புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Today at 12:02 pm

» books needed
by Manimegala Today at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அண்ணன் சிறையில், தம்பியோ துணை அமைச்சர் பதவியில்! Poll_c10அண்ணன் சிறையில், தம்பியோ துணை அமைச்சர் பதவியில்! Poll_m10அண்ணன் சிறையில், தம்பியோ துணை அமைச்சர் பதவியில்! Poll_c10 
5 Posts - 71%
ஜாஹீதாபானு
அண்ணன் சிறையில், தம்பியோ துணை அமைச்சர் பதவியில்! Poll_c10அண்ணன் சிறையில், தம்பியோ துணை அமைச்சர் பதவியில்! Poll_m10அண்ணன் சிறையில், தம்பியோ துணை அமைச்சர் பதவியில்! Poll_c10 
1 Post - 14%
Manimegala
அண்ணன் சிறையில், தம்பியோ துணை அமைச்சர் பதவியில்! Poll_c10அண்ணன் சிறையில், தம்பியோ துணை அமைச்சர் பதவியில்! Poll_m10அண்ணன் சிறையில், தம்பியோ துணை அமைச்சர் பதவியில்! Poll_c10 
1 Post - 14%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அண்ணன் சிறையில், தம்பியோ துணை அமைச்சர் பதவியில்! Poll_c10அண்ணன் சிறையில், தம்பியோ துணை அமைச்சர் பதவியில்! Poll_m10அண்ணன் சிறையில், தம்பியோ துணை அமைச்சர் பதவியில்! Poll_c10 
130 Posts - 51%
ayyasamy ram
அண்ணன் சிறையில், தம்பியோ துணை அமைச்சர் பதவியில்! Poll_c10அண்ணன் சிறையில், தம்பியோ துணை அமைச்சர் பதவியில்! Poll_m10அண்ணன் சிறையில், தம்பியோ துணை அமைச்சர் பதவியில்! Poll_c10 
88 Posts - 35%
mohamed nizamudeen
அண்ணன் சிறையில், தம்பியோ துணை அமைச்சர் பதவியில்! Poll_c10அண்ணன் சிறையில், தம்பியோ துணை அமைச்சர் பதவியில்! Poll_m10அண்ணன் சிறையில், தம்பியோ துணை அமைச்சர் பதவியில்! Poll_c10 
11 Posts - 4%
prajai
அண்ணன் சிறையில், தம்பியோ துணை அமைச்சர் பதவியில்! Poll_c10அண்ணன் சிறையில், தம்பியோ துணை அமைச்சர் பதவியில்! Poll_m10அண்ணன் சிறையில், தம்பியோ துணை அமைச்சர் பதவியில்! Poll_c10 
9 Posts - 4%
Jenila
அண்ணன் சிறையில், தம்பியோ துணை அமைச்சர் பதவியில்! Poll_c10அண்ணன் சிறையில், தம்பியோ துணை அமைச்சர் பதவியில்! Poll_m10அண்ணன் சிறையில், தம்பியோ துணை அமைச்சர் பதவியில்! Poll_c10 
4 Posts - 2%
Rutu
அண்ணன் சிறையில், தம்பியோ துணை அமைச்சர் பதவியில்! Poll_c10அண்ணன் சிறையில், தம்பியோ துணை அமைச்சர் பதவியில்! Poll_m10அண்ணன் சிறையில், தம்பியோ துணை அமைச்சர் பதவியில்! Poll_c10 
3 Posts - 1%
Baarushree
அண்ணன் சிறையில், தம்பியோ துணை அமைச்சர் பதவியில்! Poll_c10அண்ணன் சிறையில், தம்பியோ துணை அமைச்சர் பதவியில்! Poll_m10அண்ணன் சிறையில், தம்பியோ துணை அமைச்சர் பதவியில்! Poll_c10 
2 Posts - 1%
Barushree
அண்ணன் சிறையில், தம்பியோ துணை அமைச்சர் பதவியில்! Poll_c10அண்ணன் சிறையில், தம்பியோ துணை அமைச்சர் பதவியில்! Poll_m10அண்ணன் சிறையில், தம்பியோ துணை அமைச்சர் பதவியில்! Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
அண்ணன் சிறையில், தம்பியோ துணை அமைச்சர் பதவியில்! Poll_c10அண்ணன் சிறையில், தம்பியோ துணை அமைச்சர் பதவியில்! Poll_m10அண்ணன் சிறையில், தம்பியோ துணை அமைச்சர் பதவியில்! Poll_c10 
2 Posts - 1%
jairam
அண்ணன் சிறையில், தம்பியோ துணை அமைச்சர் பதவியில்! Poll_c10அண்ணன் சிறையில், தம்பியோ துணை அமைச்சர் பதவியில்! Poll_m10அண்ணன் சிறையில், தம்பியோ துணை அமைச்சர் பதவியில்! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அண்ணன் சிறையில், தம்பியோ துணை அமைச்சர் பதவியில்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jun 06, 2013 8:28 am

உதயகுமாருக்கு 30 மாதங்கள் சிறை தண்டனை!

தேச நிந்தனைக் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால் ஹிண்ட்ராப் நிறுவனர் உதயகுமாருக்கு 30 மாதங்கள் சிறை தண்டனை விதித்து கோலாலம்பூர் அமர்வு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2007 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 15 ஆம் தேதிக்கும், டிசம்பர் மாதம் 8 ஆம் தேதிக்கும் இடையே, அப்போதைய பிரிட்டிஷ் பிரதமர் கார்டன் பிரவுனுக்கு உதயக்குமார் எழுதிய கடிதத்தில், மலேசியாவில் ஏழை இந்திய சமுதாயம் சமூக ரீதியில் ‘இன ஒழிப்பு’ செய்யப்படுவதாக குறிப்பிட்டிருந்தார். இதனால் அவர் மீது தேச நிந்தனைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

நீதிபதி அகமட் சம்ஸானி முன்னிலையில் நடைபெற்ற இவ்வழக்கு விசாரணையில், தனது பக்கம் இருக்கும் நியாயத்தை எடுத்துரைக்க உதயக்குமாருக்கு இரண்டு முறை வாய்ப்பளிக்கப்பட்டும் அவர் மௌனம் காத்தார்.

மலேசியாவில் இந்திய சமுதாயத்திற்கு எதிராக நடத்தப்படும் இனவாதக் கொள்கைகளை எதிர்த்தும், இவ்வழக்கின் சந்தர்ப்ப சூழ்நிலையைக் கருத்தில் கொண்டும் தான் மௌனம் காப்பதாக நீதிமன்றத்தில் உதயக்குமார் தெரிவித்தார்.

இதனையடுத்து இன்று பிற்பகல் இவ்வழக்கில் அவருக்கு இரண்டரை ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோலாலம்பூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மேல் முறையீடு செய்யும் திட்டம் இல்லை

நீதிமன்றத்தில் உதயகுமாருக்கு சிறை தண்டனை விதித்துத் தீர்பளித்ததும், அங்கு கூடியிருந்த அவரது ஆதரவாளர்கள் “அம்னோ இனவாதம் நிறைந்தது” என்று கூச்சலிட்டனர்.

எனவே உதயகுமார் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தின் வேறு வாயில் வழியாக வெளியே கொண்டு செல்லப்பட்டார்.

உதயகுமாரின் வழக்கறிஞரான எம்.மனோகரனிடம், தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்படுமா? என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, இதுவரை மேல் முறையீடு செய்வது தொடர்பாக எந்த ஒரு தகவலும் தனக்குக் கிடைக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.

காஜாங் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ள உதயகுமாரின் தண்டனை காலம் இன்று முதல் தொடங்குகிறது.

அண்ணன் சிறையில், தம்பியோ துணை அமைச்சர் பதவியில்

ஹிண்ட்ராப் இயக்கத்தின் நிறுவனரான உதயகுமார் இன்று சிறை செல்லப்படும் அதே வேளையில், அவரது உடன் பிறந்த தம்பியும், ஹிண்ட்ராப் இயக்கத்தின் தலைவர்களுள் ஒருவருமான வேதமூர்த்தி இன்று பிற்பகல் பிரதமர் துறையின் துணையமைச்சராகப் பதவி ஏற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.



அண்ணன் சிறையில், தம்பியோ துணை அமைச்சர் பதவியில்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jun 06, 2013 8:29 am

இந்தியர்களின் உரிமைக்காகப் போரடிய உதயகுமாருக்கு அளிக்கப்பட்ட 30 மாத சிறை தண்டனை தர்மத்தை குழி தோண்டி புதைத்து விட்டது என சாடுகிறார் சுவராம் மனித உரிமை இயக்கத் தலைவர் கா. ஆறுமுகம்.

2007-ஆம் ஆண்டு பிரிட்டிஷ் பிரதமர் கோர்டன் பிரவுனுக்கு எழுதிய கடிதத்தில் மலேசிய அரசு தனது இனவாத கொள்கையின் வழி சமூக இனஅழிப்பு செய்வதாக உதயக்குமார் சாடியிருந்தார்.

உதயாவின் சாடலில் உள்ள உண்மைகளை அரசாங்கம் செவிமடுத்த போதும், அவருக்கு இந்த தண்டணையை வழங்கியிருப்பது அவரின் கூற்றை மூடி மறைக்க முயலுவதோடு, நீதி நியாயம் கோருபவர்களின் பேச்சுரிமைக்குப் பூட்டு போடுவதாக இது அமைந்துள்ளது என்கிறார் வழக்கறிஞருமான கா. ஆறுமுகம்.

Aru2001 ஆம் ஆண்டில் நடந்த கம்போங் மேடன் வன்முறையின் போது ஆறு நபர்கள் கொல்லப்பட்டதோடு தொன்னூருக்கும் அதிகமானோர் கொடூரமாக தாக்கப்பட்டனர். இது பற்றிய அரசு விசாரணையை பலமுறை கோரியவர் உதயகுமார். அதோடு அது சார்பாக சுகாக்காம் மீது வழக்கும் தொடுத்தவர். ஆனால், அந்தச் சம்பவம் அப்படியே மூடி மறைக்கப்பட்டது.

இந்திய இளைஞர்கள் போலிசாரால் சுட்டு கொல்லப்பட்டதையும், சிறையில் மாண்டவர்களைப் பற்றியும் அதிகமாக எழுதியவர்- பேசியவர்- போரடியவர் உதயகுமார்தான் என்கிறார் ஆறுமுகம்.

அரசமைப்புச் சட்டம் வழங்கும் பேச்சுரிமையைக் கண்டிக்க அரசாங்கத்திற்கு உரிமை கிடையாது. தேச நிந்தனைச் சட்டம் என்பது ஒரு காட்டு மிராண்டித்தனமான சட்டம். அதை கட்டு கோப்பாக கடைப் பிடிக்க இயலாது என்பதை இந்த வழக்கு நிரூபித்துள்ளது.

ஜனநாயகம் வளர இது போன்ற சட்டங்கள் அகற்றப்பட வேண்டும். இல்லையென்றால் சர்வதிகாரம் வளரவே அவை பயன் படுத்தப்படும் என எச்சரிக்கிறார் ஆறுமுகம்.




அண்ணன் சிறையில், தம்பியோ துணை அமைச்சர் பதவியில்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jun 06, 2013 8:30 am

உதயகுமாருக்கு வழங்கப்பட்ட தண்டனை குறித்து முன்னாள் ஹிண்ட்ராப் தலைவர்கள் வருத்தம்

கோலாலம்பூர், ஜூன் 6 – ஹிண்ட்ராப் நிறுவனர் பி. உதயகுமாருக்கு விதிக்கப்பட்டிருக்கும் தண்டனை குறித்து அவ்வியக்கத்தின் முன்னாள் தலைவர்கள் தங்களை அதிர்ச்சியையும், அதிருப்தியையும் வெளிப்படுத்தியுள்ளனர்.

உதயகுமாருக்கு நேற்று தண்டனை வழங்கப்பட்ட அதே வேளையில், அவரது உடன் பிறந்த தம்பியும், ஹிண்ட்ராப் இயக்கத்தின் தலைவர்களுள் ஒருவருமான வேதமூர்த்திக்கு பிரதமர் துறையின் துணையமைச்சராக பதவிப் பிரமாணம் செய்யப்பட்டது.

இது குறித்து ஹிண்ட்ராப் இயக்கத்தின் தகவல் தொடர்புத் தலைவரான எஸ்.ஜெயதாஸ்(படம் – இடது) கூறுகையில் “ஹிண்ட்ராப்பை வழிநடந்த வந்தவருக்கு அமைச்சரவையில் இடம், ஆனால் ஹிண்ட்ராப் உருவாகக் காரணமானவருக்கு சிறை தண்டனை. இது தான் விதியின் விளையாட்டு” என்று தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார்.v_s_ganapathi_rao

மேலும் “கடந்த 2007 ஆம் ஆண்டு ஹிண்ட்ராப் இயக்கத்தின் சார்பாக நடைபெற்ற வரலாற்றுப் பேரணி உருவாகக் காரணமாக இருந்தவர் உதயகுமார். அவரைத் தவிர வேறு யாரும் அப்படி ஒரு பேரணியை உருவாக்கியிருக்க முடியாது.” என்றும் ஜெயதாஸ் தெரிவித்துள்ளார்.

மற்றொரு ஹிண்ட்ராப் இயக்கத்தின் முன்னாள் தலைவரான வி.கணபதி ராவ் (படம் – வலது), உதயகுமாருக்கு வழங்கப்பட்டுள்ள தண்டனை குறித்து தனது அதிர்ச்சியையும், வருத்தத்தையும் தெரிவித்துள்ளார். தன்னால் அவரைப் பாதுகாக்க முடியவில்லை என்றும் கணபதிராவ் மன்னிப்பு கோரியுள்ளார்.

சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழுவில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள உறுப்பினர்களில் கணபதிராவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

செல்லியல் & செம்பருத்தி!



அண்ணன் சிறையில், தம்பியோ துணை அமைச்சர் பதவியில்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jun 06, 2013 12:47 pm

“அதிர்ச்சி அடைகின்றேன்! ஆனாலும் கணவருக்காக பெருமைப்படுகின்றேன்” – உதயகுமார் மனைவி

அடுத்த இரண்டரை வருடங்களுக்கு கணவரோடு குடும்பம் நடத்த முடியாது, உடன் வாழ முடியாது என்ற சோகம் ஒரு புறம் இருந்தாலும் தனது கணவரின் உறுதியான, சோரம் போகாத மனத் திண்மையை எண்ணித் தான் பெருமைப்படுவதாக அவரது மனைவி எஸ்.இந்திரா தேவி கூறியுள்ளார்.

மலேசியாகினி இணைய செய்தித் தளத்துக்கு வழங்கிய குறுகிய நேர தொலைபேசி நேர்காணலின்போது இந்திரா இதனைத் தெரிவித்தார்.

ஒரு நியாயமான காரணத்துக்காக நடத்திய போராட்டத்திற்காகத்தான் அவர் சிறை செல்கின்றார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

“அவர் என்ன செய்கின்றார் என்பது அவருக்குத் தெரியும். அவரது போராட்டம் இறுதிவரை தொடரும். இந்தியர்களைப் பாதிக்கும் பிரச்சனைகளுக்காக அவர் தன்னால் இயன்ற அளவுக்கு போராட்டம் நடத்தி வருகின்றார்” என்று சோகத்துடனும், கண்ணீர் விசும்பல்களுக்கும் இடையிலும் இந்திரா கூறினார்.

நேற்று வழக்கு நடைபெறும் போது இந்திராதேவி நீதிமன்றத்திற்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று நடைபெற்ற வழக்கின்போது தனக்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்கு எதிர்வாதம் செய்யாமல் மௌனத்தை மட்டுமே பதிலாக வழங்கிய காரணத்தால், 30 மாத சிறைத்தண்டனை உதயகுமாருக்கு வழங்கப்பட்டது.

தனது தண்டனையை எதிர்த்து அவர் மேல் முறையீடு செய்யவும் முன்வராத காரணத்தால், அவர் உடனடியாக காஜாங் சிறைச்சாலைக்கு கொண்டு போகப்பட்டார்.

அந்த தீர்ப்பைக் கேட்டதும் தான் அதிர்ச்சி அடைந்ததாகக் கூறிய இந்திரா இருப்பினும் உதயகுமார் உடனடியாக சிறைச்சாலைக்கு கொண்டு போகப்படுவார் என தான் எதிர்பார்க்கவில்லை என்றும் கூறினார்.

ஆதரவுக்கு நன்றி

கடந்த சில ஆண்டுகளாக தனது கணவர் இந்திய சமுதாயத்திற்காக நடத்தி வரும் போராட்டங்களுக்கு குறிப்பாக தடுப்புக் காவல் மரணங்கள், நாடற்ற மக்களின் பிரச்சனைகள் போன்றவற்றுக்கு துணை நின்று ஆதரவு கொடுத்த ஆதரவாளர்களுக்கு தான் நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் இந்திரா குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில், உதயகுமாருக்கு எதிராக வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்யும் முடிவு எதனையும் இப்போதைக்கு செய்யவில்லை என்றும் அவரது வழக்கறிஞர் மனோகரன் மலையாளம் கூறியுள்ளார்.

செல்லியல்!



அண்ணன் சிறையில், தம்பியோ துணை அமைச்சர் பதவியில்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Thu Jun 06, 2013 5:26 pm

உங்க ஊரு சேதியா நானும் என்னமோ ஏதோனு பதறி போய்டேன் போங்க




அண்ணன் சிறையில், தம்பியோ துணை அமைச்சர் பதவியில்! Mஅண்ணன் சிறையில், தம்பியோ துணை அமைச்சர் பதவியில்! Uஅண்ணன் சிறையில், தம்பியோ துணை அமைச்சர் பதவியில்! Tஅண்ணன் சிறையில், தம்பியோ துணை அமைச்சர் பதவியில்! Hஅண்ணன் சிறையில், தம்பியோ துணை அமைச்சர் பதவியில்! Uஅண்ணன் சிறையில், தம்பியோ துணை அமைச்சர் பதவியில்! Mஅண்ணன் சிறையில், தம்பியோ துணை அமைச்சர் பதவியில்! Oஅண்ணன் சிறையில், தம்பியோ துணை அமைச்சர் பதவியில்! Hஅண்ணன் சிறையில், தம்பியோ துணை அமைச்சர் பதவியில்! Aஅண்ணன் சிறையில், தம்பியோ துணை அமைச்சர் பதவியில்! Mஅண்ணன் சிறையில், தம்பியோ துணை அமைச்சர் பதவியில்! Eஅண்ணன் சிறையில், தம்பியோ துணை அமைச்சர் பதவியில்! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக