புதிய பதிவுகள்
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Today at 6:32 am
» books needed
by Manimegala Today at 4:59 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 2:36 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 2:29 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 4:59 pm
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 3:40 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:07 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:55 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 2:04 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 2:02 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 1:57 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:05 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:54 am
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 7:58 am
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 7:57 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:32 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:16 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:56 am
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 5:32 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 2:18 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 2:11 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 2:00 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 1:37 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 1:19 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 1:14 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 3:34 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 3:27 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 3:26 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 3:25 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 3:23 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 3:22 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 3:20 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 3:18 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 3:15 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 3:13 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 3:09 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 12:32 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 10:39 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 7:03 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 6:56 am
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 3:10 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 3:05 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 12:06 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 6:28 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 6:03 am
by ஜாஹீதாபானு Today at 6:32 am
» books needed
by Manimegala Today at 4:59 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 2:36 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 2:29 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 4:59 pm
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 3:40 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:07 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:55 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 2:04 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 2:02 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 1:57 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:05 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:54 am
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 7:58 am
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 7:57 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:32 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:16 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:56 am
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 5:32 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 2:18 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 2:11 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 2:00 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 1:37 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 1:19 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 1:14 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 3:34 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 3:27 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 3:26 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 3:25 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 3:23 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 3:22 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 3:20 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 3:18 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 3:15 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 3:13 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 3:09 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 12:32 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 10:39 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 7:03 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 6:56 am
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 3:10 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 3:05 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 12:06 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 6:28 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 6:03 am
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
jairam | ||||
Guna.D | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஷாரூக்கான் சொன்னதில் என்ன தவறு?
Page 1 of 1 •
ஷாரூக்கான் சொன்னதில் என்ன தவறு?
ஒரு சின்ன விஷயம்… யோசித்துப் பார்த்தால் உண்மையிலேயே சின்ன விஷயம்தான். ஆனால் அதை பால், உத்தவ் தாக்கரேக்கள் ஊதி ஊதிப் பெரிதாக்கி, பெரிய அரசியல் ஆதாயம் தேடி வருகின்றனர்.
ஐபிஎல் என்ற வர்த்தக ரீதியிலான கிரிக்கெட் போட்டிகளில் இந்த ஆண்டு பாகிஸ்தான் வீரர்களை எந்த அணியின் உரிமையாளரும் ஏலம் எடுக்கவில்லை, கல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளர் ஷாரூக்கான் உள்பட.
இது பின்னர் தேசிய அளவிலான பிரச்சினையாக மாற, இருநாட்டு அதிகாரிகளும், வாரியங்களும் பேசி.. மோதிக் கொண்டன. இதில் தாமாக மூக்கை நுழைத்த சிவசேனா, மும்பையில் பாகிஸ்தான் வீரர்கள் கால் வைக்கக் கூடாது என்றும், அவர்களை ஐபிஎல் போட்டியில் யாரும் ஏலம் எடுக்காதது நல்லதுதான் என்றும் கூறியிருந்தது.
இந்த நேரத்தில் இன்னொரு விஷயமும் பரபரப்பாக ஓடிக்கொண்டிருந்தது… அது மும்பை மும்பைவாசிகளுக்கே என்ற சிவசேனாவின் மூர்க்கத்தனம். இதற்கு மாற்றாக கருத்து கூறிய டெண்டுல்கர், அமிதாப், அமீர்கான் எல்லாம் பால் தாக்கரேயின் அரசியல் வாணலியில் வறுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போதுதான், ‘பாகிஸ்தான் வீரர்களும் விளையாடியிருந்தால் நன்றாக இருந்திருக்குமே’ என்று கருத்து சொன்னார் ஷாரூக்கான்.
யார் வசமாகக் கிடைப்பார்கள், குதிரை சவாரி செய்யலாம் என்று காத்திருந்த சிவசேனாவுக்கு, ஷாரூக்கான் ராஜ குதிரையாகத் தெரிந்தார். போதாக்குறைக்கு அவரது இஸ்லாமிய அடையாளம் வேறு.. இந்த சீஸனுக்கு இவர் போதும் என்று கப்பென்று பிடித்துக் கொண்டார் பால் தாக்கரே.
கொஞ்சம் கொஞ்சமாக செத்துக் கொண்டிருந்த சேனாவின் அரசியல் இமேஜை உயிர்ப்பிக்க ஷாரூக்கின் மை நேம் ஈஸ் கான் மிகவும் தேவைப்பட்டது. அதைப் பலிகொள்ள முழு வீச்சில் களமிறங்கினார்கள் பால் தாக்கரேயும் அவரது மகன் உத்தவ் தாக்கரேயும்.
வழக்கம்போல, ஷாரூக்கான் தனது கருத்துக்கு மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிட்டால் படத்தை ரிலீஸ் பண்ண விடமாட்டோம் என்று பேச ஆரம்பித்தனர் தாக்கரேக்கள். மகாராஷ்ட்ர காங்கிரஸ் அரசு ஷாரூக்கானுக்கு தங்கள் முழு ஆதரவை தெரிவித்தது.
படம் வெளியாகும் நாள் நெருங்க நெருங்க, மகா டென்ஷன் ஷாரூக்கானுக்கு மட்டுமல்ல, மும்பைவாசிகளுக்கும்தான்.
படம் வெளியானபோது நடந்தவை அவமானத்தின் உச்சம். சிவசேனாவுக்கு பயந்து கொண்டு ஷாரூக்கானுக்கும் அவரது பட வெளியீட்டுக்கும் ஆதரவு தரக்கூட திரையுலகம் முன்வரவில்லை. சல்மான்கான், அபிஷேக் பச்சன், காஜோல் என சிலர் மட்டுமே வெளிப்படையான ஆதரவைத் தெரிவித்தனர். மற்றவர்கள் கூட்டுக்குள் தலையை இழுத்துக் கொண்டனர். காங்கிரஸ் தவிர பிற கட்சிகள் கண்டுகொள்ளாமல் போய்விட்டன.
சிவசேனாவின் ஆட்டம் பேயாட்டமாகிவிட, படத்தைத் திரையிட முதலில் முன்வந்த தியேட்டர்காரர்கள் அப்படியே பல்டியடித்தனர். வெள்ளிக்கிழமை பகல் காட்சியை மும்பை மக்கள் பார்க்க முடியவில்லை. காரணம் சிவசேனாவின் பகிரங்க பயமுறுத்தல்.
அதேநேரம், ஷாரூக்கான் ஓடோடி வந்து தன்னைச் சந்திக்க வேண்டும்… மன்னிப்புக் கோர வேண்டும், காலில் விழுந்து ஆசி பெற வேண்டும் என்பது பால் தாக்கரேயின் விருப்பமாக இருந்தது.
ஆனால் ஷாரூக்கான், ‘எதற்காக நான் மன்னிப்பு கோர வேண்டும்?’ என்று கேட்டுவிட்டு, தனது கருத்தில் உறுதியாக நின்றார். இதனால் ஷாரூக்கின் மை நேம் ஈஸ் கான் வெளியாகவிருந்த திரையரங்குகள் சில நொறுக்கப்பட்டன. இதைப் பார்த்து மற்ற திரையரங்குகளும் இந்தப் படத்தை திரையிட மறுத்தன. மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் கூட்டம் போட்டு, இந்தப் படம் வேண்டாம் என்றனர்.
இன்னொரு பக்கம் ஷாரூக்கும் இயக்குநர் கரண் ஜோஹரும் இந்தப் படம் திட்டமிட்டபடி வெளியாகியே தீரும் என்றனர். மும்பையில் எந்த தியேட்டரும் படத்தை வெளியிடாவிட்டாலும் பரவாயில்லை என்பது அவர்கள் நிலை. படத்தை திரையிடும் அனைத்து திரையரங்குகளுக்கும் மராட்டிய அரசு முழு பாதுகாப்பு தருவதாக உறுதியளித்திருந்தது.
அதேநேரம் தங்கள் உறுதிமொழியை புறக்கணித்தனர் தியேட்டர்காரர்கள். இரண்டு நாள்களுக்கு முன்பு வரை மும்பையில் 63 திரையரங்குகளில் வெளியாகவிருந்த மை நேம் ஈஸ் கான், வெள்ளிக்கிழமை காலை வெறும் 3 திரையரங்குகளில் மட்டுமே வெளியானது. அவற்றில் ஒன்றில் படம் பார்த்தவர் மாநில உள்துறை அமைச்சர் ஆர்ஆர் பாட்டீல்.
இந்தப் படம் தரத்தில், தயாரிப்பில், நடிப்பில் இந்தியாவின் மிகச் சிறந்த படைப்பாக அனைவரும் கொண்டாட ஆரம்பிக்க, வேறு வழியின்றி படிப்படியாக மற்ற தியேட்டர்களும் வழிக்கு வந்தன. ரசிகர்களும் பயமின்றி படம் பார்க்க வரத் துவங்க, பிற்பகலுக்குப் பிறகு மேட்னி ஷோவை பெரும்பாலான திரையரங்குகள் மை நேம் ஈஸ் கானுடன் தொடர்ந்தன. அனைத்துக் காட்சிகளும் ஹவுஸ் புல்.
இந்த நேரத்தில் ஷாரூக்கான் ட்வீட்டரில் ஒரு செய்தி அனுப்பினார்: “என்னால் மும்பை மக்களுக்கு எத்தனை சிரமங்கள்.. இதை நினைத்து வருத்தப்படுகிறேன். உங்கள் அனைவரையும் நான் மிகவும் நேசிக்கிறேன்..’ என்று அதில் கூறியிருந்தார்.
அடுத்த நிமிடமே சிவசேனா அலுவலகத்தில் பட்டாசு வெடித்துக் கொண்டாட ஆரம்பித்துவிட்டார்கள். எதற்கு?
‘ஷாரூக்கான் மன்னிப்பு கேட்டு விட்டார்… சிவசேனாவுக்கு வெற்றி’ என்று.
வரிசை வரிசையாக வந்து பால் தாக்கரேக்கு மாலை சூட்டினர். இந்தப் பிரச்சினையில் அவர் ஜெயித்து விட்டாராம். மும்பை மக்களின் ஏகபோக ஆகரவு அவருக்குத்தானாம்! எத்தனை அல்பத்தனம்!!
இவர்களைப் பொறுத்தவரை, யாராக இருந்தாலும், தவறே செய்யாவிட்டாலும் இவர்களிடம் மன்னிப்பு கேட்டுவிட வேண்டும். இல்லாவிட்டால் மும்பையில் இருக்க முடியாது அல்லது நடித்த படம் ரிலீஸ் ஆகாது. ‘சினிமா, கிரிக்கெட் என்ற பொழுதுபோக்கு சாதனங்கள் போதும், அரசியல் பிழைக்க!’ என்பது தாக்கரேக்கள் சொல்லாமல் சொல்லும் வாதம்.
வெறும் வன்முறை, கட்டப்பஞ்சாயத்து, மிரட்டல் அரசியல் செய்து வரும் சிவசேனா, ஷாரூக்கானைப் பற்றி மட்டுமல்ல, இந்த நாட்டின் கடைசி குடிமகனையும் விமர்சிக்கும் அருகதையற்றது என்பதே உண்மை.
அரசின் தவறான பொருளாதாரக் கொள்கை, விலைவாசி போன்ற நியாயமான பிரச்சினைகளுக்கு எதிராகக் குரல் கொடுத்து தங்கள் அரசியல் இருப்பை வெளிப்படுத்தத் திராணியற்ற இதுபோன்ற அரசியல்வாதிகளை தொடர்ந்து பேயாட்டம் போட விட்டு மத்திய அரசு வேடிக்கைப் பார்ப்பதன் காரணம் என்னவென்றே புரியவில்லை.
பாகிஸ்தான் விளையாட்டு வீரர்கள் விஷயத்தில் ஷாரூக்கான் சொன்னதை விடுங்கள்… மக்களின் கருத்து என்ன? கிரிக்கெட் என்பது தேசத்தின் மானப் பிரச்சினை அல்ல. அது வெறும் விளையாட்டு மற்றும் வியாபார சமாச்சாரம் மட்டுமே. இங்கே தேசப்பற்று எங்கே வந்தது?
பாகிஸ்தானுடன் விளையாட்டு உள்ளிட்ட தொடர்புகளே இல்லை என்று மத்திய அரசு கொள்கை முடிவை அறிவித்து, அதை மீறும் வகையில் ஷாரூக்கான் கருத்து தெரிவித்திருந்தால் கூட பால்தாக்கரேவின் எதிர்ப்பை நியாயப்படுத்தலாம்.
பேச்சுவார்த்தைக்கு வா வா என்று இன்னும் பாகிஸ்தானை அழைத்துக் கொண்டுதானே உள்ளது இந்தியா… இந்திய அணி பாகிஸ்தானுடன் விளையாடிக் கொண்டுதானே உள்ளது? பிறகெதற்கு இந்த இரட்டை நிலை?
பாகிஸ்தான் வீரர்களை வைத்து கிரிக்கெட் வியாபாரம் நடத்தினால் ஜோராக இருக்கும் என்றுதானே ஷாரூக்கான் சொன்னார். இதே கருத்தை பெரும்பான்மையான நடிகர்களும் கூட சொன்னார்களே… ஓ அவர்கள் படம் எதுவும் வெளியாகவில்லையோ…!
சிவசேனாவின் இந்த விதண்டாவாத, வரட்டுத்தனமான, மூர்க்கமான போராட்டத்தால் ஒரு பலன் கிடைத்துள்ளது. எத்தனை குட்டிக் கரணம் அடித்தாலும், மக்களை வெறும் பயத்தால் மட்டும் ரொம்ப நாள் அடக்க முடியாது என்பதே அது.
இந்த உண்மை புரிந்ததும்தான் தாக்கரே இப்படி அறிக்கை விட்டிருக்கிறார்… “சரி.. யாரெல்லாம் பாகிஸ்தான் அபிமானி ஷாரூக்கான் படம் பார்க்க விரும்புகிறார்களோ அவர்கள் தாராளமாய் போய் பாருங்கள். சிவசேனா போராட்டத்தை வாபஸ் பெற்றுக் கொள்கிறது!”
ஹை.. தாக்கரே ஸாப், மூஞ்சியில மண் ஒட்டலை (அவருக்குதான் மீசை இல்லையே…)!
-வினோ
ஒரு சின்ன விஷயம்… யோசித்துப் பார்த்தால் உண்மையிலேயே சின்ன விஷயம்தான். ஆனால் அதை பால், உத்தவ் தாக்கரேக்கள் ஊதி ஊதிப் பெரிதாக்கி, பெரிய அரசியல் ஆதாயம் தேடி வருகின்றனர்.
ஐபிஎல் என்ற வர்த்தக ரீதியிலான கிரிக்கெட் போட்டிகளில் இந்த ஆண்டு பாகிஸ்தான் வீரர்களை எந்த அணியின் உரிமையாளரும் ஏலம் எடுக்கவில்லை, கல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளர் ஷாரூக்கான் உள்பட.
இது பின்னர் தேசிய அளவிலான பிரச்சினையாக மாற, இருநாட்டு அதிகாரிகளும், வாரியங்களும் பேசி.. மோதிக் கொண்டன. இதில் தாமாக மூக்கை நுழைத்த சிவசேனா, மும்பையில் பாகிஸ்தான் வீரர்கள் கால் வைக்கக் கூடாது என்றும், அவர்களை ஐபிஎல் போட்டியில் யாரும் ஏலம் எடுக்காதது நல்லதுதான் என்றும் கூறியிருந்தது.
இந்த நேரத்தில் இன்னொரு விஷயமும் பரபரப்பாக ஓடிக்கொண்டிருந்தது… அது மும்பை மும்பைவாசிகளுக்கே என்ற சிவசேனாவின் மூர்க்கத்தனம். இதற்கு மாற்றாக கருத்து கூறிய டெண்டுல்கர், அமிதாப், அமீர்கான் எல்லாம் பால் தாக்கரேயின் அரசியல் வாணலியில் வறுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போதுதான், ‘பாகிஸ்தான் வீரர்களும் விளையாடியிருந்தால் நன்றாக இருந்திருக்குமே’ என்று கருத்து சொன்னார் ஷாரூக்கான்.
யார் வசமாகக் கிடைப்பார்கள், குதிரை சவாரி செய்யலாம் என்று காத்திருந்த சிவசேனாவுக்கு, ஷாரூக்கான் ராஜ குதிரையாகத் தெரிந்தார். போதாக்குறைக்கு அவரது இஸ்லாமிய அடையாளம் வேறு.. இந்த சீஸனுக்கு இவர் போதும் என்று கப்பென்று பிடித்துக் கொண்டார் பால் தாக்கரே.
கொஞ்சம் கொஞ்சமாக செத்துக் கொண்டிருந்த சேனாவின் அரசியல் இமேஜை உயிர்ப்பிக்க ஷாரூக்கின் மை நேம் ஈஸ் கான் மிகவும் தேவைப்பட்டது. அதைப் பலிகொள்ள முழு வீச்சில் களமிறங்கினார்கள் பால் தாக்கரேயும் அவரது மகன் உத்தவ் தாக்கரேயும்.
வழக்கம்போல, ஷாரூக்கான் தனது கருத்துக்கு மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிட்டால் படத்தை ரிலீஸ் பண்ண விடமாட்டோம் என்று பேச ஆரம்பித்தனர் தாக்கரேக்கள். மகாராஷ்ட்ர காங்கிரஸ் அரசு ஷாரூக்கானுக்கு தங்கள் முழு ஆதரவை தெரிவித்தது.
படம் வெளியாகும் நாள் நெருங்க நெருங்க, மகா டென்ஷன் ஷாரூக்கானுக்கு மட்டுமல்ல, மும்பைவாசிகளுக்கும்தான்.
இதனை ஒரு மும்பைவாசியின் கருத்தாகவே பார்க்கலாம். பலரும் இத்தகைய மனநிலையில் இருந்தாலும், வெளிப்படையாக எதுவும் செய்ய முடியாத நிலையில் உள்ளனர் என்கிறார் சுஜன்.
இதுகுறித்து மும்பைவாசியும் நமது பத்திரிகை நண்பருமான சுஜன் பட்டீல் (டைம்ஸ் குழுமம்) இப்படிக் கூறுகிறார்:
“மும்பை மக்களுக்கு என்ன ஆனது? ஏன் இந்த மூடத்தனமான அரசியல் வியாதிகளைப் பார்த்து இப்படி பம்முகிறார்கள் என்று எனக்குப் புரியவில்லை. ஷாரூக்கான் சொன்னது ஒரு சாதாரண விஷயம். அதற்கு பாகிஸ்தான் ஆதரவு சாயம் பூசுவதை மத்திய அரசு முளையிலேயே கிள்ளியெறிவதை விட்டு ஏன் வேடிக்கைப் பார்க்கிறது? இதற்கும் ஒரு திரைப்படம் வெளியாவதற்கும் என்ன சம்பந்தம்? அரசியல்வாதிகள் அரசியல்வாதிகளுடன் மோதாமல், சினிமா பப்ளிசிட்டிக்கு ஆசைப்படுவதைத்தான் இந்த சம்பவம் காட்டுகிறது. இந்த லட்சணத்தில் சில புத்திஜீவி சைக்கோக்கள், இது ஷாரூக்கானின் வியாபார டெக்னிக் என்று பிதற்ற ஆரம்பித்துவிட்டன. ஒரு பத்திரிகையாளனாக, நாட்டின் மன நிலையைப் பார்த்து என்னால் பரிதாபப்படத்தான் முடிகிறது” என்றார் கோபத்துடன்.
படம் வெளியானபோது நடந்தவை அவமானத்தின் உச்சம். சிவசேனாவுக்கு பயந்து கொண்டு ஷாரூக்கானுக்கும் அவரது பட வெளியீட்டுக்கும் ஆதரவு தரக்கூட திரையுலகம் முன்வரவில்லை. சல்மான்கான், அபிஷேக் பச்சன், காஜோல் என சிலர் மட்டுமே வெளிப்படையான ஆதரவைத் தெரிவித்தனர். மற்றவர்கள் கூட்டுக்குள் தலையை இழுத்துக் கொண்டனர். காங்கிரஸ் தவிர பிற கட்சிகள் கண்டுகொள்ளாமல் போய்விட்டன.
சிவசேனாவின் ஆட்டம் பேயாட்டமாகிவிட, படத்தைத் திரையிட முதலில் முன்வந்த தியேட்டர்காரர்கள் அப்படியே பல்டியடித்தனர். வெள்ளிக்கிழமை பகல் காட்சியை மும்பை மக்கள் பார்க்க முடியவில்லை. காரணம் சிவசேனாவின் பகிரங்க பயமுறுத்தல்.
அதேநேரம், ஷாரூக்கான் ஓடோடி வந்து தன்னைச் சந்திக்க வேண்டும்… மன்னிப்புக் கோர வேண்டும், காலில் விழுந்து ஆசி பெற வேண்டும் என்பது பால் தாக்கரேயின் விருப்பமாக இருந்தது.
ஆனால் ஷாரூக்கான், ‘எதற்காக நான் மன்னிப்பு கோர வேண்டும்?’ என்று கேட்டுவிட்டு, தனது கருத்தில் உறுதியாக நின்றார். இதனால் ஷாரூக்கின் மை நேம் ஈஸ் கான் வெளியாகவிருந்த திரையரங்குகள் சில நொறுக்கப்பட்டன. இதைப் பார்த்து மற்ற திரையரங்குகளும் இந்தப் படத்தை திரையிட மறுத்தன. மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் கூட்டம் போட்டு, இந்தப் படம் வேண்டாம் என்றனர்.
இன்னொரு பக்கம் ஷாரூக்கும் இயக்குநர் கரண் ஜோஹரும் இந்தப் படம் திட்டமிட்டபடி வெளியாகியே தீரும் என்றனர். மும்பையில் எந்த தியேட்டரும் படத்தை வெளியிடாவிட்டாலும் பரவாயில்லை என்பது அவர்கள் நிலை. படத்தை திரையிடும் அனைத்து திரையரங்குகளுக்கும் மராட்டிய அரசு முழு பாதுகாப்பு தருவதாக உறுதியளித்திருந்தது.
அதேநேரம் தங்கள் உறுதிமொழியை புறக்கணித்தனர் தியேட்டர்காரர்கள். இரண்டு நாள்களுக்கு முன்பு வரை மும்பையில் 63 திரையரங்குகளில் வெளியாகவிருந்த மை நேம் ஈஸ் கான், வெள்ளிக்கிழமை காலை வெறும் 3 திரையரங்குகளில் மட்டுமே வெளியானது. அவற்றில் ஒன்றில் படம் பார்த்தவர் மாநில உள்துறை அமைச்சர் ஆர்ஆர் பாட்டீல்.
இந்தப் படம் தரத்தில், தயாரிப்பில், நடிப்பில் இந்தியாவின் மிகச் சிறந்த படைப்பாக அனைவரும் கொண்டாட ஆரம்பிக்க, வேறு வழியின்றி படிப்படியாக மற்ற தியேட்டர்களும் வழிக்கு வந்தன. ரசிகர்களும் பயமின்றி படம் பார்க்க வரத் துவங்க, பிற்பகலுக்குப் பிறகு மேட்னி ஷோவை பெரும்பாலான திரையரங்குகள் மை நேம் ஈஸ் கானுடன் தொடர்ந்தன. அனைத்துக் காட்சிகளும் ஹவுஸ் புல்.
இந்த நேரத்தில் ஷாரூக்கான் ட்வீட்டரில் ஒரு செய்தி அனுப்பினார்: “என்னால் மும்பை மக்களுக்கு எத்தனை சிரமங்கள்.. இதை நினைத்து வருத்தப்படுகிறேன். உங்கள் அனைவரையும் நான் மிகவும் நேசிக்கிறேன்..’ என்று அதில் கூறியிருந்தார்.
அடுத்த நிமிடமே சிவசேனா அலுவலகத்தில் பட்டாசு வெடித்துக் கொண்டாட ஆரம்பித்துவிட்டார்கள். எதற்கு?
‘ஷாரூக்கான் மன்னிப்பு கேட்டு விட்டார்… சிவசேனாவுக்கு வெற்றி’ என்று.
வரிசை வரிசையாக வந்து பால் தாக்கரேக்கு மாலை சூட்டினர். இந்தப் பிரச்சினையில் அவர் ஜெயித்து விட்டாராம். மும்பை மக்களின் ஏகபோக ஆகரவு அவருக்குத்தானாம்! எத்தனை அல்பத்தனம்!!
இவர்களைப் பொறுத்தவரை, யாராக இருந்தாலும், தவறே செய்யாவிட்டாலும் இவர்களிடம் மன்னிப்பு கேட்டுவிட வேண்டும். இல்லாவிட்டால் மும்பையில் இருக்க முடியாது அல்லது நடித்த படம் ரிலீஸ் ஆகாது. ‘சினிமா, கிரிக்கெட் என்ற பொழுதுபோக்கு சாதனங்கள் போதும், அரசியல் பிழைக்க!’ என்பது தாக்கரேக்கள் சொல்லாமல் சொல்லும் வாதம்.
வெறும் வன்முறை, கட்டப்பஞ்சாயத்து, மிரட்டல் அரசியல் செய்து வரும் சிவசேனா, ஷாரூக்கானைப் பற்றி மட்டுமல்ல, இந்த நாட்டின் கடைசி குடிமகனையும் விமர்சிக்கும் அருகதையற்றது என்பதே உண்மை.
அரசின் தவறான பொருளாதாரக் கொள்கை, விலைவாசி போன்ற நியாயமான பிரச்சினைகளுக்கு எதிராகக் குரல் கொடுத்து தங்கள் அரசியல் இருப்பை வெளிப்படுத்தத் திராணியற்ற இதுபோன்ற அரசியல்வாதிகளை தொடர்ந்து பேயாட்டம் போட விட்டு மத்திய அரசு வேடிக்கைப் பார்ப்பதன் காரணம் என்னவென்றே புரியவில்லை.
பாகிஸ்தான் விளையாட்டு வீரர்கள் விஷயத்தில் ஷாரூக்கான் சொன்னதை விடுங்கள்… மக்களின் கருத்து என்ன? கிரிக்கெட் என்பது தேசத்தின் மானப் பிரச்சினை அல்ல. அது வெறும் விளையாட்டு மற்றும் வியாபார சமாச்சாரம் மட்டுமே. இங்கே தேசப்பற்று எங்கே வந்தது?
பாகிஸ்தானுடன் விளையாட்டு உள்ளிட்ட தொடர்புகளே இல்லை என்று மத்திய அரசு கொள்கை முடிவை அறிவித்து, அதை மீறும் வகையில் ஷாரூக்கான் கருத்து தெரிவித்திருந்தால் கூட பால்தாக்கரேவின் எதிர்ப்பை நியாயப்படுத்தலாம்.
பேச்சுவார்த்தைக்கு வா வா என்று இன்னும் பாகிஸ்தானை அழைத்துக் கொண்டுதானே உள்ளது இந்தியா… இந்திய அணி பாகிஸ்தானுடன் விளையாடிக் கொண்டுதானே உள்ளது? பிறகெதற்கு இந்த இரட்டை நிலை?
பாகிஸ்தான் வீரர்களை வைத்து கிரிக்கெட் வியாபாரம் நடத்தினால் ஜோராக இருக்கும் என்றுதானே ஷாரூக்கான் சொன்னார். இதே கருத்தை பெரும்பான்மையான நடிகர்களும் கூட சொன்னார்களே… ஓ அவர்கள் படம் எதுவும் வெளியாகவில்லையோ…!
சிவசேனாவின் இந்த விதண்டாவாத, வரட்டுத்தனமான, மூர்க்கமான போராட்டத்தால் ஒரு பலன் கிடைத்துள்ளது. எத்தனை குட்டிக் கரணம் அடித்தாலும், மக்களை வெறும் பயத்தால் மட்டும் ரொம்ப நாள் அடக்க முடியாது என்பதே அது.
இந்த உண்மை புரிந்ததும்தான் தாக்கரே இப்படி அறிக்கை விட்டிருக்கிறார்… “சரி.. யாரெல்லாம் பாகிஸ்தான் அபிமானி ஷாரூக்கான் படம் பார்க்க விரும்புகிறார்களோ அவர்கள் தாராளமாய் போய் பாருங்கள். சிவசேனா போராட்டத்தை வாபஸ் பெற்றுக் கொள்கிறது!”
ஹை.. தாக்கரே ஸாப், மூஞ்சியில மண் ஒட்டலை (அவருக்குதான் மீசை இல்லையே…)!
-வினோ
- kalaimoon70சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 27/01/2010
முதலில் தமிர்களை அடித்து விரட்டிய கூட்டம் இது!இதுக்கூட தமிழ் நாட்டில் அமைப்பும் அதருக்கு தலைவருமுண்டு! வெக்ககேடு!
மராட்டியருக்கே மும்பை சொந்தம் என்றால் முதலில் ,அங்கு விற்கப்பட்டு
விலை மாதாக ஆக்கப்பட்ட மற்ற மாநில பெண்களை வெளியே அனுப்பட்டும்!அங்கு
அங்கிரிக்கப்பட்ட விபச்சாரத்தை ஒழிக்கட்டும் வாய்ச் சவால் விடும்,
தாதாக்கள் இவர்கள்!
மராட்டியருக்கே மும்பை சொந்தம் என்றால் முதலில் ,அங்கு விற்கப்பட்டு
விலை மாதாக ஆக்கப்பட்ட மற்ற மாநில பெண்களை வெளியே அனுப்பட்டும்!அங்கு
அங்கிரிக்கப்பட்ட விபச்சாரத்தை ஒழிக்கட்டும் வாய்ச் சவால் விடும்,
தாதாக்கள் இவர்கள்!
kalaimoon70 wrote:முதலில் தமிர்களை அடித்து விரட்டிய கூட்டம் இது!இதுக்கூட தமிழ் நாட்டில் அமைப்பும் அதருக்கு தலைவருமுண்டு! வெக்ககேடு!
மராட்டியருக்கே மும்பை சொந்தம் என்றால் முதலில் ,அங்கு விற்கப்பட்டு
விலை மாதாக ஆக்கப்பட்ட மற்ற மாநில பெண்களை வெளியே அனுப்பட்டும்!அங்கு
அங்கிரிக்கப்பட்ட விபச்சாரத்தை ஒழிக்கட்டும் வாய்ச் சவால் விடும்,
தாதாக்கள் இவர்கள்!
சிறப்பான பதிலடி, நானும் வழிமொழிகிறேன்!!!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- ஸ்ரீசிவாபுதியவர்
- பதிவுகள் : 9
இணைந்தது : 06/03/2010
அவர்களால் என்ன முடியுமோ???kalaimoon70 wrote:
மராட்டியருக்கே மும்பை சொந்தம் என்றால் முதலில் ,அங்கு விற்கப்பட்டு
விலை மாதாக ஆக்கப்பட்ட மற்ற மாநில பெண்களை வெளியே அனுப்பட்டும்!அங்கு
அங்கிரிக்கப்பட்ட விபச்சாரத்தை ஒழிக்கட்டும் வாய்ச் சவால் விடும்,
தாதாக்கள் இவர்கள்!
அதை செய்து பிழைக்கிறார்கள்
- Tamilzhanதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
kalaimoon70 wrote:முதலில் தமிர்களை அடித்து விரட்டிய கூட்டம் இது!இதுக்கூட தமிழ் நாட்டில் அமைப்பும் அதருக்கு தலைவருமுண்டு! வெக்ககேடு!
மராட்டியருக்கே மும்பை சொந்தம் என்றால் முதலில் ,அங்கு விற்கப்பட்டு
விலை மாதாக ஆக்கப்பட்ட மற்ற மாநில பெண்களை வெளியே அனுப்பட்டும்!அங்கு
அங்கிரிக்கப்பட்ட விபச்சாரத்தை ஒழிக்கட்டும் வாய்ச் சவால் விடும்,
தாதாக்கள் இவர்கள்!
- கோவை ராம்இளையநிலா
- பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009
இதில் பெரிய வேற்பாடு எனக்கு தெரியவில்லை .அவரவர் பகுதிக்கு அவரவர் சொந்தம் கொன்டாடுகிரோம்.
கர்நாடகா நமக்கு தண்ணீர் தருவதில்லை
நாம் பான்டிக்கு தண்ணீர் தருவதில்லை
கோவை கிழ்க்கு மன்டலம் மேற்கு மன்டலதிற்கு தண்ணீர் தருவதில்லை
நாங்கள் பொள்ளாசியில் இருந்து கேரளாவிற்கு தண்ணீர் தருவதில்லை
கேரளா பரம்பிகுளத்தில் இருந்தும்,பெரியர்ரில்
இருந்தும் தண்ணீர் தருவதில்லை
மெரினாவில் இருக்கும் இறண்டு குப்பங்கலெ ஒருவருக்கொருவர் கடலில் மீன் பிடிக்க விடுவதில்லை.
தமிழ் மீனவர்கள், ஆந்திர மீனவர்கள்,கேரளா மீனவர்கள் ஒருவரும் மற்றவர்களை தன் இடங்களில் அனுமதிப்பது இல்லை
ஒரு கிராமம் அடுத்த கிராமத்திற்கு தண்ணீர் தருவதில்லை (இப்பிரச்சினை இந்தியா முழுவதும் உண்டு)
நமது கிராமங்களில் பக்கத்து ஊர் மக்கள் சின்ன அலம்பல் பன்னாலெ அடி விழும்.
பின் நம் மீனவர்கள் எல்லை கடந்தால் அடி விழாதா? உங்கல் இன்திய படை மட்டும் இலங்கை மீனவர்களை பிடிகிறது
மகாபலிபுரத்திலும் ,மதுரையிலும் எல்லா சுற்றூலா இடங்களிலும் நீங்கள் வெளிநாட்டினரை என்ன பாடு படுத்துகிறீர்கள்
பக்கத்து ஊர்காறனை நீ அடிக்கும்ப்போது பம்பாய்காரன் உன்னை அடிக்க மாட்டானா?
என் தமிழனே,இந்தியனே அரசியல்வாதியை நம்பி அன்டை மாநிலத்துடனும்,நாட்டோடும் பகமை பாராட்டாதே
எப்பொதும் உரிமை பற்றி பேசாமல் கடமை செய்.
நமக்கு வானம் வசப்படும்.
கர்நாடகா நமக்கு தண்ணீர் தருவதில்லை
நாம் பான்டிக்கு தண்ணீர் தருவதில்லை
கோவை கிழ்க்கு மன்டலம் மேற்கு மன்டலதிற்கு தண்ணீர் தருவதில்லை
நாங்கள் பொள்ளாசியில் இருந்து கேரளாவிற்கு தண்ணீர் தருவதில்லை
கேரளா பரம்பிகுளத்தில் இருந்தும்,பெரியர்ரில்
இருந்தும் தண்ணீர் தருவதில்லை
மெரினாவில் இருக்கும் இறண்டு குப்பங்கலெ ஒருவருக்கொருவர் கடலில் மீன் பிடிக்க விடுவதில்லை.
தமிழ் மீனவர்கள், ஆந்திர மீனவர்கள்,கேரளா மீனவர்கள் ஒருவரும் மற்றவர்களை தன் இடங்களில் அனுமதிப்பது இல்லை
ஒரு கிராமம் அடுத்த கிராமத்திற்கு தண்ணீர் தருவதில்லை (இப்பிரச்சினை இந்தியா முழுவதும் உண்டு)
நமது கிராமங்களில் பக்கத்து ஊர் மக்கள் சின்ன அலம்பல் பன்னாலெ அடி விழும்.
பின் நம் மீனவர்கள் எல்லை கடந்தால் அடி விழாதா? உங்கல் இன்திய படை மட்டும் இலங்கை மீனவர்களை பிடிகிறது
மகாபலிபுரத்திலும் ,மதுரையிலும் எல்லா சுற்றூலா இடங்களிலும் நீங்கள் வெளிநாட்டினரை என்ன பாடு படுத்துகிறீர்கள்
பக்கத்து ஊர்காறனை நீ அடிக்கும்ப்போது பம்பாய்காரன் உன்னை அடிக்க மாட்டானா?
என் தமிழனே,இந்தியனே அரசியல்வாதியை நம்பி அன்டை மாநிலத்துடனும்,நாட்டோடும் பகமை பாராட்டாதே
எப்பொதும் உரிமை பற்றி பேசாமல் கடமை செய்.
நமக்கு வானம் வசப்படும்.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|