புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 8:06 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மேளத்தை தேடும் விரல்கள் Poll_c10மேளத்தை தேடும் விரல்கள் Poll_m10மேளத்தை தேடும் விரல்கள் Poll_c10 
3 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மேளத்தை தேடும் விரல்கள் Poll_c10மேளத்தை தேடும் விரல்கள் Poll_m10மேளத்தை தேடும் விரல்கள் Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
மேளத்தை தேடும் விரல்கள் Poll_c10மேளத்தை தேடும் விரல்கள் Poll_m10மேளத்தை தேடும் விரல்கள் Poll_c10 
86 Posts - 34%
mohamed nizamudeen
மேளத்தை தேடும் விரல்கள் Poll_c10மேளத்தை தேடும் விரல்கள் Poll_m10மேளத்தை தேடும் விரல்கள் Poll_c10 
11 Posts - 4%
prajai
மேளத்தை தேடும் விரல்கள் Poll_c10மேளத்தை தேடும் விரல்கள் Poll_m10மேளத்தை தேடும் விரல்கள் Poll_c10 
9 Posts - 4%
Jenila
மேளத்தை தேடும் விரல்கள் Poll_c10மேளத்தை தேடும் விரல்கள் Poll_m10மேளத்தை தேடும் விரல்கள் Poll_c10 
4 Posts - 2%
Rutu
மேளத்தை தேடும் விரல்கள் Poll_c10மேளத்தை தேடும் விரல்கள் Poll_m10மேளத்தை தேடும் விரல்கள் Poll_c10 
3 Posts - 1%
Ammu Swarnalatha
மேளத்தை தேடும் விரல்கள் Poll_c10மேளத்தை தேடும் விரல்கள் Poll_m10மேளத்தை தேடும் விரல்கள் Poll_c10 
2 Posts - 1%
Baarushree
மேளத்தை தேடும் விரல்கள் Poll_c10மேளத்தை தேடும் விரல்கள் Poll_m10மேளத்தை தேடும் விரல்கள் Poll_c10 
2 Posts - 1%
Barushree
மேளத்தை தேடும் விரல்கள் Poll_c10மேளத்தை தேடும் விரல்கள் Poll_m10மேளத்தை தேடும் விரல்கள் Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
மேளத்தை தேடும் விரல்கள் Poll_c10மேளத்தை தேடும் விரல்கள் Poll_m10மேளத்தை தேடும் விரல்கள் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மேளத்தை தேடும் விரல்கள்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 09, 2009 1:49 am

கொஞ்சம் விசாலமான வீடுதான். இதுவரை இருந்த வீடுகளிலேயே இது ரொம்ப பெரிய வீடு. நீளத்திலும், அகலத்திலும் ஒரு அரண்மனை போல் நமச்சிவாயம் பிள்ளைக்கு தோன்றியது. குடி வந்து ஒரு வாரம் ஆகியும் எந்த அறை எங்கே இருக்கிறது என்று சரியாக புலப்படவில்லை, ஆத்திர அவசரத்துக்கு இருந்த இடத்தில் இருந்தே மனைவியையோ மருமகளையோ கூப்பிட முடியவில்லை. ஒரு தடவை முன் வாசலில் இருந்து பின்வாசல் வரை போய் விட்டு வருவதற்குள் மேல் மூச்சு, கீழ் மூச்சு வாங்குவதோடு இல்லாமல் தன் அறையை சரியாக கண்டுபிடித்து போய் சேருவதற்குள் உன்னைப் பிடி என்னைப் பிடி என்று ஆகிவிடுகிறது. இந்த லட்சணத்தில் எந்த பொருள் எங்கே இருக்கிறது, எந்த பரணில் கிடக்கிறது என்று எப்படி கண்டுபிடிப்பது?

ஒரு வாரமாக நமச்சிவாயம் பிள்ளையும் தேடிக் கொண்டுதான் இருக்கிறார். பார்வையிலேயே இண்டு இடுக்கெல்லாம் நோண்டிப் பார்த்து விட்டார். வீடு மாற்றும் பொழுது அவர் சரியாக கவனிக்கவில்லை. எல்லாம் ஒழுங்கு படுத்தியபின் தான் வந்து சேர்ந்தார். எங்கே போட்டார்கள், எங்கே பதுக்கினார்கள் என்று தெரியவில்லை. கையடக்க பொருளா அது. எத்தனை பெரிய தஞ்சாவூர் மேளம். எவ்வளவு பெரிய வீடாக இருந்தால்தான் என்ன எவ்வளவு நாளைக்குதான் அதை அது தன் கடைவாய்க்குள் அடக்கி வைத்துக் கொண்டு கண்ணாமூச்சி காட்டும்.

எவராது தெரிந்த வித்வானிடம் தானமாக வைத்துக் கொள் என மனைவி கொடுத்திருப்பாளோ என்று அவருக்கு தோன்றியது. கடையில் விற்றிருப்பாளோ என்ற சந்தேகமும் எழுந்தது. வேலைக்காரி கையில் கொடுத்து விற்று காசு பார்த்துக்கோ, இல்லை உடைத்து அடுப்பு எரித்துக்கோ என்று சொல்லி யிருப்பாளோ என்ற பயமும் கூடவே வந்தது. அது எங்கே இருக்கிறது? என்ன செய்தீர்கள் என்று வீட்டில் யாரிடமும் கேட்டுவிட முடியாது. ஆளுக்கு ஆள் சண்டைக்கு வந்துவிடுவார்கள். இப்பொழுது அது அவர்களுக்கு பிடிக்காத பொருள், விரும்பாத பண்டம்.

நமச்சிவாயம் பிள்ளை சங்கீத ஆர்வத்தால் முட்டி மோதி கற்றுக் கொண்ட வித்தை இல்லை இது. பரம்பரை தொழில். உறவில் எல்லோருமே மேளக்காரர்களாகவோ, வாத்தியக் காரர்களாகவோ தான் இருந்தார்கள். பெண் கொடுத்து பெண் எடுத்ததில் இசை மேதை ராஜ ரத்தினம் பிள்ளை கூட முறை சொல்லுகிற அளவுக்கு பிள்ளைக்கு உறவுதான்.

நமச்சிவாயம் பிள்ளையின் அப்பாவிற்கு மேளத்தின் மேல் அப்படி ஒரு பக்தி உண்டு. அதை யாரையும் தொடவிட மாட்டார். எந்த கடவுளுக்கு பூஜை பண்ணுகிறாரோ இல்லையோ விடிந்தும் விடியாமல் குளித்து முழுகி மேளத்துக்கு பூஜை பண்ணி விடுவார். அவரே தான் பார்த்து தோல் மாற்றுவார்.

எப்பொழுதும் வீட்டில் மேளச்சத்தம் கேட்டுக் கொண்டே இருக்கும். மற்ற வீடுகளில் எப்பொழு தாவதுதான் மங்கள சத்தம் கேட்கும். நம்ம வீடுகள்ல அப்படி இல்ல, தினம் தினம் மங்கள சத்தம் கேட்கும் இதுதான் நம்ம செஞ்ச பாக்கியம் என்பார்.

விவரம் தெரிய ஆரம்பித்தவுடனே நமச் சிவாயம் பிள்ளைக் கையில் குச்சை கொடுத்துவிட்டார் அவர் அப்பா. அப்பொழுதெல்லாம் கோவில் திருவிழா, கல்யாண ஊர்வலம் போக இரவில் நாத சுவர கச்சேரி என்று தனியாக இருக்கும்.

தஞ்சாவூரில் திரும்பிய இடமெல்லாம் கோவில்கள் உண்டு. ஒவ்வொரு கோவிலுக்கும் பூஜைக்கு வாசிக்க என்று தனியாக வாத்தியக்காரர்கள் இருந்தார்கள். நமச் சிவாயம் பிள்ளை குடும்பத்துக்கும் பரம்பரை பரம்பரையாக வாசிக்க ஒரு கோவில் இருந்தது. வாத்தியங்களும் அப்பொழுது தங்கள் வித்வான்களை ஒரு பொழுதுகூட வயிறு காய விட்டதில்லை. அவர்களும் கழுத்தில் தளைய தளைய செயினும், விரல்கள் நிறைய மோதிரமுமாய் ஜொலிக் கத்தான் செய்தார்கள்.

நமச்சிவாயம் பிள்ளையும் வளர்ந்து உயர்ந்து இதுதான் நமக்குத் தொழில் என்று மேளத்தை தோளில் மாட்டிய பொழுதுகூட தொழிலுக்கு மவுசு கொஞ்சம் இருக்கத்தான் செய்தது. கையில் நாலு காசு புரள்கிற காலம்தான் அது.

இந்த கலைக்கும் ஒரு சரிவு இருக்கும் என்று யாரும் நம்ப வில்லை. கல்யாணமும், கோவில் உற்சவமும் எந்த காலத்தில்தான் இல்லாமல் போகும் என்று இறு மாந்துதான் இருந்தார்கள். காலப் போக்கில் போட்டிகள் அதிகமாகி விட்டன. புற்றீசல் போல் தோன்றிய மெல்லிசைக் குழுக்கள் நாதசுவரச் கச்சேரியை உண்டு இல்லை என்று பண்ணிவிட்டன.

மாப்பிள்ளை ஊர்வலத்தில் கொஞ்ச தூரம், தாலி கட்டும்போது கொஞ்ச நேரம் என்று கல்யாணத்தில் நாதசுவரக் காரர்களின் பங்கும் வெகுவாக குறைந்து விட்டது. மிச்சம் மீதி இருப் பது கோவில்திருவிழாக்கள் தான். அதிலும் உனக்கு எனக்கு என்று பலத்த போட்டி வந்துவிட்டது. பெரிய நாதசுவர பார்ட்டிகளிடம் சின்ன செட்டுகள் மல்லுக்கு நிற்க முடியவில்லை. வரவர நமச்சிவாயம் பிள்ளையாலும் ஒரு பக்கவாத்தியக்காரராக இருந்து கொண்டு பிரமாதமாக சம்பாதிக்க இயலவில்லை.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 09, 2009 1:49 am

சம்பந்தம் பண்ணிக் கொண்ட இடத்திலும் வகையாக கைதூக்கிவிட ஆளில்லை. வறுமையே அவரை இந்த தொழில் நம்மோடு போகட்டும் என்று முடிவுக்கு வர வைத்துவிட்டது.

பையன்கள் படிப்புக்காக இருந்த கொஞ்ச நஞ்ச சொத்தையும் விற்றுவிட்டார். தைரியமாக தகுதிக்கு மீறி கடன் வாங்கினார். தன் சாதியில் பணக்காரர்களிடம் யாசகம் பெறவும் கூசவில்லை. அவர் முயற்சியும் வீண்போகவில்லை. பையன்களும் வளர்ந்து, படித்து உயர்ந்து விட்டார்கள். பெரியவன் டாக்டராக இருக்கி றான், சின்ன வன் இஞ்சினியராய் வெளிநாட்டில் இருக்கிறான்.

இப்பொழுது நமச்சிவாயம் பிள்ளை பெரியவன் வீட்டில்தான் இருக்கிறார். பழைய வீட்டில் இருந்து புது வீட்டுக்கு வரும் பொழுது எல்லா பொருட்களோடும் மேளமும் வந்திருக்கும் என்றுதான் நம்பிக் கொண்டிருந்தார்.

மகனின் நெருங்கிய நண்பன் பரம்பரை பரம்பரையாக டாக்டர் குடும்பம். கல் யாணத்துக்கு குடும்பத்தோடு போக வேண்டியதாயிற்று. தன் தாத்தா, தந்தை எல்லாம் டாக்டர்கள் என்று மணமகன் பீற்றிக் கொண்டான். உன் அய்யா என்ன வேலை பார்க்கிறார் என்று கேட்க அப்பா பெரிய பிசினஸ்மேன் என்று கூறினான் மகன். தோண்டி துருவி கேட்கும் முன் பேச்சை மாற்றினான்.

பிள்ளைக்கு புரிந்துவிட்டது. தன்னை ஒரு மேளக்காரனின் மகன் என்று சொல்லிக் கொள் வதை மகன் கேவல மாக நினைக் கிறாள். மருமகள் தலைக்குனிவாக கருது கிறாள். பேரப் பிள்ளைகள் கௌரவ குறைச்சலாக எண்ணுகிறார்கள். மனைவியும் அவர்கள் பக்கம்தான். இவர்கள் தான் மேளத்தை என்னவோ பண்ணி விட்டார்கள். தான் ஞாபக சின்னமாக மதித்தது அவர் களுக்கு அவமான சின்னமாக தோன்றி யிருக்கிறது.

பிள்ளையால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை . எல்லோரும் உறங்க போனபின் தனிமையில் மனைவியிடம் தாழ்ந்த குரலில் கேட்டார், அந்த மேளத்தை எங்கதான்டி வச்சிருக்கீங்க?

ஏன்?

திரும்பாமல் படுக்கையை சரி செய்தபடி கேட்டாள்.

என்ன ஏன். இதுக்கு நான் என்ன பதில் சொல்றது. பரம்பரை பரம்பரையா நம்ம வீட்ல இருக்குற கலை பொக்கிஷம்

அவர் அறியாமலேயே அவர் குரல் உயர்ந்துவிட்டது.

பரம்பரை நிலம், பரம்பரை வீடு இதை எல்லாம் நீங்க தொலைக்கலியா?

அவர் கட்டிலின் அருகே தரையில் படுக்கையை உதறி போட்டுவிட்டு அதில் படுத்தாள்.

அதெல்லாம் பிள்ளைகளுக்காக

இதையும் அதே பிள்ளைகளுக்காக தொலைச்சதா நினைச்சுக்கங்க

பிள்ளைக்கு கோபத்தில் உடம் பெல்லாம் நடுங்கியது.

இவுங்களுக்கு என்னை நாலு பேருக்கு முன்னால கொட்டுக்காரன்னு சொல்லிக்கிறது அவமானமா இருக்குது. கேவலமா தோணுது. இது கேவலமான தொழிலா. கலை. முரட்டுத்தனமான மாட்டுத் தோல்ல இருந்து சங்கீதத்தை பிரித்தெடுக்குற கலை. பாறைக்குள் இருந்து ஒரு சிற்பி அழகான சிற்பத்தை பிரித்து எடுக்குற மாதிரி. இந்த தொழில் இவுங்களுக்கு கேவலமா

சும்மா புலம்பாதீங்க. அவுங்களை விட முதல்ல இந்த தொழிலை கேவலமா நினைச்சது நீங்கதான். அது மட்டுமா, பிள்ளைகள் இதை கேவலமா நினைக்க காரணமா இருந்ததும் நீங்கதான். சின்ன வயசுல அந்த பிள்ளைகள் யாராவது ஒரு விளையாட்டுக்காவது அந்த மேளத்தை தொட விட்டிருப்பீங்களா. அப்படி தொட்டாலும் உங்களுக்குதான் எவ்வளவு கோபம் வரும்.

இந்தத் தொழில் என்னோட போகட்டும். நீங்களாவது நல்லா படிச்சு உருப்பட்டு வாங்கன்னு வீடே ரெண்டுபட கத்தலியா. பிள்ளைகளை போட்டு அடிக்கலியா. எங்க நம்ம சாதி சனத்து பிள்ளைகள் கூட பழகினா நம்ம பிள்ளைகளுக்கும் இந்தத் தொழில் மேல ஆசை வந்திரும்னு யாருகிட்டயும் நெருங்க விடாம பொத்தி பொத்திதான வளர்த்தீங்க.

அதுனாலதான் என் அண்ணன், தம்பி கொண்டான், கொடுத்தான் உறவெல்லாம் அறுந்து போச்சு. சரி அதுதான். போகுது இன்றும் எத்தனை நாளைக்குதான் இந்த மேளம். இந்தத்வீட்ல இருந்துட போகுது. என்ன இருந்தாலும் உங்க காலத்துக்கு பிறகு அது குப்பைக்குத்தான் போகப் போகுது. பரம்பரை பரம்பரையா வந்த அந்த மேளத்துக்கும், நம்ம குடும் பத்துக்கும் உள்ள உறவு அறுந்து போக யார் காரணம்னு கொஞ்சம் நிதானமா யோசித்து பாருங்க

பிறகு அவர் பேசவில்லை. தூங்கி இருக்கலாம், தூங்க முயற்சி செய்து கொண்டிருக்கலாம். இனிமேல் பேசுவதற்கும், விவாதிப்பதற்கும் என்ன இருக்கிறது என்று கண்களை மூடி படுத்துக் கொண்டிருக்கலாம்.

பிள்ளைகள் மிகவும் தளர்ந்து விட்டார். நாலைந்தடி தள்ளி இருந்த கட்டிலைக் கூட அவரால் சிரமப்பட்டு தான் அடைய முடிந்தது. உடகார்ந்தபடியே கையை உயர்த்தி விளக்கை அணைத்தார். அவர் தேடல் முடிந்து விட்டது.

ஆச்சரியமாய் அதற்குப் பிறகு அவர் விரல்கள் கூட தனிச்சையாய் தாளம் போடுவதை நிறுத்திவிட்டன.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக