புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:14 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:02 am

» கருத்துப்படம் 04/06/2024
by mohamed nizamudeen Today at 7:53 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாயுமானவர் Poll_c10தாயுமானவர் Poll_m10தாயுமானவர் Poll_c10 
30 Posts - 50%
heezulia
தாயுமானவர் Poll_c10தாயுமானவர் Poll_m10தாயுமானவர் Poll_c10 
29 Posts - 48%
mohamed nizamudeen
தாயுமானவர் Poll_c10தாயுமானவர் Poll_m10தாயுமானவர் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாயுமானவர் Poll_c10தாயுமானவர் Poll_m10தாயுமானவர் Poll_c10 
72 Posts - 57%
heezulia
தாயுமானவர் Poll_c10தாயுமானவர் Poll_m10தாயுமானவர் Poll_c10 
50 Posts - 39%
mohamed nizamudeen
தாயுமானவர் Poll_c10தாயுமானவர் Poll_m10தாயுமானவர் Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
தாயுமானவர் Poll_c10தாயுமானவர் Poll_m10தாயுமானவர் Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாயுமானவர்


   
   
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Sun May 08, 2016 7:33 pm

தாயுமானவர்

சிவசங்கரன் அன்று வேலையில் ஈடுபாடு இல்லாமல் மனச்சங்கடத்தோடு காணப்பட்டார்.   நண்பர்கள் இதுபற்றிக் கேட்டபோது இலேசான தலைவலி என்று சொல்லி மழுப்பிவிட்டார்.   எப்படியோ வேலையை ஒருவழியாக சமாளித்து முடித்துவிட்டு மாலை ஆறு மணியளவில் வீடு திரும்பினார்.  

வீட்டில் நுழைந்தவுடன் மனைவி காவேரி "ஏன் தாமதம்?  இத்தனை நேரம் என்ன செய்துகொண்டு இருந்தீர்கள்? இதுதான் வீட்டுக்கு வரும் நேரமா?" என அடுக்கடுக்காய் கேள்விக்கணை தொடுக்க, "அலுவலகத்தில் இன்று கொஞ்சம் வேலை அதிகம்." என்று மட்டும் சொல்லிவிட்டு தன் அறைக்குச் சென்று வேட்டிக்கு மாறி முகம் கழுவ கிணற்றடிக்குச் சென்றார்.  

ஆனால், காவேரியின் பாய்ச்சல் மட்டும் இன்னும் ஓயாமல் தொடர்ந்து சிவசங்கரனை திக்குமுக்காட வைத்துக்கொண்டு தான் இருந்தது.   அதையும் ஒருவழியாய் கேட்டுக்கொண்டு, அவள் கொடுத்த அன்பு கலக்காத தேநீரை குடித்து முடித்தார்.  

பக்கத்து அறையில் படித்துக்கொண்டிருந்த தன் மகன் சீனுவின் அருகில் சென்று உட்கார்ந்தார். சீனு தற்போது பதினோராம் வகுப்பு படித்துக்கொண்டு இருக்கிறான்.   அவனிடம் "என்னப்பா, இன்று என்ன பாடம் நடத்தினார்கள்? இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறாய்? " எனக் கேட்க " அப்பா, என்னை ஏதாவது விடுதியில் சேர்த்து விடுங்கள்.  

எனக்கு இந்த வீடு வேண்டாங்கப்பா" என்று சொல்லும்போதே சீனுவின் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது.  "ஏம்பா, ஏன் அப்படிச் சொல்கிறாய்?" எனத் தெரிந்த பதிலுக்கான கேள்வியை கேட்டார்? "அப்பா, அம்மா எதற்கெடுத்தாலும் திட்டுகிறார்கள்.  நான் என்ன செய்தாலும் திட்டுகிறார்கள்.

படிக்கும்போதும் திட்டுதான், படிக்காவிட்டாலும் திட்டுதான்? எனக்கு இந்த வீட்டில் நிம்மதியே இல்லை. படிக்கவே மனம் செல்லவில்லை.  கொஞ்சம் கூட அணுசரனையே இல்லை." என சீனு கண்கலங்கிக் கூற, சிவசங்கரனோ "அம்மாவை அப்படியெல்லாம் சொல்லக்கூடாது, அவங்க உன் நல்லதுக்காகத்தான் கூறுவார்கள்.

இப்போது நீ படிப்பில் ஒரு முக்கியமான கட்டத்தில் இருக்கிறாய்.  இந்த இரண்டு வருடங்கள் தான் உன் எதிர்காலத்தை நிர்ணயம் செய்யப்போகிறது.  அதனால் தான் அம்மா மிகவும் கடுமையாக இருக்கிறார்கள்.  எல்லாம் உன் எதிர்காலம் நன்றாக அமையவேண்டுமே என்ற கவலையில்தான்." என்று கூறினார்.  

இதைக் கேட்டதும் சீனு "அப்பா, இந்த அறிவுரைகளை எனக்கு நிதானமாக சொன்னால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்.  ஆனால், கண்டிப்போடு கூறும்போது எவ்வளவு வெறுப்பாக இருக்கிறது தெரியுமா?  இப்போது நீங்களும் தான் கூறினீர்கள்.  எனக்கு எதிராகவும் அம்மாவுக்கு ஆதரவாகவும் பேசினாலும் நான் ஏற்றுக்கொள்ளும்படி கூறினீர்கள்.  மனதுக்கும் தெம்பாக இருக்கிறது.  நல்ல மதிப்பெண் பெற்றே தீரவேண்டும் என்கிற அவா எனக்குள் எழுகிறது."  என்று கூறிக்கொண்டே தன்னை மறந்து சிரித்துக்கொண்டே தந்தையை வந்து கட்டியணைத்துக்கொண்டான்.  

இதையெல்லாம் பக்கத்து அறையில் இருந்து கேட்டுக்கொண்டே இருந்த காவேரி தன் கணவனை "ஏங்க, கொஞ்சம் இங்கே வாங்க." என அழைத்தாள்.  உடனே சிவசங்கரனும் அவளருகில் செல்ல, காவேரி "அப்பாவா லட்சணமா நடந்து கொள்ளுங்கள்.  பிள்ளையை கொஞ்சிக்கொண்டிருந்தீர்களானால், கண்டிப்பாக அவன் உருப்படவே மாட்டான்.செல்லம் கொடுத்துக் கொடுத்து அவனை குட்டிச்சுவராய் ஆக்கிடுங்க" எனக்கூற, சிவசங்கரனும் அவள் சொல்வது சரிதான் என்பது போல  தலையை பலமாக ஆட்டினான்.

 "இப்படியே தலையை மட்டும் ஆட்டுங்க. ஆனால் உங்க விருப்பம் போல நடங்க" என்று சொல்லி வெறுப்போடு சமையலறைக்குச் சென்றாள்.  

சிவசங்கரன் அன்று இரவு தூக்கம் வராமல் படுக்கையில் புரண்டுகொண்டிருக்க, அவரது மனம் மட்டும் அன்று காலை செய்தித்தாளில் படித்த அந்த செய்தியை நினைத்து அசைபோட்டுக்கொண்டிருந்தது.  

அந்தச் செய்தி என்னவென்றால், அப்பாவும், அம்மாவும் ஒரு கல்லூரி செல்லும் பையனை சரியாக படிக்கவில்லை என மாறி மாறி திட்டியதால், மனமுடைந்த அவன் தவறான முடிவுக்கு செல்ல முற்பட்டதையும், அவனை ஒரு காவல் துறை அதிகாரி காப்பாற்றி மருத்துவ மனையில் சேர்த்து, அவனுடைய அப்பா அம்மாவை அழைத்து அவர்களின் தவறை சுட்டிக்காட்டியதையும், கொஞ்சம் தவறியிருந்தால் ஒரு நல்ல மகனை அவனுடைய பெற்றோர் இழந்திருக்கக்கூடுமே  என்பதை உணர்த்தியதுதான் அந்த செய்தி.

சிவசங்கரன் தன் அம்மாவை நினைத்துப்பார்த்தார்.  அவளின் தியாகத்தை நினைத்துப்பார்த்தார்.  மகனுக்காக அவள் செய்த தியாகங்கள் உண்மையில் அவரை மெய் சிலிர்க்க வைத்தது. இரவில் தான் படிக்கும்போது வந்து வந்து பார்த்துக்கொண்டும், தேநீர் வைத்து சுடச்சுட கொடுத்ததும், தான் தூங்கியதும் தூங்கி, தான் சொல்லும்போது அதிகாலையில் எழுப்பியதும், பலப்பல சிறுதொழில் செய்து தன்னை படிக்க வைத்ததும் அவர் கண்களில் நீர் இப்போதும் எப்போதும் நீர் சுரக்க வைத்தது.  தான் ஒன்றும் படிக்கவில்லை என்றாலும் மகனை பட்டினி கிடந்து படிக்க வைத்ததை எண்ணி மனம் மகிழ்ந்தார்.  

சிவசங்கரன் கடைசியில் ஒரு முடிவுக்கு வந்தார்.  என்னவெனில், வீட்டில் குழந்தைகளுக்கு பெற்றோரில் ஒருவரிடமிருந்து அன்பும் மற்றவரிடமிருந்து கண்டிப்பும் மிகவும் அவசியம். பொதுவாக, எல்லா வீடுகளிலும் அம்மா அன்பாகவும், அப்பா கண்டிப்புடனும் இருப்பது இயல்பு.   ஆனால், தன் வீட்டில் எவ்வளவு விளக்கிக்கூறினாலும் தன் மனைவி கண்டிப்புடன் தான் இருப்பாள்.

அது அவளின் இயல்பு.  எனவே, அதை ஈடுகட்ட ஏன் தாமே பிள்ளைகளிடம் அன்பாக இருக்கக்கூடாது? ஏன் தன் அம்மாவைப்போல இருக்கக்கூடாது? என்ற முடிவுக்கு வந்தவராக நிம்மதியாகத் உறங்கினார் தாயும் ஆனவரான சிவசங்கரன்.

ச. சந்திரசேகரன்.




தாயுமானவர் 425716_444270338969161_1637635055_n
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue May 10, 2016 11:12 pm

தாயுமானவர் 3838410834 தாயுமானவர் 3838410834 தாயுமானவர் 3838410834



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu May 12, 2016 8:50 am

தங்கள் கதையைப் படித்தவுடன் , இந்தத் திருவருட்பாதான் என் நினைவுக்கு வந்தது . முரட்டுப் பையனைத் தந்தை அடிக்கும்போது , தாயானவள் அன்புடன் அணைக்கவேண்டும் . தாய் அடிக்கும்போது , தந்தை அணைக்கவேண்டும் .இருவருமே சேர்ந்து கண்டிப்பது தவறானது; இருவருமே சேர்ந்து அளவுக்கு அதிகமான அன்பு பாராட்டுவதும் தப்பு .



''தடித்தஓர் மகனைத் தந்தைஈண் டடித்தால்
தாயுடன் அணைப்பள்தாய் அடித்தால்
பிடித்தொரு தந்தை அணைப்பன் இங்கு
எனக்குப் பேசிய தந்தையும் தாயும்
பொடித்திரு மேனி அம்பலத் தாடும்
புனிதநீ ஆதலால் என்னை
அடித்தது போதும் அணைத்திடல் வேண்டும்
அம்மைஅப் பாஇனி ஆற்றேன்.''

- திருஅருட்பா






இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Thu May 12, 2016 8:16 pm

krishnaamma wrote:தாயுமானவர் 3838410834 தாயுமானவர் 3838410834 தாயுமானவர் 3838410834
மேற்கோள் செய்த பதிவு: 1206603 தாயுமானவர் 1571444738 :வணக்கம்:

நன்றி ஜெகதீசன் அவர்களே. திருவருட்பா விளக்கம் மிக அருமை. தாயுமானவர் 1571444738 :வணக்கம்:



தாயுமானவர் 425716_444270338969161_1637635055_n
avatar
Hari Prasath
தளபதி

தளபதி
பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

PostHari Prasath Thu May 12, 2016 8:23 pm

அருமை ஐயாசூப்பருங்கசூப்பருங்கசூப்பருங்க




அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன்,
உ.ஹரி பிரசாத்
முகநூலில் தொடர................
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Sat May 14, 2016 11:34 pm

Hari Prasath wrote:அருமை ஐயாசூப்பருங்கசூப்பருங்கசூப்பருங்க
மேற்கோள் செய்த பதிவு: 1206792 தாயுமானவர் 1571444738 ஹரி :வணக்கம்: :வணக்கம்:



தாயுமானவர் 425716_444270338969161_1637635055_n
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sat May 14, 2016 11:41 pm

மிகவும் அருமையான கதை. சூப்பருங்க



தாயுமானவர் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonதாயுமானவர் L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312தாயுமானவர் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Sun May 15, 2016 11:15 pm

விமந்தனி wrote:மிகவும் அருமையான கதை. சூப்பருங்க
மேற்கோள் செய்த பதிவு: 1207009 தாயுமானவர் 1571444738 :வணக்கம்:



தாயுமானவர் 425716_444270338969161_1637635055_n
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக