புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Today at 2:09 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Today at 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Today at 1:53 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:45 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:29 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Today at 12:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:15 pm
» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Today at 12:10 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:02 pm
» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Today at 12:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:51 am
» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Today at 11:47 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:29 am
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Yesterday at 8:45 pm
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Yesterday at 5:07 pm
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Yesterday at 5:04 pm
» ’கேக்’ குதா!
by ayyasamy ram Yesterday at 12:33 pm
» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Yesterday at 11:55 am
» கடவுளைக் காண ....
by rajuselvam Yesterday at 11:20 am
» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Yesterday at 9:52 am
» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Yesterday at 7:00 am
» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 6:58 am
» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Sun May 26, 2024 6:16 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am
» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am
» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am
» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am
» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am
» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am
» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am
» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm
» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm
» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm
» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm
» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am
» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am
» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Sat May 25, 2024 11:07 am
» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Sat May 25, 2024 8:59 am
» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Sat May 25, 2024 8:35 am
» உண்மை...உண்மை!
by ayyasamy ram Sat May 25, 2024 8:28 am
by ayyasamy ram Today at 2:09 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Today at 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Today at 1:53 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:45 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:29 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Today at 12:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:15 pm
» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Today at 12:10 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:02 pm
» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Today at 12:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:51 am
» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Today at 11:47 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:29 am
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Yesterday at 8:45 pm
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Yesterday at 5:07 pm
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Yesterday at 5:04 pm
» ’கேக்’ குதா!
by ayyasamy ram Yesterday at 12:33 pm
» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Yesterday at 11:55 am
» கடவுளைக் காண ....
by rajuselvam Yesterday at 11:20 am
» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Yesterday at 9:52 am
» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Yesterday at 7:00 am
» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 6:58 am
» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Sun May 26, 2024 6:16 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am
» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am
» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am
» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am
» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am
» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am
» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am
» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm
» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm
» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm
» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm
» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am
» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am
» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Sat May 25, 2024 11:07 am
» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Sat May 25, 2024 8:59 am
» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Sat May 25, 2024 8:35 am
» உண்மை...உண்மை!
by ayyasamy ram Sat May 25, 2024 8:28 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
rajuselvam | ||||
T.N.Balasubramanian |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
Jenila | ||||
Anthony raj | ||||
jairam | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஒற்றுமையை வளர்க்கும் தேர்த் திருவிழா!
Page 1 of 1 •
தமிழகத்தில் மாதந்தோறும் சிறப்பான திருவிழாக்களை மக்கள் கொண்டாடி வருகின்றனர். குறிப்பாக சித்திரை மாதத்தில் பல திருக்கோயில்களில் தேர்த் திருவிழாக்கள் சிறப்பாக நடைபெறுவதைக் காண்கிறோம்.
இந்திய நாட்டின் பல பகுதிகளிலும் தேர்த் திருவிழாக்கள் நடைபெறுகின்றன. எனினும் தமிழகத் திருக்கோயில்களில் நடைபெறும் தேர்த் திருவிழாக்கள் சிறப்பான இடத்தைப் பெற்று விளங்குகின்றன.
தேர் பற்றிய தொன்மையான குறிப்புகள் வேத நூல்களில் காணப்படுகின்றன. ரிக் வேதத்தில் தேர், தேர்ப்பாகன், குதிரை முதலியவை மனிதனுடைய உடல் புலன்கள் ஆகியவற்றை ஒப்பிட்டு கூறப்படுகிறது. தேர் செய்யும் முறை பற்றி மயமதம்- மானசாரம் போன்ற சிற்ப நூல்கள் எடுத்துக் கூறுகின்றன. தேர்களில் விஜயம், காந்தம், ஸ்ரீகேசம், விசாலம், நிபத்ரம், பத்ரவிலாசம் என்று பல வகைகள் உள்ளது பற்றி "குமார தந்திரம்' என்ற ஆகம நூல் குறிப்பிடுகிறது.
தேர்களில் அரசன் ஏறிச் செல்வது, போர்களில் பயன்படுத்துவது போன்ற பிரிவுகள் இருந்தன. திருக்கோயில்களில் விழாக்களின்போது மக்கள் இழுக்கும் தேரினை "ரதம்' என்று கூறுவர். மாடுகள் இழுக்கும் ரதத்தினை "கோரதம்' எனக் குறிப்பிடுவர். ஸ்ரீரங்கத்தில் பங்குனி உத்திரம் அன்று பெருமாள் உலா வரும் தேர் "கோரதம்' என அழைக்கப்படுகிறது. இராமபிரானின் தந்தையான தசரதன், பத்து திசைகளிலும் தனது தேரை செலுத்த வல்லமை பெற்றிருந்ததால் "தசரதன்' என அழைக்கப்பட்டார் என அறிகிறோம்.
சங்க இலக்கியங்களிலும் தேர்கள் பற்றிய குறிப்பு காணப்படுகிறது. ஒரே பகலில் எட்டு தேர்களைச் செய்யும் தச்சன் இருந்ததாக புறநானூறு கூறுகிறது. படருவதற்கு இடம் இல்லாமல் தவித்த முல்லைக் கொடிக்காக தனது தேரையே அளித்த பாரிவள்ளலைப் பற்றி நாம் அறிவோம். மேலும் பட்டினப்பாலை, குறுந்தொகை, கலித்தொகையிலும் தேர்கள் பற்றிய குறிப்பு காணப்படுகிறது.
பசுவின் கன்று மீது தேரினை ஏற்றிக் கொன்ற தனது மகனை, மகன் என்றும் பாராமல் தேர்காலில் இட்ட மனுநீதிச் சோழன் வரலாறு தேரில் சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளதை திருவாரூர் கோயிலில் கண்டு மகிழலாம். சென்னை அருகே மப்பேடு சிங்கீசுவரர் கோயிலிலும் காணலாம்.
திருநாவுக்கரசர் பெருமான் தமது திருப்பதிகத்தில் கோயிலின் அமைப்பில் பல வகைகளைப் பற்றி குறிப்பிடுகிறார். அதில் ஒன்று "கரக்கோயில்'. சிதம்பரம் அருகில் உள்ள மேலக்கடம்பூர் கோயிலின் கருவறை தேர் வடிவில் சக்கரங்களுடன் அமைந்துள்ளது. இக்கோயிலை "தென்கடம்பைத் திருக்கரக் கோயிலான்' என்று அப்பர் பெருமான் போற்றுகின்றார்.
சிதம்பரம் கோயிலில் ஆடல் வல்லான் எழுந்தருளும் கருவறைக்கு எதிரே "நிருத்த சபை' என்ற மண்டபம் உள்ளது. இங்கு இறைவன் 'ஊர்த்துவ தாண்டவம்' ஆடும் நிலையில் கண்டு வணங்கலாம். இம்மண்டபத்தின் இருபக்கங்களிலும் சக்கரங்களும்- அதனை குதிரை இழுத்துச் செல்வது போன்ற சிற்பமும் காணப்படுகிறது. இம்மண்டபத்தை "தேர்க்கோயில்' என விக்கிரமசோழன் கல்வெட்டு குறிப்பிடுகிறது. இது போன்ற அமைப்பு உள்ள தேர் மண்டபங்களை ஸ்ரீரங்கம், தாராசுரம், கும்பகோணம் நாகேசுவரசுவாமி கோயில், துக்காச்சி, திரிபுவனம், திருவக்கரை, குன்றாண்டார் கோயில் போன்ற கோயில்களில் காணலாம்.
கும்பகோணம் சாரங்கபாணித் திருக்கோயில் தேர்த்திருவிழா மிகவும் சிறப்பானது. திருமங்கையாழ்வார் இத்தலத்திற்காக "திருவெழுகூற்றிருக்கை' என்ற சித்திரக் கவிதையை தேர் போன்ற ரத பந்த அமைப்பில் பாடி அருளியுள்ளார். இக்கோயிலின் கருவறையும் தேர் வடிவில் குதிரை- யானை இழுப்பது போல அமைந்துள்ளது. இதனை வைதீக விமானம், சோமசந்த விமானம் எனக் குறிப்பிடுகின்றனர்.
சிற்பங்களிலும் தேர் வடிவம் சிறப்பிடம் பெற்று விளங்குகிறது. சிவபெருமான் திரிபுர அசுரர்களை அழிக்கச் செல்லும்போது தேரில் செல்கிறார். தேரை பிரம்மன் செலுத்த, சூரியன், சந்திரன் இருவரும் சக்கரங்களாக அமைகின்றனர். அத்தகைய நிலையிலிருக்கும் சிற்பங்களை திருவதிகை, தாராசுரம், காஞ்சிபுரம், தஞ்சை கோயில்களில் காணலாம்.
சூரியனது வடிவம் உள்ள சிற்பங்களில் ஒரு சக்கரம் உடைய தேரின் மீது ஏழு குதிரைகள் இழுத்து வரும் நிலையில் காணலாம். இத்தகைய சிற்பங்களை சிதம்பரம், கங்கைகொண்டசோழபுரம் கோயில்களில் காணமுடிகிறது. காதல் தெய்வமான மன்மதனும் வில்லேந்தி தேரில் செல்வது போன்று சிற்பங்களில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
திருக்கோயில்களில் காணப்படும் ஓவியங்களிலும் தேர்கள் இடம் பெற்றுள்ளன. இராமாயண காப்பியத்தைச் சித்திரிக்கும் ஓவியங்களில் இராமனும்- இராவணனும் போர் செய்யும் காட்சியில் தேரில் இருவரும் நின்று போர் செய்வதைக் காண முடிகிறது. மதுரையில் கோயில் கொண்டு விளங்கும் தேவி மீனாட்சி எண்திசை காவலர்களுடன் போரிடும் (திக்விஜயக் காட்சி) காட்சி பொற்றாமரைக்குளம் அருகே மண்டபத்தில் ஓவியமாகத் தீட்டப்பட்டுள்ளதைக் காணலாம். நாயக்கர் கால ஓவியம் இது! மீனாட்சி தேரில் இருந்தபடி போர் செய்யும் காட்சியைக் காணலாம்!
தேர்த் திருவிழாக்கள் பல திருக்கோயில்களில் சிறப்பாக நடைபெறுகின்றன. ஸ்ரீரங்கம், காஞ்சிபுரம், மதுரை, திருவையாறு, திருவிடைமருதூர், திருவாரூர், ஸ்ரீவில்லிபுத்தூர், திருவண்ணாமலை, எலவானாசூர் போன்ற பல திருக்கோயில்களில் தேர்த் திருவிழா நடத்தவும், தேர்களையும் செய்து அளித்ததாக கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன.
மதுரை நாயக்க மன்னர்கள் பலவகையான காசுகளை வெளியிட்டுள்ளனர். அவற்றில் ஒன்றில் ஒருபுறம் தேரின் வடிவமும்- மறுபுறம் "ஸ்ரீதர' என்று தெலுங்கிலும் பொறிக்கப்பட்டுள்ளது. திருமலைநாயக்க மன்னர் மதுரை கோயிலுக்குத் தேர்களை செய்து அளித்துள்ளார். அதன் நினைவாக இக்காசுகளை வெளியிட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
இன்று பல திருக்கோயில்களில் தங்கத் தேரில் இறைவன்- இறைவி எழுந்தருளுவதைக் காண்கிறோம் பழனி, திருத்தணி, திருச்செந்தூர், சமயபுரம், ரத்தினகிரி, திருவேற்காடு, வடபழனி, மயிலை முண்டகக்கண்ணியம்மன் கோயில் போன்ற பல திருக்கோயில்களில் தங்கத்தேர் வழிபாடுகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.
தேர் மரத்தால் செய்யப்பட்டாலும் ஒரு கோயிலின் அனைத்துப் பகுதிகளும் உள்ளன. இதனை "நகரும் கோயில்' எனக் குறிப்பிடுவர். தேரில் இறைவனை தரிசித்தால் மறுபிறவி கிடையாது எனவும், தேரோட்டம் நாட்டில் அமைதியையும் செழிப்பினையும் உண்டாக்கும் என ஆகமங்கள் குறிப்பிடுகின்றன.
தேர்த் திருவிழாக்கள் மக்கள் தங்கள் வேற்றுமைகளை மறக்கவும்- ஒற்றுமையை வளர்க்கவும் உதவுகின்றன என்றால் மிகையில்லை! இவற்றை போற்றி காக்க வேண்டியது நமது கடமை!
-கி.ஸ்ரீதரன்
தொல்லியல் துறை, துணை கண்காணிப்பாளர் (ஓய்வு)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
எங்க ஊரிலும் நிறைய தேர் திருவிழா நடக்கிறது அனைத்துமே தேர் விழாக்களும் ஒற்றுமையை வளர்கிறது என்பது உண்மை தான்
சில இடங்களில் பிரச்சனைகள் வருகிறது அதற்கு மிக முக்கிய காரணம் மதுபானம் தான்
பதிவு
சில இடங்களில் பிரச்சனைகள் வருகிறது அதற்கு மிக முக்கிய காரணம் மதுபானம் தான்
பதிவு
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|