புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:58 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:46 pm

» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:17 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:58 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 10, 2024 11:55 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நான்கு வேதங்கள் - அறம், பொருள், இன்பம் வீடு! Poll_c10நான்கு வேதங்கள் - அறம், பொருள், இன்பம் வீடு! Poll_m10நான்கு வேதங்கள் - அறம், பொருள், இன்பம் வீடு! Poll_c10 
79 Posts - 45%
ayyasamy ram
நான்கு வேதங்கள் - அறம், பொருள், இன்பம் வீடு! Poll_c10நான்கு வேதங்கள் - அறம், பொருள், இன்பம் வீடு! Poll_m10நான்கு வேதங்கள் - அறம், பொருள், இன்பம் வீடு! Poll_c10 
74 Posts - 42%
prajai
நான்கு வேதங்கள் - அறம், பொருள், இன்பம் வீடு! Poll_c10நான்கு வேதங்கள் - அறம், பொருள், இன்பம் வீடு! Poll_m10நான்கு வேதங்கள் - அறம், பொருள், இன்பம் வீடு! Poll_c10 
6 Posts - 3%
mohamed nizamudeen
நான்கு வேதங்கள் - அறம், பொருள், இன்பம் வீடு! Poll_c10நான்கு வேதங்கள் - அறம், பொருள், இன்பம் வீடு! Poll_m10நான்கு வேதங்கள் - அறம், பொருள், இன்பம் வீடு! Poll_c10 
6 Posts - 3%
Jenila
நான்கு வேதங்கள் - அறம், பொருள், இன்பம் வீடு! Poll_c10நான்கு வேதங்கள் - அறம், பொருள், இன்பம் வீடு! Poll_m10நான்கு வேதங்கள் - அறம், பொருள், இன்பம் வீடு! Poll_c10 
2 Posts - 1%
jairam
நான்கு வேதங்கள் - அறம், பொருள், இன்பம் வீடு! Poll_c10நான்கு வேதங்கள் - அறம், பொருள், இன்பம் வீடு! Poll_m10நான்கு வேதங்கள் - அறம், பொருள், இன்பம் வீடு! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
நான்கு வேதங்கள் - அறம், பொருள், இன்பம் வீடு! Poll_c10நான்கு வேதங்கள் - அறம், பொருள், இன்பம் வீடு! Poll_m10நான்கு வேதங்கள் - அறம், பொருள், இன்பம் வீடு! Poll_c10 
2 Posts - 1%
Guna.D
நான்கு வேதங்கள் - அறம், பொருள், இன்பம் வீடு! Poll_c10நான்கு வேதங்கள் - அறம், பொருள், இன்பம் வீடு! Poll_m10நான்கு வேதங்கள் - அறம், பொருள், இன்பம் வீடு! Poll_c10 
2 Posts - 1%
kargan86
நான்கு வேதங்கள் - அறம், பொருள், இன்பம் வீடு! Poll_c10நான்கு வேதங்கள் - அறம், பொருள், இன்பம் வீடு! Poll_m10நான்கு வேதங்கள் - அறம், பொருள், இன்பம் வீடு! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
நான்கு வேதங்கள் - அறம், பொருள், இன்பம் வீடு! Poll_c10நான்கு வேதங்கள் - அறம், பொருள், இன்பம் வீடு! Poll_m10நான்கு வேதங்கள் - அறம், பொருள், இன்பம் வீடு! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நான்கு வேதங்கள் - அறம், பொருள், இன்பம் வீடு! Poll_c10நான்கு வேதங்கள் - அறம், பொருள், இன்பம் வீடு! Poll_m10நான்கு வேதங்கள் - அறம், பொருள், இன்பம் வீடு! Poll_c10 
122 Posts - 53%
ayyasamy ram
நான்கு வேதங்கள் - அறம், பொருள், இன்பம் வீடு! Poll_c10நான்கு வேதங்கள் - அறம், பொருள், இன்பம் வீடு! Poll_m10நான்கு வேதங்கள் - அறம், பொருள், இன்பம் வீடு! Poll_c10 
74 Posts - 32%
mohamed nizamudeen
நான்கு வேதங்கள் - அறம், பொருள், இன்பம் வீடு! Poll_c10நான்கு வேதங்கள் - அறம், பொருள், இன்பம் வீடு! Poll_m10நான்கு வேதங்கள் - அறம், பொருள், இன்பம் வீடு! Poll_c10 
10 Posts - 4%
prajai
நான்கு வேதங்கள் - அறம், பொருள், இன்பம் வீடு! Poll_c10நான்கு வேதங்கள் - அறம், பொருள், இன்பம் வீடு! Poll_m10நான்கு வேதங்கள் - அறம், பொருள், இன்பம் வீடு! Poll_c10 
8 Posts - 3%
Jenila
நான்கு வேதங்கள் - அறம், பொருள், இன்பம் வீடு! Poll_c10நான்கு வேதங்கள் - அறம், பொருள், இன்பம் வீடு! Poll_m10நான்கு வேதங்கள் - அறம், பொருள், இன்பம் வீடு! Poll_c10 
4 Posts - 2%
Rutu
நான்கு வேதங்கள் - அறம், பொருள், இன்பம் வீடு! Poll_c10நான்கு வேதங்கள் - அறம், பொருள், இன்பம் வீடு! Poll_m10நான்கு வேதங்கள் - அறம், பொருள், இன்பம் வீடு! Poll_c10 
3 Posts - 1%
jairam
நான்கு வேதங்கள் - அறம், பொருள், இன்பம் வீடு! Poll_c10நான்கு வேதங்கள் - அறம், பொருள், இன்பம் வீடு! Poll_m10நான்கு வேதங்கள் - அறம், பொருள், இன்பம் வீடு! Poll_c10 
2 Posts - 1%
Guna.D
நான்கு வேதங்கள் - அறம், பொருள், இன்பம் வீடு! Poll_c10நான்கு வேதங்கள் - அறம், பொருள், இன்பம் வீடு! Poll_m10நான்கு வேதங்கள் - அறம், பொருள், இன்பம் வீடு! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
நான்கு வேதங்கள் - அறம், பொருள், இன்பம் வீடு! Poll_c10நான்கு வேதங்கள் - அறம், பொருள், இன்பம் வீடு! Poll_m10நான்கு வேதங்கள் - அறம், பொருள், இன்பம் வீடு! Poll_c10 
2 Posts - 1%
Baarushree
நான்கு வேதங்கள் - அறம், பொருள், இன்பம் வீடு! Poll_c10நான்கு வேதங்கள் - அறம், பொருள், இன்பம் வீடு! Poll_m10நான்கு வேதங்கள் - அறம், பொருள், இன்பம் வீடு! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நான்கு வேதங்கள் - அறம், பொருள், இன்பம் வீடு!


   
   

Page 1 of 2 1, 2  Next

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Thu Oct 18, 2012 9:29 am

நான்கு வேதங்கள் - அறம், பொருள், இன்பம் வீடு! - தொடர் பதிவு

வே என்பது ஓரெழுத்து வேர்ச் சொல். அதிலிருந்து வேதல், வேய்தல், வேலி போன்றச் சொற்கள் கிளைத்து எழும். வேகவைக்கும்போது பாத்திரத்தின் மேலே ஒரு தட்டை வைத்து மூடுவோம். கூரை வேயும் போது சுவர்களின் மீது ஓலை, ஓடு போன்றவற்றால் மூடுவோம். ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பை மற்றவரிடமிருந்து மறைக்க இடும் அமைப்பை வேலி என்கிறோம்.

அது போல பல உள்ளுறைகளை மறைத்து மூடிச் சொல்வதை வேதம் என்று ஆன்றோர் கூறினர். வேய்ந்தது வேதம் எனப்பட்டது. ஆகவே அது தூய தமிழ் வேர் ஒன்றினைக் கொண்ட தூய தமிழ்ச் சொல்.

இவ்வாறு பல உயரிய உள்ளுறைகளை மறைத்துக் கூறிய மறை - வேதம் என்பன தமிழில் பண்டைய காலம்தொட்டே இருந்துவருகின்றன. இதனை மணிவாசகர் ‘பண்டாய நான்மறை’ என்று குறிப்பிடுகிறார். ‘சதாசிவம் தத்துவம் முத்தமிழ் வேதம் என்று திருமூலர் எடுத்துக் கூறுகிறார்.

அற்சனை பாட்டேயாகும் ஆதலால் மண்மேல் நம்மை
சொற்றமிழ் பாடுகென்றான் தூமறை பாடும் வாயான்”


என்பது பெரியபுராண வாக்கு. அதாவது தூயமறைகளை எல்லாம் இறைவன் தம் வாயினாலேயே பாடியருளினான் என்கிறார் சேக்கிழார். உடனே நமக்கு சேக்கிழாருக்கு முன்னால் அப்படியாரும் சொன்னார்களா என்று கேட்கத் தோன்றலாம்.

(தொடரும்)

sshanthi
sshanthi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010

Postsshanthi Thu Oct 18, 2012 4:35 pm

தொடருங்கள் வேதத்தை படிக்க அவலாக உள்ளோம்



ஏழையை பிறப்பது தவறல்ல ஏழையாகவே இருப்பதுதான் தவறு
ஓம் சாந்தி
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Fri Oct 19, 2012 12:21 pm

சங்க காலத்தில் கூட வேதம் இறைவனால் பாடப்பட்டது என்றே கூறப்பட்டது. புறநானூற்றில் 166 ஆவது பாட்டில் இது அழகாகக் கூறப்பட்டிருக்கிறது.

“நன்றாய்ந்த நீணிமிர் சடை
முதுமுதல்வன் வாய்போகா
தொன்று புரிந்த ஈரிரண்டின்
ஆறுணர்ந்த ஒரு முதுநூல்”


என்று அப்பாடல் தொடங்குகிறது. சிவபெருமானை முதுமுதல்வன் என்று அப்பாடல் கூறுகிறது. அந்த முதுமுதல்வனாகிய சிவபெருமானின் திருவாயிலிருந்து மறைகள் நீங்காமல் வந்து கொண்டிருக்கிறதாம்.

பெருமான் பாடியதுதான் தமிழ் வேதம்; அதுவே நமக்கு வேதம்.

திருஞானசம்பந்தக் குழந்தை ஒரு வினா எழுப்புகிறது. கல்லால மரத்தின் கீழ் அமர்ந்த பெருமானே! ஏதோ வேதம் சொன்னாயே? என்ன என்று சேய்ஞலூரில் கேட்கிறது.

நூலடைந்த கொள்கையாலே நுன்னடி கூடுதற்கு
மாலடைந்த நால்வர் கேட்க நல்கிய நல்லறத்தை
ஆலடைந்த நீழல்மேவி அருமறை சொன்னதென்னே
சேலடந்த தண்கழனிச் சேய்ஞலூர் மேயவனே! “


இது சம்பந்தர் திருசேய்ஞலூரில் பாடியருளியது. சேய்ஞலூர் முருகப்பெருமான் குழந்தையாக இருந்து வணங்கிய தலம். அத்துடன் சண்டீசர் குழந்தை வணங்கிய தலம். இங்கே பார்த்தீர்களானால் அருமறை சொன்னதென்னே என்ற கேள்வி எழுப்பப் பட்டுள்ளது. பதில் இப்பாடலில் இல்லை.

(தொடரும்)

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Fri Oct 19, 2012 1:13 pm

நன்று சாமி....தொடருங்கள் மகிழ்ச்சி

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sat Oct 20, 2012 10:14 am

பதிலை வயதான பெரியவர் என்று அழைக்கப்படுகிற சிவபெருமான் தலமான திருமுதுகுன்றப் பதிகத்தில் கூறுகிறார் சம்பந்தர்.

சுழிந்த கங்கை தோய்ந்த திங்கள் தொல்அரா நல்லிதழி
சழிந்த சென்னிச் சைவவேடம் தானினைந் தைம்புலனும்
அழிந்த சிந்தை அந்தணாளர்க்கு அறம் பொருள் இன்பம் வீடு
மொழிந்த வாயான் முக்கணாதி மேயது முதுகுன்றே

அதாவது ‘மாலடைந்த நால்வர் கேட்க’ என்று சேய்ஞலூர் பாடலில் குறிப்பிட்ட சனகர், சனந்தனர், சனாதனர், சனற்குமாரர் என்ற நால்வரைக் குறிப்பிட்டவர், இந்தப் பாடலில் ‘அழிந்த சிந்தனை அந்தணாளர்’ என்று அவர்களைக் குறிப்பிடுகிறார்.

அங்கே அவர்களுக்கு சொன்ன அருமறை என்னே என்று வினாவி அவாய் நிலையாக (SUSPENSE) விட்டவர் இங்கே அது என்ன என்று விளம்புகிறார். அவை அறம், பொருள், இன்பம், வீடு என்றார். இந்த நான்கும் தமிழர்க்கே உரித்தானது என்பதை எல்லா அறிஞர்களும் கூறுகின்றனர். சிவஞான முனிவரும் தொல்காப்பிய முதல் சூத்திர விருத்தியுரையில் இவை தமிழுக்கே உரிய பகுப்பு என்று கூறுகிறார்.

எனவே சிவபெருமானால் அருளப்பட்ட அறம், பொருள், இன்பம், வீடு என்பதுதான் நம்முடைய வேதம். இதுதான் நம்முடையது. சுயம்புவான வடமொழி ரிக், யசுர், சாமம், அதர்வணம் வேதத்திற்கும் நமக்கும் சம்பந்தமில்லை.
(தொடரும்)

ஆரூரன்
ஆரூரன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012

Postஆரூரன் Sat Oct 20, 2012 4:39 pm

சாமி wrote:
எனவே சிவபெருமானால் அருளப்பட்ட அறம், பொருள், இன்பம், வீடு என்பதுதான் நம்முடைய வேதம். இதுதான் நம்முடையது. சுயம்புவான வடமொழி ரிக், யசுர், சாமம், அதர்வணம் வேதத்திற்கும் நமக்கும் சம்பந்தமில்லை.

நன்றி ஐயா!

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Fri Nov 02, 2012 10:36 pm

எண்ணார்மும் மதிலெய்த விமையா முக்கண்
பண்ணார்நான் மறைபாடும் பரம யோகி
கண்ணார்நீ றணிமார்பன் கள்ளின் மேயான்
பெண்ணாணாம் பெருமானெம் பிஞ்ஞ கனே.

பகைவர்களாகிய அசுரர்களின் மும்மதில்களை எய்து அழித்தவனும், இமையாத மூன்று கண்களை உடையவனும் இசையமைப்போடு கூடிய அறம், பொருள், இன்பம், வீடு என்கிற நான்மறைகளைப் பாடி மகிழும் மேலான யோகியும், கண்களைக் கவரும் வண்ணம் திருநீறு அணிந்த மார் பினனும், பெண் ஆண் என இருபாலாகக் கருதும் உமைபாகனும் ஆகிய பெருமான், கள்ளில் என்னும் இத்தலத்தில் எழுந்தருளியுள்ளான்.

முதல் திருமுறை - சம்பந்தர் அருளியது - 119 திருக்கள்ளில் - பாடல் என் 3

Kuzhali
Kuzhali
பண்பாளர்

பதிவுகள் : 87
இணைந்தது : 31/10/2012

PostKuzhali Sat Nov 10, 2012 12:19 pm

வேதங்கள் படிக்கவும், புரிந்து கொள்ளவும் எளிமையாக உள்ளது. ஆனால் வேதங்கள் நான்கு அறம், பொருள், இன்பம், வீடு என்று படித்த ஞாபகம் இல்லையே.

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Fri Nov 16, 2012 10:29 am

Kuzhali wrote:வேதங்கள் படிக்கவும், புரிந்து கொள்ளவும் எளிமையாக உள்ளது. ஆனால் வேதங்கள் நான்கு அறம், பொருள், இன்பம், வீடு என்று படித்த ஞாபகம் இல்லையே.

கருத்துக்கு நன்றி!
பல செய்திகள் நமக்கு இருட்டடிப்பு செய்யப்பட்டிருக்கின்றன.
அதில் இதுவும் ஒன்று.
நம்மவர்கள் நமது இலக்கியங்களை ஆழ்ந்து படிப்பதில்லை.
தவறாக ஒருவர் கூறும் கருத்தையும் விளக்கம் கேட்பதில்லை.
அதன் விளைவுதான் இது.

சென்னை பல்கலைகழகத்தில் தற்போது நடத்தப்படும் 'சைவ சித்தாந்த படிப்பில்' சைவம் அதன் கோட்பாடுகள் வடமொழியில் இருந்துதான் வந்தது என்று ஒரு பாடமே உள்ளது.
இந்த கொடுமையை என்ன சொல்வது?

நாம் தூங்கும் வரை இவை எல்லாம் நடக்கத்தான் செய்யும். நன்றி!

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Wed Nov 21, 2012 10:26 pm

ஒன்றவன் றானே இரண்டவன் இன்னருள்
நின்றனன் மூன்றினுள் நான்குணர்ந் தான்ஐந்து
வென்றனன் ஆறு விரிந்தனன் ஏழும்பர்ச்
சென்றனன் தான்இருந் தான்உணர்ந் தெட்டே.


ஒருபொருளாய் உள்ளவன் முதற்கடவுளே; வேறில்லை.
அவனது அருள், `அறக்கருணை, மறக்கருணை` என இரண்டாய் இருக்கும்.
அவ் அருள்காரணமாக அவன், `இலயம், போகம், அதிகாரம்` என்னும் மூன்று நிலைகளில் நிற்பான்.
நின்று, `அறம், பொருள், இன்பம், வீடு` என்னும் நான்கு வேதங்களையும் தானே உணர்ந்து உலகிற்கு உணர்த்தினான்.
செவிமுதலிய ஐம்பொறிகளின் வழி நுகரப்படும் ஓசை முதலிய ஐம்புலன்களின் மேல் எழுகின்ற ஐந்து அவாவினையும் வென்றான். `
மந்திரம், பதம், வன்னம், புவனம், தத்துவம், கலை` என்னும் ஆறு அத்துவாக்களாக விரிந்தான். `
பிரம லோகம், விட்டு ணுலோகம், உருத்திர லோகம், மகேசுர லோகம், சதாசிவ லோகம், சத்தி லோகம், சிவ லோகம்` என்னும் ஏழுலகங்களுக்கும் மேற்சென்று தானேயாய் இருந்தான். அவனை, நெஞ்சே, நீ அறிந்து அடை.
(பத்தாம் திருமுறை / திருமந்திரம் / கடவுள் வாழ்த்து / பாடல் எண் : 1 )


Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக