புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருக்குறள் காட்டும் தேவர் யார்? Poll_c10திருக்குறள் காட்டும் தேவர் யார்? Poll_m10திருக்குறள் காட்டும் தேவர் யார்? Poll_c10 
68 Posts - 53%
heezulia
திருக்குறள் காட்டும் தேவர் யார்? Poll_c10திருக்குறள் காட்டும் தேவர் யார்? Poll_m10திருக்குறள் காட்டும் தேவர் யார்? Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
திருக்குறள் காட்டும் தேவர் யார்? Poll_c10திருக்குறள் காட்டும் தேவர் யார்? Poll_m10திருக்குறள் காட்டும் தேவர் யார்? Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
திருக்குறள் காட்டும் தேவர் யார்? Poll_c10திருக்குறள் காட்டும் தேவர் யார்? Poll_m10திருக்குறள் காட்டும் தேவர் யார்? Poll_c10 
3 Posts - 2%
D. sivatharan
திருக்குறள் காட்டும் தேவர் யார்? Poll_c10திருக்குறள் காட்டும் தேவர் யார்? Poll_m10திருக்குறள் காட்டும் தேவர் யார்? Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
திருக்குறள் காட்டும் தேவர் யார்? Poll_c10திருக்குறள் காட்டும் தேவர் யார்? Poll_m10திருக்குறள் காட்டும் தேவர் யார்? Poll_c10 
1 Post - 1%
Guna.D
திருக்குறள் காட்டும் தேவர் யார்? Poll_c10திருக்குறள் காட்டும் தேவர் யார்? Poll_m10திருக்குறள் காட்டும் தேவர் யார்? Poll_c10 
1 Post - 1%
Shivanya
திருக்குறள் காட்டும் தேவர் யார்? Poll_c10திருக்குறள் காட்டும் தேவர் யார்? Poll_m10திருக்குறள் காட்டும் தேவர் யார்? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திருக்குறள் காட்டும் தேவர் யார்? Poll_c10திருக்குறள் காட்டும் தேவர் யார்? Poll_m10திருக்குறள் காட்டும் தேவர் யார்? Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
திருக்குறள் காட்டும் தேவர் யார்? Poll_c10திருக்குறள் காட்டும் தேவர் யார்? Poll_m10திருக்குறள் காட்டும் தேவர் யார்? Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
திருக்குறள் காட்டும் தேவர் யார்? Poll_c10திருக்குறள் காட்டும் தேவர் யார்? Poll_m10திருக்குறள் காட்டும் தேவர் யார்? Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
திருக்குறள் காட்டும் தேவர் யார்? Poll_c10திருக்குறள் காட்டும் தேவர் யார்? Poll_m10திருக்குறள் காட்டும் தேவர் யார்? Poll_c10 
15 Posts - 3%
prajai
திருக்குறள் காட்டும் தேவர் யார்? Poll_c10திருக்குறள் காட்டும் தேவர் யார்? Poll_m10திருக்குறள் காட்டும் தேவர் யார்? Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
திருக்குறள் காட்டும் தேவர் யார்? Poll_c10திருக்குறள் காட்டும் தேவர் யார்? Poll_m10திருக்குறள் காட்டும் தேவர் யார்? Poll_c10 
9 Posts - 2%
jairam
திருக்குறள் காட்டும் தேவர் யார்? Poll_c10திருக்குறள் காட்டும் தேவர் யார்? Poll_m10திருக்குறள் காட்டும் தேவர் யார்? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
திருக்குறள் காட்டும் தேவர் யார்? Poll_c10திருக்குறள் காட்டும் தேவர் யார்? Poll_m10திருக்குறள் காட்டும் தேவர் யார்? Poll_c10 
4 Posts - 1%
Jenila
திருக்குறள் காட்டும் தேவர் யார்? Poll_c10திருக்குறள் காட்டும் தேவர் யார்? Poll_m10திருக்குறள் காட்டும் தேவர் யார்? Poll_c10 
4 Posts - 1%
Rutu
திருக்குறள் காட்டும் தேவர் யார்? Poll_c10திருக்குறள் காட்டும் தேவர் யார்? Poll_m10திருக்குறள் காட்டும் தேவர் யார்? Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருக்குறள் காட்டும் தேவர் யார்?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 07, 2012 11:26 pm

குறள்:

தேவர் அனையர் கயவர் அவருந்தாம்
மேவன செய்தொழுக லான் - 1073

தற்போதைய விளக்கங்கள்:

கலைஞர் உரை: புராணங்களில் வரும் தேவர்களைப் போல் மனம் விரும்பியதையெல்லாம் செய்யக்கூடியவர்கள் கயவர்கள் என்பதால், இருவரையும் சமமாகக் கருதலாம்.

மு.வ உரை: கயவரும் தேவரைப் போல் தான் விரும்புகின்றவைகளைச் செய்து மனம் போன போக்கில் நடத்தலால், கயவர் தேவரைப் போன்றவர்.

சாலமன் பாப்பையா உரை: தம்மைக் கட்டுப்படுத்துவார் இல்லாமல் தாம் விரும்பியபடி எல்லாம் செய்து வாழ்வதால், கயவர் தேவரைப் போன்றவராவர்.

உரைத்தவறுகள்:

மேற்காணும் மூன்று உரைகளிலுமே தேவர் என்ற சொல்லுக்கு வானுலகத்தவர்கள் என்ற பொருளைக் கொண்டுள்ளார்கள். மேலும் இத் தேவர்கள் தாம் நினைத்ததை உடனே செய்துவிடுவர் என்றும் இவர்களுக்கு நியமிப்பார் அல்லது கட்டுப்படுத்துவார் யாரும் இல்லை என்றும் மனம் போன போக்கில் நடப்பவர்கள் என்று கூறப்படுகின்றது. முதலில் தேவர்கள் அதாவது வானுலகத்தவர்கள் என்பதே அறிவியலுக்குப் புறம்பான இதுவரை நிரூபிக்கப்படாத ஒரு கற்பனை என்பதை நாம் அறிவோம். அன்றியும், பல புராணங்களில் பேசப்படும் இத் தேவர்களுக்கு இந்திரன் என்ற தலைவன் உண்டென்றும் கூறப்படுகிறது. அங்ஙனம் இருக்க, இத் தேவர்கள் தம்மை நியமிப்பார் அல்லது கட்டுப்படுத்துவார் இன்றி தன்னிச்சையாய் செயல்படுவர் என்று இங்கே விளக்கம் கூறியிருப்பது தவறாகும். ஏனென்றால் புராணத்தின்படி, அனைத்து தேவர்களும் அவர்களின் தலைவனான இந்திரனுக்குக் கீழ்ப்படிந்து நடப்பவர்களே ஆகும். இந்திரனுடைய சொல்லை மீறி அவர்கள் தன்னிச்சையாய செயல்பட முடியாது. ஆனால் கயவர்களால் தன்னிச்சையாய் எவ்விதக் கட்டுப்பாடுமின்றி மனம் போன போக்கில் செயல்பட முடியும். அவ்வகையில், தேவர் - கயவர் என்ற ஒப்புமை தவறாக இருப்பதால், அதன் அடிப்படையில் அமைந்த மேற்காணும் விளக்கங்களும் தவறென்றே கொள்ளப்படும்.

மேலும் 'திருவள்ளுவர் சமய சார்பற்றவர்' என்னும் கருத்தானது ஆதிபகவன், இந்திரனே சாலும் கரி, செய்யவள் தவ்வை, மாமுகடி, தாமரைக் கண்ணான் போன்ற பல ஆய்வுக் கட்டுரைகளில் சான்றுகளுடன் நிறுவப்பட்டுள்ளது. இந் நிலையில், குறிப்பிட்ட சமய சார்புடையவரான தேவர்களைப் பற்றி இக்குறளில் மட்டும் திருவள்ளுவர் கூறியிருப்பாரா?. ஒருபோதும் மாட்டார். அன்றியும், ஒரு உவமையின் மூலம் ஒரு கருத்தைத் தெளிவாக்க விரும்பினால், மக்கள் நன்கு அறிந்த ஒரு பொருளை உவமையாகக் கூறினால் தான் விளக்கம் தெளிவாகப் புரியும். அதைவிடுத்து, 'வானுலகத்தில் வசிக்கும் தேவர்கள்' என்பது போன்ற இதுவரை யாரும் பார்த்திராத ஒரு கற்பனைப் படைப்பினை உவமையாகக் கூறினால் அவ் விளக்கமும் கற்பனையாக அமையுமே அன்றி தெளிவாக இராது. மேலும் இப்படி ஒரு கற்பனைப் படைப்பு வள்ளுவரின் நுண்மாண் நுழைபுலத்திற்கு பெருமை சேர்க்காது என்பதால் வள்ளுவர் இக் குறளில் கயவர்களுக்கு உவமையாக வானுலகத் தேவர்களைக் குறித்திருக்க மாட்டார் என்பது திண்ணம்.

இக் குறளில் நேர்ந்த பொருள் தவறுகளுக்குக் காரணம், தேவர் என்ற சொல்லுக்குக் கூறப்பட்ட பொருளே ஆகும். உண்மையில் இச் சொல்லுக்கு வள்ளுவர் மேற்கொண்ட பொருள் எதுவாக இருக்கும் என்பதைப் பற்றிக் கீழே காணலாம்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 07, 2012 11:27 pm

திருக்குறள் காட்டும் தேவர் யார்?:

வள்ளுவர் 'தேவர்' என்று யாரைக் குறிப்பிடுகிறார் என்பதை 'கயமை' என்னும் அதிகாரத்தின் துணை கொண்டு அறிய முயலலாம்.

1. கயமை என்னும் அதிகாரத்தில் முதலாவதாக கீழ்க்காணும் குறள் வருகிறது.

மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரி யாங்கண்ட தில்.
- 1071.

இதில், கயவர்களை 'மனிதப்போலிகள்' என்று கூறுகிறார். கயவர்கள் உருவத்தால் மனிதர்களைப் போன்று இருந்தாலும் பண்புகளால் அவர்கள் மனிதர்களை ஒப்பாரல்லர் என்கிறார்.

இப்படி முதல் குறளிலேயே கயவர்களை மனிதருக்கு ஒப்பானவராகக் கூறிவிட்டதால், இதனை அடுத்து வரும் 1073 ஆம் குறளில் தேவர் என்ற சொல்லின் மூலம் அவர் மறுபடியும் கயவர்களை மனிதர்களுக்கு உவமையாகக் கூறி இருக்க மாட்டார். அவ்வாறு கூறினால் அது கூறியது கூறல் குற்றமாகி விடும். வள்ளுவர் அத் தவறைச் செய்யமாட்டார் என்பதால் தேவர் என்ற சொல் இக்குறளில் மனிதர்களைக் குறிக்காது என்பது பெறப்படுகிறது.

2. என்றால் தேவர் என்ற சொல் ஏதேனும் விலங்கினையோ பறவையினையோ தான் குறித்து வந்திருக்க வேண்டும். இவ் இரண்டிலும், தேவர் என்பது பறவையினைக் குறித்து வந்திருக்க வாய்ப்பில்லை என்றே தோன்றுகின்றது. ஏனென்றால், கயவர்கள் தம் மனம் விரும்பியபடி தன்னிச்சையாக செயல்பட்டு மனிதர்களுக்குத் துன்பம் தருபவர்கள். இத்தகைய பண்புகள் எந்த ஒரு பறவைக்கும் பொருந்தாது என்பதால் தேவர் என்பது ஏதேனும் ஒரு விலங்கினையே குறித்து வந்திருக்க வேண்டும் என்பது பெறப்படுகிறது.

3. மேலே கண்டபடி, தேவர் என்பது ஒரு விலங்கினைக் குறித்தாலும் அது ஒரு காட்டு விலங்காக இருக்க முடியுமா என்றால் முடியாது என்றே தோன்றுகிறது. ஏனென்றால் கயவர்கள் மனிதரோடு மனிதராக சமுதாயத்தில் வாழ்பவர்கள். ஆகவே தேவர் என்பது மனிதனால் வளர்க்கப்படும் ஒரு பண்ணை விலங்காகத் தான் இருக்க வேண்டும் என்னும் செய்தி பெறப்படுகிறது.

4. மனிதனால் பண்ணைகளில் வளர்க்கப்படும் விலங்குகளில் ஆடு, பசு, எருது, காளை, பன்றி, குதிரை போன்றவை அடங்கும். இவ் விலங்குகளுள் மனிதருக்குத் துன்பம் செய்பவை எவை என்று பார்த்தால் அவை காளைமாடுகள் மட்டுமே என்பது புலப்படும். ஆம், காளை மாடுகள் மட்டுமே யாருக்கும் அடங்காமல் தன்னுடைய முரட்டுத்தனமான செயல்களால் மனிதருக்கும் பிற உயிரினங்களுக்கும் துன்பம் விளைவிப்பவை. மனம் போன போக்கில் திரிந்து அவ் வழியே செல்வோரையும் வருவோரையும் துரத்தித் தாக்கிக் காயப்படுத்தும். அதுமட்டுமின்றி, காளையானது தன் காலடியின் கீழ் அகப்பட்டவரை வெளியேறிச் செல்ல விடாமல் தடுத்து தனது கொம்புகளால் அவரைத் தாக்க முயன்று கொண்டே இருக்கும். இந்தக் காளைகளைப் போலவே கயவர்களும் தமக்குக் கீழே அகப்பட்டவரிடம் மிகவும் அகங்காரத்துடன் நடந்து அவர்களை மன்னித்து விடாமல் தொடர்ந்து துன்புறுத்திக் கொண்டே இருப்பர் என்று குறள் 1074 ல் கூறுகிறார் வள்ளுவர்.

அகப்பட்டி ஆவாரைக் காணின் அவரின்
மிகப்பட்டுச் செம்மாக்கும் கீழ்.




[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 07, 2012 11:29 pm

திருந்திய பொருள்:

மேலே கண்டவற்றில் இருந்து, வள்ளுவர் இக் குறளில் 'தேவர்' என்ற சொல்லை 'காளைமாடு' என்ற பொருளில் தான் பயன்படுத்தியுள்ளார் என்பதை அறிந்தோம். இனி இக் குறளின் திருந்திய பொருள்:

" தாம் விரும்பியவாறு (அகங்காரத்துடன்) செயல் புரிந்து திரிவதால் கயவர்கள், காளைமாடுகளைப் போன்றவராவர்."

நிறுவுதல்:

மேற்காணும் குறளில், 'தேவர்' என்ற சொல்லுக்கு 'காளைமாடு' என்ற பொருள் எவ்வாறு பொருந்தும் என்பதை இன்னும் சில ஆதாரங்களுடன் கீழே காணலாம்.

திருக்குறளில் 'தெய்வம்' என்னும் சொல்லை 'பசு' என்ற பொருளில் தான் வள்ளுவர் பயன்படுத்தி உள்ளார் என்பதை 'திருக்குறளில் தெய்வம் - பகுதி 2' என்ற கட்டுரையில் பல சான்றுகளுடன் கண்டோம். இந்த 'தெய்வம்' என்ற சொல் பெண்பால் பெயராகும். இதற்கு நேரான ஆண்பால் பெயர் 'தேவன்' என்பதாகும்.

தெய்வம் -------------------------------> தேவன் --------------> தேவர்
(பெண்பால் ஒருமை) ( ஆண்பால் ஒருமை) (ஆண்பால் பன்மை)

காளைமாடுகளைக் குறித்து வந்த இந்த தேவன் என்ற பெயரானது பின்னர் அக் காளைகளை அடக்குகின்ற வீரர்களுக்கும் பெயராக விளங்கியது. வெள்ளைநிறக் காளையை அடக்கிய வீரனுக்கு வெள்ளையத் தேவன் என்ற பெயர் சூட்டப்பட்டது எனலாம். இதுவே பின்னாளில் ஒட்டுமொத்தமாக காளைகளை அடக்கும் வீரர்களைக் குறிக்கும் பெயராக மாறியிருக்கலாம்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 07, 2012 11:30 pm

[You must be registered and logged in to see this image.]

சல்லிக்கட்டு:

தமிழர்களின் வீர விளையாட்டுக்களில் முதன்மையானது ஏறு தழுவுதல் ஆகும். இக்காலத்தில் இதனை சல்லிக்கட்டு என்றும் கூறுகின்றனர். சல்லிக்கட்டு என்னும் சொல்லானது 'சல்லியைக் கட்டுப்படுத்துதல்' என்று விரிந்து 'காளையினை அடக்குதல்' என்று பொருள்படும். இதிலிருந்து 'சல்லி' என்னும் சொல்லுக்குக் 'காளை' என்ற பொருளும் உண்டென்று அறியப்படுகிறது. சல்லிமாடு என்பது ஏறுதழுவத் தயார் செய்யப்பட்ட காளை மாட்டினைக் குறிக்கும்.

வின்சுலோ இணையப் பேரகராதி:

சல்லிமாடு--சல்லியெருது, s. A lusty bull decorated for fighting.

தன் மனம்போன போக்கில் யாருக்கும் அடங்காமல் திமிருடன் திரிந்து பிறருக்குத் துன்பம் தரும் இயல்புடையது காளை மாடாகும். எருதுகளையாவது உழவுக்குப் பயன்படுத்தலாம். ஆனால் இந்த காளைகள் மிக மோசமானவை. மூர்க்கத்தனம் நிறைந்தவை. ஒரு காளையினை அடக்குவதற்கு எத்தனை பேர் போராடுகின்றனர் என்பதை சல்லிக்கட்டு விளையாட்டில் பார்த்திருக்கலாம். இவற்றை அடக்கி உழவுக்குப் பயன்படுத்துவதென்பது மிகவும் கடினமான செயலாகும்.

காளையைக் குறிக்கின்ற 'சல்லி' என்ற சொல்லுக்கு 'போக்கிலி' என்ற பொருளும் இருப்பதாக சென்னை இணையத் தமிழ்ப் பேரகராதி கூறுகிறது.

சல்லி² calli

, n. [T. tjalli, K. Tu. jalli.] 1. [M. calli.] Small pieces of stone or glass, potsherd; கல்முதலியவற்றின் உடைந்த துண்டு. எறி சல்லி புதுமலர்க ளாக்கினான்காண் (தேவா. 596, 8). 2. Small chips, as of stone; rubble; சிறிய கல். 3. Small flat shells, used for lime; கிளிஞ்சல் முதலியவற்றின் சிற்றோடு. (W.) 4. [M. calli.] Small copper coin, fractional part of a larger coin, 1/12 anna; சிறுகாசு. Loc. 5. Short pendant in ornaments, hangings; ஆபரணத்தொங்கல். (சூடா.) முத்தாலாகிய சல்லியையும் (மணி. 18, 46, உரை). 6. A thin, emaciated person; மெலிந்த சரீரமுடையவன். அந்த ஆள் சல்லியாயிருப்பான். Loc. 7. Perforation, hole; துவாரம். Colloq. 8. Falsehood; பொய். (W.) 9. Villain, black-guard; போக்கிலி. Colloq.

இந்தப் போக்கிலிகளைத் தான் கயவர்கள் என்று கூறுகிறார் வள்ளுவர். இவர்களும் காளை மாடுகளைப் போல மூர்க்கத்தனம் நிறைந்தவர்களே. தாம் விரும்பியதை செய்து தமது அகங்காரத்தினால் பிறருக்குத் துன்பம் விளைவிப்பவர்கள். இவர்கள் யார் பேச்சையும் கேட்டு அதன்படி நடக்கவோ கட்டுப்படவோ மாட்டார்கள். இவர்கள் 'கொடிறு உடைக்கும் கூன் கையருக்கே கட்டுப்படுவர்' என்று குறள் 1077 ல் கூறுகிறார் வள்ளுவர்.

ஈர்ங்கை விதிரார் கயவர் கொடிறுடைக்கும்
கூன்கையர் அல்லா தவர்க்கு.


கயவர்களைப் போலவே காளைகளும் லேசில் யாருக்கும் அடங்குவதில்லை. அவற்றின் மேலேறி அவற்றின் திமிலைப் பிடித்துத் திருக்கி கழுத்தைப் பிடித்து அடக்குபவருக்குத் தான் கட்டுப்படுகிறது. இப்படிப் பல பண்புகளால் காளைகளும் கயவர்களும் ஒத்திருப்பதால் தான் இருவரும் 'சல்லி' என்ற ஒரே சொல்லால் குறிக்கப் பெறுகின்றனர். வள்ளுவரும் இத்தகைய ஒப்புமைகளைக் கருதியே கயவர்களை 'காளைமாடுகளைப் போன்றவர்கள்' என்ற பொருளில் 'தேவர் அனையர்' என்று கூறுகிறார்.

முடிவுரை:

சிறுமைக்குணமே கயவர்களின் அடையாளம் என்பதால் கயவர்களைக் குறித்து வந்த சல்லி என்ற சொல் நாளடைவில் சிறுமைக் குணத்தையும் சிறுசிறு பொருட்களையும் குறிக்கப் பயன்படலாயிற்று.

சல்லி² calli
, n. [T. tjalli, K. Tu. jalli.] 1. [M. calli.] Small pieces of stone or glass, potsherd; கல்முதலியவற்றின் உடைந்த துண்டு. எறி சல்லி புதுமலர்க ளாக்கினான்காண் (தேவா. 596, 8). 2. Small chips, as of stone; rubble; சிறிய கல். 3. Small flat shells, used for lime; கிளிஞ்சல் முதலியவற்றின் சிற்றோடு. (W.) 4. [M. calli.] Small copper coin, fractional part of a larger coin, 1/12 anna; சிறுகாசு.

பொன்.சரவணன் இளமுனைவர்



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Sat Apr 07, 2012 11:35 pm

நூல் எழுதுனவங்களே உரையும் எழுதியிருந்தா எவ்வளவோ நல்லாருக்கும்


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 07, 2012 11:38 pm

அதி wrote:நூல் எழுதுனவங்களே உரையும் எழுதியிருந்தா எவ்வளவோ நல்லாருக்கும்
திருவள்ளுவர் வாழ்ந்த காலத்தில் இவற்றின் அர்த்தம் எளிதாகப் புரிந்து கொள்ள முடிந்ததாம், அதன் பிறகு தமிழ் மொழியில் ஏற்பட்ட மாற்றங்களினால் இவற்றிற்கு நமக்குப் பொருள் புரியாமல் போய்விட்டது! அவ்வளவே!



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Sun Apr 08, 2012 12:45 am

பேச்சு தமிழாக இருக்க வேண்டியதை நாம் இலக்கிய தமிழ் என்று பெயர் கொடுத்து அதை ஒரு ஓரமாக ஒதுக்கிவிட்டதும் தமிழ் திரிந்து விட்டதன் காரணமாக இருக்கலாம்.


இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sun Apr 08, 2012 1:05 am

திருவள்ளுவர் வாழ்ந்த காலத்தில் இவற்றின் அர்த்தம் எளிதாகப் புரிந்து கொள்ள முடிந்ததாம், அதன் பிறகு தமிழ் மொழியில் ஏற்பட்ட மாற்றங்களினால் இவற்றிற்கு நமக்குப் பொருள் புரியாமல் போய்விட்டது! அவ்வளவே!

ஆமோதித்தல்

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Sun Apr 08, 2012 9:15 am

நல்ல ஆய்வுக் கட்டுரை, ஆனால் முடிவுரையை ஏற்க இயலவில்லை.


1073 ஆம் குறளில் தேவர் என்ற சொல்லின் மூலம் அவர் மறுபடியும் கயவர்களை மனிதர்களுக்கு உவமையாகக் கூறி இருக்க மாட்டார்.


ஒரு உதாரணம் வேறு இடத்தில் பயன் படுத்த கூடாது என்று எந்த இலக்கணம் கூறுகிறது. பெண்களின் முகத்தை நிலாவுடனும், கண்களை மலருடனும் ஒப்புமை செய்த குறள்கள் பல உள்ளது.

திருக்குறளில் பல இடங்களில் பல பிறவிகளை பற்றிய பாடல்கள் உள்ளது . இப்படி கூறும் மறுபிறப்புகள் பற்றிய கருத்துகள் பிற மதங்கள் ஏற்கவில்லை. திருக்குறள் மதச் சார்பற்ற நூல் என்பதே ஒரு வகையான வார்த்தை போலி. தமிழில் உள்ள பல நீதி நூல்களும் மனிதர்களை பொதுவாக பார்த்து தான் நீதிகளை கூறுகிறது. இது இனம், மதம் பார்த்து வரவில்லை. பல இடங்களில் சொல்ல வந்த கருத்து கூறுவதற்காக ஒரு சில உதாரணங்கள் கூறப்படுகிறது. இந்த உதாரணங்கள் அன்றைய வாழ்க்கையில் மனிதர்கள் பயன்படுத்திய உதாரணங்களில் இருந்து எடுக்கப்படுகிறது. இது மூதுரை, நல்வழி, நன்னேறி என்ற பல நூல்களுக்கும் பொருந்தும். என்ன பிற நூல்களை எழுதிய ஆசிரியர்கள் மதம் சம்பந்தப்பட்ட வேறு சில நூல்களும், பாடல்களும் எழுதி இருப்பதால் அவர்களை மதச் சாயத்துடன் பார்க்கிறோம். திருவள்ளுவர் வேறு நூல்கள் எழுதி இருக்கிறாரா தெரியவில்லை. ஆதலால் அவர் எழுதிய நூல் மதச்சார்பற்ற நூல் என்று முடிவு செய்கிறோம்.

சைவ சிந்தாந்த மரபில் திருவள்ளுவர் குரு பூஜை ஒரு முக்கிய இடம் பெற்று இருக்கிறது. சைவ சிந்தாந்த பொது நூல்களில் திருக்குறளும் ஒன்று. வேறு எந்த மதமும் திருவள்ளுவருக்கு பூஜை செய்வதில்லை. அவரை பூஜை செய்யும் ஒருவராக ஏற்கவில்லை.

ஆள் ஆளுக்கு ஒரு கருத்து சொல்லலாம். அவர் தாடி வைத்து இருப்பதால் மத்திய நாடுகளில் இருந்து வந்து இருக்கலாம் என்றும் நாளைக்கு ஒருவர் ஆய்வுக் கட்டுரை சமர்ப்பிக்கலாம். அதையும் படித்து நாம் ஆம் ஆம் இதுவும் உண்மையாக இருக்கலாம் என்று கூறலாம்.




சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக