புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கர்ம வினை தீர்த்த அகத்தியர் Poll_c10கர்ம வினை தீர்த்த அகத்தியர் Poll_m10கர்ம வினை தீர்த்த அகத்தியர் Poll_c10 
5 Posts - 71%
Manimegala
கர்ம வினை தீர்த்த அகத்தியர் Poll_c10கர்ம வினை தீர்த்த அகத்தியர் Poll_m10கர்ம வினை தீர்த்த அகத்தியர் Poll_c10 
1 Post - 14%
ஜாஹீதாபானு
கர்ம வினை தீர்த்த அகத்தியர் Poll_c10கர்ம வினை தீர்த்த அகத்தியர் Poll_m10கர்ம வினை தீர்த்த அகத்தியர் Poll_c10 
1 Post - 14%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கர்ம வினை தீர்த்த அகத்தியர் Poll_c10கர்ம வினை தீர்த்த அகத்தியர் Poll_m10கர்ம வினை தீர்த்த அகத்தியர் Poll_c10 
130 Posts - 51%
ayyasamy ram
கர்ம வினை தீர்த்த அகத்தியர் Poll_c10கர்ம வினை தீர்த்த அகத்தியர் Poll_m10கர்ம வினை தீர்த்த அகத்தியர் Poll_c10 
88 Posts - 35%
mohamed nizamudeen
கர்ம வினை தீர்த்த அகத்தியர் Poll_c10கர்ம வினை தீர்த்த அகத்தியர் Poll_m10கர்ம வினை தீர்த்த அகத்தியர் Poll_c10 
11 Posts - 4%
prajai
கர்ம வினை தீர்த்த அகத்தியர் Poll_c10கர்ம வினை தீர்த்த அகத்தியர் Poll_m10கர்ம வினை தீர்த்த அகத்தியர் Poll_c10 
9 Posts - 4%
Jenila
கர்ம வினை தீர்த்த அகத்தியர் Poll_c10கர்ம வினை தீர்த்த அகத்தியர் Poll_m10கர்ம வினை தீர்த்த அகத்தியர் Poll_c10 
4 Posts - 2%
Rutu
கர்ம வினை தீர்த்த அகத்தியர் Poll_c10கர்ம வினை தீர்த்த அகத்தியர் Poll_m10கர்ம வினை தீர்த்த அகத்தியர் Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
கர்ம வினை தீர்த்த அகத்தியர் Poll_c10கர்ம வினை தீர்த்த அகத்தியர் Poll_m10கர்ம வினை தீர்த்த அகத்தியர் Poll_c10 
2 Posts - 1%
jairam
கர்ம வினை தீர்த்த அகத்தியர் Poll_c10கர்ம வினை தீர்த்த அகத்தியர் Poll_m10கர்ம வினை தீர்த்த அகத்தியர் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
கர்ம வினை தீர்த்த அகத்தியர் Poll_c10கர்ம வினை தீர்த்த அகத்தியர் Poll_m10கர்ம வினை தீர்த்த அகத்தியர் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
கர்ம வினை தீர்த்த அகத்தியர் Poll_c10கர்ம வினை தீர்த்த அகத்தியர் Poll_m10கர்ம வினை தீர்த்த அகத்தியர் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கர்ம வினை தீர்த்த அகத்தியர்


   
   
knesaraajan
knesaraajan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 29
இணைந்தது : 20/02/2012

Postknesaraajan Mon Feb 20, 2012 11:24 am

கர்ம வினை தீர்த்த அகத்தியர்

கர்ம வினை தீர்த்த அகத்தியர்
அகத்திய மைந்தர் ஹநுமத்தாசன்

www dot natpu dot in -- முகப்பு » ஆன்மிகம் » கணியம் » நாடி சொல்லும் கதைகள் »
ஒரு நண்பகல் பொழுது.
எல்லாப் பிரார்த்தனைகளையும் முடித்து விட்டு வெளியே கிளம்பலாம் என்று எண்ணிக் கொண்டிருக்கும் பொழுது, அரக்க பரக்க ஓடி வந்தார் ஒருவர். அவர் வந்த வேகத்தைப் பார்த்தால் மிகப் பெரிய சங்கடத்தில் மாட்டிக் கொண்டிருக்கிறார் என்று தோன்றியது.
நடுத்தர வயது இருக்கும். ஆஜானுபாகுவாக இருந்தார். முகத்தில் ஆரோக்கியம் இருந்தது. வசதியுள்ளவர் போல் தோன்றியது. வந்தவரை உட்காரச் சொன்னேன். பிறகு அவரை விசாரித்தேன்.
நன்றாக இருந்த அவரது மனைவிக்கு திடீரென்று மேனியெல்லாம் வெள்ளை வெள்ளையாகப் புள்ளிகள் தோன்றிற்று. பல்வேறு தோல் நோய் சிறப்பு டாக்டர்களிடம் சிகிச்சை செய்து பார்த்திருக்கிறார். தோல் நிறம் மேலும் வெண்புள்ளியாக மாறிக் கொண்டிருந்ததே தவிர சிறிதும் குணமாகவில்லை.
மிகவும் செக்கச் சிவப்பாக இருந்த உடம்பு இப்பொழுது வெண்புள்ளிகளாக மாறியதால் தனக்கு குஷ்டம் வந்து விட்டது என்று எண்ணி தன்னம்பிக்கை இழந்து இரு முறை தற்கொலைக்கும் முயன்றிருக்கிறார் அவரது மனைவி.
இது தொழுநோய் அல்ல. தோலில் ஏற்பட்ட ஒரு வகையான அலர்ஜி. மருந்துகளைத் தொடர்ந்து உபயோகித்து வந்தால் படிப்படியாகக் குணமாகிவிடும் என்று தைரியம் சொல்லி இருக்கிறார்கள். அதோடு இல்லாமல் யாரோ ஒருவர் அவரது வீட்டில் வாஸ்து சரியில்லை: அதனால் தான் இத்தனை தொல்லை என்று சொல்லியிருந்ததால் தன் மனைவியின் தோல் நோய்க்கும், வாஸ்து பற்றிய சந்தேகத்திற்கும் அகத்தியர் நாடியில் விளக்கம் கேட்க, பதறி அடித்துக் கொண்டு வெளியூரிலிருந்து வந்திருக்கிறார்.
அகத்தியர் நாடியில் நல்ல பதில் வரவில்லையென்றால் அந்த நபரும், அவரது மனைவியும் தற்கொலை செய்து கொள்ள தயாராக இருப்பதாக பின்னர் அவரது பேச்சில் தெரிந்தது.
அவரது உள்ளத்தை மிக நன்றாக அறிந்த நான் முதலில் அகத்தியரை மனதார வேண்டிக் கொண்டேன். ஐயா நல்வாக்குத் தாருங்கள். ஏதேனும் ஒன்றைச் சொல்லி அவர்கள் இருவரது உயிர்களையும் பறித்து விடாதீர்கள் என்று பிரார்த்தனை செய்தேன்.
எனது மவுனமான பிரார்த்தனையை அறியாத அவர், ஏன் சார் எனக்குப் படிக்க மாட்டீங்களா? என்று கெஞ்சுவது போல் பேசினார்.
கண்டிப்பாக படிக்கிறேன். கொஞ்சம் பொறுமையாக இருங்கள் என்று சொல்லி விட்டு, பூஜை அறையிலிருந்து அகத்தியர் ஜீவநாடியை எடுத்து வந்தேன்.
முதலில் தெய்வ ரகசியமாக, வந்தவரைப் பற்றி அப்படியே புட்டுபுட்டு வைத்தார் அகத்தியர். அதைப் படித்துவிட்டு அதிர்ந்து போனேன். பின்பு அவரைப் பார்த்து உங்களுக்கு நாடியில் நம்பிக்கை இருக்கிறதா என்றேன்.
‘எனக்கு கொஞ்சம் கூட நம்பிக்கை இல்லை. ஏனெனில் நிறைய பேரிடம் நாடி பார்த்தேன். கடந்த காலத்தைப் பற்றி நன்றாகச் சொல்கிறார்கள். எதிர்காலத்தைப் பற்றிச் சொன்னது எதுவும் நடக்கவில்லை என்றார் அவர்.
‘ஏன்?’ – நான் கேட்டேன்.
அவர்கள் பரிகார காண்டம், தீட்சை காண்டம், சாந்தி காண்டம்….. என்று சொல்லி எனக்குள்ள தோஷம் போக ஏராளமானப் பரிகாரங்கள் சொன்னார்கள். இந்த பரிகாரங்களுக்காக நாடி படிப்பவர்களுக்கு பத்தாயிரம், இருபதாயிரம் என்று நான் கொடுக்க வேண்டும் என்கிறார்கள். இதில் எனக்கு கொஞ்சமும் உடன்பாடில்லை. அதே நேரத்தில் என் மனைவிக்கு நோய் குறையாமல் போய் விடுமோ என்ற பயமும் ஏற்பட்டது. எனவே வேறு வழியில்லாமல் தலையெழுத்தே என்று கொடுத்தேன். அப்படி கொடுத்தும் இன்று வரை என் மனைவிக்கு நோய் குறையவே இல்லை என்றார் வெறுப்புடன்.
ஒரு வேளை அகத்தியர் ஜீவநாடியில் சில பிரார்த்தனைகள் வந்தால் அதை முழுமனதோடு செய்ய வேண்டும். எந்த பரிகாரமும் அல்லது பிரார்த்தனைகள் ஆனாலும் நீங்கள் தான் செய்ய வேண்டும். செய்யத்தயாரா? என்றேன்.
எது முடியுமோ அதைத்தான் செய்ய முடியும். எல்லாவற்றையும் செய்ய முடியுமா? என்றார்.
உங்கள் மனைவிக்கு நோய் குணமாக வேண்டாமா? அதற்குத்தானே என்னைத் தேடி இங்கு வந்திருக்கிறீர்கள் என்றேன்.
எல்லோரும் உங்களைப் பற்றிச் சொன்னார்கள். கடைசி முயற்சியாக ஒரு தடவை பார்க்கலாமே என்று தான் வந்தேன். ஏற்கனவே பரிகாரங்களைச் செய்து வெறுத்துப் போனதால் மனது வெம்பிப் போய்விட்டது. இருந்தாலும் அகத்தியர் என்ன சொல்கிறாரோ அதைச் சொல்லுங்கள். முடிந்த வரை செய்கிறேன் என்று ஒரு வழியாக இயல்பான நிலைக்கு வந்தார்.
அகத்தியர் நாடி மூலம் வாய் திறந்தார்.
தஞ்சாவூரில் ஒரு பெருநிலக்கிழாராக வாழ்ந்து வந்த குடும்பத்தைச் சேர்ந்தவன் இவன். சொத்து அதிகம். நன்செய், புன்செய், தோப்பு, துரவு என்று செழிப்பான மண் வளம் மிக்க சொத்துக்களை வைத்து அதிகார போதையிலே செல்வாக்கு புகழோடு வாழ்ந்து வந்தான்.
தெய்வ நம்பிக்கை என்பது இவனுக்கு ஒரு போதும் கிடையாது. பெரியவர்கள், பெற்றோர் சொன்ன அறவழிக்கு எதிராகச் செயல்பட்டவன். இறைநம்பிக்கை இல்லாத அரசியல் கட்சியில் கொடிகட்டிப் பறந்தான். ரத்தக் கொழுப்பும், பணத்திமிரும் ஆட்டிப் படைத்ததால் தன்னை எதிர்த்துப் பேசிய பலமில்லாத பெண்கள், சிறுவர், சிறுமியரை பலர் மத்தியில் அவமானப்படுத்தினான். மொட்டையடித்து அவர்கள் உடலில் கரும்புள்ளி, செம்புள்ளி குத்தி, கழுதை மேல் ஏற்றி கிராமத்தைச் சுற்றி வரச் செய்தான். இந்தக் கொடுமையை முன் ஜென்மத்தில் செய்திருந்தாலும், அந்த ஊழ்வினை தான் இந்த ஜென்மத்தில் இவன் மனைவிக்கு தோல்நோயாக மாறி மனதைத் துடிக்க வைத்திருக்கிறது.
எனினும் அகத்தியனை நோக்கி வந்ததாலும், இவனை ஈன்றோர் செய்திட்ட பெரும் புண்ணியம், அன்னதானம் ஆகியவற்றாலும் இவனது மனைவிக்கு வந்த தோல் நோயைக் குணப்படுத்த ஒரு வாய்ப்பு உண்டு. என்றாலும், விட்ட குறை தொட்ட குறை போல் இவனுக்கு இன்னமும் முழுமையான தெய்வ பற்று இல்லை. அகத்தியன் சொல்வதை ஒரு போதும் இவன் செய்யமாட்டான். இன்னும் சொல்லப்போனால் அகத்தியனை சோதிக்கவே இவன் இங்கு வந்துள்ளான். அதுதான் உண்மை என்று சட்டென்று முடித்துக் கொண்டார்.
கடைசி நான்கு வரியை மாத்திரம் அவரிடம் சொல்லாமல் அகத்தியர் சொன்ன பரிகாரங்களைச் செய்தால் உங்கள் மனைவிக்கு தோல் நோய் குணமாகும் என்றேன்.
அகத்தியர் சொன்னதை தான் செய்வதாகச் சொல்லி தலையைத் தலையை ஆட்டினார்.
சதுரகிரி மலைக்குச் சென்று எட்டு காததூரத்தில் வலப்புறம் திரும்பினால் அங்கு ஒரு சிறு குகை இருக்கும். அந்த குகைக்கு இடப்புறத்தில் ஒரு வித்தியாசமான மரம் இருக்கும். அந்த மரத்தின் பூவை (பதினெட்டு) பறித்து குப்பைமேனி, மிளகு, ஆவாரம்பூ, குமரிப்பூ, மாதுளம்பூ, சரக்கொன்றைப் பூ, செம்பரத்தம் பூ இவற்றை ஒன்றாகச் சேர்த்து நன்றாக இடித்து பொடி செய்து, செக்கில் ஆட்டிய நல்லெண்ணையோடு கலந்து மேனியில் தடவி வந்தால், வெண்புள்ளி மறையும். தோல் நோய் முற்றி குஷ்ட நிலைக்குச் செல்லாமல் தடுக்கும். சுமார் மூன்று மாதங்கள் இந்த மருத்துவச் சிகிச்சை தொடர வேண்டும் என்றார் அகத்தியர்.
இதைக் கேட்டதும் வந்தவருக்கு சந்தோஷம் வரவில்லை. வெறுப்போடு சதுரகிரி மலைக்கு நான் எங்கே போவது? எது எது எந்த பூ என்று எனக்கு எப்படித் தெரியும்? இதெல்லாம் போகாத ஊருக்கு வழி? என்று நேரிடையாகவே பட்டென்று சொல்லி விட்டார்.
மறுபடியும் அகத்தியரிடம் இதை சொல்லி இதை விட எளிய வைத்தியம் சொல்லக்கூடாதா என்று கேட்டேன்.
‘உண்டு அதையும் உரைத்திருப்பேன். இவனுக்குத்தான் எதிலும் நம்பிக்கை இல்லையே. இவன் அந்த மருந்தைப் பெற வைப்பேன். அகத்தியன் மீது நம்பிக்கை வைத்து முதலில் இவன் சதுரகிரிக்கு போகட்டும் என்று மறுபடியும் உரைத்தார்.
இதைத்தவிர வேறு வழியே இல்லையா? என்றார்.
அகத்தியன் சொன்னபடி செய். இல்லையெனில் முன் ஜென்ம கர்ம வினையிலிருந்து நீ தப்ப முடியாது. உனக்கும் அந்த மாதிரி நோய் வரும் என்றார். அதைக்கேட்டு அமைதியாக திரும்பினார்.
நாற்பத்தைந்து நாட்களுக்குப் பின் என் வீட்டு வாசலில் தன் மனைவியோடு வந்து நின்றார் அவர். அவரைக் கண்டு ஆச்சரியப்பட்டுப் போனேன். பின்னர் விசாரித்தேன்.
சதுரகிரி மலைக்குச் சென்றிருக்கிறார். அங்கு யாரோ ஒருவர் அகத்தியர் அனுப்பி வைத்தாரா? என்று கேட்டு தோல் நோய்க்குரிய அகத்தியர் சொன்ன அத்தனைப் பூக்களையும் தன் கைப்படவே கொடுத்திருக்கிறார். அந்த பூக்களைக் கொண்டு தன் மனைவிக்கு மருத்துவச் சிகிச்சை செய்திருக்கிறார். நாற்பத்தைந்து நாளில் தன் மனைவி பூரண குணத்தோடு மாறியதை என்னிடம் காட்ட தன்னோடு அழைத்து வந்திருக்கிறார் சந்தோஷத்தோடு.
அவரது நெற்றியில் திருநீறும், குங்குமப் பொட்டும் பளிச்சென்று தெரிந்தது.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக