புதிய பதிவுகள்
» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Today at 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Today at 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Today at 8:28 am

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Today at 8:22 am

» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Today at 7:18 am

» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Today at 7:14 am

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Today at 12:36 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Today at 12:34 am

» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Today at 12:31 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Today at 12:30 am

» கருத்துப்படம் 24/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:20 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 9:15 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Yesterday at 7:28 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Yesterday at 7:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:28 pm

» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:25 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:46 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:43 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» செய்திகள்- மே 24
by ayyasamy ram Yesterday at 10:27 am

» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Thu May 23, 2024 7:17 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Thu May 23, 2024 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Thu May 23, 2024 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Thu May 23, 2024 7:05 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Thu May 23, 2024 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Thu May 23, 2024 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Thu May 23, 2024 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Thu May 23, 2024 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Thu May 23, 2024 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Thu May 23, 2024 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Thu May 23, 2024 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Thu May 23, 2024 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Thu May 23, 2024 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Thu May 23, 2024 10:38 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காஞ்சி கொலையும் மகா பெரியவர் தீர்ப்பும்! Poll_c10காஞ்சி கொலையும் மகா பெரியவர் தீர்ப்பும்! Poll_m10காஞ்சி கொலையும் மகா பெரியவர் தீர்ப்பும்! Poll_c10 
87 Posts - 50%
heezulia
காஞ்சி கொலையும் மகா பெரியவர் தீர்ப்பும்! Poll_c10காஞ்சி கொலையும் மகா பெரியவர் தீர்ப்பும்! Poll_m10காஞ்சி கொலையும் மகா பெரியவர் தீர்ப்பும்! Poll_c10 
66 Posts - 38%
T.N.Balasubramanian
காஞ்சி கொலையும் மகா பெரியவர் தீர்ப்பும்! Poll_c10காஞ்சி கொலையும் மகா பெரியவர் தீர்ப்பும்! Poll_m10காஞ்சி கொலையும் மகா பெரியவர் தீர்ப்பும்! Poll_c10 
8 Posts - 5%
Anthony raj
காஞ்சி கொலையும் மகா பெரியவர் தீர்ப்பும்! Poll_c10காஞ்சி கொலையும் மகா பெரியவர் தீர்ப்பும்! Poll_m10காஞ்சி கொலையும் மகா பெரியவர் தீர்ப்பும்! Poll_c10 
4 Posts - 2%
mohamed nizamudeen
காஞ்சி கொலையும் மகா பெரியவர் தீர்ப்பும்! Poll_c10காஞ்சி கொலையும் மகா பெரியவர் தீர்ப்பும்! Poll_m10காஞ்சி கொலையும் மகா பெரியவர் தீர்ப்பும்! Poll_c10 
4 Posts - 2%
bhaarath123
காஞ்சி கொலையும் மகா பெரியவர் தீர்ப்பும்! Poll_c10காஞ்சி கொலையும் மகா பெரியவர் தீர்ப்பும்! Poll_m10காஞ்சி கொலையும் மகா பெரியவர் தீர்ப்பும்! Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
காஞ்சி கொலையும் மகா பெரியவர் தீர்ப்பும்! Poll_c10காஞ்சி கொலையும் மகா பெரியவர் தீர்ப்பும்! Poll_m10காஞ்சி கொலையும் மகா பெரியவர் தீர்ப்பும்! Poll_c10 
1 Post - 1%
சண்முகம்.ப
காஞ்சி கொலையும் மகா பெரியவர் தீர்ப்பும்! Poll_c10காஞ்சி கொலையும் மகா பெரியவர் தீர்ப்பும்! Poll_m10காஞ்சி கொலையும் மகா பெரியவர் தீர்ப்பும்! Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
காஞ்சி கொலையும் மகா பெரியவர் தீர்ப்பும்! Poll_c10காஞ்சி கொலையும் மகா பெரியவர் தீர்ப்பும்! Poll_m10காஞ்சி கொலையும் மகா பெரியவர் தீர்ப்பும்! Poll_c10 
1 Post - 1%
Guna.D
காஞ்சி கொலையும் மகா பெரியவர் தீர்ப்பும்! Poll_c10காஞ்சி கொலையும் மகா பெரியவர் தீர்ப்பும்! Poll_m10காஞ்சி கொலையும் மகா பெரியவர் தீர்ப்பும்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
காஞ்சி கொலையும் மகா பெரியவர் தீர்ப்பும்! Poll_c10காஞ்சி கொலையும் மகா பெரியவர் தீர்ப்பும்! Poll_m10காஞ்சி கொலையும் மகா பெரியவர் தீர்ப்பும்! Poll_c10 
261 Posts - 46%
ayyasamy ram
காஞ்சி கொலையும் மகா பெரியவர் தீர்ப்பும்! Poll_c10காஞ்சி கொலையும் மகா பெரியவர் தீர்ப்பும்! Poll_m10காஞ்சி கொலையும் மகா பெரியவர் தீர்ப்பும்! Poll_c10 
229 Posts - 41%
mohamed nizamudeen
காஞ்சி கொலையும் மகா பெரியவர் தீர்ப்பும்! Poll_c10காஞ்சி கொலையும் மகா பெரியவர் தீர்ப்பும்! Poll_m10காஞ்சி கொலையும் மகா பெரியவர் தீர்ப்பும்! Poll_c10 
21 Posts - 4%
T.N.Balasubramanian
காஞ்சி கொலையும் மகா பெரியவர் தீர்ப்பும்! Poll_c10காஞ்சி கொலையும் மகா பெரியவர் தீர்ப்பும்! Poll_m10காஞ்சி கொலையும் மகா பெரியவர் தீர்ப்பும்! Poll_c10 
16 Posts - 3%
prajai
காஞ்சி கொலையும் மகா பெரியவர் தீர்ப்பும்! Poll_c10காஞ்சி கொலையும் மகா பெரியவர் தீர்ப்பும்! Poll_m10காஞ்சி கொலையும் மகா பெரியவர் தீர்ப்பும்! Poll_c10 
11 Posts - 2%
சண்முகம்.ப
காஞ்சி கொலையும் மகா பெரியவர் தீர்ப்பும்! Poll_c10காஞ்சி கொலையும் மகா பெரியவர் தீர்ப்பும்! Poll_m10காஞ்சி கொலையும் மகா பெரியவர் தீர்ப்பும்! Poll_c10 
9 Posts - 2%
jairam
காஞ்சி கொலையும் மகா பெரியவர் தீர்ப்பும்! Poll_c10காஞ்சி கொலையும் மகா பெரியவர் தீர்ப்பும்! Poll_m10காஞ்சி கொலையும் மகா பெரியவர் தீர்ப்பும்! Poll_c10 
4 Posts - 1%
Jenila
காஞ்சி கொலையும் மகா பெரியவர் தீர்ப்பும்! Poll_c10காஞ்சி கொலையும் மகா பெரியவர் தீர்ப்பும்! Poll_m10காஞ்சி கொலையும் மகா பெரியவர் தீர்ப்பும்! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
காஞ்சி கொலையும் மகா பெரியவர் தீர்ப்பும்! Poll_c10காஞ்சி கொலையும் மகா பெரியவர் தீர்ப்பும்! Poll_m10காஞ்சி கொலையும் மகா பெரியவர் தீர்ப்பும்! Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
காஞ்சி கொலையும் மகா பெரியவர் தீர்ப்பும்! Poll_c10காஞ்சி கொலையும் மகா பெரியவர் தீர்ப்பும்! Poll_m10காஞ்சி கொலையும் மகா பெரியவர் தீர்ப்பும்! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காஞ்சி கொலையும் மகா பெரியவர் தீர்ப்பும்!


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Dec 06, 2013 2:31 am

காஞ்சி கொலையும் மகா பெரியவர் தீர்ப்பும்! Ew96b7HSVCIWI0HwElFg+p84 

 மதுரை வீதியில் தா.கிருட்டிணன், தன்னைத்தானே வெட்டி, தற்கொலை(!) செய்துகொண்டதைப் போலவே... காஞ்சி கோயிலில் சங்கர்ராமனும் தன்னைத்தானே வெட்டிக்கொண்டு சாவைத் தழுவியதாகச் சரித்திரம் எழுதப்பட்டால், வருங்காலம் நம்மைக் காறி உமிழும். இரண்டு வழக்குகளிலுமே உண்மையான குற்றவாளிகள் யார் என்று கண்டுபிடிக்கப் படாதது, கலிகாலக் கொடுமை!

ஆச்சாரம் அறிந்தவர்களுக்குத் தெரியும். அது... சாதாரண காஞ்சிபுரம் அல்ல, நகரேஷ§ காஞ்சி. வைணவர்களுக்குத் தெரியும்... சங்கர்ராமன் கொலை நிகழ்ந்த வரதராஜப் பெருமாள் கோயில், சாமான்ய மானது அல்ல. சங்கர்ராமன் கொலை செய்யப்பட்டு ரத்தக் குளத்தில் கிடந்த இடத்தில் கோயில்கொண்டுள்ள வரதராஜப் பெருமாளுக்கு, 'பேரருளாளன்’ என்று பெயர். திருப்பதியிலும் ஸ்ரீரங்கத்திலும் இருக்கும் பெருமாளுக்குக்கூட இந்த அடைமொழி இல்லை. 'எனக்கு ஏதோ ஒண்ணு நடக்கப் போகுது. வீட்டுல இருக்கிறதைவிட கோயில்ல இருந்தா பாதுகாப்பு’ என்று தனக்கு அறிமுகமான காஞ்சிபுரம் வழக்கறிஞர் ஒருவரிடம் சொல்லிவிட்டு, வரதராஜப் பெருமாள் கோயிலிலேயே அதிகம் தங்கிவந்தார் சங்கர்ராமன். ஆனால், அந்தக் கோயிலிலேயே கொடியவர்கள் அவரைக் கொன்றுவிட்டார்கள். அந்தக் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 25 பேருக்கும் இப்போது விடுதலை!

நான்கு மாதக் காலம், 479 பேரிடம் விசாரணை நடத்தி, 712 ஆவணங்களுடன் தயாரித்த 1,873 பக்கக் குற்றப்பத்திரிகையை (2005 ஜனவரி-21) வரதராஜப் பெருமாள் கோயில் கர்ப்பக்கிரகத்தில் வைத்து, பூஜை செய்துவிட்டு வெளியே வந்த வழக்கின் விசாரணை அதிகாரி எஸ்.பி., பிரேம்குமார், ''எங்கள் கடமையை நாங்கள் முடித்துவிட்டோம். இனி வழக்கை வரதராஜப் பெருமாள் பார்த்துக்கொள்வார்'' என்று சொன்னார். இப்போது இதைப் பார்க்க பிரேம்குமார் உயிரோடு இல்லை. சங்கர்ராமன் மனைவி பத்மா, இப்போதும் நம்பிக்கையை இழக்கவில்லை. ''எல்லாத்தையும் கடவுள் பார்த்துண்டுதான் இருக்கார்'' என்கிறார். ஆம்... கடவுள் கவனிக்கத்தான் வேண்டும். ஏனென்றால் சங்கர்ராமன், இந்த நாட்டின் சட்டங்களைவிட பெருமாளையும், மகா பெரியவரையும்தான் முழுமையாக நம்பினார்!

'பல ஆண்டுகளாக குழந்தை இல்லாமல் இருந்த என் பெற்றோரை அழைத்த ஸ்ரீபெரியவாள், 'ராமேஸ்வரம் போ... பிள்ளை பிறக்கும்’ என அருளுரைத்து, ஸ்ரீமடத்தின் மூலம் பயண ஏற்பாடும் செய்தார். பரமசிவன் அவதாரமான ஸ்ரீபெரியவாள் அருளால் ராமேஸ்வரம் சென்றுவந்த பிறகு நான் பிறந்ததால் 'சங்கர்ராமன்’ எனப் பெயரிட்டனர். எனக்கும் ஸ்ரீபெரியவாளுக்கும் குரு-சிஷ்ய நிலையைவிட தாத்தா-பேரன் பாவமே இருந்தது. பல நேரங்களில் மணிக்கணக்கில் புராணம், சாஸ்திரம், சரித்திரம், சட்டம், நிர்வாகம், மொழி, மக்கள்குறித்த செய்திகளை என்னிடம் கூறியுள்ளார். சிறியவனான எனக்கு, ஏன் அவர் இவற்றை மணிக்கணக்கில் சொல்ல வேண்டும் என நான் வியந்தது உண்டு. இந்தத் தகவல் ஜெயேந்திரருக்கு நன்றாகத் தெரியும்’ - கொலை செய்யப்படுவதற்கு நான்கு நாட்களுக்கு முன் சங்கர்ராமன் எழுதிய கடிதத்தில் உள்ள வாசகங்கள் இவை.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Dec 06, 2013 2:31 am

'சோமசேகர கனபாடிகள், தெற்கு மடவிளாகம், ஜம்புகேஸ்வரர் ஷேத்திரம், திருச்சி’ என்ற அநாமதேய முகவரி போட்டு கடிதம் அனுப்பிய சங்கர்ராமன், கடைசியில் அநாதையாகவே இறந்துபோனார். ஒன்பது ஆண்டுகள் கழிந்த நிலையிலும் 'யார் கொலைகாரன்?’ எனக் கண்டுபிடிக்க முடியவில்லை. கண்டுபிடிக்கும் அக்கறையும் எவருக்கும் இல்லை!

கொலை செய்யப்பட்டவர் ஓர் இந்து. கொலை நடந்த இடம் பிரசித்திபெற்ற இந்துக் கோயில். ஆனால், இந்து மதத்தைக் காப்பாற்றுவதற்கான அவதாரப் புருஷர்களாக, மதத்தின் காவல் அரண்களாகத் தங்களைக் காட்டிக்கொள்பவர்கள் கண் மூடிக் கிடக்கிறார்கள். சங்கர்ராமன் வீட்டில் பி.ஜே.பி. உறுப்பினர் அட்டை இல்லையா? பத்மா, பெரும் பணக்காரராக இல்லையா? வசதி படைத்த, அரசியல் அதிகாரம்கொண்டவர்கள் கொலைகளுக்கு மட்டுமே நீதி கேட்பவர்கள், அப்பாவி சங்கர்ராமன் சாவுக்கு ஒரு பூ வைக்கக்கூட வரவில்லையே... ஏன்? செத்தவர் ஏழை என்பதாலா? கொன்றவன், 'அதிகாரம் படைத்தவனாக இருப்பானோ?’ என்ற அச்சத்தினாலா?

'என் கணவரைக் கொன்றுவிட்டதைப் போல என்னையும் என் பிள்ளைகளையும் கொலை செய்துவிடுவதாக மிரட்டுகிறார்கள்’ என்று பத்மா கதறியபோது, 10 பேர் அவர் வீட்டுக்கு முன் திரண்டிருந்தால், அந்த விதவைப் பெண்ணுக்கு நெஞ்சில் கொஞ்சமாவது தைரியம் வந்திருக்குமே? 'எங்களை மறுவிசாரணை செய்ய வேண்டும். அன்று, பலரும் எங்களை மிரட்டியதால் மாற்றிச் சொல்லி, பிறழ்சாட்சி சொல்லவேண்டியதாயிற்று. இப்போது சரியாகச் சொல்லத் தயாராக இருக்கிறோம்’ என்று சங்கர் ராமனின் மகன் ஆனந்த் சர்மா, அலறியபடி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தபோது, இரண்டு பேர் அவர்களுக்குப் பக்கத்தில் போய் நின்றிருந்தால், பயம் இல்லாமல் குற்றவாளிகளை அடையாளம் காட்டி இருப்பார்களே? கோயில், ஆச்சாரம், அனுஷ்டானம், பழம்பெருமை, ஸ்ரீபெரியவாள், ஸ்ரீமடம் என்று பேசிக்கொண்டே இருந்த ஒருவரை, அநாதையாகப் பலி கொடுத்துவிட்டு, அவரது குடும்பத்தைப் பரிதவிக்கவிட்டு... இந்த இந்துக்களைக் காப்பாற்றாமல் எந்த மதத்தைக் காப்பாற்றப்போகிறீர்கள்?

எந்த ஒரு வழக்கிலும் இத்தனை பேர் பிறழ்சாட்சிகளாக ஆனது இல்லை. குற்ற விசாரணை முறைச் சட்டத்தின் 161-வது பிரிவின்படி, காவல் துறை அதிகாரி முன்புதான் குற்றம்சாட்டப்பட்டவர்கள், ஒப்புதல் வாக்குமூலம் கொடுப்பார்கள். பிறகு, 'போலீஸ் அடித்ததால் இப்படி ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தேன்’ என்று நீதிமன்றத்தில் மாற்றிச் சொல்வார்கள். இப்படியெல்லாம் நடக்கும் என்று உணர்ந்த எஸ்.பி., பிரேம்குமார், ஒப்புதல் வாக்குமூலம் அனைத்தையும், பிரிவு 164-ன்படி நீதித் துறை நடுவர் முன்னிலையில் பதிவு செய்தார். அதுவும் இந்த வழக்கில் செல்லுபடி ஆகவில்லை. 'நீதிபதி மிரட்டினார்... நான் இப்படிச் சொன்னேன்’ என்று சொல்ல முடியாது என்பதால், 'வெளியில் போலீஸ்காரர்கள் நின்றுகொண்டு மிரட்டி உள்ளே அனுப்பினார்கள்’ என்று விசாரணையின்போது சொல்லிவிட்டார்கள். அதனால் அனைவருமே விடுவிக்கப்பட்டுவிட்டார்கள். அதிகாரம் பொருந்திய அனைத்து வழக்குகளிலும் இதுதான் நடக்கிறது.

கடற்படையின் முன்னாள் தளபதி நந்தாவின் பேரன் சஞ்சீவ் நந்தா, கார் ஓட்டிச் சென்றபோது மோதி, ஆறு பேர் இறந்துபோனார்கள். சம்பவத்தை நேரில் பார்த்த மூன்று பேருமே பிறழ்சாட்சிகளாக ஆனார்கள். இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதி கே.எஸ்.ராதாகிருஷ்ணன் முன் வந்தபோது, அவர் அளித்த தீர்ப்பு, இப்போது இப்படியான வழக்குகளில் பின்பற்றத்தக்கது.

'தற்போது முக்கியமான சில வழக்குகளில் சாட்சியம் அளிப்பவர்கள் பிறழ்சாட்சிகளாக மாறிவிடும் போக்கு அதிகரித்துவருகிறது. பணம் மற்றும் சில கவர்ச்சிகரமான சலுகைகளுக்கு மயங்கிப் பிறழ்சாட்சியங்கள் ஆகிவிடுகின்றனர். இது ஆரோக்கியமானது அல்ல. இந்தப் போக்கு அதிகரித்தால், நீதித் துறை மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கை படிப்படியாகக் குறைந்துவிடும். இந்த நடைமுறையை அனுமதிக்கக் கூடாது. பிறழ்சாட்சியாக மாறுவோரைப் பார்த்துக்கொண்டே அமைதியாக இருக்கவும் கூடாது. உண்மையை வெளிக்கொண்டுவர அனைத்து முயற்சிகளையும் அந்த வழக்கை விசாரிக்கும் நீதிமன்றம்தான் மேற்கொள்ள வேண்டும்’ என்றார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Dec 06, 2013 2:31 am

'தங்கள் முன் உள்ள சாட்சி, முன்பு கூறியதை மாற்றிச் சொன்னால், அவரைக் குடைந்து குடைந்து... கேள்வி எழுப்பி உண்மையை வரவழைக்கவேண்டிய பெரும் பொறுப்பு அரசுத் தரப்பு வழக்கறிஞருக்கும் நீதிபதிக்குமே இருக்கிறது’ என்கிறது உச்ச நீதிமன்றம். எல்லோரும் பிறழ்சாட்சிகள் ஆகிவிட்டார்கள் என்று விடுவிக்க ஆரம்பித்தால், சிறைச்சாலைக்கு பூட்டுகள் தேவையே இல்லை!

'திரு.சங்கர்ராமன் கொடூரமாகக் கொல்லப்பட்டதிலும், இவ்வாறு கொலை செய்வதற்குக் கூலியாக காஞ்சி மடத்தின் வங்கிக் கணக்கில் இருந்து பெரும் தொகை கை மாறியதிலும், வழக்கின் போக்கைத் திசைதிருப்பும் தந்திரமாக, குற்றம் செய்ததாகப் பொய்யாக ஒப்புதல் அளித்து ஐந்து போலி நபர்கள் சரண் அடைந்ததிலும், கொலைக் கூட்டாளிகளுடன் தொலைபேசி மூலம் உரையாடியதிலும் காஞ்சி சங்கர மடத்தின் தலைமைப் பொறுப்பில் இருக்கும், ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளுக்கு உள்ள தொடர்பு பற்றிய உறுதியான திடுக்கிடும் தகவல்கள் கிடைத்திருக்கின்றன!’ - 2004 நவம்பர் 17 அன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் இப்படிக் கூறினார் முதல்வர் ஜெயலலிதா. அவரது அந்தக் கூற்று புதுவை நீதிமன்றத்தில் கேள்விக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. 'சட்டரீதியாகத்தான் நடவடிக்கை எடுத்தேன்’ என்று அன்று சொன்ன ஜெயலலிதாவுக்கு, இப்போது இந்த வழக்கின் தீர்ப்பு குறித்து பதில் அளிக்கவேண்டிய கடமை நிச்சயம் இருக்கிறது. ஏனெனில், புதுவை நீதிமன்ற தீர்ப்பு, ஜெயலலிதாவின் அரசு தாக்கல் செய்த வழக்கின் தன்மையையே நிலைகுலையவைத்துள்ளது. எது உண்மை என்பதை உலகத்துக்குச் சொல்ல, ஜெயலலிதா முன்வருவாரா?

'இந்த யுகத்திலே மிகப் பெரிய அபாயம் எது தெரியுமா?’ என்று கேட்டு, அதற்கு பதிலும் சொல்லிச் சென்றுள்ளார் மகா பெரியவர் ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்.

'அபாயகரமான வஸ்து ஒன்று, கண்ணுக்குத் தெரியாமல் அதுவே நல்லது மாதிரி வேஷம் போட்டுக்கொண்டு மயக்குவதுதான் கலியுகத்தில் மிகப் பெரிய ஆபத்து. மனுஷர்களின் மூளைக்குள்ளேதான் அசுரர்களும் ராட்சதர்களும் புகுந்துகொண்டுவிட்டார்கள்!’

தா.கிருட்டிணன், சங்கர்ராமன் கொலைகளில் சம்பந்தப்பட்ட அபாயகரமான வஸ்து எது என்று தெரியாமல், அச்சத்திலும் குழப்பத்திலும் உறைந்து போயிருப்பவர்கள்... அப்பாவிப் பொதுமக்கள்தான். அந்த அச்சத்தையும் குழப்பத்தையும் சட்டம் மட்டுமல்ல, 'சாமி’யும் சேர்ந்தே தீர்த்துவைக்க வேண்டும்!

ப.திருமாவேலன் @ விகடன்

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Fri Dec 06, 2013 10:31 am

நல்லதொரு அலசல். நீதித்துறையின் மேல் மிருந்த கொஞ்ச நஞ்ச நம்பிக்கையும் இதுபோன்ற தீர்ப்புகளால் போய் விடுகிறது. அரசு இவ்வழக்கில் மேல்முறையீடு செய்யவேண்டும். பிறழ் சாட்சியம் அளித்த அனைவரையும் காவல்துறை கஸ்டடியில் எடுத்து மீண்டும் விசாரிக்க வேண்டும். பெரிய மனிதப் போர்வையில் திரியும் சில குள்ளநரிகளின் கொட்டம் அடக்கப்பட வேண்டும்.
பார்த்திபன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பார்த்திபன்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Dec 06, 2013 11:35 am

//கொலை செய்யப்பட்டவர் ஓர் இந்து. கொலை நடந்த இடம் பிரசித்திபெற்ற இந்துக் கோயில். ஆனால், இந்து மதத்தைக் காப்பாற்றுவதற்கான அவதாரப் புருஷர்களாக, மதத்தின் காவல் அரண்களாகத் தங்களைக் காட்டிக்கொள்பவர்கள் கண் மூடிக் கிடக்கிறார்கள். சங்கர்ராமன் வீட்டில் பி.ஜே.பி. உறுப்பினர் அட்டை இல்லையா? பத்மா, பெரும் பணக்காரராக இல்லையா? வசதி படைத்த, அரசியல் அதிகாரம்கொண்டவர்கள் கொலைகளுக்கு மட்டுமே நீதி கேட்பவர்கள், அப்பாவி சங்கர்ராமன் சாவுக்கு ஒரு பூ வைக்கக்கூட வரவில்லையே... ஏன்? செத்தவர் ஏழை என்பதாலா? கொன்றவன், 'அதிகாரம் படைத்தவனாக இருப்பானோ?’ என்ற அச்சத்தினாலா?//


சொல்லலாமா தெரியல சிவா, அவர்கள் 'பிராம்மணர்கள்' என்கிற காரணத்தினால் தான் சிவா சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Dec 06, 2013 12:19 pm

கடவுள் நம்பிக்கை இருப்பவர்கள் கடவுளின் மீது மட்டுமே நம்பிக்கை வைத்தால் - இதைப்போல் கடவுளின் பெயர் பாடித் திரியும் போலிகளை நம்பி ஏமாறாமல் இருக்கலாம்.




krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Dec 06, 2013 12:22 pm

யினியவன் wrote:கடவுள் நம்பிக்கை இருப்பவர்கள் கடவுளின் மீது மட்டுமே நம்பிக்கை வைத்தால் - இதைப்போல் கடவுளின் பெயர் பாடித் திரியும் போலிகளை நம்பி ஏமாறாமல் இருக்கலாம்.
ம்....புரியலையே இனியவன் அநியாயம் அநியாயம் அநியாயம் 



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Dec 06, 2013 12:30 pm

கொலையுடன் நேரடித் தொடர்போ அல்லது மறைமுக தொடர்போ கண்டிப்பாக இருக்கிறது. கடவுளின் பெயரை சொல்லி நடமாடும் மனித சாமியார்கள் என்றும் கடவுள் ஆகிவிட முடியாது.

எனவே தான் நம்பிக்கை இருப்பவர்கள் கடவுளை மட்டும் நம்புங்கள் ன்னு சொல்றேம்மா.




krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Dec 06, 2013 12:34 pm

யினியவன் wrote:கொலையுடன் நேரடித் தொடர்போ அல்லது மறைமுக தொடர்போ கண்டிப்பாக இருக்கிறது. கடவுளின் பெயரை சொல்லி நடமாடும் மனித சாமியார்கள் என்றும் கடவுள் ஆகிவிட முடியாது.

எனவே தான் நம்பிக்கை இருப்பவர்கள் கடவுளை மட்டும் நம்புங்கள் ன்னு சொல்றேம்மா.
நம்முடையதில் "மாதா பிதா குரு பிறகு தானே தெய்வம் " இனியவன், தெய்வத்தை பார்க்கவே இவர்களை நாட வேண்டி இருக்கே? சோகம் மாதா, பிதாவை காட்டுவாள், பிதா நல்ல குருவை காட்டுவார், அந்த குரு தானே நமக்கு தெய்வத்தை காட்டணும் ? அப்போ நாம் அவர்கள் பின் செல்ல வேண்டியவர்கள் ஆகிரோமே? சோகம் இதுக்கு என்ன செய்வது?



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Dec 06, 2013 12:38 pm

krishnaamma wrote:நம்முடையதில் "மாதா பிதா குரு பிறகு தானே தெய்வம் " இனியவன், தெய்வத்தை பார்க்கவே இவர்களை நாட வேண்டி இருக்கே? சோகம்மாதா, பிதாவை காட்டுவாள், பிதா நல்ல குருவை காட்டுவார், அந்த குரு தானே நமக்கு தெய்வத்தை காட்டணும் ? அப்போ நாம் அவர்கள் பின் செல்ல வேண்டியவர்கள் ஆகிரோமே? சோகம்இதுக்கு என்ன செய்வது?
ஆதி சங்கரர், ரமண மகரிஷி, விவேகானந்தர் போன்றவர்களா இன்று நடமாடுபவர்கள்???




Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக