புதிய பதிவுகள்
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:56 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm
» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am
» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am
» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am
» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:33 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm
» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am
» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am
» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:56 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm
» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am
» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am
» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am
» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:33 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm
» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am
» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am
» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெண்ணே நீ சிறுமை கொள்ளாதே
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
பெண்ணே நீ சிறுமை கொள்ளாதே
இப்பதிவு பெண்மை சார்ந்த எனக்கான புரிதலில் முழு தெளிவின்மையாய் இருக்கலாம், அல்லது பிறரின் தெளிவின்மையை சுட்டிக்காட்டுவதாய் இருக்கலாம்.
பெண்களை நோக்கிய வியப்பிலிருந்து இப்பதிவை ஆரம்பிக்கிறேன்.
வாகனம் ஒட்டுதல் - நான் பலமுறை பத்திரிகை தொடங்கி தொலைக்காட்சிவரை இந்த செய்திகளை படித்துள்ளேன். "ஆட்டோ ஒட்டி அசத்திக்காட்டும் பெண், பெண்ணாயிருந்தும் பேருந்து ஓட்டும் சாதனையாளர், பைக் ரேசில் பெண்ணா!, பெண்ணாக இருந்தும் குத்துச்சண்டையில் சாதித்துகாட்டியவர், விமானத்தையே ஓட்டும் பெண் வீராங்கனை" - இந்த வாசகங்களை படிக்கும்போதெல்லாம் இது சிறுமைக்குரிய தலைப்புகளாகவே எனக்கு தோன்றுகிறது... அதென்ன "பெண்ணாக இருந்தும்" என்ற மறைமுக சீண்டல். ஒரு ஐந்தறிவு குரங்கோ, நாயோ வண்டி ஓட்டுவதை அதிசியக்கும் தோரணையில். அவர்கள் என்ன வேற்றுகிரக வாசிகளா? ஆறறிவில் குறைந்தவர்களா? உடற் குறைபாடு உள்ளவர்களா? ஆணால் செய்ய முடிந்த அனைத்தும் பெண்ணால் செய்ய முடியும் என்ற எதார்த்தத்தை மனரீதியாக மறுக்கும் கூற்றுக்களே இந்த வியக்குமாறு ஏளனம் செய்யும் செய்தி தலைப்புக்கள். செய்திகளில் மட்டுமல்ல நம் செவி படவே பெண்கள் கூட இப்படிதான் பேசிக்கொள்வார்கள் "அந்த பக்கத்து வீட்டு பொண்ணு பைக் ஓட்டும் தெரியுமா" என்று. முதலில் நீங்கள் தெருவில் செல்லும்போது வாகனம் ஓட்டும் பெண்களை பார்த்து வியப்பதை நிறுத்துங்கள். மனிதர்களால் செய்ய முடிந்த மிகவும் எதார்த்தமான விசயத்தைதான் அவளும் செய்கிறாள். அதை உயர்த்திகூறுகிறேன் பேர்வழி என்று சிறுமை படுத்தாதீர்கள். பெண்களே நீங்களும் இனி இது போன்ற உங்களை நோக்கிய பிறரின் பேச்சுகளை உதாசீனம் செய்யுங்கள்.
அரசு பதவியில் பெண்கள் - நான் நேரில் கண்ட நிகழ்வுகளையே இங்கு பதிகிறேன். கவுன்சிலர் தொடங்கி, ஊராட்சி, ஒன்றியம் என்று அனைத்து தேர்தல்களிலும் பெண்கள் தலைமை ஏற்கவேண்டும் என்று இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அவற்றில் நிற்கும் பெண்கள் அனைவரும் மணமானவர்கள்தான். அவர்கள் கணவன்மார்கள் எதாவது ஒரு பெரு வணிகம் செய்பவராகவோ அல்லது கட்சியில் முக்கியஸ்தராகவோதான் இருக்கிறார்கள். தேர்தல் நோட்டீஸ் தொடங்கி எப்போது எங்கு எப்படி பேச வேண்டும் என்பது வரை அனைத்தும் கணவர் எடுக்கும் முடிவாகவே உள்ளது. பேருக்கு ஒரு தலைவராக மட்டுமே பெரும்பான்மை பெண்கள் உள்ளனர், அனைத்து அதிகாரமும் கணவர் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. இப்படி ஒரு தலைமை பொறுப்பு உங்களுக்கு தேவையா? உங்கள் அதிகாரம் உங்களுக்கானதாக இருக்க வேண்டும், உங்கள் பதவியில், சேவையில் உங்கள் கணவர் தலையிட என்ன இருக்கிறது?
இட ஒதுக்கீடு - வறுமையில் பின்தங்கியவர்களுக்கு மட்டுமே இடஒதுக்கீடு தரவேண்டும் என்பது எனது கருத்து. அப்படியே பெண்களுக்கு ஒதுக்கீடு அவசியம் என்றாலும் நீங்களாக எடுத்துக்கொள்ள வேண்டிய உரிமையை பலர் தாங்கள் பெற்று தருவதாக சொல்லிவதன் பொருளென்ன?
இன்னும் மனதில் நிறைய எண்ணங்கள், தற்போது நேரமின்மை காரணமாக இதோடு முடித்துகொள்கிறேன்.
முன்பு ஈகரையில் பதிந்த ஒரு பெண்ணுரிமைக்கான பதிவை காண இங்கே சுட்டவும்.
இப்பதிவு பெண்மை சார்ந்த எனக்கான புரிதலில் முழு தெளிவின்மையாய் இருக்கலாம், அல்லது பிறரின் தெளிவின்மையை சுட்டிக்காட்டுவதாய் இருக்கலாம்.
பெண்களை நோக்கிய வியப்பிலிருந்து இப்பதிவை ஆரம்பிக்கிறேன்.
வாகனம் ஒட்டுதல் - நான் பலமுறை பத்திரிகை தொடங்கி தொலைக்காட்சிவரை இந்த செய்திகளை படித்துள்ளேன். "ஆட்டோ ஒட்டி அசத்திக்காட்டும் பெண், பெண்ணாயிருந்தும் பேருந்து ஓட்டும் சாதனையாளர், பைக் ரேசில் பெண்ணா!, பெண்ணாக இருந்தும் குத்துச்சண்டையில் சாதித்துகாட்டியவர், விமானத்தையே ஓட்டும் பெண் வீராங்கனை" - இந்த வாசகங்களை படிக்கும்போதெல்லாம் இது சிறுமைக்குரிய தலைப்புகளாகவே எனக்கு தோன்றுகிறது... அதென்ன "பெண்ணாக இருந்தும்" என்ற மறைமுக சீண்டல். ஒரு ஐந்தறிவு குரங்கோ, நாயோ வண்டி ஓட்டுவதை அதிசியக்கும் தோரணையில். அவர்கள் என்ன வேற்றுகிரக வாசிகளா? ஆறறிவில் குறைந்தவர்களா? உடற் குறைபாடு உள்ளவர்களா? ஆணால் செய்ய முடிந்த அனைத்தும் பெண்ணால் செய்ய முடியும் என்ற எதார்த்தத்தை மனரீதியாக மறுக்கும் கூற்றுக்களே இந்த வியக்குமாறு ஏளனம் செய்யும் செய்தி தலைப்புக்கள். செய்திகளில் மட்டுமல்ல நம் செவி படவே பெண்கள் கூட இப்படிதான் பேசிக்கொள்வார்கள் "அந்த பக்கத்து வீட்டு பொண்ணு பைக் ஓட்டும் தெரியுமா" என்று. முதலில் நீங்கள் தெருவில் செல்லும்போது வாகனம் ஓட்டும் பெண்களை பார்த்து வியப்பதை நிறுத்துங்கள். மனிதர்களால் செய்ய முடிந்த மிகவும் எதார்த்தமான விசயத்தைதான் அவளும் செய்கிறாள். அதை உயர்த்திகூறுகிறேன் பேர்வழி என்று சிறுமை படுத்தாதீர்கள். பெண்களே நீங்களும் இனி இது போன்ற உங்களை நோக்கிய பிறரின் பேச்சுகளை உதாசீனம் செய்யுங்கள்.
அரசு பதவியில் பெண்கள் - நான் நேரில் கண்ட நிகழ்வுகளையே இங்கு பதிகிறேன். கவுன்சிலர் தொடங்கி, ஊராட்சி, ஒன்றியம் என்று அனைத்து தேர்தல்களிலும் பெண்கள் தலைமை ஏற்கவேண்டும் என்று இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அவற்றில் நிற்கும் பெண்கள் அனைவரும் மணமானவர்கள்தான். அவர்கள் கணவன்மார்கள் எதாவது ஒரு பெரு வணிகம் செய்பவராகவோ அல்லது கட்சியில் முக்கியஸ்தராகவோதான் இருக்கிறார்கள். தேர்தல் நோட்டீஸ் தொடங்கி எப்போது எங்கு எப்படி பேச வேண்டும் என்பது வரை அனைத்தும் கணவர் எடுக்கும் முடிவாகவே உள்ளது. பேருக்கு ஒரு தலைவராக மட்டுமே பெரும்பான்மை பெண்கள் உள்ளனர், அனைத்து அதிகாரமும் கணவர் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. இப்படி ஒரு தலைமை பொறுப்பு உங்களுக்கு தேவையா? உங்கள் அதிகாரம் உங்களுக்கானதாக இருக்க வேண்டும், உங்கள் பதவியில், சேவையில் உங்கள் கணவர் தலையிட என்ன இருக்கிறது?
இட ஒதுக்கீடு - வறுமையில் பின்தங்கியவர்களுக்கு மட்டுமே இடஒதுக்கீடு தரவேண்டும் என்பது எனது கருத்து. அப்படியே பெண்களுக்கு ஒதுக்கீடு அவசியம் என்றாலும் நீங்களாக எடுத்துக்கொள்ள வேண்டிய உரிமையை பலர் தாங்கள் பெற்று தருவதாக சொல்லிவதன் பொருளென்ன?
இன்னும் மனதில் நிறைய எண்ணங்கள், தற்போது நேரமின்மை காரணமாக இதோடு முடித்துகொள்கிறேன்.
முன்பு ஈகரையில் பதிந்த ஒரு பெண்ணுரிமைக்கான பதிவை காண இங்கே சுட்டவும்.
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34989
இணைந்தது : 03/02/2010
இட ஒதுக்கீடு - வறுமையில் பின்தங்கியவர்களுக்கு மட்டுமே இடஒதுக்கீடு தரவேண்டும் என்பது எனது கருத்து.
டாக்டர் அம்பேத்கர் வரைந்த சட்டம் ஒன்று.
ஒரு தலைமுறை ஆண்டுகள் வரை சலுகைகள் கொடுத்து பிற்பட்டோரை முன்னுக்கு கொண்டுவர அரசு சட்டதிட்டங்களை வகுத்து, கொடுத்து அவர்களை முன்னேற்றப்படவேண்டும். ஆனால் மத்தியில் ஆட்சி செய்த ஆளுநர்கள் வோட்டு கிடைப்பதற்காக இந்த திட்டத்தை நீ.........ட் ..........டி......... கொண்டே சென்றுள்ளார்கள்.
மூன்று தலைமுறைகள் சலுகைகள் அனுபவித்து அது அவர்களது பிறப்புரிமை என சொந்தம் கொண்டாடி வறுமையில் இருந்து மீண்டவர்கள் இரெண்டு தலைமுறைகளாக சலுகைகள் அனுபவிப்பது தவிக்கப்படவேண்டிய ஒன்றே.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
T.N.Balasubramanian wrote:இட ஒதுக்கீடு - வறுமையில் பின்தங்கியவர்களுக்கு மட்டுமே இடஒதுக்கீடு தரவேண்டும் என்பது எனது கருத்து.
டாக்டர் அம்பேத்கர் வரைந்த சட்டம் ஒன்று.
ஒரு தலைமுறை ஆண்டுகள் வரை சலுகைகள் கொடுத்து பிற்பட்டோரை முன்னுக்கு கொண்டுவர அரசு சட்டதிட்டங்களை வகுத்து, கொடுத்து அவர்களை முன்னேற்றப்படவேண்டும். ஆனால் மத்தியில் ஆட்சி செய்த ஆளுநர்கள் வோட்டு கிடைப்பதற்காக இந்த திட்டத்தை நீ.........ட் ..........டி......... கொண்டே சென்றுள்ளார்கள்.
மூன்று தலைமுறைகள் சலுகைகள் அனுபவித்து அது அவர்களது பிறப்புரிமை என சொந்தம் கொண்டாடி வறுமையில் இருந்து மீண்டவர்கள் இரெண்டு தலைமுறைகளாக சலுகைகள் அனுபவிப்பது தவிற்கப்படவேண்டிய ஒன்றே.
என்ன டாப்பிக் பெண்கள்டேந்து U turn போட்டு அரசியல் சட்ட அமைப்புக்கு போயிருச்சு
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34989
இணைந்தது : 03/02/2010
இட ஒதுக்கீடு - வறுமையில் பின்தங்கியவர்களுக்கு மட்டுமே இடஒதுக்கீடு தரவேண்டும் என்பது எனது கருத்து.
இட ஒதுக்கீடு என ஒரு பாரா "இட ஒதுக்கீடு" - . நீங்கள் ஆரம்பித்தது தானே
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
ஆமாம், ஆமாம்....T.N.Balasubramanian wrote:இட ஒதுக்கீடு - வறுமையில் பின்தங்கியவர்களுக்கு மட்டுமே இடஒதுக்கீடு தரவேண்டும் என்பது எனது கருத்து.
இட ஒதுக்கீடு என ஒரு பாரா "இட ஒதுக்கீடு" - . நீங்கள் ஆரம்பித்தது தானே
மேற்கோள் செய்த பதிவு: 1323695T.N.Balasubramanian wrote:இட ஒதுக்கீடு - வறுமையில் பின்தங்கியவர்களுக்கு மட்டுமே இடஒதுக்கீடு தரவேண்டும் என்பது எனது கருத்து.
இட ஒதுக்கீடு என ஒரு பாரா "இட ஒதுக்கீடு" - . நீங்கள் ஆரம்பித்தது தானே
ஆனால் கட்டுரையின் கரு அதுவல்ல, அதைப்பற்றி கருத்துக்களை பகிரலாமே
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
ranhasan wrote:
ஆனால் கட்டுரையின் கரு அதுவல்ல, அதைப்பற்றி கருத்துக்களை பகிரலாமே
இதே பதிவினை 30 வருடங்களுக்கு முன் நான் படிக்க நேர்ந்திருக்குமானால், நானும் உங்களோடு சேர்ந்து பதாகை பிடிக்காத குறையாக பக்கம், பக்கமாய் மறுமொழி இட்டு தள்ளியிருப்பேன். ஆனால், இப்போது அந்த நிலையில்லை. ஏனென்றால் பெண்ணீயத்தின் அர்த்தத்தை எனக்கு பூரணமாய் உணர்த்தியிருக்கிறது நான் கடந்து வந்த பாதை.
வைரம் என்றுமே தன்னை நினைத்து சிறுமை அடைந்ததில்லை. சேற்றினுள் விழுந்தாலும் வைரம் தான். மகுடத்தில் சூட்டினாலும் வைரம் தான். வைரம் எந்த நிலையிலும் அதன் தன்மையை மாற்றிக்கொள்வதில்லை. மற்றவர்கள் தான் சேற்றில் விழுந்த வைரத்துக்காக பரிதாபப்படுவதும், சூடாமணியாக ஏறியதற்கு பொறமை கொள்வதுமாக இருக்கிறார்கள்.
பெண் எப்போதும் வியப்புக்குரியவள் தான். வியப்பது இருக்கட்டும். எத்தனை ஆண்கள், ஒரு பெண்ணால் தான் அவமானப்படுவதை ஜீரணித்துக்கொள்கிறார்கள்...? அந்த பெண் அவனுடைய மேலதிகாரியாய் இருந்தாலும் கூட....
“பரவாயில்லையே... பெண்ணாக இருந்தும்.... “ என்ற வார்த்தை எந்த விதத்திலும் அவளை சிறுமை படுத்தாது.
ஆண், ஆண்தான். பெண், பெண் தான். இருவரும் எந்த காலத்திலும் சமமாக முடியாது. ஆண்கள் செய்யும் வேலைகளை எல்லாம் பெண் செய்கிறாள் என்பதற்காக, ஆணுக்கு சமமாய் அவளால் ஆகிவிட முடியாது. ஆணுக்கு நிகர் பெண் என்றால் ஆண்டவன் படைக்கும்போது ஆணை மட்டும் படைத்திருக்கலாமே. பெண்ணுக்கென்று சில குணநலன்களை கொடுத்து ஏன் படைக்கவேண்டும்? ஒன்றுக்கொன்று வேறுபட்டிருந்தாலும் தண்டவாளம் போல இணைந்து தான் செயல்படவேண்டும் என்பதே இயற்கையின் விதி. அப்போதுதான் உலகம் சமநிலையை இழக்காது.
ஒன்றிரண்டு விதிமீறல்கள் இருக்கத்தான் செய்யும். அதை தவிர்க்கமுடியாது. ஆனால், விதிமீறல்களின் இழப்பையும் ஈடு செய்ய முடியாது.
யாருமே இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சவுக்கியமே என்ற வரி நினைவிருக்கும் என்று நினைக்கிறேன். சுதந்திரம் என்ற வார்த்தையின் அரத்தத்தை தவறாக புரிந்து கொண்டதினால் தானோ என்னவோ தெரியவில்லை இன்று அதுவே பெண்களின் பாதுகாப்பினை கேள்விக்குறியாக்கி இருக்கிறது.
வீட்டு வாசலுக்கு வெளியே நாய்களும், நரிகளும் கொட்டமடித்துக்கொண்டு இருப்பது அனைவருக்கும் தெரியும். பெண் தான், தன்னுடைய பாதுகாப்பின் எல்லையை நிர்ணயித்துக்கொள்ளவேண்டும். வீட்டு வாசலை தாண்டியபிறகு வரும் பிரச்சனைகளை அவர்கள் எதிர்கொள்ளத்தான் வேண்டும்.
அதில் ஒன்று தான் நீங்கள் சொன்ன ‘பெண்ணாக இருந்தும்...’ என்பதும். அதுமட்டுமில்லை, முன்னேறிசெல்ல நினைத்துவிட்டால் எதிர்ப்படும் தடைகற்கள் மொத்தமும் அவளுக்கு ஏறிச்செல்லும் படிகளாகவே தெரியும். ஜெயித்துகொண்டிருக்கும் பெண்கள் எல்லாம் வழியில் கிடக்கும் கற்களை எல்லாம் சுமையாக சுமக்காமல் படிகட்டாகவே தான் பார்க்கிறார்கள்.
மேலும், கணவன் தன்னை முன்நிறுத்தியே அவன் முன்னேறுகிறான் என்றால் அதில் அவளுக்கு பெருமையே தவிர இதில் சிறுமை எதும் இருப்பதாய் தெரியவில்லை.
உண்மையான சுதந்திரம், தனக்கான உரிமைகள் மற்றும் எல்லைகள் எதுவென்று தெரிந்த பெண்கள் இதுபோன்ற பெண்ணீய சிந்தனைகளுக்கு இடம் கொடுக்க மாட்டார்கள்.
பெண் என்றால் அன்பு. அன்பு எப்போதுமே ஆள நினைக்காது. அந்த அன்பில் கட்டுண்டவர்களால் மட்டுமே ஜெயித்துக்கொண்டிருக்க முடியும். விட்டுகொடுக்க அவள் முட்டாள் இல்லை. விட்டு பிடிக்கிறாள். கூர்ந்து கவனித்தல் இது தெரியும். விட்டு கொடுத்தல் அவள் பலவீனம் அல்ல. அதுவே அவள் பலம். இப்படித்தான் பெண்கள் ஜெயித்துகொண்டிருக்கிறார்கள்.
“பெண்மை சார்ந்த எனக்கான புரிதலில் முழு தெளிவின்மையாய் இருக்கலாம்” – என்று ஆரம்பத்தில் நீங்கள் சொன்னது போல அனுபவம் மட்டுமே சில விஷயங்களை கற்று தர முடியும் என்பதை நீங்களும் காலம் வரும் போது புரிந்து கொள்வீர்கள்.
வைரம் என்றுமே தன்னை நினைத்து சிறுமை அடைந்ததில்லை. சேற்றினுள் விழுந்தாலும் வைரம் தான். மகுடத்தில் சூட்டினாலும் வைரம் தான். வைரம் எந்த நிலையிலும் அதன் தன்மையை மாற்றிக்கொள்வதில்லை. மற்றவர்கள் தான் சேற்றில் விழுந்த வைரத்துக்காக பரிதாபப்படுவதும், சூடாமணியாக ஏறியதற்கு பொறமை கொள்வதுமாக இருக்கிறார்கள்.
பெண் எப்போதும் வியப்புக்குரியவள் தான். வியப்பது இருக்கட்டும். எத்தனை ஆண்கள், ஒரு பெண்ணால் தான் அவமானப்படுவதை ஜீரணித்துக்கொள்கிறார்கள்...? அந்த பெண் அவனுடைய மேலதிகாரியாய் இருந்தாலும் கூட....
“பரவாயில்லையே... பெண்ணாக இருந்தும்.... “ என்ற வார்த்தை எந்த விதத்திலும் அவளை சிறுமை படுத்தாது.
ஆண், ஆண்தான். பெண், பெண் தான். இருவரும் எந்த காலத்திலும் சமமாக முடியாது. ஆண்கள் செய்யும் வேலைகளை எல்லாம் பெண் செய்கிறாள் என்பதற்காக, ஆணுக்கு சமமாய் அவளால் ஆகிவிட முடியாது. ஆணுக்கு நிகர் பெண் என்றால் ஆண்டவன் படைக்கும்போது ஆணை மட்டும் படைத்திருக்கலாமே. பெண்ணுக்கென்று சில குணநலன்களை கொடுத்து ஏன் படைக்கவேண்டும்? ஒன்றுக்கொன்று வேறுபட்டிருந்தாலும் தண்டவாளம் போல இணைந்து தான் செயல்படவேண்டும் என்பதே இயற்கையின் விதி. அப்போதுதான் உலகம் சமநிலையை இழக்காது.
ஒன்றிரண்டு விதிமீறல்கள் இருக்கத்தான் செய்யும். அதை தவிர்க்கமுடியாது. ஆனால், விதிமீறல்களின் இழப்பையும் ஈடு செய்ய முடியாது.
யாருமே இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சவுக்கியமே என்ற வரி நினைவிருக்கும் என்று நினைக்கிறேன். சுதந்திரம் என்ற வார்த்தையின் அரத்தத்தை தவறாக புரிந்து கொண்டதினால் தானோ என்னவோ தெரியவில்லை இன்று அதுவே பெண்களின் பாதுகாப்பினை கேள்விக்குறியாக்கி இருக்கிறது.
வீட்டு வாசலுக்கு வெளியே நாய்களும், நரிகளும் கொட்டமடித்துக்கொண்டு இருப்பது அனைவருக்கும் தெரியும். பெண் தான், தன்னுடைய பாதுகாப்பின் எல்லையை நிர்ணயித்துக்கொள்ளவேண்டும். வீட்டு வாசலை தாண்டியபிறகு வரும் பிரச்சனைகளை அவர்கள் எதிர்கொள்ளத்தான் வேண்டும்.
அதில் ஒன்று தான் நீங்கள் சொன்ன ‘பெண்ணாக இருந்தும்...’ என்பதும். அதுமட்டுமில்லை, முன்னேறிசெல்ல நினைத்துவிட்டால் எதிர்ப்படும் தடைகற்கள் மொத்தமும் அவளுக்கு ஏறிச்செல்லும் படிகளாகவே தெரியும். ஜெயித்துகொண்டிருக்கும் பெண்கள் எல்லாம் வழியில் கிடக்கும் கற்களை எல்லாம் சுமையாக சுமக்காமல் படிகட்டாகவே தான் பார்க்கிறார்கள்.
அதைப்பற்றி அந்த பெண்ணே கவலைப்படவில்லையே...ranhasan wrote:அனைத்து தேர்தல்களிலும் பெண்கள் தலைமை ஏற்கவேண்டும் என்று இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அவற்றில் நிற்கும் பெண்கள் அனைவரும் மணமானவர்கள்தான். அவர்கள் கணவன்மார்கள் எதாவது ஒரு பெரு வணிகம் செய்பவராகவோ அல்லது கட்சியில் முக்கியஸ்தராகவோதான் இருக்கிறார்கள். தேர்தல் நோட்டீஸ் தொடங்கி எப்போது எங்கு எப்படி பேச வேண்டும் என்பது வரை அனைத்தும் கணவர் எடுக்கும் முடிவாகவே உள்ளது. பேருக்கு ஒரு தலைவராக மட்டுமே பெரும்பான்மை பெண்கள் உள்ளனர், அனைத்து அதிகாரமும் கணவர் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. இப்படி ஒரு தலைமை பொறுப்பு உங்களுக்கு தேவையா? உங்கள் அதிகாரம் உங்களுக்கானதாக இருக்க வேண்டும், உங்கள் பதவியில், சேவையில் உங்கள் கணவர் தலையிட என்ன இருக்கிறது?
மேலும், கணவன் தன்னை முன்நிறுத்தியே அவன் முன்னேறுகிறான் என்றால் அதில் அவளுக்கு பெருமையே தவிர இதில் சிறுமை எதும் இருப்பதாய் தெரியவில்லை.
உண்மையான சுதந்திரம், தனக்கான உரிமைகள் மற்றும் எல்லைகள் எதுவென்று தெரிந்த பெண்கள் இதுபோன்ற பெண்ணீய சிந்தனைகளுக்கு இடம் கொடுக்க மாட்டார்கள்.
பெண் என்றால் அன்பு. அன்பு எப்போதுமே ஆள நினைக்காது. அந்த அன்பில் கட்டுண்டவர்களால் மட்டுமே ஜெயித்துக்கொண்டிருக்க முடியும். விட்டுகொடுக்க அவள் முட்டாள் இல்லை. விட்டு பிடிக்கிறாள். கூர்ந்து கவனித்தல் இது தெரியும். விட்டு கொடுத்தல் அவள் பலவீனம் அல்ல. அதுவே அவள் பலம். இப்படித்தான் பெண்கள் ஜெயித்துகொண்டிருக்கிறார்கள்.
“பெண்மை சார்ந்த எனக்கான புரிதலில் முழு தெளிவின்மையாய் இருக்கலாம்” – என்று ஆரம்பத்தில் நீங்கள் சொன்னது போல அனுபவம் மட்டுமே சில விஷயங்களை கற்று தர முடியும் என்பதை நீங்களும் காலம் வரும் போது புரிந்து கொள்வீர்கள்.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34989
இணைந்தது : 03/02/2010
ran haasan wrote:அனைத்து அதிகாரமும் கணவர் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. இப்படி ஒரு தலைமை பொறுப்பு உங்களுக்கு தேவையா? உங்கள் அதிகாரம் உங்களுக்கானதாக இருக்க வேண்டும், உங்கள் பதவியில், சேவையில் உங்கள் கணவர் தலையிட என்ன இருக்கிறது?
முழுதும் அப்பிடி சொல்லமுடியாது.
இப்போதெல்லாம் பெண்களே முடிவு எடுக்கிறார்கள்.ஆண்கள் (கணவன்) இல்லாத /இருக்கின்ற பெண்கள் அரசியலில் முன்னிலையில் இருக்கிறார்கள்.
உதாரணம் அதிகம் காண்பிக்க முடியும்.
காங்கிரஸ்/திமுக /தேமுதிக /அதிமுக என்று எல்லா கட்சிகளிலும் இருக்கிறார்கள்
.IAS /IPS /மந்திரிகள் /ஆளுநர்கள் பலர் இருக்கின்றனர்.
ஆண்கள் ஆதிக்கம் முழுதும் இல்லை என சொல்லும்படி உள்ளது.
அதெல்லாம் போகட்டும் உங்கள் வீட்டில் உங்கள் ஆதிக்கம் ......
-------
-------
-------
-------
-------
--------------
----------------------
------------------------
நிச்சயமாக இருக்காது என எண்ணுகிறேன்.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
விமந்தினி - பெண்களின் கருத்தே இப்பதிவில் முக்கியமானது, அவ்வகையில் சில முரண்கள் இருப்பினும் தங்கள் கருத்தினை நான் முழுமையாக மதிக்கிறேன்.
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3
|
|