புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 8:35 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:01 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
Topics tagged under இந்தியா on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under இந்தியா on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under இந்தியா on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
54 Posts - 45%
ayyasamy ram
Topics tagged under இந்தியா on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under இந்தியா on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under இந்தியா on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
50 Posts - 42%
mohamed nizamudeen
Topics tagged under இந்தியா on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under இந்தியா on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under இந்தியா on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
4 Posts - 3%
prajai
Topics tagged under இந்தியா on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under இந்தியா on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under இந்தியா on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
4 Posts - 3%
Jenila
Topics tagged under இந்தியா on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under இந்தியா on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under இந்தியா on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
2 Posts - 2%
Ammu Swarnalatha
Topics tagged under இந்தியா on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under இந்தியா on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under இந்தியா on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
Topics tagged under இந்தியா on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under இந்தியா on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under இந்தியா on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
1 Post - 1%
M. Priya
Topics tagged under இந்தியா on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under இந்தியா on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under இந்தியா on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
1 Post - 1%
kargan86
Topics tagged under இந்தியா on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under இந்தியா on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under இந்தியா on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
1 Post - 1%
jairam
Topics tagged under இந்தியா on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under இந்தியா on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under இந்தியா on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
Topics tagged under இந்தியா on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under இந்தியா on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under இந்தியா on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
97 Posts - 56%
ayyasamy ram
Topics tagged under இந்தியா on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under இந்தியா on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under இந்தியா on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
50 Posts - 29%
mohamed nizamudeen
Topics tagged under இந்தியா on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under இந்தியா on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under இந்தியா on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
8 Posts - 5%
prajai
Topics tagged under இந்தியா on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under இந்தியா on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under இந்தியா on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
6 Posts - 3%
Jenila
Topics tagged under இந்தியா on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under இந்தியா on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under இந்தியா on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
4 Posts - 2%
Rutu
Topics tagged under இந்தியா on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under இந்தியா on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under இந்தியா on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
3 Posts - 2%
Baarushree
Topics tagged under இந்தியா on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under இந்தியா on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under இந்தியா on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
Topics tagged under இந்தியா on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under இந்தியா on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under இந்தியா on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
2 Posts - 1%
viyasan
Topics tagged under இந்தியா on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under இந்தியா on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under இந்தியா on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
1 Post - 1%
M. Priya
Topics tagged under இந்தியா on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under இந்தியா on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under இந்தியா on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

Search found 3 matches for இந்தியா

Topics tagged under இந்தியா on ஈகரை தமிழ் களஞ்சியம் Vikatan%2F2023-03%2F342b4f77-7f61-483d-8f80-b7452282a9c9%2F63fee766ae835.jpg?auto=format%2Ccompress&format=webp&w=700&dpr=1

16 பெட்டிகள் கொண்ட இந்த ரயில் கிளம்பிய இரண்டே நிமிடங்களில் 160 கி.மீ வேகத்தை எட்டிவிடும். பரிசோதனைகளின்போது இது மணிக்கு 180 கிலோமீட்டர் என்ற உச்சபட்ச வேகத்தையும் தொட்டது



`வந்தே பாரத்' என்றதும் உங்கள் நினைவுக்கு வருவது எது? அடிக்கடி மாடுகள்மீது மோதி முன்பக்கம் சேதமடைந்த ரயில், அதனால் மீம் கிரியேட்டர்களுக்கு கன்டென்ட் ஆன ரயில் என்பது மட்டும்தானா? ஆனால், இந்த ரயிலுக்குப் பலரும் அறியாத இன்னொரு பக்கமும் இருக்கிறது.



பிரம்மோஸ் ஏவுகணை, சந்திரயான் விண்கலம் ஆகியவற்றுக்கு இணையாக வைத்துப் பேசப்பட வேண்டிய இந்தியாவின் பெருமித உருவாக்கம் அது! இந்தியர்களால் ஓர் அதிவேக ரயிலை சுயசார்புடன் உருவாக்கி ஓட வைக்கமுடியும் என்பதை நிரூபித்த ரயில். ‘நம்மால் முடியும்' என்ற நம்பிக்கையை இந்தியர்களுக்கு விதைக்க வேண்டிய ஒரு கனவே இது. பிரம்மோஸ் ஏவுகணையில் அப்துல் கலாம், சந்திரயானில் மயில்சாமி அண்ணாதுரை போல வந்தே பாரத்துக்கும் ஒரு தமிழகத் தொடர்பு இருக்கிறது. ஆம், இதை வடிவமைத்தவர்கள் நம் சென்னைப் பெரம்பூரில் உள்ள இணைப்புப் பெட்டித் தொழிற்சாலை (ஐ.சி.எஃப்) பொறியாளர்கள்.



இந்திய ரயில்வேக்கு 170 ஆண்டுக்கால பாரம்பரியம் உண்டு. ஆனால், #ரயில்கள் என்றால் நம் நினைவுக்கு வருவது என்ன? காதைச் செவிடாக்கும் ஓசையுடன் பயணம், எப்போதும் தாமதம், அழுக்கான பெட்டிகள், கொளுத்தும் கோடையிலும் காற்றை உள்ளே நுழைய அனுமதிக்காத சிறிய ஜன்னல்கள், நாற்றமெடுக்கும் கழிவறைகள்... இப்படி அந்தப் பயணத்தை நரகமாக்கும் ‘வசதிகள்'தான் நினைவுக்கு வரும்.

பல நாடுகளில் ரயில் பயணங்கள் இப்போது விமானப் பயணம் போல சொகுசாக மாறிவிட்டன. ஜப்பான், சீனா என்று ஆசிய நாடுகளிலேயே புல்லட் ரயில்கள் வந்துவிட்டன. ஆனால், அதற்கான கட்டமைப்புச் செலவுகள் மிக அதிகம். புதிதாக நில ஆர்ஜிதம் செய்து, தனியாகப் பாதை அமைத்து மட்டுமே புல்லட் ரயில்களை இயக்க முடியும். மும்பையிலிருந்து அகமதாபாத் வரை 508 கி.மீ நீளத்துக்கு #புல்லட்_ரயில் செல்வதற்கு 1.1 லட்சம் கோடி ரூபாயில் திட்டமிட்டுள்ளனர். ஆனால், முடிக்கும்போது செலவு இரண்டு மடங்காகிவிடும் என்கிறார்கள்.

இந்திய ரயில்வேக்கான 2023-24-ம் ஆண்டுக்கான பட்ஜெட் ஒதுக்கீடு 2.4 லட்சம் கோடி ரூபாய். இதேபோல ஒரு புல்லட் ரயில் பாதை அமைப்பதற்கே அது காணாது. உலகில் மிக அதிக ரயில் பாதைகளைக் கொண்டு இயங்கும் பெரிய நிறுவனமான இந்திய ரயில்வே இப்படி மாற முடியாது. ஆண்டுக்கு 800 கோடி பயணங்கள் நிகழும் ஒரு தேசத்துக்கு புல்லட் ரயில்கள் தீர்வல்ல! ஸ்பெயின், பிரான்ஸ் போன்ற சிறிய ஐரோப்பிய நாடுகள் பலவும் பயன்படுத்தும் அதிவேக ரயில்களே சரியான மாற்று.

இப்போது இருக்கும் தண்டவாளங்களையே பலப்படுத்தி, அதில் சொகுசு ரயில்களை அதிவேகத்தில் இயக்குவதுதான் இந்தத் திட்டம். ஏற்கெனவே ராஜ்தானி, சதாப்தி எனக் கூடுதல் வசதிகள் கொண்ட ரயில்கள் இயங்கிவந்தன. ஐரோப்பிய ரயில்கள் போலவே அவை சொகுசானவை. அதேபோன்ற புது ரயில்களை அறிமுகப்படுத்த இந்திய ரயில்வே திட்டமிட்டது. இதற்காக #ரயில் பெட்டிகளை வெளிநாடுகளிருந்து இறக்குமதி செய்ய முடிவெடுத்தார்கள்.

அந்த நேரத்தில் பெரம்பூர் ஐ.சி.எஃப் பொது மேலாளராக இருந்தவர் சுதான்ஷு மணி. இந்திய ரயில்வேக்கான ரயில் பெட்டிகளைப் பெருமளவு உருவாக்குவது இந்தத் தொழிற்சாலைதான். அதிவேக ரயில்களை நாமே இங்கு உருவாக்க முடியும் என்று அவர் நம்பினார். ரயில்வே போர்டு அதிகாரிகளை சந்தித்த அவர், ‘‘நீங்கள் எத்தனை ரயில்களை வேண்டுமானாலும் இறக்குமதி செய்துகொள்ளுங்கள். ஆனால், இரண்டே இரண்டு ரயில்களை உருவாக்குவதற்கான அனுமதியை மட்டும் எங்களுக்குக் கொடுங்கள். வெளிநாட்டு இறக்குமதியைவிட மூன்றில் ஒரு பங்கு குறைந்த செலவில் நாங்கள் ரயிலைச் செய்து காட்டுகிறோம்'' என்று அவர் அனுமதி கேட்டார். இதற்காக ரயில்வே போர்டு அதிகாரிகளின் காலில் விழவும் தயாராக இருந்த அவரின் மன உறுதியைப் பார்த்துவிட்டு அனுமதி கொடுத்தனர் போர்டு அதிகாரிகள்.

2017 ஏப்ரலில் இதற்கான அனுமதியும், ரூ.200 கோடியும் வந்து சேர்ந்தது. ஐ.சி.எஃப் அதிகாரிகள், தொழிலாளர்கள் என 300 பேர் கொண்ட ஒரு குழுவை உருவாக்கினார் சுதான்ஷு மணி. “இதில் ஏதாவது தவறு நடந்து திட்டம் தோல்வி அடைந்தால், நானே முழுப்பொறுப்பு ஏற்றுக்கொள்கிறேன். அதற்கான தண்டனை எனக்கு மட்டுமே கிடைக்கும். ஆனால் இதைச் சாதித்துவிட்டால், இந்தியாவின் முதல் அதிவேக ரயிலை உருவாக்கியவர்கள் என்ற பெருமை நமக்குக் கிடைக்கும்” என்று உறுதிகொடுத்து அந்தக் குழுவைக் களத்தில் இறக்கினார். 18 மாதங்களில் இதை முடித்து, 2018 அக்டோபரில் ரயிலை இயங்கவைக்க வேண்டும் என்று அவர்கள் திட்டமிட்டார்கள். அதற்காகவே ‘ட்ரெயின் 18' என்றும் இதற்குப் பெயர் வைத்தார்கள். இயல்பாக இப்படி ஒரு புது முயற்சி பல ஆண்டுகள் பிடிக்கும். ஆனால், 2018 டிசம்பரில் சுதான்ஷு மணி ஓய்வுபெற இருந்தார். தனக்குப் பிறகு வரும் ஒருவர் தன் கனவை அதே வேகத்துடன் நிறைவேற்றுவார் என்பதற்கு எந்த உறுதியும் இல்லாத நிலையில், இதை முடித்துக் காட்டிவிட்டு ஓய்வுபெற விரும்பினார் அவர்.

