புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Today at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Today at 7:18 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஒற்றுமையை  வளர்க்கும்  தேர்த் திருவிழா! Poll_c10ஒற்றுமையை  வளர்க்கும்  தேர்த் திருவிழா! Poll_m10ஒற்றுமையை  வளர்க்கும்  தேர்த் திருவிழா! Poll_c10 
65 Posts - 43%
ayyasamy ram
ஒற்றுமையை  வளர்க்கும்  தேர்த் திருவிழா! Poll_c10ஒற்றுமையை  வளர்க்கும்  தேர்த் திருவிழா! Poll_m10ஒற்றுமையை  வளர்க்கும்  தேர்த் திருவிழா! Poll_c10 
56 Posts - 37%
சண்முகம்.ப
ஒற்றுமையை  வளர்க்கும்  தேர்த் திருவிழா! Poll_c10ஒற்றுமையை  வளர்க்கும்  தேர்த் திருவிழா! Poll_m10ஒற்றுமையை  வளர்க்கும்  தேர்த் திருவிழா! Poll_c10 
8 Posts - 5%
T.N.Balasubramanian
ஒற்றுமையை  வளர்க்கும்  தேர்த் திருவிழா! Poll_c10ஒற்றுமையை  வளர்க்கும்  தேர்த் திருவிழா! Poll_m10ஒற்றுமையை  வளர்க்கும்  தேர்த் திருவிழா! Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
ஒற்றுமையை  வளர்க்கும்  தேர்த் திருவிழா! Poll_c10ஒற்றுமையை  வளர்க்கும்  தேர்த் திருவிழா! Poll_m10ஒற்றுமையை  வளர்க்கும்  தேர்த் திருவிழா! Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
ஒற்றுமையை  வளர்க்கும்  தேர்த் திருவிழா! Poll_c10ஒற்றுமையை  வளர்க்கும்  தேர்த் திருவிழா! Poll_m10ஒற்றுமையை  வளர்க்கும்  தேர்த் திருவிழா! Poll_c10 
3 Posts - 2%
jairam
ஒற்றுமையை  வளர்க்கும்  தேர்த் திருவிழா! Poll_c10ஒற்றுமையை  வளர்க்கும்  தேர்த் திருவிழா! Poll_m10ஒற்றுமையை  வளர்க்கும்  தேர்த் திருவிழா! Poll_c10 
2 Posts - 1%
சிவா
ஒற்றுமையை  வளர்க்கும்  தேர்த் திருவிழா! Poll_c10ஒற்றுமையை  வளர்க்கும்  தேர்த் திருவிழா! Poll_m10ஒற்றுமையை  வளர்க்கும்  தேர்த் திருவிழா! Poll_c10 
1 Post - 1%
Manimegala
ஒற்றுமையை  வளர்க்கும்  தேர்த் திருவிழா! Poll_c10ஒற்றுமையை  வளர்க்கும்  தேர்த் திருவிழா! Poll_m10ஒற்றுமையை  வளர்க்கும்  தேர்த் திருவிழா! Poll_c10 
1 Post - 1%
Poomagi
ஒற்றுமையை  வளர்க்கும்  தேர்த் திருவிழா! Poll_c10ஒற்றுமையை  வளர்க்கும்  தேர்த் திருவிழா! Poll_m10ஒற்றுமையை  வளர்க்கும்  தேர்த் திருவிழா! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஒற்றுமையை  வளர்க்கும்  தேர்த் திருவிழா! Poll_c10ஒற்றுமையை  வளர்க்கும்  தேர்த் திருவிழா! Poll_m10ஒற்றுமையை  வளர்க்கும்  தேர்த் திருவிழா! Poll_c10 
195 Posts - 50%
ayyasamy ram
ஒற்றுமையை  வளர்க்கும்  தேர்த் திருவிழா! Poll_c10ஒற்றுமையை  வளர்க்கும்  தேர்த் திருவிழா! Poll_m10ஒற்றுமையை  வளர்க்கும்  தேர்த் திருவிழா! Poll_c10 
139 Posts - 36%
mohamed nizamudeen
ஒற்றுமையை  வளர்க்கும்  தேர்த் திருவிழா! Poll_c10ஒற்றுமையை  வளர்க்கும்  தேர்த் திருவிழா! Poll_m10ஒற்றுமையை  வளர்க்கும்  தேர்த் திருவிழா! Poll_c10 
17 Posts - 4%
prajai
ஒற்றுமையை  வளர்க்கும்  தேர்த் திருவிழா! Poll_c10ஒற்றுமையை  வளர்க்கும்  தேர்த் திருவிழா! Poll_m10ஒற்றுமையை  வளர்க்கும்  தேர்த் திருவிழா! Poll_c10 
9 Posts - 2%
சண்முகம்.ப
ஒற்றுமையை  வளர்க்கும்  தேர்த் திருவிழா! Poll_c10ஒற்றுமையை  வளர்க்கும்  தேர்த் திருவிழா! Poll_m10ஒற்றுமையை  வளர்க்கும்  தேர்த் திருவிழா! Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
ஒற்றுமையை  வளர்க்கும்  தேர்த் திருவிழா! Poll_c10ஒற்றுமையை  வளர்க்கும்  தேர்த் திருவிழா! Poll_m10ஒற்றுமையை  வளர்க்கும்  தேர்த் திருவிழா! Poll_c10 
7 Posts - 2%
jairam
ஒற்றுமையை  வளர்க்கும்  தேர்த் திருவிழா! Poll_c10ஒற்றுமையை  வளர்க்கும்  தேர்த் திருவிழா! Poll_m10ஒற்றுமையை  வளர்க்கும்  தேர்த் திருவிழா! Poll_c10 
4 Posts - 1%
Jenila
ஒற்றுமையை  வளர்க்கும்  தேர்த் திருவிழா! Poll_c10ஒற்றுமையை  வளர்க்கும்  தேர்த் திருவிழா! Poll_m10ஒற்றுமையை  வளர்க்கும்  தேர்த் திருவிழா! Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
ஒற்றுமையை  வளர்க்கும்  தேர்த் திருவிழா! Poll_c10ஒற்றுமையை  வளர்க்கும்  தேர்த் திருவிழா! Poll_m10ஒற்றுமையை  வளர்க்கும்  தேர்த் திருவிழா! Poll_c10 
3 Posts - 1%
Rutu
ஒற்றுமையை  வளர்க்கும்  தேர்த் திருவிழா! Poll_c10ஒற்றுமையை  வளர்க்கும்  தேர்த் திருவிழா! Poll_m10ஒற்றுமையை  வளர்க்கும்  தேர்த் திருவிழா! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒற்றுமையை வளர்க்கும் தேர்த் திருவிழா!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jun 02, 2013 12:14 pm



தமிழகத்தில் மாதந்தோறும் சிறப்பான திருவிழாக்களை மக்கள் கொண்டாடி வருகின்றனர். குறிப்பாக சித்திரை மாதத்தில் பல திருக்கோயில்களில் தேர்த் திருவிழாக்கள் சிறப்பாக நடைபெறுவதைக் காண்கிறோம்.

இந்திய நாட்டின் பல பகுதிகளிலும் தேர்த் திருவிழாக்கள் நடைபெறுகின்றன. எனினும் தமிழகத் திருக்கோயில்களில் நடைபெறும் தேர்த் திருவிழாக்கள் சிறப்பான இடத்தைப் பெற்று விளங்குகின்றன.

தேர் பற்றிய தொன்மையான குறிப்புகள் வேத நூல்களில் காணப்படுகின்றன. ரிக் வேதத்தில் தேர், தேர்ப்பாகன், குதிரை முதலியவை மனிதனுடைய உடல் புலன்கள் ஆகியவற்றை ஒப்பிட்டு கூறப்படுகிறது. தேர் செய்யும் முறை பற்றி மயமதம்- மானசாரம் போன்ற சிற்ப நூல்கள் எடுத்துக் கூறுகின்றன. தேர்களில் விஜயம், காந்தம், ஸ்ரீகேசம், விசாலம், நிபத்ரம், பத்ரவிலாசம் என்று பல வகைகள் உள்ளது பற்றி "குமார தந்திரம்' என்ற ஆகம நூல் குறிப்பிடுகிறது.

தேர்களில் அரசன் ஏறிச் செல்வது, போர்களில் பயன்படுத்துவது போன்ற பிரிவுகள் இருந்தன. திருக்கோயில்களில் விழாக்களின்போது மக்கள் இழுக்கும் தேரினை "ரதம்' என்று கூறுவர். மாடுகள் இழுக்கும் ரதத்தினை "கோரதம்' எனக் குறிப்பிடுவர். ஸ்ரீரங்கத்தில் பங்குனி உத்திரம் அன்று பெருமாள் உலா வரும் தேர் "கோரதம்' என அழைக்கப்படுகிறது. இராமபிரானின் தந்தையான தசரதன், பத்து திசைகளிலும் தனது தேரை செலுத்த வல்லமை பெற்றிருந்ததால் "தசரதன்' என அழைக்கப்பட்டார் என அறிகிறோம்.

சங்க இலக்கியங்களிலும் தேர்கள் பற்றிய குறிப்பு காணப்படுகிறது. ஒரே பகலில் எட்டு தேர்களைச் செய்யும் தச்சன் இருந்ததாக புறநானூறு கூறுகிறது. படருவதற்கு இடம் இல்லாமல் தவித்த முல்லைக் கொடிக்காக தனது தேரையே அளித்த பாரிவள்ளலைப் பற்றி நாம் அறிவோம். மேலும் பட்டினப்பாலை, குறுந்தொகை, கலித்தொகையிலும் தேர்கள் பற்றிய குறிப்பு காணப்படுகிறது.

பசுவின் கன்று மீது தேரினை ஏற்றிக் கொன்ற தனது மகனை, மகன் என்றும் பாராமல் தேர்காலில் இட்ட மனுநீதிச் சோழன் வரலாறு தேரில் சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளதை திருவாரூர் கோயிலில் கண்டு மகிழலாம். சென்னை அருகே மப்பேடு சிங்கீசுவரர் கோயிலிலும் காணலாம்.

திருநாவுக்கரசர் பெருமான் தமது திருப்பதிகத்தில் கோயிலின் அமைப்பில் பல வகைகளைப் பற்றி குறிப்பிடுகிறார். அதில் ஒன்று "கரக்கோயில்'. சிதம்பரம் அருகில் உள்ள மேலக்கடம்பூர் கோயிலின் கருவறை தேர் வடிவில் சக்கரங்களுடன் அமைந்துள்ளது. இக்கோயிலை "தென்கடம்பைத் திருக்கரக் கோயிலான்' என்று அப்பர் பெருமான் போற்றுகின்றார்.

சிதம்பரம் கோயிலில் ஆடல் வல்லான் எழுந்தருளும் கருவறைக்கு எதிரே "நிருத்த சபை' என்ற மண்டபம் உள்ளது. இங்கு இறைவன் 'ஊர்த்துவ தாண்டவம்' ஆடும் நிலையில் கண்டு வணங்கலாம். இம்மண்டபத்தின் இருபக்கங்களிலும் சக்கரங்களும்- அதனை குதிரை இழுத்துச் செல்வது போன்ற சிற்பமும் காணப்படுகிறது. இம்மண்டபத்தை "தேர்க்கோயில்' என விக்கிரமசோழன் கல்வெட்டு குறிப்பிடுகிறது. இது போன்ற அமைப்பு உள்ள தேர் மண்டபங்களை ஸ்ரீரங்கம், தாராசுரம், கும்பகோணம் நாகேசுவரசுவாமி கோயில், துக்காச்சி, திரிபுவனம், திருவக்கரை, குன்றாண்டார் கோயில் போன்ற கோயில்களில் காணலாம்.

கும்பகோணம் சாரங்கபாணித் திருக்கோயில் தேர்த்திருவிழா மிகவும் சிறப்பானது. திருமங்கையாழ்வார் இத்தலத்திற்காக "திருவெழுகூற்றிருக்கை' என்ற சித்திரக் கவிதையை தேர் போன்ற ரத பந்த அமைப்பில் பாடி அருளியுள்ளார். இக்கோயிலின் கருவறையும் தேர் வடிவில் குதிரை- யானை இழுப்பது போல அமைந்துள்ளது. இதனை வைதீக விமானம், சோமசந்த விமானம் எனக் குறிப்பிடுகின்றனர்.

சிற்பங்களிலும் தேர் வடிவம் சிறப்பிடம் பெற்று விளங்குகிறது. சிவபெருமான் திரிபுர அசுரர்களை அழிக்கச் செல்லும்போது தேரில் செல்கிறார். தேரை பிரம்மன் செலுத்த, சூரியன், சந்திரன் இருவரும் சக்கரங்களாக அமைகின்றனர். அத்தகைய நிலையிலிருக்கும் சிற்பங்களை திருவதிகை, தாராசுரம், காஞ்சிபுரம், தஞ்சை கோயில்களில் காணலாம்.

சூரியனது வடிவம் உள்ள சிற்பங்களில் ஒரு சக்கரம் உடைய தேரின் மீது ஏழு குதிரைகள் இழுத்து வரும் நிலையில் காணலாம். இத்தகைய சிற்பங்களை சிதம்பரம், கங்கைகொண்டசோழபுரம் கோயில்களில் காணமுடிகிறது. காதல் தெய்வமான மன்மதனும் வில்லேந்தி தேரில் செல்வது போன்று சிற்பங்களில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

திருக்கோயில்களில் காணப்படும் ஓவியங்களிலும் தேர்கள் இடம் பெற்றுள்ளன. இராமாயண காப்பியத்தைச் சித்திரிக்கும் ஓவியங்களில் இராமனும்- இராவணனும் போர் செய்யும் காட்சியில் தேரில் இருவரும் நின்று போர் செய்வதைக் காண முடிகிறது. மதுரையில் கோயில் கொண்டு விளங்கும் தேவி மீனாட்சி எண்திசை காவலர்களுடன் போரிடும் (திக்விஜயக் காட்சி) காட்சி பொற்றாமரைக்குளம் அருகே மண்டபத்தில் ஓவியமாகத் தீட்டப்பட்டுள்ளதைக் காணலாம். நாயக்கர் கால ஓவியம் இது! மீனாட்சி தேரில் இருந்தபடி போர் செய்யும் காட்சியைக் காணலாம்!

தேர்த் திருவிழாக்கள் பல திருக்கோயில்களில் சிறப்பாக நடைபெறுகின்றன. ஸ்ரீரங்கம், காஞ்சிபுரம், மதுரை, திருவையாறு, திருவிடைமருதூர், திருவாரூர், ஸ்ரீவில்லிபுத்தூர், திருவண்ணாமலை, எலவானாசூர் போன்ற பல திருக்கோயில்களில் தேர்த் திருவிழா நடத்தவும், தேர்களையும் செய்து அளித்ததாக கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன.

மதுரை நாயக்க மன்னர்கள் பலவகையான காசுகளை வெளியிட்டுள்ளனர். அவற்றில் ஒன்றில் ஒருபுறம் தேரின் வடிவமும்- மறுபுறம் "ஸ்ரீதர' என்று தெலுங்கிலும் பொறிக்கப்பட்டுள்ளது. திருமலைநாயக்க மன்னர் மதுரை கோயிலுக்குத் தேர்களை செய்து அளித்துள்ளார். அதன் நினைவாக இக்காசுகளை வெளியிட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

இன்று பல திருக்கோயில்களில் தங்கத் தேரில் இறைவன்- இறைவி எழுந்தருளுவதைக் காண்கிறோம் பழனி, திருத்தணி, திருச்செந்தூர், சமயபுரம், ரத்தினகிரி, திருவேற்காடு, வடபழனி, மயிலை முண்டகக்கண்ணியம்மன் கோயில் போன்ற பல திருக்கோயில்களில் தங்கத்தேர் வழிபாடுகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.

தேர் மரத்தால் செய்யப்பட்டாலும் ஒரு கோயிலின் அனைத்துப் பகுதிகளும் உள்ளன. இதனை "நகரும் கோயில்' எனக் குறிப்பிடுவர். தேரில் இறைவனை தரிசித்தால் மறுபிறவி கிடையாது எனவும், தேரோட்டம் நாட்டில் அமைதியையும் செழிப்பினையும் உண்டாக்கும் என ஆகமங்கள் குறிப்பிடுகின்றன.

தேர்த் திருவிழாக்கள் மக்கள் தங்கள் வேற்றுமைகளை மறக்கவும்- ஒற்றுமையை வளர்க்கவும் உதவுகின்றன என்றால் மிகையில்லை! இவற்றை போற்றி காக்க வேண்டியது நமது கடமை!

-கி.ஸ்ரீதரன்
தொல்லியல் துறை, துணை கண்காணிப்பாளர் (ஓய்வு)




ஒற்றுமையை  வளர்க்கும்  தேர்த் திருவிழா! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sun Jun 02, 2013 12:49 pm

எங்க ஊரிலும் நிறைய தேர் திருவிழா நடக்கிறது அனைத்துமே தேர் விழாக்களும் ஒற்றுமையை வளர்கிறது என்பது உண்மை தான்


சில இடங்களில் பிரச்சனைகள் வருகிறது அதற்கு மிக முக்கிய காரணம் மதுபானம் தான்

பதிவு அருமையிருக்கு நன்றி




ஒற்றுமையை  வளர்க்கும்  தேர்த் திருவிழா! Mஒற்றுமையை  வளர்க்கும்  தேர்த் திருவிழா! Uஒற்றுமையை  வளர்க்கும்  தேர்த் திருவிழா! Tஒற்றுமையை  வளர்க்கும்  தேர்த் திருவிழா! Hஒற்றுமையை  வளர்க்கும்  தேர்த் திருவிழா! Uஒற்றுமையை  வளர்க்கும்  தேர்த் திருவிழா! Mஒற்றுமையை  வளர்க்கும்  தேர்த் திருவிழா! Oஒற்றுமையை  வளர்க்கும்  தேர்த் திருவிழா! Hஒற்றுமையை  வளர்க்கும்  தேர்த் திருவிழா! Aஒற்றுமையை  வளர்க்கும்  தேர்த் திருவிழா! Mஒற்றுமையை  வளர்க்கும்  தேர்த் திருவிழா! Eஒற்றுமையை  வளர்க்கும்  தேர்த் திருவிழா! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக