புதிய பதிவுகள்
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:57 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:48 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:36 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:19 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:10 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:42 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:34 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:20 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sat May 04, 2024 11:02 pm

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கதை எண். 010 - தாயுமானவர் (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10கதை எண். 010 - தாயுமானவர் (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_m10கதை எண். 010 - தாயுமானவர் (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10 
21 Posts - 68%
ayyasamy ram
கதை எண். 010 - தாயுமானவர் (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10கதை எண். 010 - தாயுமானவர் (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_m10கதை எண். 010 - தாயுமானவர் (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10 
10 Posts - 32%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கதை எண். 010 - தாயுமானவர் (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10கதை எண். 010 - தாயுமானவர் (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_m10கதை எண். 010 - தாயுமானவர் (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10 
64 Posts - 70%
ayyasamy ram
கதை எண். 010 - தாயுமானவர் (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10கதை எண். 010 - தாயுமானவர் (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_m10கதை எண். 010 - தாயுமானவர் (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10 
10 Posts - 11%
mohamed nizamudeen
கதை எண். 010 - தாயுமானவர் (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10கதை எண். 010 - தாயுமானவர் (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_m10கதை எண். 010 - தாயுமானவர் (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10 
4 Posts - 4%
Rutu
கதை எண். 010 - தாயுமானவர் (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10கதை எண். 010 - தாயுமானவர் (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_m10கதை எண். 010 - தாயுமானவர் (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10 
3 Posts - 3%
ரா.ரமேஷ்குமார்
கதை எண். 010 - தாயுமானவர் (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10கதை எண். 010 - தாயுமானவர் (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_m10கதை எண். 010 - தாயுமானவர் (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10 
2 Posts - 2%
prajai
கதை எண். 010 - தாயுமானவர் (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10கதை எண். 010 - தாயுமானவர் (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_m10கதை எண். 010 - தாயுமானவர் (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10 
2 Posts - 2%
Jenila
கதை எண். 010 - தாயுமானவர் (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10கதை எண். 010 - தாயுமானவர் (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_m10கதை எண். 010 - தாயுமானவர் (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10 
2 Posts - 2%
Baarushree
கதை எண். 010 - தாயுமானவர் (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10கதை எண். 010 - தாயுமானவர் (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_m10கதை எண். 010 - தாயுமானவர் (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10 
2 Posts - 2%
viyasan
கதை எண். 010 - தாயுமானவர் (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10கதை எண். 010 - தாயுமானவர் (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_m10கதை எண். 010 - தாயுமானவர் (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
கதை எண். 010 - தாயுமானவர் (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10கதை எண். 010 - தாயுமானவர் (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_m10கதை எண். 010 - தாயுமானவர் (சிறுகதை சின்னத்திருவிழா) Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கதை எண். 010 - தாயுமானவர் (சிறுகதை சின்னத்திருவிழா)


   
   
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Sep 25, 2012 9:48 pm

தாயுமானவர்


சிவசங்கரன் அன்று வேலையில் ஈடுபாடு இல்லாமல் மனச்சங்கடத்தோடு காணப்பட்டார். நண்பர்கள் இதுபற்றிக் கேட்டபோது இலேசான தலைவலி என்று சொல்லி மழுப்பிவிட்டார். எப்படியோ வேலையை ஒருவழியாக சமாளித்து முடித்துவிட்டு மாலை ஆறு மணியளவில் வீடு திரும்பினார். வீட்டில் நுழைந்தவுடன் மனைவி காவேரி "ஏன் தாமதம்? இத்தனை நேரம் என்ன செய்துகொண்டு இருந்தீர்கள்? இதுதான் வீட்டுக்கு வரும் நேரமா?" என அடுக்கடுக்காய் கேள்விக்கணை தொடுக்க, "அலுவலகத்தில் இன்று கொஞ்சம் வேலை அதிகம்." என்று மட்டும் சொல்லிவிட்டு தன் அறைக்குச் சென்று வேட்டிக்கு மாறி முகம் கழுவ கிணற்றடிக்குச் சென்றார். ஆனால், காவேரியின் பாய்ச்சல் மட்டும் இன்னும் ஓயாமல் தொடர்ந்து சிவசங்கரனை திக்குமுக்காட வைத்துக்கொண்டு தான் இருந்தது. அதையும் ஒருவழியாய் கேட்டுக்கொண்டு, அவள் கொடுத்த அன்பு கலக்காத தேநீரை குடித்து முடித்தார்.

பக்கத்து அறையில் படித்துக்கொண்டிருந்த தன் மகன் சீனுவின் அருகில் சென்று உட்கார்ந்தார். சீனு தற்போது பதினோராம் வகுப்பு படித்துக்கொண்டு இருக்கிறான். அவனிடம் "என்னப்பா, இன்று என்ன பாடம் நடத்தினார்கள்? இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறாய்? " எனக் கேட்க " அப்பா, என்னை ஏதாவது விடுதியில் சேர்த்து விடுங்கள். எனக்கு இந்த வீடு வேண்டாங்கப்பா" என்று சொல்லும்போதே சீனுவின் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது. "ஏம்பா, ஏன் அப்படிச் சொல்கிறாய்?" எனத் தெரிந்த பதிலுக்கான கேள்வியை கேட்டார்? "அப்பா, அம்மா எதற்கெடுத்தாலும் திட்டுகிறார்கள். நான் என்ன செய்தாலும் திட்டுகிறார்கள். படிக்கும்போதும் திட்டுதான், படிக்காவிட்டாலும் திட்டுதான்? எனக்கு இந்த வீட்டில் நிம்மதியே இல்லை. படிக்கவே மனம் செல்லவில்லை. கொஞ்சம் கூட அணுசரனையே இல்லை." என சீனு கண்கலங்கிக் கூற, சிவசங்கரனோ "அம்மாவை அப்படியெல்லாம் சொல்லக்கூடாது, அவங்க உன் நல்லதுக்காகத்தான் கூறுவார்கள். இப்போது நீ படிப்பில் ஒரு முக்கியமான கட்டத்தில் இருக்கிறாய். இந்த இரண்டு வருடங்கள் தான் உன் எதிர்காலத்தை நிர்ணயம் செய்யப்போகிறது. அதனால் தான் அம்மா மிகவும் கடுமையாக இருக்கிறார்கள். எல்லாம் உன் எதிர்காலம் நன்றாக அமையவேண்டுமே என்ற கவலையில்தான்." என்று கூறினார். இதைக் கேட்டதும் சீனு "அப்பா, இந்த அறிவுரைகளை எனக்கு நிதானமாக சொன்னால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும். ஆனால், கண்டிப்போடு கூறும்போது எவ்வளவு வெறுப்பாக இருக்கிறது தெரியுமா? இப்போது நீங்களும் தான் கூறினீர்கள். எனக்கு எதிராகவும் அம்மாவுக்கு ஆதரவாகவும் பேசினாலும் நான் ஏற்றுக்கொள்ளும்படி கூறினீர்கள். மனதுக்கும் தெம்பாக இருக்கிறது. நல்ல மதிப்பெண் பெற்றே தீரவேண்டும் என்கிற அவா எனக்குள் எழுகிறது." என்று கூறிக்கொண்டே தன்னை மறந்து சிரித்துக்கொண்டே தந்தையை வந்து கட்டியணைத்துக்கொண்டான்.

இதையெல்லாம் பக்கத்து அறையில் இருந்து கேட்டுக்கொண்டே இருந்த காவேரி தன் கணவனை "ஏங்க, கொஞ்சம் இங்கே வாங்க." என அழைத்தாள். உடனே சிவசங்கரனும் அவளருகில் செல்ல, காவேரி "அப்பாவா லட்சணமா நடந்து கொள்ளுங்கள். பிள்ளையை கொஞ்சிக்கொண்டிருந்தீர்களானால், கண்டிப்பாக அவன் உருப்படவே மாட்டான். செல்லம் கொடுத்துக் கொடுத்து அவனை குட்டிச்சுவராய் ஆக்கிடுங்க" எனக்கூற, சிவசங்கரனும் அவள் சொல்வது சரிதான் என்பது போல தலையை பலமாக ஆட்டினான். "இப்படியே தலையை மட்டும் ஆட்டுங்க. ஆனால் உங்க விருப்பம் போல நடங்க" என்று சொல்லி வெறுப்போடு சமையலறைக்குச் சென்றாள்.

சிவசங்கரன் அன்று இரவு தூக்கம் வராமல் படுக்கையில் புரண்டுகொண்டிருக்க, அவரது மனம் மட்டும் அன்று காலை செய்தித்தாளில் படித்த அந்த செய்தியை நினைத்து அசைபோட்டுக்கொண்டிருந்தது. அந்தச் செய்தி என்னவென்றால், அப்பாவும், அம்மாவும் ஒரு கல்லூரி செல்லும் பையனை சரியாக படிக்கவில்லை என மாறி மாறி திட்டியதால், மனமுடைந்த அவன் தவறான முடிவுக்கு செல்ல முற்பட்டதையும், அவனை ஒரு காவல் துறை அதிகாரி காப்பாற்றி மருத்துவ மனையில் சேர்த்து, அவனுடைய அப்பா அம்மாவை அழைத்து அவர்களின் தவறை சுட்டிக்காட்டியதையும், கொஞ்சம் தவறியிருந்தால் ஒரு நல்ல மகனை அவனுடைய பெற்றோர் இழந்திருக்கக்கூடுமே என்பதை உணர்த்தியதுதான் அந்த செய்தி.

சிவசங்கரன் தன் அம்மாவை நினைத்துப்பார்த்தார். அவளின் தியாகத்தை நினைத்துப்பார்த்தார். மகனுக்காக அவள் செய்த தியாகங்கள் உண்மையில் அவரை மெய் சிலிர்க்க வைத்தது. இரவில் தான் படிக்கும்போது வந்து வந்து பார்த்துக்கொண்டும், தேநீர் வைத்து சுடச்சுட கொடுத்ததும், தான் தூங்கியதும் தூங்கி, தான் சொல்லும்போது அதிகாலையில் எழுப்பியதும், பலப்பல சிறுதொழில் செய்து தன்னை படிக்க வைத்ததும் அவர் கண்களில் நீர் இப்போதும் எப்போதும் நீர் சுரக்க வைத்தது. தான் ஒன்றும் படிக்கவில்லை என்றாலும் மகனை பட்டினி கிடந்து படிக்க வைத்ததை எண்ணி மனம் மகிழ்ந்தார்.

சிவசங்கரன் கடைசியில் ஒரு முடிவுக்கு வந்தார். என்னவெனில், வீட்டில் குழந்தைகளுக்கு பெற்றோரில் ஒருவரிடமிருந்து அன்பும் மற்றவரிடமிருந்து கண்டிப்பும் மிகவும் அவசியம். பொதுவாக, எல்லா வீடுகளிலும் அம்மா அன்பாகவும், அப்பா கண்டிப்புடனும் இருப்பது இயல்பு. ஆனால், தன் வீட்டில் எவ்வளவு விளக்கிக்கூறினாலும் தன் மனைவி கண்டிப்புடன் தான் இருப்பாள். அது அவளின் இயல்பு. எனவே, அதை ஈடுகட்ட ஏன் தாமே பிள்ளைகளிடம் அன்பாக இருக்கக்கூடாது? ஏன் தன் அம்மாவைப்போல இருக்கக்கூடாது? என்ற முடிவுக்கு வந்தவராக நிம்மதியாகத் உறங்கினார்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக