புதிய பதிவுகள்
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 12:01

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 9:59

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 21:35

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 21:32

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 21:30

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 18:55

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 16:33

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 16:12

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 16:03

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 15:59

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 15:51

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:20

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 13:27

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 13:00

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:12

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:04

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:00

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue 21 May 2024 - 21:54

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:17

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:14

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Tue 21 May 2024 - 0:51

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon 20 May 2024 - 21:04

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:54

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:52

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:49

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:41

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:56

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:53

» சினி மசாலா
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:39

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:36

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:29

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon 20 May 2024 - 11:30

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Mon 20 May 2024 - 0:32

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun 19 May 2024 - 19:37

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun 19 May 2024 - 19:27

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun 19 May 2024 - 15:25

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun 19 May 2024 - 8:51

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun 19 May 2024 - 8:50

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun 19 May 2024 - 8:45

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun 19 May 2024 - 8:43

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மூலநோய் வருவது ஏன்? – டாக்டர் கு. கணேசன் Poll_c10மூலநோய் வருவது ஏன்? – டாக்டர் கு. கணேசன் Poll_m10மூலநோய் வருவது ஏன்? – டாக்டர் கு. கணேசன் Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
மூலநோய் வருவது ஏன்? – டாக்டர் கு. கணேசன் Poll_c10மூலநோய் வருவது ஏன்? – டாக்டர் கு. கணேசன் Poll_m10மூலநோய் வருவது ஏன்? – டாக்டர் கு. கணேசன் Poll_c10 
47 Posts - 42%
T.N.Balasubramanian
மூலநோய் வருவது ஏன்? – டாக்டர் கு. கணேசன் Poll_c10மூலநோய் வருவது ஏன்? – டாக்டர் கு. கணேசன் Poll_m10மூலநோய் வருவது ஏன்? – டாக்டர் கு. கணேசன் Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
மூலநோய் வருவது ஏன்? – டாக்டர் கு. கணேசன் Poll_c10மூலநோய் வருவது ஏன்? – டாக்டர் கு. கணேசன் Poll_m10மூலநோய் வருவது ஏன்? – டாக்டர் கு. கணேசன் Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
மூலநோய் வருவது ஏன்? – டாக்டர் கு. கணேசன் Poll_c10மூலநோய் வருவது ஏன்? – டாக்டர் கு. கணேசன் Poll_m10மூலநோய் வருவது ஏன்? – டாக்டர் கு. கணேசன் Poll_c10 
1 Post - 1%
சண்முகம்.ப
மூலநோய் வருவது ஏன்? – டாக்டர் கு. கணேசன் Poll_c10மூலநோய் வருவது ஏன்? – டாக்டர் கு. கணேசன் Poll_m10மூலநோய் வருவது ஏன்? – டாக்டர் கு. கணேசன் Poll_c10 
1 Post - 1%
Guna.D
மூலநோய் வருவது ஏன்? – டாக்டர் கு. கணேசன் Poll_c10மூலநோய் வருவது ஏன்? – டாக்டர் கு. கணேசன் Poll_m10மூலநோய் வருவது ஏன்? – டாக்டர் கு. கணேசன் Poll_c10 
1 Post - 1%
Shivanya
மூலநோய் வருவது ஏன்? – டாக்டர் கு. கணேசன் Poll_c10மூலநோய் வருவது ஏன்? – டாக்டர் கு. கணேசன் Poll_m10மூலநோய் வருவது ஏன்? – டாக்டர் கு. கணேசன் Poll_c10 
1 Post - 1%
prajai
மூலநோய் வருவது ஏன்? – டாக்டர் கு. கணேசன் Poll_c10மூலநோய் வருவது ஏன்? – டாக்டர் கு. கணேசன் Poll_m10மூலநோய் வருவது ஏன்? – டாக்டர் கு. கணேசன் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மூலநோய் வருவது ஏன்? – டாக்டர் கு. கணேசன் Poll_c10மூலநோய் வருவது ஏன்? – டாக்டர் கு. கணேசன் Poll_m10மூலநோய் வருவது ஏன்? – டாக்டர் கு. கணேசன் Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
மூலநோய் வருவது ஏன்? – டாக்டர் கு. கணேசன் Poll_c10மூலநோய் வருவது ஏன்? – டாக்டர் கு. கணேசன் Poll_m10மூலநோய் வருவது ஏன்? – டாக்டர் கு. கணேசன் Poll_c10 
189 Posts - 38%
mohamed nizamudeen
மூலநோய் வருவது ஏன்? – டாக்டர் கு. கணேசன் Poll_c10மூலநோய் வருவது ஏன்? – டாக்டர் கு. கணேசன் Poll_m10மூலநோய் வருவது ஏன்? – டாக்டர் கு. கணேசன் Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
மூலநோய் வருவது ஏன்? – டாக்டர் கு. கணேசன் Poll_c10மூலநோய் வருவது ஏன்? – டாக்டர் கு. கணேசன் Poll_m10மூலநோய் வருவது ஏன்? – டாக்டர் கு. கணேசன் Poll_c10 
12 Posts - 2%
prajai
மூலநோய் வருவது ஏன்? – டாக்டர் கு. கணேசன் Poll_c10மூலநோய் வருவது ஏன்? – டாக்டர் கு. கணேசன் Poll_m10மூலநோய் வருவது ஏன்? – டாக்டர் கு. கணேசன் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
மூலநோய் வருவது ஏன்? – டாக்டர் கு. கணேசன் Poll_c10மூலநோய் வருவது ஏன்? – டாக்டர் கு. கணேசன் Poll_m10மூலநோய் வருவது ஏன்? – டாக்டர் கு. கணேசன் Poll_c10 
9 Posts - 2%
jairam
மூலநோய் வருவது ஏன்? – டாக்டர் கு. கணேசன் Poll_c10மூலநோய் வருவது ஏன்? – டாக்டர் கு. கணேசன் Poll_m10மூலநோய் வருவது ஏன்? – டாக்டர் கு. கணேசன் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மூலநோய் வருவது ஏன்? – டாக்டர் கு. கணேசன் Poll_c10மூலநோய் வருவது ஏன்? – டாக்டர் கு. கணேசன் Poll_m10மூலநோய் வருவது ஏன்? – டாக்டர் கு. கணேசன் Poll_c10 
4 Posts - 1%
Jenila
மூலநோய் வருவது ஏன்? – டாக்டர் கு. கணேசன் Poll_c10மூலநோய் வருவது ஏன்? – டாக்டர் கு. கணேசன் Poll_m10மூலநோய் வருவது ஏன்? – டாக்டர் கு. கணேசன் Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
மூலநோய் வருவது ஏன்? – டாக்டர் கு. கணேசன் Poll_c10மூலநோய் வருவது ஏன்? – டாக்டர் கு. கணேசன் Poll_m10மூலநோய் வருவது ஏன்? – டாக்டர் கு. கணேசன் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மூலநோய் வருவது ஏன்? – டாக்டர் கு. கணேசன்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82177
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun 21 May 2017 - 21:05

மூலநோய் வருவது ஏன்? – டாக்டர் கு. கணேசன் WpIcgAdoRCeHBjpbfIXs+moolam_2310681f
-
நாற்பது வயதைக் கடந்த ஆண், பெண் இரு பாலருக்கும்
ஏற்படுகிற நோய்களுள் ‘மூலநோய்’ (Piles) முக்கியமானது.
இந்த நோய் வந்தவர்களில் பெரும்பாலோர் வெளியில்
சொல்ல வெட்கப்பட்டு முறையான சிகிச்சையை எடுக்கத்
தவறுவதால், பின்னாளில் கடுமையான மலச்சிக்கல்,
ஆசனவாயில் வலி, ரத்தப்போக்கு, ரத்தசோகை எனப்
பல துன்பங்களுக்கு உள்ளாகிறார்கள்.

எது மூலநோய்?

சாதாரணமாக, நம் உடலில் உள்ள சிரை ரத்தக் குழாய்களில்
(Veins) குறிப்பிட்ட இடைவெளிகளில் தடுப்பு வால்வுகள்
உள்ளன. இவை ரத்தத்தை இதயத்துக்குச் செலுத்துகின்றன;

ரத்தம் தேவையில்லாமல் சிரைக் குழாய்களில் தேங்கி
நிற்பதைத் தவிர்க்கின்றன. ஆனால், நம் உடல் அமைப்பின்படி
ஆசனவாயிலிருந்து குடலுக்குச் செல்லும் சிரைக் குழாய்களில்
மட்டும் இந்தத் தடுப்பு வால்வுகள் இயற்கையிலேயே
அமையவில்லை.

இதனால் அந்த ரத்தக்குழாய்களில் அழுத்தம் சிறிது
அதிகமானால்கூட ரத்தம் தேங்கி, சிறிய பலூன் போல
வீங்கிவிடுகிறது. இப்படி ஆசன வாயில் உள்ள இரண்டு
சிரை ரத்தக்குழாய்கள் ஏதோ ஒரு காரணத்தால் வீங்கிப்
புடைத்து, தடித்து ஒரு கட்டி போலத் திரண்டு விடுவதை ‘
மூலநோய்’ என்கிறோம்.
=
===============

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82177
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun 21 May 2017 - 21:06

காரணங்கள்

மலச்சிக்கல் மூலநோய்க்கு முக்கியக் காரணம். மலச்சிக்கலின்போ
து மலத்தை வெளியேற்றுவதற்கு முக்கவேண்டி இருப்பதால்,
அப்போது ஆசனவாயில் அழுத்தம் அதிகரித்து மூலநோயைத்
தோற்றுவிக்கும்.

ஆண்களுக்கு ஏற்படுகிற சிறுநீர்த்தாரை அடைப்பு, புராஸ்டேட்
வீக்கம் போன்றவற்றாலும் இம்மாதிரி அழுத்தம் அதிகமாகி
மூலநோய் உண்டாகிறது.

வயிற்றில் உருவாகும் கட்டிகள், மலக்குடலில் உருவாகும்
புற்றுநோய்க் கழலைகள் மற்றும் கொழுத்த உடல்
போன்றவையும் மூலநோயை ஏற்படுத்தும்.

கர்ப்பிணியின் வயிற்றில் குழந்தை வளர வளர அடிவயிற்றில்
இருக்கும் உறுப்புகள் கீழ்நோக்கித் தள்ளப்படுவதால், அவை
ஆசனவாய் சிரைக்குழாய்களை அழுத்தி வீக்கத்தை ஏற்படுத்தும்.
இதன் காரணமாக சில பெண்களுக்கு கர்ப்பகாலத்தில் மட்டும்
தற்காலிகமாக மூலநோய் வருகிறது.

சிலருக்குப் பரம்பரை காரணமாக ஆசனவாயில் உள்ள
சிரைக்குழாய்கள் மிக மெல்லியதாக இருக்கும். இதனாலும்
மூலநோய் வரலாம். நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்து குறைந்த
உணவு வகைகளைச் சாப்பிடும் பழக்கம் உள்ளவர்களுக்கு,
மாமிச உணவு வகைகளையும் விரைவு உணவு
வகைகளையும் அடிக்கடி சாப்பிடுபவர்களுக்கு, மூலநோய்
வருவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.

புகைபிடிப்பதும் மது அருந்துவதும் போதைப்பொருள்களை
உபயோகிப்பதும் ரத்தக்குழாய்களைப் பாதிப்பதால், இப்பழக்கம்
உள்ளவர்களுக்கு மூலநோய் எளிதில் வந்துவிடும்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82177
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun 21 May 2017 - 21:06

மூலநோய் வகைகள்

மூலநோய் இரு இடங்களில் ஏற்படுகிறது.

1. ஆசனவாயின் வெளிப்புறத்தில் தோன்றுவது
‘வெளிமூலம்’ .

2. ஆசனவாயின் உள்ளே சளிப்படலத்தில் உருண்டையாக
புதைந்திருப்பது ‘உள்மூலம்’.

சாதாரணமாக, நாற்பது வயதைக் கடந்தவர்களுக்கு இந்த
நோய் வருவதற்கு அதிக வாய்ப்பிருப்பதால், அந்த வயது
உள்ளவர்கள் ஆண்டுக்கு ஒருமுறை மருத்துவரிடம்
பரிசோதித்துக் கொள்ள வேண்டும்.

ஆனால், நடைமுறையில் பலருக்கு மூலநோய் இருப்பது
தெரிந்தால்கூட ஆரம்பத்தில் வலியோ, சிரமமோ இருக்காது
என்பதால் அதைக் கவனிக்கத் தவறி விடுகின்றனர்.

பின்னாளில் வீக்கம் பெரிதாகி பல தொல்லைகள்
தரும்போது வேதனைப்படுகின்றனர்.

அறிகுறிகள்


ஆசனவாயில் சிறிய வீக்கம் தோன்றும், வலி இருக்காது.
அடுத்த நிலையில் மலம் கழிக்கும்போது லேசாக ரத்தம்
கசியும். அல்லது மலத்தோடு வரிவரியாக ரத்தம் வெளிப்படும்.
சில வாரங்களில், அந்த நபருக்கு மலம் கழித்த பின்னர்
சொட்டுச் சொட்டாக ரத்தம் வெளிவரும்.

சிலருக்கு வீக்கம் பெரிதாகி நிலைத்துவிடும். அப்போது அடிக்கடி
ஆசனவாயில் வலியை ஏற்படுத்தும்.

அந்த வீக்கத்தில் புண் உண்டாகி, அரிப்பு, வலி தொல்லை
தரும். அதனால் மலம் கழிப்பதில் சிரமம் உண்டாகும்,
மலச்சிக்கல் ஏற்படும். ‘முள்ளின் மீது உட்கார்ந்திருப்பதைப்
போன்ற அவதி’ என்று சொல்வது,

இதற்கு மிகவும் பொருந்தும். ஆசன வாயில் வெடிப்பு
(Anal fissure) புண், சுருக்கம் இருந்தாலும் இந்த மாதிரியான
வலி, தொல்லையைத் தரும்.

மூலநோய் அறிகுறிகளை நான்கு நிலைகளாக மருத்துவர்கள்
பிரித்திருக்கிறார்கள். காரணம், இந்த நோய்க்குப் பல்வேறு
சிகிச்சை முறைகள் உள்ளன. அவற்றில் எந்தச் சிகிச்சை
முறை குறிப்பிட்ட நோயாளிக்கு நல்ல பலனைத் தரும் என்று
முடிவு செய்வதற்கு இது உதவும்.

மூலநோயின் நிலைக்கு ஏற்ப சிகிச்சை தரப்பட்டால் மட்டுமே,
நோய் முழுவதுமாக குணமாகும். அப்படி இல்லாதபோது
மூலநோய் மீண்டும் வந்துவிடும்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82177
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun 21 May 2017 - 21:07

மூலநோய் நிலைகள்

முதலாம் நிலையில், சிறிய அளவில் தடிப்பு அல்லது
வீக்கம் தோன்றும். அந்த இடத்தில் லேசாக வலி இருக்கும்.
இரண்டாம் நிலையில், வீக்கம் பெரிதாக இருக்கும்.
மலம் கழிக்கும்போது ரத்தம் வெளியேறும்.

மலம் கழித்தபின் வீக்கம் உள்ளே சென்றுவிடும். மூன்றாம்
நிலையில், வீக்கம் நிரந்தரமாக இருக்கும். ரத்தப்போக்கு
அதிகமாக இருக்கும். நான்காம் நிலையில், வீக்கத்தில்
புண் ஏற்படலாம். வலி அதிகமாகலாம். அடிக்கடி ரத்தம்
மிக அதிகமாக வெளியேறும்.

முக்கியக் குறிப்பு


பெருங்குடலில் ஏற்படும் புண், வீக்கம், புற்றுநோய்,
ஆசனவாயில் ஏற்படும் புற்றுநோய் ஆகியவற்றின் காரணமாகவும்
மலம் கழிக்கும்போது ரத்தம் வெளியேறலாம்.

ஆகவே, ஒருமுறை ஆசனவாயிலிருந்து ரத்த ஒழுக்கு ஏற்பட்டால்
உடனே மருத்துவரிடம் பரிசோதித்து, காரணம் தெரிந்து சிகிச்சை
பெற்றுக்கொள்ள வேண்டியது முக்கியம்.

இது மூலநோயாகத்தான் இருக்கும் என்று நீங்களாகவே முடிவு
செய்துகொண்டு சிகிச்சை எடுக்காமல் இருந்துவிடக் கூடாது.

சிகிச்சை முறைகள்


மூலநோய்க்கு ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை பெற்றுக்கொண்டால்
மருந்து, மாத்திரை, களிம்புகளில் குணப்படுத்திவிடலாம்.
முக்கியமாக, மலச்சிக்கலுக்கு சரியான சிகிச்சை பெற்றுவிட்டால்
போதும். மூலநோயும் விடைபெற்று விடும்.

மூலநோய்க்குப் பல்வேறு சிகிச்சைமுறைகள் உள்ளன. அவை:

1. சுருங்க வைத்தல்
2. வளையம் இடுதல்
3. உறைய வைத்தல்
4. அறுவைச் சிகிச்சை
5. கதிர்வீச்சு சிகிச்சை
6. லேசர் சிகிச்சை
7. ஸ்டேப்ளர் சிகிச்சை.

நோயாளியின் தேவைக்கேற்ப இவற்றில் ஒன்றை மருத்துவர்
தேர்வு செய்வார்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82177
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun 21 May 2017 - 21:07

தடுப்பது எப்படி?

மூலநோய் உள்ளவர்கள் மலச்சிக்கல் வராமல்
பார்த்துக்கொள்ள வேண்டும். மலம் கழிப்பதைத் தள்ளிப்போடக்
கூடாது. மலம் கழிப்பதற்கு முக்கவும் அவசரப்படவும்
கூடாது.

அடிக்கடி அசைவ உணவு வகைகளைச் சாப்பிடுவதைத் தவிர்க்க
வேண்டும். காரம் அதிகமான உணவு ஆகாது. மசாலா நிறைந்த,
கொழுப்பு மிகுந்த உணவு வகைகளைக் குறைத்துக்கொள்ள
வேண்டும். நார்ச்சத்துள்ள உணவு வகைகளை அதிகப்படுத்த
வேண்டும்.

பச்சைக் காய்கறிகள், பயறு வகைகள், பொட்டுக்கடலை,
அவரைக்காய், கொத்தவரங்க்காய், கீரைகள், முழு தானியங்கள்,
வாழைத்தண்டு போன்றவற்றில் நார்ச்சத்து அதிகம். தினமும்
இரண்டு பழ வகைகளைச் சாப்பிட வேண்டும்.

காபி. தேநீர் குடிப்பதைக் குறைத்துக்கொண்டு, பழச்சாறுகளை
அருந்த வேண்டும். தினமும் போதுமான அளவுக்குத் தண்ணீர்
குடிக்க வேண்டும்.

ஒரே இடத்தில் நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பதையும்,
நிற்பதையும் தவிர்க்க வேண்டும். உடற்பருமன் அடையாமல்
பார்த்துக்கொள்ள வேண்டும். ஏற்கெனவே, உடல் பருமனாக
உள்ளவர்கள், உடல் எடையைக் குறைக்க வேண்டும்.

வயிற்றில் தோன்றும் கட்டிகள், புற்றுநோய் போன்றவற்றுக்கு
ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை பெற்றுவிட வேண்டும்.

புகைப்பிடித்தல், மது அருந்துதல் கூடாது. இடுப்புக்குழித்
தசைகளுக்குப் பயிற்சி தரலாம். இயலாதவர்கள் இதற்கென்றே
உள்ள யோகாசனங்களைச் செய்யலாம். இவை எல்லாமே
மூலநோய்க்குத் தடை போடும்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82177
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun 21 May 2017 - 21:07

சிகிச்சை முறைகள்

சுருங்க வைத்தல்:


ரத்தத்தை உறைய வைக்கும் மருந்தை ஊசிக்குழாயில்
எடுத்துக்கொண்டு மூலநோய் ஏற்பட்டுள்ள இடத்தில்
செலுத்தி, தடித்துள்ள ரத்தக்குழாயைச் சுருங்க வைப்பது
இந்த சிகிச்சையின் முக்கிய செயல்முறை. முதல்நிலை
மூலநோயாளிக்கு இது உதவும்.

வளையம் இடுதல்:


இந்த முறையில், மூலநோய் உள்ள பகுதியைச் சுற்றி
ஓர் இறுக்கமான ரப்பர் வளையத்தைப் பொருத்துகிறார்கள்.
இதனால் ரத்தக்குழாய் வீக்கத்துக்குள் ரத்தம் வருவது
தடைப்பட்டுப்போகும். இதனால் வீக்கம் சுருங்கிவிடுகிறது.
இரண்டாம் நிலை மூலநோய் உள்ளவர்களுக்கு இந்தச்
சிகிச்சை உதவும்.

உறைய வைத்தல்:


திரவ நைட்ரஜனை மூலநோயின் மேல் வைத்தால்,
அதில் உள்ள ரத்தக்குழாய்கள் உறைந்து சுருங்கிவிடும்.
இரண்டாம் நிலை, மூலநோய் உள்ளவர்களுக்கு இந்தச்
சிகிச்சை உதவும்.

அறுவைச் சிகிச்சை:

நாள்பட்ட மூலநோயில் வீக்கம் மிக அதிகமாக இருந்தால்,
அதை அறுவை சிகிச்சை செய்து அகற்றி விடுகிறார்கள்.
வெளிமூலம் உள்ளவர்களுக்கு இந்தச் சிகிச்சை சிறந்த
பலன் தரும்.

கதிர்வீச்சு சிகிச்சை:


ஐ.ஆர்.சி. ( IRC Infra red Coagulation) என்ற கருவி மூலம்
இந்தச் சிகிச்சை செய்யப்படுகிறது. இக்கருவி அகச்சிவப்புக்
கதிரை உற்பத்தி செய்து, மூலநோய் உள்ள பகுதிக்கு
அனுப்புகிறது.

அப்போது அக்கதிர்கள் மூலநோய்க்குச் செல்லும்
ரத்தத்தை நிறுத்திவிடும். இதனால் மூலநோய் வீக்கம்
சுருங்கிவிடும்.

முதல் நிலை மற்றும் இரண்டாம் நிலை மூலநோய்
உள்ளவர்களுக்கு, இதயநோய் உள்ளவர்களுக்கு,
கர்ப்பிணிகளுக்கு, மயக்க மருந்து கொடுக்க இயலாத
நிலையில் உள்ள முதியவர்களுக்கு இந்தச் சிகிச்சை
உதவும்.

லேசர் சிகிச்சை:


லேசர் கதிர்களைச் செலுத்தி மூலநோயில் உள்ள
திசுக்களை அழிப்பது, இந்தச் சிகிச்சையின் செயல்முறை.
ஆனால், இதற்கு ஆகும் பணச்செலவு சிறிது அதிகம்.

ஸ்டேப்ளர் சிகிச்சை:


அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நவீன சிகிச்சை முறை
இது. இதற்கு ஆகும் பணச்செலவும் அதிகம்தான். என்றாலும்,
இதுதான் மிக எளிய சிகிச்சை முறை. நவீன ஸ்டேப்ளர்
கருவியைக் கொண்டு மூலநோயின் மேல்பகுதியைத் தையலிட்டு
இறுக்கிவிட்டு, வீக்கமுள்ள பகுதியையும் அதை ஒட்டியுள்ள
தசைப்பகுதியையும் வெட்டி எடுத்து தையலிட்டுவிடுகிறார்கள்.

இது மூலநோயை நிரந்தரமாக குணப்படுத்திவிடும். மூலநோய்
முற்றிய நிலையில் உள்ளவர்களுக்கும், முதியவர்களுக்கும்
இந்தச் சிகிச்சை நல்ல பலனைத் தருகிறது.

கட்டுரையாளர், பொதுநல மருத்துவர்.


நன்றி-தி இந்து

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக