புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:24 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 3:56 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Today at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Today at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:58 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:46 pm

» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 10, 2024 11:55 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வள்ளுவர் காட்டும் தாய் . Poll_c10வள்ளுவர் காட்டும் தாய் . Poll_m10வள்ளுவர் காட்டும் தாய் . Poll_c10 
81 Posts - 45%
ayyasamy ram
வள்ளுவர் காட்டும் தாய் . Poll_c10வள்ளுவர் காட்டும் தாய் . Poll_m10வள்ளுவர் காட்டும் தாய் . Poll_c10 
77 Posts - 43%
prajai
வள்ளுவர் காட்டும் தாய் . Poll_c10வள்ளுவர் காட்டும் தாய் . Poll_m10வள்ளுவர் காட்டும் தாய் . Poll_c10 
6 Posts - 3%
mohamed nizamudeen
வள்ளுவர் காட்டும் தாய் . Poll_c10வள்ளுவர் காட்டும் தாய் . Poll_m10வள்ளுவர் காட்டும் தாய் . Poll_c10 
6 Posts - 3%
Jenila
வள்ளுவர் காட்டும் தாய் . Poll_c10வள்ளுவர் காட்டும் தாய் . Poll_m10வள்ளுவர் காட்டும் தாய் . Poll_c10 
2 Posts - 1%
jairam
வள்ளுவர் காட்டும் தாய் . Poll_c10வள்ளுவர் காட்டும் தாய் . Poll_m10வள்ளுவர் காட்டும் தாய் . Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
வள்ளுவர் காட்டும் தாய் . Poll_c10வள்ளுவர் காட்டும் தாய் . Poll_m10வள்ளுவர் காட்டும் தாய் . Poll_c10 
2 Posts - 1%
Guna.D
வள்ளுவர் காட்டும் தாய் . Poll_c10வள்ளுவர் காட்டும் தாய் . Poll_m10வள்ளுவர் காட்டும் தாய் . Poll_c10 
2 Posts - 1%
kargan86
வள்ளுவர் காட்டும் தாய் . Poll_c10வள்ளுவர் காட்டும் தாய் . Poll_m10வள்ளுவர் காட்டும் தாய் . Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
வள்ளுவர் காட்டும் தாய் . Poll_c10வள்ளுவர் காட்டும் தாய் . Poll_m10வள்ளுவர் காட்டும் தாய் . Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வள்ளுவர் காட்டும் தாய் . Poll_c10வள்ளுவர் காட்டும் தாய் . Poll_m10வள்ளுவர் காட்டும் தாய் . Poll_c10 
124 Posts - 53%
ayyasamy ram
வள்ளுவர் காட்டும் தாய் . Poll_c10வள்ளுவர் காட்டும் தாய் . Poll_m10வள்ளுவர் காட்டும் தாய் . Poll_c10 
77 Posts - 33%
mohamed nizamudeen
வள்ளுவர் காட்டும் தாய் . Poll_c10வள்ளுவர் காட்டும் தாய் . Poll_m10வள்ளுவர் காட்டும் தாய் . Poll_c10 
10 Posts - 4%
prajai
வள்ளுவர் காட்டும் தாய் . Poll_c10வள்ளுவர் காட்டும் தாய் . Poll_m10வள்ளுவர் காட்டும் தாய் . Poll_c10 
8 Posts - 3%
Jenila
வள்ளுவர் காட்டும் தாய் . Poll_c10வள்ளுவர் காட்டும் தாய் . Poll_m10வள்ளுவர் காட்டும் தாய் . Poll_c10 
4 Posts - 2%
Rutu
வள்ளுவர் காட்டும் தாய் . Poll_c10வள்ளுவர் காட்டும் தாய் . Poll_m10வள்ளுவர் காட்டும் தாய் . Poll_c10 
3 Posts - 1%
jairam
வள்ளுவர் காட்டும் தாய் . Poll_c10வள்ளுவர் காட்டும் தாய் . Poll_m10வள்ளுவர் காட்டும் தாய் . Poll_c10 
2 Posts - 1%
Guna.D
வள்ளுவர் காட்டும் தாய் . Poll_c10வள்ளுவர் காட்டும் தாய் . Poll_m10வள்ளுவர் காட்டும் தாய் . Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
வள்ளுவர் காட்டும் தாய் . Poll_c10வள்ளுவர் காட்டும் தாய் . Poll_m10வள்ளுவர் காட்டும் தாய் . Poll_c10 
2 Posts - 1%
Baarushree
வள்ளுவர் காட்டும் தாய் . Poll_c10வள்ளுவர் காட்டும் தாய் . Poll_m10வள்ளுவர் காட்டும் தாய் . Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வள்ளுவர் காட்டும் தாய் .


   
   
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Jan 31, 2017 2:07 pm

இறைவன் படைப்பில் மிகவும் உயர்ந்த படைப்பு " தாய் " என்பவள் .

தான் எல்லா இடத்திலும் இருக்கமுடியாது என்பதற்காகவே இறைவன் தாயைப் படைத்தான் என்று சொல்வார்கள் . அந்த இறைவனுக்கே " தாயுமானவன் " என்ற ஒரு பெயரும் உண்டு .

ஒளவை காட்டும் தாய் பொருளை விரும்புபவள் ; ஆனால் வள்ளுவர் காட்டும் தாயோ தன் மகன்படித்தவனாக , சான்றோனாக  பண்புள்ளவனாக இருக்கவேண்டும் என்று விரும்புபவள் .

கல்லானே ஆனாலும் கைப்பொருள் ஒன்றுண்டாயின்
எல்லோரும் சென்றங்கு எதிர்கொள்வர் - இல்லானை
இல்லாளும் வேண்டாள் ஈன்றெடுத்த தாய்வேண்டாள்
செல்லா தவன்வாய்ச் சொல் .

என்பார் ஒளவை . ஆனால் வள்ளுவரோ

ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய் .

என்பார் . அதுமட்டுமல்ல

தன் மகன் ஒழுக்கசீலனாகவும் இருக்கவேண்டும் என்று அந்தத் தாய் விரும்புகிறாள் .

சான்றோர்கள் எல்லாமே ஒழுக்க சீலர்களாக இருப்பதில்லை என்பதற்கு நாட்டில் நடக்கும் நிகழ்வுகளே சான்றாக உள்ளன . உயர்ந்த பதவியில் இருப்பவர்களில் சிலர் பெண் பித்தர்களாக இருக்கின்றனர் ; இன்னும் சிலரோ கணக்கில் வராத கறுப்புப் பணத்தை வீட்டில் பதுக்கி வைக்கின்றனர் . அந்தக் கறுப்புப் பணத்தைக்கொண்டு தங்கக் கட்டிகளையும் , சொத்துக்களையும் வாங்கிக் குவிக்கின்றனர் .

இத்தகைய மகனை வள்ளுவர் காட்டும் தாய் ஒரு போதும்  விரும்பியதில்லை .  
தன் உதிரத்தைப் பாலாக்கி மகனுக்கு ஊட்டி வளர்த்தவள் தாய் . அவனுடைய ஒரு வேளை பசியைக்கூடப் பொறுக்கமாட்டாள் . தான் பட்டினி கிடந்தாவது தன் மகனுக்கு சோறு ஊட்டுவாள் . அப்படிப்பட்ட தாயை வயதான காலத்தில் காப்பாற்ற வேண்டியது மகனுடைய கடமை அல்லவா !

கட்டிய மனைவி , பிள்ளைகள் , பெற்ற தாய் ஆகிய மூவரையும் காப்பாற்ற வேண்டிய கடமை மகனுக்கு உள்ளது . அவனோ கூலி வேலை செய்து பிழைப்பவன் ; சில நாட்களுக்கு வேலை இருக்கும் ; சில நாட்களுக்கு வேலை இருக்காது . அவனுக்கு வேலை கிடைத்த நாட்களில் கைநிறைய ஊதியம் கிடைத்தது . அதைக்கொண்டு குடும்பம் முழுவதும் வயிறார உண்டு மகிழ்ந்தனர் . வேலை கிடைக்காத நாட்களில் கால் வயிற்றுக் கஞ்சிக்கு கூட வழியிருக்காது .

ஒருநாள் அப்படித்தான் பல இடங்களில் அலைந்து திரிந்தும் அவனுக்கு வேலை கிடைக்கவில்லை . குடும்பத்தின் வறுமைநிலை அவன் கண்முன்னே தெரிந்தது . வேறு வழியில்லாமல் திருடத் தொடங்கினான் . திருடிய பொருளைக் கொண்டுவந்து குடும்பத்தின் பசியை ஆற்றினான் . நாளடைவில் திருடுவதே அவன் தொழிலாக மாறிப்போனது . ஒருநாள் அவனது இழிதொழில் பெற்ற தாய்க்குத் தெரிய வந்தது . அவள் மிகவும் மனம் நொந்தாள். திருட்டுப் பணத்திலா இத்தனை நாட்களும் வயிற்றைக் கழுவினோம் என்று எண்ணி வேதனையுற்றாள் .    


மகன் வீட்டிற்கு வந்ததும் அவள் பேசவில்லை ; உணவும் உண்ணவில்லை . இதையறிந்த மகன தாயிடம் வந்து

"நீ  சாப்பிடவில்லையாமே ! என்ன காரணம் ? யார்மீது உனக்குக்கோபம்  ? "

"  உன் மீதுதான் ! "

"என் மீதா ? நான் என்ன தவறு செய்தேன் ? "

" உண்மையைச் சொல் ! நீ என்ன வேலை செய்கிறாய் ? எப்படிக் கிடைத்தது இந்தப் பணம் ? "

" என்னம்மா இப்படிக் கேட்கிறாய் ? கூலிவேலை செய்துதான் பணம் கொண்டுவருகிறேன் "

" பொய் பேசாதே ! கூலிவேலை செய்தால் உனக்கு ஆயிரக் கணக்கில் சம்பளம் கிடைக்குமா ? "

"என்னம்மா ! என்மீதே சந்தேகப் படுகிறாயா ?"

" போதும் நிறுத்து !  நீ திருடியதை  நானே என் இரு கண்களாலும் பார்த்தேன் ! "

" என்னம்மா சொல்கிறாய் ? எப்போது பார்த்தாய் ? "

" இன்று மார்க்கெட்டிற்கு சென்று மீன் வாங்கி வரும்போது பஸ்ஸுக்காகக் காத்திருந்தேன் ; பஸ் வந்தவுடன் ஏறினேன் . அந்தப் பஸ்ஸில் நீ நின்றுகொண்டு இருப்பதைப்  பார்த்தேன் .ஆனால்  நீ என்னைப் பார்க்கவில்லை . சிறிதுநேரத்தில் உன் முன்னால் நின்றுகொண்டு இருந்தவரின் கால் சட்டையிலிருந்து பர்ஸை எடுப்பதை நான் பார்த்தேன் .அந்தக் காட்சியைக்  கண்டவுடன் என் இதயமே   வெடித்துவிடும்போல இருந்தது .
" நாம் பெற்ற மகனா இப்படி ! "என்று நினைத்து நினைத்து நெஞ்சம் புண்ணானேன் !அந்த நொடியிலிருந்து இந்த நொடிவரை சாவு நமக்கு இன்னும் வரவில்லையே என்று புலம்பிக்கொண்டு இருக்கிறேன் ! இதோ இந்தப் பேரக் குழந்தைகள் மட்டும் இல்லையென்றால் நான் இந்நேரம் தற்கொலை செய்துகொண்டு இருப்பேன் ! "

" ஐயோ ! அம்மா ! என்னை மன்னித்துவிடுங்கள் ! நான் செய்தது மிகப்பெரிய தவறுதான் . ஆனாலும் எனக்கு வேறுவழி தெரியவில்லை ; நம் குடும்பம் பட்டினியாகக் கிடைப்பதை என்னால் தாங்கிக் கொள்ளமுடியவில்லை . அதனால்தான் அம்மா நான் திருடினேன் ; இனிமேல் நான் திருடமாட்டேன் ; என்னை மன்னித்துவிடு அம்மா ! " என்று சொல்லி தாயின் மடியில் முகம் புதைத்து அழுதான் .


மகன் அழுவதைக்கண்டு பொறாத தாய் , வாஞ்சையுடன் அவன் தலையைத் தடவிக் கொடுத்தாள் .

" மகனே ! கொஞ்சம் நினைத்துப்பார் ; நீ ஜெயிலுக்குப் போய்விட்டால் நம் குடும்பத்தின் கதி என்ன ஆகும்?
என்னை விட்டுத்தள்ளு ; நான் வாழ்ந்து முடித்தவள் ; ஆனால் நீயே கதி என்று நம்பியிருக்கின்ற பொண்டாட்டி ,பிள்ளைகளின் கதி என்ன ஆகும் என்று எண்ணிப் பார்த்தாயா ? நடுத் தெருவிற்கு அல்லவா வந்துவிடுவார்கள் ! நீராகாரம் குடித்தாலும் மானத்தோடு வாழ வேண்டுமப்பா ! "

" அம்மா ! இனிமேல் சத்தியமாகத் திருடமாட்டேன் ;என்னை நம்புங்கள் அம்மா ! "

" என் தலைமீது கை வைத்து சத்தியம் செய்வாயா ? "

மகனும் அவ்வாறே செய்கிறான் .

ஈன்றாள் பசிகாண்பான் ஆயினும் செய்யற்க
சான்றோர் பழிக்கும் வினை .

என்பது ஐயன் வள்ளுவனின் அறிவுரை .

இக்குறளுக்கு உரை எழுதும்போது பரிமேலழகர் ,

" இறந்த மூப்பினராய இருமுது குரவரும் , கற்புடை மனைவியும் . குழவியும் பசியான்  வருந்தும் எல்லைக்கண் தீயன பலவுஞ் செய்தாயினும் புறந்தருக "என்பது அறநூற் பொதுவிதி "என்று உரை எழுதுகிறார் .

அதாவது தாய் தந்தையர் ,  மனைவி , பிள்ளைகள் பசியால் வருந்தும்போது , தீய செயல்கள் செய்தாயினும் அவர்தம் பசியைப் போக்குவது மகனுடைய கடமை என்பது இதன் பொருள் .

ஆனால் வள்ளுவருக்கு இக்கருத்து உடன்பாடானது அல்ல . கூழ் குடித்தாலும் , அது நம் உழைப்பால் வந்ததாக இருக்கவேண்டும் என்று கருதும் இயல்பினர் .
   

சங்ககாலத்தில் கள்ளுண்ணலும் , புலால் உண்ணலும் , வேசியர் தொடர்பும் தவறான குற்றங்களாகக் கருதப்படவில்லை . பிறப்பால் அந்தணர் என்றாலும் கபிலர் கள்ளையும் , மாமிசத்தையும் உண்டிருக்கிறார் . சங்க காலத்து ஒளவையாரும் , அதியமானோடு உறைந்த காலத்தில் கள்ளும், புலாலும் உண்டுள்ளார் .

கள்ளுண்ணலும் ,கவராடுதலும் , புலால் உண்ணுதலும் , வேசியர் தொடர்பும் தவறு என்று கடிந்த முதற்புலவர் வள்ளுவப் பெருந்தகைதான் .    

கல்லாதவனிடம் வள்ளுவர் சமரசம் செய்துகொள்வார் ;ஆனால் குடிகாரனிடத்தில் ஒருபோதும் சமரசம் செய்துகொள்ள மாட்டார் .

"கற்க கசடற '

' எழுமையும் ஏமாப்புடைத்து '

"முகத்திரண்டு புண்ணுடையர் கல்லாதவர் "

என்றெல்லாம் சொல்லி கற்றலின் அவசியத்தை வலியுறுத்துவார் . அப்படியும் ஒருவன் கற்கவில்லை என்றாலும் அவன்மீது கோபம் கொள்ளாமல்

"கற்றிலனாயினும் கேட்க '

" கல்லாதவரும் நனிநல்லர் "

என்றுசொல்லி அவனுடன் சமரசம் செய்துகொள்வார் .

ஆனால் குடிகாரனுக்கு அவர் இரக்கம் காட்டவில்லை .

" உண்ணற்க கள்ளை " என்று அறவுரையைக் கேட்காத மாந்தரிடம் . " நீ குடியைவிடமுடியவில்லை என்றால் தாராளமாகக் குடித்துக்கொள் ; ஆனால் பெற்ற தாயின் முன்பாகக் குடிக்காதே ;அதை அவள் விரும்பமாட்டாள் "என்று சொல்கிறார்

" ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் என்மற்றுச்
சான்றோர் முகத்துக்  களி  .

என்பது வள்ளுவனின் வாக்கு . பெற்றவளே  குடிகார  மகனை விரும்பாதபோது ,சான்றோர்கள் எப்படி விரும்புவார்கள் என்று கேட்கிறார் .

தன் மகனுக்குத் தொழிலில் நட்டம் வறுமை வந்தால் அதற்காகத் தாய் அவனை வெறுக்கமாட்டாள் . தன்னிடம் இருக்கும் நகைகளைக் கொடுத்து உதவுவாள் ; ஆனால் ஒருவனுக்குக் குடித்துக் குடித்து வறுமை வந்தால் ,எந்தத்  தாயும் அவனுக்கு உதவி செய்யமாட்டாள் .    

அறன்சாரா நல்குரவு ஈன்ற தாயானும்
பிறன்போல நோக்கப் படும் .

என்பது ஐயனின் வாக்கு .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Jan 31, 2017 3:05 pm

நல்ல தகவல் பகிர்வுக்கு நன்றி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Jan 31, 2017 4:32 pm

இது பகிர்வு இல்லையே பானு ! என் சொந்தக் கட்டுரை .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jan 31, 2017 5:56 pm

நல்ல விளக்கவுரை கதையுடன் புரிந்து கொள்வதற்கு சுலபமாக . வள்ளுவர் காட்டும் தாய் . 103459460 வள்ளுவர் காட்டும் தாய் . 3838410834 

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jan 31, 2017 6:04 pm

ஜாஹீதாபானு wrote:நல்ல தகவல் பகிர்வுக்கு நன்றி
மேற்கோள் செய்த பதிவு: 1232925
M.Jagadeesan wrote:இது பகிர்வு இல்லையே பானு ! என் சொந்தக் கட்டுரை .
மேற்கோள் செய்த பதிவு: 1232931

பகிர்வு என்றால்  பகிர்ந்து கொள்ளல் . உங்கள் கட்டுரையை உங்கள் நாளேட்டு குறிப்பில் வைத்துக்கொள்ளாமல்,
ஈகரையில் பகிர்ந்து கொண்டதால் பகிர்வு என அவர் குறிப்பிட்டு இருக்கலாம் அல்லவா?
மறுபதிவு என்று அவர் கூறவில்லையே.
நான் புரிந்து கொண்டது தவறா ?

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 372
இணைந்தது : 05/08/2010

Postsugumaran Tue Jan 31, 2017 6:49 pm

மிக அருமை , சரியான விளக்கம்
வாழ்த்துக்கள்
அன்புடன்
அண்ணாமலை சுகுமாரன்

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Jan 31, 2017 7:28 pm

T.N.Balasubramanian wrote:
ஜாஹீதாபானு wrote:நல்ல தகவல் பகிர்வுக்கு நன்றி
மேற்கோள் செய்த பதிவு: 1232925
M.Jagadeesan wrote:இது பகிர்வு இல்லையே பானு ! என் சொந்தக் கட்டுரை .
மேற்கோள் செய்த பதிவு: 1232931

பகிர்வு என்றால்  பகிர்ந்து கொள்ளல் . உங்கள் கட்டுரையை உங்கள் நாளேட்டு குறிப்பில் வைத்துக்கொள்ளாமல்,
ஈகரையில் பகிர்ந்து கொண்டதால் பகிர்வு என அவர் குறிப்பிட்டு இருக்கலாம் அல்லவா?
மறுபதிவு என்று அவர் கூறவில்லையே.
நான் புரிந்து கொண்டது தவறா ?

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1232949

உங்கள் விளக்கமும் சரிதான் ; ஆனால் கட்டுரைகளையோ அல்லது கவிதைகளையோ எழுதிவைத்துப் பின்னர் பதிவிடும் பழக்கம் எனக்கு கிடையாது ; இப்போதெல்லாம் என்னால் பேனாவைக் கொண்டு நீண்ட நேரம் எழுத முடிவதில்லை . கையெழுத்து போடுவதற்கு மட்டுமே பேனாவைப் பயன்படுத்துகிறேன் .

கட்டுரைகளையும் , கவிதைகளையும் கொஞ்சம் கொஞ்சமாக டைப் செய்து WORD -ல் save செய்துகொள்வேன் .எல்லாம் முடிந்தபிறகு ஈகரையில் பதிவிடுவது என்வழக்கம் .

நம் ஈகரையில் ' பகிர்வுக்கு நன்றி " என்று பின்னூட்டம் போட்டிருப்பார்கள் .அந்தப் படைப்பெல்லாம் மற்றவர் செய்ததாக இருக்கும் . அதனால்தான் இது என் சொந்தப்படைப்பு என்று குறிப்பிட்டேன் .

நீங்கள் புரிந்துகொண்டது தவறா? அல்லது நான் புரிந்துகொண்டது தவறா என்று தெரியவில்லை !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக