புதிய பதிவுகள்
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 14:27

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 14:27

» சினி மசாலா
by ayyasamy ram Today at 14:26

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 13:36

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 11:30

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:32

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:09

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:01

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:56

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 2:51

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:46

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:41

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 2:35

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:25

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 2:16

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:05

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Today at 0:32

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 19:37

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 19:27

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 15:25

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:47

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 8:51

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 8:50

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 8:45

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 8:43

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 8:41

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 8:39

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 8:35

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat 18 May 2024 - 10:31

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat 18 May 2024 - 10:25

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat 18 May 2024 - 10:16

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat 18 May 2024 - 1:30

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri 17 May 2024 - 19:52

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri 17 May 2024 - 12:10

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri 17 May 2024 - 12:05

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri 17 May 2024 - 12:02

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu 16 May 2024 - 22:32

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu 16 May 2024 - 20:20

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu 16 May 2024 - 19:44

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu 16 May 2024 - 19:42

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu 16 May 2024 - 19:29

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu 16 May 2024 - 15:15

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu 16 May 2024 - 15:09

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu 16 May 2024 - 10:04

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu 16 May 2024 - 9:14

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu 16 May 2024 - 9:11

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu 16 May 2024 - 9:08

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu 16 May 2024 - 9:02

» அரசியல் !!!
by jairam Wed 15 May 2024 - 23:02

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed 15 May 2024 - 10:09

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மழையில் நனைந்து பாருங்கள்... Poll_c10மழையில் நனைந்து பாருங்கள்... Poll_m10மழையில் நனைந்து பாருங்கள்... Poll_c10 
15 Posts - 88%
T.N.Balasubramanian
மழையில் நனைந்து பாருங்கள்... Poll_c10மழையில் நனைந்து பாருங்கள்... Poll_m10மழையில் நனைந்து பாருங்கள்... Poll_c10 
1 Post - 6%
Guna.D
மழையில் நனைந்து பாருங்கள்... Poll_c10மழையில் நனைந்து பாருங்கள்... Poll_m10மழையில் நனைந்து பாருங்கள்... Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மழையில் நனைந்து பாருங்கள்... Poll_c10மழையில் நனைந்து பாருங்கள்... Poll_m10மழையில் நனைந்து பாருங்கள்... Poll_c10 
217 Posts - 52%
ayyasamy ram
மழையில் நனைந்து பாருங்கள்... Poll_c10மழையில் நனைந்து பாருங்கள்... Poll_m10மழையில் நனைந்து பாருங்கள்... Poll_c10 
143 Posts - 34%
mohamed nizamudeen
மழையில் நனைந்து பாருங்கள்... Poll_c10மழையில் நனைந்து பாருங்கள்... Poll_m10மழையில் நனைந்து பாருங்கள்... Poll_c10 
17 Posts - 4%
prajai
மழையில் நனைந்து பாருங்கள்... Poll_c10மழையில் நனைந்து பாருங்கள்... Poll_m10மழையில் நனைந்து பாருங்கள்... Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
மழையில் நனைந்து பாருங்கள்... Poll_c10மழையில் நனைந்து பாருங்கள்... Poll_m10மழையில் நனைந்து பாருங்கள்... Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
மழையில் நனைந்து பாருங்கள்... Poll_c10மழையில் நனைந்து பாருங்கள்... Poll_m10மழையில் நனைந்து பாருங்கள்... Poll_c10 
9 Posts - 2%
jairam
மழையில் நனைந்து பாருங்கள்... Poll_c10மழையில் நனைந்து பாருங்கள்... Poll_m10மழையில் நனைந்து பாருங்கள்... Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மழையில் நனைந்து பாருங்கள்... Poll_c10மழையில் நனைந்து பாருங்கள்... Poll_m10மழையில் நனைந்து பாருங்கள்... Poll_c10 
4 Posts - 1%
Jenila
மழையில் நனைந்து பாருங்கள்... Poll_c10மழையில் நனைந்து பாருங்கள்... Poll_m10மழையில் நனைந்து பாருங்கள்... Poll_c10 
4 Posts - 1%
Rutu
மழையில் நனைந்து பாருங்கள்... Poll_c10மழையில் நனைந்து பாருங்கள்... Poll_m10மழையில் நனைந்து பாருங்கள்... Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மழையில் நனைந்து பாருங்கள்...


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu 16 Oct 2014 - 21:21

மழையில் நனைந்து பாருங்கள்... TOPYwwjYTJS8xJmAdjJy+gallerye_161352450_1093525

கோடைக்காலத்தில், "மழை வந்தா நல்லயிருக்குமே!” மழைக்காலத்தில், "வெயில் அடிச்சா தேவலயே!” என்று பிதற்றும் மனங்கள் ஏராளம். ஆனால் மழையில் சொட்டச் சொட்ட நனைந்து, அந்த அனுபவத்தில் குதூகலித்ததுண்டா நீங்கள்? இல்லையென்றால், இனிமேலும் தாமதிக்காமல் சத்குருவின் மழை அனுபவத்தைக் கேட்டுவிட்டு நனையக் காத்திருங்கள் மழைக்காக!

திறந்த வெளியில் நடந்து செல்கிறீர்கள். திடீரென்று மழை வருகிறது. என்ன செய்வீர்கள்? அருகிலிருக்கும் ஏதாவது ஒரு கூரைக்கு அடியில் ஓடிப்போய் ஒளிந்து கொள்வீர்களா? ஓ! சர்க்கரையைப் போல், உப்புக் கட்டியைப் போல் மழையில் கரைந்து விடுவோம் என்று பயமா உங்களுக்கு? மழையைக் கண்டதும் ஓடுவதேனோ?

எனக்கு மூன்று, நான்கு வயது இருக்கும். எங்கள் வீடு மிகப்பெரிய திறந்த வெளியில் அமைந்திருந்தது. மைசூரில் மழைக்காலம் வந்தால், வானம் பொத்துக் கொண்டு ஊத்தும். மழையைவிட்டு விலக மாட்டேன். ஆனால் பெரியவர்களோ, நெருப்பில் கால் வைக்க அஞ்சுபவர்களைப் போல் மழையைக் கண்டால் எட்ட ஓடி விடுவார்கள். "உள்ளே வா ஜலதோஷம் பிடிக்கும்; காய்ச்சல் வரும்” என்று என்னென்னவோ சொல்லி மிரட்டுவார்கள், நான் கொஞ்சம் கூட அசைந்து கொடுக்க மாட்டேன்.

என்னைக் கவர்ந்து செல்ல வருபவர்களிடம் சிக்க மாட்டேன். தினமும் திமிறத் திமிற குடம் குடமாகத் தண்ணீரை ஊற்றி குழந்தைகளைக் குளிப்பாட்டுபவர்கள் கூட, அதுவாகப் பொழியும்போது எதற்காகப் பதறி நனையவிடாமல் தடுக்கிறார்கள் என்னும் கேள்வி என் உள்ளத்தில் அப்போதே உதிக்கும்.

கோடையில் வரும் முதல் மழைத்துளி என் மீது மோதும்போது, எனக்குள் அளவிலா ஆனந்தம் பொங்கி ஆர்ப்பரித்திருக்கிறது. பிற்பாடு தோப்பு, விவசாயம் என்று என்னை ஈடுபடுத்திக் கொண்டபோது, தனியாளாக இருந்தேன். புல் தரையில் படுத்து நனைவேன். மழை என் மீது சுதந்திரமாகப் பொழியும். மழைநீர் என்னைத் தழுவி ஓடும். என்னைச் சுற்றி தேங்கும். இயற்கையுடன் எனக்குத் தொடர்பு கொடுக்கும்.

அனுபவங்களைத் தேடும் இளைஞனாக என் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்ய ஆரம்பித்த வயதில்கூட, நான் மழைக்காக ஒதுங்கியதில்லை. மழையில் வாகனத்தை சந்தோஷமாகச் செலுத்துவேன். முகத்தில் மோதும் மழை, பார்வையைக் குறைக்கும். ஆனால், எப்போதும் எதைச் செய்தாலும் முழு ஈடுபாட்டுடன், முழுமையான கவனத்துடன் செய்து வந்ததால், மழை எனக்கு சவாலாக இருந்ததில்லை.

மழையில் நான்கு ஐந்து மணி நேரங்கள் கூடத் தொடர்ந்து பைக்கை செலுத்தி இருக்கிறேன். "சூரியன் வெளிச்சம் பொழியும்போது நான் தொடர்ந்து பயணம் செய்வதில்லையா? மழையைக் கண்டு மட்டும் ஏன் ஓட வேண்டும்?” என்பேன்.

மழை பொய்த்துப் போய் தமிழ்நாடே வறண்டிருந்த நேரம் அது!

ஈஷா அன்பர் ஒருவரின் மகள், தனக்குப் பள்ளியில் சொல்லிக் கொடுத்தப் பாடலை என்னிடம் ஆசையுடன் பாடிக் காட்டினாள். "ரெயின் ரெயின் கோ அவே” அதிர்ந்தேன். மழைக்காக தமிழகமே ஏங்கிக் காத்திருக்கும்போது, அதை வராதே, போ போ! என்று விரட்டும் பாடல் அது.

ஆங்கிலேயரின் குளிர் தேசத்தில் மழை என்பது அவஸ்தையான ஒன்று. அதற்காக, அவர்கள் சொன்னதை இங்கே அப்படியே எடுத்தாள்வதா? கலப்படமில்லாத குழந்தைகளின் மனதில் அந்த எண்ணம் தங்கிவிடாதா? மழையைக் கண்டாலே, அதை போகச் சொல்லி அவர்கள் கோரிக்கை வைக்க மாட்டார்களா?

ஈஷா மையம் நடத்தும் பள்ளிக்கூடத்தில் பயிலும் குழந்தைகளை, மழையிலிருந்து பதுங்கச் சொல்வதில்லை. மழையை மழையாக அவர்கள் அனுபவித்து உணரக்கூடிய வாய்ப்பைக் கெடுப்பதில்லை. குடைகள் இன்றி அவர்களை ஒரு நாளாவது மழையில் நடத்திச் செல்லுமாறு சொல்லி இருக்கிறேன்.

கோடை வந்தால், நிலம் காய்ந்து வறண்டு இருக்கும். மழைத்துளிகள் நனைத்ததும், எல்லாம் மாறிவிடும். புல்லும், செடிகளுமாக பூமி சடசடவென்று பசுமையாகிவிடும். எங்கேயிருந்து வந்தது இந்தப் பசுமை? பூமிக்குள் விதைகள் மழைக்காகப் பொறுமையாகக் காத்திருந்தன. வருடக் கணக்கில் மழை பொய்த்த பூமியில் கூட இந்த விதைகள் பொறுமையை இழக்கவில்லை. நம்பிக்கையை இழக்கவில்லை. அதேபோல்தான் உங்களுக்குள் விதைக்கப்பட்டிருக்கும் விதைகளும் பொறுமையாகக் காத்திருக்கின்றன.

சரியான சூழல் கிடைத்ததும், சடாரென்று மலர்கின்றன. சிலருக்கு சில ஜென்மங்களே காத்திருக்க நேரிடலாம். நீங்கள் ஏன் அந்தப் பட்டியலில் இருக்கிறீர்கள்? உங்களுக்கு அது இப்போதே நிகழ வேண்டும் என்பதே என் விருப்பம். உங்களுக்குள் அதற்கான சூழலை இப்போதே உருவாக்கிக் கொள்ளுங்கள்!

ஒரு கட்டத்தில் உன்னத உணர்வுகள் என்னை ஆட்கொண்டு என் வாழ்க்கை புது அர்த்தம் பெற்ற பிறகு, மழை எனக்கு மிக மிக அற்புதமானதோர் அனுபவத்தைத் தந்திருக்கிறது. இப்போதும் என் வீட்டில் திறந்தவெளி முற்றம் ஒன்று இருக்கிறது. மழை வந்தால், ஆனந்தமாக அங்கே நனைந்து கொண்டு கிடப்பேன்.

மழை வேறு, நீங்கள் வேறு அல்ல. மழை வருகையில், நீங்களே உங்கள் மீது பொழிவதுபோல் உணருங்கள். மழை என்பது உங்களுக்கு இயற்கை வழங்கும் மாபெரும் வாய்ப்பு. அடுத்த மழையில் நனைந்து பாருங்கள்!

சத்குரு - தினமலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Fri 17 Oct 2014 - 0:35

நல்ல பகிர்வு அம்மா... எனக்கும் மழையில் நெடுநேரம் பைக்கில் செல்ல பிடிக்கும்.. ஈரோட்டில் இருந்து முனியப்பன் கோவில் வரை (சுமார் இருபது கிலோ மீட்டர்) மழையில் நனைந்தே வந்திருக்கிறேன்..

மேலும், நம்ம ஊர் பக்கமெல்லாம் மழை வர்றதே பெருசு (அயோக்கிய பசங்க அதிகம் ஆயிட்டாங்களோ, நான் ஜெயில்ல உள்ளவங்கள சொல்லல)..

அப்படி வரும்போது அதை வரவேற்றுதான் பார்ப்போமே நம்ம சத்குரு சொல்வதைபோல. புன்னகை புன்னகை

M.M.SENTHIL
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் M.M.SENTHIL



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri 17 Oct 2014 - 1:09

எனக்கும் மழை இல் நனைவது ரொம்ப பிடிக்கும் புன்னகை நிறைய முறை மொட்டை மாடிக்கு ஓடி இருக்கேன் ............. .இப்போ பால்கனிக்கு போய்விடுவேன்..............மழையை வேடிக்கை பார்க்கவும் ரொம்ப பிடிக்கும் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri 17 Oct 2014 - 1:31

கிரிஷ்ணாம்மா தலைப்பை பார்த்தவுடன் டவுட்டு - கிருஷ்ணா டாக்டருக்கு படிச்சிருப்பாரோன்னு புன்னகை




M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Fri 17 Oct 2014 - 15:51

மழையில் நனைவது அலாதியான ஒன்று ...
வெளியில் அவ்வளவாக நனைந்தது கிடையாது...
ஆனால் வீட்டில் நிறைய முறை பால்கனியில் நின்று நனைத்திருக்கிரேன்.

இதெல்லாம் ஈஷா வில் பயிற்சி பெற்ற பிறகு நடந்தவை...



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

மழையில் நனைந்து பாருங்கள்... W5td1pX3QFi1kBRhH0I3+Affection
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri 17 Oct 2014 - 16:15

எனக்கும் மழையில் நனையப் பிடிக்கும்...

வயதாக வயதாக அதுவும் பிடிக்காம போச்சு. தெருவில் போகும்போது பெரும் மழையாக இருந்தால் நனையமாட்டேன். சாதாரண மழை என்றால் நனைந்து கொண்டே வீட்டிற்குச் சென்று விடுவேன்.



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34977
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri 17 Oct 2014 - 16:24

செம மழை இப்போ மேற்கு மாம்பலத்தில் .
வெளியே சென்று நன்றாக ரசித்து நனைந்து வந்தாச்சு
sit out இல் உட்கார்ந்து வேடிக்கை பார்ப்பது பிடிக்கும் .
ஒரு பக்கம் மழை
மறு பக்கம் சுடசுட தூள் பக்கோடா .
உட்கார்ந்து அனுபவிக்கிறேன் மழையும் /பக்கோடாவையும்.


மழையில் நனைந்து பாருங்கள்... V5pwVNbwRR293DGjW8Vg+images

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri 17 Oct 2014 - 16:26

T.N.Balasubramanian wrote:செம மழை இப்போ மேற்கு மாம்பலத்தில் .
வெளியே சென்று நன்றாக ரசித்து நனைந்து வந்தாச்சு
sit out இல் உட்கார்ந்து வேடிக்கை பார்ப்பது பிடிக்கும் .
ஒரு பக்கம் மழை
மறு பக்கம் சுடசுட தூள் பக்கோடா .
உட்கார்ந்து அனுபவிக்கிறேன் மழையும் /பக்கோடாவையும்.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1096947

மதியம் சாப்பிடலையா ? பக்கோடா சாப்பிடுறிங்க



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82134
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri 17 Oct 2014 - 16:32

மழையை ரசிக்க ஒரு நகைச்சுவை
-
தாயும் மகனும் டி.வி. பார்த்துக் கொண்டிருந்தனர்.
மகன் கேட்டான்:
-
ஒயிட் கலர் சாரி கட்டியிருக்கிற ஆன்டி மழையில்
நனையற சீன் வரும்போது சொல்லுடான்னு அப்பா
சொன்னாரே, ஏன்மா..?


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri 17 Oct 2014 - 16:40

T.N.Balasubramanian wrote:செம மழை இப்போ மேற்கு மாம்பலத்தில் .
வெளியே சென்று நன்றாக ரசித்து நனைந்து வந்தாச்சு
sit out இல் உட்கார்ந்து வேடிக்கை பார்ப்பது பிடிக்கும் .
ஒரு பக்கம் மழை
மறு பக்கம் சுடசுட தூள் பக்கோடா .
உட்கார்ந்து அனுபவிக்கிறேன் மழையும் /பக்கோடாவையும்.


மழையில் நனைந்து பாருங்கள்... V5pwVNbwRR293DGjW8Vg+images

ரமணியன்

இந்த அனுபவமே சூப்பர் தான் ஐயா ! என்ஜாய் !! அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக