புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:36 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:24 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:17 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:02 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:57 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:24 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm

» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm

» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm

» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 9:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Yesterday at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Yesterday at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Yesterday at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Yesterday at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Yesterday at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Yesterday at 9:27 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 மணிமேகலையில் நிலையாமை  Poll_c10 மணிமேகலையில் நிலையாமை  Poll_m10 மணிமேகலையில் நிலையாமை  Poll_c10 
6 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 மணிமேகலையில் நிலையாமை  Poll_c10 மணிமேகலையில் நிலையாமை  Poll_m10 மணிமேகலையில் நிலையாமை  Poll_c10 
251 Posts - 52%
heezulia
 மணிமேகலையில் நிலையாமை  Poll_c10 மணிமேகலையில் நிலையாமை  Poll_m10 மணிமேகலையில் நிலையாமை  Poll_c10 
153 Posts - 32%
Dr.S.Soundarapandian
 மணிமேகலையில் நிலையாமை  Poll_c10 மணிமேகலையில் நிலையாமை  Poll_m10 மணிமேகலையில் நிலையாமை  Poll_c10 
30 Posts - 6%
T.N.Balasubramanian
 மணிமேகலையில் நிலையாமை  Poll_c10 மணிமேகலையில் நிலையாமை  Poll_m10 மணிமேகலையில் நிலையாமை  Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
 மணிமேகலையில் நிலையாமை  Poll_c10 மணிமேகலையில் நிலையாமை  Poll_m10 மணிமேகலையில் நிலையாமை  Poll_c10 
18 Posts - 4%
prajai
 மணிமேகலையில் நிலையாமை  Poll_c10 மணிமேகலையில் நிலையாமை  Poll_m10 மணிமேகலையில் நிலையாமை  Poll_c10 
5 Posts - 1%
Barushree
 மணிமேகலையில் நிலையாமை  Poll_c10 மணிமேகலையில் நிலையாமை  Poll_m10 மணிமேகலையில் நிலையாமை  Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
 மணிமேகலையில் நிலையாமை  Poll_c10 மணிமேகலையில் நிலையாமை  Poll_m10 மணிமேகலையில் நிலையாமை  Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
 மணிமேகலையில் நிலையாமை  Poll_c10 மணிமேகலையில் நிலையாமை  Poll_m10 மணிமேகலையில் நிலையாமை  Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
 மணிமேகலையில் நிலையாமை  Poll_c10 மணிமேகலையில் நிலையாமை  Poll_m10 மணிமேகலையில் நிலையாமை  Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மணிமேகலையில் நிலையாமை


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed May 22, 2013 3:02 am


மணிமேகலைக் காப்பியம் புத்தமதக் கொள்கைகளைப் பரப்ப எழுந்த நூல். இந்நூலில் நிலையாமைக் கருத்துக்கள் இடம் பெறுகின்றன. அவற்றைச் சாத்தனார் பாத்திரங்களின் வழியாக வெளிப்படுத்தும் திறனை விளக்குவது இக்கட்டுரை:

நிலையாமை - விளக்கம்:

தொலகாப்பியர் காஞ்சி என்பதற்கு நிலையாமை என்று கூறுவதை,

''பாங்கருஞ் சிறப்பின் பல்லாற்றானும்
நில்லா உலகம் புல்லிய நெறித்தே (தொல்.புறத் 23)

என்ற நூற்பாவின் மூலம் உணரலாம்.

அறம், பொருள், இன்பம் ஆகிய பொருட்பகுதியானும் அவற்றுள் பகுதியாகிய உயிரும், யாக்கையும், செல்வமும், இளமையும் முதலியவற்றானும் நிலைப்பேறில்லாத உலகியற்கையைப் பொருந்திய நன்னெறியை உடையது காஞ்சி என்று விளக்கம் தருகிறார் நச்சினார்க்கினியர்..

மதுரைக்காஞ்சி நிலையாமையை உணர்த்தும் திணைப்பெயராக வந்துள்ளது என்று தெளிவுறுத்துகிறார். நாச்சினார்க்கினியர்

வள்ளுவப் பெருந்தகை நிலையாமை என்னும் ஓர் அதிகாரமே படைத்திருக்கின்றார். அவ்வதிகாரத்தில்,

''நில்லாத வற்றை நிலையின் என்றுணரும்
புல்லறி வாண்மை கடை'' (குறள் 331)

என்று வாழ்க்கையில் இழிந்தநிலை சுட்டப்படுகின்றது.

மணிமேகலையில் நிலையாமைக் கருத்துக்கள்:

நிலையாமை ஒன்றே நிலையான உண்மை என்று கௌதம புத்தர் கூறுகிறார். ''தோற்றம் உண்டேல் மரணம் உண்டு'' என்கிறார் சுந்தரர். இக்கருத்துக்களுக்கெல்லாம் அரண் செய்யும் வகையில் மணிமேகலையில் சாத்தனார் நிலையாமை கருத்துக்களைப் பாத்திரங்கள் வழி விளக்குகின்றார்.

உதயகுமரன், மணிமேகலையின் திறம் குறித்து சுதமதியிடம் வினவுகின்றான். அப்போது அவள் யாக்கையின் நிலையாமையைக் கூறுகின்றாள்,

''யாக்கை நிலையாமை
உதயகுமரனிடம் சுதமதி,
வினையின் வந்தது வினைக்குவிளை வாயது
புனைவன நீங்கிற் புலால்புறத் திடுவது
மூத்துவிளி வுடையது தீப்பிணி இருக்கை
பற்றின் பற்றிடங் குற்றங் கொள்கலம்
புற்றடங் கரவிற் செற்றச் சேக்கை
அவலக் கவலை கையா றழுங்கல்
தவலா உள்ளந் தன்பா லுடையது
மக்கள் யாக்கை இதுவென உணர்ந்து'' (மணி 4 113-130)

என்று கூறுகின்றாள்.

நாகர்களின் தலைவனுக்கு சாதுவன் கூறும் அறுவுரைகளிலும் நிலையாமைக் கருத்துக்கள் இடம்பெறுகின்றன. அவன் பின்வருமாறு,

''பிறந்தவர் சாதலும் இறந்தவர் பிறத்தலும்
உறங்கலும் விழித்தலும் போன்றது உண்மையின்
நல் அறம் செய்வோர் நல் உலகு அடைதலும்
அல்லது செய்வோர் அருநரகு அடைதலும்'' (மணி 16 86-89)

என்பன. இதே கருத்து திருக்குறளிலும் இடம்பெறுகிறது. அவை

''உறங்குவது போலுந் சாக்காடுறங்கி
விழிப்பது போலும் பிறப்பு'' (குறள் - 339)

என்ற குறள் சுட்டுகின்றது. எனவே இவ்வுலக வாழ்க்கை நிலையில்லாதது. அதனால் அறம் செய்ய வேண்டும் என்பது அறிஞர்களின் தெளிந்த கருத்தாகும்.

இளமை, யாக்கை, செல்வநிலையாமை:

விசாகை தன மாமன்மகள் தருமதத்தனுக்குக் கூறும் அறிவுரையில்,

''இளமையும் நில்லா, யாக்கையும் நில்லா
வளவிய வான்பெரும் செல்வமும் நில்லா
புத்தேள் உலகம் புதல்வரும் தாரார்
மிக்க அறமே விழுத்துணை யாவது''

என உணர்த்துகின்றாள். இதன் வழியாகத் தாமை செய்ய வலியுறுத்துவதையும் அறியலாம். உலகில் வாழும் மக்கள் அனைவரும் பட்டினியால் வருந்திச் சாகாமல் உணவளிக்க வேண்டும். இவ்வாறு உணவளிப்பவர்கள் தாம் உயிர் கொடுத்தவர் என்பதை,

''மண்திணி ஞாலத்து வாழ்வோர்க் கெல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே'' (மணி 11 95-96)

எனும் இவ்வரிகள் கூறுகின்றன.

இளமை, யாக்கை நிலையாமை:

உதயகுமரன், மணிமேகலையிடம் இடங்கழிகாமம் அடங்காதவன் என்பதால், அவளிடம் தவம் மேற்கொண்டது எதற்கு என்று காரணம் வினவுகின்றான். அதற்கு அவள் பதிலிறுக்கும்போது,

''பிறத்தலும் மூத்தலும் பிணிபட்டிரங்கலும்
இறத்தலுமுடைய திடும்பைக் கொள்கலம்
மக்கள் யாக்கை இதுவென உணர்ந்து
மிக்க நல்லறம் விரும்புதல் புரிந்தேன்'' (மணி 18 136-139)

என்று கூறுகின்றாள். இறப்பு என்பது அனைவருக்கும் பொதுவானது எனப் பட்டினத்தார்.

''முடிசூடும் நாடாளும் மன்னரும் அவர் அடிதழிஇ வாழ்வாரும்
இறுதியில் வேறுபாடின்றி இறந்து பிடிசாம்பலாய்ப்போவது உறுதி'' (திருத்தில்லை. பா.எ.7)

என மொழிகின்றார்.

மனிதன், இளமை நிலைபேறுடையது என்று எண்ணுகின்றான். அவன் அறச்செயல்களைப் புரிவதற்கே இளமை என்று உணரவேண்டும். எனவே, மணிமேகலை, உதயகுரனிடம் ஒரு நரை மூதாட்டியைக் காட்டி, இளமையின் நிலையாமையை, என இருபத்தெட்டு அடிகளில் விளக்குகின்றான்.

''தணணநல் வண்ணந்திரிந்து வேறாகி
வெண்மணலாகி கூந்தல் காணாய்
பிறைநுதல் வண்ணங் காணாயோ நீ
நரைமையிற் றிரை தோற்றகையின் நாயது
விறல் விற் புருவம் இவையுங் காணாய்''
இறப்பது உறுதி:

இவ்வுலகில் பிறந்தவர்கள் எல்லோரும் இறப்பது உறுதி என்பதை,

''தவத்துறை மாக்கள், மிகப்பெருஞ்செல்வர்
ஈற்று இளம் பெண்டிர், ஆற்றாப் பாலகர்
முதியோர் என்னான் இளையோர் என்னான்''

இவர்கள் அனைவரையும், காலம் முடிவுற்றபின் கொடுந்தொழிலையுடைய எமன் கொன்று குவிக்கின்றான். இவ்வாறு எமனால் உயிர் குடிக்கப்பட்ட உடம்புகளை,

''அழல்வாய்ச் சுடலை தின்னக் கண்டும்
கழிபெரும் செல்வக் கள் ஆட்டு அயர்ந்து
மிக்க நல்லறம் விரும்பாது வாழும்
மக்களின் சிறந்த மடவார் உண்டோ'' (மணி 6 97-107)

என வரும் அடிகள் எல்லோரும் இறப்பது உறுதி இறப்பைத் தடுக்க யாராலும் இயலாது என்ற உண்மையை உணர்த்துகின்றன.

துணையாவது அறம்:

காலம் கடத்தாமல் நல்லறங்களைச் செய்ய வேண்டும். ஏனெனில் உலக வாழ்வு நிலையற்றது. அதனால் அவரவர் முடிந்தவரையில் நல்லறம் செய்ய வேண்டும். அது சிறந்த துணையாகும் என்று சாதுவன், விசாகை, மணிமேகலை, சுதமதி கூற்றுக்கள் வழியாக ஆசிரியர் சுட்டுகின்றார்.

மணிமேகலைக் காப்பியம் காட்டும் அறநெறி:

புத்தமதக் கொள்கைகளிலே நால்வகை வாய்மையும், ஐவகைச் சீலமும் முதன்மையானவை. இவற்றை இக்காப்பியம்

''பிறந்தோர் உறுவது பெருகிய துன்பம்
பிறவார் உறுவது பெரும்பே ரின்பம்
பற்றின் வருவது முன்னது பின்னது
அற்றோர் உறுவது அறிக''.

என்று சுட்டுகின்றது.

''கள்ளும் பொய்யும் காமமும் கொலையும்
உள்ளக் களவும் என்று உரவோர் துறந்தவை''

என ஐவகைச் சீலத்தையும் கூறுகின்றது. நான்கு வகை வாய்மைகளும், ஐந்து வகைச் சீலங்களும் எல்லா மதத்தவரும் ஏற்கும் அறமாகும். நல்வினைகளைப் பின்பற்றவும், தீவினைகளை விட்டொழிக்கவும் வலியுறுத்துகின்றது புத்தம்.

முடிவு:

மேற்சொல்லப்பட்ட நிலையாமைக் கருத்தின்வழி, உலகில் வாழும்வரை நல்லவைகளைக் கடைபிடித்து, அல்லவைகளை நீக்கி, அறநெறிகளைப் பின்பற்றினால் நல் உலகு அடைவது உறுதி, என்பதை மணிமேகலை வற்புறுத்துகிறது.

நன்றி: பிறதுறைத் தமிழியல் - மு. கமலா



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
ஆரூரன்
ஆரூரன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012

Postஆரூரன் Wed May 22, 2013 10:05 am

உலகில் வாழும்வரை நல்லவைகளைக் கடைபிடித்து, அல்லவைகளை நீக்கி, அறநெறிகளைப் பின்பற்றினால் நல் உலகு அடைவது உறுதி

உறுதி ...உறுதி...!
ஆரூரன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ஆரூரன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக