புதிய பதிவுகள்
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனவருத்தம் போக்கிய மகாபெரியவர்! Poll_c10மனவருத்தம் போக்கிய மகாபெரியவர்! Poll_m10மனவருத்தம் போக்கிய மகாபெரியவர்! Poll_c10 
12 Posts - 86%
Manimegala
மனவருத்தம் போக்கிய மகாபெரியவர்! Poll_c10மனவருத்தம் போக்கிய மகாபெரியவர்! Poll_m10மனவருத்தம் போக்கிய மகாபெரியவர்! Poll_c10 
1 Post - 7%
ஜாஹீதாபானு
மனவருத்தம் போக்கிய மகாபெரியவர்! Poll_c10மனவருத்தம் போக்கிய மகாபெரியவர்! Poll_m10மனவருத்தம் போக்கிய மகாபெரியவர்! Poll_c10 
1 Post - 7%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மனவருத்தம் போக்கிய மகாபெரியவர்! Poll_c10மனவருத்தம் போக்கிய மகாபெரியவர்! Poll_m10மனவருத்தம் போக்கிய மகாபெரியவர்! Poll_c10 
130 Posts - 50%
ayyasamy ram
மனவருத்தம் போக்கிய மகாபெரியவர்! Poll_c10மனவருத்தம் போக்கிய மகாபெரியவர்! Poll_m10மனவருத்தம் போக்கிய மகாபெரியவர்! Poll_c10 
95 Posts - 37%
mohamed nizamudeen
மனவருத்தம் போக்கிய மகாபெரியவர்! Poll_c10மனவருத்தம் போக்கிய மகாபெரியவர்! Poll_m10மனவருத்தம் போக்கிய மகாபெரியவர்! Poll_c10 
11 Posts - 4%
prajai
மனவருத்தம் போக்கிய மகாபெரியவர்! Poll_c10மனவருத்தம் போக்கிய மகாபெரியவர்! Poll_m10மனவருத்தம் போக்கிய மகாபெரியவர்! Poll_c10 
9 Posts - 3%
Jenila
மனவருத்தம் போக்கிய மகாபெரியவர்! Poll_c10மனவருத்தம் போக்கிய மகாபெரியவர்! Poll_m10மனவருத்தம் போக்கிய மகாபெரியவர்! Poll_c10 
4 Posts - 2%
Rutu
மனவருத்தம் போக்கிய மகாபெரியவர்! Poll_c10மனவருத்தம் போக்கிய மகாபெரியவர்! Poll_m10மனவருத்தம் போக்கிய மகாபெரியவர்! Poll_c10 
3 Posts - 1%
Guna.D
மனவருத்தம் போக்கிய மகாபெரியவர்! Poll_c10மனவருத்தம் போக்கிய மகாபெரியவர்! Poll_m10மனவருத்தம் போக்கிய மகாபெரியவர்! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
மனவருத்தம் போக்கிய மகாபெரியவர்! Poll_c10மனவருத்தம் போக்கிய மகாபெரியவர்! Poll_m10மனவருத்தம் போக்கிய மகாபெரியவர்! Poll_c10 
2 Posts - 1%
Baarushree
மனவருத்தம் போக்கிய மகாபெரியவர்! Poll_c10மனவருத்தம் போக்கிய மகாபெரியவர்! Poll_m10மனவருத்தம் போக்கிய மகாபெரியவர்! Poll_c10 
2 Posts - 1%
Barushree
மனவருத்தம் போக்கிய மகாபெரியவர்! Poll_c10மனவருத்தம் போக்கிய மகாபெரியவர்! Poll_m10மனவருத்தம் போக்கிய மகாபெரியவர்! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனவருத்தம் போக்கிய மகாபெரியவர்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jan 07, 2010 1:16 am


புண்ணிய நதிகள் ஏழு.

அவற்றில் முதலாவது- கங்கை;

7-வது நதி- காவிரி.


இந்த நதியில் பொன் எனும் உலோகமும் கலந்திருப்பதால், 'பொன்னி' என்றும் பெயர் உண்டு காவிரிக்கு!

புண்ணிய நதிகளான கங்கையையும் காவிரியையும் இணைத்தால், இந்தியாவில் தண்ணீர்ப் பிரச்னையே இருக்காது என்று சொல்லப்படுகிறது. ஆனால், இந்த இரண்டு நதிகளையும் என்றைக்கோ இணைத்து விட்டது புராணம்!


என்ன... ஆச்சரியமாக இருக்கிறதா?

துலா மாதம் எனப்படும் ஐப்பசியில், அதிகாலை வேளையில் எழுந்து வீட்டில் நீராடுவது நல்லது. நதியில் நீராடுவது மிகச் சிறப்பு. அதிலும் குறிப்பாக காவிரியில் அல்லது அதன் உற்பத்தி ஸ்தானமான தலைக்காவிரியில் நீராட வேண்டுமாம். முக்கியமாக, மயிலாடுதுறையில் உள்ள துலா கட்ட காவிரியில் நீராடுவது வெகு விசேஷம்!

துலா புராணப்படி, ஐப்பசி மாதத்தில்... காவிரியில் கங்காதேவியும் வாசம் செய்கிறாள்! ஐப்பசி மாதக் கடைசி நாளில், இங்கே நீராடுவதற்கு 'கடை முழுக்கு' என்று பெயர். இந்த நாளில், மயிலாடுதுறையில் உள்ள அனைத்து ஆலயங்களில் குடிகொண்டிருக்கும் மூர்த்திகளும் காவிரியில் எழுந்தருளி, தீர்த்தவாரி கண்டருளுவர்!

வான் நதியாம் கங்கையை பூமிக்கு அழைத்தான் பகீரதன்.

''எண்ணற்ற பாவங்களைச் செய்துவிட்டு, எல்லோரும் அதனை என்னிடம் கொண்டு வந்து சேர்ப்பார்கள். நான் வரமாட்டேன்'' என்று தயங்கி மறுத்தாள் கங்காதேவி.

உடனே பகீரதன், ''பாவம் செய்பவர்களை ஏன் சிந்திக்கிறாய்? எத்தனையோ மகான்கள் நீராடுவார்களே...'' என்று சொல்ல, பூமிக்கு வர சந்தோஷத்துடன் சம்மதித்தாளாம் கங்காதேவி! அதன்படியே வடக்கே குடிகொண்டாள். அதுமட்டுமா? தென்னக மக்களும் பயனுறும் வகையில், இங்கே... ஐப்பசி மாதம் முழுவதும் காவிரியில் வாசம் செய்கிறாள்!

இதையறிந்த பக்கத்து ஊர்க்காரர் ஒருவர்... பாவம், அவருக்கு கால் ஊனம்... கடைமுழுக்கு நாளன்று மிகவும் கஷ்டப்பட்டு நடந்து வந்தார். கடைமுழுக் கின் மறுநாள்தான் அவரால் துலா கட்டத்துக்கு வந்து சேர முடிந்தது. இதையறிந்து வருந்திய கங்காதேவி, அந்த நாளிலும் காவிரியில் இருந்தாள். இதனால், கடைமுழுக்குக்கு அடுத்த நாளை (கார்த்திகை முதல் நாள்) 'முடவன் முழுக்கு' என்பர்!

காஞ்சி பெரியவாள் ஒருமுறை மயிலாடுதுறையில் முகாமிட்டிருந்தார். காவிரி ஸ்நானம் செய்வதில் லயித்துப் போவார் ஸ்வாமிகள். இந்த வேளையில், கோயில் திருப்பணி விஷயமாக மடத்து ஊழியர் ஒருவரை அழைத்த ஸ்வாமிகள், ஊரில் உள்ள பிரமுகர் ஒருவரது பெயரைக் குறிப்பிட்டு, அவரிடம் ஆலயத்துக்கான கைங்கர்யத்தைச் செய்ய முடியுமா என்று கேட்டுவரும்படி பணித்தார்.


மடத்தில் இருந்து எந்தவொரு வேலையாக வெளியே கிளம்பினாலும், விநாயகருக்கு சூரைத்தேங்காய் உடைத்து வணங்கிவிட்டுச் செல்வதே வழக்கம். இதனை அந்த சிப்பந்தியிடம் நினைவுபடுத்தினார் ஸ்வாமிகள். அப்படியே செய்தார் ஊழியர்!

சிறிது நேரம் கழிந்தது. பிரமுகரைப் பார்த்து விட்டு வந்த மடத்தின் ஊழியர், ''போன காரியம் நிறைவேறவில்லை. அதுமட்டுமின்றி, விக்ன விநாயகருக்கு தேங்காய் உடைத்தேன்; அவர் விக்னத்தைப் போக்குவதற்கு பதிலாக விக்னத்தை உண்டு பண்ணி விட்டார்!'' என்று சொல்ல, மகாபெரியவாளின் முகம் மாறியது. எவருடனும் எதுவும் பேசாமல், அன்றைய பூஜை அனுஷ்டானங்களில் மூழ்கிப்போனார் ஸ்வாமிகள்.

அந்த ஊழியர் ஆடிப்போனார். 'எல்லோரிடமும் பேசுவது போல பெரியவாளிடம் பேசியது தவறுதானே?' என்று வருத்தப்பட்டார். 'குருநாதரின் மனம் நோகும்படி நடந்து கொண்டோமே...' என்று தவித்து மருகினார். சாப்பிடவும் முடியவில்லை; வேறு வேலைகளில் ஈடுபடவும் மனம் ஒத்துழைக்கவில்லை.

ஒருகட்டத்தில், விறுவிறுவென ஸ்வாமிகளிடம் சென்று, அவரை விழுந்து நமஸ்கரித்து மன்னிப்பு கேட்டார் ஊழியர். ஆனால் பெரியவாள், ''ஒரு தப்பும் செய்யலியே நீ? வருத்தப்படாதே! என்ன... 'விக்னத்தை களையறதுக்கு பதிலா உண்டு பண்ணிட்டார்'னு நீ சொன்னதுதான் தப்பு. இன்னொரு விஷயம்... நீ தேங்காயை உடைச்சதுமே, 'இந்த வேலை இந்த பிரமுகரால நடக்காது; வேற ஒரு பிரமுகரை அனுப்பி வைக்கிறேன்'னு பிள்ளையாரே சொல்லிட்டார். அப்படியிருக்க, விக்னத்தை உண்டுபண்ணிட்டதா சொல்லிட்டியே... அவ்ளோதான்!'' என்று மெள்ள புன்னகைத்தார் ஸ்வாமிகள்.

தெய்வத்திடம் நாம் வைக்கிற நியாயமான பிரார்த்தனை கள் ஒருநாளும் வீண் போகாது! நாம் எதிர்பார்த்த நேரத்தில், எதிர்பார்த்தபடி நடக்காவிட்டாலும்கூட, ஏதோவொரு நாளில்... நிறைவேறியே தீரும்! இதை உணர்ந்து, தெளிந்து வணங்கும் நாளெல்லாம் திருநாள்தான்!



மனவருத்தம் போக்கிய மகாபெரியவர்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jan 07, 2010 1:17 am

அது 1965. சென்னைக்கு பாதயாத்திரை செய்த காஞ்சி மகாபெரியவர், வழியில் சுங்குவார்சத்திரத்தில் தங்கினார். அவரைப் பார்க்க சென்னை அன்பர்கள் பலர் இருந்தனர்.

அவர்களில் ஹிந்தி தெரிந்த அன்பர் ஒருவரை அழைத்தார் மகாபெரியவர். ராமேஸ்வரத்தில் உள்ள காமகோடி பீட மடத்துக்கு வரும் வடநாட்டு யாத்ரீகர்கள் பாராயணம் செய்ய, துளஸிதாசரின் 'அனுமன் சாலீஸா'வை அச்சடித்துக் கொடுக்க விரும்புவதாகத் தெரிவித்து, அதற்காக உதவும்படி அந்த அன்பரிடம் கூறினார். அந்த அன்பரும் அனுமன் சாலீஸாவைப் படித்துக் காட்டினார். அப்போது, மடத்தின் சிப்பந்தி ஒருவர் ''ராமேஸ்வரத்தில் உள்ள அனுமன்தான் 1964 டிசம்பரில் ஏற்பட்ட கடல் கொந்தளிப்பில் இருந்து ஜோதிர்லிங்கங்களைக் காப்பாற்றினார்'' என்றார்.

அப்போது அந்த அன்பர் மகாபெரியவரிடம் ஒரு கேள்வியை முன்வைத்தார்.

''பெரியவா... ரொம்ப நாளாவே ஒரு சந்தேகம். நான் வடக்கே சோம்நாத், ஓம்காரேஸ்வர், மகாகாளேஸ்வர்ன்னு ஜோதிர்லிங்க தரிசனத்துக்குப் போயிருக்கேன். அங்கெல்லாம், ஜோதிர்லிங்கம்னா என்னன்னு கேட்டா, ''அப்னே ஆப் ஹுவா!''ன்னு தானாகவே உண்டானது... 'சுயம்பு'ன்னு சொன்னா! ராமேஸ்வரமும் ஜோதிர்லிங்கங்கள்ல ஒண்ணுதான். ஆனா, அந்த லிங்கம் ஸ்ரீராமராலே பிரதிஷ்டை செய்யப் பட்டது இல்லயா... அப்படின்னா அதை சுயம்புன்னு சொல்ல முடியாது. அதனால, ஜோதிர்லிங்கம்னா வேற ஏதோ பொருள் இருக்கணுமே...''

அதற்கு ஸ்வாமிகள், ''ஜ்வாலாமுகியை பார்த்திருக் கியா?'' என்று கேட்டார். ''நான் பார்த்ததில்லை. ஆனால், அங்கே எப்போதும் குண்டத்தில் அக்னி எரிந்து கொண்டிருக்குமாம். ஆதிசங்கர பகவத்பாதர் அதை அம்பிகை ரூபமாவே துதித்திருக்கிறாராம்!'' என்றார் அவர்.

அதற்கு ஸ்வாமிகள், ''சரிதான். ஆனா அங்கே ஒரு குண்டம் மட்டு மில்லே... பல அக்னி குண்டங்கள் எரிந்துகொண்டிருக்கும். அது கந்தக பூமியானதால் அவ்வாறு அமைந்திருக்கிறது. வடலூரில் பூஜை எப்படி நடக்கிறது பார்த்திருக்கிறாயா?'' என்று கேட்டுவிட்டு, அருகே இருந்த கண்ணன் என்பவரிடம் அதைப் பற்றிச் சொல்லச் சொன்னார்.

''வடலூரில் ஒரு விளக்கை ஏற்றிவைத்து, அதற்குப் பின்னால் ஒரு கண்ணாடியை வைத்து, அந்த விளக்குக்கும் அதன் பிரதி பிம்பத்துக்கும் பூஜை செய்கிறார்கள்'' என்றார் கண்ணன்.

உடனே அந்த அன்பரிடம் சொன்னார் மகாபெரியவர்...

''அரச மரத்தைப் பற்றி ஒரு ஸ்லோகம் உண்டே தெரியுமா?

மூலதோ ப்ரம்ம ரூபாய மத்யதோ விஷ்ணு ரூபிணே|
அக்ரதோ சிவரூபாய வ்ருக்ஷராஜாய தே நமபாடகன்|

அரச மரத்தின் அடிப்பாகம் பிரம்ம ரூபமாகவும், நடுப்பாகம் விஷ்ணு ரூபமாகவும், மேல்பாகம் சிவரூபமாகவும் இருக்கிறது...

விளக்கு எரியும்போது பார்த்திருக்கிறாயா? அந்த ஜோதியில் தெரியற மஞ்சள் நிறம் பிரம்மாவின் நிறம்... நடுவில் கறுப்பு விஷ்ணுவின் நிறம்... மேலே சிவப்பு சிவனுடையது. ஆகவே ஜோதி மும்மூர்த்தி சொரூபம். சிவலிங்கமும் அப்படியே. சாதாரணமாக எல்லோரும் நினைப்பது போல, அது சிவ சொரூபம் மட்டுமல்ல... லிங்கத்தின் அடிப்பகுதி பிரம்ம பாகம். நடுப் பீடம் விஷ்ணு பாகம். மேலே லிங்கமாக இருப்பது சிவனுடைய பாகம். அந்தக் காலத்தில் ரிஷிகள் அங்கங்கே ஜ்வாலாமுகி போல, இயற்கையாய் ஏற்பட்ட ஜோதியையோ, அல்லது வடலூரில் இருப்பதுபோல செயற்கையான தீப ஜோதியையோ வழிபட்டிருக்கிறார்கள். அந்த வழிபாடு தொடர்ந்து நடைபெற, அதையே லிங்கத்தில் பிரதிஷ்டை செய்து ஜோதிர் லிங்கமாக முன்னோர்கள் ஆராதித்தார்கள். ஜோதிதான் லிங்கம்... லிங்கம்தான் ஜோதி'' என விளக்கி, ஆசியளித்தார் மகாஸ்வாமிகள்.

- ஜானகிராமன்.



மனவருத்தம் போக்கிய மகாபெரியவர்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jan 07, 2010 1:19 am

கடற்கரையில் ஒதுங்கிய ரத்னகிரீஸ்வரர்!


சென்னை- பெசன்ட்நகர் கடற்கரை பகுதியில், கரை ஒதுங்கிய லிங்கத் திருமேனியைக் கண்ட அன்பர்களுக்கு மகிழ்ச்சி தாளவில்லை. மகாபெரியவருக்கு மனதார நன்றியை சமர்ப்பித்தவர்கள், 'சம்போ மகாதேவா' என்று ஈசனை கைதொழுதார்கள்! காஞ்சி மகாபெரியவரின் வாக்கும் பலித்தது!

ஆமாம்! சுமார் 45 வருடங்களுக்கு முன் சென்னை- பெசன்ட்நகருக்கு விஜயம் செய்திருந்தார் மகா ஸ்வாமிகள். அப்போது, அய்யன் மலை (திருச்சி மாவட்டம், குளித்தலைக்கு அருகே உள்ள இந்தத் தலத்தை ரத்தினமலை என்றும் அழைப்பர்) ஸ்ரீரத்னகிரீஸ்வரரை குலதெய்வமாகக் கொண்ட அன்பர்கள் சிலர் அவரிடம், ''ஸ்வாமி... பெசன்ட்நகரில் ரத்னகிரீஸ்வரருக்கு ஒரு கோயில் கட்ட எண்ணியுள்ளோம். அதற்கு நீங்கள் அனுக்கிரஹம் செய்ய வேண்டும்!'' என்று வேண்டினர். அவர்களிடம், ''பெசன்ட் நகர் சமுத்திரத்தில் ரத்னகிரீஸ்வரர் கிடைப்பார். அவரை ஸ்தாபிச்சி கோயில் கட்டுங்கோ!'' என்று அருள் புரிந்திருந்தார் ஸ்வாமிகள்.

அவரது வாக்குப்படியே சிவலிங்கம் ஒன்று கரை ஒதுங்க... அன்பர்களுக்கு ஆனந்தம்! 1.10.1968- அன்று (புரட்டாசி மாதம்) சிருங்கேரி ஆச்சார்யர் ஸ்ரீஅபிநவ வித்யாதீர்த்த மஹாஸ்வாமிகளால் பூமி பூஜை செய்யப்பட்டு, ஓலைக்குடிசையில் குடியேறினார் ஸ்ரீரத்னகிரீஸ்வரர். காலப்போக்கில், இறையருளாலும் அன்பர்களது முயற்சியாலும் குடிசை, அழகிய திருக்கோயிலாகப் பரிணமிக்க... ஸ்ரீரத்னகிரீஸ்வரரின் அருட்கடாட்சம் இன்றும் தொடர்கிறது!

காஞ்சி காமகோடி பீடாதிபதிகளான ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் மற்றும் ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் முன்னிலையில், 1998-ஆம் ஆண்டு இந்தக் கோயிலுக்கு மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்தக் கோயிலில் உள்ள ஸ்ரீசத்ய விநாயகர், ஸ்ரீரமணரால் பூஜிக்கப்பட்ட மூர்த்தியாம்! இங்கே பிரதோஷ வழிபாடுகள் விமரிசையாக நடைபெறுகின்றன. பிரதோஷத் திருநாளில், ஸ்ரீபிரதோஷ நாயகருக்கு பிரார்த்தனை மாலை சாற்றி வழிபட்டால், விரைவில் திருமண பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இன்னும் பிற வேண்டுதல்களுக்காக 'பிடி அரிசி' காணிக்கை செலுத்தியும், வில்வ மாலை சமர்ப்பித்தும் ஸ்ரீரத்னகிரீஸ்வரரை வணங்கிச் செல்கிறார்கள்.

பக்தர்கள் செலுத்தும் பிடி அரிசியை, பிரதோஷம் மற்றும் பிற பண்டிகை நாட்களில் தயிர்சாதமாகவும், வெண்பொங்கலாகவும் சமைத்து ஸ்வாமிக்கு நைவேத்தியம் செய்து பிரசாதமாக விநியோகிக்கிறார்கள்.

உற்ஸவ மூர்த்தியும் மூலவருடன் கருவறையிலேயே அமைந்திருப்பது இந்தக் கோயிலின் சிறப்பு. இங்கே அருள்பாலிக்கும் அம்பிகை சுருண்ட கேசம் கொண்டவள் ஆதலால், ஸ்ரீஅராளகேசி என்ற திருநாமத்துடன் திகழ்கிறாள்.

ஸ்ரீராமர், ஸ்ரீஆஞ்சநேயர், ஸ்ரீதுர்கை ஆகியோரும் தனிச் சந்நிதிகளில் அருள்பாலிக்கிறார்கள். நவக்கிரகங்களையும் தரிசிக்கலாம். பிராகாரத்தின் உள்ளேயே நான்கு வில்வ மரங்களும், அரசமரமும் உள்ளன. நினைத்ததை நிறைவேற்றும் ஸ்ரீரத்னகிரீஸ்வரரை கார்த்திகை சோமவாரத்தில் தரிசித்து, கவலைகள் நீங்கப் பெறலாம்.



மனவருத்தம் போக்கிய மகாபெரியவர்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக