புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Yesterday at 11:21 pm
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Yesterday at 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:53 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Yesterday at 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Yesterday at 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Yesterday at 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Yesterday at 10:00 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:02 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:26 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:11 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:55 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:46 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:35 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Sun May 19, 2024 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:05 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
by Shivanya Yesterday at 11:21 pm
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Yesterday at 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:53 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Yesterday at 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Yesterday at 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Yesterday at 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Yesterday at 10:00 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:02 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:26 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:11 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:55 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:46 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:35 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Sun May 19, 2024 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:05 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
Guna.D | ||||
Shivanya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
Jenila | ||||
jairam | ||||
Guna.D | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஜெயலலிதா வழக்கு தோல்விக்கு யார் காரணம்?- அரசு வழக்கறிஞர் பவானி சிங் சிறப்பு பேட்டி!!!
Page 1 of 1 •
- Powenrajசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் அரசு வழக்கறிஞராக பவானி சிங் ஆஜரான நாளில் இருந்து இன்று வரை ஆட்சேப குரல்கள் ஒலித்துக்கொண்டே இருக்கின்றன. அவர் மீதான விமர்சனங்களுக்கும், புகார்களுக்கும் பஞ்சமே இல்லை.
தீர்ப்பு வெளியான பின்பு, தொலைக்காட்சி சேனல்களுக்கு தொடர்ந்து பேட்டிகள் அளித்தபடி இருக்கிறார். அவர் மீதான பல்வேறு விமர்சனங்கள் குறித்து கேள்வி கேட்டபோது, சளைக்காமல் புன்சிரிப்புடன் பதில் அளித்தார்.
ஜெயலலிதா உள்ளிட்ட நால்வருக்கும் தண்டனை வாங்கிக் கொடுத்ததில் உங்களுக்கு எவ்வளவு பங்கு இருப்பதாக நினைக்கிறீர்கள்?
முதலில் ஒரு விஷயத்தை புரிந்து கொள்ளுங்கள். 1974-ம் ஆண்டிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட வழக்குகளை பார்த்துவிட்டேன். ஜெயலலிதாவுக்கு எதிரான வழக்கு எனக்கு மிகவும் சாதாரணமானது. இதனை விட சவாலான எத்தனையோ வழக்குகளை பார்த்திருக்கிறேன். இந்த வழக்கு, அரசியல் அழுத்தங்கள் காரணமாக பெரிதாக பார்க்கப்பட்டது.
தேவேகவுடா, எஸ்.எம்.கிருஷ்ணா, குமாரசாமி, எடியூரப்பா ஆகியோர் கர்நாடக முதல்வராக இருந்த போதே அவர்களுக்கு எதிரான தேர்தல் வழக்கு களில் ஆஜராகி இருக்கிறேன். அதில் அவர்களுக்கு அபராதமும் விதிக்கச் செய்திருக்கிறேன். ஆனால் அதில் கூட இவ்வளவு பிரச்சினைகளை அனு பவிக்கவில்லை.
ஜெயலலிதா வழக்கில் 100 சதவீதம் அக்கறை காட்டினேன். இந்த வெற்றியின் மூலம் என் மீது சுமத்தப்பட்ட அத்தனை பழிகளும் துடைத்தெறியப்பட்டிருக்கிறது. என்னை குறை சொன்னவர்கள் எல்லாம் இப்போது எங்கே போய்விட்டார்கள்?
ஜெயலலிதாவுக்கு நீதிபதி டி'குன்ஹா வழங்கிய 4 ஆண்டுகள் சிறைத் தண் டனை, 100 கோடி அபராதம், சொத்துகள் பறிமுதல் என்ற தீர்ப்பு இந்திய நீதித்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது? இதனை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்? இதனை ஏற்கெனவே எதிர்பார்த்தீர்களா?
இப்படி தான் தீர்ப்பு வருமென்று எனக்கு ஏற்கெனவே தெரியும். ஏனென்றால் வழக்கில் ஆதாரங்களும், ஆவணங்களும், சாட்சியங்களும் வலுவாக இருந்தன. எனது ஆணித்தரமான வாதமும் வழக்குக்கு வலு சேர்த்ததால், இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு கிடைத்துள்ளது. 100 கோடி அபராதம் என்பது ஜெயலலிதாவின் அன்றைய சொத்து மதிப்போடு ஒப்பிடுகையில் அதில் பாதி அளவு கூட இல்லை. தீர்ப்பு நகலை முழுமையாக படித்தவர்கள் இதனை ஒரு பொருட்டாகவே கருத மாட்டார்கள்.
அரசு வழக்கறிஞராக பி.வி.ஆச்சார்யா தொடர்ந்திருந்தால் தீர்ப்பு இன்னும் கடுமையாக இருந்திருக்கும் என்கிறார்களே?
அதெல்லாம், என்னை குறை சொல்பவர்களும், சில ஊடகங்களும் கிளப்பிவிடுகிற அப்பட்டமான பொய்கள். இந்த வழக்கில் அவர் செய்தது என்ன? நான் செய்தது என்ன? ஆவணங்களை தருகிறேன் பார்க்கிறீர்களா?
நீதிபதி டி'குன்ஹா தனது தீர்ப்பில் நீங்கள் வழக்கில் சிறப்பாக வாதிடவில்லை என குறிப்பிட்டு இருக்கிறாரே?
இதனை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். எனது இறுதி வாதத்தை முடித்த பிறகு தாக்கல் செய்த 9 உச்ச நீதிமன்ற தீர்ப்பு நகல்களை அடிப்படையாக வைத்தே அவர் இந்த தீர்ப்பை எழுதி இருக்கிறார். நான் முன்னுதாரணமாக அளித்த தீர்ப்பு நகல்களை பல்வேறு நீதிபதிகளும், மூத்த வழக்கறிஞர்களும் பாராட்டி இருக்கிறார்கள் தெரியுமா?
வழக்கில் இறுதிவாதம் செய்யாமல் கால தாமதம் செய்ததற்காக உங்களுக்கு நீதிபதி டி'குன்ஹா அபராதம் விதித்தார். உச்ச நீதிமன்றத்தால் சிறப்பு அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டவருக்கு அபராதம் விதிப்பது இதுதான் முதல்முறை என்கிறார்களே?
உலகில் எல்லோருக்கும் நோய்கள் இருக்கின்றன. எல்லோராலும் ‘கல்’ மாதிரி இருக்க முடியாது. எனது உடல்நிலை காரணமாக ஆஜராக முடியவில்லை. ஒருநாளைக்கு நான் சாப்பிடும் மாத்திரைகளை பார்த்திருந்தால் அத்தகைய முடிவுக்கு அவர் சென்றிருக்க மாட்டார் என நினைக்கிறேன். ஆனால் நான் உச்ச நீதிமன்றம் வரை போய் வெற்றியோடு திரும்பி இருக்கிறேனே?
நீதிபதி டி'குன்ஹா தீர்ப்பு அறிவித்தபோது ஜெயலலிதாவின் எதிர்வினை எப்படி இருந்தது?
மிகவும் அதிர்ந்து போய் இருந்தார். கண் கலங்கி, சாந்த சொரூபியாக மாறியிருந்தார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் தனக்கு எதிராக பவானி சிங் தான் ஆஜராகி வாதிட வேண்டும் என ஜெயலலிதா உச்ச நீதிமன்றத்தில் போராடினார். பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் அவரை சந்தித்தபோது என்ன பேசிக்கொண்டீர்கள்?
தீர்ப்பு வெளியான செப்டம்பர் 27-ம் தேதி தான் ஜெயலலிதாவை முதன் முதலாக நேரில் பார்த்தேன். அதற்கு முன்பு சின்ன வயதில் சினிமாவில் பார்த்திருக்கிறேன். அவரும் எதுவும் பேசவில்லை. அதனால் நானும் எதுவும் பேசவில்லை.
அரசு வழக்கறிஞர் பொறுப்பில் இருந்து உங்களை நீக்குவதற்காக திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் தரப்பில் தொடர் முயற்சிகள் நடந்ததே?
திமுக தலைவர் கருணாநிதி எழுதிய ‘சொத்துக்குவிப்பு வழக்கு ஒரு தொடர்கதை' என்ற நூலை ஆங்கிலத்தில் படித்தேன். அவ்வப்போது அவர் வெளியிடும் அறிக்கைகளையும் படித்திருக்கிறேன். ஜெயலலிதாவின் ஆதரவாளன் என்று திமுகவினர் என் மீது சுமத்திய அத்தனை பழிகளுக்கும் தீர்ப்பின் மூலம் பதில் சொல்லி விட்டேன். கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஜெயலலிதாவுக்காக ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி என்னை பார்த்து, ''நீ ஒரு திமுக வழக்கறிஞர்'' என கோபமாக கூறினார். இதற்கு கருணாநிதி என்ன பதில் சொல்லப்போகிறார்?
ஜெயலலிதாவுக்கு தண்டனை வழங்கப்பட்ட பிறகு,உங்களுக்கு நிறைய மிரட்டல்கள் வருவதாக கேள்விப்பட்டோம். உண்மையாகவே மிரட்டுகிறார்களா?
பல்வேறு தொலைப்பேசி எண்களில் இருந்து தமிழில் ஏதேதோ பேசுவார்கள். பதிலுக்கு எனக்கு தெரிந்த சிவாஜிநகர் தமிழில் நானும் ஏதோ பேசுவேன். இப்போது அதெல்லாம் பழகிப் போய்விட்டது. அவர்களுக்கு எல்லாம் ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். நான் படித்தது கிரிமினாலஜி. பார்ப்பது கிரிமினல் வழக்கறிஞர் தொழில். தலையை வெட்டி ரத்தம் சொட்டச் சொட்ட கொண்டுவரும் எத்தனையோ கிரிமினல்களை பார்த்து விட்டேன். அதனால் உங்களுடைய சேட்டை எல்லாம் என்னிடம் பலிக்காது.
சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவின் தோல்விக்கு யார் காரணம்? அவருடைய தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்களின் வாதம் சிறப்பாக இருந்ததா?
நான் வழக்கறிஞர் தொழிலுக்கு வந்த புதிதில் சென்னை நீதிமன்றத்தில் யாராவது வழக்கறிஞர் வந்தால் ஓடிப் போய் அவர்களது வாதத்தை கவனிப்பேன். அவர்களிடம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கும். அதே போல என்னை இவ்வழக்கில் அரசு வழக்கறிஞராக நியமித்த போது ஜெயலலிதாவின் வழக்கறிஞர்களிடம் நிறைய கற்றுக் கொள்ளலாம் என நினைத்தேன். ஆனால் எனக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
ஜெயலலிதாவின் வழக்கறிஞர் பி.குமார் நன்றாக வாதிடுவார். அவர் சுங்கவரி ஏய்ப்பு தொடர்பான வழக்குகளில் அனுபவம் மிக்கவர். ஆனால் இது போன்ற கிரிமினல் வழக்குகளில் அனுபவமே இல்லாதவர். சசிகலாவின் வழக்கறிஞர் மணி சங்கர் வாதிட்டதை விட நீதிபதியை கோபமூட்டியது தான் அதிகம். மற்ற படி அசோகன், செந்தில் எல்லாம் நீதிமன்றத்தில் வாதாடியே பார்த்ததில்லை.
சொத்துக்குவிப்பு வழக்கை நடத்திய தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் உங்களுக்கு முழு ஒத்துழைப்பு அளித்தார்களா?
உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் அவர்கள் எங்களுக்கு உதவவே இல்லை. வழக்கு தொடர்பான கோப்புகளில் உள்ள தகவல்கள் முழுமையாகத் தெரியாது. நானும் எனது உதவியாளர் முருகேஷ் எஸ்.மர்டியும் நாங்களாகவே தகவல்களைத் திரட்டினோம். நானாக இருந்ததால், லஞ்ச ஒழிப்பு போலீஸாரின் செயல்களைப் பொறுத்துக்கொண்டேன். அதுவே வழக்கறிஞர் ஆச்சார்யாவாக இருந்திருந்தால், அவர்களை துரத்தி விட்டிருப்பார்.
ஜெயலலிதாவின் ஜாமீனை ஆட்சேபித்து காலையில் மனு தாக்கல் செய்த நீங்கள், மாலையில் ஆட்சேபம் தெரிவிக்காதது ஏன்?
தண்டனையை ரத்து செய்யவும், ஜாமீன் கோரியும் ஜெயலலிதா தாக்கல் செய்த மனுக்களை கடுமையாக ஆட்சேபித்து மனு தாக்கல் செய்தேன். ஆனால் ராம்ஜெத்மலானி தனது வாதத்தில் 4 ஆண்டுகளுக்கு குறைவான சிறை தண்டனையை பெற்றிருக்கும் குற்றவாளிக்கு ஜாமீன் வழங்க அரசு வழக்கறிஞரின் வாதமே தேவையில்லை. நீதிபதி தனது சுய அதிகாரத்தின் அடிப்படையில் ஜாமீன் வழங்கலாம் என்றார். எனவே, நிபந்தனை ஜாமீன் வழங்க ஆட்சேபிக்கவில்லை என்று நான் தெரிவித்தேன். ஓர் அரசு வழக்கறிஞர் தனது சொந்த கருத்தை மட்டுமல்ல அரசு மற்றும் சமூகத்தின் கருத்தையும் எதிரொலிக்க வேண்டும். எனது மனசாட்சிப்படி நடந்து கொண்டேன்.
அப்படியென்றால் உச்சநீதிமன்றத்திலும் ஜெயலலிதாவின் ஜாமீனை ஆட்சேபிக்க மாட்டீர்கள் தானே?
அதை இப்போது சொல்ல முடியாது. உச்ச நீதிமன்றத்தில் இருந்து எனக்கு இன்னும் நோட்டீஸே வரவில்லை.
கடைசியாக ஒரு கேள்வி. எல்லோரும் உங்களிடம் கேட்க விரும்பும் கேள்வி இது. எதிர் முகாமிலிருந்து நீங்கள் பணம் வாங்கியதாக பரவலாக பேச்சு அடிபடுகிறதே, அது உண்மையா?
“யாருங்க பணம் கொடுத்தாங்க? உங்களிடம் எனது முகவரியை கேட்டால் மறக்காமல் சொல்லுங்கள்” என கிண்டலாக சொல்லி சிரிக்கிறார் பவானி சிங்.
நன்றி:தி இந்து
தீர்ப்பு வெளியான பின்பு, தொலைக்காட்சி சேனல்களுக்கு தொடர்ந்து பேட்டிகள் அளித்தபடி இருக்கிறார். அவர் மீதான பல்வேறு விமர்சனங்கள் குறித்து கேள்வி கேட்டபோது, சளைக்காமல் புன்சிரிப்புடன் பதில் அளித்தார்.
ஜெயலலிதா உள்ளிட்ட நால்வருக்கும் தண்டனை வாங்கிக் கொடுத்ததில் உங்களுக்கு எவ்வளவு பங்கு இருப்பதாக நினைக்கிறீர்கள்?
முதலில் ஒரு விஷயத்தை புரிந்து கொள்ளுங்கள். 1974-ம் ஆண்டிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட வழக்குகளை பார்த்துவிட்டேன். ஜெயலலிதாவுக்கு எதிரான வழக்கு எனக்கு மிகவும் சாதாரணமானது. இதனை விட சவாலான எத்தனையோ வழக்குகளை பார்த்திருக்கிறேன். இந்த வழக்கு, அரசியல் அழுத்தங்கள் காரணமாக பெரிதாக பார்க்கப்பட்டது.
தேவேகவுடா, எஸ்.எம்.கிருஷ்ணா, குமாரசாமி, எடியூரப்பா ஆகியோர் கர்நாடக முதல்வராக இருந்த போதே அவர்களுக்கு எதிரான தேர்தல் வழக்கு களில் ஆஜராகி இருக்கிறேன். அதில் அவர்களுக்கு அபராதமும் விதிக்கச் செய்திருக்கிறேன். ஆனால் அதில் கூட இவ்வளவு பிரச்சினைகளை அனு பவிக்கவில்லை.
ஜெயலலிதா வழக்கில் 100 சதவீதம் அக்கறை காட்டினேன். இந்த வெற்றியின் மூலம் என் மீது சுமத்தப்பட்ட அத்தனை பழிகளும் துடைத்தெறியப்பட்டிருக்கிறது. என்னை குறை சொன்னவர்கள் எல்லாம் இப்போது எங்கே போய்விட்டார்கள்?
ஜெயலலிதாவுக்கு நீதிபதி டி'குன்ஹா வழங்கிய 4 ஆண்டுகள் சிறைத் தண் டனை, 100 கோடி அபராதம், சொத்துகள் பறிமுதல் என்ற தீர்ப்பு இந்திய நீதித்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது? இதனை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்? இதனை ஏற்கெனவே எதிர்பார்த்தீர்களா?
இப்படி தான் தீர்ப்பு வருமென்று எனக்கு ஏற்கெனவே தெரியும். ஏனென்றால் வழக்கில் ஆதாரங்களும், ஆவணங்களும், சாட்சியங்களும் வலுவாக இருந்தன. எனது ஆணித்தரமான வாதமும் வழக்குக்கு வலு சேர்த்ததால், இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு கிடைத்துள்ளது. 100 கோடி அபராதம் என்பது ஜெயலலிதாவின் அன்றைய சொத்து மதிப்போடு ஒப்பிடுகையில் அதில் பாதி அளவு கூட இல்லை. தீர்ப்பு நகலை முழுமையாக படித்தவர்கள் இதனை ஒரு பொருட்டாகவே கருத மாட்டார்கள்.
அரசு வழக்கறிஞராக பி.வி.ஆச்சார்யா தொடர்ந்திருந்தால் தீர்ப்பு இன்னும் கடுமையாக இருந்திருக்கும் என்கிறார்களே?
அதெல்லாம், என்னை குறை சொல்பவர்களும், சில ஊடகங்களும் கிளப்பிவிடுகிற அப்பட்டமான பொய்கள். இந்த வழக்கில் அவர் செய்தது என்ன? நான் செய்தது என்ன? ஆவணங்களை தருகிறேன் பார்க்கிறீர்களா?
நீதிபதி டி'குன்ஹா தனது தீர்ப்பில் நீங்கள் வழக்கில் சிறப்பாக வாதிடவில்லை என குறிப்பிட்டு இருக்கிறாரே?
இதனை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். எனது இறுதி வாதத்தை முடித்த பிறகு தாக்கல் செய்த 9 உச்ச நீதிமன்ற தீர்ப்பு நகல்களை அடிப்படையாக வைத்தே அவர் இந்த தீர்ப்பை எழுதி இருக்கிறார். நான் முன்னுதாரணமாக அளித்த தீர்ப்பு நகல்களை பல்வேறு நீதிபதிகளும், மூத்த வழக்கறிஞர்களும் பாராட்டி இருக்கிறார்கள் தெரியுமா?
வழக்கில் இறுதிவாதம் செய்யாமல் கால தாமதம் செய்ததற்காக உங்களுக்கு நீதிபதி டி'குன்ஹா அபராதம் விதித்தார். உச்ச நீதிமன்றத்தால் சிறப்பு அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டவருக்கு அபராதம் விதிப்பது இதுதான் முதல்முறை என்கிறார்களே?
உலகில் எல்லோருக்கும் நோய்கள் இருக்கின்றன. எல்லோராலும் ‘கல்’ மாதிரி இருக்க முடியாது. எனது உடல்நிலை காரணமாக ஆஜராக முடியவில்லை. ஒருநாளைக்கு நான் சாப்பிடும் மாத்திரைகளை பார்த்திருந்தால் அத்தகைய முடிவுக்கு அவர் சென்றிருக்க மாட்டார் என நினைக்கிறேன். ஆனால் நான் உச்ச நீதிமன்றம் வரை போய் வெற்றியோடு திரும்பி இருக்கிறேனே?
நீதிபதி டி'குன்ஹா தீர்ப்பு அறிவித்தபோது ஜெயலலிதாவின் எதிர்வினை எப்படி இருந்தது?
மிகவும் அதிர்ந்து போய் இருந்தார். கண் கலங்கி, சாந்த சொரூபியாக மாறியிருந்தார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் தனக்கு எதிராக பவானி சிங் தான் ஆஜராகி வாதிட வேண்டும் என ஜெயலலிதா உச்ச நீதிமன்றத்தில் போராடினார். பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் அவரை சந்தித்தபோது என்ன பேசிக்கொண்டீர்கள்?
தீர்ப்பு வெளியான செப்டம்பர் 27-ம் தேதி தான் ஜெயலலிதாவை முதன் முதலாக நேரில் பார்த்தேன். அதற்கு முன்பு சின்ன வயதில் சினிமாவில் பார்த்திருக்கிறேன். அவரும் எதுவும் பேசவில்லை. அதனால் நானும் எதுவும் பேசவில்லை.
அரசு வழக்கறிஞர் பொறுப்பில் இருந்து உங்களை நீக்குவதற்காக திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் தரப்பில் தொடர் முயற்சிகள் நடந்ததே?
திமுக தலைவர் கருணாநிதி எழுதிய ‘சொத்துக்குவிப்பு வழக்கு ஒரு தொடர்கதை' என்ற நூலை ஆங்கிலத்தில் படித்தேன். அவ்வப்போது அவர் வெளியிடும் அறிக்கைகளையும் படித்திருக்கிறேன். ஜெயலலிதாவின் ஆதரவாளன் என்று திமுகவினர் என் மீது சுமத்திய அத்தனை பழிகளுக்கும் தீர்ப்பின் மூலம் பதில் சொல்லி விட்டேன். கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஜெயலலிதாவுக்காக ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி என்னை பார்த்து, ''நீ ஒரு திமுக வழக்கறிஞர்'' என கோபமாக கூறினார். இதற்கு கருணாநிதி என்ன பதில் சொல்லப்போகிறார்?
ஜெயலலிதாவுக்கு தண்டனை வழங்கப்பட்ட பிறகு,உங்களுக்கு நிறைய மிரட்டல்கள் வருவதாக கேள்விப்பட்டோம். உண்மையாகவே மிரட்டுகிறார்களா?
பல்வேறு தொலைப்பேசி எண்களில் இருந்து தமிழில் ஏதேதோ பேசுவார்கள். பதிலுக்கு எனக்கு தெரிந்த சிவாஜிநகர் தமிழில் நானும் ஏதோ பேசுவேன். இப்போது அதெல்லாம் பழகிப் போய்விட்டது. அவர்களுக்கு எல்லாம் ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். நான் படித்தது கிரிமினாலஜி. பார்ப்பது கிரிமினல் வழக்கறிஞர் தொழில். தலையை வெட்டி ரத்தம் சொட்டச் சொட்ட கொண்டுவரும் எத்தனையோ கிரிமினல்களை பார்த்து விட்டேன். அதனால் உங்களுடைய சேட்டை எல்லாம் என்னிடம் பலிக்காது.
சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவின் தோல்விக்கு யார் காரணம்? அவருடைய தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்களின் வாதம் சிறப்பாக இருந்ததா?
நான் வழக்கறிஞர் தொழிலுக்கு வந்த புதிதில் சென்னை நீதிமன்றத்தில் யாராவது வழக்கறிஞர் வந்தால் ஓடிப் போய் அவர்களது வாதத்தை கவனிப்பேன். அவர்களிடம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கும். அதே போல என்னை இவ்வழக்கில் அரசு வழக்கறிஞராக நியமித்த போது ஜெயலலிதாவின் வழக்கறிஞர்களிடம் நிறைய கற்றுக் கொள்ளலாம் என நினைத்தேன். ஆனால் எனக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
ஜெயலலிதாவின் வழக்கறிஞர் பி.குமார் நன்றாக வாதிடுவார். அவர் சுங்கவரி ஏய்ப்பு தொடர்பான வழக்குகளில் அனுபவம் மிக்கவர். ஆனால் இது போன்ற கிரிமினல் வழக்குகளில் அனுபவமே இல்லாதவர். சசிகலாவின் வழக்கறிஞர் மணி சங்கர் வாதிட்டதை விட நீதிபதியை கோபமூட்டியது தான் அதிகம். மற்ற படி அசோகன், செந்தில் எல்லாம் நீதிமன்றத்தில் வாதாடியே பார்த்ததில்லை.
சொத்துக்குவிப்பு வழக்கை நடத்திய தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் உங்களுக்கு முழு ஒத்துழைப்பு அளித்தார்களா?
உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் அவர்கள் எங்களுக்கு உதவவே இல்லை. வழக்கு தொடர்பான கோப்புகளில் உள்ள தகவல்கள் முழுமையாகத் தெரியாது. நானும் எனது உதவியாளர் முருகேஷ் எஸ்.மர்டியும் நாங்களாகவே தகவல்களைத் திரட்டினோம். நானாக இருந்ததால், லஞ்ச ஒழிப்பு போலீஸாரின் செயல்களைப் பொறுத்துக்கொண்டேன். அதுவே வழக்கறிஞர் ஆச்சார்யாவாக இருந்திருந்தால், அவர்களை துரத்தி விட்டிருப்பார்.
ஜெயலலிதாவின் ஜாமீனை ஆட்சேபித்து காலையில் மனு தாக்கல் செய்த நீங்கள், மாலையில் ஆட்சேபம் தெரிவிக்காதது ஏன்?
தண்டனையை ரத்து செய்யவும், ஜாமீன் கோரியும் ஜெயலலிதா தாக்கல் செய்த மனுக்களை கடுமையாக ஆட்சேபித்து மனு தாக்கல் செய்தேன். ஆனால் ராம்ஜெத்மலானி தனது வாதத்தில் 4 ஆண்டுகளுக்கு குறைவான சிறை தண்டனையை பெற்றிருக்கும் குற்றவாளிக்கு ஜாமீன் வழங்க அரசு வழக்கறிஞரின் வாதமே தேவையில்லை. நீதிபதி தனது சுய அதிகாரத்தின் அடிப்படையில் ஜாமீன் வழங்கலாம் என்றார். எனவே, நிபந்தனை ஜாமீன் வழங்க ஆட்சேபிக்கவில்லை என்று நான் தெரிவித்தேன். ஓர் அரசு வழக்கறிஞர் தனது சொந்த கருத்தை மட்டுமல்ல அரசு மற்றும் சமூகத்தின் கருத்தையும் எதிரொலிக்க வேண்டும். எனது மனசாட்சிப்படி நடந்து கொண்டேன்.
அப்படியென்றால் உச்சநீதிமன்றத்திலும் ஜெயலலிதாவின் ஜாமீனை ஆட்சேபிக்க மாட்டீர்கள் தானே?
அதை இப்போது சொல்ல முடியாது. உச்ச நீதிமன்றத்தில் இருந்து எனக்கு இன்னும் நோட்டீஸே வரவில்லை.
கடைசியாக ஒரு கேள்வி. எல்லோரும் உங்களிடம் கேட்க விரும்பும் கேள்வி இது. எதிர் முகாமிலிருந்து நீங்கள் பணம் வாங்கியதாக பரவலாக பேச்சு அடிபடுகிறதே, அது உண்மையா?
“யாருங்க பணம் கொடுத்தாங்க? உங்களிடம் எனது முகவரியை கேட்டால் மறக்காமல் சொல்லுங்கள்” என கிண்டலாக சொல்லி சிரிக்கிறார் பவானி சிங்.
நன்றி:தி இந்து
- murugesanஇளையநிலா
- பதிவுகள் : 322
இணைந்தது : 12/01/2010
"என்னை இவ்வழக்கில் அரசு வழக்கறிஞராக நியமித்த போது ஜெயலலிதாவின் வழக்கறிஞர்களிடம் நிறைய கற்றுக் கொள்ளலாம் என நினைத்தேன். ஆனால் எனக்கு ஏமாற்றமே மிஞ்சியது."
இதன் மூலம் நான் தெரிந்து கொண்டது என்னவன்றால் ஜெயலலிதாவுக்கு பிரமாண்டம் மட்டுமே கண்களுக்கு தெரிந்திருக்கிறது.. மிகப்பெரிய ஆல மரத்தின் விதை அதன் கனிகளுக்குள் இருக்கும்போது நம் கண்களுக்கு கூட தெரிவதில்லை.. அனைத்து அரசியல்வாதிகளும் தனக்கு எந்த ரூபத்திலாவது பதவி கிடைக்கும் என்ற எண்ணத்திலும், தனது பதவி எந்த நேரத்திலும் பறிக்கப்படலாம் என்ற அச்ச உணர்வுகளும் கொண்டு உடனிருக்கும் அரசியல் வாதிகளை பற்றி இந்த அம்மா யோசிக்க தவறிவிட்டார்.. அதனால்தான் தனது வழக்கின் நிலை என்ன என்பதை கூட தன்னால் அறிந்துகொள்ள முடியாமலும், சரியான வழக்கறிஞசர்களை நியமிக்காமலும்.. தனக்கு வரும் ஆபத்தைகூட யாரும் சொல்லாமலும், சொல்வதற்கு பயந்தும், பிரமாண்டம் மட்டுமே பெரிதென்று எண்ணிய அவங்க இன்று... உள்ளே..
அவர் நியமித்த வழக்கறிஞர்களுக்கு "எதுவும் தெரியாதவர்கள்" என்பதையே பவானி சார் சொல்லியுள்ளார்...
இதன் மூலம் நான் தெரிந்து கொண்டது என்னவன்றால் ஜெயலலிதாவுக்கு பிரமாண்டம் மட்டுமே கண்களுக்கு தெரிந்திருக்கிறது.. மிகப்பெரிய ஆல மரத்தின் விதை அதன் கனிகளுக்குள் இருக்கும்போது நம் கண்களுக்கு கூட தெரிவதில்லை.. அனைத்து அரசியல்வாதிகளும் தனக்கு எந்த ரூபத்திலாவது பதவி கிடைக்கும் என்ற எண்ணத்திலும், தனது பதவி எந்த நேரத்திலும் பறிக்கப்படலாம் என்ற அச்ச உணர்வுகளும் கொண்டு உடனிருக்கும் அரசியல் வாதிகளை பற்றி இந்த அம்மா யோசிக்க தவறிவிட்டார்.. அதனால்தான் தனது வழக்கின் நிலை என்ன என்பதை கூட தன்னால் அறிந்துகொள்ள முடியாமலும், சரியான வழக்கறிஞசர்களை நியமிக்காமலும்.. தனக்கு வரும் ஆபத்தைகூட யாரும் சொல்லாமலும், சொல்வதற்கு பயந்தும், பிரமாண்டம் மட்டுமே பெரிதென்று எண்ணிய அவங்க இன்று... உள்ளே..
அவர் நியமித்த வழக்கறிஞர்களுக்கு "எதுவும் தெரியாதவர்கள்" என்பதையே பவானி சார் சொல்லியுள்ளார்...
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
முருகேசன் நீங்கள் வழக்குரைஞர் என்று நினைக்கிறேன், ஆதலால் இந்தக் கேள்வி.
உச்ச நீதிமன்றம் இவரின் முரணான செயல்களால், அரசு வழக்குரைஞர் பதவியை ரத்து செய்து விட்டால், இவர் அம்மையாருக்காக ஆஜராக முடியுமா?
அப்படி முடியும் எனில், அதற்காகத்தான் அம்மையார் வழக்குரைஞர்கள் சரி இல்லை என்று சொல்கிறாரோ?
உச்ச நீதிமன்றம் இவரின் முரணான செயல்களால், அரசு வழக்குரைஞர் பதவியை ரத்து செய்து விட்டால், இவர் அம்மையாருக்காக ஆஜராக முடியுமா?
அப்படி முடியும் எனில், அதற்காகத்தான் அம்மையார் வழக்குரைஞர்கள் சரி இல்லை என்று சொல்கிறாரோ?
- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|