புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
புகை நமக்குப் பகை இளைஞர்களே... Poll_c10புகை நமக்குப் பகை இளைஞர்களே... Poll_m10புகை நமக்குப் பகை இளைஞர்களே... Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
புகை நமக்குப் பகை இளைஞர்களே... Poll_c10புகை நமக்குப் பகை இளைஞர்களே... Poll_m10புகை நமக்குப் பகை இளைஞர்களே... Poll_c10 
47 Posts - 42%
T.N.Balasubramanian
புகை நமக்குப் பகை இளைஞர்களே... Poll_c10புகை நமக்குப் பகை இளைஞர்களே... Poll_m10புகை நமக்குப் பகை இளைஞர்களே... Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
புகை நமக்குப் பகை இளைஞர்களே... Poll_c10புகை நமக்குப் பகை இளைஞர்களே... Poll_m10புகை நமக்குப் பகை இளைஞர்களே... Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
புகை நமக்குப் பகை இளைஞர்களே... Poll_c10புகை நமக்குப் பகை இளைஞர்களே... Poll_m10புகை நமக்குப் பகை இளைஞர்களே... Poll_c10 
1 Post - 1%
சண்முகம்.ப
புகை நமக்குப் பகை இளைஞர்களே... Poll_c10புகை நமக்குப் பகை இளைஞர்களே... Poll_m10புகை நமக்குப் பகை இளைஞர்களே... Poll_c10 
1 Post - 1%
Guna.D
புகை நமக்குப் பகை இளைஞர்களே... Poll_c10புகை நமக்குப் பகை இளைஞர்களே... Poll_m10புகை நமக்குப் பகை இளைஞர்களே... Poll_c10 
1 Post - 1%
Shivanya
புகை நமக்குப் பகை இளைஞர்களே... Poll_c10புகை நமக்குப் பகை இளைஞர்களே... Poll_m10புகை நமக்குப் பகை இளைஞர்களே... Poll_c10 
1 Post - 1%
prajai
புகை நமக்குப் பகை இளைஞர்களே... Poll_c10புகை நமக்குப் பகை இளைஞர்களே... Poll_m10புகை நமக்குப் பகை இளைஞர்களே... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
புகை நமக்குப் பகை இளைஞர்களே... Poll_c10புகை நமக்குப் பகை இளைஞர்களே... Poll_m10புகை நமக்குப் பகை இளைஞர்களே... Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
புகை நமக்குப் பகை இளைஞர்களே... Poll_c10புகை நமக்குப் பகை இளைஞர்களே... Poll_m10புகை நமக்குப் பகை இளைஞர்களே... Poll_c10 
189 Posts - 38%
mohamed nizamudeen
புகை நமக்குப் பகை இளைஞர்களே... Poll_c10புகை நமக்குப் பகை இளைஞர்களே... Poll_m10புகை நமக்குப் பகை இளைஞர்களே... Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
புகை நமக்குப் பகை இளைஞர்களே... Poll_c10புகை நமக்குப் பகை இளைஞர்களே... Poll_m10புகை நமக்குப் பகை இளைஞர்களே... Poll_c10 
12 Posts - 2%
prajai
புகை நமக்குப் பகை இளைஞர்களே... Poll_c10புகை நமக்குப் பகை இளைஞர்களே... Poll_m10புகை நமக்குப் பகை இளைஞர்களே... Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
புகை நமக்குப் பகை இளைஞர்களே... Poll_c10புகை நமக்குப் பகை இளைஞர்களே... Poll_m10புகை நமக்குப் பகை இளைஞர்களே... Poll_c10 
9 Posts - 2%
jairam
புகை நமக்குப் பகை இளைஞர்களே... Poll_c10புகை நமக்குப் பகை இளைஞர்களே... Poll_m10புகை நமக்குப் பகை இளைஞர்களே... Poll_c10 
4 Posts - 1%
Guna.D
புகை நமக்குப் பகை இளைஞர்களே... Poll_c10புகை நமக்குப் பகை இளைஞர்களே... Poll_m10புகை நமக்குப் பகை இளைஞர்களே... Poll_c10 
4 Posts - 1%
Jenila
புகை நமக்குப் பகை இளைஞர்களே... Poll_c10புகை நமக்குப் பகை இளைஞர்களே... Poll_m10புகை நமக்குப் பகை இளைஞர்களே... Poll_c10 
4 Posts - 1%
Rutu
புகை நமக்குப் பகை இளைஞர்களே... Poll_c10புகை நமக்குப் பகை இளைஞர்களே... Poll_m10புகை நமக்குப் பகை இளைஞர்களே... Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புகை நமக்குப் பகை இளைஞர்களே...


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Wed Jul 03, 2013 2:15 pm

இன்று ஏடு தூக்கிச் செல்லும் மாணவர்களே நாளை நாடு காக்கும் தலைவராகிறார்கள். எனவேதான், இக்கால மாணவர்களை நாளைய நம்பிக்கை நட்சத்திரங்கள் என்றும், எதிர்காலத் தூண்கள் என்றும் அழைக்கிறோம். இன்றைய இளைஞர்களே நாளைய குடிமக்கள், குடியரசின் தலைவர்கள். மாணவர்கள் நல்ல வழியில் நடத்தலை நன்னடத்தை என்று பண்டைய நூல்கள் தெரிவிக்கின்றன. நன்னடத்தை பயிலுதலையே ஒழுக்கம் என்பர். ஒழுக்கம் உயர்ந்த பழக்க வழக்கங்களை என்றும் அழியாமல் காக்கும். பள்ளியில் பயிலும் காலத்திலேயே மாணவர்கள் நல்ல பழக்க வழக்கங்களைக் கற்று கொள்ள வேண்டும். ஓழுக்கம் உடையவர்கள் உயர்வார்கள், ஒழுக்கமற்றவர்கள் தாழ்வார்கள் என்பது தான் தீய பழக்கங்கள் உணர்த்தும் பாடம்.

ஒரு சிகரெட்டில் நிகோடின், கார்பன்-டை-ஆக்ûஸடு, பிரிடின் பைரின், கார்பன் மோனாக்ûஸடு, அமோனியா, ஆர்செனிக், மீத்தேன், பிரஸ்லிக் அமிலம், பார்மிக் அமிலம், கிரிஸால், பைரால், ரூபிடின், மெதிலின் பர்பரோல், பைக்கோலின், பார்வோலின், ஓட்டிடைப், சல்புரேடேட் ஹைடிரஜன், சப்பரிடேட், லுனைன், விரிடைன், மைதிலைமின், பார்மால் டிரையுட், பார்பிக் ஆல்டிஹைட், வெடியுப்பு, மரிஜீவானா, அக்ரோலின், மார்ங்காஸ், கொரிடீன் போன்ற நச்சுப் பொருள்கள் உள்ளன.

புகைப் பிடித்தாலோ, புகையிலைப் பொருள்களைப் பயன்படுத்தினாலோ சுவாசக் குழாயில் சளி ஏற்பட்டு, இருமலாகி புண் தோன்றும், நுரையீரலில் கட்டி ஏற்பட்டு, காச நோய் ஏற்பட்டு, இறுதியில் புற்றுநோய் ஏற்படும். இவை தவிர ஞாபக சக்தியை இழத்தல், மலட்டுத் தன்மை, தோலில் சுருக்கம், கை, கால் நடுக்கம் போன்றவைகளும் ஏற்படும். கல்லீரலில் பாதிப்பு ஏற்பட்டு காமாலை நோயையும் ஏற்படுத்தும். குடற்புண், வாய்ப்புண் ஏற்படுவதோடு, நாக்கு வறண்டு சுவையையிழக்கும். பற்கள் பலமிழந்து, பல் ஈறு சம்பந்தமான நோய்கள் ஏற்படும். கண் பார்வை மங்கி, கண் புகைச்சல், கண் எரிச்சல், போன்றவை ஏற்பட்டு, கண் நரம்புகளில் சளி கோர்த்து வறட்சி உண்டாகி கண் பார்வை பறிபோகும்.

இறுதியில் இரத்தம் ஓட்டம் பாதிப்படைந்து இதயம் செயலிழந்து மாரடைப்பு ஏற்படும். பண விரயத்துடன், நேரத்தையும் செலவிட்டு, இப்படி உடலையும், உள்ளத்தையும் கெடுத்து, உயிரை எடுக்கும் புகையிலையை புகைக்க, புகையிலை தொடர்பான பொருள்களைச் சுவைக்க வேண்டுமா என்பதை இளைஞர்கள் சிந்திக்க வேண்டும்.

சுவர் இருந்தால் தானே சித்திரம் வரைய முடியும்? அது போல உடல் நலமாயிருந்தால் தான் உழைத்து வாழ முடியும். இக்கால மாணவர்கள் தெரிந்தோ, தெரியாமலோ, சில பல தீய பழக்கங்களுக்கு அடிமையாகி உடலைக் கெடுத்து நோயின் பிடியில் சிக்கி இறுதியில் வாழ்க்கையை இழந்து தங்கள் குடும்பத்தை நிராதரவாக விட்டுச் செல்கிறார்கள். நல்லுடலும், நல்லுள்ளமும் அமைய வேண்டுமாயின் தீய பழக்கங்கள் மறைய வேண்டும்.

தமிழகத்தில் 11 வயதிலிருந்து 15 வயதுக்குட்பட்ட மாணவர்களில் 3 சதவீதம் பேர் புகையிலை மற்றும் புகைப் பழக்கத்துக்கு அடிமையாகியிருக்கிறார்கள் என்று சமீபத்திய புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற மேலை நாடுகளில் 50 சதவீதமாக இருந்த புகைப் பழக்கம் தற்போது 20 சதவீதமாகக் குறைந்துள்ளது. ஆனால், இந்தியாவில் புகைப்பழக்கம் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் 24 சதவீத ஆண்களும், 8 சதவீத பெண்களும் புகையிலை மற்றும் புகைப் பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளனர். புகைப்பிடித்தல் என்பது கெüரவமாகவும், வீரத்திற்கு அடையாளமாகவும் இக்கால இளைஞர்களால் கருதப்படுகிறது. இதைத் தடுக்கும் பொறுப்பு பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கு அதிகமாக இருக்கிறது. மற்றவர்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ வேண்டிய பெற்றோர்களும், ஆசிரியர்களும் எந்தவித கெட்ட பழக்க வழக்கங்களுக்கும் ஆளாகாமல் இருந்து மாணவர்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ வேண்டும். குழந்தைகள் முன்பு புகையிலைப் பொருள்களை உபயோகிக்கக் கூடாது. அப்பழக்கம் இருந்தாலும் உடல் நலம் கருதி உடனடியாகக் கைவிடுதல் நல்லது. குழந்தைகளுக்கு புகையிலை குறித்த விழிப்புணர்வை பள்ளிகளிலும், வீடுகளிலும் ஏற்படுத்த வேண்டும். 18 வயதுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு புகையிலைப் பொருள்களை வழங்கக் கூடாது என அரசு எச்சரித்தும் பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே இப்பழக்கம் அதிகரித்து வருவது அவர்களிடையே இன்னும் விழிப்புணர்வு வளராமையைத்தான் காட்டுகிறது.

இந்தக் கொடிய பழக்கத்தை அரசு மட்டும் தலையிட்டு தடுக்க முடியாது. ஒவ்வொரு தனி மனிதனுக்கும் இதில் பங்கு உண்டு. பள்ளிக் கூடங்கள் மற்றும் கல்லூரிகள் அருகே புகையிலை மற்றும் இதர போதைப் பொருள்கள் விற்பதைத் தடை செய்ய வேண்டும். திரைப்பட கதாநாயகர்கள் கண்டிப்பாகத் திரைப்படங்களில் புகைபிடிப்பது போன்றோ, மது அருந்துதல் போன்றோ நடிக்கக் கூடாது. நகைச்சுவை என்ற பெயரில் பல தீய பழக்கங்களை திரையில் காட்டவோ, பேசவோ கூடாது. குடிப்பது, புகைப்பிடிப்பது, குற்றச் செயல்களைப் புரிவது, கொலை வெறியேடு பழிவாங்குவது போன்ற காட்சிகளைத் தொலைகாட்சிகள், திரைப்படங்களில் இடம் பெறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இந்தக் காட்சிகள் இளைஞர்கள் மனதில் பசுமரத்தாணி போல் பதிந்து தீயச் செயல்களைப் புரிய தூண்டுகின்றன. தொலைக்காட்சி மற்றும் திரைப்படங்களில் புகைப்பிடித்தல் போன்ற காட்சிகள் வரும்போது, புகை உடலுக்கு பகை, புகை புற்று நோயை உண்டாக்கும் என்று காட்டுகிறார்கள். இத்தகைய வாசகங்கள் விழிப்புணர்வு ஊட்ட இல்லாமல் வெறும் சடங்காக மட்டுமே காட்டப்படுகின்றன. அந்தக் காட்சிகளை கண்ணுறும் இளைஞர்கள் புகைப்பிடித்தால் கதாநாயகனைப் போல் நாமும் ஆகலாம், துயரம் மறையும், வீரம் பிறக்கும், பலர் நம்மையும் மெச்சுவார்கள் என மனப்பால் குடித்து, அந்தத் தீய பழக்கத்திற்கு உள்ளாகிறார்கள்.

சிகரெட், பான்பராக், குட்கா, ஹான்ஸ் போன்றவற்றை உடல்உழைப்புத் தொழிலாளர்களும், இளைஞர்களும்தான் பெருமளவில் பயன்படுத்துகிறார்கள். சமுதாயத்திற்குத் தீங்கு விளைவிக்கும் இத்தகைய புகைப் பொருள்களை முற்றிலுமாகத் தடைசெய்ய வேண்டும். புகைபிடித்தல், புகையிலைப் பொருள்களை உண்பது என்பது என்றும் இடும்பைத் தரும். புகையிலையால் ஏற்படும் பல்வேறு வகையான நோய்களைத் தடுக்கும் வண்ணம், குட்கா, பான் மசாலா போன்ற சுவைக்கும் புகையிலைப் பொருட்களைத் தயாரிக்கவும், சேமித்து வைக்கவும், விநியோகம் செய்யவும், விற்கவும் தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த நடவடிக்கை தமிழகத்தில் நோயற்ற சமுதாயத்தை உருவாக்கும் என்பதில் ஐயமில்லை. தொழிற்சாலைகள் மற்றும் அலுவலகங்களுக்கு அருகில் புகையிலைப் பொருள்கள் உபயோகிப்பதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பணி புரியும் வளாகத்துக்குள் புகையிலே உபயோகிப்போருக்கு அபராதம் விதிப்பது போன்ற விழிப்புணர்வுப் பலகைகள் அமைப்பது, புகை பிடிப்பதெற்கென உருவாக்கப்பட்ட இடங்களைத் தடை செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

சிறுவர்கள் புகைபிடித்தாலோ, புகையிலைப் பொருள்களை உபயோகப்படுத்தினாலோ அது மூளையை பெருமளவு பாதிப்பதோடு, கடந்தகால நிகழ்வுகளையும், நிகழ் காலத்தையும் இணைத்துப் பேசும் நினைவாற்றலை இழந்துவிடுவார்கள் என இங்கிலாந்து விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 14 லட்சம் பேர் புகையிலைப் பொருள்களைப் பயன்படுத்துவதால் இறப்பதோடு, 60 லட்சம் பேர் பல்வேறு நோய்களுக்கும் ஆளாகிறார்கள். ஒரு சிகரெட்டை புகைத்தால் அவருக்கு மரணம் 5.5 நிமிடம் முன்னோக்கி வருகிறது என்றும், அதைவிடக் கொடுமை அவருக்கு அருகிலிருப்பவர்களுக்கு 7 நிமிடம் முன்னோக்கி வருகிறது எனவும் யூனிசெப் நிறுவனம் எச்சரிக்கிறது.

புகைப் பிடிக்கும் எண்ணம் தோன்றினால் காய்கறி சாலட், காரட், வெள்ளரி, வெங்காயம் சாப்பிடலாம். அதுவும் சாப்பிட முடியாதவர்கள் தண்ணீர் அருந்தலாம். இதனால் சிகரெட் பிடிக்க வேண்டும் என்ற எண்ணம் குறையும்.

நன்றி-தினமணி-பாறப்புறத் இராதாகிருஷ்ணன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக