புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
Topics tagged under தீரன்_சின்னமலை on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under தீரன்_சின்னமலை on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under தீரன்_சின்னமலை on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
60 Posts - 48%
heezulia
Topics tagged under தீரன்_சின்னமலை on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under தீரன்_சின்னமலை on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under தீரன்_சின்னமலை on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
55 Posts - 44%
mohamed nizamudeen
Topics tagged under தீரன்_சின்னமலை on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under தீரன்_சின்னமலை on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under தீரன்_சின்னமலை on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
Topics tagged under தீரன்_சின்னமலை on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under தீரன்_சின்னமலை on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under தீரன்_சின்னமலை on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
Topics tagged under தீரன்_சின்னமலை on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under தீரன்_சின்னமலை on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under தீரன்_சின்னமலை on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
Topics tagged under தீரன்_சின்னமலை on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under தீரன்_சின்னமலை on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under தீரன்_சின்னமலை on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
Topics tagged under தீரன்_சின்னமலை on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under தீரன்_சின்னமலை on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under தீரன்_சின்னமலை on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

Search found 1 match for தீரன்_சின்னமலை

Topics tagged under தீரன்_சின்னமலை on ஈகரை தமிழ் களஞ்சியம் C7vq9TY

சிலம்பாட்டம், தடிவரிசை, மல்யுத்தம், வில்வித்தை, வாள்வீச்சு என அத்தனை வீரவிளையாட்டுகளிலும் நிபுணத்துவம் பெற்றிருந்தார் அந்த இளைஞன். தனது வீரத்தாலும், அசாத்திய திறமைகளாலும் தன் சொந்த ஊரான மேலப்பாளையத்தையும் தாண்டி அவரது பெயர் பரவத்தொடங்கியது. ஈரோடு, காங்கேயம், சென்னிமலை, சங்ககிரி என கொங்கு மண்டலத்தில் ஒலிக்கத் தொடங்கிய அந்த வீரக்குரல், ஒருகட்டத்தில் இந்தியாவையே கட்டியாண்ட ஆங்கிலேயரையே அதிரச் செய்தது.


அந்த விடுதலை வீரரின் பெயர் தீரன் சின்னமலை.

‘தீர்த்தகிரி’ என்ற இவரது இயற்பெயர் ‘சின்னமலை’ என மாற்றம் அடைந்ததற்கு சில வரலாறுகள் கூறப்படுகின்றன. கொங்கு மண்டலம் முழுவதும் மைசூர் பேரரசின் ஆளுமைக்குள் இருந்த நேரம். மைசூர் அரசால், மக்களிடம் இருந்து வசூலிக்கப்படும் வரிப்பணம் சங்ககிரி வழியாக கொண்டு செல்லப்பட்டது. அப்போது, வேட்டையில் ஈடுபட்டிருந்த தீர்த்தகிரி, அப்பணத்தை பறித்து ஏழை மக்களுக்கு கொடுத்தாராம். வரிப்பணத்தைக் கொண்டு சென்ற தண்டல்காரனிடம், ‘சென்னிமலைக்கும், சிவன்மலைக்கும் இடையில் ஒரு சின்னமலை பறித்ததாகச் சொல்’, எனக் கூறினாராம். அன்றிலிருந்து, தீர்த்தகிரி ‘சின்னமலை’ என அழைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தைக் கடுமையாக எதிர்த்து வந்தவர் தீரன் சின்னமலை. 1782-ல் மைசூரை ஆண்ட ஹைதர் அலி மறைவுக்குப் பின்னர் அரசராக பதவியேற்றார் அவரது மகன் திப்பு சுல்தான். மேலும், ஆங்கிலேயர்களுடன் தொடர் யுத்தத்திலும் அவர் ஈடுபட்டு வந்தார். திப்புவிடம் நன்மதிப்பு பெற்றிருந்த தீரன் சின்னமலை, பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை வேரறுக்க, திப்பு படையினருடன் கைகோத்தார். கொங்கு மண்டலத்தில் பெரும் செல்வாக்கு பெற்றிருந்த தீரன் சின்னமலை, பயிற்சி பெற்ற இளைஞர் படையுடன் மைசூர் விரைந்தார். மைசூர் போர்களில் ஆங்கிலேயரை திப்பு சுல்தானின் படையினர், திணறடித்து வெற்றி வாகைச் சூடிட முக்கிய பங்காற்றியது சின்னமலையில் கொங்குப் படை. சித்தேஸ்வரம், மழவல்லி, ஶ்ரீரங்கப்பட்டினம் பகுதிகளில் நடந்த போர்களில் திப்புவுடன் கூட்டணி அமைத்து திறம்பட போரிட்டார் சின்னமலை. 1799-ம் ஆண்டு நடைபெற்ற நான்காம் மைசூர் போரில், களத்திலேயே மரணமடைந்தார் திப்பு சுல்தான்.

திப்புவின் மரணத்துக்குப் பின்னர், அரச்சலூர் அருகே ஓடாநிலையில் கோட்டைக் கட்டிய சின்னமலை, பிரிட்டிஷாரை எதிர்ப்பதற்காக சிவன்மலை அருகே இளைஞர்களுக்கு ஆயுதப்பயிற்சி அளிக்கத் துவங்கினார். திப்பு படையில் இருந்தபோது, தனக்கிருந்த நட்புகளையும், போரில் ஈடுபட்டவர்களையும் தன்னுடன் இணைத்துக் கொண்டார் சின்னமலை. ஃபிரெஞ்சு நாட்டவர்களுடன் இணைந்து பீரங்கிகளை தயார் செய்யும் பணியில் முழுவீச்சாக இறங்கினார். திப்புவின் படையில் முக்கிய வீரராக அறியப்பட்ட தூண்டாஜிவாக் மற்றும் பரமத்தி அப்பாச்சி, விருப்பாச்சி கோபால நாயக்கர் ஆகியோருடன் இணைந்து 1800-ம் ஆண்டு கோவைக் கோட்டையைத் தகர்க்க திட்டமிட்டார் சின்னமலை. ஆனால், அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது. தன் முயற்சியைக் கைவிடாத சின்னமலை பிரிட்டிஷாரை தாக்குவதற்கு நேரம் எதிர்பார்த்து காத்திருந்தார். 1801-ம் ஆண்டில் பவானி - காவிரிக் கரையில் நடைபெற்ற போரில் தன் முழுபலத்தையும் பிரயோகித்து ஆங்கிலேயப் படைகளை துவம்சம் செய்தார். 1802-ல் சென்னிமலைக்கும், சிவன் மலைக்கும் இடையே நடந்த போரிலும், 1804-ல் அரச்சலூரில் உள்ள கர்னல் ஹாரிஸின் ஆங்கிலப்படையையும் வென்று வரலாற்று வெற்றிகளை பதிவு செய்தார் சின்னமலை. பீரங்கி ப்ரயோகம், குறிவைத்து கையெறி குண்டுகள் வீசுதல் என சின்னமலையின் போர் யுத்திகளைக் கண்டு பிரிட்டிஷார் கலங்கி நின்றனர். அவர்களுக்கு, சிம்மசொப்பமனமாகிப் போனார் சின்னமலை.

சிலம்பம், வாள் வீச்சு என தான் கற்றுத்தேர்ந்த தற்காப்புக் கலைகள் மூலம் தன்னையும், படைத் தளபதிகளையும் தற்காத்துக் கொள்வதில் கவனம் செலுத்துவாராம் சின்னமலை. 1802-ம் ஆண்டு நடந்த போரின்போது சின்னமலையின் அதிரடி சிலம்பாட்டம் குறித்து இன்றைக்கும் கொங்கு மண்டலத்துக்காரர்கள் சிலாகித்து பேசுவதுண்டு.

வீரத்தை, சூழ்ச்சியால் வீழ்த்துவதுதானே வழக்கம். அதேதான், தீரன் சின்னமலையின் வாழ்க்கையிலும் நடந்தது. சின்னமலையை சிக்க வைக்க திட்டமிட்ட ஆங்கிலேய அரசு, அவரின் சமையல்காரர் மூலம்  வலைவிரித்தது. இறுதியாக அவரது சகோதரர்களுடன் கைது செய்யப்பட்டார் தீரன் சின்னமலை. எந்த சங்ககிரியில் தனது முதல் ‘வேட்டை’யை சின்னமலை துவக்கினாரோ… அதே சங்ககிரியில் உள்ள மலைக் கோட்டைக்கு அழைத்துச் செல்லப்பட்ட தீரன் சின்னமலை 1805-ம் ஆண்டு தூக்கிலிடப்பட்டார்.

பெரும் படையுடனும், செல்வாக்குடனும் வலம் வந்த ஆங்கிலேயர்கள் தீரன் சின்னமலையை கடைசி வரை நேரடியாக போரிட்டு வெல்ல முடியவில்லை என்பதே வீரத்தமிழர் வரலாறு!


குறிச்சொற்கள் #தீர்த்தகிரி #சின்னமலை #தீரன்_சின்னமலை

Back to top