புதிய பதிவுகள்
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 19:51

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 19:49

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 19:36

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 17:08

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 17:05

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 16:53

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 13:29

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 12:20

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 12:16

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 12:13

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 12:08

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 12:01

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 9:59

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 21:35

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 21:32

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 21:30

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 18:55

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 16:33

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 16:12

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 16:03

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 15:59

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 15:51

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:20

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 13:27

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 13:00

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:12

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:04

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:00

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:17

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:14

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon 20 May 2024 - 21:04

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:54

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:52

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:49

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:41

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:56

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:53

» சினி மசாலா
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:39

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:36

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:29

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மழைத் திருவிழா Poll_c10மழைத் திருவிழா Poll_m10மழைத் திருவிழா Poll_c10 
59 Posts - 50%
heezulia
மழைத் திருவிழா Poll_c10மழைத் திருவிழா Poll_m10மழைத் திருவிழா Poll_c10 
47 Posts - 39%
T.N.Balasubramanian
மழைத் திருவிழா Poll_c10மழைத் திருவிழா Poll_m10மழைத் திருவிழா Poll_c10 
6 Posts - 5%
mohamed nizamudeen
மழைத் திருவிழா Poll_c10மழைத் திருவிழா Poll_m10மழைத் திருவிழா Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
மழைத் திருவிழா Poll_c10மழைத் திருவிழா Poll_m10மழைத் திருவிழா Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
மழைத் திருவிழா Poll_c10மழைத் திருவிழா Poll_m10மழைத் திருவிழா Poll_c10 
1 Post - 1%
Guna.D
மழைத் திருவிழா Poll_c10மழைத் திருவிழா Poll_m10மழைத் திருவிழா Poll_c10 
1 Post - 1%
Shivanya
மழைத் திருவிழா Poll_c10மழைத் திருவிழா Poll_m10மழைத் திருவிழா Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மழைத் திருவிழா Poll_c10மழைத் திருவிழா Poll_m10மழைத் திருவிழா Poll_c10 
249 Posts - 48%
ayyasamy ram
மழைத் திருவிழா Poll_c10மழைத் திருவிழா Poll_m10மழைத் திருவிழா Poll_c10 
201 Posts - 39%
mohamed nizamudeen
மழைத் திருவிழா Poll_c10மழைத் திருவிழா Poll_m10மழைத் திருவிழா Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
மழைத் திருவிழா Poll_c10மழைத் திருவிழா Poll_m10மழைத் திருவிழா Poll_c10 
14 Posts - 3%
prajai
மழைத் திருவிழா Poll_c10மழைத் திருவிழா Poll_m10மழைத் திருவிழா Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
மழைத் திருவிழா Poll_c10மழைத் திருவிழா Poll_m10மழைத் திருவிழா Poll_c10 
9 Posts - 2%
jairam
மழைத் திருவிழா Poll_c10மழைத் திருவிழா Poll_m10மழைத் திருவிழா Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மழைத் திருவிழா Poll_c10மழைத் திருவிழா Poll_m10மழைத் திருவிழா Poll_c10 
4 Posts - 1%
Jenila
மழைத் திருவிழா Poll_c10மழைத் திருவிழா Poll_m10மழைத் திருவிழா Poll_c10 
4 Posts - 1%
Rutu
மழைத் திருவிழா Poll_c10மழைத் திருவிழா Poll_m10மழைத் திருவிழா Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மழைத் திருவிழா


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue 18 Jan 2011 - 14:36

வனப்பகுதியில் மழை பெய்து கொண்டிருந்தது. அங்கு வசித்த எல்லா விலங்குகளும் மழையில் நனைந்திருந்தன. குளிரில் அவற்றின் தேகம் நடுங்கிக் கொண்டிருந்தது. தங்குவதற்கு புகலிடம் ஏதாவது கிடைக்குமா என்று கலந்தாலோசித்துக் கொண்டிருந்தன.

"தங்குவதற்கு குகைதான் தோதான இடம்'' என்றது ஒரு காட்டெருமை.

"அது சிங்கங்களின் இருப்பிடமாயிற்றே... நாம் எப்படி அங்குபோய் தங்குவது?'' என்று கேள்வி எழுப்பியது ஒரு மான்.

"சிங்கம் நம்மை வேட்டையாடும் விலங்குதான். அதேசமயம் இந்தக் காட்டுக்கு ராஜா என்பதையும் மறந்துவிடக்கூடாது. இங்கு வசிக்கும் ஒவ்வொரு விலங்கையும் காக்கும் பொறுப்பும் அவருக்கு இருக்கிறது'' என்று காட்டெருமை கூற, மற்ற விலங்குகள் சிந்திக்கத் தொடங்கின.

விலங்குகளின் நிலைமை தலைமையகத்துக்கு தெரிவிக்கப்பட்டது. அடுத்த சில நிமிடங்களில் தலைமைச் சிங்கத்திடமிருந்து அழைப்பு வந்தது.

எல்லா விலங்குகளும் ஒன்றையொன்று பார்த்துக் கொண்டன. அரைகுறை மனதுடன் தயங்கியபடியே கிளம்பின. குகையின் வாசலருகே நான்கைந்து சிங்கங்கள் விலங்குகளின் வருகையை எதிர்பார்த்து காத்திருந்தன.

"வாருங்கள் தோழர்களே'' சந்தோசமாய் வரவேற்றது தலைமைச் சிங்கம்.

மொத்த விலங்குகளின் கூட்டமும் மிரண்டு போய் நின்றது. அருகே செல்ல துணிவில்லாமல் ஆணி அடித்தாற்போல அப்படியே நின்றுவிட்டன.

விலங்குகளின் மன ஓட்டத்தைப் புரிந்துகொண்ட தலைமைச் சிங்கம், "புகலிடம் நாடி வந்தவர்களை பலி கொள்வது பண்பல்ல. அந்தப் பண்பிலிருந்து எப்பொழுதுமே நாங்கள் மாற மாட்டோம். அடைக்கலமாக வந்துள்ள உங்கள் அனைவரையும் அன்பாக நடத்துவோம். எங்களை நிச்சயம் நம்பலாம். பகைவராக இருந்தாலும் ஆபத்தான சமயத்தில் கைகொடுக்க வேண்டும். அதைத்தான் நாங்கள் இப்போது செய்கிறோம். அதுமட்டுமல்ல, நான் இந்தக் காட்டின் ராஜா. அதனால் உங்களைக் காக்கும் கடமையும் எனக்கு இருக்கிறது. மனதிலுள்ள பயத்தையெல்லாம் தூக்கி எறிந்துவிட்டு, சந்தோசமாக உள்ளே வாருங்கள்'' என்றது.

தலைமைச் சிங்கத்தின் நம்பிக்கையான இந்தப்பேச்சு, மற்ற விலங்குகளின் முகத்தில் மகிழ்ச்சியை வரவழைத்தது. எல்லா விலங்குகளும் குகைக்குள் செல்லத் தொடங்கின.

"யாரும் எந்தப் பயமும் இல்லாமல் சந்தோசமாக பேசலாம், சிரிக்கலாம், விளையாடலாம். ஏன் நடனம் கூட ஆடலாம்'' என்று சிங்கம் ஒன்று சிரித்தபடி சொல்ல, விலங்குகள் சலசலக்க ஆரம்பித்தன.

சிங்கம் ஒன்று விடுகதை சொல்ல, காட்டெருமை, மான், குரங்கு எல்லாம் போட்டி போட்டுக்கொண்டு உற்சாகமாய் விடை கூறின. காட்டெருமை ஒன்று கதை சொல்ல, மற்றவை சுவாரசியமாய் கேட்டன. இரண்டு குரங்குகள் சேர்ந்து குட்டிக்கரணம் அடிக்க, கூடியிருந்தவை கைகொட்டி ஆரவாரித்தன. மான் ஒன்று எழுந்து நடனம் ஆட, சிங்கங்கள் அதனுடன் இணைந்து ஆட்டம் போட... குகை முழுவதும் ஒரே கூச்சல், கும்மாளம். விலங்குகளின் இந்த சந்தோச ஆரவாரம் காடெங்கும் எதிரொலித்தது.

இடையிடையே விலங்குகளுக்குத் தேவையான உணவுகள் கொடுக்கப்பட்டன. உணவை சிங்கங்கள் சந்தோசமாய் பரிமாற, அந்த உபசரணையில் உச்சி குளிர்ந்து போயின விலங்குகள். விடிய விடிய பேச்சு, சிரிப்பு என்று குகை களைகட்டியிருந்தது. உறக்கம் என்பதை அவை மறந்து விட்டன.

மறுநாள் காலை.

மழை விட்டிருந்தது. இருள் சூழ்ந்திருந்த காட்டில், வெளிச்சம் ஊடுருவத் தொடங்கியிருந்தது. மழை நின்று விட்டதை உணர்ந்ததும், விலங்குகள் முகத்திலிருந்த மகிழ்ச்சி காணாமல் போய்விட்டது. அவற்றுக்கு சிங்கங்களைப் பிரிய மனம் வரவில்லை. சிங்கங்களின் மனமும் பாரமானது.சிங்கங்களிடம் விடைபெற்று அனைத்து விலங்குகளும் குகையின் வாசலுக்கு வந்தன. அங்கே சோக அலையடித்தது.

"மழை தொடர்ந்து பெய்து கொண்டேயிருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்?'' என்று மான்குட்டி ஒன்று ஏக்கப் பெருமூச்சு விட்டது.

"கடவுள் உங்களை எங்களுக்கு உணவாகப் படைக்காமல் இருந்திருந்தால், நாம் இதே குதூகலத்துடன் எப்போதும் சந்தோசமாய் கூடி வாழ்ந்திருக்கலாம்'' என்று வேதனையுடன் பேசியது ஒரு சிங்கம்.

"கவலைப்படாதீர்கள்... அடுத்த மழைநாளில் நாம் மீண்டும் இதேபோல் ஒன்றாகக் கூடி, சந்தோசமாய் குதூகலிக்கலாம்'' என்று சிரித்தபடி தெரிவித்தது தலைமைச் சிங்கம்.

மற்ற விலங்குகள் கைதட்டி தங்களுடைய சந்தோசத்தை தெரிவித்தன.

- எஸ். மோகனா செல்வகணேசன்



மழைத் திருவிழா Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue 18 Jan 2011 - 14:59

ஆகா.... கதை நல்லா இருக்கே... மழைத் திருவிழா 678642




மழைத் திருவிழா Power-Star-Srinivasan
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Tue 18 Jan 2011 - 15:42

நல்ல கதை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக