புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிவஸ்தலங்களில் அருள்பாலிக்கும் விநாயகர்கள் Poll_c10சிவஸ்தலங்களில் அருள்பாலிக்கும் விநாயகர்கள் Poll_m10சிவஸ்தலங்களில் அருள்பாலிக்கும் விநாயகர்கள் Poll_c10 
68 Posts - 53%
heezulia
சிவஸ்தலங்களில் அருள்பாலிக்கும் விநாயகர்கள் Poll_c10சிவஸ்தலங்களில் அருள்பாலிக்கும் விநாயகர்கள் Poll_m10சிவஸ்தலங்களில் அருள்பாலிக்கும் விநாயகர்கள் Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
சிவஸ்தலங்களில் அருள்பாலிக்கும் விநாயகர்கள் Poll_c10சிவஸ்தலங்களில் அருள்பாலிக்கும் விநாயகர்கள் Poll_m10சிவஸ்தலங்களில் அருள்பாலிக்கும் விநாயகர்கள் Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
சிவஸ்தலங்களில் அருள்பாலிக்கும் விநாயகர்கள் Poll_c10சிவஸ்தலங்களில் அருள்பாலிக்கும் விநாயகர்கள் Poll_m10சிவஸ்தலங்களில் அருள்பாலிக்கும் விநாயகர்கள் Poll_c10 
3 Posts - 2%
D. sivatharan
சிவஸ்தலங்களில் அருள்பாலிக்கும் விநாயகர்கள் Poll_c10சிவஸ்தலங்களில் அருள்பாலிக்கும் விநாயகர்கள் Poll_m10சிவஸ்தலங்களில் அருள்பாலிக்கும் விநாயகர்கள் Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
சிவஸ்தலங்களில் அருள்பாலிக்கும் விநாயகர்கள் Poll_c10சிவஸ்தலங்களில் அருள்பாலிக்கும் விநாயகர்கள் Poll_m10சிவஸ்தலங்களில் அருள்பாலிக்கும் விநாயகர்கள் Poll_c10 
1 Post - 1%
Guna.D
சிவஸ்தலங்களில் அருள்பாலிக்கும் விநாயகர்கள் Poll_c10சிவஸ்தலங்களில் அருள்பாலிக்கும் விநாயகர்கள் Poll_m10சிவஸ்தலங்களில் அருள்பாலிக்கும் விநாயகர்கள் Poll_c10 
1 Post - 1%
Shivanya
சிவஸ்தலங்களில் அருள்பாலிக்கும் விநாயகர்கள் Poll_c10சிவஸ்தலங்களில் அருள்பாலிக்கும் விநாயகர்கள் Poll_m10சிவஸ்தலங்களில் அருள்பாலிக்கும் விநாயகர்கள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சிவஸ்தலங்களில் அருள்பாலிக்கும் விநாயகர்கள் Poll_c10சிவஸ்தலங்களில் அருள்பாலிக்கும் விநாயகர்கள் Poll_m10சிவஸ்தலங்களில் அருள்பாலிக்கும் விநாயகர்கள் Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
சிவஸ்தலங்களில் அருள்பாலிக்கும் விநாயகர்கள் Poll_c10சிவஸ்தலங்களில் அருள்பாலிக்கும் விநாயகர்கள் Poll_m10சிவஸ்தலங்களில் அருள்பாலிக்கும் விநாயகர்கள் Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
சிவஸ்தலங்களில் அருள்பாலிக்கும் விநாயகர்கள் Poll_c10சிவஸ்தலங்களில் அருள்பாலிக்கும் விநாயகர்கள் Poll_m10சிவஸ்தலங்களில் அருள்பாலிக்கும் விநாயகர்கள் Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
சிவஸ்தலங்களில் அருள்பாலிக்கும் விநாயகர்கள் Poll_c10சிவஸ்தலங்களில் அருள்பாலிக்கும் விநாயகர்கள் Poll_m10சிவஸ்தலங்களில் அருள்பாலிக்கும் விநாயகர்கள் Poll_c10 
15 Posts - 3%
prajai
சிவஸ்தலங்களில் அருள்பாலிக்கும் விநாயகர்கள் Poll_c10சிவஸ்தலங்களில் அருள்பாலிக்கும் விநாயகர்கள் Poll_m10சிவஸ்தலங்களில் அருள்பாலிக்கும் விநாயகர்கள் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
சிவஸ்தலங்களில் அருள்பாலிக்கும் விநாயகர்கள் Poll_c10சிவஸ்தலங்களில் அருள்பாலிக்கும் விநாயகர்கள் Poll_m10சிவஸ்தலங்களில் அருள்பாலிக்கும் விநாயகர்கள் Poll_c10 
9 Posts - 2%
Jenila
சிவஸ்தலங்களில் அருள்பாலிக்கும் விநாயகர்கள் Poll_c10சிவஸ்தலங்களில் அருள்பாலிக்கும் விநாயகர்கள் Poll_m10சிவஸ்தலங்களில் அருள்பாலிக்கும் விநாயகர்கள் Poll_c10 
4 Posts - 1%
jairam
சிவஸ்தலங்களில் அருள்பாலிக்கும் விநாயகர்கள் Poll_c10சிவஸ்தலங்களில் அருள்பாலிக்கும் விநாயகர்கள் Poll_m10சிவஸ்தலங்களில் அருள்பாலிக்கும் விநாயகர்கள் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
சிவஸ்தலங்களில் அருள்பாலிக்கும் விநாயகர்கள் Poll_c10சிவஸ்தலங்களில் அருள்பாலிக்கும் விநாயகர்கள் Poll_m10சிவஸ்தலங்களில் அருள்பாலிக்கும் விநாயகர்கள் Poll_c10 
4 Posts - 1%
Rutu
சிவஸ்தலங்களில் அருள்பாலிக்கும் விநாயகர்கள் Poll_c10சிவஸ்தலங்களில் அருள்பாலிக்கும் விநாயகர்கள் Poll_m10சிவஸ்தலங்களில் அருள்பாலிக்கும் விநாயகர்கள் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிவஸ்தலங்களில் அருள்பாலிக்கும் விநாயகர்கள்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82197
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Sep 05, 2016 8:45 am


சிவஸ்தலங்களில் அருள்பாலிக்கும் விநாயகர்கள்

-
சிவஸ்தலங்களில் அருள்பாலிக்கும் விநாயகர்கள் YSFfZjgkRfWoxjzm8f1t+ganesh-gold
விநாயக சதுர்த்தி என்பது விநாயகரின் முக்கியமான
விழாவாகும். ஆண்டுதோறும் ஆவணி மாதத்தின்
வளர்பிறைச் சதுர்த்தி நாள் அன்று கொண்டாடப்படுகிறது.

இந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர மாதம் 5-ம் தேதியன்று
வரும் விநாயக சதுர்த்தியை முன்னிட்டு, பாடல் பெற்ற
சில சிவஸ்தலங்களில் அருள்பாலிக்கும் விநாயகர்கள்
பற்றி தெரிந்துகொள்வோம்.
-
-------------------------------------------
-
பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலங்கள் வரிசையில்
25-வது தலமாக விளங்குவது திருவலஞ்சுழி.
-
திருவலஞ்சுழியில் உள்ள தல விநாயகர் ஸ்வேத விநாயகர்
என்று அழைக்கப்படுகிறார். தேவர்கள் திருப்பாற்கடலை
கடையத் தொடங்கும் முன் விநாயக பூஜை செய்ய மறந்தார்கள்.
-
அதனால்தான், பாற்கடலில் இருந்து ஆலகால விஷம் வெளி
வந்தது. தங்கள் தவறை உணர்ந்த தேவர்கள், அந்த வேளையில்
விநாயகரை ஆவாஹனம் செய்ய வேறு ஏதும் இல்லா நிலையில்,
பொங்கிவந்த கடல் நுரையை பிடித்து பிள்ளையாரை உருவாக்கி
பூஜை செய்தனர்.
-
அதன்பின், விநாயகர் அருளால் எடுத்த காரியம் பூர்த்தி அடைந்து
அமுதம் பெற்றார்கள்.
-
அந்த விநாயகர் மூர்த்தியைப் பிரதிஷ்டை செய்ய திருவலஞ்சுழியே
ஏற்ற இடம் என இங்கே பிரதிஷ்டை செய்து வழிபட்ட இந்திரன்,
ஒரு கோயிலும் கட்டினான். அந்தக் கோயிலில், இந்திரன் பூஜித்த
அந்த விநாயகர் மூர்த்தி இன்றும் அருள் பாலிக்கிறார்.

இன்றும் ஒவ்வொரு விநாயக சதுர்த்தி அன்று தேவேந்திரன் வந்து
விநாயகரை வழிபட்டுச் செல்வதாக ஐதீகம்.

தேவர்களால் உருவாக்கப்பட்ட இந்த விநாயகர்தான்
திருவலஞ்சுழியில் உள்ள ஸ்வேத விநாயகர். மற்ற ஆலயங்களில்
நடப்பது போன்ற அபிஷேகம் இவருக்கு இங்கே இல்லை.

சுமார் 10 அங்குல உயரமே உள்ள இந்த வெள்ளைப் பிள்ளையாருக்கு
புனுகு மட்டும் சாற்றுவார்கள். மேலும், பச்சைக் கற்பூரத்தைக்
குறிப்பிட்ட பக்குவத்தில் அரைத்து, அதை இந்த விநாயகரின்
திருமேனியைத் தொடாமல் அவர் மேல் மெள்ள தூவிவிடுவார் அர்ச்சகர்.

அதனால், இந்த விநாகயர் தீண்டாத் திருமேனி ஆவார். விநாயகர்
துதிக்கை வலப்பக்கம் சுழித்துள்ளதால் திருவலஞ்சுழி என
இத்தலம் பெயர் பெற்றதென்றும் கூறுவர்.

இந்த விநாயகர் சந்நிதியிலுள்ள கல் ஜன்னல் அக்கால சிற்பக்
கலைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது.
-
------------------------------------------------------
-

By என்.எஸ். நாராயணசாமி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82197
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Sep 05, 2016 8:46 am

வீரஹத்தி விநாயகர் – வேதாரண்யம்
-


பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலங்கள் வரிசையில்
125-வது தலமாக விளங்குவது வேதாரண்யம்.

ராமன் இவ்விடத்தில் சமுத்திர ஸ்நானம் செய்து, ராவணனைக்
கொன்ற பாவம் நீங்கப்பெற்றார் என்று தலபுராணம் கூறுகிறது.

ராமன் பூஜித்த ராமநாதர் சந்நிதியும் இவ்வாலயத்தில் உள்ளது.
ராவணனைக் கொன்றதால் ராமனுக்கு ஏற்பட்ட பிரம்மஹத்தி
தோஷத்தை இத்தலத்திலுள்ள விநாயகர் விரட்டி அடித்ததால்,
இவர் வீரஹத்தி விநாயகர் என்று அழைக்கப்படுகிறார்.

இந்த வீரஹத்தி விநாயகர் ஒரு காலைத் தூக்கிய நிலையில் காட்சி
தருகிறார். இவரின் சந்நிதி, கோவிலின் மேற்கு வெளிப் பிராகாரத்தில்
மேற்கு நோக்கி உள்ளது.

——————————————-

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82197
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Sep 05, 2016 2:08 pm

துணையிருந்த விநாயகர் – திருப்பனையூர்

பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலங்கள் வரிசையில்
73-வது தலமாக விளங்குவது திருப்பனையூர்.

முற்காலச் சோழர்களில் மிகவும் புகழ் பெற்றவன்
கரிகாலச் சோழன். இவன் சிறியவனாக இருக்கும்போது
தாயாதிகளின் சூழ்ச்சியால் அவனது தந்தை கொல்லப்
பட்டார்.

தந்தையை கொன்ற தாயாதிகள் கரிகாலனையும்
கொன்று சோழ நாட்டைக் கைப்பற்ற முனைந்தபோது.
அவனது தாய்மாமன் “இரும்பிடர்த்தலையார்” என்னும்
சங்கப் புலவர், பிறர் அறியாமல், குழந்தையையும்
தாயையும் பனையூருக்கு அனுப்பிவைத்தார்.

அரசி, தன் மகனுடன் இவ்வூருக்கு வந்து, இங்கு அமைந்துள்ள
சௌந்தரேஸ்வரர் கோவிலில் அடைக்கலம் புகுந்து,
இத்தலத்து விநாயகரிடம் முறையிட, விநாயகரின்
துணையால் கரிகாலன் எட்டு ஆண்டுகள் இத்தலத்தில்
பாதுகாப்பாக இருந்தான்.

கரிகாலச் சோழனுக்குத் துணையிருந்ததனால் இத்தல
விநாயகர் “துணையிருந்த விநாயகர்” என்னும் பெயர்
பெற்றார்.

——————————–

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82197
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Sep 05, 2016 2:10 pm

செவி சாய்த்த விநாயகர் – அன்பில் ஆலாந்துறை
-
சிவஸ்தலங்களில் அருள்பாலிக்கும் விநாயகர்கள் C2ex5Q7PSca050ZGfaix+DSCN0063
-
பாடல் பெற்ற காவிரி வடகரைத் தலங்கள் வரிசையில்
57-வது தலமாக விளங்குவது அன்பில் ஆலாந்துறை.

இத்தலத்திலுள்ள விநாயகருக்கு செவி சாய்த்த விநாயகர்
என்று பெயர். ஒருமுறை திருஞானசம்பந்தர், கொள்ளிடத்தின்
வடகரையில் அமைந்துள்ள இத்தலத்தை தரிசிக்க வந்தபோது,
கொள்ளிடம் நதியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடிக்
கொண்டிருந்தது.

காவிரியின் தென்கரையிலிருந்த சம்பந்தரால் கொள்ளிட
நதியைக் கடந்து கோவிலை நெருங்க முடியவில்லை. தூரத்தில்
நின்றபடியே சுயம்புவாய் அருள்பாலிக்கும் சிவபெருமானைப்
பாடினார்.

காற்றில் கலந்துவந்த ஒலி ஓரளவே கோயிலை எட்டியது.
ஞானசம்பந்தரின் பாட்டை நன்கு கேட்பதற்காக, விநாயகர்
தன் யானைக்காதை பாட்டு வந்த திசை நோக்கி சாய்த்துக்
கேட்டு ரசித்தார். ஒரு காலை மடக்கி, இன்னொரு காலை
குத்துக்காலிட்டு அமர்ந்து விநாயகர் பாட்டை ரசித்த
அக்காட்சியை சிற்பமாக வடித்தார் ஒரு சிற்பி.

அச்சிலை இன்றும் எழிலுற இவ்வாலயத்தில் காட்சி தருகிறது.
பார்த்து இன்புற வேண்டிய சிற்பம்.


காதில் குறைபாடு உள்ளவர்கள் இத்தலம் சென்று விநாயகப்
பெருமானை வழிபாடு செய்வது சிறப்பு.
—————————-

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82197
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Sep 05, 2016 2:46 pm

திருமுறை காட்டிய தலம்
-
பொள்ளாப் பிள்ளையாரின் எல்லையற்ற
கருணையினால்தான் தேவாரப் பாடல்கள் நமக்குக்
கிடைத்திருக்கின்றன. மூவர் பாடிய தேவாரப்
பாடல்களை தொகுக்க ராஜராஜ சோழன் முயற்சித்தான்.

அவனுக்குப் பாடல்கள் இருக்குமிடம் தெரியவில்லை.
நம்பியாண்டார் நம்பியின் பெருமையை அறிந்த
மன்னன், இங்கு வந்து தனக்கு உதவும்படி கேட்டான்.

நம்பி, விநாயகரிடம் முறையிட்டார். அப்போது ஒலித்த
அசரீரி, சிதம்பரம் நடராஜர் கோயிலில் தென்மேற்கு
மண்டபத்தில் திருமுறை சுவடிகள் இருப்பதாகக்
கூறியது.

(இன்றும் சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் ஆலயத்தின் மேற்கு
உள்பிராகாரத்தில் திருமுறை காட்டிய விநாயகர் சந்நிதி
அமைந்துள்ளது).

சோழ மன்னனும் திருமுறைகள் வைக்கப்படிருந்த
அறையை திறந்து திருமுறைகளை வெளிக்கொணர்ந்தது
வரலாறு.

———————————-

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82197
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Sep 05, 2016 2:47 pm

பிரளயம் காத்த விநாயகர் – திருப்புறம்பியம்
-
சிவஸ்தலங்களில் அருள்பாலிக்கும் விநாயகர்கள் EYcu0GJ2RNedZWdhfU25+ganesh1_2994556f
-
பாடல் பெற்ற காவிரி வடகரைத் தலங்கள் வரிசையில்
46-வது தலமாக விளங்குவது திருப்புறம்பியம்.

ஒருமுறை பிரளயம் ஏற்பட்ட காலத்தில், சிவபெருமான்
இத்தலத்தை பிரளயத்திலிருந்து பாதுகாக்கும்படி
விநாயகருக்குக் கூறுகிறார். விநாயகரும் பொங்கிவந்த
ஏழு சாகரங்களையும், இத்தலத்திலுள்ள திருக்குளத்துக்கு
கீழ்கரையில் இருக்கும் ஏழுகடல் கிணறு என்று இப்போது
அழைக்கப்படும் கிணற்றில் அடக்கி, பிரளயத்தில் இருந்து
இத்தலம் அழியாமல் பாதுகாத்தார்.

அச்சமயம் வருண பகவான் நத்தைக்கூடு, கடல்நுரை,
கிளிஞ்சல் ஆகிய கடல் பொருட்களால் ஒரு விநாயகர்
திருமேனியை உருவாக்கி, அவரை பிரளயம் காத்த விநாயகர்
என்று பெயரிட்டு இத்தலத்தில் வழிபட்டார்.

இந்த விநாயகருக்கு ஆண்டுதோறும் விநாயக சதுர்த்தி அன்று
மட்டும் இரவு முழுவதும் தேன் அபிஷேகம் நடைபெறும்.
அபிஷகம் செய்யப்படும் தேன் முழுவதும் விநாயகர்
திருமேனியால் உறிஞ்சப்பட்டுவிடும்.

தேன் அபிஷேக முடிவில் இத்திருமேனி செம்பவள நிறத்தில்
காட்சி அளிக்கும். வருடத்தில் மற்ற நாட்களில் இந்த
விநாயகருக்கு அபிஷேகம் ஏதும் செய்யப்படுவதில்லை.

————————————–

படம் – இணையம்

தினமணி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82197
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Sep 05, 2016 2:49 pm

வாதாபி கணபதி – திருசெங்காட்டங்குடி
--

பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலங்கள் வரிசையில்
79-வது தலமாக விளங்குவது திருசெங்காட்டங்குடி.

விநாயகர் வழிபாடு தமிழகத்தில் உருவாகக் காரணமாக
இருந்தவர் இத்தலத்திலுள்ள வாதாபி விநாயகர்.

பல்லவ மன்னன் நரசிம்மவர்மனிடம் சேனாதிபதியாக இருந்த
பரஞ்ஜோதி, ஒருசமயம் வடநாட்டுக்குப் போருக்குச் சென்றார்.
சாளுக்கிய மன்னன் புலிகேசியை வென்று, சாளுக்கிய
நாட்டின் தலைநகரமான வாதாபி என்ற ஊரில் இருந்த கணபதி
சிலையை, தன் வெற்றியின் அடையாளமாக தமிழகம் கொண்டு
வந்தார்.

தன்னுடைய சொந்த ஊரான இத்தலத்தில் அந்தச் சிலையை
பிரதிஷ்டை செய்தார். வாதாபியிலிருந்து வந்ததால் இந்த
விநாயகர் வாதாபி கணபதி என்ற பெயர் பெற்றார்.

இந்த விநாயகர் ஒட்டிய வயிறுடன் காட்சி தருவது விசேஷம்.

விநாயகர் சதுர்த்தியன்று இவருக்கு விசேஷ பூஜை செய்யப்படும்.

——————————-

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக