலுக்காக, விருதுநகரைச் சேர்ந்த வர்த்தக பிரமுகர்கள் களத்தில் இறங்கி வேலை செய்கின்றனர்.
தி.மு.க. கூட்டணியில் உள்ள புதிய தமிழகம் மற்றும் சிறுபான்மை மக்களான முஸ்லிம் மற்றும் கிறிஸ்துவர்கள் ஓட்டுக்களும் அவருக்குக் கிடைக்கும் என்பது தி.மு.க-வினரின் நம்பிக்கை. அத்துடன் பண விஷயத்திலும் தாராளம் காட்டிவருகிறார் ரத்தினவேல்.
அ.தி.மு.க., தி.மு.க-வுக்கு ஈடுகொடுத்து தேர்தல் வேலைகளைச் செய்துவருகிறார் காங்கிரஸ் வேட்பாளரும், சிட்டிங் எம்.பி-யுமான மாணிக்கம் தாகூர். இவர் முக்குலத்தோர் சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பதால், கணிசமாக உள்ள அந்த சமுதாய வாக்குகள் மாணிக்கம் தாகூருக்குக் கிடைக்க வாய்ப்பு உண்டு. இந்தத் தொகுதியில் வெற்றி - தோல்வியை நிர்ணயிக்கும் சக்தியாக காங்கிரஸ் கட்சி இருக்கும் என்பதே உண்மை. அ.தி.மு.க-வுக்கு போக வேண்டிய வாக்குகளை கணிசமாக இவர் பிரிப்பார் என்கிறார்கள்.
தீப்பெட்டித் தொழிலாளர்கள் நிறைந்த இந்தத் தொகுதியில் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் குறிப்பிட்ட வாக்கு வங்கி உண்டு. தீண்டாமை ஒழிப்பு, சமூகப் பிரச்னைகளைக் கையிலெடுத்துப் போராடும் கம்யூனிஸ்ட்களுக்குக் கணிசமான வாக்குகள் கிடைக்கும் என எதிர்பார்க்கிறார்கள்.
கடைசிகட்ட நிலவரப்படி, டெல்லிக்கு கிளம்பத் தயாராகிறார் வைகோ!
சிவகாசியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் அ.தி.மு.க. சார்பிலும், தி.மு.க-வில் தொழிலதிபர் ரத்தினவேலுவும் களமிறங்கியுள்ளனர். காங்கிரஸ் கட்சியில் சிட்டிங் எம்.பி. மாணிக்கம் தாகூரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் சாமுவேல்ராஜும் வேட்பாளர்கள்.
ஆரம்பத்தில் இருந்தே தேர்தல் வேலைகளில் சுறுசுறுவென களமிறங்கினார் அ.தி.மு.க. வேட்பாளர். ஆனால் தொகுதிக்குள் பிரதானமாக இருக்கும் மின்வெட்டு, குடிநீர் பிரச்னைகளால் சோர்ந்துவிட்டார். பல இடங்களில் எதிர்ப்புகள் கிளம்ப... என்ன செய்வது எனத் தெரியாமல் விழிபிதுங்கி நிற்கிறார். ஆனாலும், இலைக்காக இருக்கும் ஓட்டு தன்னைக் காப்பாற்றும் என்பது அவரது நம்பிக்கை.
ம.தி.மு.க. வேட்பாளரான வைகோ, கடந்த முறை இந்தத் தொகுதியில் தோற்கடிக்கப்பட்டார். அந்த அனுதாபம் மக்களிடம் நிறையவே இருக்கிறது. நல்ல வேட்பாளர் என்ற இமேஜும் மக்களிடம் இருப்பதைப் பார்க்க முடிகிறது. 'மோடி தலைமையிலான ஆட்சி அமையும்போது, வைகோ அதில் முக்கிய இடம் பிடிப்பார். அதனால், தொகுதிக்கு நல்லது நடக்கும்’ என்று தொகுதிக்குள் பரவலான பேச்சு இருக்கிறது. இதுதான் வைகோவின் ப்ளஸ். உள்ளூர் பட்டாசுத் தொழிலுக்கு சவாலாக சீன பட்டாசு பிரச்னை. 'வைகோ வந்தால்தான் அதனைத் தடுக்க முடியும்’ என்ற நம்பிக்கை பட்டாசு அதிபர்கள், தொழிலாளர்கள் மத்தியில் உருவாகிவிட்டது.
தி.மு.க. வேட்பாளர் ரத்தினவேலுக்காக, விருதுநகரைச் சேர்ந்த வர்த்தக பிரமுகர்கள் களத்தில் இறங்கி வேலை செய்கின்றனர்.
தி.மு.க. கூட்டணியில் உள்ள புதிய தமிழகம் மற்றும் சிறுபான்மை மக்களான முஸ்லிம் மற்றும் கிறிஸ்துவர்கள் ஓட்டுக்களும் அவருக்குக் கிடைக்கும் என்பது தி.மு.க-வினரின் நம்பிக்கை. அத்துடன் பண விஷயத்திலும் தாராளம் காட்டிவருகிறார் ரத்தினவேல்.
அ.தி.மு.க., தி.மு.க-வுக்கு ஈடுகொடுத்து தேர்தல் வேலைகளைச் செய்துவருகிறார் காங்கிரஸ் வேட்பாளரும், சிட்டிங் எம்.பி-யுமான மாணிக்கம் தாகூர். இவர் முக்குலத்தோர் சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பதால், கணிசமாக உள்ள அந்த சமுதாய வாக்குகள் மாணிக்கம் தாகூருக்குக் கிடைக்க வாய்ப்பு உண்டு. இந்தத் தொகுதியில் வெற்றி - தோல்வியை நிர்ணயிக்கும் சக்தியாக காங்கிரஸ் கட்சி இருக்கும் என்பதே உண்மை. அ.தி.மு.க-வுக்கு போக வேண்டிய வாக்குகளை கணிசமாக இவர் பிரிப்பார் என்கிறார்கள்.
தீப்பெட்டித் தொழிலாளர்கள் நிறைந்த இந்தத் தொகுதியில் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் குறிப்பிட்ட வாக்கு வங்கி உண்டு. தீண்டாமை ஒழிப்பு, சமூகப் பிரச்னைகளைக் கையிலெடுத்துப் போராடும் கம்யூனிஸ்ட்களுக்குக் கணிசமான வாக்குகள் கிடைக்கும் என எதிர்பார்க்கிறார்கள்.
கடைசிகட்ட நிலவரப்படி, டெல்லிக்கு கிளம்பத் தயாராகிறார் வைகோ!
இலங்கை கடற்படையின் தாக்குதலுக்கு தமிழக மீனவர்கள் உள்ளாகி பரபரப்பு செய்திகளில் அடிக்கடி இடம் பிடிக்கும் தொகுதி ராமநாதபுரம்.
வாழ்வாதாரத்தை இழந்து வாடும் லட்சகணக்கான மீனவர்கள், வானம் பார்த்த பூமியை நம்பியிருக்கும் விவசாயிகள், அடுத்த வேளை உணவுக்காகப் போராடும் நெசவாளர்கள், பிரச்னைகளுக்கு மத்தியில் வாழும் தலித்துகள்... இதுதான் ராமநாதபுரம் தொகுதியின் நிலைமை.
முக்குலத்தோர், தலித்துகளுக்கு அடுத்த இடத்தில் இருக்கும் இஸ்லாமிய வாக்குகளை நம்பி அன்வர்ராஜாவை களம் இறக்கியிருக்கிறது அ.தி.மு.க. இங்கு தீர்க்கப்படாத சிக்கல்கள் ஏராளம். இதனால் அன்வர்ராஜா சந்தித்து வரும் பிரச்னைகளும் தாராளம். கடந்த முறை 20 மாதங்கள் மாநில அமைச்சராக இருந்தும் தொகுதிக்கு உருப்படியான திட்டங்களைக் கொண்டுவரவில்லை என்கிற குறை மக்களிடம் இருக்கிறது. தொண்டர்களிடம் நெருங்கிப் பழகாதது, யாருக்கும் எந்த உதவியும் செய்யாமல் எந்த சமயத்திலும் பாக்கெட்டை காலியாகவே வைத்திருப்பது கட்சியினரை முகம் சுழிக்க வைக்கிறது.
இதுபோதாது என்று முதுகுளத்தூர் தொகுதியில் நிலவிவரும் கடும் குடிநீர் தட்டுப்பாடு, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மீதான கோபம், தேவர் குருபூஜையின்போது அரசு விதித்த கட்டுப்பாடுகளினால் பாதிக்கப்பட்ட முக்குலத்து மக்களின் எதிர்ப்பு, அதனை சரிசெய்ய நினைத்து தங்கக் கவசம் வழங்கியதன் மூலம் தலித் சமூகத்தினரிடையே எழுந்துள்ள கோபம் என அன்வர்ராஜாவுக்கு எதிரான ஓட்டுகள் வரிசை கட்டி நிற்கின்றன.
மு.க.அழகிரியால் வசைபாடப்பட்ட முகம்மது ஜலீல் இந்தத் தொகுதியின் தி.மு.க. வேட்பாளர். கூட்டணி பலத்தாலும் பண பலத்தாலும் வாக்குகளை கவர்ந்துவிட முடியும் என்பது இவருடைய அசைக்க முடியாத நம்பிக்கை. அழகிரி ஆதரவாளர்களின் வாக்குகள் இவருக்கு எதிராக மாறும் என நினைத்திருந்த வேளையில், ரித்தீஷ் அ.தி.மு.க-வுக்கு தாவியதால், வெறுப்படைந்த கட்சிக்காரர்கள் மீண்டும் ஜலீலுக்கு ஆதரவாகத் திரும்பியுள்ளனர்.
அ.தி.மு.க-வுக்கு கிடைக்க வேண்டிய முக்குலத்தோர் வாக்குகளைக் கணிசமாக தேசிய பார்வர்டு ப்ளாக் வேட்பாளரான பி.டி.அரசகுமார் பிரிப்பதுவும் ஜலீலுக்கு கூடுதல் தெம்பு.
காங்கிரஸ் வேட்பாளரான திருநாவுக்கரசர், தனது நீண்ட கால ஆதரவாளர்களை நம்பியே களமாடுகிறார். இதுதவிர, பி.ஜே.பி-யின் குப்புராமு கூட்டணி பலத்தையும் முக்குலத்தோர் மற்றும் யாதவ சமுதாய வாக்குகளையும் நம்பியிருக்கிறார். இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளரான உமாமகேஸ்வரி பிரிக்கும் வாக்குகளும் அ.தி.மு.க-வின் அன்வர்ராஜாவின் கணக்கில் இருந்தே கழிக்கப்பட வேண்டும்.
இந்தக் கணக்குகளை வைத்துப் பார்த்தால், ராமநாதபுரத்தில் ஜலீல் கொடி உயரப் பறக்கிறது!
ஆற்றுமணல் கொள்ளை, தாது மணல் அள்ளும் விவகாரம், ஸ்டெர்லைட் ஆலை பிரச்னை என எப்போதும் தகித்துக்கொண்டிருக்கும் தொகுதி, தூத்துக்குடி. இந்தத் தொகுதியில் அ.தி.மு.க., தி.மு.க., ம.தி.மு.க., காங்கிரஸ், கம்யூனிஸ்ட், ஆம் ஆத்மி என ஆறு முனை போட்டி நிலவுகிறது.
அ.தி.மு.க அரசின் சாதனைகளைச் சொல்லி வாக்கு சேகரிக்கிறார் வேட்பாளர் ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி. வழக்கறிஞரான இவர், தொகுதி மக்களிடம் அறிமுகம் இல்லாதவர். இவருக்கு சீட் கொடுத்ததால், கட்சியினர் மேற்கொள்ளும் உள்குத்து வேலைகள் இவருக்கு எதிராக இருக்கின்றன. ஆனால், இதை எல்லாம் மீறி இந்தத் தொகுதியில் அ.தி.மு.க-வுக்கு இருக்கும் தனிப்பட்ட செல்வாக்கு இவருக்கு ப்ளஸ்.
தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளரான பெரியசாமியின் மகன் ஜெகன் களம் இறக்கப்பட்டு இருக்கிறார். தனது மகனை எப்படியாவது ஜெயிக்க வைத்துவிட வேண்டும் என்ற முனைப்பில் பெரியசாமி தீவிரமாக களம் இறங்கியிருக்கிறார். முக்கியப் பிரமுகர்களை சந்திப்பது, அதிருப்தியில் இருக்கும் மாற்றுக் கட்சியினரைக் 'கவனித்து’ உள்குத்து வேலைகளைச் செய்ய ஊக்குவிப்பது, சொந்த கட்சிக்குள் நிலவும் குழப்படிகளைத் தீர்த்துவைப்பது என அவர் செய்யும் பஞ்சாயத்துகள் ஜெகனை அனைத்துத் தரப்பு மக்களுக்கும் அறிமுகப்படுத்தி இருக்கிறது. தொகுதிக்குள் இருக்கும் தலித் வாக்கு வங்கி, சிறுபான்மையினர் வாக்குகளுடன் கட்சியின் வாக்குகளும் சேரும்போது வெற்றி சுலபமாகி, தனது மகனை நாடாளுமன்றத்துக்கு அனுப்பிவிட முடியும் என்பது பெரியசாமியின் நம்பிக்கை. ஆனாலும், சொந்தக் கட்சியைச் சேர்ந்தவரான அனிதா ராதாகிருஷ்ணன் பிரசாரக் களத்தில் இருந்து ஒதுங்கி இருக்கிறார். அத்துடன், சிட்டிங் எம்.பி-யான ஜெயதுரை தனக்கு சீட் கிடைக்காத அதிருப்தியில் இருக்கிறார். இதெல்லாம் அவருக்கு மைனஸ்.
பி.ஜே.பி. கூட்டணி பலத்துடன் ம.தி.மு.க-வின் சார்பில் களம் இறங்கியிருக்கும் ஜோயல், தொகுதிவாசிகளுக்கு நன்கு அறிமுகம் ஆனவர். ஆற்று மணல் கொள்ளை, ஸ்டெர்லைட் பிரச்னை என எந்தப் போராட்டக் களமாக இருந்தாலும், முன்னணியில் ம.தி.மு.க. இருந்தது. தி.மு.க-வின் எதிர்ப்பு அணியினரின் வாக்குகள் தனக்கே கிடைக்கும் என நம்புகிறார். கூட்டணி பலமும், மோடி அலையும் தன்னை கரை சேர்க்கும் என்பது இவரது நம்பிக்கை. தொகுதிக்கு உட்பட்ட கோவில்பட்டி, விளாத்திகுளம் ஆகிய பகுதிகளில் ம.தி.மு.க. வலுவான செல்வாக்குடன் இருப்பதும் இவருக்கு பலம்.
காங்கிரஸ் சார்பில் ஏ.பி.சி.வி.சண்முகம், சி.பி.ஐ. சார்பில் மோகன்ராஜ் ஆகியோரும் கணிசமான வாக்குகளைப் பிரிப்பார்கள். ஆம் ஆத்மியில் களம் இறங்கும் புஷ்பராயனுக்கு மீனவ கிராமங்களில் செல்வாக்கு அமோகமாக உள்ளது. அவர்களின் வாக்குகளில் கணிசமானவற்றை இவர் கைப்பற்றுவார்.
இப்படி வாக்குகள் பிரிந்துகிடக்கும் சூழலில், தி.மு.க-வைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு இந்தத் தொகுதியில் பம்பரம் சுழல்வதற்கான வாய்ப்புகளே அதிகம் தென்படுகிறது!
அ.தி.மு.க அரசின் சாதனைகளைச் சொல்லி வாக்கு சேகரிக்கிறார் வேட்பாளர் ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி. வழக்கறிஞரான இவர், தொகுதி மக்களிடம் அறிமுகம் இல்லாதவர். இவருக்கு சீட் கொடுத்ததால், கட்சியினர் மேற்கொள்ளும் உள்குத்து வேலைகள் இவருக்கு எதிராக இருக்கின்றன. ஆனால், இதை எல்லாம் மீறி இந்தத் தொகுதியில் அ.தி.மு.க-வுக்கு இருக்கும் தனிப்பட்ட செல்வாக்கு இவருக்கு ப்ளஸ்.
தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளரான பெரியசாமியின் மகன் ஜெகன் களம் இறக்கப்பட்டு இருக்கிறார். தனது மகனை எப்படியாவது ஜெயிக்க வைத்துவிட வேண்டும் என்ற முனைப்பில் பெரியசாமி தீவிரமாக களம் இறங்கியிருக்கிறார். முக்கியப் பிரமுகர்களை சந்திப்பது, அதிருப்தியில் இருக்கும் மாற்றுக் கட்சியினரைக் 'கவனித்து’ உள்குத்து வேலைகளைச் செய்ய ஊக்குவிப்பது, சொந்த கட்சிக்குள் நிலவும் குழப்படிகளைத் தீர்த்துவைப்பது என அவர் செய்யும் பஞ்சாயத்துகள் ஜெகனை அனைத்துத் தரப்பு மக்களுக்கும் அறிமுகப்படுத்தி இருக்கிறது. தொகுதிக்குள் இருக்கும் தலித் வாக்கு வங்கி, சிறுபான்மையினர் வாக்குகளுடன் கட்சியின் வாக்குகளும் சேரும்போது வெற்றி சுலபமாகி, தனது மகனை நாடாளுமன்றத்துக்கு அனுப்பிவிட முடியும் என்பது பெரியசாமியின் நம்பிக்கை. ஆனாலும், சொந்தக் கட்சியைச் சேர்ந்தவரான அனிதா ராதாகிருஷ்ணன் பிரசாரக் களத்தில் இருந்து ஒதுங்கி இருக்கிறார். அத்துடன், சிட்டிங் எம்.பி-யான ஜெயதுரை தனக்கு சீட் கிடைக்காத அதிருப்தியில் இருக்கிறார். இதெல்லாம் அவருக்கு மைனஸ்.
பி.ஜே.பி. கூட்டணி பலத்துடன் ம.தி.மு.க-வின் சார்பில் களம் இறங்கியிருக்கும் ஜோயல், தொகுதிவாசிகளுக்கு நன்கு அறிமுகம் ஆனவர். ஆற்று மணல் கொள்ளை, ஸ்டெர்லைட் பிரச்னை என எந்தப் போராட்டக் களமாக இருந்தாலும், முன்னணியில் ம.தி.மு.க. இருந்தது. தி.மு.க-வின் எதிர்ப்பு அணியினரின் வாக்குகள் தனக்கே கிடைக்கும் என நம்புகிறார். கூட்டணி பலமும், மோடி அலையும் தன்னை கரை சேர்க்கும் என்பது இவரது நம்பிக்கை. தொகுதிக்கு உட்பட்ட கோவில்பட்டி, விளாத்திகுளம் ஆகிய பகுதிகளில் ம.தி.மு.க. வலுவான செல்வாக்குடன் இருப்பதும் இவருக்கு பலம்.
காங்கிரஸ் சார்பில் ஏ.பி.சி.வி.சண்முகம், சி.பி.ஐ. சார்பில் மோகன்ராஜ் ஆகியோரும் கணிசமான வாக்குகளைப் பிரிப்பார்கள். ஆம் ஆத்மியில் களம் இறங்கும் புஷ்பராயனுக்கு மீனவ கிராமங்களில் செல்வாக்கு அமோகமாக உள்ளது. அவர்களின் வாக்குகளில் கணிசமானவற்றை இவர் கைப்பற்றுவார்.
இப்படி வாக்குகள் பிரிந்துகிடக்கும் சூழலில், தி.மு.க-வைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு இந்தத் தொகுதியில் பம்பரம் சுழல்வதற்கான வாய்ப்புகளே அதிகம் தென்படுகிறது!
குளுகுளு குற்றாலம் அடங்கிய தென்காசி, தென் மாவட்டங்களில் இருக்கும் ஒரே தனித்தொகுதி.
இந்தத் தொகுதியில் பலமுறை போட்டியிட்டு கணிசமான வாக்குகள் பெற்றாலும் வெற்றி பெறாத புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, தி.மு.க. கூட்டணியில் களம் காண்கிறார். ம.தி.மு.க. சார்பில் டாக்டர் சதன் திருமலைக்குமாரும், அ.தி.மு.க. சார்பில் வசந்தி முருகேசனும், காங்கிரஸ் வேட்பாளராக ஜெயகுமாரும், இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் சிட்டிங் எம்.பி-யான லிங்கமும் கோதாவில் இருக்கிறார்கள்.
தொடர்ந்து இரண்டு முறை இந்திய கம்யூனிஸ்டுக்கு வாய்ப்பு கொடுத்தும், தொகுதியின் மேம்பாட்டுக்கு உருப்படியாக எதையும் செய்யவில்லை என்ற ஆதங்கம் மக்களிடம் இருக்கிறது. கூட்டணி இல்லாததால் இந்த முறை தனிமையில் அலைந்துதிரிந்து வாக்கு சேகரிக்கின்றனர் காம்ரேட்ஸ்.
ம.தி.மு.க-வின் வேட்பாளரான சதன் திருமலைக்குமார், தொகுதி மக்களிடம் நன்கு அறிமுகம் உள்ளவர். ஆனாலும், பி.ஜே.பி. கூட்டணியில் இடம்பெற்ற ஒரே காரணத்துக்காக தொகுதியில் கணிசமாக இருக்கும் இஸ்லாமிய சமூக வாக்குகள் இவருக்கு எதிராகத் திரும்பிவிட்டது. கூட்டணிக் கட்சிகளான பி.ஜே.பி., தே.மு.தி.க. தொண்டர்களும் இவருக்காகத் தீவிரமாக வேலை செய்கிறார்கள். வைகோவின் சொந்த ஊர் இந்தத் தொகுதிக்குள் வருகிறது. எனவே இந்தத் தொகுதியைக் கைப்பற்ற ம.தி.மு.க. கடுமையாக உழைக்கிறது.
அ.தி.மு.க. வேட்பாளரான வசந்தி முருகேசனுக்கு கட்சிக்குள் நிலவும் கோஷ்டிப்பூசலை சமாளிக்கவே நேரம் போதவில்லை. 'வசந்தி முருகேசன் வெளியூர்காரர். அவர் வெற்றிபெற்றால் தொகுதி பக்கம் வரவே மாட்டார்’ என எதிர்க்கட்சியினர் பிரசாரம் செய்து எரிச்சலைக் கூட்டுகிறார்கள். ஏற்கெனவே அ.தி.மு.க சார்பில் இந்தத் தொகுதியில் எம்.பி-யாக இருந்த இவருடைய கணவர் முருகேசன், மக்களுக்கு பெரிய அளவில் செய்யவில்லை என்ற மனக்குறை நிறையவே இருக்கிறது. அதுவும் இவருக்குப் பெரும் பின்னடைவுதான்.
கடந்த காலங்களில் தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்தின் வாக்குகளை மட்டுமே நம்பி களம் இறங்கிய டாக்டர் கிருஷ்ணசாமி, இந்த முறை தி.மு.க. கூட்டணி பலத்துடனும் போட்டியிடுகிறார். மனிதநேய மக்கள் கட்சி, எஸ்.டி.பி.ஐ., தவ்ஹீத் ஜமா-அத் என முக்கிய இஸ்லாமிய அமைப்புகள் தி.மு.க கூட்டணிக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்திருப்பதால்... தென்காசி, கடையநல்லூர் பகுதியில் கணிசமாக இருக்கும் முஸ்லிம் வாக்குகள், அவருக்கு ஆதரவாகத் திரும்பியிருக்கிறது. அதேநேரத்தில் அனைத்துக் கட்சியிலும் இருக்கிற மாற்று சமூகத்தவர்கள் கிருஷ்ணசாமியைக் கசப்புடன் கவனிக்கிறார்கள்.
டாக்டர் கிருஷ்ணசாமிக்கும் டாக்டர் சதன் திருமலைக் குமாருக்கும் இடையேதான் நிஜ போட்டி. சமுதாய பலம் மற்றும் கூட்டணி பலம் காரணமாக கிருஷ்ணசாமி காட்டில்தான் கோடை மழை!
இந்தத் தொகுதியில் பலமுறை போட்டியிட்டு கணிசமான வாக்குகள் பெற்றாலும் வெற்றி பெறாத புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, தி.மு.க. கூட்டணியில் களம் காண்கிறார். ம.தி.மு.க. சார்பில் டாக்டர் சதன் திருமலைக்குமாரும், அ.தி.மு.க. சார்பில் வசந்தி முருகேசனும், காங்கிரஸ் வேட்பாளராக ஜெயகுமாரும், இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் சிட்டிங் எம்.பி-யான லிங்கமும் கோதாவில் இருக்கிறார்கள்.
தொடர்ந்து இரண்டு முறை இந்திய கம்யூனிஸ்டுக்கு வாய்ப்பு கொடுத்தும், தொகுதியின் மேம்பாட்டுக்கு உருப்படியாக எதையும் செய்யவில்லை என்ற ஆதங்கம் மக்களிடம் இருக்கிறது. கூட்டணி இல்லாததால் இந்த முறை தனிமையில் அலைந்துதிரிந்து வாக்கு சேகரிக்கின்றனர் காம்ரேட்ஸ்.
ம.தி.மு.க-வின் வேட்பாளரான சதன் திருமலைக்குமார், தொகுதி மக்களிடம் நன்கு அறிமுகம் உள்ளவர். ஆனாலும், பி.ஜே.பி. கூட்டணியில் இடம்பெற்ற ஒரே காரணத்துக்காக தொகுதியில் கணிசமாக இருக்கும் இஸ்லாமிய சமூக வாக்குகள் இவருக்கு எதிராகத் திரும்பிவிட்டது. கூட்டணிக் கட்சிகளான பி.ஜே.பி., தே.மு.தி.க. தொண்டர்களும் இவருக்காகத் தீவிரமாக வேலை செய்கிறார்கள். வைகோவின் சொந்த ஊர் இந்தத் தொகுதிக்குள் வருகிறது. எனவே இந்தத் தொகுதியைக் கைப்பற்ற ம.தி.மு.க. கடுமையாக உழைக்கிறது.
அ.தி.மு.க. வேட்பாளரான வசந்தி முருகேசனுக்கு கட்சிக்குள் நிலவும் கோஷ்டிப்பூசலை சமாளிக்கவே நேரம் போதவில்லை. 'வசந்தி முருகேசன் வெளியூர்காரர். அவர் வெற்றிபெற்றால் தொகுதி பக்கம் வரவே மாட்டார்’ என எதிர்க்கட்சியினர் பிரசாரம் செய்து எரிச்சலைக் கூட்டுகிறார்கள். ஏற்கெனவே அ.தி.மு.க சார்பில் இந்தத் தொகுதியில் எம்.பி-யாக இருந்த இவருடைய கணவர் முருகேசன், மக்களுக்கு பெரிய அளவில் செய்யவில்லை என்ற மனக்குறை நிறையவே இருக்கிறது. அதுவும் இவருக்குப் பெரும் பின்னடைவுதான்.
கடந்த காலங்களில் தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்தின் வாக்குகளை மட்டுமே நம்பி களம் இறங்கிய டாக்டர் கிருஷ்ணசாமி, இந்த முறை தி.மு.க. கூட்டணி பலத்துடனும் போட்டியிடுகிறார். மனிதநேய மக்கள் கட்சி, எஸ்.டி.பி.ஐ., தவ்ஹீத் ஜமா-அத் என முக்கிய இஸ்லாமிய அமைப்புகள் தி.மு.க கூட்டணிக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்திருப்பதால்... தென்காசி, கடையநல்லூர் பகுதியில் கணிசமாக இருக்கும் முஸ்லிம் வாக்குகள், அவருக்கு ஆதரவாகத் திரும்பியிருக்கிறது. அதேநேரத்தில் அனைத்துக் கட்சியிலும் இருக்கிற மாற்று சமூகத்தவர்கள் கிருஷ்ணசாமியைக் கசப்புடன் கவனிக்கிறார்கள்.
டாக்டர் கிருஷ்ணசாமிக்கும் டாக்டர் சதன் திருமலைக் குமாருக்கும் இடையேதான் நிஜ போட்டி. சமுதாய பலம் மற்றும் கூட்டணி பலம் காரணமாக கிருஷ்ணசாமி காட்டில்தான் கோடை மழை!
தமிழகத்தின் சென்சிட்டிவான தொகுதிகளில் திருநெல்வேலியும் ஒன்று.
இங்கே தி.மு.க வேட்பாளர் தேவதாசசுந்தரம். அ.தி.மு.க. சார்பில் கே.ஆர்.பி.பிரபாகரன் களம் இறங்கி இருக்கிறார்கள். காங்கிரஸ் சார்பில் சிட்டிங் எம்.பி-யான ராமசுப்பு, தே.மு.தி.க. வேட்பாளராக சிவனணைந்த பெருமாள், ஆம் ஆத்மி சார்பில் கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டக்குழுவின் உறுப்பினரான மை.பா.ஜேசுராஜ், எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பில் முகம்மது முபாரக், இந்து மக்கள் கட்சி வேட்பாளராக சுப்பிரமணி என்று பெரிய கூட்டமே இங்கே களம் காண்கிறது. இதுதவிர, தமிழ்நாடு மக்கள் காங்கிரஸ் வேட்பாளராக யாதவ மகாசபையின் தேவநாதனும், சுயேச்சையாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த டி.ஏ.கே.ஏ.லட்சுமணனும் களம் இறங்கி அரசியல் சூட்டை அதிகரித்து உள்ளனர்.
தி.மு.க-வைப் பொறுத்தவரை, வேட்பாளர் தேவதாசசுந்தரம் சென்னையில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவர் என்பது மைனஸ் பாய்ன்ட். கட்சிக்குள் நிலவும் கோஷ்டிப் பூசலை வைட்டமின் 'ப’ மூலம் சாமர்த்தியமாக சமாளித்துவிட்டார். 'தொழில் வாய்ப்பில் பின்தங்கி இருக்கும் இந்தத் தொகுதியை முன்னேற்றுவேன்’ என்கிற வாக்குறுதியை பிரதானமாகக் கொண்ட அவரது பிரசாரம் மக்களை வெகுவாகக் கவர்ந்து வருகிறது. கூட்டணிக் கட்சிகளின் ஒத்துழைப்பு இவருக்கான கூடுதல் பலம்.
அ.தி.மு.க-வின் வேட்பாளரான பிரபாகரனுக்கு சொந்தக் கட்சியினர் முழு ஒத்துழைப்பு தரவில்லை. பிரசாரத்தை ஒருங்கிணைப்பதில் நிர்வாகிகள் கோட்டைவிட்டனர். தொகுதி முழுக்கவே இருக்கும் குடிநீர் பிரச்னை ஆளுங்கட்சி வேட்பாளருக்கு சிக்கலை உண்டாக்கி இருக்கிறது.
தே.மு.தி.க வேட்பாளர் சிவனணைந்த பெருமாளுக்குக் கூட்டணி பலம் இருந்தாலும் பிரசாரத்தில் வேகம் இல்லை. மோடியின் அலை தன்னை டெல்லிக்கு இழுத்துச் செல்லும் என்று நம்பிக்கையுடன் இருக்கிறார்.
நாடாளுமன்றத்தில் சூப்பராக செயல்பட்ட காங்கிரஸின் சிட்டிங் எம்.பி-யான ராமசுப்புக்கு எதிராக சொந்த கட்சியினரே ஒத்துழையாமை இயக்கம் நடத்தினர். ஆனாலும், தனக்கு உள்ள செல்வாக்கினால் கணிசமான வாக்குகளை இவர் வாங்குவார்.
எஸ்.டி.பி.ஐ. கட்சியின் வேட்பாளரான முகம்மது முபாரக் இஸ்லாமிய சமூகத்தினரின் வாக்குகளைப் பிரிப்பதில் முக்கியப் பங்கு வகிப்பார். ஆம் ஆத்மி கட்சிக்கு கடலோர கிராமங்களில் மட்டுமே ஆதரவு இருக்கிறது.
இறுதி நிலவரப்படி, சொந்தக் கட்சி பலம், பண பலம் ஆகியவற்றால் தேவதாச சுந்தரம் முதல் மரியாதையோடு தேர் இழுக்கத் தயாராகிறார்.
முக்கடலும் சங்கமிக்கும் தொகுதியான கன்னியாகுமரியில், மாநிலக் கட்சிகளைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, தேசியக் கட்சிகள்தான் முட்டிமோதுகின்றன. சோனியா, மோடி என இருவருமே தங்கள் வேட்பாளர்களுக்காக அனல் பிரசாரம் செய்துவிட்டுச் சென்றுள்ளார்கள்.
பகீரத பிரயத்தனப்பட்டு தமிழகத்தில் மெகா கூட்டணி அமைத்து சாதித்துக் காட்டிய பி.ஜே.பி. மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன்தான் இந்தத் தொகுதியின் வேட்பாளர். இந்தத் தொகுதியில் கணிசமாக இருக்கும் பி.ஜே.பி-யின் பாரம்பரிய ஓட்டுக்கள், கூட்டணி கட்சிகளின் ஓட்டுக்கள் தனக்கு மிக பலமாக இருக்கும் என பொன்னார் நம்புகிறார். இளைஞர்கள், மீனவர்கள் பற்றி தனது பிரசாரத்தில் ஹைலைட்டாகப் பேசி அவர்களது வாக்குகளையும் கவர்கிறார்.
இவருக்கு டஃப் ஃபைட் கொடுக்கிறார் காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமார். தனது தனிப்பட்ட செல்வாக்கும், காங்கிரஸ் வாக்குகளும் வெற்றிக்கோட்டை எட்டவைக்கும் என்ற நம்பிக்கையில் தீவிர பிரசாரத்தில் இருக்கிறார். இருந்தாலும் இவருக்கு உட்கட்சிப்பூசல் ரொம்பவே குடைச்சலைக் கொடுக்கிறது. பொன்னாரும் வசந்தகுமாரும் இந்து நாடார் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், அந்தச் சமூக வாக்குகளைக் கவர்வதில் இருவருக்கும் இடையில் பலத்த போட்டி.
இந்தத் தொகுதியின் வெற்றி வாய்ப்பை நிர்ணயிப்பவை கிறிஸ்துவ மக்களின் வாக்குகள்தான். அவை பி.ஜே.பி-க்கு பெரும்பாலும் போகாது. அந்த வாக்குகளை முழுமையாகக் கைப்பற்றிவிட வேண்டும் என்று வசந்தகுமார் துடியாய்த் துடிக்கிறார். இருந்தாலும் போட்டியில் இருக்கும் மற்றக் கட்சிகள் அந்த வாக்குகளைப் பங்குபோடுகின்றன.
அ.தி.மு.க. வேட்பாளர் ஜாண்தங்கமும், தி.மு.க. வேட்பாளர் எஃப்.எம்.ராஜரத்தினமும் தேசிய கட்சிகளுக்கு அடுத்த நிலையில்தான் இருக்கிறார்கள். அ.தி.மு.க. தொகுதி பொறுப்பாளரான பச்சைமால், கட்சி நிர்வாகிகளை சம்பந்தம் சம்பந்தம் இல்லாத பகுதிகளுக்கு தேர்தல் பணிகளை கவனிக்க அனுப்பியதில், நிர்வாகிகள் அதிருப்தியில் இருக்கிறார்கள். அந்த அதிருப்தி வாக்குகள் பி.ஜே.பி. பக்கம் திரும்பவே வாய்ப்பு உண்டு. அதனால், ரேஸில் அ.தி.மு.க. பின்தங்கியுள்ளது.
சி.பி.எம். சார்பில் போட்டியிடும் பெல்லார்மினும், ஆம் ஆத் ஆத்மி வேட்பாளரான 'கூடங்குள எதிர்ப்பு போராளி’ சுப.உதயகுமாரனும் கணிசமான வாக்குகளை வாங்குவார்கள்.
கூட்டணி பலம், தனக்கே உரித்தான அணுகுமுறை உள்ளிட்ட காரணங்களால் குமரியில் பொன்னார் மின்னுகிறார்.
இரண்டு 'சாமி’களுக்கு நடுவே நடந்த காரசார பிரசாரமே புதுவை நாடாளுமன்றத் தொகுதியின் பரபரப்பு.
ராஜ்யசபா, லோக்சபா என 23 ஆண்டுகளாக எம்.பி-யாக இருந்த நாராயணசாமி, காங்கிரஸ் சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். இவரை எதிர்த்து மாநிலக் கட்சியான என்.ஆர்.காங்கிரஸ், பி.ஜே.பி-யுடன் கூட்டணி அமைத்து முன்னாள் சபாநாயகர் ராதாகிருஷ்ணனைக் களமிறக்கியுள்ளது. மேலும் கூட்டணிக்கு முரண்பட்டு பா.ம.க. சார்பில் அனந்தராமன் நிறுத்தப்பட்டுள்ளார். தி.மு.க. சார்பில் நாஜிம், அ.தி.மு.க. சார்பில் ஓமலிங்கம் என புதுவையில் ஏழு முனைப் போட்டி.
மோடியின் படத்தை வைத்து இரண்டு கட்சிகள் ஓட்டு சேகரிக்கும் வினோத அரசியலை இங்கு மட்டுமே காண முடியும். ராதாகிருஷ்ணன், அனந்தராமன் இருவருமே மோடி பேனரில் வலம் வருகிறார்கள். ரங்கசாமி முதல்வராகப் பொறுப்பேற்று மூன்றாண்டுகள் முடிந்தும் தேர்தல் நேரத்தில் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை சரிவர நிறைவேற்றவில்லை. 'அதற்கு மத்திய அமைச்சர் நாராயணசாமி போட்ட முட்டுக்கட்டைதான் காரணம்’ என்கிறார் ரங்கசாமி. என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர் ராதாகிருஷ்ணன் புதுவை நகர பகுதி மக்களுக்கு நல்ல பரிச்சயம். எவ்வித சர்ச்சைகளிலும் சிக்காதவர். முன்னாள் சபாநாயகரும்கூட. இவை இவருக்கு ப்ளஸ்.
அனைத்து வேட்பாளர்களை விடவும் விரைந்து பிரசாரத்தைத் தொடங்கியவர் நாராயணசாமி. நேரம் காலம் பார்க்காமல் கடுமையாக உழைத்தார். கடந்த வாரம் வரை முன்னிலையில் இருந்த அவருக்கு, புதுவை முதல்வர் ரங்கசாமி பிரசாரத்தைத் தொடங்கியவுடன் செல்வாக்கு சரியத் தொடங்கியது. மேலும், மாநிலத்தில் உள்ள வன்னியர் சங்கங்கள் பா.ம.க. பக்கம் சாயாமல் என்.ஆர். காங்கிரஸுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. இது இவருக்கு ப்ளஸ்.
தி.மு.க. வேட்பாளர் நாஜிம் தன் சொந்த ஊரான காரைக்கால் முஸ்லிம் வாக்குகளை நம்பி களத்தில் இறங்கியுள்ளார். மேலும், புதுவையில் உள்ள கணிசமான தி.மு.க. ஓட்டுக்களைப் பெற்று மூன்றாவது இடத்தைப் பெறுவார். அ.தி.மு.க. வேட்பாளர் ஓமலிங்கமும், பா.ம.க. வேட்பாளர் அனந்தராமனும் அதற்கு அடுத்த இடங்களைத்தான் அடைய முடியும் போல் தெரிகிறது.
இந்தத் தேர்தலில் வெற்றி பெற்று, சோனியா குடும்பத்தோடு இன்னும் நெருக்கமாகிவிடலாம் என்பது நாராயணசாமியின் கணக்கு. அந்த மனக் கோட்டையை மணல் கோட்டை ஆக்கிவிடுவார் ராதாகிருஷ்ணன் என்பதே இன்றைய நிலை!
[thanks] விகடன் [/thanks]
- Sponsored content
Page 4 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 4
|
|