புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏற்றினாளே என் நெஞ்சில்! Poll_c10ஏற்றினாளே என் நெஞ்சில்! Poll_m10ஏற்றினாளே என் நெஞ்சில்! Poll_c10 
5 Posts - 71%
Manimegala
ஏற்றினாளே என் நெஞ்சில்! Poll_c10ஏற்றினாளே என் நெஞ்சில்! Poll_m10ஏற்றினாளே என் நெஞ்சில்! Poll_c10 
1 Post - 14%
ஜாஹீதாபானு
ஏற்றினாளே என் நெஞ்சில்! Poll_c10ஏற்றினாளே என் நெஞ்சில்! Poll_m10ஏற்றினாளே என் நெஞ்சில்! Poll_c10 
1 Post - 14%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஏற்றினாளே என் நெஞ்சில்! Poll_c10ஏற்றினாளே என் நெஞ்சில்! Poll_m10ஏற்றினாளே என் நெஞ்சில்! Poll_c10 
130 Posts - 51%
ayyasamy ram
ஏற்றினாளே என் நெஞ்சில்! Poll_c10ஏற்றினாளே என் நெஞ்சில்! Poll_m10ஏற்றினாளே என் நெஞ்சில்! Poll_c10 
88 Posts - 35%
mohamed nizamudeen
ஏற்றினாளே என் நெஞ்சில்! Poll_c10ஏற்றினாளே என் நெஞ்சில்! Poll_m10ஏற்றினாளே என் நெஞ்சில்! Poll_c10 
11 Posts - 4%
prajai
ஏற்றினாளே என் நெஞ்சில்! Poll_c10ஏற்றினாளே என் நெஞ்சில்! Poll_m10ஏற்றினாளே என் நெஞ்சில்! Poll_c10 
9 Posts - 4%
Jenila
ஏற்றினாளே என் நெஞ்சில்! Poll_c10ஏற்றினாளே என் நெஞ்சில்! Poll_m10ஏற்றினாளே என் நெஞ்சில்! Poll_c10 
4 Posts - 2%
Rutu
ஏற்றினாளே என் நெஞ்சில்! Poll_c10ஏற்றினாளே என் நெஞ்சில்! Poll_m10ஏற்றினாளே என் நெஞ்சில்! Poll_c10 
3 Posts - 1%
Ammu Swarnalatha
ஏற்றினாளே என் நெஞ்சில்! Poll_c10ஏற்றினாளே என் நெஞ்சில்! Poll_m10ஏற்றினாளே என் நெஞ்சில்! Poll_c10 
2 Posts - 1%
Baarushree
ஏற்றினாளே என் நெஞ்சில்! Poll_c10ஏற்றினாளே என் நெஞ்சில்! Poll_m10ஏற்றினாளே என் நெஞ்சில்! Poll_c10 
2 Posts - 1%
Barushree
ஏற்றினாளே என் நெஞ்சில்! Poll_c10ஏற்றினாளே என் நெஞ்சில்! Poll_m10ஏற்றினாளே என் நெஞ்சில்! Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
ஏற்றினாளே என் நெஞ்சில்! Poll_c10ஏற்றினாளே என் நெஞ்சில்! Poll_m10ஏற்றினாளே என் நெஞ்சில்! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏற்றினாளே என் நெஞ்சில்!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jun 14, 2014 11:50 am

மழைக்காலத்தில் கடற்கரையின் அழகு கூடியிருப்பதாக நினைத்தான் ராம். இதற்கு காரணம், நண்பர்களின் அருகாமை என்று, உடனே தோன்றியது.

ஏற்றினாளே என் நெஞ்சில்! 1yLL81ISnKIrxWsXvJoA+E_1401964626

நண்பர்கள் அத்தனை பேரும், பள்ளி, கல்லூரி, கிரிக்கெட் என்று வாழ்க்கையை, கூடவே இருந்து அழகாக்கியவர்கள். ஊட்டிக்கும், கோவாவுக்கும் பிரத்யேக எழில் சேர்த்தவர்கள். ஒரகடம் ப்ளாண்ட்டில், அவன் இன்ஜினியராக இருக்கிற, கார் கம்பெனியின் பிரமாண்டம் பார்த்து, வியந்து அவன் முன்னேற்றத்திற்கு கை கொடுத்தவர்கள்.
''ராம்... 'ஒரு முக்கியமான விஷயம் இருக்கு. மீட் செய்யணும்'ன்னு கூப்பிட்டயே... என்னடா விஷயம்?''என்று, ஆரம்பித்தான் ஒரு நண்பன்.

''கல்யாண மேட்டரா நண்பா?'' இன்னொருவன் கேட்டான்.
உடனே, ராம் முகம், ஒரு கணம் வெட்கம் பூசி, பின், இயல்புக்கு வந்தது.
''மை காட்! ராம்... இதென்ன உன் கன்னம், வயசுப் பொண்ணுக மாதிரி, சிவந்து போகுது? யார்டா அது?''
''அவ பேரு யாமினி; நேத்திக்குதான், பொண்ணு பாத்துட்டு வந்தோம். ரொம்ப சடனா ஏற்பாடு செய்ததால உங்க யாருக்கும் சொல்ல முடியலே,'' என்றான் ராம்.
'வாவ்...' என்று, கோரசாக அலறினர்.

''பாத்தியா, எங்களுக்கு கடைசில சொல்லுற... சரி போகட்டும் மன்னிச்சு விட்டிர்றோம்; யாமினிய பத்தி சொல்லு...''
ராம் கண்களுக்குள், யாமினி தோன்றினாள். அவன் மனம் உற்சாகத்துடன் அவளை நினைத்துப் பார்த்தது.
'பட்டுப் புடவை, அவள் உடலை அவ்வளவு நளினமாகப் பற்றியிருந்தது. மிகச் சிறிய, பொட்டு புருவங்களையும், கண்களையும் பேரழகாகப் பிரதிபலித்தது. கழுத்தை ஒட்டிய ஆண்டிக் ரக சோக்கர், அவள் புன்னகையை ஏந்துகிற சந்தனக் கிண்ணம் போல தகதகத்தது.

பொண்ணு பார்த்து விட்டு வீடு திரும்பும் போது, அம்மா, 'பொண்ணு, ஆளு மட்டும், அழகு இல்ல; மனசும் அழகுதான். லீவு நாள்ல, கண் தெரியாத குழந்தைகளோட பள்ளிக் கூடத்துக்குப் போய், பாடம் படிச்சுக் காட்டுவாளாம்; அவங்களுக்காக பரீட்சை எழுதுவாளாம். ஊரை சுத்தாம, இப்படி பெரிய காரியம் செய்யுது பொண்ணு...' என்றாள்.
'ஆமாம்... ஆபீசுக்கும் போய்ட்டு கிடைக்கிற நேரத்துல, இப்படி சமூக சேவை செய்யறதுக்கு, நெஜமாவே பெரிய மனசுதான் வேணும்...' என்று அப்பா கூறிய போது, அக்கா குறுக்கிட்டு சொன்னாள்...
'அவங்களுக்கும், நம்ம ராமை பிடிச்சுட்ட மாதிரிதான் தெரியுது. ராஜா மாதிரி, சிரிச்ச முகமா இருக்கிற நம்ம ராமை பிடிக்காம போகுமா என்ன...' என்றாள்.

ராம், நண்பர்களிடம் என்ன சொன்னான் என்பது தெரியவேயில்லை. யாமினியின் மயக்கத்திலேயே வீடு வந்து சேர்ந்தான். அவனை ஏதோ பல்லக்கில் தூக்கி வந்தது போலிருந்தது.

வீடு வழக்கமானதாக இல்லை. அம்மா சிரித்துக் கொண்டே வந்து கதவைத் திறக்கவில்லை. அப்பா, 'டிவி'யுடன் கூடவே பாடும் சத்தம் கேட்கவில்லை. கைக் குழந்தையுடன், 'கண்ணே கனியமுதே' என்று, எப்போதும் கொஞ்சிக் கொண்டிருக்கும் அக்காவின் உற்சாகத்தைக் காணவில்லை.

''அம்மா, நான் நண்பர்களோட சாப்பிட்டுட்டேன்; நீங்கள்லாம் சாப்பிட்டாச்சா?'' என்று கேட்டுக் கொண்டே அம்மாவின் அருகில் போனான் ராம்.
''ம் ஆச்சுப்பா.''
''என்னம்மா... ஏதாவது பிரச்னையா? ஏன் உங்க முகம் ஒரு மாதிரியா இருக்கு?''
''ஒண்ணுமில்லப்பா.''
''இல்ல ஏதோ விஷயம் இருக்கு; இல்லன்னா உங்க முகம் இப்படி வாடி இருக்காது. என்ன விஷயம்ன்னு சொல்லு,'' என்றான்.
''தலவலிப்பா... அப்பாக்கிட்ட கேட்டுக்க,'' என்றாள்.

''அதெல்லாம் இல்ல; என்ன விஷயம்ன்னு நீயே சொல்லு. பொண்ணு வீட்டுல ஏதாவது சொன்னாங்களா?''
சடாரென்று நிமிர்ந்து பார்த்தாள் அம்மா. ஒரு துளி கண்ணீர், உடனே எட்டிப் பார்த்தது. ''எவ்வளவு புத்தி கூர்மை என் பையனுக்கு! கொடுத்து வெக்கலியே, அந்த பொண்ணுக்கு...'' என்ற போது, வார்த்தைகள் கரகரத்திருந்தன.
''தெளிவா சொல்லும்மா.''

''ஒரு வருஷம் கல்யாணம் வேணாம்ன்னு, அந்த பொண்ணு கண்டிஷனா சொல்லிட்டாளாம். அப்பா ரொம்ப, 'அப்செட்' ஆய்ட்டார்; ஏன், எல்லாரும்தான். எப்படி இருக்கு பார் நிலைமை... பிள்ளையை பெத்தவங்க கையை கட்டிகிட்டு நின்னு, அவங்க சொல்றதை கேட்டுக்க வேண்டியிருக்கு,'' என்றாள் கண்கலங்கியபடி அம்மா.

அவன் திகைத்தான். 'ஏன் இது முதல்ல தெரியாதா... ரெண்டு குடும்பமும் பேசி, இனிப்பும், கனியும் பரிமாறி, சிரிக்க சிரிக்க எழுந்து வந்தபோது, தெரியவில்லையா அவளுக்கு... இல்லை, அவனைப் பிடிக்காததனால், காரணம் சொல்கிறாளா... இல்லை காதல் பிரச்னையாக இருக்குமோ! எதுவாகவும் இருந்து விட்டுப் போகட்டும். என்னை எதற்காக வரவழைத்து, பெண் பார்க்க வைத்து, கனவுகளை மிதக்க விட்டு, பின் மூக்கறுக்க வேண்டும்... 'எங்க ராம் படிப்புல சூரப்புலி... கிரிக்கெட், சினிமா, ஷேர்ஸ்ன்னு எல்லாத்திலயும், அவனுக்கு அபார ஆர்வம் உண்டு. இப்ப பிரமோஷன் வேறு வந்திருக்கு... எல்லாம் நல்லபடியா நடந்தா உங்க பொண்ணு, பூனாவுக்கு போய், ராணி மாதிரி குடித்தனம் செய்ய வேண்டியதுதான்...' என்று, அக்கா சொன்னபோது, அவர்கள் அத்தனை பேர் முகங்களிலும் விளக்குகள் எரிந்தனவே. அவளுக்கு மட்டும் ஏன் பிடிக்கவில்லை...' என்று நினைத்த ராமுவிற்கு கோபத்துடன் கலந்த வேதனை ஏற்பட்டது.

மறுநாள் காலையில், உணவின் பக்கமே திரும்பாமல், அலுவலகம் கிளம்பினான் ராமு. அம்மா சமையலறையில் இருந்து, அவனை கண்கலங்க பார்த்ததை, பார்க்காத மாதிரி, கிளம்பினான். அலுவலகம் வந்தவன், சரேலென்று, தன் காபினுக்குள் நுழைந்து, கதவை மூடிக் கொண்டான். நெஞ்சில் ஏதோ அடைத்ததைப் போல், உணர்ந்தான். நிராகரிப்பின் வலி, நெஞ்சு வலியை விட பயங்கரமானது என்று, புரிந்தது.

மணி, 10:30க்கு கதவு திறந்தபோது, ''காபி வேணாம் புஷ்பாம்மா,'' என்று, சொல்ல வாய் திறந்தவன், அப்படியே நின்றான். கதவை திறந்து உள்ளே வந்தவள் யாமினி!
''ராம் சார், ஒரு பத்து நிமிஷம் எனக்காக, ஒதுக்க முடியுமா?'' என்று கேட்டாள் யாமினி.
புத்தம் புதிய இசைக்கருவி ஒலித்தது போலிருந்தது அவள் குரல்.

''வா... வாங்க யாமினி; ப்ளீஸ் சிட் டவுன்," என்றான். உள்ளே மனது படபடத்தது. மென்மையாக உடலை இருத்தி, சோபாவுக்கு வலிக்காமல், அவள் உட்கார்ந்தது, ஒரு ஓவியம் அமர்ந்தது போல் அழகாக இருந்தது.
மெல்ல தலை உயர்த்தி, அவனைப் பார்த்தவள், ''என்மேல் உங்களுக்கு வருத்தம்; ஏன், கோபமாகக் கூட இருக்கலாம் இல்லையா ராம் சார்?''
''அப்படி ஒண்ணும் இல்ல.''

''பொண்ணு பாக்க வந்த அன்னிக்கு, நம்ம ரெண்டு பேருக்கு மட்டுமில்ல, நம்ம ரெண்டு குடும்பத்துக்குமே எல்லாமே அழகா போச்சு. உங்களைப்பத்தி சரியா தெரியாது. ஆனா, என் மனசுல உங்களுக்கு, உடனே ஒரு இடம் கிடைச்சுடுச்சு. ஆனா, பூனால போஸ்டிங், பெரிய பதவி, உங்க பொண்ணு, ராணி மாதிரி குடித்தனம் செய்ய வேண்டியதுதான்னு உங்க அக்கா சொன்னதும், என் நெஞ்சே அடைச்சுப் போச்சு ராம் சார்,'' என்றாள்.
''ஏன் யாமினி?'' என்றான் புரியாமல்.
ஒரு கணம் அமைதியாக இருந்து, பின், தொடர்ந்தாள்...

''நானும் இன்ஜினியரிங் பட்டாதாரின்னு உங்களுக்கு தெரியும். இப்பத்தான் வளர்ந்து வர்ற கம்பெனில வேலைக்கு சேர்ந்திருக்கேன். நான் இருக்கிற டீமும் சரி, என்னோட பிராஜெக்டும் சரி, கம்பெனிக்கு ரொம்ப முக்கியமானது. எல்லாமே, ரொம்ப சரியான பாதையில போய்கிட்டிருக்கு. இந்த இடத்துக்கு வர்றதுக்காக, கம்பெனி எனக்காக பணம், நேரம், பயிற்சி, கான்டிராக்ட்ஸ்ன்னு நெறைய பாடுபட்டிருக்கு. இப்போ திடீர்ன்னு, எல்லாத்தையும் விட்டுட்டு பாதியில கிளம்பிப் போறது நியாயமில்ல. எந்த உழைப்பும், முயற்சியும் வீணாகப் போகக் கூடாது இல்லையா?''
''ஆமாம்,'' என்றான், தன்னை அறியாமல்.

''நான் இப்ப இருக்கிற இடத்துக்கு, இன்னொருத்தரை தயார் செய்றதுக்கு, குறைந்தது ஒரு வருஷமாவது தேவைப்படும். கம்பெனிக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய உழைப்பை கொடுப்பதற்கும், எனக்கு கிடைச்ச அனுபவங்களை, அடுத்து வர்றவங்களுக்கு பகிர்ந்து கொடுப்பதற்கும், எல்லாத்துக்கும் மேல, என் மைண்ட்செட் மாறுவதற்கும் ஒரு வருஷம் ஆகும்,'' என்றவள், அவன் அமைதியாக இருப்பதைப் பார்த்து, ''கோபமா ராம் சார்,''என்றாள்.

''ஆமாம்.''
''சாரி சார்.''
''ஏன் தெரியுமா கோபம்?''
''தெரியல சார்.''
''சார் சார்ன்னு கூப்பிட்டு, அன்னியமாக்கறதுக்கு, இன்னும் அபிஷியலாவே பேசறதுக்கு,'' என்றான்.
வாய் விட்டு சிரித்தாள் யாமினி.
''யாமினி... என் நண்பன் சொல்வான்... 'கடவுளையும், வலியையும் உணரத்தான் முடியம்'ன்னு. இப்ப காதலையும், அதுல சேக்கணும்ன்னு தோணுது யாமினி.''
''யார் காதலை?'' என்றாள் மெல்ல சிவந்து.
''இதுல என்ன சந்தேகம்... நீ என்மேல வெச்சிருக்கிற காதல்.''
''ஓ...'' என்று மேலும் சிவந்து, அவள் சிரித்தபோது, அவன் பறவையாக வானத்தில் சிறகடித்து, கடல் மேல் மிதந்து கொண்டிருந்தான்.

உஷா நேயா



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sat Jun 14, 2014 12:00 pm

krishnaamma wrote: ''யாமினி... என் நண்பன் சொல்வான்... 'கடவுளையும், வலியையும் உணரத்தான் முடியம்'ன்னு. இப்ப காதலையும், அதுல சேக்கணும்ன்னு தோணுது யாமினி.''
மேற்கோள் செய்த பதிவு: 1069051

சத்தியமான வரிகள்.  கதை அருமை. சூப்பருங்க அன்பு மலர் அன்பு மலர்



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31431
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Jun 14, 2014 12:20 pm

திடீர் திருப்பு முனையோட அமைந்த கதை  ஏற்றினாளே என் நெஞ்சில்! 3838410834 



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக