புதிய பதிவுகள்
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Today at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Today at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தமிழ்நாட்டில் தை அமாவாசை திருத்தலங்கள்! Poll_c10தமிழ்நாட்டில் தை அமாவாசை திருத்தலங்கள்! Poll_m10தமிழ்நாட்டில் தை அமாவாசை திருத்தலங்கள்! Poll_c10 
70 Posts - 48%
ayyasamy ram
தமிழ்நாட்டில் தை அமாவாசை திருத்தலங்கள்! Poll_c10தமிழ்நாட்டில் தை அமாவாசை திருத்தலங்கள்! Poll_m10தமிழ்நாட்டில் தை அமாவாசை திருத்தலங்கள்! Poll_c10 
62 Posts - 42%
mohamed nizamudeen
தமிழ்நாட்டில் தை அமாவாசை திருத்தலங்கள்! Poll_c10தமிழ்நாட்டில் தை அமாவாசை திருத்தலங்கள்! Poll_m10தமிழ்நாட்டில் தை அமாவாசை திருத்தலங்கள்! Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
தமிழ்நாட்டில் தை அமாவாசை திருத்தலங்கள்! Poll_c10தமிழ்நாட்டில் தை அமாவாசை திருத்தலங்கள்! Poll_m10தமிழ்நாட்டில் தை அமாவாசை திருத்தலங்கள்! Poll_c10 
4 Posts - 3%
rajuselvam
தமிழ்நாட்டில் தை அமாவாசை திருத்தலங்கள்! Poll_c10தமிழ்நாட்டில் தை அமாவாசை திருத்தலங்கள்! Poll_m10தமிழ்நாட்டில் தை அமாவாசை திருத்தலங்கள்! Poll_c10 
1 Post - 1%
Kavithas
தமிழ்நாட்டில் தை அமாவாசை திருத்தலங்கள்! Poll_c10தமிழ்நாட்டில் தை அமாவாசை திருத்தலங்கள்! Poll_m10தமிழ்நாட்டில் தை அமாவாசை திருத்தலங்கள்! Poll_c10 
1 Post - 1%
bala_t
தமிழ்நாட்டில் தை அமாவாசை திருத்தலங்கள்! Poll_c10தமிழ்நாட்டில் தை அமாவாசை திருத்தலங்கள்! Poll_m10தமிழ்நாட்டில் தை அமாவாசை திருத்தலங்கள்! Poll_c10 
1 Post - 1%
prajai
தமிழ்நாட்டில் தை அமாவாசை திருத்தலங்கள்! Poll_c10தமிழ்நாட்டில் தை அமாவாசை திருத்தலங்கள்! Poll_m10தமிழ்நாட்டில் தை அமாவாசை திருத்தலங்கள்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ்நாட்டில் தை அமாவாசை திருத்தலங்கள்! Poll_c10தமிழ்நாட்டில் தை அமாவாசை திருத்தலங்கள்! Poll_m10தமிழ்நாட்டில் தை அமாவாசை திருத்தலங்கள்! Poll_c10 
293 Posts - 42%
heezulia
தமிழ்நாட்டில் தை அமாவாசை திருத்தலங்கள்! Poll_c10தமிழ்நாட்டில் தை அமாவாசை திருத்தலங்கள்! Poll_m10தமிழ்நாட்டில் தை அமாவாசை திருத்தலங்கள்! Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
தமிழ்நாட்டில் தை அமாவாசை திருத்தலங்கள்! Poll_c10தமிழ்நாட்டில் தை அமாவாசை திருத்தலங்கள்! Poll_m10தமிழ்நாட்டில் தை அமாவாசை திருத்தலங்கள்! Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
தமிழ்நாட்டில் தை அமாவாசை திருத்தலங்கள்! Poll_c10தமிழ்நாட்டில் தை அமாவாசை திருத்தலங்கள்! Poll_m10தமிழ்நாட்டில் தை அமாவாசை திருத்தலங்கள்! Poll_c10 
26 Posts - 4%
sugumaran
தமிழ்நாட்டில் தை அமாவாசை திருத்தலங்கள்! Poll_c10தமிழ்நாட்டில் தை அமாவாசை திருத்தலங்கள்! Poll_m10தமிழ்நாட்டில் தை அமாவாசை திருத்தலங்கள்! Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
தமிழ்நாட்டில் தை அமாவாசை திருத்தலங்கள்! Poll_c10தமிழ்நாட்டில் தை அமாவாசை திருத்தலங்கள்! Poll_m10தமிழ்நாட்டில் தை அமாவாசை திருத்தலங்கள்! Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
தமிழ்நாட்டில் தை அமாவாசை திருத்தலங்கள்! Poll_c10தமிழ்நாட்டில் தை அமாவாசை திருத்தலங்கள்! Poll_m10தமிழ்நாட்டில் தை அமாவாசை திருத்தலங்கள்! Poll_c10 
6 Posts - 1%
prajai
தமிழ்நாட்டில் தை அமாவாசை திருத்தலங்கள்! Poll_c10தமிழ்நாட்டில் தை அமாவாசை திருத்தலங்கள்! Poll_m10தமிழ்நாட்டில் தை அமாவாசை திருத்தலங்கள்! Poll_c10 
5 Posts - 1%
Kavithas
தமிழ்நாட்டில் தை அமாவாசை திருத்தலங்கள்! Poll_c10தமிழ்நாட்டில் தை அமாவாசை திருத்தலங்கள்! Poll_m10தமிழ்நாட்டில் தை அமாவாசை திருத்தலங்கள்! Poll_c10 
4 Posts - 1%
manikavi
தமிழ்நாட்டில் தை அமாவாசை திருத்தலங்கள்! Poll_c10தமிழ்நாட்டில் தை அமாவாசை திருத்தலங்கள்! Poll_m10தமிழ்நாட்டில் தை அமாவாசை திருத்தலங்கள்! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ்நாட்டில் தை அமாவாசை திருத்தலங்கள்!


