புதிய பதிவுகள்
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Today at 12:02 pm

» books needed
by Manimegala Today at 10:29 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 8:06 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நான்கு குதிரைகள் பூட்டிய ரதம் - என்ன சொல்கிறது.. Poll_c10நான்கு குதிரைகள் பூட்டிய ரதம் - என்ன சொல்கிறது.. Poll_m10நான்கு குதிரைகள் பூட்டிய ரதம் - என்ன சொல்கிறது.. Poll_c10 
3 Posts - 60%
Manimegala
நான்கு குதிரைகள் பூட்டிய ரதம் - என்ன சொல்கிறது.. Poll_c10நான்கு குதிரைகள் பூட்டிய ரதம் - என்ன சொல்கிறது.. Poll_m10நான்கு குதிரைகள் பூட்டிய ரதம் - என்ன சொல்கிறது.. Poll_c10 
1 Post - 20%
ஜாஹீதாபானு
நான்கு குதிரைகள் பூட்டிய ரதம் - என்ன சொல்கிறது.. Poll_c10நான்கு குதிரைகள் பூட்டிய ரதம் - என்ன சொல்கிறது.. Poll_m10நான்கு குதிரைகள் பூட்டிய ரதம் - என்ன சொல்கிறது.. Poll_c10 
1 Post - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நான்கு குதிரைகள் பூட்டிய ரதம் - என்ன சொல்கிறது.. Poll_c10நான்கு குதிரைகள் பூட்டிய ரதம் - என்ன சொல்கிறது.. Poll_m10நான்கு குதிரைகள் பூட்டிய ரதம் - என்ன சொல்கிறது.. Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
நான்கு குதிரைகள் பூட்டிய ரதம் - என்ன சொல்கிறது.. Poll_c10நான்கு குதிரைகள் பூட்டிய ரதம் - என்ன சொல்கிறது.. Poll_m10நான்கு குதிரைகள் பூட்டிய ரதம் - என்ன சொல்கிறது.. Poll_c10 
86 Posts - 34%
mohamed nizamudeen
நான்கு குதிரைகள் பூட்டிய ரதம் - என்ன சொல்கிறது.. Poll_c10நான்கு குதிரைகள் பூட்டிய ரதம் - என்ன சொல்கிறது.. Poll_m10நான்கு குதிரைகள் பூட்டிய ரதம் - என்ன சொல்கிறது.. Poll_c10 
11 Posts - 4%
prajai
நான்கு குதிரைகள் பூட்டிய ரதம் - என்ன சொல்கிறது.. Poll_c10நான்கு குதிரைகள் பூட்டிய ரதம் - என்ன சொல்கிறது.. Poll_m10நான்கு குதிரைகள் பூட்டிய ரதம் - என்ன சொல்கிறது.. Poll_c10 
9 Posts - 4%
Jenila
நான்கு குதிரைகள் பூட்டிய ரதம் - என்ன சொல்கிறது.. Poll_c10நான்கு குதிரைகள் பூட்டிய ரதம் - என்ன சொல்கிறது.. Poll_m10நான்கு குதிரைகள் பூட்டிய ரதம் - என்ன சொல்கிறது.. Poll_c10 
4 Posts - 2%
Rutu
நான்கு குதிரைகள் பூட்டிய ரதம் - என்ன சொல்கிறது.. Poll_c10நான்கு குதிரைகள் பூட்டிய ரதம் - என்ன சொல்கிறது.. Poll_m10நான்கு குதிரைகள் பூட்டிய ரதம் - என்ன சொல்கிறது.. Poll_c10 
3 Posts - 1%
Guna.D
நான்கு குதிரைகள் பூட்டிய ரதம் - என்ன சொல்கிறது.. Poll_c10நான்கு குதிரைகள் பூட்டிய ரதம் - என்ன சொல்கிறது.. Poll_m10நான்கு குதிரைகள் பூட்டிய ரதம் - என்ன சொல்கிறது.. Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
நான்கு குதிரைகள் பூட்டிய ரதம் - என்ன சொல்கிறது.. Poll_c10நான்கு குதிரைகள் பூட்டிய ரதம் - என்ன சொல்கிறது.. Poll_m10நான்கு குதிரைகள் பூட்டிய ரதம் - என்ன சொல்கிறது.. Poll_c10 
2 Posts - 1%
Baarushree
நான்கு குதிரைகள் பூட்டிய ரதம் - என்ன சொல்கிறது.. Poll_c10நான்கு குதிரைகள் பூட்டிய ரதம் - என்ன சொல்கிறது.. Poll_m10நான்கு குதிரைகள் பூட்டிய ரதம் - என்ன சொல்கிறது.. Poll_c10 
2 Posts - 1%
Barushree
நான்கு குதிரைகள் பூட்டிய ரதம் - என்ன சொல்கிறது.. Poll_c10நான்கு குதிரைகள் பூட்டிய ரதம் - என்ன சொல்கிறது.. Poll_m10நான்கு குதிரைகள் பூட்டிய ரதம் - என்ன சொல்கிறது.. Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நான்கு குதிரைகள் பூட்டிய ரதம் - என்ன சொல்கிறது..


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82073
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Dec 01, 2014 8:37 am

நான்கு குதிரைகள் பூட்டிய ரதம் - என்ன சொல்கிறது.. 6LmAr9QGQYWjNuFBIwLX+arjuna_krishna_chariot-front
-
நான்கு குதிரைகள் பூட்டிய ரதம் - என்ன சொல்கிறது.. OtAKMl0eTEOhovxzI9QT+benhur2
-
இதிகாச கதைகளில் வரும் ரதத்தில் நான்கு
குதிரைகள் பூட்டி ஓட்டி வருகின்றனர்
-
இதில் ஏதும் அருமையான கருத்து இருக்கிறதா..?


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Dec 09, 2014 7:12 pm

ஒரு வேளை இப்பிடி இருக்குமோ ?

கிருஷ்ணரின் , நான்கு குதிரைகள் நான்கு வேதங்களை (ரிக் ,யஜுர் , சாம , அதர்வ வேதங்கள் )குறிக்கலாம் .

அடுத்தது Spartacus ஆ ? எனக்கு தெரியவில்லை . இருப்பினும் யாராக இருந்தாலும் , அவர் கிறிஸ்த்துவ மதத்தினர் என்று நினைக்கிறேன். நமக்கு நான்கு வேதங்கள் போல் , அவர்களுக்கு சுவிசேஷங்கள் Gospel என்று கூறுவர். நான்கு முக்கியமான சுவிசேஷங்கள். மேத்தேயு ( Mathew ), Luke , Mark & John .(கிறித்துவ உறவுகள் , தவறாக இருந்தால், சுட்டிக் காட்டினால் வரவேற்ப்பேன் ) குதிரைகள் அதை காண்பிப்பதாக இருக்கலாம் .

உங்கள் திரியை இன்றுதான் பார்க்கும் சந்தர்பம் கிடைத்தது , ayyasami ram .
உங்களிடம் இருந்து வேறு விளக்கங்கள் எதிர்பார்க்கலாமா ?

ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Dec 09, 2014 8:01 pm

கேள்வியும் அருமை பதிலும் அருமை............... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82073
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Dec 09, 2014 9:06 pm

நான் படித்ததை பகிர்கிறேன்:
-
எழுதியவர் கட்டுரை மன்னன் : லண்டன் சுவாமிநாதன்
ஆரய்ச்சிக் கட்டுரை எண்.1302; தேதி 21 செப்டம்பர் 2014

-
கீதையை உபதேசித்த கண்ண பிரானின் ரதத்தில் அர்ஜுனன் நிற்க, அந்த ரதத்தை நான்கு குதிரைகள் இழுப்பதைப் படத்தில் காணலாம். ஏன் நான்கு குதிரைகள் என்று ஆராய்ந்து பார்த்ததில் உலகம் முழுதும் இப்படி நான்கு குதிரைகள் இருபதைக் காண முடிந்தது. இந்த வழக்கத்தை உலகிற்குக் கற்பித்தவர்களும் நம்மவரே என்ற முடிவுக்கு வர இயலும்.
-
உலகின் மிகப் பழைய நூல் ரிக் வேதம். பால கங்கதர திலகர், ஜெர்மன் அறிஞர் ஜாகோபி போன்றோர் ரிக் வேதத்தில் உள்ள வான சாத்திரக் குறிப்புகளைக் கொண்டு அதன் காலம் கி.மு.6000 என்றனர். மாக்ஸ் முல்லர் என்ற ஜெர்மன் அறிஞர் கி.மு. 1200 க்குப் பின்னர் யாரும் இதைக் கொண்டு செல்லமுடியாது. அதற்கு முன்னர் கொண்டு செல்லலாம் என்று கூறிவிட்டார். இப்போது அமெரிக்க பலகலைக் கழக அறிஞர்கள் இதை கி.மு.1700 என்று கணக்குப் போட்டுள்ளனர். இப்பேற்பட்ட அரிய பெரிய பழைய நூலில்தான் குதிரை பற்றி அதிகமான விஷயங்கள் உள்ளன. இது இலக்கியத்தில் கிடைத்த தடயங்கள்.
-
இதைவிட முக்கியமான தொல்பொருட்துறைத் தடயங்களும் கிடைத்து இருக்கின்றன. துருக்கி — சிரியா பகுதியில் மிட்டனியன் (மித்ரனீய) என்ற வம்சத்தினர் ஆட்சி செய்தனர். இவர்களுடைய பெயர்கள் தசரதன், பிரதர்தனன், பரவர்த்தனன் என்பதால் ஆராய்ச்சியாளர்களும் இவர்களை வேதகால இந்துக்கள் என்பதை ஒப்புக்கொள்வர். துருக்கியில் பொகஸ்கோய் என்னும் இடத்தில் களிமண் பலகைக் கல்வெட்டில் மித்ரன், வருணன், இந்திரன் முதலிய வேத கால தெய்வங்கள் சாட்சியாக ஒரு உடன்படிக்கை செய்துகொண்டதும் தெரிந்தது. அவர்கள் காலத்தில் இருந்த கிக்குலி என்பான குதிரைப் பயிற்சி நூல் ஒன்றை எழுதியதும் கிடைத்துவிட்டது. அதில் சம்ஸ்கிருத எண்கள், சம்ஸ்கிருத மொழிக்கு கி.மு.1380க்கு முந்திய தொல்பொருத் துறைச்சான்றும் கிடைத்துவிட்டது. உலகில் இப்போது புழங்கும் மொழிகளில் இதுதான் மிகப் பழைய சான்று. இந்தியாவில் உள்ள எவரும் சம்ஸ்கிருதக் கலப்பு இல்லாமல் பேசவே முடியாது என்பதும் உலகறிந்த உண்மை.
-
நான்கு குதிரைகள் பூட்டிய ரதம் - என்ன சொல்கிறது.. RtMJo5rRqKKAmMvaSbp1+horse
-
persiansungod
Persian Sun Chariot

தமிழை சம்ஸ்கிருதக் கலப்பிலாமல் பேசமுடியாது என்பதும் 2500 ஆண்டுகளாக ஒப்புக் கொள்ளப்பட்ட உண்மை. சம்ஸ்கிருதச் சொற்களை நீக்கினால் தொல்காப்பியம் திருக்குறள், 2400 சங்கத் தமிழ் பாடல்கள் அனைத்தும் கறையான் அரித்த காகிதம் போல ஓட்டை விழுந்ததாகும் அல்லது ‘’வைரஸ் பாதித்த சாப்ட்வேர்’’ ஆகிவிடும்.

இத்தகைய சம்ஸ்கிருதச் சொற்கள் எகிப்து நாட்டிற்குள்ளும் கி.மு.1480ல் புகுந்துவிட்டதை ஆன் ஹைலண்ட் என்ற குதிரை ஆராய்ச்சியாளர் (Ann Hyland has given full details about Kikkuli’s manual in her book “The Horse in the ancient World “;page 22) கண்டுபிடித்து ஒரு ஆங்கில நூல் எழுதினார். அதில் மர்யன்னு ‘maryannu’ (Vedic Sanskrit word) என்ற சம்ஸ்கிருதச் சொல் எகிப்திய மொழி வழக்கப்படி “ம் –அர்- ய- ன” என்று கி.மு 1470ல் ‘’பபைரஸ் அன்ஸ்டாசி 1’’-ல் எழுதப்பட்டிருக்கிறது என்கிறார். கிக்குலி இதை மர்யான்னு என்று எழுதி இருக்கிறார். சம்ஸ்கிருதச் சொல் வேறு ஒரு மொழியில் புகும்போது இப்படி மாறுவது இயற்கை என்பதை தமிழர்கள் நன்கு அறிவர். தற்சமம், தற்பவம் என்ற இலக்கண விதிகளில் காண்க.

ஆன் ஹைலண்ட் என்ற இந்தப் பெண்மணியின் குதிரை ஆராய்ச்சி பல புதிய உண்மைகளைக் கட்டுகிறது. சம்ஸ்கிருதச் சொற்களைக் கொண்ட குதிரைப் பயிற்சி நூல் எகிப்து நாட்டில் இற்றைக்கு 3500 ஆண்டுகளுக்கு முன்னரே ஒலித்துக் கொண்டிருக்கிறது. அதே நேரத்தில் கங்கைச் சம்வெளியிலும் சம்ஸ்கிருத முழக்கம் கேட்டுக் கொண்டிருக்கிறது. உலகத்தில் அக்காலத்தில் இந்தப் பரந்த அளவுக்கு வேறு எந்த மொழியும் ஒலிக்கவில்லை என்பதை தொல்பொருத் துறைத் தடயங்களும் இலக்கியக் குறிப்புகளும் தெள்ளிதின் எடுத்துக் காட்டுகின்றன. ஆகவே உலகின் முதல் குதிரை வீரர்கள் இந்துக்களே!!
-
நான்கு குதிரைகள் பூட்டிய ரதம் - என்ன சொல்கிறது.. FJyGWtOTEC4QIwaMGZ4A+horse1
-

quardiga big
Most Expensive Greek Coin in the world

அது சரி, புத்திசாலியான எவனும் சம பாரத்துக்காக (பாலன்ஸ்) நான்கு குதிரைகள் பூட்டலாமே என்று நமக்கும் தோன்றும். ஆனால் இந்த நான்கு குதிரைகளுக்கும் பெயர் சூட்டி வர்ணம் பூசியதும் நாம்தான. உலகின் மிகப் புகழ்பெற்ற நிகண்டு –சம்ஸ்கிருத நிகண்டான– அமரகோஷம் ஆகும். இதைப் பார்த்தே ஆங்கிலத்தில் ‘’ரோஜெட் திசாரஸ்’’ தயாரிக்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு ஏற்பட்டதாம். இதில் ஒரு பொருட் குறித்த பல சொற்களை அழகாக அடுக்கித் தருகிறார்.

சம்ஸ்கிருதம் கற்கச் செல்லும் குடுமி வைத்த பார்ப்பனச் சிறுவர்கள் முதலில் மனப்பாடம் செய்வது இதைத்தான். கேரளத்தில் எல்லா ஜாதியினரும் இதைக் கற்பர். அதில் இந்த நான்கு குதிரைகளின் பெயர்கள் கிருஷ்ண பரமாத்மாவின் குதிரைகள் என்று சொல்லப்பட்டுள்ளன. பாகவத புராணம், பத்ம புராணம் ஆகியனவும் இவற்றைத் திருப்பிச் சொல்லும். பத்ம புராணம். குதிரைகளின் நிறம் என்ன என்பதையும் பகரும். இவைகளின் காலம் குப்தர் காலம், அதாவது கி.பி. நாலாம் நூற்றாண்டு.

சில பகவத் கீதை உபதேச (கீதோபதேச) படங்களில் ஐந்து குதிரைகள் பூட்டப்பட்ட ரதத்தைக் கண்பீர்கள். இது குதிரை மூலமாக ஆன்ம உண்மையை போதிக்கும் உபநிஷத ஸ்லோகத்தை அடிப்படையாகக் கொண்டது. மனிதனின் ஐம்புலன்களும் ஐந்து குதிரைகள் என்றும் மனிதனின் தேகமே ரதம் என்றும் புத்தி அல்லது ஆன்மா அதைச் செலுத்தும் சாரதி என்றும் அந்த ஸ்லோகம் வருணிக்கிறது. ஆனால் கீதோபதேசக் குதிரைகளுடன் தொடர்புடையன அல்ல.

நான்கு குதிரைகள் பெயர் என்ன?
சைப்ய, சுக்ரீவ, மேக புஷ்ப, பலஹாக

நான்கு குதிரைகள் நிறம் என்ன?
சைப்ய = கிளிப் பச்சை
சுக்ரீவ = தங்க நிறம்
மேக புஷ்ப= மேக வர்ணம்
பலஹாக = தூய வெண்மை

தமிழன் ஓட்டிய நான்கு குதிரை தேர்
பெரும்பாணாற்றுபபடையில் புலவர் உருத்திரங்கண்ணனார் ( திருவாளர் ருத்ராக்ஷன் ) காஞ்சி மாநகரை ஆண்ட தொண்டைமான் இளந்திரையன் பற்றிப் பாடுகிறார். அங்கும் நான்கு குதிரைகள் பூட்டிய ரதம் பற்றியே பாடுகிறார் (வரிகள் 487-489)
-
நான்கு குதிரைகள் பூட்டிய ரதம் - என்ன சொல்கிறது.. WJ24uW3lTKmuigp3N7qZ+horse2
-

nikeRing400 bce
Greek Gold ring with Nike in the British Museum

இந்த நான்கு குதிரைகள் படம் கிரேக்க நாட்டில் பானைகள், மோதிரங்கள், சிலைகளில் காணப்படும். இவை 2500 ஆண்டுகள் பழமையானவை. லண்டன் மாநகர பிரிட்டிஷ் மியூசியத்தில் உள்ள ஒரு கிரேக்க தங்க மோதிரத்தில் ‘நைகி’ என்னும் கிரேக்க வெற்றி தேவதை நான்கு குதிரைகள் ரதத்தை ஓட்டுவதைக் காணலாம். கிரேக்க நாட்டில் 2100 ஆண்டுகளுக்கு முன் வெளியிட்ட நான்கு குதிரைப் படம் பொறித்த ஒரு வெள்ளிக்காசு இரண்டு மில்லியன் பவுண்டுகளுக்கு ஏலம் போனது.

நான்கு குதிரை ரதங்களை ரோமானியர்களும் பயன்படுத்தி குவாட்ரிகா எனப் பெயர் சூட்டினர். இப்பொழுது உலகின் இகப் புகழ் பெற்ற கட்டிடங்களின் மீது நான்கு குதிரை ரத சிற்பங்களைக் காணலாம். அவை எல்லாம் 200 ஆண்டுகளாகத் தோன்றியவை. கலியுகம் கி.மு. 3100ல் தோன்றியதை பார்த்திவசேகரபுரம் கோ கருநந்தடக்கன் கல்வெட்டும் கூட ஒப்புக்கொள்கிறது. அப்படியானால் எஜமானன் அர்ஜுனனுக்கு கிருஷ்ணன் டிரைவராக இருந்து ஓட்டிய தேரின் காலம் இற்றைக்கு 5100 ஆண்டுகளுக்கும் முந்தியது அன்றோ! எகிப்துக்கும் மேற்காசிய நாடுகளுக்கும் குதிரை பயிற்சி கொடுத்தவர் நாம் அன்றோ!

அது சரி, குதிரை என்பது இந்திய விலங்கு அல்லவே. வேத கால இந்துக்கள் ‘’ஸ்டெப்பி’’ புல்வெளியில் குதிரைகளைப் பிடித்து வந்து சைபீரீயா பனிப் பிரதேசத்தில் இருந்து இந்தியாவில் நுழைந்தனர் என்பதற்கு இதுவும் சான்றாக அமையாதோ? என்று சில ஆரிய திராவிட இன வெறிக் கொள்கையினர் சந்தோசப்படலாம். அது தவறு!

இன்று ‘கால்கேட் டூத் பேஸ்ட்’ பயன்படுத்தும் “டமிழ”னைப் பார்த்து, ஆஹா, நீ வெள்ளைக்காரன் மகன் தானே! பார்! கால்கேட் டூத் பேஸ்ட் உன் கையில் இருக்கிறது, இது என்ன தமிழ் பண்பாடா?’ என்று நகைப்பதை ஒக்கும் அது. குதிரை, இரும்பு (அஸ்வ, அயஸ்) என்னும் எனது ஆய்வுக்கட்டுரைகளில் மேல் விவரம் காண்க. குதிரைக்கும் இரும்புக்கும் காலம் கற்பித்த்வன் வெள்ளைக் காரன். அவனே புதிய புதிய தடயங்களைக் கண்டு, பழைய கொள்கைகளை மாற்றி எழுதி வருகிறான்.
-
நான்கு குதிரைகள் பூட்டிய ரதம் - என்ன சொல்கிறது.. OaOWEyl3SBCafdSfqAeP+horse3
-
stamps-009h
Chinese bronze from a 2300 old mausoleum

அவன் கூற்றுப்படி தமிழர்களும் மத்தியதரைக் கடல் பகுதியில் இருந்து நுழைந்தவர்கள்! மனித இனமே ஆப்பிரிக்காவில் இருந்து சென்றவன்!! இதை எல்லாம் உண்மை என்று ஒப்புக் கொண்டாலும் குதிரை படம் வரலாற்றுக்கு முந்தைய குகைகளின் ஓவியங்களில் இருக்கிறது இவை அனைத்தும் ஐந்து ஆறு லட்சம் ஆண்டுகள் பழமையுடையவை.

மேலும் குதிரையும் கழுதையும் சொந்தக்காரர்கள்! கழுதை பிடித்தவனுக்கு குதிரை பிடிக்கத் தெரியாதா? சுமேரில் கூட கழுதை உண்டு குதிரை இல்லை. ஆகையால் அரைவேக்காட்டு ஆராய்ச்சியாளர்களின் கட்டுரைகளைப் படித்துவிட்டுக் குழம்பிப் போகாமல் “எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு” என்னும் வள்ளுவனின் வாய்மொழிச் சொல் வழியில் செல்க!
--

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Dec 09, 2014 9:57 pm

குதிரைக்கும் இரும்புக்கும் காலம் கற்பித்த்வன் வெள்ளைக் காரன். அவனே புதிய புதிய தடயங்களைக் கண்டு, பழைய கொள்கைகளை மாற்றி எழுதி வருகிறான்.

உண்மை! அறிந்து கொள்ளவேண்டிய, இதுவரை அறியாமல் இருந்த அரிய விஷயங்களை, விளக்கமாய் அறிய தந்ததற்கு நன்றி ஐயா. அருமையான பதிவு.



நான்கு குதிரைகள் பூட்டிய ரதம் - என்ன சொல்கிறது.. EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonநான்கு குதிரைகள் பூட்டிய ரதம் - என்ன சொல்கிறது.. L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312நான்கு குதிரைகள் பூட்டிய ரதம் - என்ன சொல்கிறது.. EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக