புதிய பதிவுகள்
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by ayyasamy ram Today at 7:46 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 7:42 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:36 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பன்மொழி பயில தாய்மொழியே அடித்தளம் Poll_c10பன்மொழி பயில தாய்மொழியே அடித்தளம் Poll_m10பன்மொழி பயில தாய்மொழியே அடித்தளம் Poll_c10 
38 Posts - 49%
heezulia
பன்மொழி பயில தாய்மொழியே அடித்தளம் Poll_c10பன்மொழி பயில தாய்மொழியே அடித்தளம் Poll_m10பன்மொழி பயில தாய்மொழியே அடித்தளம் Poll_c10 
32 Posts - 42%
mohamed nizamudeen
பன்மொழி பயில தாய்மொழியே அடித்தளம் Poll_c10பன்மொழி பயில தாய்மொழியே அடித்தளம் Poll_m10பன்மொழி பயில தாய்மொழியே அடித்தளம் Poll_c10 
2 Posts - 3%
jairam
பன்மொழி பயில தாய்மொழியே அடித்தளம் Poll_c10பன்மொழி பயில தாய்மொழியே அடித்தளம் Poll_m10பன்மொழி பயில தாய்மொழியே அடித்தளம் Poll_c10 
2 Posts - 3%
சிவா
பன்மொழி பயில தாய்மொழியே அடித்தளம் Poll_c10பன்மொழி பயில தாய்மொழியே அடித்தளம் Poll_m10பன்மொழி பயில தாய்மொழியே அடித்தளம் Poll_c10 
1 Post - 1%
Manimegala
பன்மொழி பயில தாய்மொழியே அடித்தளம் Poll_c10பன்மொழி பயில தாய்மொழியே அடித்தளம் Poll_m10பன்மொழி பயில தாய்மொழியே அடித்தளம் Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
பன்மொழி பயில தாய்மொழியே அடித்தளம் Poll_c10பன்மொழி பயில தாய்மொழியே அடித்தளம் Poll_m10பன்மொழி பயில தாய்மொழியே அடித்தளம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பன்மொழி பயில தாய்மொழியே அடித்தளம் Poll_c10பன்மொழி பயில தாய்மொழியே அடித்தளம் Poll_m10பன்மொழி பயில தாய்மொழியே அடித்தளம் Poll_c10 
162 Posts - 50%
ayyasamy ram
பன்மொழி பயில தாய்மொழியே அடித்தளம் Poll_c10பன்மொழி பயில தாய்மொழியே அடித்தளம் Poll_m10பன்மொழி பயில தாய்மொழியே அடித்தளம் Poll_c10 
121 Posts - 38%
mohamed nizamudeen
பன்மொழி பயில தாய்மொழியே அடித்தளம் Poll_c10பன்மொழி பயில தாய்மொழியே அடித்தளம் Poll_m10பன்மொழி பயில தாய்மொழியே அடித்தளம் Poll_c10 
13 Posts - 4%
prajai
பன்மொழி பயில தாய்மொழியே அடித்தளம் Poll_c10பன்மொழி பயில தாய்மொழியே அடித்தளம் Poll_m10பன்மொழி பயில தாய்மொழியே அடித்தளம் Poll_c10 
9 Posts - 3%
jairam
பன்மொழி பயில தாய்மொழியே அடித்தளம் Poll_c10பன்மொழி பயில தாய்மொழியே அடித்தளம் Poll_m10பன்மொழி பயில தாய்மொழியே அடித்தளம் Poll_c10 
4 Posts - 1%
Jenila
பன்மொழி பயில தாய்மொழியே அடித்தளம் Poll_c10பன்மொழி பயில தாய்மொழியே அடித்தளம் Poll_m10பன்மொழி பயில தாய்மொழியே அடித்தளம் Poll_c10 
4 Posts - 1%
Rutu
பன்மொழி பயில தாய்மொழியே அடித்தளம் Poll_c10பன்மொழி பயில தாய்மொழியே அடித்தளம் Poll_m10பன்மொழி பயில தாய்மொழியே அடித்தளம் Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
பன்மொழி பயில தாய்மொழியே அடித்தளம் Poll_c10பன்மொழி பயில தாய்மொழியே அடித்தளம் Poll_m10பன்மொழி பயில தாய்மொழியே அடித்தளம் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
பன்மொழி பயில தாய்மொழியே அடித்தளம் Poll_c10பன்மொழி பயில தாய்மொழியே அடித்தளம் Poll_m10பன்மொழி பயில தாய்மொழியே அடித்தளம் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
பன்மொழி பயில தாய்மொழியே அடித்தளம் Poll_c10பன்மொழி பயில தாய்மொழியே அடித்தளம் Poll_m10பன்மொழி பயில தாய்மொழியே அடித்தளம் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பன்மொழி பயில தாய்மொழியே அடித்தளம்


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Thu Jun 06, 2013 3:39 pm

பெற்றோர் தங்களது குழந்தைகள் ஆங்கில வழிக் கல்வி பயிலவே விரும்புகின்றனர். அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி இல்லை. போதிய மாணவர் சேர்க்கை இல்லை. பல பள்ளிகளை மூடும் நிலை ஏற்படுகிறது. உயர் படிப்புகள் அனைத்தும் ஆங்கிலத்தில் இருக்கின்றன. அதனால், அரசுப் பள்ளிகளில் ஆங்கிலக் கல்வி வகுப்புகள் தொடங்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

பன்மொழிக் கல்வி நமது கற்பனை மற்றும் சிந்தனைத் திறனை விரிவடையச் செய்கிறது. ஒரு குழந்தை பன்மொழிகளைக் கற்பதற்கான, வலுவான அடித்தளமாக தாய்மொழி விளங்குகிறது. தாய்மொழிக் கல்வி, பன்மொழி எழுத்தறிவு பெறுவதை எளிதாக்குகிறது என்று "யுனெஸ்கோ' அமைப்பு கூறுகிறது.

உயர் கல்வியில் பாடங்கள் ஆங்கிலத்தில் இருப்பதால், பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்புகளைத் தொடங்குவதாக தமிழக அரசு கூறுகிறது. தமிழ் மற்றும் ஆங்கில வழியில் கற்பிக்கப்படும் அறிவியல், கணிதப் பாடநூல்களில் உள்ள அறிவியல் சொல்கள் அனைத்தும் ஆங்கிலத்தில் இல்லை. லத்தீன் அல்லது கிரேக்க மொழிகளில்தான் உள்ளன.

தமிழ்வழிப் பாடநுல்களில் அறிவியல் சொற்கள் தடித்த எழுத்துகளில், அடைப்புக் குறிக்குள் ஆங்கிலத்தில் இடம் பெற்றிருக்கும். உயர் கல்வியில் ஆங்கில நடையில் படிக்கும்போது, அதில் வரும் அறிவியல் சொற்களைப் புரிந்து கொள்வதற்காகத்தான் அவ்வாறு அச்சிடப்பட்டுள்ளது. அறிவியல் சொற்களை கற்றுக் கொண்ட மாணவனுக்கு இப்போது தேவைப்படுவது, ஆங்கில மொழி நடை மட்டுமே. அது பள்ளிக் கல்வியில் ஒரு பாடமாக உள்ள ஆங்கிலப் பாடத்தை, முறைப்படி கற்றுக்கொடுத்தாலே கிடைத்துவிடும்.

தமிழகத்தில் ஊராட்சிப் பள்ளிகளில் 5-ஆம் வகுப்பு மாணவனால் 2-ஆம் வகுப்புப் பாடநூலைப் படிக்க முடியவில்லை என்ற தகவல் அண்மையில் வெளியாகி, அரசுப் பள்ளிகளின் கல்வித் தரம் தோலுரிக்கப்பட்டது. பெரும்பாலும், தமிழ் வழியில் படித்த ஆசிரியர்கள், தமிழ்ப் பாடங்களை நடத்திய நிலையில், மாணவர்களின் கல்வித் தரம் இவ்வாறு உள்ளது. ஆங்கில வழியில் படிக்காத ஆசிரியரைக் கொண்டு, ஆங்கில வழிக் கல்வியைச் சிறப்பாக எப்படி வழங்க முடியும்?

ஆங்கிலவழிக் கல்வி வெற்றிபெற, முழு நேரமும், மாணவரின் செவியில் ஆங்கில உரையாடல்கள் ஒலித்துக்கொண்டிருக்கும் சூழல் அவசியம். அது அரசுப் பள்ளிகளில் சாத்தியம் இல்லை.

உலகில் முதன் முதலில் மொழி தோன்றியது. அதன் பின்னர் தான், அதற்கான இலக்கணம் தோன்றியது. ஒரு குழந்தை அஞ்சல் வழி மூலமாகவோ, பயிற்சி மையங்கள் மூலமாகவோ தமிழைக் கற்பதில்லை. தாயும் சுற்றத்தாரும் பேசும் சொற்களைக் கவனித்து, அதைத் திரும்பச் சொல்லிக் கற்கிறது.

அதுபோல, தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட குழந்தை முதலில் தமிழ் படிக்க வேண்டும். அதன் பின்னர்தான் அவர்களுக்கு அயல் மொழியைக் கற்பிக்க வேண்டும். அப்போதுதான், குழந்தைகளின் கற்றல் எளிதாக இருக்கும்.

கர்நாடக மாநிலத்தில் 5-ஆம் வகுப்பு வரை அவரவர் தாய்மொழியில் மட்டுமே கல்வி கற்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. 5-ஆம் வகுப்பு வரை ஆங்கில வழியில் பாடம் நடத்தத் தனியார் பள்ளிகளுக்கு கர்நாடக அரசு அனுமதி வழங்குவதில்லை. அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் ஒரு பாடம் ஆங்கிலமாக இருக்கும் இன்றைய நிலையில், ஆங்கிலத் தேர்வின்போது 35 மதிப்பெண்களுக்கான விடைகளை, பள்ளியில் உள்ள கரும்பலகைகளில் ஆசிரியர்கள் எழுதி, அதை விடைத்தாள்களில் எழுதுமாறு மாணவர்களுக்கு அறிவுறுத்துகின்றனர். இப்படித்தான், அரசுப் பள்ளி மாணவர்கள், ஆங்கிலப் பாடத்தில் "தேர்ச்சி' பெறுகின்றனர்!

ஆங்கிலப் பாடங்கள் உள்ளிட்ட எந்த பாடங்களையும் ஆசிரியர்கள் முறையாக நடத்தி முடிப்பதில்லை. போதிய வேலைநாள்கள் இல்லை என்று காரணம் கூறுகின்றனர். குறிப்பாக, ஆங்கிலப் பாடங்களில், பின் பகுதியில் வரும் இலக்கணம் உள்ளிட்ட பயிற்சிகளை நடத்துவதே இல்லை. இதை அரசும் கண்டுகொள்வதில்லை. நடைமுறையில் உள்ள ஆங்கிலப் பாடத்தை முறையாக நடத்துவதற்கான வழிவகைகளைச் செய்தாலே, அரசுப் பள்ளி மாணவர்கள் நல்ல ஆங்கில அறிவைப் பெறுவார்கள்.

அரசுப் பள்ளி மாணவர்களை ஆங்கிலத்தில் பேசவைப்பதற்காக, அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ், பெங்களூரில் உள்ள மத்திய அரசின், மண்டல ஆங்கிலக் கல்வி மையம் (தென்னிந்தியா) தயாரித்த "ஹலோ இங்கிலீஷ்' என்ற 20 பாடங்கள் கொண்ட காட்சி டிவிடி, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கும் வழங்கப்பட்டது. "சிம்ப்ளி இங்கிலீஷ்' என்ற சிடிக்களும் வழங்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பள்ளியிலும் அதைப் பயன்படுத்தி, பலனடைந்ததாகத் தெரியவில்லை. அரசும் கண்காணிக்கவில்லை.

ஆண்டுக்கொரு முறை, பணியிட மாற்றக் கலந்தாய்வு. வீட்டுக்கு அருகிலேயே பணி செய்யும் வாய்ப்பை அரசு வழங்குகிறது. அரசுத் தரப்பில் ஆசிரியர்களுக்கு எந்தக் குறையையும் வைக்கவில்லை. பாடத் திட்டத்திலும் எந்த குறையும் இல்லை. பாடத்தை நடத்தும் ஆசிரியர்களிடம்தான் குறை. அதனால், ஆசிரியர்களிடம்தான் மாற்றம் தேவை.

(ச.கார்த்திகேயன்-நன்றி-தினமணி)

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Thu Jun 06, 2013 5:45 pm

தன் குழந்தை வாய் நிறைய ஆங்கிலத்தில் பேசினால் பெற்றோர்கள் அவர்களின் பிறவிபயனை அடைந்துவிட்டாதாக நினைகின்றனர். இந்த ஒரு காரணம் தான் குழந்தைகளை ஆங்கில வழிகல்வி பாடசாலையில் சேர்பதற்கு காரணம்.மற்ற எந்த சரியான காரணங்களும் இல்லை.

உங்கள் குழந்தை அறிவாளியாக வளரவேண்டும் என்று உண்மையில் அக்கறை இருந்தால் குழந்தைகளை தமிழ்வழி கல்வியில் சேர்த்துவிடுங்கள். என் குழந்தை இங்கிலீஷ் பேசுகிறது என்று பந்தா பண்ணுவதற்கு உங்கள் குழந்தைகளை ஆங்கிலவழி பள்ளிகளில் சேர்த்து பலிகட ஆகாதீர்கள். வெளிநாட்டில் பிச்சைகாரன் கூட இங்கிலீசில் தான் பேசுவான்.உங்கள் குழந்தைகளை இங்கிலீஷ் பேசும் பிச்சைகாரனாக மாற்றாதீர்கள்.

எந்த ஒரு குழந்தையும் வேற்று மொழிகளில் பயிற்றுவிக்கும் பாடங்களை முதல் தன் தாய்மொழி மூலம் தான் புரிந்து கொள்ளும். My Name is Saravanan என்று ஆங்கிலத்தில் சொன்னாலும் அதை கேட்கும் குழந்தை மனதில் "ஒ இவருடைய பெயர் சரவணன்" என்று தன் தாய்மொழியில் தான் உள்வாங்கிகொள்ளும். அதே போல் எந்த ஒரு செய்தியை எந்த மொழிகளில் சொன்னால் கூட முதலில் சொல்லபோகும் செய்தி தொகுப்பு தன் தாய்மொழியில் தான் மூளையை சென்றடையும்.அறிவை உள்வாங்குவது, சிந்திப்பது, செயல்படுத்துவது எல்லாமே அவரவர் தாய்மொழியில் தான் நடக்கும். இது தான் விதி.

செய்யபோகும் வேலைக்கு ஆங்கில புலமை அவசியம் தான் அதற்காக அதில் டாக்டர் பட்டம் வாங்க வேண்டிய அவசியம் இல்லை. மாணவர்கள் அவர்களுது கல்லுரிபடிப்பை படிக்கும் போது ஆங்கிலத்தில் பேசுவது எழுதுவது என்று தானாக வந்துவிடும். அப்படியும் இல்லையா ஒரு வருடம் சிறப்பு வகுப்பு மூலம் ஆங்கிலம் பேச சிறப்பு பயிற்சி கொடுங்கள் போதும். உங்கள் குழந்தை ஆங்கிலத்தில் கவிதை கட்டுரை எழுதியா சம்பாதிக்க போகுது, அப்புறம் ஏன் இந்த வெட்டி பந்தா?.

இப்படியே போய்கொண்டிருந்தால் ஒரு நாளில் தமிழன் சிந்திக்க தெரியாத மரமாகிவிடுவான்.



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jun 06, 2013 5:54 pm

முற்றிலும் உண்மை சரா! நாம் எளிதில் மற்ற மொழிகளைக் கற்றுக் கொள்ளலாம், ஆனால் மற்றவர்கள் நம் தமிழ் மொழியைக் கற்றுக் கொள்வதென்பது சுலபமானதல்ல.!



பன்மொழி பயில தாய்மொழியே அடித்தளம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக