புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈராயிரம் ஆண்டுகளானாலும் இன்றைக்கும்....!!! Poll_c10ஈராயிரம் ஆண்டுகளானாலும் இன்றைக்கும்....!!! Poll_m10ஈராயிரம் ஆண்டுகளானாலும் இன்றைக்கும்....!!! Poll_c10 
7 Posts - 64%
heezulia
ஈராயிரம் ஆண்டுகளானாலும் இன்றைக்கும்....!!! Poll_c10ஈராயிரம் ஆண்டுகளானாலும் இன்றைக்கும்....!!! Poll_m10ஈராயிரம் ஆண்டுகளானாலும் இன்றைக்கும்....!!! Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
ஈராயிரம் ஆண்டுகளானாலும் இன்றைக்கும்....!!! Poll_c10ஈராயிரம் ஆண்டுகளானாலும் இன்றைக்கும்....!!! Poll_m10ஈராயிரம் ஆண்டுகளானாலும் இன்றைக்கும்....!!! Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஈராயிரம் ஆண்டுகளானாலும் இன்றைக்கும்....!!! Poll_c10ஈராயிரம் ஆண்டுகளானாலும் இன்றைக்கும்....!!! Poll_m10ஈராயிரம் ஆண்டுகளானாலும் இன்றைக்கும்....!!! Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
ஈராயிரம் ஆண்டுகளானாலும் இன்றைக்கும்....!!! Poll_c10ஈராயிரம் ஆண்டுகளானாலும் இன்றைக்கும்....!!! Poll_m10ஈராயிரம் ஆண்டுகளானாலும் இன்றைக்கும்....!!! Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
ஈராயிரம் ஆண்டுகளானாலும் இன்றைக்கும்....!!! Poll_c10ஈராயிரம் ஆண்டுகளானாலும் இன்றைக்கும்....!!! Poll_m10ஈராயிரம் ஆண்டுகளானாலும் இன்றைக்கும்....!!! Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
ஈராயிரம் ஆண்டுகளானாலும் இன்றைக்கும்....!!! Poll_c10ஈராயிரம் ஆண்டுகளானாலும் இன்றைக்கும்....!!! Poll_m10ஈராயிரம் ஆண்டுகளானாலும் இன்றைக்கும்....!!! Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
ஈராயிரம் ஆண்டுகளானாலும் இன்றைக்கும்....!!! Poll_c10ஈராயிரம் ஆண்டுகளானாலும் இன்றைக்கும்....!!! Poll_m10ஈராயிரம் ஆண்டுகளானாலும் இன்றைக்கும்....!!! Poll_c10 
8 Posts - 2%
prajai
ஈராயிரம் ஆண்டுகளானாலும் இன்றைக்கும்....!!! Poll_c10ஈராயிரம் ஆண்டுகளானாலும் இன்றைக்கும்....!!! Poll_m10ஈராயிரம் ஆண்டுகளானாலும் இன்றைக்கும்....!!! Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ஈராயிரம் ஆண்டுகளானாலும் இன்றைக்கும்....!!! Poll_c10ஈராயிரம் ஆண்டுகளானாலும் இன்றைக்கும்....!!! Poll_m10ஈராயிரம் ஆண்டுகளானாலும் இன்றைக்கும்....!!! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஈராயிரம் ஆண்டுகளானாலும் இன்றைக்கும்....!!! Poll_c10ஈராயிரம் ஆண்டுகளானாலும் இன்றைக்கும்....!!! Poll_m10ஈராயிரம் ஆண்டுகளானாலும் இன்றைக்கும்....!!! Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
ஈராயிரம் ஆண்டுகளானாலும் இன்றைக்கும்....!!! Poll_c10ஈராயிரம் ஆண்டுகளானாலும் இன்றைக்கும்....!!! Poll_m10ஈராயிரம் ஆண்டுகளானாலும் இன்றைக்கும்....!!! Poll_c10 
3 Posts - 1%
வேல்முருகன் காசி
ஈராயிரம் ஆண்டுகளானாலும் இன்றைக்கும்....!!! Poll_c10ஈராயிரம் ஆண்டுகளானாலும் இன்றைக்கும்....!!! Poll_m10ஈராயிரம் ஆண்டுகளானாலும் இன்றைக்கும்....!!! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈராயிரம் ஆண்டுகளானாலும் இன்றைக்கும்....!!!


   
   
sundaram77
sundaram77
பண்பாளர்

பதிவுகள் : 94
இணைந்தது : 19/01/2012

Postsundaram77 Sun May 26, 2013 7:57 am



நண்பர்களே,
சங்க இலக்கியம் பெரும்பாலும் சாதாரணமக்களையும் அவர்களின் வாழ்க்கையையும் சித்தரிக்கும்
ஒப்பற்ற இலக்கியம் ஆகும் . சங்ககாலத்தின் துவக்க நிலையிலையே இயற்கையின் உன்னதம்
அறியப்பட்டு பெரிதும் போற்றப்பட்டது ; வணங்கப்பட்டது !

மேலும் நற்சிந்தனைகளும் உயர்வான நெறிமுறைகளும் அச்சமூகத்தில்
பொங்கும் ஊற்றென வெளிப்படலாயின ;
இவற்றின் காப்பாளார்களாக சான்றாண்மை மிக்க பெரும்புலவர்கள் அமைந்தனர் . அவர்கள் அள்ளித்தந்தக்கருத்துச் செல்வம் இன்றைய வாழ்க்கைக்கும் ஏற்றவையாய் இருப்பது வியப்புதான் !
இப்படியானப் பாடல்களில் சிலவற்றையேனும் சொல்லவேண்டும் எனும் என் அவாவே இவ்விடுகைக்குக் காரணம் !

இந்தப்பாடல் நமக்காகவே பாடப்பட்டுள்ளது போல் தெரிகிறது...!
நாம் எப்போதும் சொன்னதைச் 'செய்வதும்' , ' செய்வதை'ச் சொல்லும் சத்தியப்புத்திரர்கள் அல்லவா !
போகட்டும்...

இன்றைய நிலை என்ன ? எந்த அலுவலும் ஒரு சிபாரிசை நாடியே நடத்திட இயலும் எனும் அவலம் !
' திருமிகு சென்னைப்' பட்டணத்திற்கு அந்தக் காலத்தில் ஆம்னி பஸ்கள் எல்லாம் இல்லை. ஆனால் இப்போதோ
ஒரு நாளைக்கு சென்னை செல்லும் பயணிகளில் பாதிப்பேர் ஒருவரின்
பரிந்துரை ( சிபாரிசுதான் - வேறென்ன ? )க்கு
பயணிப்பவர்களே...! இவர்களில் பெரும்பாலோர்க்கு வெட்டியான அலைச்சலும் ,
பணச்செலவும் , துயரமும் தான் மிஞ்சும்!?
இவை யாவுக்கும் காரணம் இதுவெனப் பலர் அறியார் ! ஆனாலும் ஒரு தமிழ்ப் பெரும் புலவனுக்கு இது தெற்றென விளங்கியிருக்கிறது...
அவன் சொல்கிறான் : முடியாததை அல்லது முடிக்க மனம் இல்லாத ஒரு செய்கையினை முடிப்பேன் எனக் கூறிக்
கொள்ளலும் , முடியக்கூடியதை ஒருவன் வேண்டும்போது , அதை முடிக்க இயலாது என இறுக்கஞ் செய்வதும்
இரப்போரை - நம் காலத்தில் ஒரு சிபாரிசு எனக் கொள்வோமே - அலைக்கழிக்கச் செய்தலே பெருங் காரணம் ;
இச்செயல் அவர்களின் புகழைக் குறைக்கவே செய்யும் என்றும் மேலும் கூறுகின்றான் .

ஒல்லுவது ஒல்லும் என்றலும், யாவர்க்கும்
ஒல்லாது இல்லென மறுத்தலும், இரண்டும்,
ஆள்வினை மருங்கின் கேண்மைப் பாலே;
ஒல்லாது ஒல்லும் என்றலும், ஒல்லுவது
இல்லென மறுத்தலும், இரண்டும், வல்லே;
இரப்போர் வாட்டல் அன்றியும், புரப்போர்
புகழ்குறை படூஉம்



அப்புலவன் இப்பாடலைத் துவங்கும்போதே நடைமுறைக்குப் பெரிதும் ஒவ்வும் ஞானபோதனையுடன் ஆரம்பிக்கிறான்.
' ஒருவரால் இயலக்கூடிய செயலை இகலும் எனப்பகர்தலும் ...அதேபோன்று , ஒருவர்க்கு இயலாத ஒரு
வினையை 'இயலாது இச்செயல்' என உண்மை நிலை உரைத்தலும் மேலாண்மைப் பண்புகளே ஆகும் என்கிறான் .

இப்பாடலை யாத்தவன் ஆவூர் மூலங்கிழார் என்பான் . இவ்வறவுரையை யாருக்குச் சொல்கிறான் தெரியுமா , நண்பர்களே - நன்மாறன் எனும் பாண்டிய மன்னனுக்கு...
அறவுரை இருக்கட்டும் ...
சான்றாண்மையும் பெருந்தன்மையும் மிக்க இவனின் இன்னொரு பக்கத்தைப் பார்ப்போமா !
அப்பாடலில் அவன் மேலும் சொல்கிறான் :
' என் போன்றோர்க்கு எக்காலத்திலும் உன் முன்னோர்கள் செய்ய நினைக்கா இவ்வலைக்கழிப்பை
நீ எனக்குச் செய்தலால் உனக்கு நேர்கின்ற பழி உன் மக்கள் மீது விழாது இருக்கட்டும் ; அவர்கள் நோயின்றி வாழட்டும் ' என நெஞ்சார வாழ்த்துகிறான் ;

அதனால்,
நோயிலர் ஆகநின் புதல்வர்


அம்மட்டோ ?!
தனக்கு ஈனாத நன்மாறனின்
எதிர்வரும் நாட்களும் சிறப்பாக இருக்க வேண்டுகிறான் !

சிறக்க, நின் நாளே!


எவ்வளவு உயரிய நெஞ்சம் ! எவ்வளவு உயரிய வாழ்க்கை நெறிமுறை அப்பெரும் புலவனுக்கு கைவரப்பெற்றிருக்கிறது !!
தன் தாழ் நிலையை முற்றிலும் மறந்து அடுத்தவன் - அதுவும் தனக்கான கௌரவத்தை மறுக்கும் ஒருவனது - உயர்நிலையை விரும்பும் அவனை எங்கே இருத்துவது !

தன் இல்லத்தைப் பற்றியும் இல்லக்கிழத்தியைப் பற்றியும் அவன் கூறுவது கல்லையும் உருக்கும் ;
ஆனால் ,அப்பாண்டிய மன்னனை இவ்வவலம் உருக்கவில்லையே...!?

யானும்,
வெயிலென முனியேன், பனியென மடியேன்,
கல்குயின் றன்னஎன் நல்கூர் வளிமறை,
நாணலது இல்லாக் கற்பின் வாணுதல்
மெல்லியல் குறுமகள் உள்ளிச்
செல்வல்


வெளியே மழை கொட்டும்போது அம்மழை வீட்டிலுள்ளும் கொட்டுமாம் ; வெயிலையோ , பனியையோ அது தடுக்காதாம் ;
காற்றை மட்டிலும் இலேசாக அடைக்குமாம் ; கல்லில் ஆன அவ்வீட்டில் கல்லைப்போல் இறுக்கமாய் இருப்பது வறுமை மட்டும்தானாம் !!!

ஆயினும் அவன் இல்லக்கிழத்தி இறுகியவள் அல்லள் - மெல்லிய சாயல் உள்ளவளாக்கும் ; அவளின்
நெற்றியில் காணும் ஒளி அவளின் அறிவொளியாக்கும் ; மிக்க கற்புடையவள் ! அவளது ஒரேயொரு
அணிகலன் அவளது நாணம் மட்டுமே ; பெரும் பரிசிலோடு வருவேன் என நினைத்துக்கொண்டிருப்பாள் ;
அவளை உள்ளிச் செல்கிறேன் !
என முடிக்கிறான் தன் கவிதையை...!!

கொடிது , கொடிது வறுமை கொடிதென்றாள் , அவ்வை பிராட்டி ; ஏனெனில் , மனித மாண்புகளை முற்றாகத் தகர்க்க வல்லது அது !
ஆயினும் இத்தமிழ்ப் புலவனிடம் அவ்வறுமைகூட தோற்றோடுகிறதே...!
வறுமையின் வாட்டத்திலும் அவனின் மனப்பக்குவமும் மாண்பும் எண்ணி எண்ணி வியப்புறக்கூடியதல்லவா...

முழுப்பாடல் :

ஒல்லுவது ஒல்லும் என்றலும், யாவர்க்கும்
ஒல்லாது இல்லென மறுத்தலும், இரண்டும்,
ஆள்வினை மருங்கின் கேண்மைப் பாலே;
ஒல்லாது ஒல்லும் என்றலும், ஒல்லுவது
இல்லென மறுத்தலும், இரண்டும், வல்லே;
இரப்போர் வாட்டல் அன்றியும், புரப்போர்
புகழ்குறை படூஉம் வாயில் அத்தை
அனைத்தா கியர், இனி; இதுவே எனைத்தும்
சேய்த்துக் காணாது கண்டனம் ; அதனால்,
நோயிலர் ஆகநின் புதல்வர்; யானும்,
வெயிலென முனியேன், பனியென மடியேன்,
கல்குயின் றன்னஎன் நல்கூர் வளிமறை,
நாணலது இல்லாக் கற்பின் வாணுதல்
மெல்லியல் குறுமகள் உள்ளிச்
செல்வல் அத்தை ; சிறக்க, நின் நாளே!


ஒல்லுவது - முடிவது
அனைத்தாகியர் - அத்தன்மையில் சேர்ந்தது
குயின்றன்ன - இழைத்தாற் போன்று
முனியேன் - வெறுக்கிலேன்
வளி - காற்று
செல்வல் - செல்கிறேன்

அன்பன்,
சுந்தரம்




Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sun May 26, 2013 8:06 am

அருமையான விளக்கம்....சுந்தரம் அவர்களே. மிகவும் நன்று....நன்றி மகிழ்ச்சி

சுந்தரம் என்று பெயர் உள்ளவர்கள் எல்லோரும் பெரும்பாலும் சீரிய சிந்தனையாளர்களாய்த்தான் இருப்பார்கள் போல் தெரிகிறது அருமையிருக்கு ஆறுதல்

sundaram77
sundaram77
பண்பாளர்

பதிவுகள் : 94
இணைந்தது : 19/01/2012

Postsundaram77 Sun May 26, 2013 8:24 am

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:அருமையான விளக்கம்....சுந்தரம் அவர்களே. மிகவும் நன்று....நன்றி மகிழ்ச்சி

சுந்தரம் என்று பெயர் உள்ளவர்கள் எல்லோரும் பெரும்பாலும் சீரிய சிந்தனையாளர்களாய்த்தான் இருப்பார்கள் போல் தெரிகிறது அருமையிருக்கு ஆறுதல்

நன்றி சுந்தரராஜ் அவர்களே !
நான் இட்டு சில நொடிகளிலேயே உங்களின் பாராட்டு என்னை நெகிழச் செய்கிறது !
சுந்தரம் என்ற பெயரில் என்ன இருக்கிறது ...உங்களுக்குப் பொருந்தலாம் ...எனக்கல்ல !!
ஒரு உண்மையை இங்கு சொல்லிவிடுகிறேன் ; அடியேன் கணிதம் பயின்றவன் ; பயிற்றுவித்தவன் . என் கல்லூரி நாட்களில் இருந்தே நான் கொண்ட தமிழ்ப் பித்தே
என் இடுகைகளின் நதிமூலம் .
இதனை நான் ' சங்க இலக்கியம் ' பிரிவிலும் இடலாமா ..!?
இன்னும் கூடுதலானோரைப் போய்ச்சேரும் என்ற ஆசையே...
அன்புடன்,
சுந்தரம்


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun May 26, 2013 4:01 pm

sundaram77 wrote:
இதனை நான் ' சங்க இலக்கியம் ' பிரிவிலும் இடலாமா ..!?
இன்னும் கூடுதலானோரைப் போய்ச்சேரும் என்ற ஆசையே...
அன்புடன்,
சுந்தரம்

மகிழ்ச்சி, சங்க இலக்கியம் பகுதியிலேயே பதிவிடுங்கள்!



ஈராயிரம் ஆண்டுகளானாலும் இன்றைக்கும்....!!! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
mohu
mohu
பண்பாளர்

பதிவுகள் : 125
இணைந்தது : 11/01/2012
http://www.dhuruvamwm.blogspot.com

Postmohu Sun May 26, 2013 7:27 pm

அருமையான விளக்கம் ,
நன்றி

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sun May 26, 2013 7:56 pm

சங்க இலக்கிய பதிவு அருமையிருக்கு




ஈராயிரம் ஆண்டுகளானாலும் இன்றைக்கும்....!!! Mஈராயிரம் ஆண்டுகளானாலும் இன்றைக்கும்....!!! Uஈராயிரம் ஆண்டுகளானாலும் இன்றைக்கும்....!!! Tஈராயிரம் ஆண்டுகளானாலும் இன்றைக்கும்....!!! Hஈராயிரம் ஆண்டுகளானாலும் இன்றைக்கும்....!!! Uஈராயிரம் ஆண்டுகளானாலும் இன்றைக்கும்....!!! Mஈராயிரம் ஆண்டுகளானாலும் இன்றைக்கும்....!!! Oஈராயிரம் ஆண்டுகளானாலும் இன்றைக்கும்....!!! Hஈராயிரம் ஆண்டுகளானாலும் இன்றைக்கும்....!!! Aஈராயிரம் ஆண்டுகளானாலும் இன்றைக்கும்....!!! Mஈராயிரம் ஆண்டுகளானாலும் இன்றைக்கும்....!!! Eஈராயிரம் ஆண்டுகளானாலும் இன்றைக்கும்....!!! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக