புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Today at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Today at 7:57 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 6:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கல்வி, கலைகளில் தேர்ச்சிபெற வயலூர் முருகனை வழிபடுவோம்! Poll_c10கல்வி, கலைகளில் தேர்ச்சிபெற வயலூர் முருகனை வழிபடுவோம்! Poll_m10கல்வி, கலைகளில் தேர்ச்சிபெற வயலூர் முருகனை வழிபடுவோம்! Poll_c10 
61 Posts - 45%
heezulia
கல்வி, கலைகளில் தேர்ச்சிபெற வயலூர் முருகனை வழிபடுவோம்! Poll_c10கல்வி, கலைகளில் தேர்ச்சிபெற வயலூர் முருகனை வழிபடுவோம்! Poll_m10கல்வி, கலைகளில் தேர்ச்சிபெற வயலூர் முருகனை வழிபடுவோம்! Poll_c10 
42 Posts - 31%
mohamed nizamudeen
கல்வி, கலைகளில் தேர்ச்சிபெற வயலூர் முருகனை வழிபடுவோம்! Poll_c10கல்வி, கலைகளில் தேர்ச்சிபெற வயலூர் முருகனை வழிபடுவோம்! Poll_m10கல்வி, கலைகளில் தேர்ச்சிபெற வயலூர் முருகனை வழிபடுவோம்! Poll_c10 
9 Posts - 7%
வேல்முருகன் காசி
கல்வி, கலைகளில் தேர்ச்சிபெற வயலூர் முருகனை வழிபடுவோம்! Poll_c10கல்வி, கலைகளில் தேர்ச்சிபெற வயலூர் முருகனை வழிபடுவோம்! Poll_m10கல்வி, கலைகளில் தேர்ச்சிபெற வயலூர் முருகனை வழிபடுவோம்! Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
கல்வி, கலைகளில் தேர்ச்சிபெற வயலூர் முருகனை வழிபடுவோம்! Poll_c10கல்வி, கலைகளில் தேர்ச்சிபெற வயலூர் முருகனை வழிபடுவோம்! Poll_m10கல்வி, கலைகளில் தேர்ச்சிபெற வயலூர் முருகனை வழிபடுவோம்! Poll_c10 
6 Posts - 4%
Raji@123
கல்வி, கலைகளில் தேர்ச்சிபெற வயலூர் முருகனை வழிபடுவோம்! Poll_c10கல்வி, கலைகளில் தேர்ச்சிபெற வயலூர் முருகனை வழிபடுவோம்! Poll_m10கல்வி, கலைகளில் தேர்ச்சிபெற வயலூர் முருகனை வழிபடுவோம்! Poll_c10 
4 Posts - 3%
prajai
கல்வி, கலைகளில் தேர்ச்சிபெற வயலூர் முருகனை வழிபடுவோம்! Poll_c10கல்வி, கலைகளில் தேர்ச்சிபெற வயலூர் முருகனை வழிபடுவோம்! Poll_m10கல்வி, கலைகளில் தேர்ச்சிபெற வயலூர் முருகனை வழிபடுவோம்! Poll_c10 
3 Posts - 2%
Saravananj
கல்வி, கலைகளில் தேர்ச்சிபெற வயலூர் முருகனை வழிபடுவோம்! Poll_c10கல்வி, கலைகளில் தேர்ச்சிபெற வயலூர் முருகனை வழிபடுவோம்! Poll_m10கல்வி, கலைகளில் தேர்ச்சிபெற வயலூர் முருகனை வழிபடுவோம்! Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
கல்வி, கலைகளில் தேர்ச்சிபெற வயலூர் முருகனை வழிபடுவோம்! Poll_c10கல்வி, கலைகளில் தேர்ச்சிபெற வயலூர் முருகனை வழிபடுவோம்! Poll_m10கல்வி, கலைகளில் தேர்ச்சிபெற வயலூர் முருகனை வழிபடுவோம்! Poll_c10 
2 Posts - 1%
Barushree
கல்வி, கலைகளில் தேர்ச்சிபெற வயலூர் முருகனை வழிபடுவோம்! Poll_c10கல்வி, கலைகளில் தேர்ச்சிபெற வயலூர் முருகனை வழிபடுவோம்! Poll_m10கல்வி, கலைகளில் தேர்ச்சிபெற வயலூர் முருகனை வழிபடுவோம்! Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கல்வி, கலைகளில் தேர்ச்சிபெற வயலூர் முருகனை வழிபடுவோம்! Poll_c10கல்வி, கலைகளில் தேர்ச்சிபெற வயலூர் முருகனை வழிபடுவோம்! Poll_m10கல்வி, கலைகளில் தேர்ச்சிபெற வயலூர் முருகனை வழிபடுவோம்! Poll_c10 
178 Posts - 40%
ayyasamy ram
கல்வி, கலைகளில் தேர்ச்சிபெற வயலூர் முருகனை வழிபடுவோம்! Poll_c10கல்வி, கலைகளில் தேர்ச்சிபெற வயலூர் முருகனை வழிபடுவோம்! Poll_m10கல்வி, கலைகளில் தேர்ச்சிபெற வயலூர் முருகனை வழிபடுவோம்! Poll_c10 
176 Posts - 40%
mohamed nizamudeen
கல்வி, கலைகளில் தேர்ச்சிபெற வயலூர் முருகனை வழிபடுவோம்! Poll_c10கல்வி, கலைகளில் தேர்ச்சிபெற வயலூர் முருகனை வழிபடுவோம்! Poll_m10கல்வி, கலைகளில் தேர்ச்சிபெற வயலூர் முருகனை வழிபடுவோம்! Poll_c10 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
கல்வி, கலைகளில் தேர்ச்சிபெற வயலூர் முருகனை வழிபடுவோம்! Poll_c10கல்வி, கலைகளில் தேர்ச்சிபெற வயலூர் முருகனை வழிபடுவோம்! Poll_m10கல்வி, கலைகளில் தேர்ச்சிபெற வயலூர் முருகனை வழிபடுவோம்! Poll_c10 
21 Posts - 5%
வேல்முருகன் காசி
கல்வி, கலைகளில் தேர்ச்சிபெற வயலூர் முருகனை வழிபடுவோம்! Poll_c10கல்வி, கலைகளில் தேர்ச்சிபெற வயலூர் முருகனை வழிபடுவோம்! Poll_m10கல்வி, கலைகளில் தேர்ச்சிபெற வயலூர் முருகனை வழிபடுவோம்! Poll_c10 
9 Posts - 2%
prajai
கல்வி, கலைகளில் தேர்ச்சிபெற வயலூர் முருகனை வழிபடுவோம்! Poll_c10கல்வி, கலைகளில் தேர்ச்சிபெற வயலூர் முருகனை வழிபடுவோம்! Poll_m10கல்வி, கலைகளில் தேர்ச்சிபெற வயலூர் முருகனை வழிபடுவோம்! Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
கல்வி, கலைகளில் தேர்ச்சிபெற வயலூர் முருகனை வழிபடுவோம்! Poll_c10கல்வி, கலைகளில் தேர்ச்சிபெற வயலூர் முருகனை வழிபடுவோம்! Poll_m10கல்வி, கலைகளில் தேர்ச்சிபெற வயலூர் முருகனை வழிபடுவோம்! Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
கல்வி, கலைகளில் தேர்ச்சிபெற வயலூர் முருகனை வழிபடுவோம்! Poll_c10கல்வி, கலைகளில் தேர்ச்சிபெற வயலூர் முருகனை வழிபடுவோம்! Poll_m10கல்வி, கலைகளில் தேர்ச்சிபெற வயலூர் முருகனை வழிபடுவோம்! Poll_c10 
7 Posts - 2%
Guna.D
கல்வி, கலைகளில் தேர்ச்சிபெற வயலூர் முருகனை வழிபடுவோம்! Poll_c10கல்வி, கலைகளில் தேர்ச்சிபெற வயலூர் முருகனை வழிபடுவோம்! Poll_m10கல்வி, கலைகளில் தேர்ச்சிபெற வயலூர் முருகனை வழிபடுவோம்! Poll_c10 
5 Posts - 1%
Raji@123
கல்வி, கலைகளில் தேர்ச்சிபெற வயலூர் முருகனை வழிபடுவோம்! Poll_c10கல்வி, கலைகளில் தேர்ச்சிபெற வயலூர் முருகனை வழிபடுவோம்! Poll_m10கல்வி, கலைகளில் தேர்ச்சிபெற வயலூர் முருகனை வழிபடுவோம்! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கல்வி, கலைகளில் தேர்ச்சிபெற வயலூர் முருகனை வழிபடுவோம்!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun Jun 09, 2013 7:23 am

முருகன் என்றாலே அழகன். அவன் கோவில் கொண்டுள்ள தலங்களும் அழகானவை என்று சொல்லவா வேண்டும்! அத்தகையதோர் எழில்மிக்க தலம் வயலூர். எங்கெங்கும் பசுமை தவழும் வயல்கள்... இனிய சூழல்... இயற்கையாகவே இறைநாட்டம் நம்மைவந்து அரவணைக்கும் உணர்வு.

வயலூர் என்றாலே நமக்கு திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் நினைவுக்கு வருவார். சில நூற்றாண்டுகளுக்குமுன் வாழ்ந்த அருணகிரியாரும் மனதில் தோன்றுவார். சித்தர்கள் தேடிவந்து முக்திபெற விரும்பும் தலம் வயலூர் என்பார்கள். இங்கே ஆலயம் அமைந்த வரலாறு என்ன?

முற்காலத்தில் சோழமன்னன் ஒருவன் வேட்டையாடுவதற்காக இப்பகுதியின் வழியே சென்றான். அப்போது கரும்புத் தோட்டத்தில், ஒரே கணுவில் மூன்று கரும்புகள் விளைந்திருப்பதைக் கண்டு ஆச்சரியமுற்று அதை வெட்டியபோது, அதிலிருந்து ரத்தம் பீறிட்டது. அதிர்ச்சியடைந்த மன்னன் அங்கே நிலத்தை அகழ்ந்தபோது, உள்ளே தான்தோன்றியாக (சுயம்புமூர்த்தியாக) சிவலிங்கம் இருப்பதைக் கண்டு ஆனந்த முற்றான். அவருக்கு ஆதிநாதர் என்று பெயர் சூட்டி ஆலயம் அமைத்தான். அம்பாள் சிலை அமைத்து ஆதிநாயகி என பெயர் சூட்டி நிறுவி வழிபாடு செய்தான்.

இவ்வாறு உருவான இத்தலத்தில் விநாயகர், முருகர் உள்ளிட்ட தெய்வ சந்நிதிகளும் அமைக்கப்பட்டன. தந்தைக்கு பாடம் சொன்ன சுவாமிநாதனான முருகன், இத்தலத்தில் தந்தையையும் மிஞ்சிய புகழுடன் சுப்பிரமணியனாக- முத்துக்குமாரசுவாமியாகத் திகழ்கிறான்.

முருக அடியாரான அருணகிரிநாதர் இறுதியில் திருவண்ணாமலையில் முருகன் அருள்பெற்றார். முருகன் அடியெடுத்துக் கொடுக்க "முத்தைத் தரு பத்தித் திருநகை' எனத் தொடங்கும் திருப்புகழ் பாடலைப் பாடினார். அதன்பின் அவர் பாடல் எதுவும் பாடாமலிருந்த நிலையில், வயலூர் முருகன் வானொலி (அசரீரி) வாக்கால் தன் எல்லைக்கு அழைத்தார்.

அதைக் கேட்ட அருணகிரியார் மிகுந்த ஆவலுடன் வயலூர் வந்தார். ஆனால் அவருக்கு முருகனின் திருக்காட்சி கிடைக்கவில்லை. ஏமாற்றமடைந்த அருணகிரி, "வானொலி வாக்கு பொய்யா?'' என உரக்க கத்தினார். அப்போது அங்கு தோன்றிய விநாயகர், "வானொலி வாக்கு உண்மையே'' என்று கூறி முருகப் பெருமானைக் காட்டியருளினார்.

அப்போது முருகன் அருணகிரியாரின் நாவில் தன் வேலால் "ஓம்' என்ற ஓம்கார மந்திரத்தை எழுதினார். அதன் பின்னர் அங்கு 18 பாடல்களைப் பாடிய அருணகிரியார், மேலும் பல தலங்களுக்குச் சென்று பாடினார். இவ்வாறு "திருப்புகழ்' என்னும் ஒப்பற்ற நூல் கிடைக்கக் காரணமானவர் இந்த முருகப் பெருமானே. அதனால்தான் கல்வி, கலைகளில் தேர்ச்சிபெற விரும்புவோர் வயலூர் முருகனை வழிபட்டுச் செல்கிறார்கள்.

வாரியார் சுவாமிகள் வயலூர் முருகனின் அருள்பெற்றவர். அவர் சொற்பொழிவாற்றத் தொடங்கும் முன், "எல்லாம் வல்ல எம்பெருமான் வயலூர் முருகப் பெருமான் திருவடிகளை வணங்கி'... என்று சொல்லித் தொடங்கும் வழக்கம் கொண்டவர். அவர் 1934-ல் இந்தக் கோவிலுக்கு வருகைபுரிந்து முருகப் பெருமானை தரிசித்தார்.

( நன்றி - நக்கீரன் )

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun Jun 09, 2013 7:30 am

அப்போது முருகனுக்கு வெள்ளிக்கவசம் அணிவிக்கப்பட்டிருந்தது. அருகே "வெள்ளிக்கவசம் அணிவிக்க 50 காசுகள் கட்டணம்' என்ற அறிவிப்புப் பலகையைக் கண்டார். உடனே அர்ச்சகரின் தட்டில் 50 காசுகளைப் போட்டுவிட்டுத் திரும்பினார்.

அன்றிரவு அர்ச்சகரின் கனவில் தோன்றிய முருகன், ""என் பக்தனிடம் 50 காசு வாங்கினாயே... அதைக் கொண்டு எனக்கு கோபுரம் கட்ட முடியுமா?'' என்று கேட்டுவிட்டு மறைந்தார். திடுக்கிட்டுக் கண்விழித்தார்

அர்ச்சகர். விடிந்ததும் முதல் நாள் வந்திருந்தவர் வாரியார் என்பதை அறிந்து, அந்த 50 காசை வாரியாருக்கு மணியார்டர்மூலம் அனுப்பிவைத்தார். விவரமறிந்த வாரியார் வியப்படைந்து, ராஜகோபுரம் கட்டவேண்டுமென்பது முருகனின் ஆணையெனக் கொண்டு, பலரிடமும் உதவிபெற்று வயலூர் ஆலயத்தில் கோபுரம் கட்டி குடமுழுக்கிற்கும் ஏற்பாடு செய்தார். சுமார் நாற்பது ஆண்டுகள் இவ்வாலயத் திருப்பணிக்காக பாடுபட்டவர் வாரியார் சுவாமிகள். இவ்வாலயப் பெருமையை அகிலமெங்கும் பரப்பியதில் வாரியாரின் பங்கு மிகப்பெரியது.

இங்கு எழுந்தருளியிருக்கும் விநாயகர் பொய்யா கணபதி எனப்படுகிறார். மாயையான வாழ்வை உண்மையென்று நம்பி வாழ்பவர்களை மெய்ஞ்ஞான வழிக்குத் திருப்பி அருள்புரிவார் இந்த பொய்யா கணபதி.

அருணகிரியார் தனது திருப்புகழ் காப்புச் செய்யுளில் பாடியுள்ள கணபதி இவரே. இவர் சந்நிதியின் அருகே அருணகிரியாருக்கு பீடம் அமைக்கப்பட்டுள்ளது. எதிரே கல்லால மரத்தின்கீழ் வீற்றிருந்து அருள்கிறார் தென்முகக் கடவுள் (தட்சிணாமூர்த்தி).

இந்த கணபதி சந்நிதிக்கு அருகில்தான் வயலூரில் வரம்கொடுத்தருளும் முருகன் முத்துக்குமார சுவாமியாக எழுந்தருளியுள்ளார். "வயலூர் முருகன் இருக்க அயலூர் எதற்கு?' என்று பக்தர்கள் சொல்லும் அளவுக்கு எண்ணிலாத ஏற்றத்தைத் தருபவர் இந்த முருகன். மயில் வாகனம், கடம்பமலர்மாலை, வடிவேல், சேவற்கொடி ஆகியவற்றுடன் காட்சிதரும் முருகப் பெருமானை நாளெல்லாம் பார்த்துக்கொண்டே இருக்கலாம்.

இந்த சுப்பிரமணியர் மணக்கோலத்தில் குமரனாக உள்ளதால், செவ்வாய் தோசத்தால் திருமணத் தடை அடைந்தவர்கள் இவரை வந்து வழிபட்டுச் சென்று நலம்பெறுகின்றனர்.

கந்த சட்டியின்போது முருகன்- தெய்வானை திருமணமும்; பங்குனி உத்திரத்தன்று முருகன்- வள்ளி திருமணமும் விமரிசையாக நடைபெறும்.

மகா சிவனிரவு அன்று ஈசன் ஆதிநாதருக்கு சிறப்பாக பூஜைகள் நடக்கும்.

இவ்வாலயத்தில் காலைத் தூக்கியாடாத நடராஜரை தரிசிக்கலாம். இது தாண்டவத்துக்கு முந்தைய நிலையாகும். எனவே இவரது ஜடாமுடி முடியப்பட்ட நிலையிலேயே இருக்கும். காலுக்குக் கீழே முயலகனும் இல்லை. இவர் சதுரதாண்டவ நடராஜர் எனப்படுகிறார்.

குறைவற்ற பூஜைகளை ஏற்றுக் கொள்ளும் வயலூர் முருகன், பக்தர்களுக்கு நிறைவான வாழ்வைத் தருகிறார் என்பது சத்தியமான உண்மை. வயலூர் ஆறுமுகனை வணங்குவோர்க்கு என்றும் ஏறுமுகம்தான்!

திருச்சியிலிருந்து சுமார் 11 கிலோமீட்டர் தொலைவிலுள்ளது வயலூர் தலம். சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து செல்லலாம். காலை 6.00 மணி முதல் நண்பகல் 1.00 மணி வரையிலும்; மாலை 3.30 மணி முதல் இரவு 9.00 மணி வரையிலும் ஆலயம் திறந்திருக்கும்.
( நன்றி - நக்கீரன் )

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக