புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொய்மை – சிறுகதை Poll_c10பொய்மை – சிறுகதை Poll_m10பொய்மை – சிறுகதை Poll_c10 
68 Posts - 53%
heezulia
பொய்மை – சிறுகதை Poll_c10பொய்மை – சிறுகதை Poll_m10பொய்மை – சிறுகதை Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
பொய்மை – சிறுகதை Poll_c10பொய்மை – சிறுகதை Poll_m10பொய்மை – சிறுகதை Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
பொய்மை – சிறுகதை Poll_c10பொய்மை – சிறுகதை Poll_m10பொய்மை – சிறுகதை Poll_c10 
3 Posts - 2%
D. sivatharan
பொய்மை – சிறுகதை Poll_c10பொய்மை – சிறுகதை Poll_m10பொய்மை – சிறுகதை Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
பொய்மை – சிறுகதை Poll_c10பொய்மை – சிறுகதை Poll_m10பொய்மை – சிறுகதை Poll_c10 
1 Post - 1%
Guna.D
பொய்மை – சிறுகதை Poll_c10பொய்மை – சிறுகதை Poll_m10பொய்மை – சிறுகதை Poll_c10 
1 Post - 1%
Shivanya
பொய்மை – சிறுகதை Poll_c10பொய்மை – சிறுகதை Poll_m10பொய்மை – சிறுகதை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பொய்மை – சிறுகதை Poll_c10பொய்மை – சிறுகதை Poll_m10பொய்மை – சிறுகதை Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
பொய்மை – சிறுகதை Poll_c10பொய்மை – சிறுகதை Poll_m10பொய்மை – சிறுகதை Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
பொய்மை – சிறுகதை Poll_c10பொய்மை – சிறுகதை Poll_m10பொய்மை – சிறுகதை Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
பொய்மை – சிறுகதை Poll_c10பொய்மை – சிறுகதை Poll_m10பொய்மை – சிறுகதை Poll_c10 
15 Posts - 3%
prajai
பொய்மை – சிறுகதை Poll_c10பொய்மை – சிறுகதை Poll_m10பொய்மை – சிறுகதை Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
பொய்மை – சிறுகதை Poll_c10பொய்மை – சிறுகதை Poll_m10பொய்மை – சிறுகதை Poll_c10 
9 Posts - 2%
jairam
பொய்மை – சிறுகதை Poll_c10பொய்மை – சிறுகதை Poll_m10பொய்மை – சிறுகதை Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பொய்மை – சிறுகதை Poll_c10பொய்மை – சிறுகதை Poll_m10பொய்மை – சிறுகதை Poll_c10 
4 Posts - 1%
Jenila
பொய்மை – சிறுகதை Poll_c10பொய்மை – சிறுகதை Poll_m10பொய்மை – சிறுகதை Poll_c10 
4 Posts - 1%
Rutu
பொய்மை – சிறுகதை Poll_c10பொய்மை – சிறுகதை Poll_m10பொய்மை – சிறுகதை Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொய்மை – சிறுகதை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82197
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon May 29, 2017 8:53 pm

அப்சல்
-
பொய்மை – சிறுகதை 2v5mqHFjRCuBtd0JItBH+16
-
காலையிலிருந்து மொபைல் போன் அழைத்துக் கொண்டிருந்தது.
அது புதிய நம்பராக இருந்தது. இது நிச்சயம் நரேஷ் கிடையாது
என்று எடுத்துப் பேசினான். ஓர் இளம் பெண்ணின் இனிய குரல்
அவனுடைய தூக்கத்தை கலைத்தது.

‘‘ஸார், ரொம்ப நாளாக உங்ககிட்டே பேசணும்னு
துடிச்சிட்டிருக்கேன். நான் உங்களுடைய தீவிர ரசிகை. நீங்கள்
எழுதிய எல்லா நாவல்களையும் படித்திருக்கேன்.

எல்லாமே சூப்பர். யூ ஆர் கிரேட் ஸார். இன்றைக்கு
எழுதுகிறவர்களிலேயே நீங்கள்தான் நம்பர் ஒன். இப்ப நீங்க
எழுதிட்டிருக்கிற ‘மயங்கினேன் சொல்லத் தயங்கினேன்’
தொடர்கதையை ஒரு அத்தியாயம் விடாம படித்துக்
கொண்டிருக்கிறேன். அசத்துறிங்க ஸார்…’’ மூச்சுவிடாமல்
பேசினாள்.

‘‘ரொம்ப நன்றி!’’

‘‘உங்களை ஒரு முறை… ஒரே ஒரு முறை நேரில் பார்க்கணும்
ஸார். இதுவரை உங்க போட்டோவைக்கூட பார்த்தது கிடையாது.
இவ்வளவு புகழ்பெற்ற பிறகும் பணிவுடன் இருக்கும் உங்கள்
இயல்பு பிடித்திருக்கிறது. ப்ளீஸ் ஸார். உங்களைச் சந்திக்க
ஒரு வாய்ப்பு கொடுங்க…’’ சக்கரவர்த்தி கொஞ்ச நேரம்
யோசித்தான்.

இதுவரை ரசிகர்கள் என்று சொல்லி அவனை வயதானவர்கள்
சந்தித்திருக்கிறார்கள். அதுவும் அவனுடைய கதைகளைப்பற்றிப்
பேச ஆரம்பித்து பஸ் கட்டணம், பால் விலை, கரண்ட் பில் என்று
பேசி கழுத்தறுப்பார்கள். இவளுடைய குரலைக் கேட்டாலே
இசையைப் போல் இருக்கிறது.

பார்ப்பதற்கும் அழகாக இருக்கலாம். ஒரு முறை நேரில்
பார்க்கலாம் என்று தோன்றியது.

‘‘உங்க பெயர்?’’
‘‘பிரியா!’’
‘‘ஓகே. பிரியா, அடுத்த வாரம் போன் பண்ணுங்க. இப்ப நான்
ஒரு கூட்டத்திற்காக ஒரிசா போறேன். திரும்பி வர ஒரு வாரமாகும்…’’

‘‘தாங்க்ஸ் ஸார்…’’ என்று மகிழ்ந்தாள். அவளிடம் அப்படி பொய்
சொல்லியிருக்கக்கூடாது என்று நினைத்தான் சக்கரவர்த்தி.
ஒருவாரம் வரை பொறுத்திருக்க அவனால் முடியாது. அவனுக்கு
பெரிதாக வேலையும் எதுவுமில்லை.

திருவல்லிக்கேணி மேன்ஷன் அறையை விட்டால் ஏதாவது
சினிமா பார்க்க போவான். அதைவிட்டால் ஹோட்டல்,
பீச் என்று சுற்றுவான். அவ்வளவுதான். ஒரிசாவில் மீட்டிங்காவது!
அவன் கும்மிடிப்பூண்டியைத் தாண்டியது இல்லை.

தானும் அப்படி பொய் சொல்லியிருக்கக் கூடாது என்று நினைத்த
பிரியாவும் சக்கரவர்த்தியை நேரில் பார்க்க தவித்துக்
கொண்டிருந்தாள்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82197
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon May 29, 2017 8:53 pm

ஒரு வாரம் என்பது அவளுக்கு ஒரு ஆயுளைப் போலத் தெரிந்தது.
ஒவ்வொரு நாளையும் அவனை எண்ணியே கழித்தாள். தன்னை
இன்னும் நினைத்துக் கொண்டிருப்பானா? இல்லை சுதாகர்
என்கிற பெயரை சக்கரவர்த்தி என்று மாற்றிக் கொண்டவன்
தன் மனதையும் ஒருவேளை மாற்றிக் கொண்டிருந்தால்…!

அவளை எப்படி அவனால் மறக்க முடியும்? அவள்தானே அவனது
முதல் ரசிகை. கல்லூரியில் படிக்கும்பொழுது ‘மலர்ச்செண்டு’
என்ற கையெழுத்துப் பத்திரிகையை நடத்தியபோது அதைப்
படித்து அவள் பாராட்டியிருக்கிறாள். அதில் வரும் அவனது
கதைகளைப் படித்து மகிழ்ந்து போவாள்.

ஒவ்வொரு படைப்பையும் படித்து முதல் ஆளாய் அவனைத்
தேடிச் சென்று பாராட்டுவாள் பிரியா.

‘‘உங்களுடைய திறமையான எழுத்துக்கு நிச்சயமாக நல்ல
எதிர்காலம் இருக்கு சுதாகர். பத்திரிகைகளில் உங்கள் கதைகள்
வரும் நாள் தொலைவில் இல்லை…’’ என்பாள். ‘‘ரொம்ப நன்றி
பிரியா. நான் எழுதிய நாவல்கள், தொடர்கதைகள்,
கையெழுத்துப் பிரதியாக இருக்கின்றன. அதைப் படிச்சிட்டு
உங்க அபிப்பிராயம் சொன்னா நல்லது…’’ பிரியா சம்மதித்தாள்.

அவன் கொடுத்த படைப்புகளைப் படித்து இவனிடம் இவ்வளவு
திறமையா என்ற பிரமித்துப் போனாள். ஒரு மனிதனைச் சிரிக்க
வைக்கவும், அழவைக்கவும், அவர்களுடைய எண்ணங்களையே
மாற்றிவிடும் வலிமையும் எழுத்திற்கு இருப்பதை உணர்ந்தாள்.

கையெழுத்துப் பிரதியை அவனிடம் திருப்பித் தந்தபோதுதான்
முதல்முறையாக பிரியாவிடம் தனது காதலை அவன் சொன்னான்.

இன்ப அதிர்ச்சியில் என்ன சொல்வது என்று தெரியாமல் அங்கிருந்து
நகர்ந்தாள். அவளுக்கும் அவனைப் பிடித்திருந்தது. அவனுடன்
சேர்ந்து சுற்றத் தொடங்கினாள். இது அவளுடைய வீட்டிற்கும்
தெரிந்தது. காதலையும், காய்ச்சலையும் மறைக்க முடியாது.

‘‘கதை, கவிதை எழுதுவது எல்லாம் படிக்க நல்லா இருக்கும் பிரியா…
ஆனா, அதை வைத்து சம்பாதிக்க முடியாது…’’ என்றார்
அரசு ஊழியரான அப்பா.

தன்னைப் போலவே ஓர் அரசு ஊழியனுக்கு அவளைக் கட்டிக்
கொடுத்தால், அவள் சந்தோஷமாக வாழ்வாள் என்பது அவரது
நினைப்பு.

‘‘பணம் மட்டும் வாழ்க்கையில்லை…’’ என்று மறுத்துப்
பேசினாள். அப்பா கோபத்தின் உச்சிக்குச் சென்றார். அவரது
கோபம் தன் வாழ்க்கையையே மாற்றிவிடும் என்று அப்போது
அவள் நினைத்துக் கூடப் பார்க்கவில்லை.

வெளிநாட்டில் பணிபுரிந்துகொண்டிருந்த தூரத்து சொந்தமான
அருண்குமாருக்கு அவளை வலுக்கட்டாயமாகக் கட்டி வைத்தார்.
அவளுடைய படிப்பும் நின்றது. சென்னையிலிருந்த அருணுடைய
வீட்டிற்குச் சென்றாள். அங்கிருந்து தபால் மூலம் படித்து
முடித்தாள்.

நேரம் நிறைய இருந்தது. பள்ளிக்கூட பிள்ளைகளுக்கு டியூசன்
எடுத்தாள். அருண் பெரும்பாலும் வெளிநாட்டிலேயே இருப்பான்.

எப்பொழுதாவதுதான் வருவான். அவள் மீது அவனுக்கு காதல்
கிடையாது. வெறும் காமம் மட்டுமே. அது தீர்ந்ததும் அவளிடமிருந்து
விலகிவிடுவான். எதுவும் பேசமாட்டான். அவசரப்பட்டு அப்பாவிடம்
தன் காதலுக்காக சண்டை போட்ட தவறை உணர்ந்தாள்.
முதலில் படிப்பை முடித்திருக்க வேண்டும்.

பிறகு, தன் காதலை அவர் ஏற்கும்படி நடந்து
கொண்டிருக்க வேண்டும்… பாவம் சுதாகர்… எப்படி
துடிக்கிறானோ… அவனைப் பார்க்க ஆசைப்பட்டவள்
தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டாள்.

பத்து வருடங்கள் ஓடிவிட்டன. எட்டு வயதில் பிரியாவிற்கு
ஒரு மகளும் இருக்கிறாள். கடந்த ஒரு வருடமாகத்தான்
சுதாகருடைய கதைகள், நாவல்கள் சக்கரவர்த்தி என்ற
பெயரில் பத்திரிகைகளில் பிரசுரமாகி வருகின்றன.

புனைப் பெயரில் எழுதலாமே என்று அவள்தான் அவனுக்கு
முதலில் யோசனை சொன்னாள். எல்லாம் அவள்
எப்பொழுதோ படித்து ரசித்த கதைகள். ஆனால் மறக்க
முடியாத கதைகள். அவனைச் சந்திக்கப் புறப்பட்டபோது
ஒரு முறை தன்னை கண்ணாடியில் பார்த்துக் கொண்டாள்.
இன்னும் அழகாகத்தான் இருக்கிறாள்.

அவனும் அப்படியே இருப்பானா..? ‘சுதாகர்’ என்று
அழைத்தால் எப்படி சந்தோஷப்படுவான்… ஹோட்டலுக்குள்
சென்றதும் சுதாகரைத் தேடினாள். அவனைக் காணவில்லை.
அவளை நோக்கி நடுத்தர வயதுள்ள ஒரு புதியவன் நெருங்கினான்.
‘‘ஹாய், நான்தான் சக்கரவர்த்தி…’’ அவள் அதிர்ந்துவிட்டாள்.
‘‘நீங்களா?’’ ‘‘யெஸ் நான்தான் பிரபல எழுத்தாளன் சக்கரவர்த்தி.
நீங்க இவ்வளவு அழகான எழுத்தாளரை எதிர்பார்க்கலையா?’’

பிரியாவுக்கு குமட்டலாக வந்தது. அழகா..? வழுக்கைத் தலையும்,
தொப்பையும், கீழே பேண்ட்டை அவன் இழுத்து விடுவதும், கறை
படிந்த பற்களும்… யார் இந்த கோமாளி? இவனை சுதாகருடன்
பார்த்திருக்கிறோம்.

அவனுடைய நண்பனல்லவா? ‘‘ஓகே பிரியா என்ன சாப்பிடறீங்க?
ஆர்டர் கொடுத்துட்டு பேசுவோமே…’’ என்ற சக்கரவர்த்தி,
சப்ளையரை அழைத்தான். அவரிடம் ஏதோ முணுமுணுத்துவிட்டு
பிரியாவைப் பார்த்துச் சிரித்தபடி

‘‘என் கதைகளில் உங்களுக்கு மிகவும் பிடித்தது எது?’’ என்றான்.
‘‘உங்கள் கதைகளிலா? நீங்க கதைகூட எழுதுவீங்களா..?’’
-


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82197
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon May 29, 2017 8:54 pm

சக்கரவர்த்திக்கு அதிர்ச்சியாக இருந்தாலும் அதை வெளியே காட்டிக்
கொள்ளாமல் சிரித்தான். ‘‘ஜோக்கிங்…’’ ‘‘நோ… ஐ ஆம் சீரியஸ்.
சுதாகர் எங்கே?’’ பிரியா கேட்டதும் நிலைகுலைந்தான்
சக்கரவர்த்தி.

‘‘யார் சுதாகர்?’’ ‘‘இந்தக் கதைகளை உண்மையில் எழுதியவர்!’’
‘‘அதெல்லாம் கிடையாது. எல்லாம் நான் எழுதிய கதைதான்…’’
‘‘அப்படி நீங்க உலகத்தை ஏமாற்றலாம்.

என்னையில்லை. ஏன்னா சுதாகருடைய முதல் ரசிகை நான்தான்.
உண்மையை சொல்லுங்க…’’ சக்கரவர்த்தி பயந்து போனான்.
தன் முகத்தில் படர்ந்த வியர்வையை கைக்குட்டையால் துடைத்தான்.

‘‘அவன் இல்லை…’’
‘‘பொய்…’’
‘‘நிஜம். அவன் தற்கொலை செஞ்சு செத்துட்டான்… நீதான் அவனைக்
கொன்ன…’’
‘‘நானா?’’
‘‘ஆமா…’’ பிரியாவுக்கு அழுகை வந்தது.

கட்டுப்படுத்திக் கொண்டவள் சட்டென்று எழுந்தாள்.
‘‘அவர் தன் எழுத்துக்கள் மூலமா வாழ்ந்துட்டுதான் இருக்கார்.
அதுக்கு நீங்கதான் காரணம். இந்த ரகசியம் நமக்குள்ள இருக்கட்டும்…’’
திரும்பிப் பார்க்காமல் வெளியேறினாள்.
சக்கரவர்த்தி அவளையே பார்த்தபடி அமர்ந்திருந்தான்.

————————————————–

குங்குமம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jun 08, 2017 11:21 am

கதை வெகு அருமை அண்ணா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக