புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
யாமாமாநீ யாமாமா யாழீகாமா...  Poll_c10யாமாமாநீ யாமாமா யாழீகாமா...  Poll_m10யாமாமாநீ யாமாமா யாழீகாமா...  Poll_c10 
284 Posts - 45%
heezulia
யாமாமாநீ யாமாமா யாழீகாமா...  Poll_c10யாமாமாநீ யாமாமா யாழீகாமா...  Poll_m10யாமாமாநீ யாமாமா யாழீகாமா...  Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
யாமாமாநீ யாமாமா யாழீகாமா...  Poll_c10யாமாமாநீ யாமாமா யாழீகாமா...  Poll_m10யாமாமாநீ யாமாமா யாழீகாமா...  Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
யாமாமாநீ யாமாமா யாழீகாமா...  Poll_c10யாமாமாநீ யாமாமா யாழீகாமா...  Poll_m10யாமாமாநீ யாமாமா யாழீகாமா...  Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
யாமாமாநீ யாமாமா யாழீகாமா...  Poll_c10யாமாமாநீ யாமாமா யாழீகாமா...  Poll_m10யாமாமாநீ யாமாமா யாழீகாமா...  Poll_c10 
19 Posts - 3%
prajai
யாமாமாநீ யாமாமா யாழீகாமா...  Poll_c10யாமாமாநீ யாமாமா யாழீகாமா...  Poll_m10யாமாமாநீ யாமாமா யாழீகாமா...  Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
யாமாமாநீ யாமாமா யாழீகாமா...  Poll_c10யாமாமாநீ யாமாமா யாழீகாமா...  Poll_m10யாமாமாநீ யாமாமா யாழீகாமா...  Poll_c10 
8 Posts - 1%
Guna.D
யாமாமாநீ யாமாமா யாழீகாமா...  Poll_c10யாமாமாநீ யாமாமா யாழீகாமா...  Poll_m10யாமாமாநீ யாமாமா யாழீகாமா...  Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
யாமாமாநீ யாமாமா யாழீகாமா...  Poll_c10யாமாமாநீ யாமாமா யாழீகாமா...  Poll_m10யாமாமாநீ யாமாமா யாழீகாமா...  Poll_c10 
7 Posts - 1%
mruthun
யாமாமாநீ யாமாமா யாழீகாமா...  Poll_c10யாமாமாநீ யாமாமா யாழீகாமா...  Poll_m10யாமாமாநீ யாமாமா யாழீகாமா...  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

யாமாமாநீ யாமாமா யாழீகாமா...


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Wed May 01, 2013 4:22 pm

இது தமிழ்ப்பாடல்தான். யார் பாடியது என்று சொல்லுங்கள் உறவுகளே!
விளக்கம் பிறகு சொல்கிறேன்.

யாமாமாநீ யாமாமா யாழீகாமா காணாகா
காணாகாமா காழீயா மாமாயாநீ மாமாயா.

யாகாயாழீ காயாகா தாயாராரா தாயாயா
யாயாதாரா ராயாதா காயாகாழீ யாகாயா.

தாவாமூவா தாசாகா ழீநாதாநீ யாமாமா
மாமாயாநீ தாநாழீ காசாதாவா மூவாதா.

நீவாவாயா காயாழீ காவாவானோ வாராமே
மேராவானோ வாவாகா ழீயாகாயா வாவாநீ.

யாகாலாமே யாகாழீ யாமேதாவீ தாயாவீ
வீயாதாவீ தாமேயா ழீகாயாமே லாகாயா.

மேலேபோகா மேதேழீ காலாலேகா லானாயே
யேனாலாகா லேலாகா ழீதேமேகா போலேமே.

நீயாமாநீ யேயாமா தாவேழீகா நீதானே
நேதாநீகா ழீவேதா மாயாயேநீ மாயாநீ.

நேணவராவிழ யாசைழியே வேகதளேரிய ளாயுழிகா
காழியுளாயரி ளேதகவே யேழிசையாழவி ராவணனே.

காலேமேலே காணீகா ழீகாலேமா லேமேபூ
பூமேலேமா லேகாழீ காணீகாலே மேலேகா.

வேரியுமேணவ காழியொயே யேனைநிணேமட ளோகரதே
தேரகளோடம ணேநினையே யேயொழிகாவண மேயுரிவே.

நேரகழாமித யாசழிதா யேனனியேனனி ளாயுழிகா
காழியுளானின யேனினயே தாழிசயாதமி ழாகரனே.


(தொடரும்)

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed May 01, 2013 4:28 pm

ரஹ்மான், விஜய் ஆண்டனி கண்ணுல பட்டா அடுத்த
சூப்பர் ஹிட் பாடல் இதுவாதான் இருக்கும் சாமி

கூகுளில் பார்த்தேன் - ஞான் அறிந்தேன் சம்பந்தம் புன்னகை

இதை நான் முதல் முறையாக பார்க்கிறேன் சாமி - நல்ல பகிர்வு






balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed May 01, 2013 4:31 pm

இருங்க இத மொதல சத்தமா எல்லோரும் கேக்குராமாதிரி பாடறேன் அப்புறம் வந்து யார் எழுதியதுன்னு சொல்லுறேன்



ஈகரை தமிழ் களஞ்சியம் யாமாமாநீ யாமாமா யாழீகாமா...  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed May 01, 2013 7:39 pm

இதற்கு 'மாலை மாற்று' என்று பெயரல்லவா சாமி அவர்களே மகிழ்ச்சி
எழுதியவர் யாரென்று தெரியும், ஆயினும் நம்ம இளைய உறவுகள் முதலில் சொல்லட்டுமே என்று நான் அமைதிகாக்கிறேன் :வணக்கம்:

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Thu May 02, 2013 10:21 pm

சைவ சமய முதல்வர்கள் நால்வரில் ஒருவராகிய திருஞானசம்பந்தர் பலவகையான பாடல்களைப் பாடியிருக்கிறார். அவர் பதினாறு ஆண்டுகளே உலகில் வாழ்ந்தவர். அந்த காலத்துக்குள் அவர் பதினாறாயிரம் பாடல்கள் பாடினாராம். அவற்றில் நமக்கு இப்போது கிடைத்துள்ளவை முந்நூற்று எண்பத்து மூன்று பதிகங்கள்தான்.

மீதிப்பாடல்கள் எங்கே போயின? அந்தத் தில்லைவாழ் நடேசனையும் அவனிடம் தமிழை இன்றுவரை அண்டவிடாமல் அணுகவிடாமல் வைத்திருக்கிறார்களே, அவர்களையும் தான் கேட்கவேண்டும்.

திருஞானசம்பந்தர் தம்முடைய வாழ்நாளில் சென்ற திருத்தலங்கள் இருநூற்று இருபது. அவர் பாடியுள்ள இருநூறு எண்பத்து மூன்று பதிகங்கள் அவற்றிற்குரியன. அவருடைய பதிகங்களில் மிக அதிகமான எண்ணிக்கையைப் பெற்றது அவர் பிறந்த ஊராகிய சீர்காழிதான். அடுத்த படியாக திருவீழிமிழலை. சீர்காழியை அவர் பாடியவை அறுபத்தெட்டு. அந்த அறுபத்தெட்டில் தான் அவர் சித்து விளையாட்டுக்களைப் புரிந்திருக்கிறார்.

பலவகையான நூதனமான செய்யுள்வகைகளில் அவர் சீர்காழிப் பதிகங்களை அமைத்திருக்கிறார். திருமாலைமாற்று, திருத்தாளச்சதி, பல்பெயர்ப்பத்து, திருவிருக்குகுறள், மொழிமாற்று, ஏகபாதம், திருவெழுகூற்றிருக்கை, ஈரடி, திருவியமகம், திருச்சக்கரமாற்று, திருக்கோமூத்திரி, வழிமொழித்திருவிராகம், ஈரடி, திருவிராகம் ஆகியவை. மிழலைக்குரிய பதிகங்களையும் இவ்வாறே அமைத்துள்ளார்.

இவற்றில் 'திருமாலைமாற்று' எனப்படும் திருப்பதிகம் 'மாலைமாற்று' என்னும் செய்யுள் வகையைச் சேர்ந்தது. பாடுவதற்கு மிகவும் கடினமானதாகக் கருதப்படுவது.திருஞான சம்பந்தர் இயற்றியவற்றில் மாலைமாற்று அமைப்பில் மாலைமாற்றுத் திருப்பதிகம் எனப்படும் ஒரே ஒரு பதிகம்தான் கிடைத்திருக்கிறது.

தமிழில் நான்கு வகைக் கவிகள் உள்ளன. அவை ஆசுகவி, மதுரகவி, சித்திரக்கவி, வித்தாரக்கவி

அவற்றுள் சித்திரக் கவி வகையில் வருவதே மாலை மாற்று எனப்படும். சரி, மாலை மாற்று என்றால் என்ன?
"ஒரு செய்யுள் முதல், ஈறு உரைக்கினும், அஃதாய் வருவதை மாலை மாற்றென மொழி"

ஒரு செய்யுளின் கடைசி எழுத்தை முதலாக வைத்துக் கொண்டு பின்னாலிருந்து திருப்பி எழுத்துக் கூட்டிவாசித்துக் கொண்டு முதல் எழுத்துக்கு வரவேண்டும். இதுவே மாலைமாற்று எனப்படும்.

ஒரே சொல் மாலைமாற்றாக அமைவதே வேடிக்கையாக இருக்கும். எடுத்துக்காட்டு: “விகடகவி”, “மாடு ஓடுமா”, தேரு வருதே” போன்றவை.

ஒரு வாக்கியம் அவ்வாறு அமைவது அதிசயமாகப் பார்க்கப்படும். ஒரு பாடலை அவ்வாறு அமைப்பது இன்னும் சிரமமான விஷயம். திருஞானசம்பந்தரோ ஒரு பாடல் மட்டுமல்லாமல் பதினோரு பாடல்கள் கொண்டதொரு திருப்பதிகத்தையே அருளியிருக்கிறார்.

'அருளியிருக்கிறார்' என்றுதான் சொல்லவேண்டும். அத்தகைய பதிகம், அருளப்படும் ஒன்றுதான்.

இப்போது திருஞானசம்பந்தரின் திருமாலைமாற்றுத் திருப்பதிகத்தைப் விளக்கத்தோடு பார்ப்போம்.
(தொடரும்)


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri May 03, 2013 8:02 am

"ஒரு வாக்கியம் அவ்வாறு அமைவது அதிசயமாகப் பார்க்கப்படும். ஒரு பாடலை அவ்வாறு அமைப்பது இன்னும் சிரமமான விஷயம். திருஞானசம்பந்தரோ ஒரு பாடல் மட்டுமல்லாமல் பதினோரு பாடல்கள் கொண்டதொரு திருப்பதிகத்தையே அருளியிருக்கிறார்."

உண்மையிலும் உண்மை. அரிதான விஷயங்களையும் அனாயாசமாக செய்வதில் நம்மவரை மிஞ்சுவதற்கு யாரும் இல்லை. அவைகளை வெளி உலகிற்கு கொண்டுவர வேண்டியவர்களும் மௌனமாய் இருப்பது வருந்த தக்கது.
தொடருங்கள் சாமி தொடருங்கள்.

ரமணியன்

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Fri May 03, 2013 10:25 am

தமிழர்கள் அறிந்து கொள்ள வேண்டிய அற்புத தகவல், தொடருங்கள் ... சூப்பருங்க



சதாசிவம்
யாமாமாநீ யாமாமா யாழீகாமா...  1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri May 03, 2013 11:04 am

பாடலின் பொருள் எனக்கு புரியவில்லை ...

திருவீழிமிழலை நிறைய முறை சென்று உள்ளேன் . அடுத்த முறை செல்லும் போது மனதில் ஒரு பரவசம் ஏற்படும் என்பதை உணர்வேன் .

ஒரு செய்யுளின் கடைசி எழுத்தை முதலாக வைத்துக் கொண்டு பின்னாலிருந்து திருப்பி எழுத்துக் கூட்டிவாசித்துக் கொண்டு முதல் எழுத்துக்கு வரவேண்டும். இதுவே மாலைமாற்று எனப்படும்.

ஒரே சொல் மாலைமாற்றாக அமைவதே வேடிக்கையாக இருக்கும். எடுத்துக்காட்டு: “விகடகவி”, “மாடு ஓடுமா”, தேரு வருதே” போன்றவை.

செம்மொழியாம் தமிழ் மொழியின் சிறப்பை எண்ணி வியக்கின்றேன் .

சிறப்பான பதிவு சாமி .... நன்றி நன்றி



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri May 03, 2013 11:11 am

மாலைமாற்று என்பதே இப்பொழுதுதான் தெரிந்துகொள்கிறேன் சாமி - நன்றி




சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Tue May 07, 2013 10:30 pm

முதற்பாடல்:
யாமாமாநீ யாமாமா யாழீகாமா காணாகா
காணாகாமா காழீயா மாமாயாநீ மாமாயா


படிக்க வசதியாக:
யாம் ஆமா நீ ஆமா யாழீ காமா காண் நாகா
காணா காமா காழீயா மாமாயா நீ மா மாயா


அருஞ்சொற்பொருள்:
யாம் = ஆன்மாக்கள் ஆகிய நாங்கள்
ஆமா = கடவுள் என்பது பொருந்துமா?
நீ = நீ ஒருவன் மட்டுமே (கடவுள் என்றால்)
ஆம் ஆம் = பொருந்தும், பொருந்தும்
மா = பெரிய
யாழீ = யாழை ஏந்தியிருப்பவனே!
காமா = அனைவராலும் விரும்பப் படுபவனே!
காண்நாகா = காணத் தகுந்தவாறு பாம்புகளை அணிந்துள்ளவனே!
காணா = காண முடியாதவாறு
காமா = மன்மதனை அருவமாகச் செய்தவனே!
காழீயா = சீர்காழிக்குத் தலைவனே!
மாமாயா = திருமகளின் கணவனான திருமாலுக்கு காக்கும் தொழிலைத் தந்தவனே!
மா = கரிய (கொடிய)
மாயா = மாயை என்ற மலம்
நீ = எம்மை நீக்கிக் காத்தருள்வாயாக!

விளக்கவுரை :
ஆன்மாக்களாகிய நாங்கள் கடவுளென்றால் அது பொருந்துமா? நீயே ஒப்பில்லாத கடவுளென்றால் அது முற்றிலும் தகும். பேரியாழ் என்னும் வீணையை வாசிப்பவனே! யாவரும் விரும்பத்தக்க கட்டழகனே! பகைப்பொருள்களும் உன்னைச் சாரின் பகை தீர்ந்து நட்பாகும் என்ற உண்மையினை யாவரும் காணுமாறு பாம்புகளை உடையவனே. கை, கால் முதலிய அவயவங்கள் காணா வண்ணம் காமனை அருவமாகச் செய்தவனே. சீகாழி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுபவனே. இலக்குமியின் கணவனான திருமாலுக்கு காக்கும் தொழிலைத் தந்தவனே! மாயை முதலிய மலங்களிலிருந்து எம்மை விடுவிப்பாயாக!.


Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக