புதிய பதிவுகள்
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Shivanya | ||||
D. sivatharan | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
Guna.D | ||||
Jenila | ||||
jairam | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இன்னும் ஐந்து செகண்டுகள் தான்..!
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
படுவேகத்தில் வந்துகொண்டிருந்தது அந்த எக்ஸ்பிரஸ் ரயில். அடுத்தடுத்து சுமார் இரண்டு கிலோ மீட்டர் இடைவெளியில் உள்ள எச்சரிக்கைக் கம்பங்கள் பச்சையாய் வழிகாட்ட, எந்தத் தடையுமில்லாமல் தாராள வேகத்துடன் அது வந்துகொண்டிருந்தது. புலர்ந்துவிட்ட காலையின் 7 மணிப் பொழுது. இன்னும் ஒரு மணி நேரத்தில் பிரதான ஸ்டேஷனை அடைந்து விடலாம். இன்ஜின் டிரைவர் இரவுக் கண்விழிப்பில் சற்றே சோர்வு கொண்டிருந்தாலும், விரைவில் ஊர் வந்து சேர்ந்துவிடும் நிம்மதியில் ரயிலை இயக்கிக் கொண்டிருந்தார்.
பார்வை மட்டும் முன்னே நீண்டு செல்லும் தண்டவாளத்திலும் அதிலிருந்து பிரியும் அல்லது வந்து சேர்ந்துகொள்ளும் தண்டவாளங்களிலுமே பதிந்திருந்தது. அவ்வப்போது தொலைவில் தெரியும் பச்சை சிக்னலையும் கவனித்துக்கொண்டார். இப்போதைக்கு ரயிலின் வேகத்தைக் குறைக்க வேண்டிய அவசியம் இருக்காது.... ஐயோ இதென்ன, ஒரு இளைஞன் இந்த ரயில் வரும் தண்டவாளத்துக்கு அருகில் வருகிறானே! மடக்கிய இடது கை, இடது காதில் செல்போனை அணைத்து கொடுக்க, யாரிடமோ, எதையோ பேசிக்கொண்டு வருகிறானே.
அடப்பாவி! இந்த தண்டவாளங்களைக் கடந்து போய்விடுவான் என்று பார்த்தால், இரண்டுக்கும் நடுவில் கொஞ்சம்கூட ஆபத்தை உணராமல் முன்னால் நடந்துபோய்க் கொண்டிருக்கிறானே! பதறிப் போனார் டிரைவர். மிக அழுத்தமாக ஹாரனை இயக்கினார். அது உலகத்தையே உலுக்கிப் போட்டாலும், அந்த இளைஞன் மட்டும் எந்த சலனமுமில்லாமல் நிதானமாக நடக்கிறானே! இன்னும் அதிகபட்சம் பத்து செகண்டுகளுக்குள் அவனை ரயில் மோதிவிடுமே! உடலே வியர்த்தது அவருக்கு. இன்ஜினை இயக்கும் கைப்பிடியிலிருந்து கையை எடுத்தால், அதனால் வேகம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறையலாமே தவிர, ரயில் இளைஞன் மீது மோதுவதைத் தவிர்க்கவே முடியாது.
அவனைத் தாக்கிவிடாதபடி கட்டுப்படுத்த இப்போது அதிரடியாக பிரேக் பிடித்தால் அது அந்தப் பையனை மோதாமல் நிற்குமா என்பதும் சந்தேகமே. அதோடு சில கிளை தண்டவாளங்கள் இந்த தண்டவாளத்துடன் அடுத்தடுத்து இணையவோ, பிரியவோ போகின்றன என்பதால், அப்படி பிரேக் பிடித்தால், ஒருவேளை ரயில் தடம் புரளக்கூடும். அப்படி தடம் புரண்டால், ரயிலில் பயணித்துக் கொண்டிருக்கும் நூற்றுக்கணக்கான பயணிகள் ஆபத்துக்குள்ளாவார்கள்; அவர்களில் சிலபேர் இறக்கவும் நேரிடலாம்; பலர் படுகாயமுறலாம்; எந்த ஆபத்துமின்றி தப்பிக்கக்கூடியவர்கள் வெகு சிலராகத்தான் இருக்க முடியும்.
படுவேகமாகப் பின்னோக்கிப் போய்க்கொண்டிருந்த மரங்கள், கட்டிடங்கள் எல்லாம், அந்த இளைஞன் தன் முடிவை வெகுவாக நெருங்கிக் கொண்டிருப்பதை அவசர அவசரமாக அறிவித்தன. இப்போது என்ன செய்வது? அந்த ஒருத்தனைக் காப்பாற்றுவதற்காக இந்த நூற்றுக்கணக்கானவர்களை ஆபத்திற்குள்ளாக்குவது முறையா? அல்லது இவர்களைக் காப்பாற்றுவதற்காக இந்த ஒருத்தன் போனால் பரவயில்லையா? குழம்பித் தவித்தார் டிரைவர். இன்னும் ஐந்து செகண்டுதான்... இரண்டாவதுதான் சரி. இந்த இளைஞன் செத்துத் தொலையட்டும்.
ஆனால், அது, தான் செய்யும் கொலையல்லவா? ஒருவர் இன்னொருவர் மீது கடுங்கோபம் கொண்டு தாக்கினால் ஏற்படுவது கொலை; அல்லது தற்காப்புக்காகத் திருப்பித் தாக்கும்போது அதுவும் கொலையாக முடியலாம். ஆனால், இது எதில் சேர்த்தி? எந்த முன் விரோதமும் இல்லாத, தற்காப்புக்கான எந்த முகாந்திரமும் இல்லாமல் செய்யப்படப்போகும் இந்தக் கொலை எதில் சேர்த்தி? ‘விபத்து’ என்று அலட்சியமாகத் தலைப்பிட்டுத் தப்பித்துவிட முடியுமா? இதோ, என்னால் இயக்கப்பட்டுக் கொண்டிருக்கும் இன்ஜின் எந்த வகையிலும், கொஞ்சம்கூட சம்பந்தமே இல்லாத இந்த இளைஞனைக் கொல்லப் போகிறதே, அதுவும் என் கண்ணெதிரிலேயே நிகழப் போகிறதே, இதனை விபத்து என்று சொல்லி மனதை சமாதானப்படுத்திக்கொண்டு விடமுடியுமா?
எனக்குக் கொஞ்சமும் தொடர்பில்லாத இவனைக் கொலை செய்ய எனக்கு என்ன உரிமை இருக்கிறது? இப்போது இவன் கொலைசெய்யப்பட்டானானால் அது பிரம்மஹத்தி தோஷமாகி, தன்னையும், தன் குடும்பத்தையும் துரத்துமா? என் வாரிசுகளின் வாழ்க்கை இதனால் பாதிக்கப்படுமா? அட, நான்தான் இந்தக் ‘கொலை’க்குப் பிறகு நிம்மதியாக உயிர் வாழ முடியுமா? இந்தச் சம்பவமே வாழ்நாள் முழுவதும் என் நெஞ்சை அறுத்துக் கொண்டிருக்குமே! பொல்லாத ஜோதிடமும், சாஸ்திரமும் அவர் நினைவுக்கு வந்து அவரைப் பாடாய்ப்படுத்தின.
சாஸ்திரப்படி, இந்த தோஷம் அவருடைய ஏழு தலைமுறையையும் பாதிக்குமோ? இப்பொது இவன் இறந்தானென்றால் அடுத்தடுத்து என்ன நிகழும்? மறுநாள் செய்தித்தாளில் தகவல் வரும்: ‘‘செல்போன் பேசிக்கொண்டே தண்டவாளத்தில் நடந்து சென்றவர் ரயில் மோதி மரணம்.’’ இது, அவனைப் போலவே செல்பேசிக்கொண்டு இதேபோல அலட்சியமாக, ஆபத்தான முறையில் தண்டவாளத்தைக் கடக்க முயற்சிக்கும் பிறருக்கு ஓர் எச்சரிக்கையாக இருக்கட்டுமே...
இந்த கட்டத்தில், இந்த நெருக்கடியில் வேறொன்றும் செய்ய இயலாது.
கார்டுக்கு வயர்லெஸ் மூலம் தகவல் தெரிவிக்கலாமா? தெரிவித்தும் என்ன பயன்? ‘நம் ரயில் இன்ஜின், ஒரு இளைஞனை மோதப் போகிறது என்று வேண்டுமானால் சொல்லலாம்... ஆனால், அதற்குள் காலம் கடந்துவிடுமே! கடவுளே என்னை மன்னித்து விடு. என் கண்ணெதிரிலேயே, நான் ஓட்டி வரும் ரயில் இந்த இளைஞனை மோதி சாகடிக்கப்போகிறது. அவன் சிதறி பல துண்டுகளாக ஆங்காங்கே வீசியடிக்கப்படப் போகிறான்...
பெரும் துயரத்துடன் கண்களை மூடிக்கொள்ள டிரைவர் முயன்றபோது... அட, இதென்ன, யாரோ ஒருவர் அவனருகே ஓடி வந்து அவனை அப்படியே பிடித்து தண்டவாளத்தை விட்டு வெளியே தள்ளிவிட்டு, தானும் அவனக் கட்டிப் புரண்டபடி அவனோடு தண்டவாளத்தை விட்டு ஒதுங்குகிறாரே! நன்றி கடவுளே! பெருமூச்சுவிட்டார் டிரைவர். ரயில் வேகம் குறையாமல், சந்தோஷ நிம்மதியுடன் அந்த மரண இடத்தை வேகமாகக் கடந்தது.
பிரபுசங்கர்
பார்வை மட்டும் முன்னே நீண்டு செல்லும் தண்டவாளத்திலும் அதிலிருந்து பிரியும் அல்லது வந்து சேர்ந்துகொள்ளும் தண்டவாளங்களிலுமே பதிந்திருந்தது. அவ்வப்போது தொலைவில் தெரியும் பச்சை சிக்னலையும் கவனித்துக்கொண்டார். இப்போதைக்கு ரயிலின் வேகத்தைக் குறைக்க வேண்டிய அவசியம் இருக்காது.... ஐயோ இதென்ன, ஒரு இளைஞன் இந்த ரயில் வரும் தண்டவாளத்துக்கு அருகில் வருகிறானே! மடக்கிய இடது கை, இடது காதில் செல்போனை அணைத்து கொடுக்க, யாரிடமோ, எதையோ பேசிக்கொண்டு வருகிறானே.
அடப்பாவி! இந்த தண்டவாளங்களைக் கடந்து போய்விடுவான் என்று பார்த்தால், இரண்டுக்கும் நடுவில் கொஞ்சம்கூட ஆபத்தை உணராமல் முன்னால் நடந்துபோய்க் கொண்டிருக்கிறானே! பதறிப் போனார் டிரைவர். மிக அழுத்தமாக ஹாரனை இயக்கினார். அது உலகத்தையே உலுக்கிப் போட்டாலும், அந்த இளைஞன் மட்டும் எந்த சலனமுமில்லாமல் நிதானமாக நடக்கிறானே! இன்னும் அதிகபட்சம் பத்து செகண்டுகளுக்குள் அவனை ரயில் மோதிவிடுமே! உடலே வியர்த்தது அவருக்கு. இன்ஜினை இயக்கும் கைப்பிடியிலிருந்து கையை எடுத்தால், அதனால் வேகம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறையலாமே தவிர, ரயில் இளைஞன் மீது மோதுவதைத் தவிர்க்கவே முடியாது.
அவனைத் தாக்கிவிடாதபடி கட்டுப்படுத்த இப்போது அதிரடியாக பிரேக் பிடித்தால் அது அந்தப் பையனை மோதாமல் நிற்குமா என்பதும் சந்தேகமே. அதோடு சில கிளை தண்டவாளங்கள் இந்த தண்டவாளத்துடன் அடுத்தடுத்து இணையவோ, பிரியவோ போகின்றன என்பதால், அப்படி பிரேக் பிடித்தால், ஒருவேளை ரயில் தடம் புரளக்கூடும். அப்படி தடம் புரண்டால், ரயிலில் பயணித்துக் கொண்டிருக்கும் நூற்றுக்கணக்கான பயணிகள் ஆபத்துக்குள்ளாவார்கள்; அவர்களில் சிலபேர் இறக்கவும் நேரிடலாம்; பலர் படுகாயமுறலாம்; எந்த ஆபத்துமின்றி தப்பிக்கக்கூடியவர்கள் வெகு சிலராகத்தான் இருக்க முடியும்.
படுவேகமாகப் பின்னோக்கிப் போய்க்கொண்டிருந்த மரங்கள், கட்டிடங்கள் எல்லாம், அந்த இளைஞன் தன் முடிவை வெகுவாக நெருங்கிக் கொண்டிருப்பதை அவசர அவசரமாக அறிவித்தன. இப்போது என்ன செய்வது? அந்த ஒருத்தனைக் காப்பாற்றுவதற்காக இந்த நூற்றுக்கணக்கானவர்களை ஆபத்திற்குள்ளாக்குவது முறையா? அல்லது இவர்களைக் காப்பாற்றுவதற்காக இந்த ஒருத்தன் போனால் பரவயில்லையா? குழம்பித் தவித்தார் டிரைவர். இன்னும் ஐந்து செகண்டுதான்... இரண்டாவதுதான் சரி. இந்த இளைஞன் செத்துத் தொலையட்டும்.
ஆனால், அது, தான் செய்யும் கொலையல்லவா? ஒருவர் இன்னொருவர் மீது கடுங்கோபம் கொண்டு தாக்கினால் ஏற்படுவது கொலை; அல்லது தற்காப்புக்காகத் திருப்பித் தாக்கும்போது அதுவும் கொலையாக முடியலாம். ஆனால், இது எதில் சேர்த்தி? எந்த முன் விரோதமும் இல்லாத, தற்காப்புக்கான எந்த முகாந்திரமும் இல்லாமல் செய்யப்படப்போகும் இந்தக் கொலை எதில் சேர்த்தி? ‘விபத்து’ என்று அலட்சியமாகத் தலைப்பிட்டுத் தப்பித்துவிட முடியுமா? இதோ, என்னால் இயக்கப்பட்டுக் கொண்டிருக்கும் இன்ஜின் எந்த வகையிலும், கொஞ்சம்கூட சம்பந்தமே இல்லாத இந்த இளைஞனைக் கொல்லப் போகிறதே, அதுவும் என் கண்ணெதிரிலேயே நிகழப் போகிறதே, இதனை விபத்து என்று சொல்லி மனதை சமாதானப்படுத்திக்கொண்டு விடமுடியுமா?
எனக்குக் கொஞ்சமும் தொடர்பில்லாத இவனைக் கொலை செய்ய எனக்கு என்ன உரிமை இருக்கிறது? இப்போது இவன் கொலைசெய்யப்பட்டானானால் அது பிரம்மஹத்தி தோஷமாகி, தன்னையும், தன் குடும்பத்தையும் துரத்துமா? என் வாரிசுகளின் வாழ்க்கை இதனால் பாதிக்கப்படுமா? அட, நான்தான் இந்தக் ‘கொலை’க்குப் பிறகு நிம்மதியாக உயிர் வாழ முடியுமா? இந்தச் சம்பவமே வாழ்நாள் முழுவதும் என் நெஞ்சை அறுத்துக் கொண்டிருக்குமே! பொல்லாத ஜோதிடமும், சாஸ்திரமும் அவர் நினைவுக்கு வந்து அவரைப் பாடாய்ப்படுத்தின.
சாஸ்திரப்படி, இந்த தோஷம் அவருடைய ஏழு தலைமுறையையும் பாதிக்குமோ? இப்பொது இவன் இறந்தானென்றால் அடுத்தடுத்து என்ன நிகழும்? மறுநாள் செய்தித்தாளில் தகவல் வரும்: ‘‘செல்போன் பேசிக்கொண்டே தண்டவாளத்தில் நடந்து சென்றவர் ரயில் மோதி மரணம்.’’ இது, அவனைப் போலவே செல்பேசிக்கொண்டு இதேபோல அலட்சியமாக, ஆபத்தான முறையில் தண்டவாளத்தைக் கடக்க முயற்சிக்கும் பிறருக்கு ஓர் எச்சரிக்கையாக இருக்கட்டுமே...
இந்த கட்டத்தில், இந்த நெருக்கடியில் வேறொன்றும் செய்ய இயலாது.
கார்டுக்கு வயர்லெஸ் மூலம் தகவல் தெரிவிக்கலாமா? தெரிவித்தும் என்ன பயன்? ‘நம் ரயில் இன்ஜின், ஒரு இளைஞனை மோதப் போகிறது என்று வேண்டுமானால் சொல்லலாம்... ஆனால், அதற்குள் காலம் கடந்துவிடுமே! கடவுளே என்னை மன்னித்து விடு. என் கண்ணெதிரிலேயே, நான் ஓட்டி வரும் ரயில் இந்த இளைஞனை மோதி சாகடிக்கப்போகிறது. அவன் சிதறி பல துண்டுகளாக ஆங்காங்கே வீசியடிக்கப்படப் போகிறான்...
பெரும் துயரத்துடன் கண்களை மூடிக்கொள்ள டிரைவர் முயன்றபோது... அட, இதென்ன, யாரோ ஒருவர் அவனருகே ஓடி வந்து அவனை அப்படியே பிடித்து தண்டவாளத்தை விட்டு வெளியே தள்ளிவிட்டு, தானும் அவனக் கட்டிப் புரண்டபடி அவனோடு தண்டவாளத்தை விட்டு ஒதுங்குகிறாரே! நன்றி கடவுளே! பெருமூச்சுவிட்டார் டிரைவர். ரயில் வேகம் குறையாமல், சந்தோஷ நிம்மதியுடன் அந்த மரண இடத்தை வேகமாகக் கடந்தது.
பிரபுசங்கர்
- mbalasaravananவி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
அருமை வரிகளை வசிக்கும் போதே உண்மையில் நடப்பதை போன்றே ஒரு உணர்வு
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் mbalasaravanan
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1110314mbalasaravanan wrote:அருமை வரிகளை வாசிக்கும் போதே உண்மையில் நடப்பதை போன்றே ஒரு உணர்வு
நன்றி !.................எழுத்துப்பிழைகள் இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள் சரவணன்.................
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
விறுவிறுப்பான கதையோட்டம். அருமை.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|