   
   

Page 1 of 2 1, 2  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81961
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jan 26, 2017 2:57 pm

ராமேஸ்வரம், திலதர்ப்பணபுரி, திருப்புல்லாணி, திருவள்ளூர்,
ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம், திருவெண்காடு, திருவாரூர்,
விளமல் பதஞ்சலி மனோகரர் கோயில், கருங்குளம், அகரம்,
பவானி கூடுதுறை, திருப்புள்ளம்பூதங்குடி, திருக்கண்ணபுரம்
என்று பல தலங்கள் இருக்கின்றன.

முன்னோர் ஆராதனைக்காக மட்டுமின்றி, தை அமாவாசையன்று
விசேஷமாக தரிசிக்க வேண்டிய தலங்களும் உள்ளன.

இப்படி, தை அமாவாசையில் முன்னோர் ஆராதனைக்கும், சிறப்பு
வழிபாட்டுக்கும் உகந்த சில திருத்தலங்கள் குறித்து அறிந்து
கொள்வோம்.
-
தமிழ்நாட்டில் தை அமாவாசை திருத்தலங்கள்! NKAa7TiKSRbgfeKvVhmw+s71
-
ராமேஸ்வரம்

இந்தியாவில் உள்ள பன்னிரண்டு ஜோதிர்லிங்கத் தலங்களில்
ஒன்றான ராமேஸ்வரம் பித்ரு வழிபாட்டுக்கு உகந்த தலங்களில் ஒன்று.

ராவணனைக் கொன்ற பிரம்மஹத்தி தோஷம் நீங்க வேண்டி,
ராமபிரான் சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து வழிபட்ட திருத்தலம்.
இந்தத் தலத்தில் உள்ள தீர்த்தங்களில் அக்னி தீர்த்தம், பித்ரு
தோஷத்தைப் போக்கும் ஆற்றல் கொண்டது.

இந்த அக்னி தீர்த்தத்துக்குப் பெயர் வந்தது பற்றி ஒரு புராண
வரலாறு சொல்லப்படுகிறது.

-
ராமபிரானின் உத்தரவின்படி சீதாபிராட்டி அக்னி பிரவேசம்
செய்தபோது, பிராட்டியை தீண்டிய தோஷம் நீங்க அக்னி பகவான்
இங்குள்ள கடலில் நீராடி தோஷம் நீங்கப்பெற்றதால், இந்தத்
தீர்த்தத்துக்கு அக்னி தீர்த்தம் என்ற பெயர் ஏற்பட்டது.

இன்னொரு காரணமும் சொல்வர். அதாவது, பிராட்டியின் கற்பின்
வெப்பம் அக்னிபகவானைத் தகித்ததாகவும், அக்னி பகவான்
இங்குள்ள கடலில் நீராடி வெம்மையைப் போக்கிக் கொண்டதாகவும்
சொல்கிறார்கள்.

ராமேஸ்வரம் தீவின் தென் பகுதியில் உள்ள தனுஷ்கோடியின்
கிழக்குக் கடற்கரைப் பகுதியே அக்னி தீர்த்தமாக புராணங்களில்
சொல்லப்பட்டு இருக்கிறது. பிற்காலத்தில் தனுஷ்கோடி கடல்
சீற்றத்துக்கு ஆளாகப்போவதை தமது தீர்க்க தரிசனத்தால் உணர்ந்த
ஸ்ரீஆதிசங்கரர், அந்த அக்னி தீர்த்தத்தை எடுத்து இப்போது
ராமேஸ்வரத்தில் அக்னி தீர்த்தம் உள்ள இடத்தில் பிரதிஷ்டை
செய்ததாகச் சொல்லப்படுகிறது.

இங்கே ஆடி, புரட்டாசி, தை அமாவாசை மட்டுமல்லாமல், ஒவ்வொரு
அமாவாசையன்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்னோர் வழிபாடு
செய்து, பித்ரு தோஷம் நீங்கப் பெறுகின்றனர்.
-
-------------------------


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81961
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jan 26, 2017 3:00 pm

திலதர்ப்பணபுரி

திருவாரூர் – மயிலாடுதுறை சாலையில் 20 கி.மீ தொலைவில்
அமைந்துள்ளது பூந்தோட்டம். இங்குதான் சரஸ்வதி கோயில்
அமைந்துள்ளது. இங்கிருந்து 4 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது
திலதர்ப்பணபுரி.

தற்போது திலதைப்பதி என்றும், செதலப்பதி என்றும் அழைக்கப்
பெறுகிறது.

இந்தத் தலத்தில் விநாயகர் மனித முகத்துடன் ஆதி விநாயகராகக்
காட்சி தருகிறார். முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க உகந்த
தலங்களில் ஒன்று.

தசரதருக்கும், ஜடாயுவுக்கும் சிராத்தம் செய்ய எண்ணி இந்தத்
தலத்துக்கு வந்த ராமபிரான், இங்கே பித்ரு தர்ப்பணம் செய்தார்.
ராமபிரான் எள்ளும் நீரும் கொண்டு தர்ப்பணம் கொடுத்ததால்,
இந்தத் தலத்துக்கு திலதர்ப்பணபுரி என்று பெயர் ஏற்பட்டது.

ராமர் தர்ப்பணம் செய்தபோது பிடித்து வைத்த நான்கு பிண்டங்கள்
லிங்கங்களாக மாறின. அந்த நான்கு லிங்கங்களையும் கருவறையின்
பின்புறத்தில் தரிசிக்கலாம். இந்த லிங்கங்களுக்கு அருகில்
வலக் காலை மண்டியிட்டு வடக்கு நோக்கி அமர்ந்திருக்கும் கோலத்தில்
ராமபிரானை தரிசிக்கலாம்.

இந்த வடிவத்தில் ராமபிரானை எங்கும் தரிசிக்க முடியாது.
நாம் தர்ப்பணம் கொடுக்கும் முன்னோர்களுக்கு இறைவன் முக்தியைத்
தருவதால், முக்தீஸ்வரர் என்ற திருப்பெயர் ஏற்பட்டது.

இந்தத் தலத்தில் சூரியனும் சந்திரனும் அருகருகில் இருப்பதால்,
நித்திய அமாவாசை திருத்தலம் என்ற சிறப்பும் இந்தத் தலத்துக்கு
உண்டு.


காசியில் கங்கை நதி வடக்கில் இருந்து தெற்கு நோக்கிப் பாய்வது
போல் இங்கே காவிரியின் துணை நதியான அரசலாறு, வடக்கில்
இருந்து தெற்கு நோக்கிப் பாய்வதால், இத்தலம் காசிக்கு நிகராகப்
போற்றப்படுகிறது.
-

-


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81961
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jan 26, 2017 3:01 pm

திருப்புல்லாணி

ராமேஸ்வரத்துக்கு அருகில் உள்ள தலம்.
இந்தத் தலத்தில் உள்ள ஆதிஜகந்நாத பெருமாள், தசரதருக்கு
புத்திர பாக்கியம் அருளியதால், பெரிய பெருமாள் என்று
அழைக்கப்படுகிறார்.

இலங்கைக்கு பாலம் அமைக்க அருகில் இருந்த சேதுக்கரையில்
முகாம் இட்டிருந்த ராமபிரான், ஆதிசேஷன் மீது தர்ப்பை விரித்து
சயனக்கோலத்தில் திருக்காட்சி அருள்கிறார்.


ராமன் இங்கு தங்கியிருந்த காலத்தில், சீதாதேவி ராவணனால்
கடத்திச் செல்லப்பட்டிருந்தார். லட்சுமணனோ, ராமர் சயனம்
கொள்ள ஆதிசேஷனாகவும் மாறிவிட்டபடியால், சீதை மற்றும்
லட்சுமணரை இந்தக் கோயிலில் நாம் தரிசிக்க முடியாது.

இந்தத் தலத்தில் சேதுக்கரையில் உள்ள தீர்த்தம் ரத்னாகர தீர்த்தம்
என்று அழைக்கப்படுகிறது. இந்தத் தீர்த்தத்தில் நீராடி பித்ருக்களுக்கு
தர்ப்பணம் கொடுப்பது விசேஷம்!




ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81961
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jan 26, 2017 3:02 pm


திருச்செந்தூர்


அழகு முருகன் சூரனை சம்ஹாரம் செய்து வாகனமாகவும்
கொடியாகவும் கொண்ட திருத்தலம் திருச்செந்தூர்.

முருகப்பெருமானின் படைவீடுகளில் கடற்கரையில் அமைந்திருக்கும்
ஒரே தலம் திருச்செந்தூர். எனவே ஆடி, தை மற்றும் மஹாளய
அமாவாசை புண்ணிய தினங்களில், இங்கு வந்து பித்ரு ஆராதனை
செய்வது சிறப்பு என்பது ஐதீகம்.

காயத்ரி மந்திரத்தின் 24 எழுத்துகளும் இந்தத் தலத்தில்
தீர்த்தங்களாகித் திகழ்வதாகக் கூறப்படுகிறது. இவற்றில்
பலவும் மணல் மூடி தூர்ந்துவிட்டனவாம்.

தற்போது, சமுத்திரத்திலும் கந்த புஷ்கரணி எனப்படும் நாழிக்
கிணற்றிலும் மட்டுமே பக்தர்கள் நீராடி வருகிறார்கள்.

திருச்செந்தூரில் இருந்த 24 தீர்த்தங்களில் தென்புலத்தார்
தீர்த்தமும் ஒன்று என்றும், அந்தத் தீர்த்தத்தில் மூழ்கி,
பித்ருக்களுக்கு எள்ளும் தண்ணீரும் இறைத்து தர்ப்பணம்
கொடுப்பதால், பித்ருக்கள் மகிழ்ச்சி அடைவதுடன்,
அவர்களுடைய ஆசீர்வாதமும் நமக்குக் கிடைக்கும் என்பது
ஐதீகம்.



ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81961
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jan 26, 2017 3:03 pm



திருவெண்காடு


சீர்காழி – பூம்புகார் சாலையில், சீர்காழியில் இருந்து சுமார்
13 கி.மீ.தொலைவில் திருவெண்காடு அமைந்திருக்கிறது.

நவகிரகங்களில் புதனுக்கு உரிய தலம் திருவெண்காடு.
காவிரிக்கரையில் காசிக்கு நிகராக அமைந்திருக்கும்
6 சிவ க்ஷேத்திரங்களில் திருவெண்காடும் ஒன்று.

இந்தக் கோயிலில் அக்னி தீர்த்தம், சூரிய தீர்த்தம்,
சந்திர தீர்த்தம் என்று மூன்று தீர்த்தங்கள் இருக்கின்றன.
சந்திர தீர்த்தத்தின் அருகில் உள்ள ஆலமரத்தின் அடியில்
ருத்ர பாதம் பிரதிஷ்டை செய்யப்பட்டு இருக்கிறது.

தை அமாவாசை நாளில் இங்குள்ள சந்திர தீர்த்தத்தில் நீராடி,
ருத்ர பாதம் பிரதிஷ்டை செய்யப்பட்டு இருக்கும் ஆலமரத்தின்
அடியில் பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுத்தால்,
நம் முன்னோர்களின் ஆசிகள் நமக்குக் கிடைக்கும்.
-
-------------


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81961
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jan 26, 2017 3:04 pm


பவானி கூடுதுறை


வட இந்தியாவில் கங்கையுடன் யமுனை, சரஸ்வதி நதி
இரண்டும் சங்கமிக்கும் தலம் ‘திரிவேணி சங்கமம்’
(அலகாபாத்) எனப்படுகிறது.

இங்கு, சரஸ்வதி நதி கண்ணுக்குத் தெரிவதில்லை. அதுபோல்,
தமிழகத்தில் பவானி, காவிரி மற்றும் கண்ணுக்குப் புலப்படாத
அமிர்த நதி என மூன்று நதிகளும் கூடும் இடம்,
‘தென் திரிவேணி சங்கமம்’ என்று அழைக்கப்படும்…

பவானி கூடுதுறை (ஈரோடு மாவட்டம்). இந்த கூடுதுறையில்
கோயில் கொண்டிருப்பவர், ஸ்ரீசங்கமேஸ்வரர்.

பவானி கூடுதுறை, பாவம் போக்கி புண்ணியம் அளிக்கும் சக்தி
மிக்க தலமாகத் திகழ்வதால், ஆடி அமாவாசை, தை அமாவாசை
நாட்களில் இங்கு நீராடி, பித்ருக்களுக்குத் தர்ப்பணம் செய்வது
மிகுந்த விசேஷம் என்பது ஐதீகம்.

இங்கு ஒருமுறை குளித்துச் சென்று, ஸ்ரீசங்கமேஸ்வரரை
வணங்கினால் முக்தி நிச்சயம் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
அம்மன், நதி, தலம் மூன்றுக்கும் ஒரே பெயர். பார்வதியின்
திருநாமங்கள் பலவற்றுள் பவானியும் ஒன்று. இந்தப் பெயரே
நதியின் பெயராகவும், தலத்தின் பெயராகவும் அமைந்துள்ளது
சிறப்பு.
---



ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81961
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jan 26, 2017 3:06 pm

திருவிளமர்

திருவாரூரில் இருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கும்
இந்தத் தலம் தற்போது விளமல் என்று அழைக்கப்படுகிறது.
பதஞ்சலி முனிவர் வழிபட்ட தலம்.

சிவபெருமானின் ஆடலை தினமும் கண்டு அவரது திருவடியிலேயே
இருப்பவர் பதஞ்சலி முனிவர். அவர் தினமும் நடராஜப் பெருமானின்
நடனத்தைக் கண்டபின்தான் உணவு உட்கொள்வார்.

இவரும் வியாக்ரபாத முனிவரும் இறைவனின் அஜபா
நடனத்தையும், ருத்ர தாண்டவத்தையும் என்றென்றும் காண
வேண்டி வழிபட்டனர். மேலும் திருவடி தரிசனத்தை காண்பித்து
அருள வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.

இவர்கள் இருவருக்கும் இத்தலத்தில் சிவபெருமான் தனது
திருப்பாதம் காட்டி நடனம் ஆடியருளினார். இந்தத் தரிசனத்தை
விஷ்ணு, பிரம்மா, முசுகுந்த சக்கரவர்த்தி மற்றும் தேவாதி தேவர்கள்
கண்டு களித்தனர்.

சிவபெருமான் காட்டிய ருத்ரபாதத்துக்கு இன்றளவும் தினமும்
பூஜைகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. எனவே இத்தலம்
திருவடி க்ஷேத்திரம் என்றும், சிவபாத ஸ்தலம் என்றும் போற்றப்ப
டுகிறது.


இறைவன் கிழக்கு நோக்கி மண்ணால் ஆன சுயம்பு மூர்த்தியாக
அருள்பாலிக்கிறார். இங்குள்ள மூலவரின் முன்பு தீப வழிபாடு ந
டக்கும் போது, அந்த ஒளி லிங்கத்தில் பிரதிபலித்து, லிங்கமானது
தீப ஜோதியாக தெரிவதை காணலாம்.

அமாவாசை நாளில் திருவாரூர் கமலாலயத் தீர்த்தத்தில் நீராடி,
பின்னர் விளமல் பதஞ்சலி மனோகரர் கோயிலுக்கு வந்து,
முன்னோருக்கு தர்ப்பணம் செய்து, விளமல் பதஞ்சலி மனோகரரை
வழிபடுவது மிக சிறப்பாக கருதப்படுகிறது.

--

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jan 26, 2017 4:35 pm

ayyasamy ram wrote:திலதர்ப்பணபுரி

தமிழ்நாட்டில் தை அமாவாசை திருத்தலங்கள்! FyROkIdTU61i1WXHLCAn+tilatharpanaburi

திருவாரூர் – மயிலாடுதுறை சாலையில் 20 கி.மீ தொலைவில்
அமைந்துள்ளது பூந்தோட்டம். இங்குதான் சரஸ்வதி கோயில்
அமைந்துள்ளது. இங்கிருந்து 4 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது
திலதர்ப்பணபுரி.

தற்போது திலதைப்பதி என்றும், செதலப்பதி என்றும் அழைக்கப்
பெறுகிறது.

இந்தத் தலத்தில் விநாயகர் மனித முகத்துடன் ஆதி விநாயகராகக்
காட்சி தருகிறார். முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க உகந்த
தலங்களில் ஒன்று.

தமிழ்நாட்டில் தை அமாவாசை திருத்தலங்கள்! 7oIAk9Y0RJCnxspfg5sa+avtpuri5

தமிழ்நாட்டில் தை அமாவாசை திருத்தலங்கள்! 8xs7R6pRQPKqSz7CqwdA+avtpuri1

தசரதருக்கும், ஜடாயுவுக்கும் சிராத்தம் செய்ய எண்ணி இந்தத்
தலத்துக்கு வந்த ராமபிரான், இங்கே பித்ரு தர்ப்பணம் செய்தார்.
ராமபிரான் எள்ளும் நீரும் கொண்டு தர்ப்பணம் கொடுத்ததால்,
இந்தத் தலத்துக்கு திலதர்ப்பணபுரி என்று பெயர் ஏற்பட்டது.

ராமர் தர்ப்பணம் செய்தபோது பிடித்து வைத்த நான்கு பிண்டங்கள்
லிங்கங்களாக மாறின. அந்த நான்கு லிங்கங்களையும் கருவறையின்
பின்புறத்தில் தரிசிக்கலாம். இந்த லிங்கங்களுக்கு அருகில்
வலக் காலை மண்டியிட்டு வடக்கு நோக்கி அமர்ந்திருக்கும் கோலத்தில்
ராமபிரானை தரிசிக்கலாம்.

தமிழ்நாட்டில் தை அமாவாசை திருத்தலங்கள்! B5R8mD3UTeybMFuB0azI+G_L6_538

இந்த வடிவத்தில் ராமபிரானை எங்கும் தரிசிக்க முடியாது.
நாம் தர்ப்பணம் கொடுக்கும் முன்னோர்களுக்கு இறைவன் முக்தியைத்
தருவதால், முக்தீஸ்வரர் என்ற திருப்பெயர் ஏற்பட்டது.

இந்தத் தலத்தில் சூரியனும் சந்திரனும் அருகருகில் இருப்பதால்,
நித்திய அமாவாசை திருத்தலம் என்ற சிறப்பும் இந்தத் தலத்துக்கு
உண்டு.


காசியில் கங்கை நதி வடக்கில் இருந்து தெற்கு நோக்கிப் பாய்வது
போல் இங்கே காவிரியின் துணை நதியான அரசலாறு, வடக்கில்
இருந்து தெற்கு நோக்கிப் பாய்வதால், இத்தலம் காசிக்கு நிகராகப்
போற்றப்படுகிறது.
-

நல்ல விவரங்கள் ராம் அண்ணா, படங்கள் சேர்த்தேன் இதில் புன்னகை
krishnaamma
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jan 26, 2017 4:40 pm

ayyasamy ram wrote:திருப்புல்லாணி

தமிழ்நாட்டில் தை அமாவாசை திருத்தலங்கள்! NdRxtfQxSu6pcbk3PIg8+திருப்புல்லாணிஆதிஜெகநாதப்பெருமாள்கோயில்1

ராமேஸ்வரத்துக்கு அருகில் உள்ள தலம்.
இந்தத் தலத்தில் உள்ள ஆதிஜகந்நாத பெருமாள், தசரதருக்கு
புத்திர பாக்கியம் அருளியதால், பெரிய பெருமாள் என்று
அழைக்கப்படுகிறார்.

இலங்கைக்கு பாலம் அமைக்க அருகில் இருந்த சேதுக்கரையில்
முகாம் இட்டிருந்த ராமபிரான், ஆதிசேஷன் மீது தர்ப்பை விரித்து
சயனக்கோலத்தில் திருக்காட்சி அருள்கிறார்.

தமிழ்நாட்டில் தை அமாவாசை திருத்தலங்கள்! Xmes8GudQ1SUt9lDyuru+pullani_dharbha_sayanam

ராமன் இங்கு தங்கியிருந்த காலத்தில், சீதாதேவி ராவணனால்
கடத்திச் செல்லப்பட்டிருந்தார். லட்சுமணனோ, ராமர் சயனம்
கொள்ள ஆதிசேஷனாகவும் மாறிவிட்டபடியால், சீதை மற்றும்
லட்சுமணரை இந்தக் கோயிலில் நாம் தரிசிக்க முடியாது.

இந்தத் தலத்தில் சேதுக்கரையில் உள்ள தீர்த்தம் ரத்னாகர தீர்த்தம்
என்று அழைக்கப்படுகிறது. இந்தத் தீர்த்தத்தில் நீராடி பித்ருக்களுக்கு
தர்ப்பணம் கொடுப்பது விசேஷம்!


அருமை அருமை ! :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jan 26, 2017 4:42 pm

ayyasamy ram wrote:
திருச்செந்தூர்


தமிழ்நாட்டில் தை அமாவாசை திருத்தலங்கள்! LiSNk58CRmtSND8qqDcK+Tamil-Daily-News-Paper_9649273157120

அழகு முருகன் சூரனை சம்ஹாரம் செய்து வாகனமாகவும்
கொடியாகவும் கொண்ட திருத்தலம் திருச்செந்தூர்.

முருகப்பெருமானின் படைவீடுகளில் கடற்கரையில் அமைந்திருக்கும்
ஒரே தலம் திருச்செந்தூர்.  எனவே ஆடி, தை மற்றும் மஹாளய
அமாவாசை புண்ணிய தினங்களில், இங்கு வந்து பித்ரு ஆராதனை
செய்வது சிறப்பு என்பது ஐதீகம்.

தமிழ்நாட்டில் தை அமாவாசை திருத்தலங்கள்! WLkYG35JRE87GcAvZskQ+Masi-car-deities

காயத்ரி மந்திரத்தின் 24 எழுத்துகளும் இந்தத் தலத்தில்
தீர்த்தங்களாகித் திகழ்வதாகக்  கூறப்படுகிறது. இவற்றில்
பலவும் மணல் மூடி தூர்ந்துவிட்டனவாம்.

தற்போது, சமுத்திரத்திலும் கந்த புஷ்கரணி எனப்படும் நாழிக்
கிணற்றிலும் மட்டுமே பக்தர்கள் நீராடி வருகிறார்கள்.

திருச்செந்தூரில் இருந்த 24 தீர்த்தங்களில் தென்புலத்தார்
தீர்த்தமும் ஒன்று என்றும், அந்தத் தீர்த்தத்தில் மூழ்கி,
பித்ருக்களுக்கு எள்ளும் தண்ணீரும் இறைத்து தர்ப்பணம்
கொடுப்பதால், பித்ருக்கள் மகிழ்ச்சி அடைவதுடன்,
அவர்களுடைய ஆசீர்வாதமும் நமக்குக் கிடைக்கும் என்பது
ஐதீகம்.


இந்த கோவிலுக்கு போகவேணும் என்கிற எண்ணம் வெகுநாட்களாக இருக்கிறது எங்களுக்கு.........எப்பொழுது பிராப்தம் கிடைக்குமோ தெரியவில்லை புன்னகை :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக