புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உயிர் கொண்ட சிலை ஒன்று  (கற்பனைக் கவிதைகள்) Poll_c10உயிர் கொண்ட சிலை ஒன்று  (கற்பனைக் கவிதைகள்) Poll_m10உயிர் கொண்ட சிலை ஒன்று  (கற்பனைக் கவிதைகள்) Poll_c10 
62 Posts - 42%
heezulia
உயிர் கொண்ட சிலை ஒன்று  (கற்பனைக் கவிதைகள்) Poll_c10உயிர் கொண்ட சிலை ஒன்று  (கற்பனைக் கவிதைகள்) Poll_m10உயிர் கொண்ட சிலை ஒன்று  (கற்பனைக் கவிதைகள்) Poll_c10 
46 Posts - 31%
mohamed nizamudeen
உயிர் கொண்ட சிலை ஒன்று  (கற்பனைக் கவிதைகள்) Poll_c10உயிர் கொண்ட சிலை ஒன்று  (கற்பனைக் கவிதைகள்) Poll_m10உயிர் கொண்ட சிலை ஒன்று  (கற்பனைக் கவிதைகள்) Poll_c10 
9 Posts - 6%
prajai
உயிர் கொண்ட சிலை ஒன்று  (கற்பனைக் கவிதைகள்) Poll_c10உயிர் கொண்ட சிலை ஒன்று  (கற்பனைக் கவிதைகள்) Poll_m10உயிர் கொண்ட சிலை ஒன்று  (கற்பனைக் கவிதைகள்) Poll_c10 
6 Posts - 4%
வேல்முருகன் காசி
உயிர் கொண்ட சிலை ஒன்று  (கற்பனைக் கவிதைகள்) Poll_c10உயிர் கொண்ட சிலை ஒன்று  (கற்பனைக் கவிதைகள்) Poll_m10உயிர் கொண்ட சிலை ஒன்று  (கற்பனைக் கவிதைகள்) Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
உயிர் கொண்ட சிலை ஒன்று  (கற்பனைக் கவிதைகள்) Poll_c10உயிர் கொண்ட சிலை ஒன்று  (கற்பனைக் கவிதைகள்) Poll_m10உயிர் கொண்ட சிலை ஒன்று  (கற்பனைக் கவிதைகள்) Poll_c10 
6 Posts - 4%
Raji@123
உயிர் கொண்ட சிலை ஒன்று  (கற்பனைக் கவிதைகள்) Poll_c10உயிர் கொண்ட சிலை ஒன்று  (கற்பனைக் கவிதைகள்) Poll_m10உயிர் கொண்ட சிலை ஒன்று  (கற்பனைக் கவிதைகள்) Poll_c10 
4 Posts - 3%
Guna.D
உயிர் கொண்ட சிலை ஒன்று  (கற்பனைக் கவிதைகள்) Poll_c10உயிர் கொண்ட சிலை ஒன்று  (கற்பனைக் கவிதைகள்) Poll_m10உயிர் கொண்ட சிலை ஒன்று  (கற்பனைக் கவிதைகள்) Poll_c10 
3 Posts - 2%
mruthun
உயிர் கொண்ட சிலை ஒன்று  (கற்பனைக் கவிதைகள்) Poll_c10உயிர் கொண்ட சிலை ஒன்று  (கற்பனைக் கவிதைகள்) Poll_m10உயிர் கொண்ட சிலை ஒன்று  (கற்பனைக் கவிதைகள்) Poll_c10 
3 Posts - 2%
Saravananj
உயிர் கொண்ட சிலை ஒன்று  (கற்பனைக் கவிதைகள்) Poll_c10உயிர் கொண்ட சிலை ஒன்று  (கற்பனைக் கவிதைகள்) Poll_m10உயிர் கொண்ட சிலை ஒன்று  (கற்பனைக் கவிதைகள்) Poll_c10 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உயிர் கொண்ட சிலை ஒன்று  (கற்பனைக் கவிதைகள்) Poll_c10உயிர் கொண்ட சிலை ஒன்று  (கற்பனைக் கவிதைகள்) Poll_m10உயிர் கொண்ட சிலை ஒன்று  (கற்பனைக் கவிதைகள்) Poll_c10 
182 Posts - 40%
ayyasamy ram
உயிர் கொண்ட சிலை ஒன்று  (கற்பனைக் கவிதைகள்) Poll_c10உயிர் கொண்ட சிலை ஒன்று  (கற்பனைக் கவிதைகள்) Poll_m10உயிர் கொண்ட சிலை ஒன்று  (கற்பனைக் கவிதைகள்) Poll_c10 
177 Posts - 39%
mohamed nizamudeen
உயிர் கொண்ட சிலை ஒன்று  (கற்பனைக் கவிதைகள்) Poll_c10உயிர் கொண்ட சிலை ஒன்று  (கற்பனைக் கவிதைகள்) Poll_m10உயிர் கொண்ட சிலை ஒன்று  (கற்பனைக் கவிதைகள்) Poll_c10 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
உயிர் கொண்ட சிலை ஒன்று  (கற்பனைக் கவிதைகள்) Poll_c10உயிர் கொண்ட சிலை ஒன்று  (கற்பனைக் கவிதைகள்) Poll_m10உயிர் கொண்ட சிலை ஒன்று  (கற்பனைக் கவிதைகள்) Poll_c10 
21 Posts - 5%
prajai
உயிர் கொண்ட சிலை ஒன்று  (கற்பனைக் கவிதைகள்) Poll_c10உயிர் கொண்ட சிலை ஒன்று  (கற்பனைக் கவிதைகள்) Poll_m10உயிர் கொண்ட சிலை ஒன்று  (கற்பனைக் கவிதைகள்) Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
உயிர் கொண்ட சிலை ஒன்று  (கற்பனைக் கவிதைகள்) Poll_c10உயிர் கொண்ட சிலை ஒன்று  (கற்பனைக் கவிதைகள்) Poll_m10உயிர் கொண்ட சிலை ஒன்று  (கற்பனைக் கவிதைகள்) Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
உயிர் கொண்ட சிலை ஒன்று  (கற்பனைக் கவிதைகள்) Poll_c10உயிர் கொண்ட சிலை ஒன்று  (கற்பனைக் கவிதைகள்) Poll_m10உயிர் கொண்ட சிலை ஒன்று  (கற்பனைக் கவிதைகள்) Poll_c10 
8 Posts - 2%
Guna.D
உயிர் கொண்ட சிலை ஒன்று  (கற்பனைக் கவிதைகள்) Poll_c10உயிர் கொண்ட சிலை ஒன்று  (கற்பனைக் கவிதைகள்) Poll_m10உயிர் கொண்ட சிலை ஒன்று  (கற்பனைக் கவிதைகள்) Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
உயிர் கொண்ட சிலை ஒன்று  (கற்பனைக் கவிதைகள்) Poll_c10உயிர் கொண்ட சிலை ஒன்று  (கற்பனைக் கவிதைகள்) Poll_m10உயிர் கொண்ட சிலை ஒன்று  (கற்பனைக் கவிதைகள்) Poll_c10 
7 Posts - 2%
mruthun
உயிர் கொண்ட சிலை ஒன்று  (கற்பனைக் கவிதைகள்) Poll_c10உயிர் கொண்ட சிலை ஒன்று  (கற்பனைக் கவிதைகள்) Poll_m10உயிர் கொண்ட சிலை ஒன்று  (கற்பனைக் கவிதைகள்) Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உயிர் கொண்ட சிலை ஒன்று (கற்பனைக் கவிதைகள்)


   
   
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Tue Jun 11, 2013 12:56 pm

உயிர் கொண்ட சிலையொன்று

செந்தமிழில் இசைப்பாட்டெழுதி வைத்துச்
சித்திர மாடம் சென்றேன் - அங்கு
வண்ணம் இழைத்தநல் லோவியங்களிடை
வார்த்த சிலைகள் கண்டேன்
சுந்தரமாய்ப் பலசித்திர ரூபங்கள்
சேர்ந்த அழகிடையே - எந்தன்
சிந்தனையில் கவிகொண்ட உருவத்தை
செய்ய உளி எடுத்தேன்

சந்தமெழக் கவிசொல்லிச் சிலை செய்து
சித்திரமாடம் வைத்தேன் - அதில்
தந்த எழில்மேனி கொண்ட நங்கையவள்
தன்னை வடித்தெடுத்தேன்
விந்தை முகமதில் கொண்ட விழிகளில்
வேதனை தோன்றிடவே - அது
எந்தமுறைமையோ சந்தண மென்முகம்
குங்கும மானதென்ன

வெண்ணிலவும் குளிர் வீசும் இரவிடை
வியர்வை முத்தெழவும் - அவள்
கண்ணழகில் கருவண்டு துடிப்பெண்ணி
கைகள் கொண்டே கலைத்தேன்
எண்ண அதிசயம் அங்கவளின் இதழ்
எள்ளி நகைப்பது போல் - நல்ல
வண்ண உதடுகள்: வார்த்தையின்றி யொரு
புன்னகை பூத்ததடா

மூங்கில் வனத்திடை தீயெழுந்த வகை
மேனி எரிந்திருக்க -அவள்
தூங்கும் குழல் தனில் பூவிருந்தே எழில்
தேங்கிடச் செய்ததடா
மாங்கனிக் கன்னம் சிவந்ததனால் உயிர்
மாதெனத் தோன்றியதும் -அவள்
பூங்கை இரண்டினில் பூத்தமலர் கொண்ட
புத்தெழில் கண்டுநின்றேன்

ஆங்கே அவளென்னை அன்புடன்மேவிய
ஆந்தை விழியிரண்டால் - நல்ல
பாங்குடனே எந்தன் பக்கமணைந்திடும்
பாவனை கொண்டிருந்தாள்
வாங்கு மதியொளி வார்த்த முகமதில்
வாஞ்சையுடன் சிரித்தே - அந்த
ஏங்குமிளமதி ஏந்திழையாள் கரம்
ஏந்திய மாலையிட்டாள்

பொன்னெழிலாள் மகள் மேனி நளினமும்
பூங்கொடி தென்றல்தொட - அந்த
மன்னன் அரண்மனை மாடத்திலே மின்னும்
மாவிளக்கின் ஒளியில்
முன்னும் பின்னும் அசைந்தாடும் அழகுடன்
மோகினி ஆடிநின்றாள் - இது
என்ன விநோதமென் கண்கள் வியந்திட
எண்ணம் மயங்கி நின்றேன்

சொல்லத் தெரியவு மில்லை அவள்கொண்ட
செய்கையும் அன்பெழவே -அந்த
நல்ல மனதெழு நங்கைதனை இது
வென்னவென்றே வினவ
சில்லெனு மோடைக் குளிர்பரவ நல்ல
செந்தமிழ்ச் சொல்பவரே - இந்தக்
கல்லை கனிந்திட காணும் வகையின்னும்
சொல்லு கவிதைஎன்றாள்

நில்லாய்நீ யுமெந்தன் கையில் உருக்கொண்ட
கன்னிச் சிலையல்லவோ - இந்த
வல்லமை கொண்டுயிர் தந்தது யாரெனும்
வண்ணம் அறியவுள்ளேன்
சொல்லு என்றேன் அவள் சுந்தரியோ ஒரு
சின்ன நகைஉதிர்த்து - விந்தை
அல்ல அல்ல இந்தகல்லும் உயிர்பெரும்
நற்தமிழ் பாவிலென்றாள்

*********************


kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Tue Jun 11, 2013 1:00 pm

உன்னை அறிவோமோ ?


அம்மையவள் அப்பனோவென் றறியேன் - எனையீந்த
ஆதாரத் தீயினுரு காணேன்
செம்மையதோ வெண்ணொளியோ தெரியேன் - அண்டமதில்
சீறியுமிழ் தீக்குழம்பின் வகையென்
இம்மைதனை இவ்வுலகில் கண்டேன் - இங்குதனும்
இருக்குமிடம் ஏதறியா தலைந்தேன்
எம்மையெது காரணியோ வைத்தாள் - இவ்வுலகில்
எல்லையற்ற பாசத்துள் பிணைத்தாள்

பெற்றவளும் தன்வயிற்றில் கொண்டே - மாதமென்ப
பத்துவரை சென்றலைந்து ஈந்தாள்
கற்றுவரக் கல்விபயில் கூடம் - காட்டியும்பின்
காணுலகில் கடமையறி வீந்தாள்
விற்றும்பல நன்மையொடு தீமை - வாங்கியதில்
வேடிக்கைகாண் விதியினோடு கூடி
உற்றதென்ன துயர்நிறைந்த வாழ்க்கை - முடிவிலிங்கு
உள்ளதென்ன வீணுழன்ற யாக்கை

மண்ணுடலில் மாயசக்தி ஏற்றம் - இறுதிவரும்
மரணமென்னும் மின்னுணர்ச்சி நீக்கம்
எண்ணமெனும் புரிந்திடாத அலைகள் - அவையுமீற்றில்
எங்குசென்று முடியுமென்னும் இருள்கள்
வண்ணம், இருள் வார்த்துசெய்த உலகம் - ஓடிக்கண்ட
வானஜோதி சூரியன் குடும்பம்
கண்ணெதிரில் கலைந்துபோகு மோர்நாள் - நாமுமங்கு
காணுபவை மீதமென்ன சூன்யம்

பெண்ணுருவாம் பிரபஞ்சத் தாயே - நீயும்வானில்
புன்னகைத்து நிற்பதெங்கு கூறேன்
உண்மைதனை வேலியிட்டு மூடி - இவ்வுலகை
உருளவைத்த மாயமென்ன கூறு
விண்ணிலொளி வீசவிட்டுப் பொய்மை - கொண்டதான
வெற்றுநீல நீள்திரையும் போட்டாய்
கண்ணெதிரே நீயிருக்கும் தோற்றம் - நாமதனைக்
காணுமொரு ஞானமதைத் தா தா

**************

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Tue Jun 11, 2013 1:02 pm

3. இயற்கையின் காதலன்


நீலவிதானத்து மேகத்தில் பொற்துகள்
நாணிக் கண் கூசலென்ன - எழில்
கோலமுகத்துடை வெண்ணிலவு என்னைக்
கொஞ்சிக் களிக்கையிலே
காலமிட்ட விதி காற்றுவந்தே என்னைக்
கட்டித் தழுவுகையில் - இந்த
ஞாலமிட்ட சதி நள்ளிரவுக் குளிர்
நம்மைப் பிரிப்பதென்ன

ஆழியிட்ட அலை ஓடிவந்து என்னை
ஆசையுடன் தழுவி - சில
நாழிவிட்டு என்ன ஆனதுவோ மனம்
நோகவிட் டோடலென்ன
தோளைத் தொட்டு முகில் தூவும்மழை எனைத்
தொட்டு சுகம்மளிக்க - அந்த
வாளின் வெட்டு எனமின்னல்வந்து கொண்ட
வஞ்சம் பிரிப்பதென்ன

போம் வழியே எனைப்போற்றி மலர்தரு
பூக்கள் சொரிந்து நிற்க - ஒரு
பாம்புவந்தே நடுப் பாதைநின்று எனைப்
பார்த்து சினப்பதென்ன
தீம்பழங்கள் கிளை தூங்குவன எனைத்
தின்னென்று காத்திருக்க - ஒரு
பூம்பொதியாம் அணில் பொல்லா மனங்கொண்டு
போய்எச்சில் செய்வதென்ன

துள்ளும்கயல் பொழில் தூங்கும் மலர்தனைத்
தொட்டுத் திரியுமலை - இன்னும்
வெள்ளிமலை அதன் வீரமென்னும் திடம்
வைத்திருக்கும் கடுமை
தள்ளி முகில் நடைசெய்யும்வானின்வெளி
தங்கரத சுடரும் -பெரும்
கள்ளினை கொள்மலர் கன்னி இயற்கையின்
காதலன் நானேயன்றோ

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக