புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:14 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:02 am

» கருத்துப்படம் 04/06/2024
by mohamed nizamudeen Today at 7:53 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாக்தாத்தை நோக்கி தீவிரவாதிகள்; எந்த நேரத்திலும் அமெரிக்கா வான்வழி தாக்குதல் Poll_c10பாக்தாத்தை நோக்கி தீவிரவாதிகள்; எந்த நேரத்திலும் அமெரிக்கா வான்வழி தாக்குதல் Poll_m10பாக்தாத்தை நோக்கி தீவிரவாதிகள்; எந்த நேரத்திலும் அமெரிக்கா வான்வழி தாக்குதல் Poll_c10 
30 Posts - 50%
heezulia
பாக்தாத்தை நோக்கி தீவிரவாதிகள்; எந்த நேரத்திலும் அமெரிக்கா வான்வழி தாக்குதல் Poll_c10பாக்தாத்தை நோக்கி தீவிரவாதிகள்; எந்த நேரத்திலும் அமெரிக்கா வான்வழி தாக்குதல் Poll_m10பாக்தாத்தை நோக்கி தீவிரவாதிகள்; எந்த நேரத்திலும் அமெரிக்கா வான்வழி தாக்குதல் Poll_c10 
29 Posts - 48%
mohamed nizamudeen
பாக்தாத்தை நோக்கி தீவிரவாதிகள்; எந்த நேரத்திலும் அமெரிக்கா வான்வழி தாக்குதல் Poll_c10பாக்தாத்தை நோக்கி தீவிரவாதிகள்; எந்த நேரத்திலும் அமெரிக்கா வான்வழி தாக்குதல் Poll_m10பாக்தாத்தை நோக்கி தீவிரவாதிகள்; எந்த நேரத்திலும் அமெரிக்கா வான்வழி தாக்குதல் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாக்தாத்தை நோக்கி தீவிரவாதிகள்; எந்த நேரத்திலும் அமெரிக்கா வான்வழி தாக்குதல் Poll_c10பாக்தாத்தை நோக்கி தீவிரவாதிகள்; எந்த நேரத்திலும் அமெரிக்கா வான்வழி தாக்குதல் Poll_m10பாக்தாத்தை நோக்கி தீவிரவாதிகள்; எந்த நேரத்திலும் அமெரிக்கா வான்வழி தாக்குதல் Poll_c10 
72 Posts - 57%
heezulia
பாக்தாத்தை நோக்கி தீவிரவாதிகள்; எந்த நேரத்திலும் அமெரிக்கா வான்வழி தாக்குதல் Poll_c10பாக்தாத்தை நோக்கி தீவிரவாதிகள்; எந்த நேரத்திலும் அமெரிக்கா வான்வழி தாக்குதல் Poll_m10பாக்தாத்தை நோக்கி தீவிரவாதிகள்; எந்த நேரத்திலும் அமெரிக்கா வான்வழி தாக்குதல் Poll_c10 
50 Posts - 39%
mohamed nizamudeen
பாக்தாத்தை நோக்கி தீவிரவாதிகள்; எந்த நேரத்திலும் அமெரிக்கா வான்வழி தாக்குதல் Poll_c10பாக்தாத்தை நோக்கி தீவிரவாதிகள்; எந்த நேரத்திலும் அமெரிக்கா வான்வழி தாக்குதல் Poll_m10பாக்தாத்தை நோக்கி தீவிரவாதிகள்; எந்த நேரத்திலும் அமெரிக்கா வான்வழி தாக்குதல் Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
பாக்தாத்தை நோக்கி தீவிரவாதிகள்; எந்த நேரத்திலும் அமெரிக்கா வான்வழி தாக்குதல் Poll_c10பாக்தாத்தை நோக்கி தீவிரவாதிகள்; எந்த நேரத்திலும் அமெரிக்கா வான்வழி தாக்குதல் Poll_m10பாக்தாத்தை நோக்கி தீவிரவாதிகள்; எந்த நேரத்திலும் அமெரிக்கா வான்வழி தாக்குதல் Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாக்தாத்தை நோக்கி தீவிரவாதிகள்; எந்த நேரத்திலும் அமெரிக்கா வான்வழி தாக்குதல்


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jun 13, 2014 5:18 pm



ஈராக் நாட்டில் தீவிரவாதிகள் மேலும் 2 நகரங்களைக் கைப்பற்றி விட்டனர். அவர்கள் மீது அமெரிக்கா எந்த நேரத்திலும் வான்வழி தாக்குதல் நடத்தலாம் என தெரியவந்துள்ளது.

ஈராக் நாட்டில் கடந்த ஜனவரி மாதம் முதல் சன்னி முஸ்லிம் பிரிவைச் சேர்ந்த ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள், ஷியா முஸ்லிம் அரசு படையினருக்கு எதிராக தாக்குதல்கள் தொடுத்து வந்தனர். ஈராக்கிலும், சிரியாவிலும் தங்களுக்கென்று ஒரு நாட்டை உருவாக்க வேண்டும் என்பதுதான் அவர்களது நோக்கம்.

இந்த நிலையில் கடந்த 9 ந் தேதி அவர்கள் அதிரடியாக நாட்டின் 2வது பெரிய நகரமான மொசூலை தங்கள் பிடியின்கீழ் கொண்டு வந்தனர். அங்கிருந்து 5 லட்சம் மக்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றினர்.

தொடர்ந்து முன்னாள் அதிபர் சதாம் உசேனின் சொந்த நகரமான திக்ரித் நகரையும் தீவிரவாதிகள் தங்கள் வசப்படுத்தினர். மேலும் தலைநகர் பாக்தாத்தைக் குறிவைத்து அவர்கள் தெற்கு நோக்கி முன்னேறி வருகின்றனர். இந்த நிலையில், தியாலா மாகாணத்தில் சாதியா, ஜலாலா நகரங்களையும், ஹிம்ரீன் மலைப்பகுதியில் உள்ள கிராமங்களையும் அவர்கள் கைப்பற்றி உள்ளனர். அங்கிருந்து அரசுப் படையினர் தங்கள் நிலைகளையும், ஆயுதங்களையும், வாகனங்களையும் அப்படியே விட்டு விட்டு ஓட்டம் பிடித்து விட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. அங்குள்ள மக்கள் கூட்டம் கூட்டமாக ஈரான் எல்லையில் உள்ள கானிகின் நகரை நோக்கி செல்வதாக தகவல் வெளியாகி உள்ளது.

இப்படி ஈராக்கில் தீவிரவாதிகளின் கை ஓங்கி வருகிற நிலையில், அந்த நாட்டின் பிரதமர் நூரி அல் மாலிக்கி, அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா நிர்வாகத்துடன் ரகசியப் பேச்சு நடத்தியுள்ளார். இதையடுத்து ஈராக்கில் உள்ள தீவிரவாதிகளுக்கு எதிராக வான்வழி தாக்குதல் நடத்துவது குறித்து அமெரிக்கா தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது.

இது தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவிடம், ஈராக்கில் தீவிரவாதிகள் மீது வான்வழி தாக்குதல் நடத்தும் யோசனை அமெரிக்காவுக்கு உள்ளதா? என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், எந்தவொரு வாய்ப்பும் இல்லை என்று கூறிவிட மாட்டேன். ஈராக்கிலும் சரி, சிரியாவிலும் சரி இந்தத் தீவிரவாதிகள் தங்களுக்கு என்று நிலையான இடத்தை உருவாக்கிவிடக்கூடாது. இது தொடர்பாக ஈராக்கியர்களுடன் கலந்தாலோசனை நடந்து வருகிறது. எனவே மிகக்குறுகிய காலத்தில் அங்கு உடனடி ராணுவ நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என பதில் அளித்தார். எனவே ஈராக்கில் தீவிரவாதிகள் மீது அமெரிக்கா எந்த நேரத்திலும் வான்வழி தாக்குதல் நடத்தக்கூடும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 16, 2014 12:00 am

ஈராக்கில் தீவிரவாதிகளுக்கு எதிராக ராணுவம் அதிரடி, அமெரிக்க போர்க்கப்பல் விரைகிறது

ஈராக்கில் தீவிரவாதிகளுக்கு எதிராக ராணுவம் அதிரடி தாக்குதல்களை தொடங்கியுள்ளது. இதனால் தீவிரவாதிகளுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

ஈராக்கில் ஷியா முஸ்லிம் அரசுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி சன்னி முஸ்லிம் தீவிரவாதிகளான ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் சண்டையிட்டு வருகின்றனர். அவர்கள் ஈராக்கில் மொசூல், திக்ரித், சாதியா, ஜலாலா, இஷாகி நகர் உள்ளிட்ட நகரங்களை பிடித்தனர். மக்களையும் விரட்டி அடித்தனர். அங்கிருந்து அரசுப் படையினர் தங்கள் நிலைகளையும், ஆயுதங்களையும், வாகனங்களையும் அப்படியே விட்டு விட்டு ஓட்டம் பிடித்து விட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. அங்குள்ள மக்கள் கூட்டம் கூட்டமாக ஈரான் எல்லையில் உள்ள கானிகின் நகரை நோக்கி செல்வதாக தகவல் வெளியாகி உள்ளது.

தொடர்ந்து தலைநகர் பாக்தாத்தை குறிவைத்து அவர்கள் முன்னேறி வந்தனர். இந்த நிலையில், ஈராக் ராணுவம் சலாலுதீன் மாநிலத்தில் தீவிரவாதிகள் வசமிருந்து இஷாகி உள்ளிட்ட சில பகுதிகளை மீட்டு விட்டது. இதனால் பாக்தாத் நோக்கிய தீவிரவாதிகளின் நகர்தல் வேகம் குறைந்துள்ளது. இதற்கிடையே ஈராக் மீது ராணுவ நடவடிக்கை எடுப்பதற்கான வாய்ப்புகள் குறித்து அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா பரிசீலித்து வருகிறார்.

இது தொடர்பாக ஈராக் வெளியுறவுத்துறை மந்திரியுடன் அமெரிக்க வெளியுறவு மந்திரி ஜான் கெர்ரி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவர், ஈராக் தலைவர்கள் தங்கள் கருத்து வேறுபாடுகளை மறந்து, நாட்டின் ஒற்றுமையைக் கருத்தில் கொண்டு ஓரணியில் திரண்டால்தான் அமெரிக்காவின் உதவி வெற்றியில் முடியும் என கூறினார். இந்த நிலையில் அமெரிக்காவின் யுஎஸ் ஜார்ஜ் எச் டபிள்யூ புஷ் விமானம் தாங்கி போர்க்கப்பலை ஈராக் மீது வான்வழி தாக்குதல் நடத்த வசதியாக பெர்சியா வளைகுடா பகுதிக்கு விரையுமாறு அமெரிக்க ராணுவ மந்திரி சக் ஹேகல் உத்தரவிட்டார். அந்தக் கப்பல் தற்போது பெர்சியா வளைகுடா நோக்கி தனது பயணத்தை தொடங்கி உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.




பாக்தாத்தை நோக்கி தீவிரவாதிகள்; எந்த நேரத்திலும் அமெரிக்கா வான்வழி தாக்குதல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 16, 2014 4:34 pm

ஈராக்கில் முற்றியது தீவிரவாத தாக்குதல்: ராணுவத்தினர் படுகொலை
பாக்தாத்தை நோக்கி தீவிரவாதிகள்; எந்த நேரத்திலும் அமெரிக்கா வான்வழி தாக்குதல் Tamil_News_98810541630பாக்தாத்: ஈராக்கில், ஷியா பிரிவினர் ஆதரவுடன் ராணுவத்துக்கும்  சன்னி பிரிவினருக்கும் இடையே நடைபெறும் மோதல்  தீவிரமடைந்துள்ளது. பிடிபட்ட ராணுவ வீரர்கள் மற்றும் ஷியா  பிரிவினரை, சன்னி பிரிவு தீவிரவாதிகள் ஒட்டுமொத்தமாக சுட்டுக்  கொன்ற சம்பவம் உலக நாடுகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  ஈராக் அதிபர் சதாம் உசேனின் வீழ்ச்சிக்கு பிறகு, ஷியா பிரிவு  தலைவர்களிடம் ஆட்சியை ஒப்படைத்து விட்டு அமெரிக்க ராணுவம்  வெளியேறியது. தற்போது சதாம் உசேனின் ஆதரவாளர்களான சன்னி  பிரிவினரின் கை மீண்டும் ஓங்கியுள்ளது.

ஐ.எஸ்.ஐ.எல் (இஸ்லாமிக் ஸ்டேட் ஆப் ஈராக் அண்ட த லெவன்ட்)  என்ற படையை உருவாக்கி ஆயுதம் ஏந்தி போராடுகின்றனர். மொசுல்,  திக்ரித் உட்பட பல்வேறு நகரங்களைக் கைப்பற்றிய சன்னி பிரிவினர்  தலைநகர் பாக்தாத் நோக்கி முன்னேறினர். அதைப் கைப்பற்ற  விடாமல் தடுக்க ஷியா பிரிவினர் ஆதரவுடன் ராணுவம் தடுப்பு  நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மோசூலுக்கு மேற்கே  உள்ள தல்அஃபார் நகரில் இரு தரப்புக்கும் இடையே கடுமையான  பீரங்கி தாக்குதல் நடைபெறுகிறது. ராணுவத்தினரிடமிருந்து பறிமுதல்  செய்யப்பட்ட ஆயுதங்களைக் கொண்டு தாக்குதல் நடத்தியபடி சன்னி  பிரிவினர் இங்கு முன்னேறி வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

பாக்தாத் நகரை தீவிரவாதிகள் கைப்பற்றும் முயற்சியை ராணுவம்  தடுத்தி நிறுத்தியுள்ளது. இந்நிலையில் கைது செய்யப்பட்ட  ராணுவத்தினர் மற்றும் ஷியா பிரிவினரை, சன்னி பிரிவினர் சுட்டுக்  கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈராக் பிரச்னையில்  மீண்டும் தலையிட்டு, மீண்டும்   ராணுவத்தை களம் இறக்க அமெரிக்க  அதிபர் ஒபாமா விரும்பவில்லை. இருந்தாலும் விமான தாக்குதல்  நடத்தலாமா என்பது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.  இந்நிலையில் அமெரிக்க போர்க்கப்பல் ஒன்று வளைகுடா பகுதிக்கு  செல்ல உத்தரவிடப்பட்டுள்ளது.

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Mon Jun 16, 2014 4:36 pm

இது ஓயவே ஓயாதா?

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 16, 2014 4:39 pm

மாணிக்கம் நடேசன் wrote:இது ஓயவே ஓயாதா?

ஓய்ந்த பாடில்லையே! தினமும் குண்டு வெடிப்புகள், மரணங்கள், இப்பொழுது தீவிரவாதிகளின் தொடர் தாக்குதல்!



பாக்தாத்தை நோக்கி தீவிரவாதிகள்; எந்த நேரத்திலும் அமெரிக்கா வான்வழி தாக்குதல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Mon Jun 16, 2014 4:41 pm

நம்ம என்ன பண்ணமுடியும்?


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jun 17, 2014 12:05 am

இராக்கின் தல் அஃபார் நகரை கைப்பற்றியது சன்னி முஸ்லிம்கள் படை

இராக் நாட்டில் வடக்கு பிராந்தியத்தில் உள்ள முக்கிய நகரான தல் அஃபாரை இன்று அதிகாலை சன்னி முஸ்லிம்களின் படை கைப்பற்றியது. இத்தகவலை அந்நகரத்தின் மேயர் அப்துல்லா அப்தோல் உறுதிப் படுத்தியுள்ளார்.

அல் தபார் நகரில் 2 லட்சம் மக்கள் வாழ்கின்றனர். இவர்களில் ஷியா பிரிவினரும், சன்னி டர்கோமென் பிரிவினரும் அடங்குவர்.

ஏற்கெனவே முன்னாள் அதிபர் சதாம் உசேனின் சொந்த நகரான தெஹ்ரிக் உள்ளிட்ட பல்வேறு நகரங்களை சன்னி முஸ்லீமகள் கைப்பற்றிய நிலையில், ஷியா முஸ்லிம்களால் நடத்தப்படும் பிரதமர் நூரி அல் மாலிக்கி தலைமையிலான அரசு முடங்கும் நிலை உருவாகியுள்ளது.

நேற்று (ஞாயிற்றுக் கிழமை) முதல் அல் தபார் நகர் மீது சன்னி முஸ்லிம் படைகள் தாக்குதல் நடத்தி வந்த நிலையில் இன்று அதிகாலை நகரை முழுமையாக தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

பொதுமக்கள் பலர் கூட்டமாக கூட்டமாக குர்திஸ் படைகள் கட்டுப்பாட்டுக்குள் உள்ள இடங்களுக்கு இடம் பெயர்ந்து விட மேலும் பலர் பீதியில் வீடுகளுக்குள்ளேயே முடங்கியுள்ளதாக தெரிகிறது.

இராக் நாட்டில் ஷியா, சன்னி முஸ்லிம்களுக்கு இடையே நீண்ட காலமாக மோதல் நீடித்து வருகிறது. சன்னி பிரிவைச் சேர்ந்த சதாம் உசேன் வீழ்ச்சிக்குப் பின்னர், அமெரிக்க ஆதரவு பெற்ற ஷியா பிரிவு அரசு ஆட்சி செய்து வருகிறது.

இந்த அரசை எதிர்த்து சன்னி முஸ்லிம் பிரிவைச் சேர்ந்த “இஸ்லாமிக் ஸ்டேட் ஆப் இராக் அன்ட் தி லெவன்ட்' (ஐஎஸ்ஐஎல்)” என்ற அமைப்பு போரிட்டு வருகிறது. இந்த அமைப்புக்கு ஆதரவாக சதாம் உசேன் ஆதரவாளர்கள் மற்றும் இதர சன்னி பிரிவினர் களமிறங்கியுள்ளனர். அல்கொய்தாவும் ஆதரவு தெரிவித்துள்ளது.

ஐஎஸ்ஐஎல் படையினர் நாட்டின் 2-வது பெரிய நகரான மொசுல் உள்பட முக்கிய நகரங்களைக் கைப்பற்றியுள்ளனர். மொசுல் நகரில், ஷாரியா சட்டத்தை அமல்படுத்தப் போவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐஎஸ்ஐஎல் படைகள் தலைநகரான பாக்தாதுக்கு மிக அருகில் வந்துவிட்டன. இதனால், தற்போதுள்ள நிலைமையைச் சமாளிக்க முடியாமல் அங்குள்ள அரசுக்கு மிகப்பெரிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையில், ஐஎஸ்ஐஎல் அமைப்பின் இணையதளத்தில் ஈராக் படையினர் கொல்லப்பட்டு குவியல் குவியலாக குவிக்கப்பட்டிருப்பது போன்ற புகைப்படங்களை வெளியிடப்பட்டுள்ளது.



பாக்தாத்தை நோக்கி தீவிரவாதிகள்; எந்த நேரத்திலும் அமெரிக்கா வான்வழி தாக்குதல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jun 19, 2014 12:39 am

இராக்கில் தொடர்ந்து முன்னேறும் தீவிரவாதிகள்: ஏராளமானோர் சுட்டுக் கொலை

இராக் அரசின் அழைப்பை ஏற்று ராணுவப் பயிற்சி பெற கைத்துப்பாக்கியுடன் செல்லும் சிறுவன். படம்: ஏ.எப்.பி.
இராக் அரசின் அழைப்பை ஏற்று ராணுவப் பயிற்சி பெற கைத்துப்பாக்கியுடன் செல்லும் சிறுவன். படம்: ஏ.எப்.பி.

இராக்கின் வடக்குப் பிராந்தியத்தில் பெரும் பகுதியை சன்னி முஸ்லிம் பிரிவைச் சேர்ந்த தீவிரவாதிகள் கைப்பற்றியுள்ளனர். அங்கு அரசுப் படைகளுக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற மோதல்களில் ஏராளமானோர் கொல்லப் பட்டனர். நினிவே பிராந்தியத்தின் முக்கிய நகரான தல் அபாரின் பாதிப் பகுதி தற்போது தீவிரவாதிகளின் வசம் உள்ளது.

இந்த நகரில் சுமார் 700 தீவிரவாதிகள் முகாமிட்டிருப்பதாக உள்ளூர்வாசிகள் தெரிவிக் கின்றனர். பல்வேறு பகுதிகளில் தீவிரவாதிகள் தொடர்ந்து முன்னேறி வருகின்றனர். இதனி டையே தீவிரவாதிகளுக்கு எதிரான போரில் பொதுமக்களும் பங்கேற்க இராக் அரசு அழைப்பு விடுத்துள்ளது. இதை ஏற்று பெரும்பான்மை ஷியா முஸ்லிம்கள் ராணுவ பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இராக் தலைநகர் பாக்தாதில் உள்ள அமெரிக்க தூதரகத்துக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அமெரிக்க ராணுவ தலைமையகமான பென் டகன் வெளியிட்டுள்ள அறிக் கையில், இராக்கில் வசிக்கும் அமெரிக்கர்களின் பாதுகாப் புக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள் ளப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

இதனிடையே இராக் அரசியல் நிலவரம் தொடர்பாக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா ராணுவ உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். ஈரானுடன் இணைந்து இராக் தீவிரவாதிகளுக்கு எதிராக வான்வழி தாக்குதல் நடத்த அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.



பாக்தாத்தை நோக்கி தீவிரவாதிகள்; எந்த நேரத்திலும் அமெரிக்கா வான்வழி தாக்குதல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jun 19, 2014 12:48 am

இராக்கில் இந்தியக் கட்டுமானத் தொழிலாளர்கள் 40 பேர் கடத்தல்

இராக்கில் உள்ள மொசூல் நகரில் துருக்கிய கட்டுமான நிறுவனத்தில் பணியாற்றிய இந்திய தொழிலாளர்கள் 40 பேர் கடத்தப்பட்டுள்ளதாக இந்திய வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.

வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் சையத் அக்பருதீன் இதனை இன்று (புதன்கிழமை) உறுதி செய்தார்.

இராக்கில் 10,000 இந்தியர்கள் வசித்து வருகின்றனர். இதில் 100 பேர் வன்முறை மிகுந்த, பாதுகாப்பில்லாத பகுதிகளில் வசித்து வருகின்றனர்.

கடத்தப்பட்ட 40 தொழிலாளர்களும் பாதுகாப்பில்லாத பகுதியில் பணியாற்றி வந்தனர். மொசூல் தவிர திக்ரித் பகுதியில் மருத்துவமனையில் பணியாற்றி வரும் 46 இந்திய நர்ஸ்களும் பாதுகாப்பற்ற பகுதியில் வசிப்பதாக இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் சையத் அக்பருதீன் தெரிவித்தார்.

நர்ஸ்கள் தற்போது பாதுகாப்பாக இருப்பதாகவும் அவர்களை வெளியே வர வேண்டாம் என்று எச்சரித்துள்ளதாகவும் குறிப்பிட்ட அவர், கடத்தப்பட்ட தொழிலாளர்கள் பற்றிய விவரம் குறித்து தங்களுக்கு இன்னும் எந்தச் செய்தியும் வரவில்லை என்றார்.

இது குறித்து விவரங்களை அறிய மூத்த அதிகாரி ஒருவர் பாக்தாத்திற்கு இன்று அனுப்பப்பட்டுள்ளார்.



பாக்தாத்தை நோக்கி தீவிரவாதிகள்; எந்த நேரத்திலும் அமெரிக்கா வான்வழி தாக்குதல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jun 19, 2014 12:48 am

இராக் அரசு எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை தீவிரவாதிகள் கைப்பற்றினர்

இராக்கின் முக்கிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையான பாய்ஜி ஆலையின் ஒரு பகுதியை அரசுக்கு எதிரான தீவிரவாத படையினர் கைப்பற்றினர்.

தீவிரவாதிகள் மேலும் முன்னேறாத வகையில் பாதுகாப்புப் படையினர் கடும் சண்டையில் ஈடுபட்டுள்ளனர்.

இராக் தலைநகர் பாக்தாத்தின் வடக்கே உள்ள சலாஹெய்டின் மாகாணத்தில் இருக்கிறது பாய்ஜி எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை. இந்திய நேரப்படி இன்று காலை 5.30 மணியளவில் இந்த ஆலையின் ஒரு பகுதியை தீவிரவாதிகள் கைப்பற்றினர்.

இத்தகவலை ஆலையின், மூத்த மேலாளரும் உறுதி செய்துள்ளார். மேலும் அவர் கூறுகையில் தீவிரவாதிகள் முன்னேறாத வகையில் பாதுகாப்புப் படையினர் தாக்குதலில் ஈடுபட்டு வருவதாகவும் கூறினார்.

இராக்கின் இரண்டாவது பெரிய நகரான மொசுல் நகரை தீவிரவாதிகள் கைப்பற்றிய உடனேயே, பாய்ஜி ஆலையில் பணியாற்றிய பல ஊழியர்கள் வெளியேறிவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.



பாக்தாத்தை நோக்கி தீவிரவாதிகள்; எந்த நேரத்திலும் அமெரிக்கா வான்வழி தாக்குதல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக