புதிய பதிவுகள்
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:57 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:48 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:36 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:19 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:10 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:42 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:34 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:20 am
» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sat May 04, 2024 11:02 pm
» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
by ayyasamy ram Today at 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:57 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:48 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:36 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:19 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:10 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:42 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:34 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:20 am
» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sat May 04, 2024 11:02 pm
» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Rutu | ||||
Jenila | ||||
Baarushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
prajai | ||||
manikavi | ||||
viyasan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழுக்கு அமுதென்று பெயர் -இது உங்கள் களம்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- ப்ரியாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010
அனைத்து தமிழ் உறவுகளுக்கும் என் அன்பான வணக்கங்கள்..
தமிழ் மொழி சம்பந்தமான தெளிவின்மைகள், சந்தேகங்கள், இலக்கணம் ஆகியவை தொடர்பாக கலந்துரையாடும் கருத்துக் களமாக இருக்க வேண்டும் என்பதற்காக இந்த திரியை ஆரம்பித்து வைக்கின்றேன்.எமக்கு ஏற்படும் தெளிவின்மைகளை எமது ஆசான்கள் நிச்சயம் தீர்த்து வைப்பார்கள்....
என்னங்க யாருங்க ஆரம்பித்து வைப்பது .
தமிழ் மொழி சம்பந்தமான தெளிவின்மைகள், சந்தேகங்கள், இலக்கணம் ஆகியவை தொடர்பாக கலந்துரையாடும் கருத்துக் களமாக இருக்க வேண்டும் என்பதற்காக இந்த திரியை ஆரம்பித்து வைக்கின்றேன்.எமக்கு ஏற்படும் தெளிவின்மைகளை எமது ஆசான்கள் நிச்சயம் தீர்த்து வைப்பார்கள்....
என்னங்க யாருங்க ஆரம்பித்து வைப்பது .
- கலைப்பிரியன்இளையநிலா
- பதிவுகள் : 408
இணைந்தது : 28/07/2009
சிலேடை
ஒரு சொல் அல்லது தொடர்ச்சொல் பல பொருள் தரும்படும்படி அமைவது சிலேடை எனப்படும்
சிலேடை இரண்டு வகைப்படும்
செம்மொழிச் சிலேடை என்பது, தொடர்ச் சொற்கள் ஒரே விதமாக இருந்து
கொண்டே பலபொருள் தருவதாகும்
எடுத்துக்காட்டு:
அருஞ்சொல் பொருள்
இப்பாடல்
சூரியனுக்கும் சோழனுக்கும் சிலேடையாகப் பாடப்பட்டுள்ளது. இப்பாடலில் உள்ள
சொற்கள் சூரியனோடு பொருத்திப் பார்க்கும்போது, ஒரு பொருளையும், சோழனோடு
பொருத்திப் பார்க்கும் போது வேறு ஒரு பொருளையும் தருகின்றன.
சூரியனோடு பொருத்திப் பார்க்கும்போது :-
கரங்கள் - கதிர்கள், கற்றைகள்;
இரவு - இருள்;
பங்கயம் - தாமரை;
மாதர் - காதல்;
நலம் - அழகு;
பயிலல் - உண்டாதல்;
பொங்குதல் - மேல் நோக்கி வளர்தல்;
உதயம் -தோற்றம்;
ஓர் ஆழி -ஒற்றைச் சக்கரத்தை உடைய தேர்;
வெய்யோன் - சூரியன்;
உயர்ந்த நெறி - வான் வழி (விண் விசும்பு).
சோழனோடு பொருத்திப் பார்க்கும்போது:-
கரங்கள் - கைகள்;
இரவு - வறுமை;
பங்கய மாதர் - தாமரையில் வீற்றிருக்கும் திருமகள்;
நலம் - செல்வம்;
பயிலல் -பெருகுதல்;
பொங்குதல் - மேம்படுதல்;
உதயம் - பொருள் வருவாய்;
ஓர் ஆழி - தனி ஆணைச் சக்கரம்;
வெய்யோன் - விரும்பப்படுபவனாகிய சோழன்;
உயர்ந்த நெறி - உயர்ந்த ஒழுக்கமாகிய நெறி.
2. பிரிமொழிச் சிலேடை
ஒரு வகையில் பொருள்தரும் தொடர்ச் சொல், வேறு வகையில் பிரித்து எழுதும்போது
வேறு பொருள் தருமாயின் அது பிரிமொழிச் சிலேடை எனப்படும்.
எடுத்துக்காட்டு:
அருஞ்சொல் பொருள்
இப்பாடல்,
சோழனைப் பகையாதவர் (நட்புக் கொண்டோர்) நாட்டிற்கும், அவனைப் பகைத்தவர்
நாட்டிற்கும் சிலேடையாகப் பாடப்பட்டுள்ளது. இப்பாடலில் உள்ள சொற்கள்,
பகையாதவர் நாட்டின் மேல் செல்லுங்கால் ஒரு வகையாகவும், பகைத்தவர் நாட்டின்
மேல் செல்லுங்கால் வேறு ஒரு வகையாகவும் பிரிந்து இருவேறு பொருளைத்
தருகின்றன.
சோழனைப் பகையாதவர் நாட்டின் மேல் செல்லுங்கால்:-
தள்ளா
இடத்து- அழகு கெடாத விளைநிலத்தில்;
ஏர் - பகட்டேர் அதாவது உழும் எருது;
தடம்- பெரிய;
தாமரை - தாமரை மலர்;
எள்ளா - இகழாத;
அரி - நெற்சூடு;
மானிடர் - உழவர்;
மிகுப்ப - திரட்ட;
உள்வாழ்தேம் - உள்ளே உண்டாகிய தேன்;
சிந்தும் -பொழியும்;
நந்தும் தொழில் புரிந்தார் - விரும்பும் பணி செய்தோர்.
சோழனைப் பகைத்தவர் நாட்டின் மேல் செல்லுங்கால்:-
விடத்தேர் - முள்ளுடைய ஒருவகை மரம்;
தள்ளா-அசையாத;
தடம்- மலை;
சிந்தும்- அழியும்;
தா மரை - தாவுகின்ற மரை என்னும் மான்;
எள்ளா - இகழாத;
அரி மான் - சிங்கப் போத்து, ஆண் சிங்கம்;
இடர்- துன்பம்;
மிகுப்ப - செய்ய;
உள்வாழ்தேம் - உள்ளத்தில் வாழும் நாடு;
நந்தும் தொழில் புரிந்தார் - வேறுபடும் தொழில் செய்தோர்.
ஒரு சொல் அல்லது தொடர்ச்சொல் பல பொருள் தரும்படும்படி அமைவது சிலேடை எனப்படும்
சிலேடை இரண்டு வகைப்படும்
- செம்மொழிச் சிலேடை
- பிரிமொழிச் சிலேடை
செம்மொழிச் சிலேடை என்பது, தொடர்ச் சொற்கள் ஒரே விதமாக இருந்து
கொண்டே பலபொருள் தருவதாகும்
எடுத்துக்காட்டு:
செங்கரங்க ளான்இரவு நீக்கும் திறம்புரிந்து பங்கய மாதர் நலம்பயிலப் - பொங்குஉதயத்து ஓர்ஆழி வெய்யோன் உயர்ந்த நெறிஒழுகும் நீர்ஆழி நீள்நிலத்து மேல் |
அருஞ்சொல் பொருள்
இப்பாடல்
சூரியனுக்கும் சோழனுக்கும் சிலேடையாகப் பாடப்பட்டுள்ளது. இப்பாடலில் உள்ள
சொற்கள் சூரியனோடு பொருத்திப் பார்க்கும்போது, ஒரு பொருளையும், சோழனோடு
பொருத்திப் பார்க்கும் போது வேறு ஒரு பொருளையும் தருகின்றன.
சூரியனோடு பொருத்திப் பார்க்கும்போது :-
கரங்கள் - கதிர்கள், கற்றைகள்;
இரவு - இருள்;
பங்கயம் - தாமரை;
மாதர் - காதல்;
நலம் - அழகு;
பயிலல் - உண்டாதல்;
பொங்குதல் - மேல் நோக்கி வளர்தல்;
உதயம் -தோற்றம்;
ஓர் ஆழி -ஒற்றைச் சக்கரத்தை உடைய தேர்;
வெய்யோன் - சூரியன்;
உயர்ந்த நெறி - வான் வழி (விண் விசும்பு).
சோழனோடு பொருத்திப் பார்க்கும்போது:-
கரங்கள் - கைகள்;
இரவு - வறுமை;
பங்கய மாதர் - தாமரையில் வீற்றிருக்கும் திருமகள்;
நலம் - செல்வம்;
பயிலல் -பெருகுதல்;
பொங்குதல் - மேம்படுதல்;
உதயம் - பொருள் வருவாய்;
ஓர் ஆழி - தனி ஆணைச் சக்கரம்;
வெய்யோன் - விரும்பப்படுபவனாகிய சோழன்;
உயர்ந்த நெறி - உயர்ந்த ஒழுக்கமாகிய நெறி.
2. பிரிமொழிச் சிலேடை
ஒரு வகையில் பொருள்தரும் தொடர்ச் சொல், வேறு வகையில் பிரித்து எழுதும்போது
வேறு பொருள் தருமாயின் அது பிரிமொழிச் சிலேடை எனப்படும்.
எடுத்துக்காட்டு:
தள்ளா விடத்தேர் தடந்தா மரையடைய எள்ளா அரிமா னிடர்மிகுப்ப - உள்வாழ்தேம் சிந்தும் தகைமைத்தே எங்கோன் திருவுள்ளம் நந்தும் தொழில்புரிந்தார் நாடு |
அருஞ்சொல் பொருள்
இப்பாடல்,
சோழனைப் பகையாதவர் (நட்புக் கொண்டோர்) நாட்டிற்கும், அவனைப் பகைத்தவர்
நாட்டிற்கும் சிலேடையாகப் பாடப்பட்டுள்ளது. இப்பாடலில் உள்ள சொற்கள்,
பகையாதவர் நாட்டின் மேல் செல்லுங்கால் ஒரு வகையாகவும், பகைத்தவர் நாட்டின்
மேல் செல்லுங்கால் வேறு ஒரு வகையாகவும் பிரிந்து இருவேறு பொருளைத்
தருகின்றன.
சோழனைப் பகையாதவர் நாட்டின் மேல் செல்லுங்கால்:-
தள்ளா
இடத்து- அழகு கெடாத விளைநிலத்தில்;
ஏர் - பகட்டேர் அதாவது உழும் எருது;
தடம்- பெரிய;
தாமரை - தாமரை மலர்;
எள்ளா - இகழாத;
அரி - நெற்சூடு;
மானிடர் - உழவர்;
மிகுப்ப - திரட்ட;
உள்வாழ்தேம் - உள்ளே உண்டாகிய தேன்;
சிந்தும் -பொழியும்;
நந்தும் தொழில் புரிந்தார் - விரும்பும் பணி செய்தோர்.
சோழனைப் பகைத்தவர் நாட்டின் மேல் செல்லுங்கால்:-
விடத்தேர் - முள்ளுடைய ஒருவகை மரம்;
தள்ளா-அசையாத;
தடம்- மலை;
சிந்தும்- அழியும்;
தா மரை - தாவுகின்ற மரை என்னும் மான்;
எள்ளா - இகழாத;
அரி மான் - சிங்கப் போத்து, ஆண் சிங்கம்;
இடர்- துன்பம்;
மிகுப்ப - செய்ய;
உள்வாழ்தேம் - உள்ளத்தில் வாழும் நாடு;
நந்தும் தொழில் புரிந்தார் - வேறுபடும் தொழில் செய்தோர்.
- கலைப்பிரியன்இளையநிலா
- பதிவுகள் : 408
இணைந்தது : 28/07/2009
அடுக்குத்தொடர்
பிரித்தாலும் பொருள்தரும் இரட்டைச் சொற்களை அடுக்குத் தொடர் என்பர்.
எடுத்துக்காட்டு:
மன்னரைக் கண்ட மக்கள் வாழ்கவாழ்க என்று வாழ்த்தினர்.
எடுத்துக்காட்டில் இடம்பெற்ற வாழ்கவாழ்க என்னும் இரட்டைச் சொல்லைப்
பிரித்தாலும் பொருள் தரும்.
கொசுரு...
இரட்டைக்கிளவி
பிரித்தால் பொருள்தராத இரட்டைச் சொற்களை இரட்டைக் கிளவி என்பர்.
எடுத்துக்காட்டு:
புயல் அடித்ததால் மரம் மடமட எனமுரிந்தது.
எடுத்துக்காட்டில் இடம்பெற்ற மடமட என்னும் இரட்டைச் சொல்லைப்
பிரித்தால் பொருள் ஏதும் தராது.
பிரித்தாலும் பொருள்தரும் இரட்டைச் சொற்களை அடுக்குத் தொடர் என்பர்.
எடுத்துக்காட்டு:
மன்னரைக் கண்ட மக்கள் வாழ்கவாழ்க என்று வாழ்த்தினர்.
எடுத்துக்காட்டில் இடம்பெற்ற வாழ்கவாழ்க என்னும் இரட்டைச் சொல்லைப்
பிரித்தாலும் பொருள் தரும்.
கொசுரு...
இரட்டைக்கிளவி
பிரித்தால் பொருள்தராத இரட்டைச் சொற்களை இரட்டைக் கிளவி என்பர்.
எடுத்துக்காட்டு:
புயல் அடித்ததால் மரம் மடமட எனமுரிந்தது.
எடுத்துக்காட்டில் இடம்பெற்ற மடமட என்னும் இரட்டைச் சொல்லைப்
பிரித்தால் பொருள் ஏதும் தராது.
சிறப்பான திரியைத் துவங்கிய பிரியாவிற்கும் அதனைச் சிறப்புடன் கொண்டுசெல்லும் கலைப் பிரியனுக்கும் நன்றி!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- கலைப்பிரியன்இளையநிலா
- பதிவுகள் : 408
இணைந்தது : 28/07/2009
அங்கதம்
அங்கதம் என்பது ஒருவகைக் கேலியாகும். இது தீங்கையும்அறிவின்மையையும் கண்டனம் செய்வதாக அமையும்;
சமகால நடப்பில், நிகழ்வுகளில் எதிரிடைப் பதிவுகளாக இருக்கக்கூடியதாகும். குற்றங்களைக் கடிந்துரைக்காமல் நகைச்சுவையுடன் சுட்டித் திருத்தவல்ல திறனுடையது இது.
தனி மனித அங்கதம், சமுதாய அங்கதம், அரசியல் அங்கதம் என இதனை வகைப்படுத்தலாம்.
தனிமனித அங்கதம்
மனிதன்,
கிடைத்த பொருளை அனுபவிக்கத் தெரியாதவனாக உள்ளான். தாமரையருகில் வாழும் தவளையாகத் தேனுண்ணத்
தெரியாமல் வாழ்கிறான். அறிவியல் வசதிகள் வாய்க்கப் பெற்றும், அதனைச் சிறப்புறப் பயன்கொள்ளத் தெரியாமல் பாழாக்குகின்றான்.
"கதவுகளையெல்லாம்
திறந்து வைத்திருக்கிறார்கள்
கண்களை மட்டும்
மூடிவிட்டு "
- (மேத்தா)
என்னும் வரிகளில் இவ்வுண்மை உணர்த்தப்படுகிறது. இம்முட்டாள்தனத்தை மெல்ல மெல்லத் திருத்திக் கொள்ள
மாட்டார்களா இக்கவிதையைக் கண்ட பின்பு?
சமுதாய அங்கதம்
தனிநபர் உடைமைகளுக்குப் பாதுகாப்பு இல்லாத நிலையை,
திண்ணை இருட்டில் எவரோ கேட்டார்
தலையை எங்கே வைப்பதாம் என்று
எவனோ ஒருவன் சொன்னான்
களவு போகாமல் கையருகே வை !
- (ஞானக்கூத்தன்)
என்னும் கவிதை நாசூக்காக உணர்த்துகிறது.
சமுதாயத்தில் நீதியை நிலைநிறுத்த வேண்டிய நீதிமன்றத்தினர்,
அவற்றில் வழுவுகின்ற நிலையைக் கருத்தில் கொண்டு,
வழக்கறிஞர்களுக்குள்
கடுமையான
வாதம்-
இறந்து போய்விட்ட
நீதியின் பிணத்தை
எரிப்பதா. . .
புதைப்பதா . . .
என்று !
-(மேத்தா)
என்னும் கவிதை உணர்த்துகின்றது.
அரசியல் அங்கதம்
அரசியல்வாதிகள் தேர்தல் காலங்களில் மக்களை மூளைச் சலவை செய்யப் பலவிதமாக முழக்கமிடுவார்கள்.
ஏழைகளே
எங்கள் கட்சி
உங்களுக்காகவே !
நீங்கள்
ஏமாற்றி விடாதீர்கள்
இப்படியே இருங்கள்] !
-(தமிழன்பன்)
என்னும் கவிதை மக்களை முட்டாளாக்கவே முனையும்
அரசியல்வாதிகளின் சாணக்கியத்தனத்தைப் பறைசாற்றுகின்றது.
அங்கதம் என்பது ஒருவகைக் கேலியாகும். இது தீங்கையும்அறிவின்மையையும் கண்டனம் செய்வதாக அமையும்;
சமகால நடப்பில், நிகழ்வுகளில் எதிரிடைப் பதிவுகளாக இருக்கக்கூடியதாகும். குற்றங்களைக் கடிந்துரைக்காமல் நகைச்சுவையுடன் சுட்டித் திருத்தவல்ல திறனுடையது இது.
தனி மனித அங்கதம், சமுதாய அங்கதம், அரசியல் அங்கதம் என இதனை வகைப்படுத்தலாம்.
தனிமனித அங்கதம்
மனிதன்,
கிடைத்த பொருளை அனுபவிக்கத் தெரியாதவனாக உள்ளான். தாமரையருகில் வாழும் தவளையாகத் தேனுண்ணத்
தெரியாமல் வாழ்கிறான். அறிவியல் வசதிகள் வாய்க்கப் பெற்றும், அதனைச் சிறப்புறப் பயன்கொள்ளத் தெரியாமல் பாழாக்குகின்றான்.
"கதவுகளையெல்லாம்
திறந்து வைத்திருக்கிறார்கள்
கண்களை மட்டும்
மூடிவிட்டு "
- (மேத்தா)
என்னும் வரிகளில் இவ்வுண்மை உணர்த்தப்படுகிறது. இம்முட்டாள்தனத்தை மெல்ல மெல்லத் திருத்திக் கொள்ள
மாட்டார்களா இக்கவிதையைக் கண்ட பின்பு?
சமுதாய அங்கதம்
தனிநபர் உடைமைகளுக்குப் பாதுகாப்பு இல்லாத நிலையை,
திண்ணை இருட்டில் எவரோ கேட்டார்
தலையை எங்கே வைப்பதாம் என்று
எவனோ ஒருவன் சொன்னான்
களவு போகாமல் கையருகே வை !
- (ஞானக்கூத்தன்)
என்னும் கவிதை நாசூக்காக உணர்த்துகிறது.
சமுதாயத்தில் நீதியை நிலைநிறுத்த வேண்டிய நீதிமன்றத்தினர்,
அவற்றில் வழுவுகின்ற நிலையைக் கருத்தில் கொண்டு,
வழக்கறிஞர்களுக்குள்
கடுமையான
வாதம்-
இறந்து போய்விட்ட
நீதியின் பிணத்தை
எரிப்பதா. . .
புதைப்பதா . . .
என்று !
-(மேத்தா)
என்னும் கவிதை உணர்த்துகின்றது.
அரசியல் அங்கதம்
அரசியல்வாதிகள் தேர்தல் காலங்களில் மக்களை மூளைச் சலவை செய்யப் பலவிதமாக முழக்கமிடுவார்கள்.
ஏழைகளே
எங்கள் கட்சி
உங்களுக்காகவே !
நீங்கள்
ஏமாற்றி விடாதீர்கள்
இப்படியே இருங்கள்] !
-(தமிழன்பன்)
என்னும் கவிதை மக்களை முட்டாளாக்கவே முனையும்
அரசியல்வாதிகளின் சாணக்கியத்தனத்தைப் பறைசாற்றுகின்றது.
- செங்கை ஆழியன்பண்பாளர்
- பதிவுகள் : 197
இணைந்தது : 22/04/2010
நன்றி பிரியன் , நாளை மறுதினம் அரசபணிக்கு ஒரு தேர்வு இருக்கு எனக்கு ரொம்ப பயன்படும் ....
- கலைப்பிரியன்இளையநிலா
- பதிவுகள் : 408
இணைந்தது : 28/07/2009
செங்கை ஆழியன் wrote:நன்றி பிரியன் , நாளை மறுதினம் அரசபணிக்கு ஒரு தேர்வு இருக்கு எனக்கு ரொம்ப பயன்படும் ....
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|