இன்ஜினீயர்கள் சுப்ராங்ஷு, சீனிவாஸ், வாவ்ரே, தேவிபிரசாத் டேஷ், என்.கே.குப்தா என்று ஒரு பெரிய குழுவே விடுமுறைகூட எடுக்காமல் உழைத்தது. பயணிகள் இருக்கை முதல் ரயிலின் பிரேக் வரை உலகிலேயே தரமான பொருள்களை வாங்கி ரயிலை உருவாக்கினார்கள். 2014-ம் ஆண்டு பிரதமர் மோடி தலைமையில் அமைந்த அரசு, ரயில்வே பொது மேலாளர்களுக்கு முடிவெடுக்கும் விஷயத்தில் அதிகபட்ச சுதந்திரம் கொடுத்தது. இதனால் வழக்கான சிவப்புநாடா கட்டுப்பாடுகள் எதுவும் இல்லாமல் சுதான்ஷு மணி தலைமையிலான குழு தங்களுக்குத் தேவையானவற்றைப் பெற முடிந்தது.



நினைத்தது போலவே 18 மாதங்களில் ரயிலை உருவாக்கியது இந்தக் குழு. 2018 அக்டோபர் 27-ம் தேதி இது பயணத்துக்குத் தயார் என அறிவிக்கப்பட்டது. ரயில் பயணம் என்பது வேகமாகவும் பாதுகாப்பானதாகவும், அதிர்வுகள் அதிகம் இல்லாததாகவும் அமைய வேண்டும். அதை மனதில் கொண்டு உருவானது ட்ரெயின் 18. வழக்கமான ரயில்களில் இன்ஜின் தனியாக இருக்கும். இது அப்படி இல்லை. ரயிலுடன் இணைந்ததாக இன்ஜின் இருக்கும். ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் மெட்டீரியலில் உருவாக்கப்பட்ட ரயில் என்பதால், வழக்கமான ரயில்களைவிடப் பாதி எடைதான். பழைய ரயில்களைவிடத் தளம் உயரமாக அமைக்கப்பட்டது என்பதால், உள்ளே பெரிதாக அதிர்வுகள் இருக்காது.

விமான இருக்கைகள் போல நன்கு சாய்த்து உட்காரும் வசதி கொண்ட இருக்கைகள், நீண்ட ஜன்னல்கள், பயணிகள் ஏறியதும் உள்ளிழுத்துக் கொள்ளும் படிகள், தானியங்கிக் கதவுகள், பயணிகள் ஏறிவிட்டார்களா என்று ரயிலை ஓட்டுபவர் கவனிக்க வசதியாக உள்ளேயும் வெளியிலும் சி.சி.டி.வி கேமராக்கள், காற்றைச் சுத்திகரிக்கும் நவீனத் தொழில்நுட்பம், மாற்றுத் திறனாளிகளும் சுலபமாகப் பயன்படுத்த முடிகிற வசதிகள் கொண்ட அதிநவீனக் கழிப்பறை என உலகத்தரமான ரயிலாக இது உருவானது. இந்த ரயிலின் சில பகுதிகளைத் தவிர மற்ற எல்லாமே இந்தியத் தயாரிப்புகள் என்பது பெருமிதமான தகவல்.

16 பெட்டிகள் கொண்ட இந்த ரயில் கிளம்பிய இரண்டே நிமிடங்களில் 160 கி.மீ வேகத்தை எட்டிவிடும். பரிசோதனைகளின்போது இது மணிக்கு 180 கிலோமீட்டர் என்ற உச்சபட்ச வேகத்தையும் தொட்டது. 200 கி.மீ வேகம் வரை இது இயங்கும். இந்த வேகத்தில் சென்றால், சென்னையிலிருந்து மதுரைக்கு இரண்டரை மணி நேரத்தில் போய்விட முடியும். என்னதான் ரயில் இந்த வேகத்தில் போகும் என்றாலும், அதைத் தாங்கும் திறனுடன் ஒரு சதவிகித தண்டவாளங்கள்கூட இந்தியாவில் இல்லை. அதனால், 150 கி.மீ மட்டுமே அதிகபட்ச வேகம் என்று நிர்ணயித்தார்கள்.

ரயில்வேயில் மெக்கானிக்கல் துறைக்கும் எலெக்ட்ரிகல் துறைக்கும் எப்போதுமே வாய்க்கால் தகராறு உண்டு. மெக்கானிக்கல் துறையே இந்த ரயிலை உருவாக்கியது. ‘நாங்கள் சோதனை செய்து, தகுதியானது என்று அறிவித்தால் மட்டுமே இதை இயக்க முடியும்' என்று முரண்டு பிடித்தது எலெக்ட்ரிகல் துறை. இந்த மோதல் நடக்கும்போதே பதவிக்காலம் முடிந்து சுதான்ஷு மணி ஓய்வு பெற்றுவிட்டார். கடைசியில் எலெக்ட்ரிகல் துறையின் சோதனை தேவையில்லை என ரயில்வே போர்டு முடிவெடுத்த பிறகு, இந்த ரயிலுக்கு வந்தே பாரத் எனப் பெயர் சூட்டப்பட்டது. முதல் வந்தே பாரத் ரயிலின் பயணத்தை 2019 பிப்ரவரி 15-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். அது டெல்லியிலிருந்து மோடியின் தொகுதியான வாரணாசிக்குப் போனது. அதற்குமுன்பு 12 மணி நேரம் ஆனது வாராணாசி செல்ல! அதை எட்டு மணி நேரப் பயணமாக இந்த ரயில் குறைத்தது. இதைத் தொடர்ந்து அடுத்த ரயில் டெல்லியிலிருந்து வைஷ்ணவதேவி கோயில் வரை சென்றது.

இந்த ரயிலின் வெற்றிக்காக சுதான்ஷு மணி தலைமையிலான சென்னை ஐ.சி.எஃப் குழுவினர் கொண்டாடப்பட்டிருக்க வேண்டும். இந்நேரம் இந்தியா முழுக்க நூற்றுக்கணக்கான வந்தே பாரத் ரயில்கள் ஓடிக்கொண்டிருக்க வேண்டும். ஆனால் என்ன நடந்தது தெரியுமா?



சுதான்ஷு மணி தலைமையிலான குழுவினர் மீது விசாரணைதான் பாய்ந்தது. ரயில்வே நிர்வாகத்துக்குள் இருக்கும் போட்டி, பொறாமை, குழு மனப்பான்மை காரணமாக, இவர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. முதல் இரண்டு ரயில்களை உருவாக்குவதற்கான எலெக்ட்ரிக் உபகரணங்கள் வாங்கும் டெண்டரில் இரண்டு வெளிநாட்டு நிறுவனங்களைப் புறக்கணித்துவிட்டு, தரமற்ற இந்திய நிறுவனத் தயாரிப்பை வாங்கியதாகக் குற்றச்சாட்டு. அந்த ரயிலை உருவாக்கிய குழுவில் இருந்த முக்கியமான பலரும் இடமாற்றம் செய்யப்பட்டார்கள்.

இந்த விசாரணை ஒருபக்கம் நடக்கும்போதே, வெளிநாடுகளிலிருந்து 60 ரயில்களை இறக்குமதி செய்யவும் முயன்றார்கள். அதுவும். வந்தே பாரத் ரயிலுக்கு ஆன செலவைவிட நான்கு மடங்கு அதிக விலையில்! வந்தே பாரத் உருவாக்கக் குழுவில் இருந்த அதிகாரிகள் சிலர் ரயில்வே போர்டுக்குக் கடிதம் எழுதி, ‘விசாரணையை விரைந்து நடத்துங்கள், நாங்கள் எதிர்கொள்ளத் தயார். தாமதம் செய்தால் பிரதமர் அலுவலகம் வரை செல்வோம்' என்றனர். அதன்பின் நடந்த விசாரணையில், அவர்கள் தவறு செய்யவில்லை என்பது நிரூபணமானது. ஆனால், இதில் இரண்டு ஆண்டுகள் ஓடிவிட்டன.

25 மாதங்கள் கழித்து மூன்றாவது வந்தே பாரத் ரயில் உருவாகி, சமீபத்தில் காந்தி நகரிலிருந்து மும்பை சென்றது. இப்போது இந்தியா முழுக்க எட்டு வந்தே பாரத் ரயில்கள் ஓடுகின்றன. சென்னையிலிருந்து மைசூருக்கும் ஒன்று செல்கிறது. எல்லாம் திட்டமிட்டபடி நடந்தால், அடுத்த ஆண்டு சுதந்திர தினம் கொண்டாடும்போது 75 வந்தே பாரத் ரயில்கள் இந்தியாவில் ஓடும். அதில் சில ரயில்கள் தமிழகத்திலும் ஓடும். தண்டவாளங்கள், பாலங்கள் பலமாக்கப்பட்ட பிறகு இவை இன்னும் வேகமாகச் செல்லும்.

வெளிநாடுகளிலிருந்து அதிவேக ரயில்களை இறக்குமதி செய்துவந்த #இந்தியா, இப்போது #வந்தே_பாரத் மூலம் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது. உலகத்தரமான ரயில் பெட்டிகளைப் பல ஐரோப்பிய நாடுகள் சுமார் 25 கோடி ரூபாய்க்கு விற்கின்றன. இந்தியா இதை எட்டுக் கோடி ரூபாய்க்கு விற்க முடியும். அதனால் நாம் ஏற்றுமதி செய்யும் இடத்துக்கு வந்திருக்கிறோம்.

கடைசியாக அந்த மாட்டு விவகாரத்துக்கு வருவோம். வழக்கமான ரயில்களில் முன்புறம் இரும்புத் தடுப்புகள், இணைப்புகள் இருக்கும். மோதினால் கால்நடைகளை இவை தூக்கி வீசிவிடும். ஆனால் வந்தே பாரத் ரயில் சத்தம் எழுப்பாமல் அதிவேகத்தில் செல்ல வேண்டும் என்பதால், அவற்றின் முன்புறம் சாய்வுக்கோணத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அவற்றில் இரும்புக் கவசங்கள் பொருத்த முடியாது. அதனால் வெளிப்புறம் சேதமடைகிறது. ரயிலின் இன்ஜினுக்கு பாதிப்பு ஏற்படுவதில்லை. புல்லட் ரயில்களுக்குக்கூட இப்படி ஆகும்.



விகடன்
Topics tagged under இந்தியா on ஈகரை தமிழ் களஞ்சியம் Fb_img20

இன்றோடு உக்ரைன்மேல் படையெடுத்து ஓராண்டை நிறைவு செய்கின்றது ரஷ்யா



இப்போரினால் என்னென்ன நடந்ததென்றால் அது பலவகை விளைவுகளை சொல்ல கூடியது

முதலாவது ரஷ்யா இதுகாலமும் மிரட்டி கொண்டிருந்தது போல இனியும் அக்கம்பக்கம் நாடுகளை மிரட்ட முடியாது என்பதும், எது நடக்க கூடாது என #ரஷ்யா அஞ்சியதோ அதாவது எக்காரணம் கொண்டும் நேட்டோவும் அமெரிக்காவும் தங்கள் காலடியில் வரகூடாது என அஞ்சியதோ அது நடந்தே விட்டது

போரின் முதல் தோல்வி ரஷ்ய ராணுவ வியூகமும் ரஷ்யாவின் ஆயுத தயாரிப்பில் வெளிநாட்டு மூலபொருள் இருந்ததுமாகும், ரஷ்ய ராணுவ வியூகம் சுத்தமாக சொதப்பியது

ஒரு பக்கம் ரஷ்ய ராணுவம் இன்னொரு பக்கம் ரஷ்ய வாடகை ராணுவமான் வாக்னர் குரூப்பெல்லாம் குழப்பி அடித்ததில் சூழல் உக்ரைனுக்கு ஆதரவானது

ரஷ்யா ஆயுத ஏற்றுமதி நாடு ஆனால் அதன் மூலபொருள் அன்னிய இறக்குமதியில் இரூந்ததை பின்னர் காணமுடிந்தது இதனாலே அதன் ஏவுகனை வீச்சு விமான படை வீச்சு எல்லாமே குறைந்து ஒரு கட்டத்தில் ஈரான், வடகொரியா என கை ஏந்தியது ரஷ்யா

போரில் #உக்ரைன் சாகசம் காட்டியது நிஜம், என்னதான் அமெரிக்க உதவி என்றாலும் அது கிடைக்கும் நாடெல்லாம் சாதிப்பதில்லை பாகிஸ்தானை போல‌

உக்ரைன் 2013ல் புட்டீன் கிரிமியாவினை ரஷ்யா பிடித்தபொழுதே யுத்தத்தை எதிர்பார்த்தது, #புட்டீன் செய்த மிகபெரிய தவறு உக்ரைன் சுதாரிக்க சுமார் 9 ஆண்டுகாலம் அவகாசம் கொடுத்தது அல்லது ரஷ்ய ராணுவம் மேல் கொண்ட பெரும் நம்பிக்கை

இந்த 9 ஆண்டில் உக்ரைனை மேலை நாடுகள் பலமாக்கின அதுதான் பின்னர் தெரிந்தது

அமெரிக்காவின் ஜாவலின் ஏவுகனைகள் ரஷ்யாவின் டாங்கிகளை முறித்து போட்டன, ரஷ்ய விமானபடை பல விமானங்களை இழந்தபின் ஒதுங்கி கொண்டது, ரஷ்யாவின் பிரதான கப்பலான மோஸ்வா மூழ்கடிக்கபட்டதும் ரஷ்ய கடற்படையும் வீச்சை குறைத்தது

அமெரிக்க ஹைமாஸ் சிஸ்டம் உள்ளிட்ட பல ஆயுதங்கள் சாகசம் காட்டும் பொழுது ரஷ்யாவிடம் பதில் ஆயுதமில்லை

ரஷ்யாவின் எஸ் 400, எஸ் 500 சிஸ்டமெல்லாம் கடைசிவரை கைகொடுக்கவில்லை ரஷ்யாவுக்குள் நுழைந்த உக்ரைன் விமானங்கள் எளிதாக தாக்கின, ரஷ்ய கப்பலுக்கு கூட காவல் இல்லை

அதுவும் கடந்த செப்டம்பருக்கு பின் ரஷ்யா எந்த முன்னகர்வும் செய்யாமல் திண்ற ஆரம்பித்துவிட்டது

போரில் நேட்டோவும் அமெரிக்காவும் பலம்காட்டின, அவர்கள் ஆயுதங்கள் நின்று பேசின நிச்சயம் ரஷ்யாவிடம் பதில் ஆயுதமில்லை என்பது நிஜம்

ஒரு வகையில் 1980ல் ஆப்கனில் சிக்கியது போல் உக்ரைனிலும் ரஷ்யா சிக்கிவிட்டது இனி எத்தனை வரூட யுத்தம் நடந்தாலும் ரஷ்ய வெற்றி சாத்தியமில்லை

ரஷ்யாவின் ஒரே பலம் உள்நாட்டு உணவு உற்பத்தி மற்றும் எண்ணெய் உற்பத்தி , இந்த இரண்டும் இருந்தால் ஒரு தேசம் யுத்தத்தை தாங்கும், ஈராக்கின் சதாம் உசேன் அதை முயற்சித்தார்

புட்டீனின் ரஷ்யாவும் அதனை தாங்குகின்றது, அணுகுண்டு பலமான நாடு என்பதால் ஈராக் போல் உங்கே அப்படி நுழைய முடியாது என்பது புட்டீனுக்கு ஆறுதல்

ரஷ்ய வங்கிகளுக்கு தடை, விமானங்களுக்கு தடை என பல்வேறு தடைகளால் ரஷ்யா சிக்கியிருக்கின்றது இத் நிச்சயம் பின்னாளில் பாதிப்பினை கொடுக்கும், ரஷ்ய பொருளாதாரம் இப்பொழுது சீன இந்திய எண்ணெய் ஏற்றுமதியில் இருக்கின்றது

மோடி அரசு இந்தியருக்கு மட்டுமல்ல புட்டீனுக்கும் அதிர்ஷ்டம், அதனால் எண்ணெய் வியாபாரம் சரியாக நடக்கின்றது, இந்திய எரிபொருள் சந்தை ஸ்திரமாக நிற்கின்றது

இந்த போர் நிகழ்த்திய பெரிய விளைவுகள் சில உண்டு

முதலாவது இனி ரஷ்ய ஆயுதம் உலகளவில் பின்னடவை எட்டும், அந்த ஆயுத சந்தையினை அமெரிக்கா கைபற்றும்

இரண்டாவது இனி ரஷ்யா யாரையும் மிரட்டமுடியாது கடைசியில் கால்வைத்தால் உக்ரைன் நிலைதான்

மூன்றாவது உலக அளவில் பல அரசியல், ராணுவ பொருளாதார கூட்டணிகள் மாறும், மேற்காசிய நிலவரமும் மாறும்

#சீனா உலகில் அமெரிக்காவுக்கு நிகரான நாடாக தன்னை நிறுவ முயலும் அதை தடுக்க அமெரிக்கா ஆடும் ஆட்டத்தை இந்தியா தனக்கு சாதகமாக மாற்றும்

இந்தியாவின் வளர்ச்சிக்கு மிக உகந்த சூழல் இனி உருவாகும்

ஒருவகையில் 1990க்கு பின் மறுபடியும் உலகை பாதிக்க தொடங்கியிருக்கின்றது ரஷ்ய நிகழ்வுகள்

இங்கு பெரும் பலம் பெற்ற நாடுகள் மூன்று

முதலாவது சந்தேகமே இல்லாமல் அமெரிக்கா, தன் மண்ணில் ஒரு ஓலைவெடி கூட வெடிக்காமல் நீண்ட கால எதிரியினை அதன் பங்காளியினை கொண்டே குலைப்பதெல்லாம் மிகபெரிய ராஜதந்திரம்

இதனால் உக்ரைன் எனும் அடிமை சிக்கிவிட்டது, அமெரிக்க ஆயுத உலகபுகழ் பெற்றுவிட்டது, #ஐரோப்பா எண்ணெய் சந்தை அமெரிக்கா கைக்கு சென்றும் விட்டது

இப்படி பல கணக்குகளில் அவர்களுக்கு வெற்றி

சீனாவுக்கும் இந்தியாவுக்கும் சல்லி விலை எரிபொருள் என்பது மிகபெரும் அனுகூலம், அதுவும் இந்தியாவுக்கு மிக பெரும் அதிர்ஷ்டம்

சந்தடி சாக்கில் ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவோம் ஆனால் அமெரிக்காவினை பகைகமாட்டோம் என #இந்தியா ராஜதந்திரமாக நகர்ந்து உலகளவில் தன் ஆதிக்கத்தை தக்கவைத்து நிற்கின்றது

இரண்டாம் ஆண்டாக போர் தொடங்கும் நிலையில் மிகபெரிய தோல்வியின் வீழ்ச்சியில் நிற்கும் புட்டீன் இன்னும் ஆவேசமாக போரை தொடங்குவார் என எதிர்பார்க்கபட்ட நிலையில் அவருக்கும் அவர் அடியாள் படையான வாக்னர் குருப்ப்க்கும் உரசல் தொடங்குவது மேலும் ரஷ்யாவுக்கு பின்னடைவு

புட்டீன் ராஜதந்திரமாக உருவாக்கிய அவரின் கூலிபடையான வாக்னர் குரூப் இப்பொழுது தனி குழப்பம் செய்வது புட்டீனுக்கு பெரும் அதிர்ச்சி மாபெரும் பின்னடைவு

ஏற்கனவே மிகபெரிய பின்னடைவில் இருக்கும் ரஷ்யா இனி இன்னும் திணறும் கவுரவமான தோல்விக்கு கூட அது வரமுடியாது

யுத்தம் நீடித்தால் 2013ல் இழந்த கிரிமியாவினை மீள கைபற்ற உக்ரைன் தீவிரம்காட்டும் அதை தடுக்க ரஷ்யாவும் வரிந்து கட்டும் என்பதால் இருதரப்பும் இப்போதைக்கு விவகாரத்தை விட போவதில்லை

இப்பொழுது உக்ரைனின் எல்லையோர 10 சதவீத பகுதிகளை தன் ரகசிய போராளிகள் மூலமும் தன் ஆதிக்கம் மூலமும் பிடித்த ரஷ்யா அதை தக்கவைக்கவே கடும் எதிர்ப்பை எதிர்கொள்கின்றது என்பதுதான் இன்றைய நிலை

அது முன்பு பிடித்த கார்கிவ் உள்ளிட்ட நகரங்களை உக்ரைன் திரும்ப மீட்டது போல இப்பகுதிகளை பிடிக்க  உக்ரைன் கடும் போர் நிகழ்த்துகின்றது

ரஷ்யா தாக்குதல் யுத்தத்தை நிறுத்திவிட்டு இப்பொழுத் தற்காப்பில் திணறுகின்றது

எப்படியோ இந்தியாவின் #எரிபொருள் சந்தை ஓராண்டாக ஸ்திரமாக நிற்கின்றது, இன்னும் பல ஆண்டுக்கு அப்படித்தான் இருக்கும் போலிருக்கின்றது

1980களில் ஆப்கனில் தடுமாறி பின் பெரும் பின்னடவை சந்தித்த அந்த காலங்களில் மறுபடியும் மாஸ்கோ சிக்கி கொண்டது என்பதுதான் நிஜம்

காரணம் ரஷ்ய ராணுவ வியூகபடி அது இன்னும் ஸ்டாலின் அதாவது ஜோசப் ஸ்டாலின் காலத்திலே இருக்கின்றது, அதிகமான ராணுவசேனை வெற்றிகொடுக்கும் என்பது அது

ஆனால் அமெரிக்காவும் நேட்டோவும் முழு தொழில்நுட்பத்துக்கு மாறிவிட்டன ரஷ்யா அதை செய்யவில்லை

ரஷ்யாவின் வியூகம் 1950களில் கைகொடுத்திருக்கலாம் ஆனால் அது இனி எடுபடாது என்பதை ஆப்கனில் உணர்ந்தும் ரஷ்ய ராணுவம் இன்னும் தன்னை திருத்தவில்லை அதே தவறை உக்ரைனிலும் செய்கின்றார்கள் என்பது தெரிகின்றது

அதனை மாற்றாதவரை ரஷ்யாவுக்கு வெற்றி இல்லை

உண்மையில் ரஷ்யா மிக பலமான நாடு சந்தேகமில்லை , ஒரு வருடமாக சுமார் 30 சக்திவாய்ந்த நாடுகளை எதிர்த்து நிற்கின்றது, தன் நாட்டிலும் அரசியல் நெருக்கடி மக்கள் குழப்பம் வராத அளவு அது பலத்து நிற்கின்றது

ஆனால் இப்போரை உக்ரைன் தொடங்கியிருந்து இந்நிலை வந்திருந்தால் அது ரஷ்யாவின் வெற்றி, ஆனால் போரை தொடங்கியது ரஷ்யா எனும் வகையில் இது ரஷ்யாவின் தோல்வி, பெரும் தோல்வி என்பதை ஒப்புகொள்ளத்தான் வேண்டும்

#பிரம்ம_ரிஷியார் @ முகநூல்



Topics tagged under இந்தியா on ஈகரை தமிழ் களஞ்சியம் 6-2-na11 பாரதீய ஜனதா, பாராளுமன்ற தேர்தலில் 282 இடங்களில் அபார வெற்றி பெற்று, தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்தது.

பா.ஜனதா எம்.பி.க்கள் கூட்டத்தில் பிரதமராக தேர்வு; ஆட்சி அமைக்க ஜனாதிபதி முறைப்படி அழைப்பு விடுத்தார்; நரேந்திரமோடி 26–ந் தேதி பதவி ஏற்பு

பாராளுமன்ற கட்சி கூட்டம்

புதிய பிரதமரை தேர்ந்தெடுப்பதற்காக பாராளுமன்ற பாரதீய ஜனதா கூட்டம் (புதிய எம்.பி.க்கள் கூட்டம்), டெல்லியில் பாராளுமன்ற மைய மண்டபத்தில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 282 எம்.பி.க்களும் கலந்து கொண்டனர்.

கட்சி தலைவர் ராஜ்நாத் சிங், பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, கட்சியின் மூத்த தலைவர்கள் அனைவரும் பங்கேற்றனர். கூட்டம் தொடங்கியதும், பாராளுமன்ற கட்சி தலைவராக நரேந்திர மோடியின் பெயரை அத்வானி முன்மொழிவார் என கட்சி தலைவரும், தேர்தல் அதிகாரியுமான ராஜ்நாத் சிங் அறிவித்தார். அங்கே கூடியிருந்த அனைவரும் கைதட்டி மகிழ்ச்சியுடன் அதை ஆரவாரத்துடன் வரவேற்றனர்.

மோடி, பிரதமராக தேர்வு

அதைத் தொடர்ந்து பாராளுமன்ற கட்சி தலைவர் (பிரதமர்) பதவிக்கு நரேந்திர மோடி பெயரை அத்வானி முன்மொழிந்து பேசினார். அவரைத் தொடர்ந்து கட்சியின் முன்னணி தலைவர்கள் முரளி மனோகர் ஜோஷி, வெங்கையா நாயுடு, சுஷ்மா சுவராஜ், ரவிசங்கர் பிரசாத், கோபிநாத் முண்டே, அருண் ஜெட்லி, கரிய முண்டா உள்ளிட்டவர்கள் வழிமொழிந்து பேசினர்.

பாராளுமன்ற கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட நரேந்திர மோடிக்கு கட்சி தலைவர்கள் அனைவரும் மாலை அணிவித்தும், ஆரத்தழுவியும் வாழ்த்துகளை தெரிவித்தனர். மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். கூட்ட அரங்கில் உற்சாகம் நிரம்பி வழிந்தது. மோடியைத் தழுவி வாழ்த்தியபோது, அத்வானி உணர்ச்சிப்பெருக்குடன் காணப்பட்டார்.

ராஜ்நாத் சிங், அத்வானி பேச்சு

அதைத் தொடர்ந்து பேசிய கட்சி தலைவர் ராஜ்நாத் சிங், ‘‘இது வரலாற்று சிறப்பு மிகுந்த தருணம். என்றென்றும் நினைவில் நிற்கக்கூடிய தருணம்’’ என கூறி, இந்த தேர்தல் வெற்றிக்கு கட்சியை வழி நடத்திய மோடிக்கு புகழாரம் சூட்டினார். மோடியின் தேர்தல் பிரசார கூட்டம் ஒன்றில் தான் பங்கேற்றபோது, ‘‘நம்மால் முடியும்’’ என அவர் கூறியதை நினைவுபடுத்தியதுடன், ‘‘நாம் செய்து முடிப்போம் என இப்போது கூறுவோம்’’ என உற்சாகத்துடன் கூறினார்.

தொடர்ந்து அத்வானி பேசினார். அப்போது அவர், ‘‘நான் உணர்ச்சிப்பெருக்குடன் இருக்கிறேன். இந்த தருணம் வரலாற்று சிறப்பு மிக்கது. உணர்ச்சிப்பெருக்கானது. நடந்து முடிந்த தேர்தலில் இத்தகைய ஒரு அபார ஆதரவை மக்கள் அளித்திருப்பதின் மூலம், நமது தோள்களில் பெரியதொரு பொறுப்பு சுமத்தப்பட்டுள்ளது’’ என கூறினார்.

நன்றி தெரிவித்தார் மோடி

எளிய பின்னணியில் இருந்து வந்த தன்னை நாட்டின் பிரதமராக தேர்ந்தெடுத்ததற்கு மக்களுக்கும், கட்சிக்கும் நன்றி தெரிவித்து மோடி உருக்கமுடனும், உணர்ச்சிப்பிரவாகத்துடனும் பேசினார்.

இந்த கூட்டத்தில், மோடியை பிரதமராக தேர்வு செய்ததற்கான தீர்மானமும் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

கூட்டணி கட்சிகள் கூட்டம்

தொடர்ந்து பாரதீய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் அகாலிதள தலைவர் பிரகாஷ் சிங் பாதல், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, தெலுங்குதேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு, லோக் ஜனசக்தி தலைவர் ராம்விலாஸ் பஸ்வான், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், முன்னாள் சபாநாயகரும், தேசிய மக்கள் கட்சியின் தலைவருமான பி.ஏ.சங்மா, நாகலாந்து முதல்–மந்திரி நேய்பியு ரியோ உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர்.

அவர்களை கூட்டத்தில், பாரதீய ஜனதா தலைவர் ராஜ்நாத் சிங் அறிமுகம் செய்தார். இந்த கூட்டத்தில் பாராளுமன்ற தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவராக நரேந்திர மோடி ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கூட்டணி கட்சிகளுக்கு பாராட்டு

அவருக்கு பாராட்டு தெரிவித்து கூட்டணி கட்சி தலைவர்கள் பேசினார்கள்.

இந்த கூட்டத்தில் நன்றி தெரிவித்து பேசிய மோடி, ‘‘நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து புதிய அரசை நடத்த வேண்டும். மக்கள் தனிப்பெரும்பான்மையை எங்களுக்கு அளித்திருந்தாலும்கூட, தேசிய ஜனநாயக கூட்டணியின் ஒவ்வொரு கட்சியும் முக்கியத்துவம் வாய்ந்தவை. அவை இல்லாவிட்டால் இத்தனை எண்ணிக்கையை பாரதீய ஜனதா பெற்றிருக்க முடியாது. கூட்டணி கட்சிகள் அவரவர் பகுதிகளில் ஆற்றிய பணி, மிகச்சிறப்பானது’’ என கூறினார்.

ஜனாதிபதியுடன் தலைவர்கள் சந்திப்பு

இந்த கூட்டத்தை தொடர்ந்து தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் பா.ஜனதா தலைவர் ராஜ்நாத் சிங் தலைமையில் ஜனாதிபதி மாளிகைக்கு சென்றனர். இந்த குழுவில் பா.ஜனதா மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, சுஷ்மா சுவராஜ், வெங்கையா நாயுடு, அருண் ஜெட்லி, நிதின் கட்காரி, அனந்த் குமார், தவர்சந்த் கெல்லாட், அகாலிதள தலைவர்கள் பிரகாஷ் சிங் பாதல், சுக்பீர் சிங் பாதல், தெலுங்குதேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு, சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, லோக் ஜனசக்தி தலைவர் ராம் விலாஸ் பஸ்வான், நாகலாந்து முதல்–மந்திரியும், நாகாலாந்து மக்கள் முன்னணி தலைவருமான நேய்பியு ரியோ இடம்பெற்றிருந்தனர்.

அவர்கள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்தித்து, பாராளுமன்ற பாரதீய ஜனதா மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி தலைவராக நரேந்திர மோடி தேர்வு செய்யப்பட்டிருப்பதை தெரிவித்தனர். கட்சி தலைவர்களின் ஆதரவு கடிதங்களை வழங்கினர். நரேந்திர மோடியை அரசு அமைப்பதற்கு அழைப்பு விடுக்குமாறு கேட்டுக்கொண்டனர்.

பிரணாப் முகர்ஜியுடன் மோடி சந்திப்பு

இதையடுத்து பிற்பகல் 3.15 மணிக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை, பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நரேந்திர மோடி சந்தித்தார். மலர்க்கொத்து வழங்கினார். அப்போது பிரணாப் முகர்ஜி, ‘‘நல்வரவு’’ என்று தொடர்ந்து 3 முறை கூறி வரவேற்று பூங்கொத்து அளித்தார்.

அதைத் தொடர்ந்து அவர்கள் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தார்கள். அப்போது, பாராளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா பெற்ற அமோக வெற்றிக்காக மோடியை பிரணாப் முகர்ஜி வாழ்த்தினார்.

இந்த சந்திப்பைத் தொடர்ந்து ஜனாதிபதி மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:–

26–ந் தேதி பதவி ஏற்பு

பாரதீய ஜனதா பாராளுமன்ற கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நரேந்திர மோடி, ஜனாதிபதியை இன்று (நேற்று) பகல் 3.15 மணிக்கு சந்தித்தார். பாரதீய ஜனதாவின் பாராளுமன்ற கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாலும், மக்களவையில் அந்த கட்சிக்கு தனிப்பெரும்பான்மை இருப்பதாலும், நரேந்திர மோடியை இந்திய நாட்டின் பிரதமராக ஜனாதிபதி நியமனம் செய்துள்ளார். அவரது மந்திரிசபையில் இடம்பெறப்போகிற மந்திரிகளின் பட்டியலை அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டார். ஜனாதிபதி அவர்களுக்கு 26–ந் தேதி மாலை 6 மணிக்கு பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைப்பார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பதவி ஏற்பு விழா எங்கே?

பதவி ஏற்பு விழா, 26–ந் தேதி மாலை 6 மணிக்கு ஜனாதிபதி மாளிகையின் பிரமாண்ட முற்றத்தில் திறந்த வெளியில் அமைக்கப்படுகிற மேடையில் நடைபெறுகிறது. இந்த விழாவில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, நரேந்திர மோடிக்கும், அவரது மந்திரிசபையில் இடம் பெறும் மந்திரிகளுக்கும் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்கிறார். அதைத் தொடர்ந்து ஜனாதிபதியுடன் புதிய பிரதமரும், அவரது மந்திரிசபை சகாக்களும் குழு புகைப்படம் எடுத்துக்கொள்வார்கள்.

ஜனாதிபதி மாளிகையின் முற்றத்தில் நடந்த விழாவில்தான் முன்னாள் பிரதமர் வாஜ்பாயும் பதவி ஏற்றார். அவருடைய வழியைப் பின்பற்றி நரேந்திர மோடியும் பதவி ஏற்பு விழாவை ஜனாதிபதி மாளிகையின் முற்றத்தில் வைத்துக்கொள்ள விரும்பினார்.

வழக்கமாக பதவி ஏற்பு விழா நடக்கிற ஜனாதிபதி மாளிகையின் தர்பார் மண்டபத்தில் 500 பேர் மட்டுமே அமர முடியும். ஆனால் மோடியின் மந்திரிசபை பதவி ஏற்பு விழாவிற்கு சுமார் 3 ஆயிரம் பேர் அழைக்கப்பட உள்ளனர். இதற்கெல்லாம் வசதியாகத்தான் ஜனாதிபதி மாளிகை முற்றத்தில் பதவி ஏற்பு விழா நடக்கிறது.

Tags : #நரேந்திரமோடி #மோடி #இந்தியா #பிரதமர் #பாஜக

Back to top