புதிய பதிவுகள்
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
by வேல்முருகன் காசி Today at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குழந்தை வளர்ப்பு! அவசியம் படியுங்கோ :)
Page 11 of 12 •
Page 11 of 12 • 1, 2, 3 ... , 10, 11, 12
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
இது என்னுடைய 14000 வது பதிவு, எதாவது உருப்படியாக பதியனும் என்கிற எண்ணமே இந்த கட்டுரை கொஞ்சம் ஆழமான விஷயம் பற்றி பேசப்போகிறேன்; எனவே பொறுமையாக படியுங்கோ. பீடிகை பலமானதாக இருக்கே என்று பார்க்க வேண்டாம் விஷயமும் பலமானது தான். சரி விஷயத்துக்கு வருவோம்....
கொஞ்ச நாட்களாக பேப்பரில்...... 8 மாதக்குழந்தையை கற்பழிப்பு, 80 வயது கிழவி கற்பழிப்பு என்றெல்லாம் செய்திகள் வந்த வண்ணம் இருக்கிறதே இதற்கு காரணம் என்ன என்று யாராவது யோசித்து பார்த்ததுண்டா? எதனால் இன்றைய இளைஞர்கள் இப்படிப்பட்ட மன நிலைக்கு ஆளாகிறார்கள் என்று யோசித்ததுண்டா? .................... நான் யோசித்து பார்த்தேன் அதையே உங்களுடன் பகிர விரும்புகிறேன்
அதாவது.... இன்றைய இளைஞர்களுக்கு சரியான , சீரான outlet இல்லை என்பது தான் நான் யோசித்ததின் பேஸ். இவர்களுக்கு சரியான வழிகாட்டுதல் இல்லை என்றே நான் நினைக்கிறேன். அவர்களுக்கு வழிகாட்ட வேண்டிய தாத்தா பாட்டிகள் முதியோர் இல்லங்களிலும் பெற்றவர்கள் ஆபீஸ்லும் இருக்கா. இவர்களுக்கு டிவி மற்றும் நெட் தான் புகலிடம். எல்லா பெற்றோர்களும் தங்களுக்கு கிடைக்காத எல்லாம் தங்கள் குழந்தைகளுக்கு கிடைக்கணும் என்று படாத பாடு படுகிறார்கள். ஆனால் அதை தங்களுக்கு கிடைத்த வரமாக எண்ணாமல் பசங்க ரொம்ப அட்வான்டேஜ் எடுத்துக்கொண்டு ( பெருவாரியான குழந்தைகள் ) அதை தீய வழிகளில்
உபயோகித்துக் கொள்கிறார்கள். விளைவு மன வக்கிரம் ..... எல்லாமே அவர்களுக்கு நெட் இல் வெட்ட வெளிச்சமாக இருக்கு.... பசங்க என்ன பார்க்கிறா , யாருடன் சகவாசம் வெச்சுக்கறா, யாரோட பேசறா என்று பெத்தவாளுக்கு தெரிவதில்லை. Space ...space என்று சொல்லி அவர்களுக்கு தனியறை ஒதுக்கி தந்துடரா .... அதுகள் என்ன செய்யர்துகள் என்று இவாளுக்கு தெரியாது.... எங்கே இவாளுக்கு பணத்து பின்னாடி ஓடுவதே சரியா இருக்கே?
எங்க அப்பாவின் ப்ரெண்ட் ஒருத்தர் சொல்வர், நாம் குழந்தைகளை எப்படி வளர்க்கணும் என்று :
1 லிருந்து 3 வயது வரை சுவாமி போல கொண்டாடனும்
4 லிருந்து 7 வயது வரை ராஜா போல நடத்தனும்
8 லிருந்து 12 வயது வரை குழந்தையாக பாவிக்கணும்
13 லிருந்து 19 வயது வரை ஒற்றன் போல கண்காணிக்கணும்
20 வயது வந்து தோளு க்கு உசந்துட்டா தோழன் போல வெச்சுக்கணும் என்பர்.
ரொம்ப சத்தியமான வார்த்தைகள் இவை. இப்படி நாம குழந்தைகளை வளர்த்தால் பிற்காலத்தில் அதுங்களும் நன்னா இருக்கும் நம்மையும் நன்னா வெச்சுக்கும். என்ன இப்படி சொல்றேனே திடிர்னு நம்மையும் நல்லா பார்த்துப்பா அவா என்று சொலிட்டேனே.... சம்பந்தம் இல்லாம என்று பாக்கறேளா ... வரேன் வரேன்..... இருங்கோ
நான் நம்ப வெப் சைட் லேயே ஒரு கதை படித்தேன் இதோ அது : சிறுவன் கேட்ட வரம்!!!
இது போலத்தான் பெருவாரியான பெற்றோர்கள் இருக்கா இந்த காலத்தில். குழந்தை என்ன காரும் பங்களாவும் ஆ கேட்டது ? பெற்றோரின் அன்பான கவனிப்பு மட்டுமே அதன் தேவை அதை செய்யா முடியாதவா என்ன பெத்தவா? இவாளுக்கேலாம் என்ன கல்யாணம் காட்சி வேண்டி இருக்கு? ஜஸ்ட் டபுள் earning ஆ? அந்த குழந்தைக்காக ஒரு அரைமணி தினமும் செலவிட முடியாதா என்ன? நிறைய பெற்றோருக்கு அது படிக்கும் கிளாஸ் கூட தெரியாது. நீங்க அந்த சினிமா பார்த்திருப்பெளே அதுதான் 'சென்னை இல் ஒருநாள்' அது போல எவ்வளவு பேர் இருக்கா ? இவர்கள் வாழ்வின் குறிக்கோள் என்ன? பணம் பணம் பணம் தானா?
குழந்தை எதிலாவது ஜெயித்து வந்தால் பாராட்டக் கூட டைம் இல்லை இவர்களிடம். என்ன பிழைப்பு இது? அப்போ எப்போதான் வாழ்வார்கள் இவர்கள் குழந்தைகளுடன் ? அலை ஓய்ந்து சமுத்திர ஸ்நானம் செய்ய முடியுமா? எல்லாவற்றையும் தான் பார்க்கணும்.
"குழல் இனிது யாழ் இனிது என்பார் தம் மழலைச்சொல் கேளாதோர்" ; "அமிழ்தினும் ஆற்ற இனிதே, தம் மக்கள் சிறு கை அளாவிய கூழ்"
இதெல்லாம் படித்தால் மட்டும் போறாது அனுபவித்து பார்க்கணும். நம்க்கிருப்பதோ ஒரு வாழ்க்கை அதை நல்லா வாழ்ந்து பார்க்க வேண்டாமா?
குழந்தைகள் பூ மாதிரி , குழந்தை வளர்ப்பு அவ்வளவு எளிதில்லை .... எதிர்கால இந்தியா நம் கை இல் என்கிற பய பக்தி யுடன் வளர்க்கணும். நம் அம்மா அப்பா எவ்வளவு கஷ்டத்திலும் நம்மை வளர்த்தார்கள் என்று யோசித்து யோசித்து செதுக்கி செதுக்கி வளர்க்கணும். வெறும் பணம் மட்டும் வாழ்க்கை இல்லை என்று நாம் முதலில் உணர்ந்து பிறகு அவர்களுக்கும் உணர்த்தணும். மனித நேயத்தை கற்றுத்தரனும். சக மனிதனை மதிக்க சொல்லித்தரனும். இது எல்லாத்துக்கும் முதலில் நாம் மனதளவில் தயாராகணும் குழந்தை பெறுவதற்கு முன். இவ்வளவு யோசிக்கணுமா என்றால்..... ஆமாம் என்று நான் அழுத்தி சொல்வேன். நாம் என்ன ஆடு மாடா எதுக்குன்னே தெரியாமல் குட்டி போட? குழந்தை பெறவும் வளர்க்கவும் ஒரு தகுதி வேண்டும்தான்.
ஆண்கள் , பெண்களை கலாட்டா செய்யும்போது என்ன கேட்பர்டல்? முதலில் " நீ அக்கா தங்கையுடன் பிறக்கலையா"? என்று தானே?
எதனால் அப்படி கேட்பார்கள், வீட்டில் சமவயதுடைய பெண்கள் இருந்தால் அவா கஷ்ட நஷ்டம் இவனுக்கும் தெரியவரும் ; அதனால் அடுத்த பெண்ணை 'கிள்ளு கீரை' போல பேசமாட்டான் என்று தானே? இன்றைய கால கட்டத்தில் இதற்கு வழி இல்லை .. நிறைய பேர் ஒரே குழந்தை யுடன் நிறுத்தி விடரோமே? எனவே நாம் தான் அவங்களுக்கு தாய்க்கு தாயாய், கூடப்பிறந்த பிறப்புகளாய் , நண்பனாய் இருக்கணும். இதனால் நம் பொறுப்பு அதிகம் ஆகிறது. அந்த நேரத்தில் நாம் பாட்டுக்கு அவங்களை ஆயாவிடமோ, குழந்தைகள் காப்பகத்திலோ விட்டால் அங்கு பார்த்துக்கிறவா ( அவாளை நான் குறை சொல்லலை ) கண்டிப்பாக நம்மைப்போல பரத்துக்க மாட்டா தானே? அவள் பிழைப்புக்காக பல குழந்தைகளை பார்த்துப்பா நம்மைப்போல பாசத்துக்காக இல்லை. எனவே குழந்தைக்கு நல்லது கேட்டது நம்மைப்போல சொல்லித்தரமாட்டா.
அப்புறம் அவன் கொஞ்சம் வளர்ந்து விட்டா... வீட்லேயே ஆயா அல்லது பெற்றவர்கள் ஆபீஸ் லேருந்து வரும் வரை அக்கம் பக்கத்துகாரர்கள் அல்லது ஏதாவது கிளாஸ். அப்புறமும் கொஞ்சம் வளர்ந்து விட்டால்.... வீட்லே தனியா இருக்க விடுவது... தானே தன்னை பார்த்துக்கொள்வது என்று ஆரம்பித்து விடுகிறது. அப்போது ஆரம்பிக்கிறது ஆபத்து..... அம்மா அப்பா குறிப்பிட்ட நேரம் கழித்து த்தான் வருவா என்று அந்த குழந்தைக்கு நல்லா தெரியும். எனவே , கேள்வி கேக்க ஆள் இல்லாததால் என்ன வேணா
செய்யத்துவங்குகிறது.
கையில் தேவையான பணம், போறாததற்கு டிவி, இன்டர்நெட் , தனிமை போராதா தப்பு செய்ய ? மனதளவில் 'sick ' ஆகிவிடறாங்க பசங்க மேலும் ஒரு விபரிதமான சொல்வழக்கு இருக்கு நம தமிழ்நாட்டில். தப்பு செய்பவர்களுக்கு உதவ. ... என்ன தெரியுமா அது? : ஆம்பிள கொஞ்சம் அப்படி இப்படித்தான் இருப்பான்' என்று. அன்ன ஒரு ஐயாயம்? 'ஆணுக்கும் பெண்ணுக்கும் கற்பினை பொதுவில் வைப்போம்' என்று சொன்ன பாரதி பிறந்த நாட்டில் இந்த அவலமா? அதனால் தெரிந்தே தப்பு செய்ய ஆரம்பிக்கிரதுகள் குழந்தைகள். எல்லா அப்பா அம்மாவும் " என் பையன் அப்படி கிடையாது, உலகத்திலேயே சத் புத்திரன் என்று யாராவது இருந்தால் அது அவன் தான்" என்று கோவிலில் கற்பூரம் அடித்து சத்தியம் செய்யும் அளவுக்கு நம்புவா தன் பிள்ளையை/பெண்ணை.
அவர்களுக்கே தெரியாது தவறு எங்கே நடந்தது என்று....தவறு நம்மிடம்தான் என்று ஒத்துக்கொள்ள மனம் வராது, பிள்ளயை/பெண்ணை காப்பற்ற முயலுவார்கள் பாவம் ஆனால் அதற்குள் காலம் கடந்து விடும்.... நம குழந்தையால் யாருடைய வாழ்வோ பாழாகிவிடும். நம்மால் ஒன்றும் செய்ய முடியாது..... நம தப்பான வளர்ப்பின் விளைவை யாரோ அனுபவிப்பர்கள்.
நீங்கள் கேக்கலாம் எல்லாம் சரி ..... இதற்கு என்ன தீர்வு என்று. ஒரு தீர்வு இல்லாமலா கட்டுரையை ஆரம்பித்தேன் எல்லோரும் வேலைக்கு போங்கோ நான் வேண்டாம் என்று சொலல்லை. ஆனால்.... குழந்தைக்கு ஒரு 5 வயது வரை அதனுடன் இருந்து முதலில் உங்கள் கடமையை ...தாய் என்கிற கடமையை நிறைவேற்றுங்கள் பிறகு கணவனுக்கு மனைவியாக சம்பாதிப்பதில் தோள் கொடுங்கள்.யார் வேண்டாம் என்கிறார்கள். அலல்து " ஏர் பிடித்தவன் பாவம் என்ன செய்வான் ? பானை பிடித்தவள் பாக்கிய சாலி " என்பதற்கு இணங்க இருப்பதைக்கொண்டு சிறப்பாக குடும்பம் நடத்துங்கோ.
பணம் எவ்வளவு வந்தாலும் போறாது போதும் என்கிறமனமே பொன் செய்யும் மருந்து என்பதை மறவாதிர்கள்.
கடைசியாக ஒன்று... மேலே திடிரென்று ஒன்று சொன்னேனே ... நம்மையும் நல்லா பார்த்துப்பா அவா என்று இப்போ அதுக்கு வருகிறேன். தனியாக டிவி, நெட் அல்லது போடிங் ஸ்கூல் என்று காலம் கழித்த குழந்தைகள் பாசத்துக்கு பதிலாக உங்கள் செக் களையே பார்த்து வளர்ந்த வர்கள் ..............பெரியவர்கள் ஆனதும் ...............உங்களையும் அதே செக் வழியாக பார்த்துக்கொள்ளும் நிலைமை வரும்......... என்ன புரியலையா? நீங்க அவாளை போர்டிங் ஸ்கூல் இல் போட்டது போல அவா உங்களை முதியோர் இல்லத்தில் போட்டுடுவா............ அப்பமட்டும் நீங்க என் 'குய்யோ முறையோ' என்று கத்ரிங்க? நீங்க அவங்களுக்கு செய்ததைத்தானே அவா உங்களுக்கு செய்கிரா? அன்று உங்களுக்கு பணம் முக்கியமானதாக இருந்ததே அதே இன்று அவனுக்கு இருக்கும் போது என்ன அவ்வளவு கஷ்டம் , சுய பச்சாதாபம்?..........ம்...?
எதுவுமே தெரியாத பச்சை மண்ணை கொண்டு போர்டிங்க்ல் விடுவது எவ்வளவு பாவம்? எல்லாம் தெரிந்த முதியவர்களை கொண்டு விடும் போதே எவ்வளவு சுய பச்சா தாபம் வருகிறது நமக்கு? அந்த சின்ன மனசுகள் என்ன பாடுபடும் என்பது ஏன் புரியாம போகிறது என்பது ஆச்சர்யம் தான்.
உங்களுக்கு ஒரு நியதி அவனுக்கு ஒன்றா? என்றுமே நாம் விதைத்ததைத்தான் அறுவடை செய்ய இயலும் என்பதை மறக்கக் கூடாது. எனவே குழந்தைகளை சிரத்தையாக வளருங்கள் , எதிர்கால இந்தியா நம கையில் என்று நினைத்து வளருங்கள்.
சொல்லத் தோன்றியதை எல்லாம் சொல்லிட்டேன் என்று நினைக்கிறேன் .........வேறு பாயிண்டுகள் நினைவுக்கு வந்தால் மீண்டும் எழுதுகிறேன்
அன்புடன்
க்ருஷ்ணாம்மா
இது என்னுடைய 14000 வது பதிவு, எதாவது உருப்படியாக பதியனும் என்கிற எண்ணமே இந்த கட்டுரை கொஞ்சம் ஆழமான விஷயம் பற்றி பேசப்போகிறேன்; எனவே பொறுமையாக படியுங்கோ. பீடிகை பலமானதாக இருக்கே என்று பார்க்க வேண்டாம் விஷயமும் பலமானது தான். சரி விஷயத்துக்கு வருவோம்....
கொஞ்ச நாட்களாக பேப்பரில்...... 8 மாதக்குழந்தையை கற்பழிப்பு, 80 வயது கிழவி கற்பழிப்பு என்றெல்லாம் செய்திகள் வந்த வண்ணம் இருக்கிறதே இதற்கு காரணம் என்ன என்று யாராவது யோசித்து பார்த்ததுண்டா? எதனால் இன்றைய இளைஞர்கள் இப்படிப்பட்ட மன நிலைக்கு ஆளாகிறார்கள் என்று யோசித்ததுண்டா? .................... நான் யோசித்து பார்த்தேன் அதையே உங்களுடன் பகிர விரும்புகிறேன்
அதாவது.... இன்றைய இளைஞர்களுக்கு சரியான , சீரான outlet இல்லை என்பது தான் நான் யோசித்ததின் பேஸ். இவர்களுக்கு சரியான வழிகாட்டுதல் இல்லை என்றே நான் நினைக்கிறேன். அவர்களுக்கு வழிகாட்ட வேண்டிய தாத்தா பாட்டிகள் முதியோர் இல்லங்களிலும் பெற்றவர்கள் ஆபீஸ்லும் இருக்கா. இவர்களுக்கு டிவி மற்றும் நெட் தான் புகலிடம். எல்லா பெற்றோர்களும் தங்களுக்கு கிடைக்காத எல்லாம் தங்கள் குழந்தைகளுக்கு கிடைக்கணும் என்று படாத பாடு படுகிறார்கள். ஆனால் அதை தங்களுக்கு கிடைத்த வரமாக எண்ணாமல் பசங்க ரொம்ப அட்வான்டேஜ் எடுத்துக்கொண்டு ( பெருவாரியான குழந்தைகள் ) அதை தீய வழிகளில்
உபயோகித்துக் கொள்கிறார்கள். விளைவு மன வக்கிரம் ..... எல்லாமே அவர்களுக்கு நெட் இல் வெட்ட வெளிச்சமாக இருக்கு.... பசங்க என்ன பார்க்கிறா , யாருடன் சகவாசம் வெச்சுக்கறா, யாரோட பேசறா என்று பெத்தவாளுக்கு தெரிவதில்லை. Space ...space என்று சொல்லி அவர்களுக்கு தனியறை ஒதுக்கி தந்துடரா .... அதுகள் என்ன செய்யர்துகள் என்று இவாளுக்கு தெரியாது.... எங்கே இவாளுக்கு பணத்து பின்னாடி ஓடுவதே சரியா இருக்கே?
எங்க அப்பாவின் ப்ரெண்ட் ஒருத்தர் சொல்வர், நாம் குழந்தைகளை எப்படி வளர்க்கணும் என்று :
1 லிருந்து 3 வயது வரை சுவாமி போல கொண்டாடனும்
4 லிருந்து 7 வயது வரை ராஜா போல நடத்தனும்
8 லிருந்து 12 வயது வரை குழந்தையாக பாவிக்கணும்
13 லிருந்து 19 வயது வரை ஒற்றன் போல கண்காணிக்கணும்
20 வயது வந்து தோளு க்கு உசந்துட்டா தோழன் போல வெச்சுக்கணும் என்பர்.
ரொம்ப சத்தியமான வார்த்தைகள் இவை. இப்படி நாம குழந்தைகளை வளர்த்தால் பிற்காலத்தில் அதுங்களும் நன்னா இருக்கும் நம்மையும் நன்னா வெச்சுக்கும். என்ன இப்படி சொல்றேனே திடிர்னு நம்மையும் நல்லா பார்த்துப்பா அவா என்று சொலிட்டேனே.... சம்பந்தம் இல்லாம என்று பாக்கறேளா ... வரேன் வரேன்..... இருங்கோ
நான் நம்ப வெப் சைட் லேயே ஒரு கதை படித்தேன் இதோ அது : சிறுவன் கேட்ட வரம்!!!
இது போலத்தான் பெருவாரியான பெற்றோர்கள் இருக்கா இந்த காலத்தில். குழந்தை என்ன காரும் பங்களாவும் ஆ கேட்டது ? பெற்றோரின் அன்பான கவனிப்பு மட்டுமே அதன் தேவை அதை செய்யா முடியாதவா என்ன பெத்தவா? இவாளுக்கேலாம் என்ன கல்யாணம் காட்சி வேண்டி இருக்கு? ஜஸ்ட் டபுள் earning ஆ? அந்த குழந்தைக்காக ஒரு அரைமணி தினமும் செலவிட முடியாதா என்ன? நிறைய பெற்றோருக்கு அது படிக்கும் கிளாஸ் கூட தெரியாது. நீங்க அந்த சினிமா பார்த்திருப்பெளே அதுதான் 'சென்னை இல் ஒருநாள்' அது போல எவ்வளவு பேர் இருக்கா ? இவர்கள் வாழ்வின் குறிக்கோள் என்ன? பணம் பணம் பணம் தானா?
குழந்தை எதிலாவது ஜெயித்து வந்தால் பாராட்டக் கூட டைம் இல்லை இவர்களிடம். என்ன பிழைப்பு இது? அப்போ எப்போதான் வாழ்வார்கள் இவர்கள் குழந்தைகளுடன் ? அலை ஓய்ந்து சமுத்திர ஸ்நானம் செய்ய முடியுமா? எல்லாவற்றையும் தான் பார்க்கணும்.
"குழல் இனிது யாழ் இனிது என்பார் தம் மழலைச்சொல் கேளாதோர்" ; "அமிழ்தினும் ஆற்ற இனிதே, தம் மக்கள் சிறு கை அளாவிய கூழ்"
இதெல்லாம் படித்தால் மட்டும் போறாது அனுபவித்து பார்க்கணும். நம்க்கிருப்பதோ ஒரு வாழ்க்கை அதை நல்லா வாழ்ந்து பார்க்க வேண்டாமா?
குழந்தைகள் பூ மாதிரி , குழந்தை வளர்ப்பு அவ்வளவு எளிதில்லை .... எதிர்கால இந்தியா நம் கை இல் என்கிற பய பக்தி யுடன் வளர்க்கணும். நம் அம்மா அப்பா எவ்வளவு கஷ்டத்திலும் நம்மை வளர்த்தார்கள் என்று யோசித்து யோசித்து செதுக்கி செதுக்கி வளர்க்கணும். வெறும் பணம் மட்டும் வாழ்க்கை இல்லை என்று நாம் முதலில் உணர்ந்து பிறகு அவர்களுக்கும் உணர்த்தணும். மனித நேயத்தை கற்றுத்தரனும். சக மனிதனை மதிக்க சொல்லித்தரனும். இது எல்லாத்துக்கும் முதலில் நாம் மனதளவில் தயாராகணும் குழந்தை பெறுவதற்கு முன். இவ்வளவு யோசிக்கணுமா என்றால்..... ஆமாம் என்று நான் அழுத்தி சொல்வேன். நாம் என்ன ஆடு மாடா எதுக்குன்னே தெரியாமல் குட்டி போட? குழந்தை பெறவும் வளர்க்கவும் ஒரு தகுதி வேண்டும்தான்.
ஆண்கள் , பெண்களை கலாட்டா செய்யும்போது என்ன கேட்பர்டல்? முதலில் " நீ அக்கா தங்கையுடன் பிறக்கலையா"? என்று தானே?
எதனால் அப்படி கேட்பார்கள், வீட்டில் சமவயதுடைய பெண்கள் இருந்தால் அவா கஷ்ட நஷ்டம் இவனுக்கும் தெரியவரும் ; அதனால் அடுத்த பெண்ணை 'கிள்ளு கீரை' போல பேசமாட்டான் என்று தானே? இன்றைய கால கட்டத்தில் இதற்கு வழி இல்லை .. நிறைய பேர் ஒரே குழந்தை யுடன் நிறுத்தி விடரோமே? எனவே நாம் தான் அவங்களுக்கு தாய்க்கு தாயாய், கூடப்பிறந்த பிறப்புகளாய் , நண்பனாய் இருக்கணும். இதனால் நம் பொறுப்பு அதிகம் ஆகிறது. அந்த நேரத்தில் நாம் பாட்டுக்கு அவங்களை ஆயாவிடமோ, குழந்தைகள் காப்பகத்திலோ விட்டால் அங்கு பார்த்துக்கிறவா ( அவாளை நான் குறை சொல்லலை ) கண்டிப்பாக நம்மைப்போல பரத்துக்க மாட்டா தானே? அவள் பிழைப்புக்காக பல குழந்தைகளை பார்த்துப்பா நம்மைப்போல பாசத்துக்காக இல்லை. எனவே குழந்தைக்கு நல்லது கேட்டது நம்மைப்போல சொல்லித்தரமாட்டா.
அப்புறம் அவன் கொஞ்சம் வளர்ந்து விட்டா... வீட்லேயே ஆயா அல்லது பெற்றவர்கள் ஆபீஸ் லேருந்து வரும் வரை அக்கம் பக்கத்துகாரர்கள் அல்லது ஏதாவது கிளாஸ். அப்புறமும் கொஞ்சம் வளர்ந்து விட்டால்.... வீட்லே தனியா இருக்க விடுவது... தானே தன்னை பார்த்துக்கொள்வது என்று ஆரம்பித்து விடுகிறது. அப்போது ஆரம்பிக்கிறது ஆபத்து..... அம்மா அப்பா குறிப்பிட்ட நேரம் கழித்து த்தான் வருவா என்று அந்த குழந்தைக்கு நல்லா தெரியும். எனவே , கேள்வி கேக்க ஆள் இல்லாததால் என்ன வேணா
செய்யத்துவங்குகிறது.
கையில் தேவையான பணம், போறாததற்கு டிவி, இன்டர்நெட் , தனிமை போராதா தப்பு செய்ய ? மனதளவில் 'sick ' ஆகிவிடறாங்க பசங்க மேலும் ஒரு விபரிதமான சொல்வழக்கு இருக்கு நம தமிழ்நாட்டில். தப்பு செய்பவர்களுக்கு உதவ. ... என்ன தெரியுமா அது? : ஆம்பிள கொஞ்சம் அப்படி இப்படித்தான் இருப்பான்' என்று. அன்ன ஒரு ஐயாயம்? 'ஆணுக்கும் பெண்ணுக்கும் கற்பினை பொதுவில் வைப்போம்' என்று சொன்ன பாரதி பிறந்த நாட்டில் இந்த அவலமா? அதனால் தெரிந்தே தப்பு செய்ய ஆரம்பிக்கிரதுகள் குழந்தைகள். எல்லா அப்பா அம்மாவும் " என் பையன் அப்படி கிடையாது, உலகத்திலேயே சத் புத்திரன் என்று யாராவது இருந்தால் அது அவன் தான்" என்று கோவிலில் கற்பூரம் அடித்து சத்தியம் செய்யும் அளவுக்கு நம்புவா தன் பிள்ளையை/பெண்ணை.
அவர்களுக்கே தெரியாது தவறு எங்கே நடந்தது என்று....தவறு நம்மிடம்தான் என்று ஒத்துக்கொள்ள மனம் வராது, பிள்ளயை/பெண்ணை காப்பற்ற முயலுவார்கள் பாவம் ஆனால் அதற்குள் காலம் கடந்து விடும்.... நம குழந்தையால் யாருடைய வாழ்வோ பாழாகிவிடும். நம்மால் ஒன்றும் செய்ய முடியாது..... நம தப்பான வளர்ப்பின் விளைவை யாரோ அனுபவிப்பர்கள்.
நீங்கள் கேக்கலாம் எல்லாம் சரி ..... இதற்கு என்ன தீர்வு என்று. ஒரு தீர்வு இல்லாமலா கட்டுரையை ஆரம்பித்தேன் எல்லோரும் வேலைக்கு போங்கோ நான் வேண்டாம் என்று சொலல்லை. ஆனால்.... குழந்தைக்கு ஒரு 5 வயது வரை அதனுடன் இருந்து முதலில் உங்கள் கடமையை ...தாய் என்கிற கடமையை நிறைவேற்றுங்கள் பிறகு கணவனுக்கு மனைவியாக சம்பாதிப்பதில் தோள் கொடுங்கள்.யார் வேண்டாம் என்கிறார்கள். அலல்து " ஏர் பிடித்தவன் பாவம் என்ன செய்வான் ? பானை பிடித்தவள் பாக்கிய சாலி " என்பதற்கு இணங்க இருப்பதைக்கொண்டு சிறப்பாக குடும்பம் நடத்துங்கோ.
பணம் எவ்வளவு வந்தாலும் போறாது போதும் என்கிறமனமே பொன் செய்யும் மருந்து என்பதை மறவாதிர்கள்.
கடைசியாக ஒன்று... மேலே திடிரென்று ஒன்று சொன்னேனே ... நம்மையும் நல்லா பார்த்துப்பா அவா என்று இப்போ அதுக்கு வருகிறேன். தனியாக டிவி, நெட் அல்லது போடிங் ஸ்கூல் என்று காலம் கழித்த குழந்தைகள் பாசத்துக்கு பதிலாக உங்கள் செக் களையே பார்த்து வளர்ந்த வர்கள் ..............பெரியவர்கள் ஆனதும் ...............உங்களையும் அதே செக் வழியாக பார்த்துக்கொள்ளும் நிலைமை வரும்......... என்ன புரியலையா? நீங்க அவாளை போர்டிங் ஸ்கூல் இல் போட்டது போல அவா உங்களை முதியோர் இல்லத்தில் போட்டுடுவா............ அப்பமட்டும் நீங்க என் 'குய்யோ முறையோ' என்று கத்ரிங்க? நீங்க அவங்களுக்கு செய்ததைத்தானே அவா உங்களுக்கு செய்கிரா? அன்று உங்களுக்கு பணம் முக்கியமானதாக இருந்ததே அதே இன்று அவனுக்கு இருக்கும் போது என்ன அவ்வளவு கஷ்டம் , சுய பச்சாதாபம்?..........ம்...?
எதுவுமே தெரியாத பச்சை மண்ணை கொண்டு போர்டிங்க்ல் விடுவது எவ்வளவு பாவம்? எல்லாம் தெரிந்த முதியவர்களை கொண்டு விடும் போதே எவ்வளவு சுய பச்சா தாபம் வருகிறது நமக்கு? அந்த சின்ன மனசுகள் என்ன பாடுபடும் என்பது ஏன் புரியாம போகிறது என்பது ஆச்சர்யம் தான்.
உங்களுக்கு ஒரு நியதி அவனுக்கு ஒன்றா? என்றுமே நாம் விதைத்ததைத்தான் அறுவடை செய்ய இயலும் என்பதை மறக்கக் கூடாது. எனவே குழந்தைகளை சிரத்தையாக வளருங்கள் , எதிர்கால இந்தியா நம கையில் என்று நினைத்து வளருங்கள்.
சொல்லத் தோன்றியதை எல்லாம் சொல்லிட்டேன் என்று நினைக்கிறேன் .........வேறு பாயிண்டுகள் நினைவுக்கு வந்தால் மீண்டும் எழுதுகிறேன்
அன்புடன்
க்ருஷ்ணாம்மா
- சசிதளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
கொஞ்சம் வேலை பளு அம்மா, இன்றைக்கு அல்லது நாளை பதிவிடுகிறேன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1164540Sasiiniyan Sasikaladevi wrote:கொஞ்சம் வேலை பளு அம்மா, இன்றைக்கு அல்லது நாளை பதிவிடுகிறேன்
no problem ......take your own time
- சசிதளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
பெற்றோர்களின் கடமை குழந்தை வளர்ப்பில் ;:
தாயோட கடமையை முதலில் அதிகம் பதிவிடுகிறேன்.
உறவுகளை நேசிக்க கற்றுக் கொடுக்க ஒரு தாயால் தான் முடியும்.
தாய், தங்கையாக, அக்காவாக. அத்தையாக, மாமியாக, சித்தியாக, பெரியம்மாவாக, எப்படி பரிணமிக்கிறாள் என்பதை குழந்தைக்கு புரியவைக்க வேண்டும்.
உறவுகளின் உண்ணதத்தை ஒவ்வொரு நாளும் நாம் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுத்தோமானால் எந்த குழந்தையும் பிற்காலத்தில் தவறுழைக்காது.
வலிந்து சென்று உறவுகளை வரவழைக்க வேண்டும். ஏனென்றால் கூட்டுக் குடும்பம் குறைந்து விட்டது. உறவுகளோடு உறவாட விடவேண்டும். அப்பொழுது குழந்தைகள் மகிழ்ச்சியாக உணர்வார்கள். சிறிய விஷயமாக தெரிவது குழந்தைக்கு கற்று கொடுப்பதற்கான வாய்ப்பாக அமையும்.
அடுத்தவர்களை நாம் எப்படி மதிக்கிறோம், நாம் எவ்வாறு நடத்துகிறோம் என்பதை குழந்தைகள் உற்றுநோக்கிறார்கள்.நாம் சரியான பாதையில் சென்றால் குழந்தைகள் அவ்வாறு செயல்பட முயற்சிக்கும்.
பெண்குழந்தைக்கு வீட்டு வேலைகளை கற்றுக் கொடுப்பது போல ஆண் குழந்தைக்கும் பழக வேண்டும். அப்பொழுது தான் ஒரு பெண் எவ்வாறு கஷ்ட படுகிறாள் என்பதை புரிய வைத்தோமானால் எந்த ஒரு ஆணும் தவறான கண்ணோட்டத்தோடு பெண்களை பார்க்க மாட்டார்கள்.
கால் நூற்றாண்டு காலமாக நாம் சரியான தாய் தந்தையாக இல்லாததன் விளைவை
நாம் இப்பொழுது அறுவடை செய்து கொண்டு இருக்கிறோம்.
தொடரும்.....
தாயோட கடமையை முதலில் அதிகம் பதிவிடுகிறேன்.
உறவுகளை நேசிக்க கற்றுக் கொடுக்க ஒரு தாயால் தான் முடியும்.
தாய், தங்கையாக, அக்காவாக. அத்தையாக, மாமியாக, சித்தியாக, பெரியம்மாவாக, எப்படி பரிணமிக்கிறாள் என்பதை குழந்தைக்கு புரியவைக்க வேண்டும்.
உறவுகளின் உண்ணதத்தை ஒவ்வொரு நாளும் நாம் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுத்தோமானால் எந்த குழந்தையும் பிற்காலத்தில் தவறுழைக்காது.
வலிந்து சென்று உறவுகளை வரவழைக்க வேண்டும். ஏனென்றால் கூட்டுக் குடும்பம் குறைந்து விட்டது. உறவுகளோடு உறவாட விடவேண்டும். அப்பொழுது குழந்தைகள் மகிழ்ச்சியாக உணர்வார்கள். சிறிய விஷயமாக தெரிவது குழந்தைக்கு கற்று கொடுப்பதற்கான வாய்ப்பாக அமையும்.
அடுத்தவர்களை நாம் எப்படி மதிக்கிறோம், நாம் எவ்வாறு நடத்துகிறோம் என்பதை குழந்தைகள் உற்றுநோக்கிறார்கள்.நாம் சரியான பாதையில் சென்றால் குழந்தைகள் அவ்வாறு செயல்பட முயற்சிக்கும்.
பெண்குழந்தைக்கு வீட்டு வேலைகளை கற்றுக் கொடுப்பது போல ஆண் குழந்தைக்கும் பழக வேண்டும். அப்பொழுது தான் ஒரு பெண் எவ்வாறு கஷ்ட படுகிறாள் என்பதை புரிய வைத்தோமானால் எந்த ஒரு ஆணும் தவறான கண்ணோட்டத்தோடு பெண்களை பார்க்க மாட்டார்கள்.
கால் நூற்றாண்டு காலமாக நாம் சரியான தாய் தந்தையாக இல்லாததன் விளைவை
நாம் இப்பொழுது அறுவடை செய்து கொண்டு இருக்கிறோம்.
தொடரும்.....
- சசிதளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
குழந்தை வளர்ப்பில் ஆணிற்கு பங்கு இல்லையா என்று கேக்கலாம். நிச்சயம் சரி பாதி உண்டு. ஆனால் தாய் என்ற ஒற்றை சொல் அனைத்தையும் மாற்றிவிடும் வல்லமை படைத்தது. என்னது மிகைபடுத்தி கூறுகிறேன் என்று நினைக்க வேண்டாம்.
ஏனென்றால் தாயானவள் தாய்ப்பாசத்தோடு தாய்ப்பாலையும் சேர்த்து புகட்டுவதால் நிச்சயமாக ஒவ்வொரு குழந்தையும் தாய் அன்புக்கு கட்டுபடுவார்கள். அதனால் தான் தாயால் அனைத்தையும் மாற்ற முடியும் என்று கூறினேன்.
தன் தந்தை தன் அம்மாவை எப்படி நடத்துகிறார் என்பதை தினம் தோறும் கவனித்து கொண்டு தான் இருக்கிறது.
அப்பாவை கவனிக்கும் குழந்தை தானும்
அவ்வாறு செயல்பட ஆரம்பிக்கும்.
அங்கு தான் பிரச்சனை ஆரம்பிக்கும். அம்மாவை திட்டும் போதும், தரக்குறைவாக பேசும் போதும் குழந்தை மனம் மாற ஆரம்பிக்கிறது. தானும் அவ்வாறு செய்தால் தவறு இல்லை என்று மனதில் நினைத்துவிட்டால் அப்பறம் என்ன தன் இஷ்டம்போல் நடக்க ஆரம்பித்துவிடும்.
தொடரும்......
ஏனென்றால் தாயானவள் தாய்ப்பாசத்தோடு தாய்ப்பாலையும் சேர்த்து புகட்டுவதால் நிச்சயமாக ஒவ்வொரு குழந்தையும் தாய் அன்புக்கு கட்டுபடுவார்கள். அதனால் தான் தாயால் அனைத்தையும் மாற்ற முடியும் என்று கூறினேன்.
தன் தந்தை தன் அம்மாவை எப்படி நடத்துகிறார் என்பதை தினம் தோறும் கவனித்து கொண்டு தான் இருக்கிறது.
அப்பாவை கவனிக்கும் குழந்தை தானும்
அவ்வாறு செயல்பட ஆரம்பிக்கும்.
அங்கு தான் பிரச்சனை ஆரம்பிக்கும். அம்மாவை திட்டும் போதும், தரக்குறைவாக பேசும் போதும் குழந்தை மனம் மாற ஆரம்பிக்கிறது. தானும் அவ்வாறு செய்தால் தவறு இல்லை என்று மனதில் நினைத்துவிட்டால் அப்பறம் என்ன தன் இஷ்டம்போல் நடக்க ஆரம்பித்துவிடும்.
தொடரும்......
- சசிதளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
பெற்றோர் தன் குழந்தைக்கு முன் மாதிரியாக செயல்பட வேண்டும்.
நல்ல ஆரோக்கியமான சூழ்நிலைகளில்
வளரும் குழந்தைகள் தவறு செய்வதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு.
குழந்தைக்கு ஆரோக்கியமான சூழ்நிலைகளை ஏற்படுத்தி தர வேண்டியது பெற்றோர்களின் கடமை.
குழந்தைகளை முக்கியமாக ஊக்க படுத்த வேண்டும்.எந்த ஒரு நிகழ்வுகளுக்கும் மட்டம் தட்டி பேச வேண்டாம்.
மற்ற குழந்தைகளோடு ஒப்பிடகூடாது. ஏன்னென்றால் ஒவ்வொரு குழந்தைகளுக்கும் ஒரு தனித்தன்மை இருக்கும் அதை என்னவென்று கண்டறிந்து குழந்தையை ஊக்கப்படுத்தினால் சிறப்பாக செயல்படும்.
பிடிக்காத விஷயத்தை வலியுறுத்தும் வகையில் போது மன உளைச்சல் ஏற்படும்.
அந்த சூழ்நிலையில் அவர்களோட இயல்பு
மாற ஆரம்பிக்கிறது. அப்பொழுது தவறான சகவாசம் காரணமாக தடம் புரண்டு போவதற்க்கான வாய்ப்பு அதிகம்.
அந்த வாய்ப்பை பெற்றோர்களாகிய நாம்
நம் குழந்தைகளுக்கு ஏற்படுத்தி தரலாமா??
மருத்துவர் ஆகவேண்டும், பொறியாளர், நிறைய சம்பாதித்து தரவேண்டும் என்று நினைக்கற நாம் நல்ல பண்பாலனாக,சிறந்த குடிமகனாக நேர்மையான மனிதனாக உருவாக வேண்டும் என்று நாம் யாரும் நினைப்பதில்லை ஏன்??
தொடரும்
நல்ல ஆரோக்கியமான சூழ்நிலைகளில்
வளரும் குழந்தைகள் தவறு செய்வதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு.
குழந்தைக்கு ஆரோக்கியமான சூழ்நிலைகளை ஏற்படுத்தி தர வேண்டியது பெற்றோர்களின் கடமை.
குழந்தைகளை முக்கியமாக ஊக்க படுத்த வேண்டும்.எந்த ஒரு நிகழ்வுகளுக்கும் மட்டம் தட்டி பேச வேண்டாம்.
மற்ற குழந்தைகளோடு ஒப்பிடகூடாது. ஏன்னென்றால் ஒவ்வொரு குழந்தைகளுக்கும் ஒரு தனித்தன்மை இருக்கும் அதை என்னவென்று கண்டறிந்து குழந்தையை ஊக்கப்படுத்தினால் சிறப்பாக செயல்படும்.
பிடிக்காத விஷயத்தை வலியுறுத்தும் வகையில் போது மன உளைச்சல் ஏற்படும்.
அந்த சூழ்நிலையில் அவர்களோட இயல்பு
மாற ஆரம்பிக்கிறது. அப்பொழுது தவறான சகவாசம் காரணமாக தடம் புரண்டு போவதற்க்கான வாய்ப்பு அதிகம்.
அந்த வாய்ப்பை பெற்றோர்களாகிய நாம்
நம் குழந்தைகளுக்கு ஏற்படுத்தி தரலாமா??
மருத்துவர் ஆகவேண்டும், பொறியாளர், நிறைய சம்பாதித்து தரவேண்டும் என்று நினைக்கற நாம் நல்ல பண்பாலனாக,சிறந்த குடிமகனாக நேர்மையான மனிதனாக உருவாக வேண்டும் என்று நாம் யாரும் நினைப்பதில்லை ஏன்??
தொடரும்
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
1 லிருந்து 3 வயது வரை சுவாமி போல கொண்டாடனும்
4 லிருந்து 7 வயது வரை ராஜா போல நடத்தனும்
8 லிருந்து 12 வயது வரை குழந்தையாக பாவிக்கணும்
13 லிருந்து 19 வயது வரை ஒற்றன் போல கண்காணிக்கணும்
20 வயது வந்து தோளு க்கு உசந்துட்டா தோழன் போல வெச்சுக்கணும் என்பர்.
ரொம்ப சத்தியமான வார்த்தைகள் இவை. இப்படி நாம குழந்தைகளை வளர்த்தால் பிற்காலத்தில் அதுங்களும் நன்னா இருக்கும் நம்மையும் நன்னா வெச்சுக்கும். என்ன இப்படி சொல்றேனே திடிர்னு நம்மையும் நல்லா பார்த்துப்பா அவா என்று சொலிட்டேனே.... சம்பந்தம் இல்லாம என்று பாக்கறேளா ... வரேன் வரேன்..... இருங்கோ
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அருமையாக இருக்கு சசி.தொடருங்கள்.....எல்லாவற்றையும் படித்து விட்டு பின்னூட்டம் போடுகிறேன்
- சசிதளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
""குடும்பம் தான் சமூகத்தின் சிறிய அலகு"" சமூகம் என்பது ஒரு குடும்பம் ""
என்று செல்வார்கள்.
அழகான ஆரோக்கியமான குடும்பங்களிருந்து தான்
சிறந்த மனிதர்கள் உருவாகிறார்கள்.
குடும்ப உறவுகளை ஆரோக்கியமாகவும்
அன்னியோன்னியத்தோடும்
வைத்து கொள்வது மிகவும் முக்கியம்
இது நம் குழந்தைகளை பாதுகாப்பானவர்களாகவும்
உற்சாகமானவர்களாகவும்
வைத்து இருக்க உதவும்.
குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரின் உணர்வுகளையும் மதியுங்கள்.
அனைவரின் விருப்பங்களையும்
ரசனைகளையும் சுவையையும் அறிந்து கொள்ளுங்கள்.
அன்பை பகிர்வது என்பது பொறுப்பெடுத்துக்
கொள்வது.
போதுமான சுதந்திரம் தருவது, எனவே குழந்தைகளின் கருத்துக்களுக்கு மதிப்பளியுங்கள். ஆரோக்கியமான உரையாடலை செய்வதற்கான குடும்ப ஜனநாயகம் வீட்டில் எப்போதும் இருக்கட்டும்.
தினமும் ஒரு வேலை உணவையாவது குடும்பத்தில் உள்ள அனைவருடன் உண்ணுங்கள்.
குழந்தைகளை உணவு நேரத்தில் சுதந்திரமாக இயங்க விடுங்கள்.
தங்கள் முன் உள்ளவற்றை அவர்கள் விருப்பப்படி சாப்பிடட்டும். ஆரோக்கியமான உணவு பழக்கம் ஆயுளுக்கும் நல்லது என்பதை புரிய வைத்தோமானால் அனைத்தையுமே விரும்பி சாப்பிடுவார்கள்
என்று செல்வார்கள்.
அழகான ஆரோக்கியமான குடும்பங்களிருந்து தான்
சிறந்த மனிதர்கள் உருவாகிறார்கள்.
குடும்ப உறவுகளை ஆரோக்கியமாகவும்
அன்னியோன்னியத்தோடும்
வைத்து கொள்வது மிகவும் முக்கியம்
இது நம் குழந்தைகளை பாதுகாப்பானவர்களாகவும்
உற்சாகமானவர்களாகவும்
வைத்து இருக்க உதவும்.
குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரின் உணர்வுகளையும் மதியுங்கள்.
அனைவரின் விருப்பங்களையும்
ரசனைகளையும் சுவையையும் அறிந்து கொள்ளுங்கள்.
அன்பை பகிர்வது என்பது பொறுப்பெடுத்துக்
கொள்வது.
போதுமான சுதந்திரம் தருவது, எனவே குழந்தைகளின் கருத்துக்களுக்கு மதிப்பளியுங்கள். ஆரோக்கியமான உரையாடலை செய்வதற்கான குடும்ப ஜனநாயகம் வீட்டில் எப்போதும் இருக்கட்டும்.
தினமும் ஒரு வேலை உணவையாவது குடும்பத்தில் உள்ள அனைவருடன் உண்ணுங்கள்.
குழந்தைகளை உணவு நேரத்தில் சுதந்திரமாக இயங்க விடுங்கள்.
தங்கள் முன் உள்ளவற்றை அவர்கள் விருப்பப்படி சாப்பிடட்டும். ஆரோக்கியமான உணவு பழக்கம் ஆயுளுக்கும் நல்லது என்பதை புரிய வைத்தோமானால் அனைத்தையுமே விரும்பி சாப்பிடுவார்கள்
- சசிதளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
தொலைக்காட்சியில்,கைபேசியில் நேரம் செலவிடுவதற்கு பதில் வீட்டில் உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சேர்ந்து அமர்ந்து மனம் விட்டுப் பேசுங்கள். உரையாடல் பாசிடிவ்வான சொற்களில் இருக்கட்டும்.
பொருளாதாரம் உள்ளிட்ட குடும்பத்தின் சூழ்நிலைகள் குழந்தைகளுக்கு தெரிந்திருக்கட்டும்.
குடும்ப சூழ்நிலை மட்டும் இன்றி, பொதுவான விடயங்களையும் பேசுங்கள்.
கலகலப்பான நகைச்சுவை நிறைந்த உரையாடலை உருவாக்கி கொடுங்கள்.
பேசுவதை மூன்று நிலைகளாக பிரிக்கலாம் 1
மனிதர்கள் பற்றி பேசுவது
2.சம்பவங்களை பற்றி பேசுவது
3.கருத்தியல்களை பற்றி பேசுவது
தொடரும்..
பொருளாதாரம் உள்ளிட்ட குடும்பத்தின் சூழ்நிலைகள் குழந்தைகளுக்கு தெரிந்திருக்கட்டும்.
குடும்ப சூழ்நிலை மட்டும் இன்றி, பொதுவான விடயங்களையும் பேசுங்கள்.
கலகலப்பான நகைச்சுவை நிறைந்த உரையாடலை உருவாக்கி கொடுங்கள்.
பேசுவதை மூன்று நிலைகளாக பிரிக்கலாம் 1
மனிதர்கள் பற்றி பேசுவது
2.சம்பவங்களை பற்றி பேசுவது
3.கருத்தியல்களை பற்றி பேசுவது
தொடரும்..
- சசிதளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
மனிதர்களை பற்றி பேசுவது சாதாரண நிலை,இதில் உரையாடல்களை தவிர வேறு ஏதும் பலன்கள் இல்லை.
சம்பவங்களை பற்றி பேசுவது அதற்கு அடுத்த நிலை, இது நமது அனுபவங்களை மற்றவர்களின் அனுபவங்களுடள் ஒப்பிட்டுக்கொள்ளவும் இதனால் நம்மை செழுமைபடுத்திக்கொள்ளவும்,உதவும்.
கருத்தியல்களை பற்றி பேசுவது மூன்றாவது நிலை, இது, நம்மை பற்றி மட்டும் இன்றி நம்மைச்சுற்றியுள்ள மனிதர்களையும் புரிந்து கொள்ள உதவும்.
நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது?என்பதை குழந்தைகள் புரிந்து கொள்ள வைப்பது பெற்றோர்களாகிய நமது கடமைதான்.
குடும்பத்துக்கு என்று நாம் செலவிடும் நேரம் சிறப்பான நேரமாக இருக்கவேண்டும். எவ்வளவு நேரம் செலவிடுகிறோம் என்பதைவிட எப்படி செலவிடுகிறோம் என்பது தான் முக்கியம். எனவே நாம் குழந்தைகளுடன் செலவிடும் நேரம் ஆரோக்கியமான இனிமையான தருணங்களாக இருக்கட்டும்.
தொடரும்
சம்பவங்களை பற்றி பேசுவது அதற்கு அடுத்த நிலை, இது நமது அனுபவங்களை மற்றவர்களின் அனுபவங்களுடள் ஒப்பிட்டுக்கொள்ளவும் இதனால் நம்மை செழுமைபடுத்திக்கொள்ளவும்,உதவும்.
கருத்தியல்களை பற்றி பேசுவது மூன்றாவது நிலை, இது, நம்மை பற்றி மட்டும் இன்றி நம்மைச்சுற்றியுள்ள மனிதர்களையும் புரிந்து கொள்ள உதவும்.
நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது?என்பதை குழந்தைகள் புரிந்து கொள்ள வைப்பது பெற்றோர்களாகிய நமது கடமைதான்.
குடும்பத்துக்கு என்று நாம் செலவிடும் நேரம் சிறப்பான நேரமாக இருக்கவேண்டும். எவ்வளவு நேரம் செலவிடுகிறோம் என்பதைவிட எப்படி செலவிடுகிறோம் என்பது தான் முக்கியம். எனவே நாம் குழந்தைகளுடன் செலவிடும் நேரம் ஆரோக்கியமான இனிமையான தருணங்களாக இருக்கட்டும்.
தொடரும்
- Sponsored content
Page 11 of 12 • 1, 2, 3 ... , 10, 11, 12
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 11 of 12
|
|