புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாழ்வியல் முப்பது - பாவலரேறு பெருஞ்சித்திரனார் Poll_c10வாழ்வியல் முப்பது - பாவலரேறு பெருஞ்சித்திரனார் Poll_m10வாழ்வியல் முப்பது - பாவலரேறு பெருஞ்சித்திரனார் Poll_c10 
5 Posts - 71%
Manimegala
வாழ்வியல் முப்பது - பாவலரேறு பெருஞ்சித்திரனார் Poll_c10வாழ்வியல் முப்பது - பாவலரேறு பெருஞ்சித்திரனார் Poll_m10வாழ்வியல் முப்பது - பாவலரேறு பெருஞ்சித்திரனார் Poll_c10 
1 Post - 14%
ஜாஹீதாபானு
வாழ்வியல் முப்பது - பாவலரேறு பெருஞ்சித்திரனார் Poll_c10வாழ்வியல் முப்பது - பாவலரேறு பெருஞ்சித்திரனார் Poll_m10வாழ்வியல் முப்பது - பாவலரேறு பெருஞ்சித்திரனார் Poll_c10 
1 Post - 14%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வாழ்வியல் முப்பது - பாவலரேறு பெருஞ்சித்திரனார் Poll_c10வாழ்வியல் முப்பது - பாவலரேறு பெருஞ்சித்திரனார் Poll_m10வாழ்வியல் முப்பது - பாவலரேறு பெருஞ்சித்திரனார் Poll_c10 
130 Posts - 51%
ayyasamy ram
வாழ்வியல் முப்பது - பாவலரேறு பெருஞ்சித்திரனார் Poll_c10வாழ்வியல் முப்பது - பாவலரேறு பெருஞ்சித்திரனார் Poll_m10வாழ்வியல் முப்பது - பாவலரேறு பெருஞ்சித்திரனார் Poll_c10 
88 Posts - 35%
mohamed nizamudeen
வாழ்வியல் முப்பது - பாவலரேறு பெருஞ்சித்திரனார் Poll_c10வாழ்வியல் முப்பது - பாவலரேறு பெருஞ்சித்திரனார் Poll_m10வாழ்வியல் முப்பது - பாவலரேறு பெருஞ்சித்திரனார் Poll_c10 
11 Posts - 4%
prajai
வாழ்வியல் முப்பது - பாவலரேறு பெருஞ்சித்திரனார் Poll_c10வாழ்வியல் முப்பது - பாவலரேறு பெருஞ்சித்திரனார் Poll_m10வாழ்வியல் முப்பது - பாவலரேறு பெருஞ்சித்திரனார் Poll_c10 
9 Posts - 4%
Jenila
வாழ்வியல் முப்பது - பாவலரேறு பெருஞ்சித்திரனார் Poll_c10வாழ்வியல் முப்பது - பாவலரேறு பெருஞ்சித்திரனார் Poll_m10வாழ்வியல் முப்பது - பாவலரேறு பெருஞ்சித்திரனார் Poll_c10 
4 Posts - 2%
Rutu
வாழ்வியல் முப்பது - பாவலரேறு பெருஞ்சித்திரனார் Poll_c10வாழ்வியல் முப்பது - பாவலரேறு பெருஞ்சித்திரனார் Poll_m10வாழ்வியல் முப்பது - பாவலரேறு பெருஞ்சித்திரனார் Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
வாழ்வியல் முப்பது - பாவலரேறு பெருஞ்சித்திரனார் Poll_c10வாழ்வியல் முப்பது - பாவலரேறு பெருஞ்சித்திரனார் Poll_m10வாழ்வியல் முப்பது - பாவலரேறு பெருஞ்சித்திரனார் Poll_c10 
2 Posts - 1%
jairam
வாழ்வியல் முப்பது - பாவலரேறு பெருஞ்சித்திரனார் Poll_c10வாழ்வியல் முப்பது - பாவலரேறு பெருஞ்சித்திரனார் Poll_m10வாழ்வியல் முப்பது - பாவலரேறு பெருஞ்சித்திரனார் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
வாழ்வியல் முப்பது - பாவலரேறு பெருஞ்சித்திரனார் Poll_c10வாழ்வியல் முப்பது - பாவலரேறு பெருஞ்சித்திரனார் Poll_m10வாழ்வியல் முப்பது - பாவலரேறு பெருஞ்சித்திரனார் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
வாழ்வியல் முப்பது - பாவலரேறு பெருஞ்சித்திரனார் Poll_c10வாழ்வியல் முப்பது - பாவலரேறு பெருஞ்சித்திரனார் Poll_m10வாழ்வியல் முப்பது - பாவலரேறு பெருஞ்சித்திரனார் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாழ்வியல் முப்பது - பாவலரேறு பெருஞ்சித்திரனார்


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 24, 2011 2:38 pm

புகழ்ச்சியின் மயக்கறு!
புன்மையை உதறு!
இகழ்ச்சியைத் தாங்கு!
எள்ளலை எடுத்தெறி!
நிகழ்ச்சியை வரிசைசெய்!
நினைவை உறுதிசெய்!
மகிழ்ச்சியும் துயரமும்
மனத்தின் செயல்களே!


பாடல் - 1 உரைக்குறிப்புகள் : (எண் அடிகள் எண்)

1. புகழ்ச்சியின் மயக்கு-பிறர் கூறும் புகழ்ச்சியுரைகளால் ஏற்படும் உணர்வுக் கிறக்கம்; அறுத்தல்-அடியோடு நீக்குதல்.

2. புன்மை-இழிவாம் தன்மை; உதறுதல்-பற்றப் பற்றத் தவிர்த்தல்.

3. இகழ்ச்சி-செயப்பெறும் நல்வினைகளின் மேல் அறியாமையால் கூறப்பெறும் இகழ்ச்சியுரைகள்.

4. எள்ளல்-அருமை வினைகளை எளிமையாகக் கருதி உரைக்கப்பெறும் புன்சொற்கள்.

5. வரிசை-செயப்பெறும் வினைகளை அறிவானும் வினையானும் வகைப்படுத்தி இடத்தானும் காலத்தானும் பொருந்த அமைத்துக் கொள்ளுதல்.

6. நினைவை உறுதி செய்தல்-செயத் தக்கவற்றுக்கும் தகாதனவற்றிற்கும் வேராகிற நினைவுகளை அறிவான் தேறி செயலுக்குரியனவாகத் தெரிந்தெடுத்தல்.

7,8. மகிழ்ச்சி என்பதும் துயரம் என்பதும் செயப் பெறும் வினைகட்கு ஏற்ப மனம் அவ்விடத்துப் பெறும் உணர்வு முடிபுகளுக்கான பெயர்களாகும்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 24, 2011 2:38 pm



ஊக்கமும் முயற்சியும்
உண்மையும் நேர்மையும்
ஆக்க வினைகளும்
அடிப்படைக் கொள்கைகள்!
ஏக்கம் அகற்று!
ஏறுபோல் வினைசெய்!
தாக்கும் இழிவுகள்
தாமே விலகிடும்.


பாடல் - 2 உரைக் குறிப்புகள்:

1-4. மனவெழுச்சியும் அறிவு, உடல் இவற்றின் வழித்தாகிய முயற்சியும், தோற்ற நிலை முதல் முடிவு நிலை வரை உணர்வு தலைமாறாத உண்மையும், நடுநிலை பிறழாத நேர்மையும், அவற்றின் வழி விளைக்கப்பெறும் ஆக்கச் செயல்களும் மாந்தவினம் முழுமைக்கும் பொதுவான கொள்கைகள் ஆகும் எனத் தேர்க.

5. ஏக்கம்-ஒன்றைப் பெற வேண்டி உயர்ந்து நிற்கும் மனவுணர்வு.

6. விலங்கினக் கடாப் போலும் வினைக்கண் இடர்ப்பாடு வந்தவிடத்தும் தளராது இயங்குதல். (மடுத்த வாயெல்லாம்... குறள் எண் 624)

7,8. நுண்பொருள் இயக்கக் கொள்கைப் படி முடுக்க வினை புறத்தாக்கு வினைகளை வலிவிழக்கச் செய்யும் என்க.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 24, 2011 2:39 pm


இன்றைய நாள்நினை!
இனிவரும் நாள்நினை!
என்றும் புதியன்,நீ!
யாவும் புதியன!
அன்றன்றும் புதுநாள்!
அனைத்தும் இனியன!
ஒன்று,கை போகின்
ஒன்றுன் கைவரும்!


பாடல் - 3 உரைக் குறிப்புகள்:

1. நாளின் வரவையும், வரவின் செலவையும் கொன்னே அது கழியும் வெறுமையும் நினைக்க.

2. அறியா நிலையின் வறிதே கழிய விட்ட நாள் போயினும் அறிந்த நிலையின் இனிவரும் நாள் பயன் கொள்க என்றபடி.

3,4. ஒவ்வொரு நாளும் உயிரும் மெய்யும் இவை வேறாய பருப்பொருள்களும் தத்தம்மளவில் அகத்தும் புறத்தும் மலர்ச்சியுறுதலான் உயிர்மெய்யுள்ளிட்ட அனைத்தும் அன்றன்றும் புதியனவே என எண்ணிப் புத்துணர்வு பெறுக.

5. உயிர்ப் பொருளும் உயிரல் பொருளும் புதியனவாகையால் ஒவ்வொரு காலக்கூறும் புதுமையே என உணர்க.

6. உயிர் இனிமையெனின் உயிர் வளர்ச்சிக்குற்ற சூழல்கள் அனைத்தும் இனியனவே என்பது மெய்ப்பொருள் கொள்கை.

7,8. உயிரும் உயிர்த் தொடர்பாய வினைகளும் ஒரு நெடுந் தொடரி போல் நிரலுடையனவாகலின் ஒன்று கைவிட்டுப் போதலும் மற்றொன்று கை வந்து சேர்தலும் இயல்பு நிகழ்ச்சிகள் என்க. எனவே கை கழிந்தது பற்றிக் கவலுறாது, கை மலிந்தது பற்றி மகிழ்வுறுக என்பதாம்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 24, 2011 2:39 pm



உள்ளம் விழைவதை
அறிவினால் ஓர்ந்துபார்!
தள்ளத் தகுவன
உடனே தள்ளுவாய்!
தள்ளத் தகாதென்
றறிவு தேர்வதைக்
கொள்ள முயற்சிசெய்!
கொடுநினை வகற்று!


பாடல் - 4 உரைக் குறிப்புகள் :

1,2. உள்ளுணர்வுக் கிளர்ச்சியை அறிவினால் எண்ணியாய்ந்து கொள்ளுக!

3,4. தன்னுயிர் நிலைக்குப் பொருந்தா நிலைகள் என்று அறிவு தெளிய வைப்பனவற்றை அவ்வப் பொழுதிலேயே தள்ளிப் புறத்தொதுக்குக!

5-7. உயிரியக்கத்திற்குப் புறப்படுத்தக் கூடாதது - தள்ளி வைக்கத் தகாதது என்று அறிவு ஆய்ந்து தேறியதை அகப்படுத்திக் கொள்ளுக!

8. உள்ளத்தை வளைய வைக்கும் கொடிய நினைவுகளை அகற்றுக!



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 24, 2011 2:40 pm



உயர்வாய் நினைப்பன
உன்னை உயர்த்தும்!
மயர்வாம் நினைவுகள்
அறிவையும் மயக்கும்!
துயர்வுறும் வினைக்குத்
துணிவுகொள் ளாதே!
அயர்வின்றி இயங்கு
ஆக்கம் துணைவரும்!


பாடல் - 5 உரைக் குறிப்புகள்:

1,2. உயர்வாய் எண்ணுதல் - மேலானவற்றை எண்ணுதல்; உயர்த்தல் - மேனிலையில் நிறுத்தல்.

3,4. மயர்வு - தெளிவில்லாமல் குழம்பிக் கிடக்கும் நினைவுகள். மனமயக்கம் அறிவையும் மயங்கச் செய்யும்.

5,6. துயர்வுறும் வினை - முடிவில் துன்பத்தைத் தரும் வினை.

7,8. அயர்வு - வினைச்சோர்வு; ஆக்கம் துணை வரும் - வினையளவான் விளைகின்ற ஆக்கம், அடுத்தடுத்துச் செய்யும் வினைகளுக்குத் துணை நிற்றல்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 24, 2011 2:40 pm


ஒழுக்கமே உன்றனை
உயர்த்திடும் படிநிலை
இழுக்கம் இழுக்கு!
இழிவுறும் அதனால்!
பழக்கம் கொடியது!
பண்புபொன் மகுடம்!
இழக்கும் பொழுதுகட்(கு)
ஈட்டம் நினைந்துபார்!


பாடல் - 6 உரைக் குறிப்புகள்:

1,2. ஒழுக்கம் - மன, மொழி, வினைகளால் நேர்பட ஒழுகுதல், உலகச் சிறப்பு நடை.

3,4. இழுக்கம் - தாழ்வுறுதல்; இழுக்கு - கீழ்மையும் பழியும்

5. பழக்கத்திற்கு அடிமையாதல் நம்மைத் தாழ்ச்சியுறச் செய்யும்; கொடியது - தாழ்ச்சியுறச் செய்வது.

6. பொன் மகுடம்: பொன்முடி - நிலையானும் தகுதியானும் அரச மதிப்படையச் செய்வது.

7,8. பொழுதை இழந்து வினைப்பயன் பெறுதல்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 24, 2011 2:41 pm


ஒவ்வொரு நொடியும்
உனக்கென வாய்த்தது!
எவ்வொரு நொடியும்
இழத்தல்செய் யாதே!
இவ்வொரு நொடிக்கே
ஏங்கி யிருந்ததாய்
அவ்வொரு நொடியும்
அளாவிப் பயன்பெறு!


பாடல் - 7 உரைக் குறிப்புகள்:

1,2. வாழ்வுக் காலத்தே வந்து விரைந்து செல்லும் ஒவ்வொரு மணித்துளியும் நமக்காகத்தான் வாய்த்தது என எண்ணி வினை செயல் வேண்டும்.

3,4. எந்தவொரு மணித்துளியும் வெறுமனே பயனற்றுப் போகுமாறு வினை செய்வதை இழந்து விடாதே! (அவ்விழப்பு ஈடு செய்யவொண்ணாது!)

5-8. வருகின்ற அந்த ஒரு மணித்துளிக்காகத்தான் நாம் ஏங்கிக் காத்திருந்தோம் என்னும் மன ஆர்வத்துடன், ஒரு சிறு பொழுதையும் இழந்து விடாமல் வினைப்பட்டு முழுப்பயன் பெறுமாறு அளாவி ஈட்டம் கொள்ளுதல் வேண்டும் என்க.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 24, 2011 2:41 pm

நேற்றெனல் வேறு!
இன்றெனல் வேறு!
நேற்றிருந் ததுபோல்
இன்றிருந் திடாதே!
நேற்றினும் இன்றுநீ
நெடிது வளர்ந்துளாய்!
நேற்றைய வளர்ச்சியுள்
நினைவொடுக் காதே!


பாடல் - 8 உரைக் குறிப்புகள்:

1,2. நேற்று என்று சொல்வது அது கடந்து போனது ஒன்றானதால் வேறு. அதுபோல் இன்று என்று சொல்வது கடக்க வாய்த்திருக்கின்ற பொழுதாயினதால் இது வேறு.

3,4. நேற்றிருந்த அதே நிலையில் இன்றைக்கும் இருந்திடல் கூடாது. (ஏனெனில் காலம் வளர்ந்து புதிய பொழுதுகள் முளைத்துக் கொண்டேயிருக்க, நாமும் முந்திய அதே கால நிலையிலேயே இருத்தல் கூடாதென்பதாம்.)

5,6. நேற்றினும் இன்றைக்கு அகத்திலும், புறத்திலும் உயர்வாக வளர்ந்திருக்கின்ற நிலையினை எண்ணி, மேலும் புதிய வளர்ச்சிக்கு ஊக்கங் கொள்ளுதல் வேண்டும் என்க.

7,8. நேற்றைய வளர்ச்சி, நேற்றைய அகப்புறத் தழைப்பாதலின் அதுபற்றியே எண்ணி, இன்றைய பொழுதை ஈட்டமின்றிக் கழித்துவிடல் கூடாது என்பதாம்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 24, 2011 2:41 pm

நேற்றைய நினைவுகள்
இன்றைய செயல்கள்!
நேற்றைய அறிவோ!
இன்றறி யாமை!
நேற்றைய அடிக்குமேல்
நெட்டடி இன்றுவை!
நேற்றுநீ காற்றெனில்
நீள்விசும் பின்றுநீ!


பாடல் - 9 உரைக் குறிப்புகள்:

1,2. இன்றை வினைப்பாடுகள் யாவும் நேற்றைய எண்ண மலர்ச்சியின் விளைவே! நேற்றைய எண்ண அளவும், அதன்வழி வினையளவும் தெரியவே இன்றைய எண்ண ஆற்றலை மிகுவிக்க!

3,4. நேற்று அறிவென எண்ணியது, இன்றைய வளர்ச்சியில் அறியாமையாகவும் இருக்கலாம் எனக் கொள்ளுக!

5,6. நேற்றைய வளர்ச்சிக்கென எடுத்த முயற்சியை (அதன் வினையளவு தெரிதலான் மேலும் வலியதாக இன்றைக்குச் செய்க.

7,8. நுண்மையும், வன்மையும், நீண்மையும் உடைய காற்றுப் போலும் நேற்றிருந்தாயெனில், அக்காற்றையும் உள்ளடக்கித் தற்சார்புடையதாகவுள்ள நெடிய வான் போல் இன்றைக்கு விளங்குக!



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 24, 2011 2:42 pm

உன்றன் விழிகளை
உயர்த்துக வானில்!
உன்றன் செவிகளை
உலகெலாம் பரப்புக!
குன்றுபார்! கதிர்பார்!
கோடிவிண் மீன்பார்!
நின்றுபார்! நடந்துபார்!
சிறுநீ, உலகம்!


பாடல் - 10 உரைக் குறிப்புகள்:

1,2. விழிகளை உயர்ச்சியும் விரிவும் தூய்மையும் சான்ற வான் நோக்கி உயர்த்துக! விழியை உயர்த்தவே, மனமும் அறிவும் தாமே உயர்வனவாகும் என்க.

3,4. செவிகளை உலக முழுமையும் பரப்பிக் கொள்ளுக! பரப்பவே, உலகின் மூலை முடுக்குகளினின்று வெளிப்படும் அனைத்து அறிவு நிலைகளும் கேள்வியால் உணரப்பெறும் என்க.

5,6. உயர்ந்து நிற்கும் குன்றையும், ஒளிபரப்பும் கதிரையும், எண்ணத்திற்கு எட்டாதனவும், அளவிடற்படாதனவுமாகிய விண்மீன் கூட்டங்களையும் பார்த்து மனத்தை அவ்வாறு சிறக்கச் செய்க என்பதாம்.

7,8. இயக்கமின்றி ஓரிடத்தில் அமைவாக நிற்க; நின்று பின் இயங்குக; இயங்குகையில் கால்களாலேயே நடக்க, இங்ஙன் இயற்கையைத் துய்க்க, அதனொடு உன்னை ஒப்பிடுக. அக்கால் நாமும் ஒரு சிறு உலகம் என்பதை உணர்தல் இயலும்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக