புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm
» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm
» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm
» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm
» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm
» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am
» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm
» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm
» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm
» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm
» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm
» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am
» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
ayyamperumal |
| |||
Anitha Anbarasan |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
ayyamperumal |
| |||
Barushree |
| |||
Karthikakulanthaivel |
| |||
JGNANASEHAR |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழ்த்தாய் சிலை ஏன் வேண்டும்?
Page 1 of 1 •
தமிழக முதல்வர் மதுரையில் தமிழ்த்தாய் சிலையை அமைக்க உள்ளார்கள். இதற்காக நூறு கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. உலகிலேயே பிரம்மாண்டமான சிலையாக இது இருக்கும் என்று சொல்லப்படுகிறது. அமெரிக்காவிலுள்ள சுதந்திர தேவி சிலையை விட இது உயரமாகவும் இருக்கும். இந்தச் சிலையை இப்போது அமைப்பதினால் என்ன லாபம்? இந்தத் தமிழ்த்தாய் சிலையை அமைத்துவிட்டால் தமிழ் பார் எங்கும் பளிச்சிடுமா? என்றெல்லாம் பலர் கேட்கக் கூடும். ஆனால் இது மதுரையில் அமைய இருப்பதும், இந்தக் காலகட்டத்திற்கும் தேவையான ஒன்றுதான். வாழ்க்கை மாறிக் கொண்டிருக்கிற, கடந்து சென்று கொண்டிருக்கின்ற ஒரு காட்சி. இதில் சில நினைவுச் சின்னங்கள் எல்லாக் காலத்திற்கும் பேசக்கூடியதாக அமைகின்றன. அப்படி வருங்காலத்தில் அடுத்த தலைமுறை பெருமைப்பட்டுக் கொள்கிற சிலையாக இந்தத் தமிழ்த்தாய் சிலை இருக்கும் என்று நம்பலாம்.
இந்தச் சிலையை அமைப்பதால் பெரிதாக என்ன கிடைத்துவிடப் போகிறது? என்று சிலர் கேட்கலாம். திருவள்ளுவர் சிலையைக் கன்யாகுமரியில் அமைத்தோம்! அதனால் என்ன நன்மை கிடைத்ததோ அதைவிடப் பன்மடங்கு நன்மை இதனால் கிடைக்கும் என்பது திண்ணம். கன்யாகுமரியில் விவேகானந்தர் த்யான பாறையைப் பார்க்க வருகிற கூட்டம் திருவள்ளுவரையும் தரிசிக்கிறது. உயரமான திருவள்ளுவர் சிலை தமிழர்களின் சிற்பக் கலையைப் பறைசாற்றுவதாக அமைந்துள்ளது. அதுபோல இதுவம் தமிழர்களின் சிற்பக் கலையைத் தொழில்நுட்ப அறிவை உலகிற்கு எடுத்து இயம்பும். இந்தச் சிலையை, மதுரையில் அமைப்பதன் மூலம் சுற்றுலாவுக்கு வரும் வெளிநாட்டுவர்களும், உள்நாட்டவர்களும் கண்டுகளிக்க வாய்ப்புள்ளது. மதுரை மீனாட்சியம்மன் கோயில் உலகப் பிரசித்தி பெற்றது. திருமலைநாயக்கர் மகாலும் பார்ப்போரைப் பரவசப்படுத்தக் கூடியது. இந்தத் தமிழ்த்தாய் சிலை உலகிலேயே உயரமான சிலையாக இருக்கப் போவதால் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை மதுரையில் அதிகரிக்கக் கூடும். இதனால் நமது அந்நியச் செலாவணி இருப்பும் கூடுதலாக வாய்ப்புள்ளது.
உங்கள் உதடுகளை மூடிக் கொண்டு இதயத்தைத் திறந்த விடுங்கள். என்னால் இயலாது என்று எதற்கும் எப்போதும் சொல்லாதீர்கள். இல்லை என்று எப்போதும் மறுப்பு உரை சொல்லாதீர்கள். ஏனெனில் நீங்கள் வரம்பில்லா வலிமை பெற்றவர்கள். எதையும் சாதிக்கக் கூடிய சர்வ வல்லமை படைத்தவர்களாகிய உங்களுக்குத் தேவையானது எல்லாம் முயற்சி முயற்சி முயற்சிதான். இது சுவாமி விவேகானந்தரின் வைர வரிகள் இன்றைய தமிழக முதல்வரிடம் சாதித்துக் காட்டக் கூடிய வலிமை இருக்கிறது. சரியான திட்டமிடுதலும் பலமான முயற்சிகளும் அவரிடம் நிறையவே இருக்கின்றன. இந்தத் தமிழ்தாயை அமைப்பதன் மூலம் தாய்மொழி மீது நமக்கு ஓர் அக்கறை ஏற்படும். பிரும்மாண்டத்தை நம் கண்முன்னே காட்டி சிலையாக எழுப்பிக் காட்ட மேற்கொண்ட அவரது துணிச்சலைப் பாராட்ட வேண்டும்.
சுதந்திய தேவி சிலை அமெரிக்காவில் இருக்கிறது. இதை நிறுவும்போது இது தேவையில்லாதது என்று அன்றைய காலகட்டத்தில் நினைத்திருந்தால் உலகமே வியக்கும் கலைநயமிக்க சிலை இன்றைய தலைமுறைகளால் அடையாளம் காணப்பட்டு இருக்குமா? பிரான்ஸ் தேசம் நன்கொடையாக வழங்கிய சிலை என்றாலும் அதற்கு அன்றைய காலகட்டத்தில் கணக்குப் பார்த்து இருந்தால் இன்றைய அமெரிக்கர்கள் மட்டுமல்ல உலகமே சுதந்திர உணர்வுகளுடன் ஒரு சிலையை தரிசிக்கக் கூடிய வாய்ப்புக் கிடைத்திருக்குமா? இந்தச் சிலையைப் பார்க்க எத்தனையோ வெளிநாட்டவர்கள் வருகிறார்கள். அமெரிக்கா, பிரான்ஸ் இரண்டும் சிலை வடிவமைப்பதிலும் உயர்ந்து நிற்கிறது! என்று எத்தனை விமர்சனங்கள் எழுந்தன. அமெரிக்கர்களின் செவிகளில் பாராட்டுக்கள் தேனாக இனித்தன என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
அமெரிக்க நியூயார்க் துறைமுகத்தில் பத்தொன்பதாம் நூற்றாண்டில் நிறுவப்பட்ட இச்சிலையை (1886) வடிவமைத்தவர் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பிரெடரிக் ஆகுஸ்டெ பார்த்தோல்டி ஆவார். இன்று சர்வதேச ரீதியில் இச்சிலை நட்பையும், விடுதலையினையும், மக்களாட்சித் தத்துவத்தையும் வெளிக்காட்டும் சின்னமாகத் திகழ்கிறது. சிலையின் உயரம் 151 அடி.
இறைவனுடன் ஒன்றிணைந்துவிட்ட யோகி கருமத்தின் பலன்கள் மீதான பற்றினைத் துறந்து அசைக்க முடியாத அமைதியைப் பெறுகிறான். இறைவனுடன் ஒன்று இணையாத மானுடன் சைகளினால் ஆளப்படுகிறான். இவ்வகையான பந்தத்தினால் அவன் அடிமைத்தனத்தில் நீடித்திருக்கிறான் (பகவத்கீதை 5:12) என்று கிருஷ்ணபரமாத்மா அர்ஜுனனுக்கு உபதேசிக்கிறார். நட்புறவு, விடுதலை, எல்லோருக்கும் எல்லாம் வேண்டும் என்று நினைக்கிறபோது ஆசைகள் கட்டுப்பட்டு அமைதி கிடைக்கும் இதைச் சொல்லவந்த சுதந்திர தேவி சிலையைக் கண்குளிரப் பார்ப்பதைப்போல் நாளைய இளைஞர்கள் தாய்மொழி உணர்வுடன், இந்திய பாரம்பரியக் கலையின் எழுச்சியின் சின்னத்தை, அன்புதான் உலகம் என்று சொல்லும் தமிழ் இலக்கிய உள் ரகசியத்தை, யாதும் ஊரே யாவரும் கேளீர் என்ற உயர்ந்த தத்துவத்தைத் தமிழ்த்தாய் சிலையின் வடிவில் கண்டு மகிழ்வார்கள்.
உலகிலே÷ உயரமான முருகன் சிலை மலேசியா நாட்டிலுள்ள பத்துமலையில் தான் உள்ளது. இதன் உயரம் 140 அடி. இதன் கட்டுமானச் செலவு இந்திய ரூபாயில் சுமார் 4 கோடி ரூபாய். 2006ம் ஆண்டு திறப்பு விழா கண்ட இந்த முருகன் சிலை இன்று உலக இந்துக்களுக்குப் பெருமை சேர்க்கக் கூடியதாக இருக்கிறது. மலேசியாவுக்கு வருகிறவர்கள் இந்த முருகனைத் தரிசிக்காமல் செல்வது இல்லை. இந்தச் சிலையைப் பராமரிப்பதிலும் பெரிய சவால்கள் இல்லை. ஆனால் இந்தச் சிலையை நிறுவியபோது எதிர்ப்புகள் கிளம்பின. இவ்வளவு பெரிய சிலையைப் பாதுகாப்பது எளிதா? உடைந்து விழுந்துவிட்டால் பெரிய தெய்வக் குற்றம் ஏற்படாதா? என்றெல்லாம் சிலர் சொன்னார்கள். நவீனத் தொழில்நுட்ப உதவியுடன் 1550 கனமீட்டர் சிமெண்ட், 250 டன் எஃகு கம்பிகள் பயன்படுத்தப்பட்டு கம்பீரமாக நிற்கிற சிலையைப் பார்த்துப் பார்த்து பூரிக்காதவர்களே இல்லை. மலேசியா என்றதுமே இரட்டை கோபுரம் நினைவுக்கு வருவதுபோல் இந்தச் சிலையும்தான் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது. அழகாகப் பாதுகாக்கப்படுவதாலும் தங்கக் கலவையுடன் மின்னுவதாலும் உலக சாதனைப் புத்தகத்திலும் இச்சிலை இடம் பிடித்துள்ளது மட்டுமல்ல உலகத்தவர் மத்தியில் தமிழ்க் கடவுளுக்கு உரிய சிறப்பையும் காட்டுகிறது. இதுபோலத்தானே பிரும்மாண்டமாக அமையவுள்ளது தமிழ்த்தாய் சிலை. இதைவிட உயரமாக பாதுகாப்பான பீடங்களுடன் எழுந்து நிற்கும்போது உலகமே தமிழகத்தைத் திரும்பிப் பார்க்குமே?
நமது கட்டிடக் கலையும் சிற்பக்கலையும் உலகமே பாராட்டத்தக்கதாகத்தானே கடந்த காலங்களிலும் இருந்து வந்திருக்கிறது. தமிழ் இலக்கிய நூல்களில் பேருண்மைகள், நிகழ்வுகள், நீதிமுறைகள், ஒழுக்கக் கோட்பாடுகள், பண்பாட்டு நெறிகள், குடும்ப, சமுதாய இயல் வகைகள் போன்றவை பற்றியெல்லாம் வெறும் வறட்டுச் செய்திகளாவே அமைந்துவிடவில்லை. நம்பிக்கைகள், அறிவியல் உண்மைகள், புராணக் கதைகள், நிதர்சனமான எடுத்துக்காட்டுகள், சிறந்த கற்பனைகள் ஆகியவற்றையும் ஆங்காங்கே தமிழ் இலக்கியங்களில் காணமுடிகிறது. மதுரையில் தமிழ்த்தாய் சிலையை ஒட்டி அமைக்கப்படும் கோட்டத்தில் அறிவு சார்ந்த அறிவியல் சார்ந்த வாழ்க்கை நெறிமுறைகளைத் தமிழர்களின் பண்பாட்டு முறைகளை விளக்கி ஓவியம் வைக்கலாம். ஒலி - ஒளிக் காட்சியை நவீனத் தொழில்நுட்பத்துடன் அமைக்கலாம்.
சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழன் சிற்பக் கலையில் சிறந்து நின்றவன். நவீன இயந்திரங்கள் இல்லாத அந்தக் காலகட்டத்தில் உயர்ந்த கோபுரத்துடன் தஞ்சை பிரகதீசுவரர் கோவிலைக் கட்டினான் ராஜராஜ சோழன். தமிழருடைய பெருமையைப் பறைசாற்றும் உயரமான கோபுரத்தைக் கொண்ட கோவில் இது. புவனேஸ்வரத்தில் (ஒரிசா) கட்டப்பட்ட லிங்கராஜா கோயிலின் உயரம் 160 அடி. இராஜ ராஜேஸ்வரம் கர்ப்ப கிரகத்திலிருந்து 190 அடி. யாளி உருவங்களுடன் பலவிதச் சிற்பங்களுடன் காட்சி தரும். இராஜ ராஜேஸ்வரம் உலக அதிசயம் மட்டுமல்ல தமிழனின் தொழில் நுட்பத் திறமைக்கு அத்தாட்சி. இன்றும் ராஜராஜ சோழனை நாம் பாராட்டி மகிழ்கிறோம் என்றால் அவன் சாதித்துக் காட்டிய இந்தக் கோவில்தான் காரணம். “நேற்றைய கலைவடிவங்கள் தான் நாளைய சரித்திரச் சான்றுகள்’ என்றார் தாகூர். தமிழ்த்தாய் சிலையும் நாளைய சரித்திரச் சான்றாய் என்றும் தமிழ் சமுதாயத்திடம் பாராட்டப்படக் கூடியதாக விளங்கும்.
பாரதத்தில் அதிக அளவில் கல்வெட்டுக்கள் காணப்படுவது தமிழகத்தில்தான். தமிழ் இலக்கியச் சான்றும் உ.வே.சாமிநாதய்யரால் ஓடி ஓடித் தேடிச் சென்று கண்டுபிடிக்கப்பட்டவை. தமிழ் இனம் யாருக்கும் நாகரிகம், பண்பாடு, மொழி ஆளுமை இவைகளில் குறைந்தது இல்லை. பண்டைய கிரேக்கம், ரோம், எகிப்து, சீனம் ஆகிய நாட்டு வரலாற்று இலக்கியங்களிலும் தமிழைப் பற்றிய செய்திகள் காணப்படுகின்றன. அடையாளச் சின்னங்களை உலகிற்குக் காட்டினால்தான் தமிழ் இனம் சாதாரண இனமல்ல என்கிற எண்ணம் உலகத்தாருக்கு ஏற்படும். மதுரை சங்க இலக்கியத்திற்கு மட்டுமல்ல மூன்று சங்கங்களை கண்ட மாநகரமாகும். நீதி தவறாமல் பாண்டியன் ஆட்சி செய்த நான்மாடக் கூடலாகும். முதல் தமிழ்ச் சங்கத்திற்குத் தலைமை தாங்கிய சிவபெருமான் திருவிளையாடலை அரங்கேற்றிய இடமாகும். தொல்காப்பியம் தமிழ் ஆதி இலக்கண நூலாக இன்று நம்மிடம் உள்ளது. தொல்காப்பியரின் குரு தமிழ்முனி, அகத்தியம் தந்த குள்ளமுனி அகத்தியர் பாண்டிய நாட்டு மலைகளில் வசித்த பனிதச் செய்தியையும் அறிகிறோம். சிறப்புப் பெற்ற பாண்டிய நாட்டில் தமிழ்த் தாய்க்கும் சிலை அமைவதில் தப்பில்லை. உலகச் சிலைகளிலேயே வித்யாசமாய் மற்ற சிலைகளை விட எல்லாம் கலை நுணுக்கத்துடன் பிரும்மாண்டமாய் பொருள் பொதிந்து அமையும் சிலையை மதுரையில் வைப்பது சாலப் பொருத்தம்தான்.
தமிழர்கள் தமிழகத்திலேயே பிறந்த ஆதிகுடிகள் என்பது லெமூரியக் கொள்கையினரின் முடிவு. விந்திய மலைத் தொடருக்கு வடக்கே பரந்து கிடக்கும் கங்கையாற்று வெளியும், இமயமலைத் தொடரும் முன்னொரு காலத்தில் கடலுக்குள் மூழ்கிக் கிடந்தன. இமயமலைத் தொடரில் ஆங்காங்கே கடல்வாழ் உயிர்களின் எலும்புகள் காணப்படுவதே இதற்குப் போதிய சான்றாகும். வட இந்தியா கடலுக்குள் மூழ்கிக் கிடந்த அக்காலத்தில் தென்னிந்தியாவானது காடும் மலையும் செறிந்து மக்களினமும் ஏனைய உயிர் வகைகளும் வாழ்வதற்கு ஏற்ற இடமாக விளங்கிற்று என்பதையும் அறிகிறோம். இது ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்னர் நடந்திருக்க வேண்டும் என்று புவியியலார் கருதுகின்றனர்.
லெமூரியக் கண்டத்தில் வாழ்ந்த மக்களின் வழிவந்தவர்கள் இப்போது தென் இந்தியாவிலும், இலங்கையிலும், கிழக்கிந்திய தீவுகளிலும் வாழ்ந்து வருகின்றார்கள். இவர்களிடம் இனவொற்றுமை, உடல்கூறு ஒற்றுமை, மொழி அமைப்பு ஒற்றுமை ஆகியவை காணப்படுகின்றன. இப்படி டாக்டர் கே.கே. பிள்ளை அவர்களின் தமிழக வரலாற்று நூல் மூலம் அறிகிறோம். ஆனால் இதை ஆமோதிக்காதவர்களும் உண்டு. காரணம் கல்வெட்டு, நினைவுச் சின்னம், மெய்கீர்த்திகள், நாணயம் போன்றவை ஏதோ ஒரு விதத்தில் ஓர் இடத்தில் அமைந்தால்தான் பல நூறாண்டுகளுக்குப் பிறகு அறிவியல் ரீதியாக ஓர் இனம் ஒரு மொழியின மக்கள் ஓர் இடத்தில் வாழ்ந்தார்கள் என்பதை நிலைநாட்ட முடியும். அந்த வகையில் பார்த்தால் தமிழ் வளர்த்த, சங்கம் வளர்த்த மதுரையில் தமிழ்தாய்க்கு பிரும்மாண்டமான சிலை அமைவது காலா காலத்திற்கும் ஏற்புடையதாக இருக்கும். உலக மக்களின் பார்வையை இச்சிலை அமைப்பதன் மூலம் தமிழகத்தின் பக்கம் திருப்ப வேண்டும்.
- கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![தமிழ்த்தாய் சிலை ஏன் வேண்டும்? Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|