புதிய பதிவுகள்
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:57 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:48 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:36 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:19 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:10 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:42 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:34 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:20 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sat May 04, 2024 11:02 pm

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
Topics tagged under கோஹினூர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under கோஹினூர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under கோஹினூர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
21 Posts - 68%
ayyasamy ram
Topics tagged under கோஹினூர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under கோஹினூர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under கோஹினூர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
10 Posts - 32%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
Topics tagged under கோஹினூர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under கோஹினூர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under கோஹினூர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
64 Posts - 70%
ayyasamy ram
Topics tagged under கோஹினூர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under கோஹினூர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under கோஹினூர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
10 Posts - 11%
mohamed nizamudeen
Topics tagged under கோஹினூர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under கோஹினூர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under கோஹினூர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
4 Posts - 4%
Rutu
Topics tagged under கோஹினூர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under கோஹினூர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under கோஹினூர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
3 Posts - 3%
ரா.ரமேஷ்குமார்
Topics tagged under கோஹினூர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under கோஹினூர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under கோஹினூர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
2 Posts - 2%
prajai
Topics tagged under கோஹினூர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under கோஹினூர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under கோஹினூர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
2 Posts - 2%
Jenila
Topics tagged under கோஹினூர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under கோஹினூர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under கோஹினூர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
2 Posts - 2%
Baarushree
Topics tagged under கோஹினூர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under கோஹினூர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under கோஹினூர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
2 Posts - 2%
viyasan
Topics tagged under கோஹினூர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under கோஹினூர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under கோஹினூர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
Topics tagged under கோஹினூர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under கோஹினூர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under கோஹினூர் on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

Search found 3 matches for கோஹினூர்

கோஹினூர் வைரம் பிரிட்டன் அரசர் முடிசூட்டு நிகழ்வில் பயன்படுத்தப்படாது - ஏன் தெரியுமா?



பிரிட்டன் அரசர் மூன்றாம் சார்ல்ஸின் முடிசூட்டு விழா லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் நாளை நடைபெறுகிறது. இந்த நிகழ்வில் சர்ச்சைக்குரிய கோஹினூர் வைரம் பயன்படுத்தப்படாது என பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது.

அதற்குப் பதிலாக, அரசரின் மனைவி கமீலாவுக்கு அரசி மேரியின் கிரீடம் சூட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக அந்த கிரீடம் லண்டன் டவரில் இருந்து வெளியில் எடுக்கப்பட்டு முடிசூட்டு விழாவுக்காக அளவு மாற்றப்படுகிறது.

சமீபகாலத்தில் இப்படி கிரீடம் அளவு மாற்றப்படுவது இதுவே முதன்முறை என்று சொல்லப்படுகிறது. அரசி இரண்டாம் எலிசபெத்தின் வைரங்களும் இதில் சேர்க்கப்படுகின்றன. கமீலா வெஸ்ட்மின்ஸ்டர் அபேவில் அரசருக்கு அருகில் முடி சூட்டப்படுவார்.

அரசர் அரசி அணியும் கிரீடங்கள்


மறைந்த அரசி இரண்டாம் எலிசபெத்திற்கு மரியாதை செலுத்தும் வகையில், அவருடைய அணிகலன்களில் உள்ள வைரங்களைக் கொண்டு அரசி கமீலா சூடும் கிரீடம் மாற்றியமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை தென்னாப்பிரிக்காவில் கண்டெடுக்கப்பட்ட குல்லினன் III, IV, V என்னும் வைரங்கள் ஆகும்.

முடி ஆபரணங்களில் மிக உயர்ந்ததாகக் கருதப்படும் செயின்ட் எட்வர்டின் கிரீடத்தை அரசர் மூன்றாம் சார்ல்ஸ் அணிந்திருப்பார். 1661-இல் அரசர் இரண்டாம் சார்ல்ஸ் அணிந்திருந்த கிரீடம் உள்நாட்டுப் போரால் அழிந்துபோன பின் அவருக்காக உருவாக்கப்பட்ட கிரீடம் இது.

அவருக்குப் பின் மறைந்த அரசி இரண்டாம் எலிசபெத் இதை அணிந்து வந்தார். ஆனால் அவருக்குப் பின் வரும் அரசர்கள் தங்களுக்குப் பொருந்தும் வகையில் கிரீடங்களை பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

கோஹினூர் வைரம் பதிக்கப்பட்ட இந்த கிரீடம் முடி சூட்டு விழாவில் பயன்படுத்தப்படாது

கோஹினூர் வைரத்தின் சர்ச்சை


உலகிலேயே அதிக விலைமதிக்கத்தக்க வைரக்கற்களில் ஒன்றான #கோஹினூர் வைரக்கல் இந்த முடிசூட்டு விழாவில் பயன்படுத்தப்படவில்லை.

அதற்குக் காரணம், இந்த வைரம் இந்தியாவுக்கு சொந்தமானது என்னும் சர்ச்சை அரசி எலிஸபெத் முடிசூட்டிய காலத்தில் இருந்தே நிலவி வருகிறது. இதற்குப் பதிலாகத்தான் கமீலாவுக்கு அரசி மேரியின் கிரீடம் சூட்டப்படுகிறது.

கோஹினூர் வைரம் உலகின் மிகப் பழைமையான வைரம் அல்ல. இருந்தும் அதைச் சுற்றி சர்ச்சைகள் இன்றளவும் சுழன்று வருவதற்குக் காரணம் இருக்கிறது. இந்த வைரம் இந்தியாவில் இருந்து நாதர்ஷா என்னும் இரானிய மன்னனால் 1739ஆம் ஆண்டில் எடுத்துச் செல்லப்பட்டது என்று வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

முடி ஆபரணங்களில் மிக உயர்ந்ததாகக் கருதப்படும் செயின்ட் எட்வர்டின் கிரீடத்தை அரசர் மூன்றாம் சார்ல்ஸ் முடி சூட்டு விழாவில் அணிந்திருப்பார்

அதன் பிறகு பல படையெடுப்புகளையும் சூறையாடல்களையும் கண்ட கோஹினூர் வைரம் இறுதியாக 1849இல் பஞ்சாப் இணைப்பின்போது பிரிடிஷ் கவர்னர் ஜெனரலின் கைகளுக்கு வந்தது.

அப்போது இந்தியாவின் சில பகுதிகளைக் கைப்பற்றியிருந்த கிழக்கிந்திய கம்பெனிக்கு, வீழ்த்தப்பட்ட ஓர் இளம் மன்னன் இதைப் பரிசாக அளித்ததாகச் சொல்லப்படுகிறது.

ஆனால் கோஹினூர் பற்றிய ஒரு புத்தகத்தின் இணை எழுத்தாளரும் பிபிசி செய்தியாளருமான அனிதா ஆனந்த் கூறும்போது, “ஈட்டிமுனையில் இருக்கும்போது வழங்கப்படுவதை எல்லாம் பரிசு என்று எடுத்துக் கொள்ளலாமா என்று எனக்குத் தெரியவில்லை,” என்று கூறுகிறார்.

1850களில் இளவரசர் ஆல்பர்ட் இந்த வைரத்தை பளபளப்பாக்கி அரசி இரண்டாம் எலிசபெத்தின் ஆபரணத்தில் பதித்தார். அதிலிருந்து பட்டத்து ஆபரணங்களுள் ஒன்றாக கோஹினூர் வைரம் கருதப்படுகிறது. பாகிஸ்தானும் ஆப்கானிஸ்தானும்கூட இந்த வைரத்தை தங்களுடையது என்று உரிமை கோரி வருகின்றன.
Topics tagged under கோஹினூர் on ஈகரை தமிழ் களஞ்சியம் F94a4c30-c4a4-11ed-a1d6-1187ddf8eadd

பிரிட்டன் மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் மணிமகுடத்தை அலங்கரித்த #கோஹினூர் வைரம், லண்டனில் நடைபெறும் பிரிட்டன் கிரீட ஆபரண கண்காட்சியில் வெற்றியின் சின்னமாகக் காட்சிப்படுத்தப்பட உள்ளது.

முடிசூட்டு ஆண்டைக் குறிக்கும் வகையில் லண்டன் டவரில் நடைபெறவுள்ள கண்காட்சியில் கிரீட ஆபரணங்களின் வரலாறு பற்றிய குறிப்புகள் இடம்பெறவுள்ளன.

ஜூவல் ஹவுஸ் கண்காட்சியில் முதன்முறையாக சர்ச்சைக்குரிய #கோஹினூர்_வைரம் உட்பட சில விலையுயர்ந்த பொருட்களின் தோற்றத்தைப் பற்றிய வரலாறு குறித்த தகவல்கள் இடம்பெறவுள்ளன.

பல ஆண்டுகளுக்குப் பின்னர் கண்காட்சியில் செய்யப்பட்டிருக்கும் மிகப்பெரிய மாற்றமாக இந்நடவடிக்கை பார்க்கப்படுகிறது. லண்டன் டவரின் குடியுரிமை ஆளுநரான ஆண்ட்ரூ ஜாக்சன், "இந்த அற்புதமான சேகரிப்பைப் பற்றிய சிறந்த புரிதலை இந்த முயற்சி வழங்கும்" என்று நம்புவதாகக் கூறினார்.

கோஹினூர் வைரம்



கண்காட்சியில் கோஹினூர் வைரத்தின் வரலாறு `வெற்றியின் சின்னம்` என்ற பெயரில் பொருட்கள் மற்றும் காட்சி திரையிடல் வாயிலாக விளக்கப்படவுள்ளது.

பிரிட்டன் மகாராணியாக இருந்த இரண்டாம் எலிசபெத்தின் மணிமுடியை இந்த வைரம் அலங்கரிக்கிறது. அதற்கு முன்பாக முகலாய பேரரசர்கள், ஈரான் `ஷா`க்கள், ஆப்கானிஸ்தான் மன்னர்கள், சீக்கிய மகாராஜாக்கள் ஆகியோர் வசம் இந்த வைரம் இருந்தது.

1849ஆம் ஆண்டு நடைபெற்ற 2வது ஆங்கிலோ-சீக்கிய போரில் வெற்றிபெற்ற பின்னர் கிழக்கு இந்திய கம்பெனி கோஹினூர் வைரத்தைக் கைப்பற்றியது. பின்னர் விக்டோரியா மகாராணியிடம் இந்த வைரம் கொடுக்கப்பட்டது. அதற்குப் பின்னர் கிரீடத்திலேயே இந்த வைரம் உள்ளது.

105.6 காரட் எடை கொண்ட உலகின் மிகப்பெரிய வைரம் கோஹினூர். பிரிட்டனின் அரச கிரீடத்தை அலங்கரிக்கும் இந்த வைரம் மிகவும் சர்ச்சைக்குரிய நகையாகும்.

இடைக்காலத்தில் தென்னிந்தியாவில் இருந்து இந்த வைரம் வெட்டி எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதன் எழுதப்பட்ட பதிவுகள் 1628ஆம் ஆண்டு முதல் கிடைக்கிறது. முகலாயப் பேரரசர் ஷாஜகானின் சிம்மாசனத்தில் இது பதிக்கப்பட்டது.

1739ஆம் ஆண்டு இரானின் பேரரசர் நாதிர் ஷா டெல்லிக்கு படையெடுத்து வந்து முகலாயர்களை தோற்கடித்தார். இதன் பிறகு கோஹினூர் நாதிர்ஷாவின் கைக்கு சென்றது. நாதிர்ஷா அதை ஆப்கானிஸ்தானுக்கு கொண்டு சென்றார்.

இந்த விலைமதிப்பற்ற கல் ஒன்றன் பின் ஒன்றாக பல்வேறு அரச குடும்பங்களிடம் சென்றன என்றும் பின்னர் இறுதியாக 1813ஆம் ஆண்டில் அது மகாராஜா ரஞ்சித் சிங்கின் கைகளுக்கு வந்தது என்றும் ஸ்மித்சோனியன் பத்திரிகை தெரிவிக்கிறது.

மே மாதம் நடைபெறவுள்ள முடிசூட்டு விழாவில் கோஹினூர் வைரம் பதிக்கப்பட்ட கிரீடத்தை கமீலா அணியமாட்டார் என்றும் மாறாக ராணி மேரியின் கிரீடத்தை அணிவார் என்றும் பக்கிங்ஹாம் அரண்மனை ஏற்கனவே விளக்கமளித்துள்ளது.

இரண்டாம் எலிசபெத் மகாராணியின் கிரீடத்தில் உள்ள இந்த வைரத்தைத் தங்களிடம் அளிக்க வேண்டும் என்று இந்தியா, பாகிஸ்தான், இரான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் தொடர்ந்து கோரி வருகின்றன.

பிற ஆபரணங்கள்



Black Prince's Ruby உட்பட வரலாற்றுச் சிறப்புமிக்க பல்வேறு நகைகள் கிரீடத்தில் இருந்து கிரீடங்களுக்கு எவ்வாறு இடம்பெயர்ந்தன என்றும் இந்தக் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்படவுள்ளது.

Black Prince's Ruby மறைந்த 2ம் எலிசபெத் மகாராணிக்கு மிகவும் பிடித்த நகைகளில் ஒன்றாகும். இம்பிரியல் ஸ்டேட் கிரீடத்தில் இது இடம்பெற்றுள்ளது. தென்னாப்ரிக்காவில் 1905இல் கண்டெடுக்கப்பட்ட குல்லினன் வைரமும் காட்சிப்படுத்தப்படவுள்ளது.

எலிசபேத் மகாராணியின் இறப்புக்குப் பின்னர் இந்த வைரத்தை ஆப்ரிக்காவிடமே திருப்பித் தர வேண்டும் என்ற கோரிக்கையும் அந்நாட்டைச் சேர்ந்த பலரால் வைக்கப்பட்டு வருகிறது.

பிரிட்டிஷ் முடியாட்சியின் சின்னம்



வரலாற்றுச் சிறப்புமிக்க அரச அரண்மனைகளில் முடியாட்சியின் வரலாற்றின் பொது வரலாற்றாசிரியர் சார்லஸ் ஃபாரிஸ் கிரீட ஆபரணங்கள் குறித்துப் பேசுகையில், பிரிட்டிஷ் முடியாட்சியின் மிகவும் சக்திவாய்ந்த சின்னங்கள் என்றும் ஆழமான மத, வரலாற்று, கலாசார முக்கியத்துவத்தை கொண்டிருக்கும் என்றும் குறிப்பிட்டார்.

வரலாற்றுச் சிறப்புமிக்க கோபுரத்தைப் பராமரிக்கும் சுயாதீன தொண்டு நிறுவனமான ஹிஸ்டாரிக் ராயல் பேலஸ்ஸால் கடந்த நான்கு ஆண்டுகளாக மறு விளக்கக் காட்சி தயாரிக்கப்பட்டது. இந்தக் கண்காட்சி பார்வையாளர்களுக்காக மே 26 அன்று திறக்கப்படுகிறது.


பிபிசி தமிழ்:
சிவா
Fri Aug 08, 2014 1:44 am

Search in: பொதுஅறிவு
Topic: கோஹினூர் வைரம்
Replies: 7
Views: 2021
Topics tagged under கோஹினூர் on ஈகரை தமிழ் களஞ்சியம் ZJCr7Qj

மர்ம நவரசங்களில் மாயஜாலம் காட்டும் கோஹினூர் வைரத்திற்குப் பல உயிர்களைப் பேரம் பேசிய பட்டப் பெயரும் உண்டு. இந்த வைரத்தின் ஒரே ஒரு சிறப்பு. அதனை யாரும் விற்றதும் கிடையாது. யாரும் விலை கொடுத்து வாங்கியதும் கிடையாது. அந்த அளவுக்கு தனித்துவம் வாய்ந்தது. உலகில் புகழ்பெற்ற எல்லா வைரங்களுமே கோடிக்கணக்கில் விலை பேசப்பட்டவை. ஆனால் விலையே பேச முடியாத ஓர் உன்னத நிலையில் இன்னும் இருப்பது இந்தக் #கோஹினூர்_வைரம் மட்டும்தான்.

கோஹினூர் வைரம் இப்போது இங்கிலாந்து எலிசபெத் மகாராணியின் தலை மேல் உள்ள கிரீடத்தில் இருக்கிறது. ஊமைக் குறவன் போல ஒய்யாரமாக புன்முறுவல் செய்கிறது. கிருஷ்ண லீலையும் செய்கிறது. அதனை இந்தியா, ஈரான், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் நாடுகள் உரிமை கேட்கின்றன. பஞ்சாப், மகாராஷ்டிரா, ஆந்திர பிரதேச மாநிலங்கள் ஏகபோகச் சொந்தம்  கொண்டாடுகின்றன. எங்க பாட்டன் சொத்து எங்க பாட்டிச்  சொத்து என்று சிலர் கட்சி கட்டுகிறார்கள். அருமையான சீரியல் நாடகம். இந்த நாடகத்தைப் பதினெட்டுப் பட்டி உலக நாடுகளும், டிக்கெட் வாங்காமல் முன் வரிசையில் அமர்ந்து வேடிக்கை பார்க்கின்றன.

மகா அலெக்ஸாண்டர், கஜ்னி முகமது, ஜெங்கிஸ் கான், நாடிர் ஷா, பாபர் போன்ற மாபெரும் மண்ணாசைப் பிரியர்கள் எல்லாம் இந்தியா மீது படையெடுத்ததற்கு மூலகாரணம் இந்தக் கோஹினூர் வைரம்தான். அழுத்தமாகச் சொன்னால், கொலை வாசம் வீசிய கோஹினூர் வைரம். சும்மா அள்ளி விடுவதாக நினைக்க வேண்டாம். உண்மையைத் தவிர வேறொன்றும்தெரியாது. முதலில் படியுங்கள். அப்புறம்  சொல்லுங்கள்.

கோஹினூர் வைரம் யாருக்குச் சொந்தம் ஆகிறதோ அவர் உலகத்தை ஆள்வார் எனும் அய்தீகம் இன்றும் புரையோடிக் கிடக்கிறது. என்ன அப்பேர்ப்பட்ட பெரிய அய்தீகம். நீண்ட ஆயுளைக் கொடுக்கும். பல தலைமுறைகளுக்குச் செல்வத்தைக் கொடுக்கும். இந்த வைரம் கிடைத்த பிறகுதானே ஆங்கிலேயர்கள் முக்கால்வாசி உலகத்தைத் தங்கள் பக்கம் வசப்படுத்திக் கொண்டார்கள்.

இதற்கு ஒரு சாபக்கேடும் இருப்பதாகக் கதை சொல்கிறார்கள். இதை வைத்திருக்கும் ஆண்கள் மௌனமாக இறந்து போவார்கள் அல்லது கண் குருடாகிப் போவார்கள். அவ்வளவுதான்!   பெண்களாக இருந்தால் அவர்களுடைய உறவுகள் சிதைந்தும் போகலாம். இதுதான் அந்தச் சாபம். இணையத்தில் இந்த மாதிரி கதை சொல்ல ஆள் இருக்கிறார்கள். அவர்கள் சொல்வதிலும் நியாயம் இருப்பதாகவே தெரிகிறது. அப்புறம் என்ன! அதையும் கேட்டுப் பார்ப்போம்.

இதற்கு இங்கிலாந்து எலிசபெத் மகாராணியாரின் குடும்பத்தைச் சொல்லலாம். இப்போது கோஹினூர் வைரம் அவர் தலையில்தானே இருக்கிறது. இளவரசி டயானா இறந்து போனார். இளவரசர் சார்ல்ஸ்-கமிலா காதல் விவகாரம். அவருடைய அக்காவின் விவாகரத்து. எலிசபெத் அரசியாரின் பெரியப்பா ஒர் அமெரிக்க நடிகையை மணந்து இங்கிலாந்து அரச முடியைத் தூக்கி வீசியது. விக்டோரியா மகாராணியாரின் காமக் களிபோகங்கள் வெளி யுலகத்திற்குத் தெரிய வந்தது என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.

தெரிந்தும் ஏன் வைத்திருக்கிறார்கள் என்று கேட்கலாம். நல்ல கேள்வி. ஆசை யாரை விட்டது. மூன்று தலைமுறைகளுக்கு முன்னால் விக்டோரியா மகாராணியார் சூட்டிக் கொண்ட கிரீடத்தின் தலையாய வைரம், இந்தக் கோஹினூர் வைரம். வழிவழியாக வருகிறது. நீண்ட காலம் வாழ வேண்டும் எனும் ஆசையும் அவர்களுக்கு இருக்கிறது.

#கோஹினூர்_வைரம் உலகப் புகழ் பெற்ற உன்னதமான வைரம். இந்த வைரத்திற்காகப் பல பயங்கரமான போர்கள்நடந்துள்ளன. பல கொலைகள் நடந்துள்ளன. பல கோட்டைகள் இடித்து நாசமாக்கப்பட்டுள்ளன. பல்லாயிரம் வாயில்லா ஜ“வன்கள் அழிந்துள்ளன. பல்லாயிரம் அந்தப்புர பெண்கள், போர் வீரர்களின் உடல் பசியைத் தீர்க்கும் தீவனங்களாகத் தூக்கி வீசி இறைக்கப் பட்டனர். கசாப்புக் கடைக்காரன் இறைச்சியைத் தூக்கிப் பசியால் வாடித் திரியும் தெருநாய்களுக்குப் போட்ட கதைதான் அந்தப்புரத்து அழகிகளின் கதையும்! எல்லாம் கோஹினூர் வைரத்தை அடைய வேண்டும் எனும் ஆதங்கத்தில் வந்தவை.

இந்த இடத்தில் நாம் ஒன்றை மறந்துவிடக் கூடாது. இந்தப் போர் அட்டூழியங்களுக்கும் கோஹினூர் வைரத்திற்கும் நேரடியாக எந்தவித சம்பந்தமும் இல்லை. மண்ணாசைப் பிடித்தவர்கள் செய்த கொடூரங்களுக்கு பாவம் கோஹினூர் வைரம் என்ன செய்யும். அதைத்தான் நானும் கேட்கிறேன்.  பழி ஒரு பக்கம் பாவம் ஒரு பக்கம்.

#கோஹினூர் வைரத்தின் அருமை பெருமைகளைப்பற்றி கேள்விப் பட்டிருக்கலாம். ஆனால், அதன் வேதனையான பின்னணியைப் பற்றி கண்டிப்பாகக் கேள்விப் பட்டிருக்க முடியாது.பல கோடி ஆண்டுகள் பூமிக்குள்ளே புதைந்து கிடந்த கலைச் செல்வம் கோஹினூர் வைரம். ஏறக்குறைய 5000 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் இந்தியாவில் இருந்த கோல்கொன்டா நிலப்பகுதியில் கிடைக்கப் பெற்றது. வெகு காலமாக அதற்கு முகவரி இல்லை. அப்படிப்பட்ட ஒரு வைரம் இருப்பதாக யாருக்கும் தெரியாது. இருந்தாலும் பாருங்கள் வெளிநாட்டவர்   தெரிந்து வைத்திருந்தார்கள். அந்தக் காலத்து ஒற்றர்களைச் சும்மா சொல்லக்கூடாது.

கோல்கொன்டா என்ற பெயர் ஞாபகத்திற்கு வரலாம். 1950-60களில் ரேடியோ மலாயாவில் வாரத்திற்கு ஒருமுறை நேயர் விருப்பம் வரும். அதைக் கேட்க தோட்டமே திரண்டு நிற்கும். நேயர் விருப்பத்திற்கு அப்பேர்ப்பட்ட மவுசு. அது ஒரு கனாக்காலம். அதில் கோல்கொன்டா தோட்டத்தைச் சேர்ந்தவர்கள் பலரின் பெயர்கள் வாராவாரம் வரும். அந்தக் கோல்கொன்டா தோட்டத்திற்கு இந்தியாவின் கோல்கொன்டா சாம்ராஜ்யத்தின் பெயர் அப்போது வைக்கப் பெற்றது. நான் பிறந்து வளர்ந்த டுரியான் துங்கல் காடிங் தோட்டத்தைச் சொல்கிறேன். நேயர் விருப்பத்திற்கு அப்பேர்ப்பட்ட மவுசு. அதில் கோல்கொன்டா தோட்டத்தைச் சேர்ந்தவர்கள் பலரின் பெயர்கள் வாராவாரம் வரும்.

இப்போது அந்தக் கோல்கொன்டா தோட்டம் இருக்கிறதா இல்லையா தெரியவில்லை. அந்த அளவுக்கு பல தோட்டங்கள் அத்திம்மேடுகளாகி விட்டன.

Back to top